Tuesday, December 31, 2019

குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின்போது, மங்க ளூரு நகரில் கருநாடக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோ ருக்கு அறிவித்த உதவித்தொகையை அம் மா நில முதல்வர் எடியூரப்பா ரத்து செய்துள்ளார் மங்களூரு போராட்டத்தின் போது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இறந்த வர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார் அம்மாநில முதல்வர் எடியூரப்பா. பெங்களூருவின் பல பகுதிகளிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேராட் டங்கள் வெடித்து தடையுத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நிலைமை சென்றது. இந்நிலையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத் தினார். எடியூரப்பா. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, மங்களூரு சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இருவருக்கும் அதில் தொடர்புள்ளதா? என்பது குறித்து விசாரிக்கப்படும். அப்படி தொடர்பிருப்பது உறுதியானால், அவர்களின் குடும்பங்களுக் கான உதவித்தொகை வழங்குவது குறித்து ஆலோசித்தே முடிவு செய்யப்படும் என்றார். கருநாடக முதல்வரின் இத்தகைய முடிவு சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற் படுத்தியுள்ளது.


நான் உயி ரோடு இருக்கும்  வரை  குடி யுரிமை திருத்தச் சட்டத்தை மேற்கு  வங்கத்தில்  செயல்படுத்த  விட மாட்டேன்’ என  அந்த  மாநில  முதல் வர் மம்தா பானர்ஜி தெ ரிவித்தார்.
மேற்குவங்க  மாநிலம், வடக்கு பார்கனாஸ் மாவட்டம்,  நைஹாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  வெள்ளிக்கிழமை அவர்  பேசியதாவது:-
‘சர்ச்சைக்குரிய  குடியுரிமை  திருத்தச்  சட்டத்துக்கு  எதிராக  நாடு  முழுவதும் மாணவர்கள் நடத்தி  வரும்  போராட்டத்தை  நான்  ஆதரிக்கிறேன். 18  வயது  பூர்த்தியானதும்     ஒரு அரசாங்கத்தை  தேர்ந்தெடுக்கும் உரிமையை  அரசமைப்புச்  சட்டம்  அவர்களுக்கு  வழங்கும்போது, அரசுக்கு  எதிர்ப்பு  தெரிவிக்க அவர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் உரிமை இல்லையா?
நான் உயிருடன் இருக்கும்   வரை   குடியுரிமைதிருத்தச் சட்டத்தைமேற்கு வங்கத்தில் செயல்படுத்த  விடமாட்டேன்.நாட்டு  மக்களின்  உரிமைகளை யாரும் பறித்து விடமுடியாது.
யாரும் நாட்டைவிட்டு    அல்லது    மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டியதில்லை. மேற்குவங்கத்தில்  எந்த  தடுப்புக்காவல் மையமும் அமைக்கப்பட மாட்டாது.
இந்த கடுமையான சட்டத்துக்கு  எதிராக  மாணவர்கள் ஏன் போராட்டங்களை  நடத்தி  எதிர்ப்புகளை தெரிவிக்கக்கூடாது?  எதிர்ப்பு  தெரிவிக்கும்  மாணவர்களுக்குஎதிராக மத்திய அரசு நடவடிக்கை  எடுத்து  வருகிறது.
மேலும்  அவர்களை பல்கலைக்  கழகங்களிலிருந்து  இடைநீக்கம்  செய்வது  போன்ற  நடவடிக்கைகளையும் மேற்கொண்டு  வருகிறது.
ஆரம்பத்தில்  தேசிய மக்கள் தொகை பதிவேட்டை நிறைவேற்ற பா.ஜ.க. முன்வந்த போது, அவர்களின் நோக்கத்தை நாங்கள்  உணரவில்லை.
ஆனால்,  நாட்டின்  குடிமக்களை  தனிமைப் படுத்துவதுடன்  இது  தொடர்புடையது என்பதை அறிந்தபோது, மேற்குவங்கத்தில் அதனை நிறுத்தி விட்டோம்.  மக்களுக்கு  ஆபத்தை  விளைவிக்கும்  எந்தச்  செயலையும் நாங்கள் செய்ய மாட்டோம்.
பிற்படுத்தப்பட்ட ஜாதி  சமூகங்களிடையே பிளவுகளை   உருவாக்க மத்திய  அரசு  முயற்சிக்கிறது.
மேற்கு  வங்கத்தில் 94 அகதிகள் முகாம்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.  இருப்பினும்,  தனியார்  மற்றும் மத்திய  அரசு  நிலங்களில் உள்ள  அனைத்து  அகதிகள் முகாம்களுக்கும் அங்கீகாரம்  வழங்க  மாநில அரசு  முடிவு  செய்துள்ளது.
வங்க மொழி பேசுபவர்களையும், மற்ற மொழி பேசுபவர்களையும்  பிரிக்க  மத்திய  அரசு விரும்புகிறது.  அவர்கள் இந்து, முஸ்லிம், சீக்கியர்கள்,  கிறிஸ்தவர்கள்  மற்றும்   பவுத்தர்களைப்பிரிக்க  விரும்பு கிறார்கள். நாங்கள் அனுமதிக்கமாட்டோம்’ என்று பேசினார்.

மனிதாபிமானத்தை முற்றிலும் இழந்த எடியூரப்பா துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உதவித்தொகை ரத்து

குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின்போது, மங்க ளூரு நகரில் கருநாடக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோ ருக்கு அறிவித்த உதவித்தொகையை அம் மா நில முதல்வர் எடியூரப்பா ரத்து செய்துள்ளார்
மங்களூரு போராட்டத்தின் போது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இறந்த வர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார் அம்மாநில முதல்வர் எடியூரப்பா.
பெங்களூருவின் பல பகுதிகளிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேராட் டங்கள் வெடித்து தடையுத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நிலைமை சென்றது.
இந்நிலையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத் தினார். எடியூரப்பா.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, மங்களூரு சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இருவருக்கும் அதில் தொடர்புள்ளதா? என்பது குறித்து விசாரிக்கப்படும். அப்படி தொடர்பிருப்பது உறுதியானால், அவர்களின் குடும்பங்களுக் கான உதவித்தொகை வழங்குவது குறித்து ஆலோசித்தே முடிவு செய்யப்படும் என்றார். கருநாடக முதல்வரின் இத்தகைய முடிவு சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற் படுத்தியுள்ளது.

விண்வெளியில் 288 நாட்கள் தங்கி சாதனை படைத்த வீராங்கனை


அமெரிக்கா, ரஷ்யா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெ ளியில் பன்னாட்டு ஆய்வு மய்யத்தை அமைத்துள்ளன. அந்த மய்யத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் பன் னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கோச் என்ற விண்வெளி வீராங்கனை கடந்த  ஜூலை மாதம் 20ஆம் தேதி பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத் துக்கு சென்றார். 28.12.2019 சனிக்கிழ மையுடன் அவர் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் 288 நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார்.
பிப்ரவரி 6, 2020 இல் கிறிஸ்டீனா கோச் பூமிக்குத் திரும்புகிறார், அப் போது அவர் 300 நாட்களுக்கு மேல் கழித்திருப்பார்.
பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் (அய்.எஸ்.எஸ்) கிறிஸ்டீனா கோச் தங்கியிருந்தபோது, 4 முறை விண்வெளியில் நடந்து உள்ளார்.  அக்டோபர் 12 ஆம் தேதி முதல்  தனது சக ஊழியரும் சிறந்த நண்பருமான ஜெசிகா மீருடன்  விண் வெளியில் நடந்து இருவரும் உலகின் தலைப்பு செய்தியானார்கள்.
பன்னாட்டு விண்வெளி நிலையத் திற்கு வெளியே ஏழு மணி நேரத்திற்கும் மேலான பயணத்தில், பெண்கள் இரு வரும் வெண்வெளி நிலையத்தின்  சூரிய வலையமைப்பிற்கு கூடுதலாக உடைந்த மின் கட்டுப்படுத்தியை சரிசெய்யும் பணியை வெற்றிகரமாக முடித்தனர்.
நிலையத்தின் சூரியசக்தி அமைப் பிற்கான புதிய சூரிய  பேட்டரிகளை நிறுவ ஜனவரி மாதத்தில் மீண்டும் இரண்டு முறை வெளியே செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
15 பெண்கள் ஒரு விண்வெளிப் பயணத்தை இதற்கு முன் நடத்தியிருந் தாலும், ஒவ்வொரு முறையும் அவர்கள் ஆண் சகாக்களுடன் சென்று  வந்திருந் தனர்.
36 நாடுகளைச் சேர்ந்த சுமார் 550-க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் இன்றுவரை விண்வெளியில் வலம் வந் திருக்கிறார்கள். 18 விண்வெளி வீரர்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள்.

விளையாட்டு வீரர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை

அஞ்சல் துறையில் உள்ள 231 காலி பணியிடங்கள் விளையாட்டு பிரிவின் கீழ் நிரப்பப்படுவதால் தகுதியான விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
தமிழக அஞ்சல் துறை தலைவர் சம்பத் அஞ்சலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் 89 அஞ்சல் உதவியாளர் 65 அஞ்சல்காரர் 77 பன்முக அஞ்சல் ஊழியர் என 231 பணியிடங்கள் விளையாட்டு பிரிவின் கீழ் நிரப்பப்பட உள்ளன.
தடகளம் பேட்மின்டன் கால்பந்து கோ - கோ வாலிபால் டென்னிஸ் கோல்ப் நீச்சல் என 42 வகையான விளையாட்டு பிரிவுகளில் சாதித்த வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.  இந்தியா சார்பில் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்ற வர்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படும்.அடுத்து தேசியளவில் பதக்கம் வென்றவர்கள் தேசியளவில் பல்கலை மற்றும் பள்ளிகளுக்கு இடையே பரிசு பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தபால் உதவியாளர் தபால்காரர் பணிக்கு 18 - 27 வயது வரையிலும் பன்முக அஞ்சல் ஊழியருக்கு 25 வயது வரையிலும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் உதவியாளருக்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி அவசியம். தபால்காரருக்கு பிளஸ் 2 மற்றும் பன்முக ஊழியருக்கு பத்தாம் வகுப்பு போதுமானது.  விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பங் களை நேரடியாக பதிவிறக்கம் செய்து வரும் 31க்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வுக்கு பயந்துகொண்டு பெரியாரை மறந்த அ.தி.மு.க.! அம்பலப்படுத்துகிறது "டி.டி.நெக்ஸ்ட்"

ஒருபோதும் மறவாமல் ஆண்டுதோறும் ஜெய லலிதா மரியாதை செலுத்தி வந்த தந்தை பெரியாரை, ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமை யிலான அ.தி.மு.க., பா.ஜ.க. வுக்குப் பயந்து கொண்டு அவரது நினைவு நாளில் மரியாதை  செலுத் தாமல் புறக்கணித்து விட்டது என்று “டி.டி நெக்ஸ்ட்” ஆங்கில நாளேடு அம்பலப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ‘டி.டி.நெக்ஸ்ட்’ ஆங்கில நாளேட்டின் 27.12.2019 இதழில் ‘செய்தியாளரின் நாட்குறிப்பு’ (ரிப்போர்ட்டர்ஸ் டைரி) என்ற தலைப்பில் அதன் செய்தியாளர் சென்னை - யாழினியன் எழுதியுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளும் அ.தி.மு.க. தங்கள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி அவருக்கு மரியாதை  செலுத் தியபோது, அதே நாளில் இறந்த தங்கள் இயக்கத்தின் நிறுவனரான பெரியாரை ஒதுக்கிவிட்டது.
தந்தை பெரியார், திராவிட இயக்கத்தின் முதுகெலும்பாக இருந் தவர். முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் அவருடைய கொள்கை களைப் பின்பற்றினார். தனது கட்சியின் பெயரில் அண் ணாவைக் கொண்டுள்ள அ.தி.மு.க. தங்கள் அரசியல் குருவான பெரி யாரை மறந்துவிட்டது.
டிசம்பர் 24ஆம் தேதி முதல மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்பட அக் கட்சியின் தலைவர்கள் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை  செலுத்தினர். ஆனால் பெரியார் அவர்களுக்கு அவ்வாறு மரியாதை  செலுத்தவில்லை.
இது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடைமுறையிலிருந்து விலகிச் சென்ற செயலாகும். அவர் (ஜெயலலிதா) ஒருபோதும் தந்தை பெரியார் அவர்களுக்கு பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்களில் அவருக்கு மரியாதை  செலுத்த மறந்ததில்லை. அ.தி.மு.க. பெரி யாருக்கு மரியாதை  செலுத்தாதது; அ.தி.மு.க. அரசு, மத்தியில் உள்ள பா.ஜ.க அரசை மகிழ்விப்பதற்காக நினைவு நாளில் தந்தை பெரியாருக்கு மரியாதை  செலுத்துவதிலிருந்து விலகிச் சென்று விட்டதாக விமர் சிப்பவர்களுக்கு இடமளித்துள்ளது.
தந்தை பெரியார் பற்றி பா.ஜ.க. மிகவும் இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த போதும் அ.தி.மு.க.வோ, அதன் உயர்மட்ட தலைவர்களோ, அதற்கு அதிகார பூர்வமான எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் தி.மு. கழகத் தலைவர்  தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் பா.ஜ.க.வை எச்ச ரிக்கை செய்து கருத்து தெரிவித்தார்.
இவ்வாறு *டி.டி. நெக்ஸ்ட் ” இதழில் அதன் செய்தியாளர் சென்னை - யாழினியன் எழுதியுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமைச்சட்டதிருத்தம்- தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டும் அரசியலமைப்பிற்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் - கமல்நாத்

மோடி அரசின் குடியுரிமைச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் அரசியலமைப்பிற்கு எதிரான தாக்குதல் என்று கூறியுள்ளார் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்.
குடியுரிமை சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து மத்தியப் பிரதேசத்தில் மாபெரும் அமைதிப் பேர ணியை முதல்வர் கமல்நாத் நடத்தினார்.
பேரணியின் முடிவில் அவர் ஆற்றிய உரையில், நான் தீவிர அரசியலுக்கு வந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ஆனால், சிஏஏ மற்றும் என்ஆர்சி போன்ற மோசமான அரசியலமைப்பு தாக்குதல்களைப் பார்த் ததில்லை.
பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மாறி மாறி பேசுகின்றனர். குடியுரிமைச் சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு தவறாக பயன்படுத்தப்படுவது குறித்தே நாங்கள் பேசுகிறோம் என்றார்.
கமல்நாத் உள்ளிட்ட அனைத்து காங் கிரஸ் முதல்வர்களும் மோடி அரசின் மேற் கண்ட இரண்டு அம்சங்களையும் எதிர்க் கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை திருத்தச் சட்டம்: எங்கெங்கும் எதிர்ப்புத் தீ எரிமலையின் வெடிப்பு - ரத்து செய்தார் தாக்கரே!

மகாராட்டிராவில் கடந்த பட்நாவிஸ் தலைமையிலான பாஜக அரசு அமைத்த, சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கான மாநிலத்தின் முதல் கண்டறிதல் மய்யத்தை மூட தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு உத்தரவிட்டு உள்ளது.
மத்தியஅரசு கொண்டு வந்த என்ஆர்சி சட்டத்திருத்தத்தைத் தொடர்ந்து, அப்போதைய பட் நாவிஸ் தலைமையான  பாஜக மாநில அரசு, மாநிலத்தின்  நெருல் என்ற பகுதியில் சட்டவிரோதமாக குடி யேறியவர்களுக்கான முதல் தடுப்பு மய்யத்தை ஏற்படுத்தி இருந்தது. இதை அபிவிருத்தி செய்யவும் பட் நாவிஸ் அரசு முடிவு செய்திருந்தது.
ஆனால், நவி மும்பையின் நெருலில் மாநிலத்தை முதலில் அபிவிருத்தி செய்வதற்காக அமைக் கப்பட்டிருந்த முந்தைய கூட்டணி முதல்வரான தேவேந்திர ஃபட்ன விஸின் முடிவை அதிரடியாக  ரத்து செய்தார்.
என்ஆர்சி விவகாரம் தொடர் பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில்உ ள்ளது. வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி மீண்டும் விசாரணை நடத்த உள்ளது.
அதன் முடிவைத்தொடர்ந்து,  மா நிலத்தில் என்.ஆர்.சி.யை நிறை வேற்றுவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தனது அரசாங்கம் முடிவு செய்யும் என்று தாக்கரே கூறியுள்ளார்.
உத்தவ் தாக்கரேவின் அதிரடி நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றில் நாடு கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வரும் தாக்கரேவின் முடிவு, மாநிலத்தில் என்.ஆர்.சி.வேண்டாம் என்று சொல்வதற்கு ஆயத்தமாவதாக எதிர் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, மும்பை  சேனா பவனில் கட்சித் தலைவர்களிடம் பேசிய தாக்கரே, தனது கண் காணிப்பில் மாநிலத்தில் எந்த தடுப்புக்காவல் மய்யங்களையும் வர அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க ஓ.டி.பி., அவசியம்

மோசடிகளை தடுக்கும் விதமாக, அதிகபட்சம் பணம் எடுக்கும் வரம்பை, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக, எஸ்.பி.அய்., என்ற, பாரத ஸ்டேட் வங்கி குறைத்தது. இந்நிலையில், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்க, ஒரு முறை ரகசிய எண் பயன்படுத்தும் முறையை, எஸ். பி.அய்., அறிமுகம் செய்கிறது.
இதுகுறித்து, எஸ்.பி.அய்., வெளியிட்ட அறிவிப்பு: ஏ.டி. எம்., இயந் திரத்தில் நடக்கும், சட்ட விரோத பணப் பரிவர்த் தனையை குறைக்கும் விதமாக, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதற்கு, ஒரு முறை ரகசிய எண்ணை பயன்படுத்தும் திட்டத்தை, நாங்கள் அறிமுகம் செய்கிறோம். இரவு, 8:00 முதல் காலை, 8:00 மணி வரை, இந்த முறை அமலில் இருக்கும். இந்த ரகசிய எண், வாடிக்கை யாளர்களின் பதிவு செய்யப் பட்ட, மொபைல் போன் எண்ணிற்கு வரும்.
இது, சட்ட விரோத பணப் பரிவர்த் தனைகளில் இருந்து, ஏ.டி.எம்., வாடிக்கையாளர் களை பாது காக்கும்.
ஜன., 1 முதல், நாடு முழுவதும், இது செயல்பாட்டிற்கு வரு கிறது.
ஆனால், எஸ்.பி.அய்., வாடிக்கையாளர் கள், இதர வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுத்தால், இந்த பாதுகாப்பு முறை பொருந்தாது.
இவ்வாறு, அதில் கூறப்பட் டுள்ளது.

உலகின் பிரபலமான இளம்பெண் மலாலாவுக்கு அய்.நா. கவுரவம்


கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண் ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து அய்.நா கவுரவித்து உள்ளது.
பெண்களின் கல்விக்காக போராடிய மலாலாவை கடந்த 2012ஆம் ஆண்டு தலீ பான் பயங்கரவாதிகள் துப் பாக்கியால் சுட்டனர். எனி னும் இந்த தாக்குதலில் அவர் காயங்களுடன் உயிர் தப்பி னார்.
அதன்பிறகு அவர் பாகிஸ்தான் மட்டும் இன்றி பன்னாட்டு அளவில் பெண் களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுக்க தொடங்கி னார். 2014ஆம் ஆண்டு அவ ருக்கும், இந்தியாவின் கைலா‌‌ஷ் சத்யார்த்திக்கும் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு அய்.நா.வின் அமை திக்கான தூதரானார்.
மலாலா யூசுப்சாயின் அயராத உழைப்பு, கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான இளம் பெண்ணாக அவரை உரு வாக்கி உள்ளதாக அய்.நா. தெரிவித்துள்ளது. இதே போல் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளாக, ஹைதி நிலநடுக்கம் (2010), சிரிய உள்நாட்டு போர் துவக் கம் (2011), பெண்களின் கல் விக்கு ஆதரவாக மலாலாவின் பணிகள் (2012), எபோலா வைரஸ் தாக்குதல் (2014), பருவநிலை மாற்றம் தொடர் பான பாரிஸ் ஒப்பந்தம் ஏற்பு (2015) ஆகியவற்றை அய்.நா. குறிப்பிட்டுள்ளது.

Thursday, December 26, 2019

மூடநம்பிக்கையின் முடைநாற்றம்!

இன்று சூரிய கிரகணம் என்பது அறிவியல் ரீதியான உண்மையே. வெறும் கண்ணால் பார்க்காதீர்கள் என்ற அறிவிப்பும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே - பார்க்க வேண்டுமானால் அதற்கென்றுள்ள கண்ணாடி வழி பார்க்கலாம் - இது அறிவியலின் நிலைப்பாடு.
அதே நேரத்தில் இதற்குள்ளும் மூடநம்பிக்கையை புகுத்தி புரோகிதச் சுரண்டலை நடத்தும் ஆரியத்தின் அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்லுவது!
சூரியகிரகணம் உள்ள நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாதாம். யார் சொன்னது? விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்பட்டதா என்பது முக்கியமான கேள்வியாகும்.
இந்து அற நிலையத்துறை ஓர் அறிவிப்பைக் கொடுத்துள்ளது. சூரிய கிரகணம் நடைபெறும் கால கட்டத்தில் கோயில் நடை சாத்தப்படுமாம்.
சூரிய சக்திக்கு முன் சாமிகளுக்குச் சர்வமும் அடங்கிவிடுமோ? என்ன பைத்தியக்காரத்தனம் - பிள்ளை விளையாட்டு இது!
சூரியனைப் பற்றி எத்தனை எத்தனையோ மூடநம்பிக்கைகள் இந்த நாட்டில்! சூரியனை சூரிய நாராயணன் ஆக்கி, சாயாதேவி என்ற மனைவியும், நமன், வருணன், கர்ணன், சுக்ரீவன், சனி முதலிய புத்திரர்கள் உண்டு என்றும் புராணங்களில் எழுதிக் குவித்துள்ளனரே!
சூரியன்  பாண்டுராஜன் மனைவியாகிய குந்திதேவியை, அப்பெண்ருது ஆவதற்கு முன்னதாகவே வன்புணர்ச்சி செய்து, கர்ணன் என்ற ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தாகவும் கதை கட்டி வைத்துள்ள வெட்கக் கேட்டை என்னவென்று சொல்லுவது!
உண்மையில் வானவியல் விஞ்ஞானம் என்ன கூறுகிறது? பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அதன் வெப்பத்தின் அளவு ஒரு கோடியே 50 லட்சம் சென்டிகிரேட் - விளிம்பில் 6000 டிகிரி சென்டி கிரேட்!
இவ்வளவு தூரத்தில் இருக்கும் போதே  பூமியில் வெப்பம் தாளாமல் தவிக்கிறோம்.
உண்மை இவ்வாறு இருக்க, குந்திதேவியைப் புணர்ந்தான் என்று சொல்லுவது எல்லாம் இந்தப் பார்ப்பனீயத்தின் ஆபாச அழுக்குக் கடல் பீடித்த வெட்கக் கேடே!
சூரியன் என்பது ஒரு நட்சத்திரமே தவிர, கிரகம் அல்ல; ஆனால் சூரியனை கிரகத்தின் பட்டியலில் வைத்து ஜோதிடம் சொல்லி மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றனர்,
பூமியைத்தான் சூரியன் சுற்றுகிறது என்பதுதான் ஜோதிடமாம்;  இந்த 2019லும் இதனை நம்புவதும், சூரியகிரகணம், சந்திர கிரகணம் தோஷம் என்பதெல்லாம் எதைக் காட்டுகிறது?
நம் நாட்டின் கல்வி முறை அறிவியலை சொல்லிக் கொடுக்கிறதே தவிர, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவில்லை. அறிவி யலைப் பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் பேராசிரியர் உட்பட வீட்டுக்குப் போய் தோஷம் கழிக்கிறார்களே!
இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) என்ன கூறுகிறது?  அறிவியல் மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும், மனிதநேயத்தையும் மக்களிடம் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று சொல்லவில்லையா?
மத்திய, மாநில அரசே முன் வந்து இந்த சூரிய மூடநம்பிக்கையை விளக்கி மக்களிடம் நல்லறிவைக் கொளுத்த வேண்டாமா? இதற்காகத் தொலைக்காட்சிகளை, ஊடகங்களைப் பயன்படுத்திட வேண்டாமா?
அறிவியல்  நன்கொடையான தொலைக்காட்சிகளும் இது குறித்து மக்களுக்குத் தெளிவை உண்டாக்க வேண்டாமா?
அரசமைப்புச் சட்டம் கூறும் இந்தப் பணியைச் செய்வது இந்தியத் துணைக் கண்டத்திலேயே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம்தான்!
சூரிய கிரகணம் நேரத்தில் சாப்பிடக் கூடாது என்ற மூடநம்பிக்கையை முறிடியடிக்கும் வகையில் அந்த நேரத்தில் சென்னை பெரியார் திடல், திராவிடர் கழகத்தின் தலைமையிடத்தில்  இன்று காலை 10 மணிக்கு பெரியார் திடல் வளாகத்தில் உள்ள பணியாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அந்த நேரத்தில் சிற்றுண்டி சாப்பிட்டு விளக்கமும் அளிக்கப்பட்டது. இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் விஞ்ஞான விளக்கவுரையை வழங்கினார்.
இப்பொழுது மட்டுமல்ல, 22.7.2009 அன்றும் இது மாதிரியே மூடநம்பிக்கையின் முதுகெலும்பை முறிக்கும் செயல் திட்டத்தை (Demonstration) செய்து காட்டியது.   பெரியார் கல்வி நிறுவனங் களிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியிலும் செய்முறை விளக்கம் நடத்திக் காட்டப்பட்டது.
2012ஆம் ஆண்டில்  மாயன் காலண்டர் அடிப்படையில் குறிப்பிட்ட நாளில் உலகம் அழியப் போகிறது என்ற புரளியைக் கிளப்பி விட்டனர்.
அதனை முறியடிக்கும் வண்ணம் சென்னைக் கடற் கரையில் (22.12.2012) திராவிடர் கழகத்  தலைவர் தலைமையில் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி, கடற்கரையில் நடை பயிலும் பொது மக்களுக்குக் கூட விளக்கம் அளிக்கப்பட்டது.
மூடநம்பிக்கைகள்தான் பார்ப்பனீயத்திற்கு முதலீடு - எனவே எந்த சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதனைத் தவறவிடாமல் புரோகிதச் சுரண்டலுக்கான சடங்குகளைத் திணித்து விடுவார்கள்!
இவற்றை எல்லாம் முறியடிக்க தந்தை பெரியாரைப் படிக்க வேண்டும். சிந்தனையை கூர் தீட்டிக் கொள்ள வேண்டும். ஆம், எல்லா வகையான முற்போக்குக்கும் தந்தை பெரியார் தேவைப் படுகிறார்.

Wednesday, December 25, 2019

பத்திரிகைகள் கண்டனம்


பெரியார் குறித்து சர்ச்சை பதிவு பாஜகவுக்கு தலைவர்கள் கண்டனம்

தந்தைபெரியார் நினைவு நாளான நேற்று (24.12.2019) பாஜகவின் சுட்டுரைப் பக்கத்தில் பெரியாரை இழிவுபடுத்தும் வகையில்  பதிவு வெளியிட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜவின் இணையதளத்தில் பெரியார் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் நேற்று கருத்து ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. கடும் எதிர்ப்பை தொடர்ந்து பாஜக பதிவிட்ட பதிவு நீக்கப்பட்டது.  பாஜவின் இதுபோன்ற செயல்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் பெரியாரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, சுட்டுரையில் இருந்து அந்தப் பதிவு நீக்கப்பட்டது. பாஜகவைக் கண்டித்து தலைவர்கள் வெளியிட்ட கண்டனங்கள் வருமாறு:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:
பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தை பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பாஜக அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே! அந்த பயம் இருக்கட்டும். மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார். அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா இல்லை மண்புழுவாய் பதுங்குமா.
அமைச்சர் டி.ஜெயக்குமார்: பெரியார் ஒரு சமூக சிந்தனையாளர். சமூகத்தில் அடிதட்டு மக்கள் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழு வதும் உழைத்து இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டி ருப்பவர். அவரது வாழ்க்கை முறையை யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது. தமிழக பாஜகவின் சுட்டுரையில் பெரியாரை கொச்சப்படுத்திருப்பது தவறு.
அமைச்சர் செல்லூர் ராஜூ: இந்த சர்ச்சை குறித்து தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.  “தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிக் கொடுத்தவர் தந்தை பெரியார். அதற்கு உறுதுணையாக இருந்தவர் பேரறிஞர் அண்ணா. தமிழகம் என்றைக்கும் திராவிட பூமி.  இன்றைக்கு பல மாநிலங்கள் மொழியாலும் மதத்தாலும் பிரிந்து கிடந்தாலும், அனைத்து சமூகத்தினரும் சகோதரர்களாக இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். அதற்குக் காரணம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,  எம்ஜிஆர் மற்றும் டாக்டர் கலைஞர் கருணாநிதி” என்று செல்லூர் ராஜூ கூற, ஒரு நிருபர் அவரை இடைமறித்து, “உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜக பெரியார் பற்றி...” என ஆரம்பித்தார். அதற்கு செல்லூர் ராஜூ உடனே, “யாராக இருந்தாலும், தந்தை பெரியாரைப் பற்றி இழிவாக பேசினால் அது கண்டிக்கத்தக்கது,” என்று காட்டமாக கூறினார்.
பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ்:  பெரியாரின் நினைவு நாளில் அவர் குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியும், அதன் அய்.டி. பிரிவும் டிவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து அருவருக்கத்தக்கது. இது அவர்களின் காமாலைக் கண்களைக் காட்டுகிறது. இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
வைகோ (மதிமுக): பெரியாரை அவமதிப்பது கோழைத்தனமான செயல். பாஜக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
டிடிவி. தினகரன் (அமமுக): பெரியாரின் நினைவு நாளில் அவரை இழிவுப்படுத்தும் விதமாக தமிழக பாஜகவினர் சுட்டுரையில் பதிவு செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும் மறைந்த தலைவர்களைப் பற்றிய இத்தகைய மோசமான தாக்குதல்கள் ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லதல்ல.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:  சமூக இழிவுகளை அகற்றவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும், சமத்துவத்திற் காகவும் தமிழகத்தில் அயராது பணியாற்றிய பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பாஜவின் பதிவுள்ளது.
எஸ்.டி.பி.அய்.கட்சி தலைவர் நெல்லை முபாரக்: பெரியாரை இழிவுபடுத்தும் நோக்கத்தோடும், வன்முறை சிந்தனையுடனும் பெரியார் குறித்த அவதூறு தமிழக பாஜவின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. தமிழக மக்கள் பெரிதும் மதிக்கக்கூடிய மாபெரும் தலைவரை இழிவுபடுத்திய பாஜக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இத்தகைய வெறுப்பு அரசியல் செய்து வரும் பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

Tuesday, December 24, 2019

மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் 8ஆம் தேதி வேலை நிறுத்தம்

மத்திய அரசின் நட வடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் வருகிற 8ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி அதிகாரிகள் யூனியன் சங்கத்தின் ஒருங்கிணைந்த மாநாடு சென்னையில் மயிலாப் பூரில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க செயலாளர் வைரப்பன் தலைமை தாங்கினார். அதிகாரிகள் யூனியன் பொதுச்செயலாளர் டி.வி.பாஸ்கரன், ஊழியர் சங்க பொதுச் செயலாளர் இ.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் அருணாச்சலம், தமிழ் நாடு வங்கி ஊழியர் சங்க தலைவர் சி.எஸ்.வேணுகோபால், சீனிவாசன் ஆகியோர் கொண்டனர்.
மாநாட்டில் மத்திய, மாநில அரசுகள் மறுமுதலீட்டினை வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தொடர்ந்து அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் அளித்த பேட்டி:
இந்திய பொருளாதாரம் மந்த மான நிலையில் உள்ளது. அதை சரி செய்ய வங்கிகள் திறமையாக செயல் பட வேண்டும். ஆனால் மத்திய அரசு பெரிய முதலாளிகள் வங்கி களில் பெற்றுள்ள கடனை தள் ளுபடி செய்துள்ளது. இந்த கடன் தள்ளுபடி என்பது சாதாரண மக் களின் மீது திணிக்கப்பட்டு வருகி றது. இதை வன்மையாக  கண்டிக்கி றோம். மேலும் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது. வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். ஊழி யர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். தொழிலா ளர் விதியை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் திருத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு நடவடிக்கையை கண் டித்து வருகிற 8ஆம் தேதி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் போராட்டத் தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட் டத்தில் தமிழகத்தில் 50,000 ஊழியர்களும், இந்தியா முழுவதும் 6 லட்சம் ஊழியர் களும் பங்கேற்க உள்ளனர். அது மட்டுமல் லாமல் மத்திய அரசு தொழிற்சங்கங்களான ஐஎன்டியூசி, ஏ.அய்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் போராட் டத்தில் பங்கேற்கிறார்கள். இதனால், அன்றைய தினம் ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கிகள், ரயில்வே தேர்வு வாரியம், எல்அய்சி(ஆயுள் காப்பீட்டு கழகம்) மற்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறு வனம், ரயில்வே, துறைமுகம், சாலை போக்குவரத்து துறை ஊழியர்கள், ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் என சுமார் 25 கோடிக் கும் அதிகமான ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள் ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டுறவு வங்கிகள் இயங்காது
கூட்டுறவு வங்கி ஊழியர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மேலும் வருகிற 8ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்துக்கும் தமிழ் நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம், தமிழ்நாடு மாநில  தலைமை கூட்டுறவு வங்கி அதிகாரிகள் யூனியன் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இத னால், அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிப் பணிகளும் முற்றிலுமான முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முகமூடி கிழிந்தது இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டுமாம்: வெறி கக்கும் ராம.கோபாலன்

இந்து முன்னணி திருச்சி கோட்டம் சார்பில் இந்து விரோத முறியடிப்பு மாநாடு திருச்சி அண்ணாநகர் உழவர் சந்தை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தலைமை வகித்தார்.
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்து முன்னணி வரவேற்கிறது. போராட்டத்தைத் தூண்டக்கூடிய யாரும் தேசியவாதிகள் இல்லை. இழந்த நிலங்களை மீட்கும் வகையில் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க வேண்டும். இழந்த கோயில்களை மீட்க வேண்டும். இந்தியாவை இந்து நாடு என அறிவிக்க வேண்டும் என்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி, தேச விரோதிகளை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும். தமிழ் மொழியை வளர்க்க முன்வர வேண்டும். பள்ளிகள், பொது மருத் துவமனை, பொது இடங்களில் பகிரங்கமாக நடைபெறும் மத மாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அன்று ஹிட்லர் செய்ததுதான்!

குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பேச்சு தொடங்கிய காலத்திலிருந்தே அதற்கான எதிர்ப்புகளும் ஈட்டி முனையாகக் கிளர்ந்து வெடித்தன.
நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டம் வந்தபோது எதிர்க் கட்சிகள் கடுமையான கண்டனக் கணைகளை ஏவின.
மாநிலங்களவையில் பிஜேபிக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான அதிமுக போன்ற கட்சிகளைப் பல வகையிலும் அச்சுறுத்தியும் வலியுறுத்தியும் மசோதாவுக்கு  ஆதரவு அளித்தே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினர். அவர்களும் பதவி ஒன்றே குறிக்கோளுடன் சகலத்தையும் இழக்கத் தயாராகி விட்டனர்.
அதிமுகவின் 11 வாக்குகள், பா.ம.க.வின் ஒரே ஒரு வாக்கும் இந்தச் சட்டத்தை எதிர்த்து இருந்தால், சட்டம் செயல்படுத்தப்பட முடியாத நிலையை அடைந்திருக்கும்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் அம்பலப்பட்டுப் போய் விட்டன. இனி எந்த முகம் கொண்டு தமிழ்நாட்டு மக்களைச் சந்திக்கப் போகின்றனர் என்பது மிக முக்கியமான கேள்வியாகும்.
கூட்டணி நிர்ப்பந்தம் என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம்  பச்சையாகக் கூறி விட்டார்; கூட்டணித் தர்மம் என்று பா.ம.க. நிறுவனர், மருத்துவர் இராமதாசும் தெரிவித்து விட்டார்.
இதன் மூலம் இந்த இரு கட்சிகளும் சிறுபான்மை முசுலீம் களுக்கு மட்டுமல்ல; ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல; இந்திய மக்களுக்கே, மதச் சார்பின்மைக் கொள்கைக்கே கொள்ளி வைத்து விட்டனர். இந்தக் கறை படுதலிலிருந்து இவர்கள் மீள்வது அவ்வளவு சுலபமல்ல.
இந்தியாவின் பல பகுதிகளிலும் புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து கிளர்ச்சி எரிமலையாகச் சீற்றம் கொண்டு வானுக்கும், பூமிக்குமாகத் தாவி நிற்கிறது.
வட மாநிலங்களில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா பூலே, சாகு மகராஜ், நாராயணகுரு போன்ற சமூக சீர்திருத்தத் தலைவர்களின் பதாகைகளை பிடித்துக் கொண்டு வீதிக்கு வந்து போராடத் துவங்கி விட்டனர்.
இந்தப் பதாகைகள் எதைக் குறிக்கின்றன?
ஜாதிய வருணாசிரம சனாதனத்தை எதிர்த்து இந்தத் தலை வர்கள் பாடுபட்டவர்கள். அந்த தலைவர்களின் பதாகைகளை அவர்கள் கையில் ஏந்தி யாரை எதிர்த்து முழக்கமிடுகிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம்.
அந்த ஜாதிய வருண சனாதனத்தின் கூறுகளைக் கொண்டது தான் சங்பரிவாரும் அதன் அரசியல் கிளையான பா.ஜ.க.வும்.
இன்னும் புரியும்படியாகக் கூற வேண்டுமானால் ஆரியர் - திராவிடர் போராட்டமாக இப்பொழுது உருவாகி விட்டது. நாட் டில் நடப்பது அரசியல் அல்ல; ஆரிய - திராவிடர் போராட்டமே என்று தந்தை பெரியார் தொலைநோக்கோடு  சொன்னது இப்பொழுது - பிஜேபி ஆட்சி மூலம் உறுதியாகி விட்டது.
பிஜேபி ஆட்சிக்கும் அதன் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளான சனாதன தருமத்துக்கும் எதிர்ப்பு இளைஞர்கள் மத்தியிலும், பொதுவாக வெகு மக்கள் மத்தியிலும் வேர்ப் பிடித்துத் திகு திகு என  எரிய ஆரம்பித்த நிலையில், இந்த நாட்டு ஊடகங்கள் மத்திய பிஜேபி ஆட்சியையும் அதன் சனாதன வருண தருமத்தையும் எப்பாடு பட்டேனும் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் கடந்த இரு நாட்களாக ஏதேதோ காரணங்களைக் கற்பித்து எழுத ஆரம்பித்துள்ளனர்.
கல்வியாளர்கள் இந்த சட்டத்தை ஆதரிக்கிறார்கள், எதிர்ப் பாளர்கள் சட்டத்தின் சரத்துகளைப் புரிந்து கொள்ளாமலேயே ஏதோ எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கிறார்கள் என்று தினமணிகளும், தினமலர்களும் தலையங்கங்களும்; சிறப்புக் கட்டுரையும் எழுத ஆரம்பித்து விட்டன.
ஒரு வகையில் அதுவும் நன்மைக்கே. யார் யார் எந்தப்  பக்கம் இருக்கிறார்கள் என்பது வெளியாவது நன்மைக்கே!
"புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தின்படி அண்டை முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு வேறு எந்த நாடுகளிலும் அடைக்கலம் புக முடியாத ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள், மற்றும் கிறிஸ்துவர்களுக்கு இந்தியாவுக்குள் குடியுரிமை உள்ளது - இதனால் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கோ அல்லது சிறுபான்மை மக்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. ஒரு நாட்டிற்கு தன் எல்லைகளைப் பாதுகாக்கவும், எத்தகைய மக்கள், தன் நாட்டில் இருக்க வேண்டும் என முடிவு செய்யவும் உரிமை உள்ளது. அதுபோல எத்தகைய பிற நாட்டினருக்கு குடியுரிமை வழங்கலாம் என்பதும் சுதந்திர நாட்டின் உரிமை" என்று தினமலரில் (22.12.2019 பக்கம் 9) "குடியுரிமை சட்டம் நாட்டின் உரிமை" எனும் தலைப்பில் சிறப்புக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நெற்றியில் நாமத்தைத் தீட்டிக் கொண்டு எழுதும் அவர் ஒரு சமூக ஆர்வலராம்.
எப்படியோ இருந்து போகட்டும்; மேலே கூறப்பட்ட கருத்திலேயே அதிக வஞ்சகத்தன்மை வெளிப்படுகிறதே.
அசாமில் 19,06,657 பேர் நாடற்றவர்களாக  அறிவிக்கப்பட் டுள்ளனரே - இதுதான் இந்த சட்டத்தால்  எவரும் பாதிக்கப் பட மாட்டார்கள் என்பதற்கான இலட்சணமா?
1933ஆம் ஆண்டில் அடால்ப் ஹிட்லர் என்ன செய்தார்? குடியுரிமைச் சட்டம் ஒன்றை அவர் கொண்டு வரவில்லையா? ஒன்றரை லட்சம்  யூதர்கள் நாடற்றவர்கள் என்று ஹிட்லர் அறிவித்தாரே! அந்த ஹிட்லரின் நாஜிக் கொடியான ஸ்வஸ்திக் தானே ஆர்.எஸ்.எஸ். கொடி.
குடியுரிமை திருத்த சட்டமாக இருந்தாலும் சரி, தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டமாக இருந்தாலும் சரி, இந்தியாவை ஹிந்துஸ்தானாக ஆக்கும் மறைமுக ஏற்பாடே! மற்றவர்களைப் பார்த்துப் பிரிவினைவாதிகள் என்று கூறும் இந்தப் 'பத்தரை மாற்றுத் தேசிய திலகங்கள்'தான் நாட்டை மேலும் பிரிவினைக்கு ஆளாக்கப் போகிறார்கள் என்பது மட்டும் உண்மை - உண்மையே!

யூதப் படுகொலையும் - குடியுரிமை சட்டமும்!

வெறுப்புகளை உண்டாக்கும் பேச்சுகளைத் தடுப்பதற்கான சிறப்பு ஆலோசகராக அய்.நா. பொதுச்செயலாளரிடம் பணி யாற்றும் அடாமா டியங், இந்த மாதம் இனப்படுகொலைத் தடுப்பு நாளை யொட்டிப் பேசியபோது  "யூத இனப்படுகொலைகள் விஷ வாயுக் கூடங்களிலிருந்து தொடங்கவில்லை. வெறுப்பான பேச்சு களின் வழியே வெகுகாலத்துக்கு முன்பே அது தொடங்கிவிட்டது" என்று கூறியிருக்கிறார்.
ஒரு அரசியல் கருவியாக, குடியுரிமைச் சட்டத் திருத்தம் - குடிமக்கள் பதிவேடு இரண்டும் வெறுப்பான பேச்சை, குறிப்பாகத் தேர்தல் நேரத்திலாவது உருவாக்கப் போதுமானவை. ஒரு நிர்வாகக் கருவியாக, இனப்படுகொலைகளுக்கான சூழ்ச்சிகளுக்கு எதிரான அரசமைப்புச் சட்டப் பாதுகாப்புகளை அவை பலவீனப் படுத்தவும் செய்யும்.
விலக்கி வைத்த முன்னுதாரணங்கள்
இப்படிக் குடியுரிமையிலிருந்து விலக்கி வைக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டதற்கும், கடைசியில் அவை எங்கு போய் முடிந்தன என்பதற்கும் ஏகப்பட்ட வரலாற்று முன்னுதாரணங்கள் உண்டு. 1935இன் 'ரெய்ச் குடியுரிமைச் சட்டம்' ஜெர்மானிய யூதர்களின் குடியுரிமையைப் பறித்தது. அதைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பது எல்லோருக்குமே தெரியும். மியான்மரில், 1982-இன் ‘குடியுரிமைச் சட்டம்', அராகன் பிராந்தியத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஹிங்கியா முஸ்லிம்களை நாடற்றவர்களாக ஆக்கியது. பன்னாட்டு நீதிமன்றத்தின் முன் மியான்மர் இப்போது இனப்படுகொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கிறது.
இந்திய அரசு, 'எந்தவொரு இந்தியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள்' என்று அளிக்கும் உத்தரவாதங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், குடியுரிமைச் சட்டத் திருத்தம் - குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றின் பிரிவுகள், முஸ்லிம்களை ஏதோ ஒருவகையில் இந்தியர்கள் என்பதிலிருந்து தடுத்து வைக்கும் என்ற எண்ணத்தால்தான் அதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் தங்களது குடியுரி மையை இழந்தால், அரசும் வழக்கம்போலவே எந்தவொரு இந்தியரும் தங்களது குடியுரிமையை இழக்கவில்லை என்றே சொல்லிக்கொண்டிருக்கும். யார் இந்தியர் என்பதையும், யாரெல்லாம் இல்லை என்பதையும் அரசுதானே முடிவு செய்கிறது!
- நன்றி: ‘தி தமிழ் இந்து' 23,12,2019, பக்கம் 7

Monday, December 23, 2019

நான் பாகிஸ்தானில் பிறந்தேன், என்ன அடையாள ஆதாரத்தை நான் காண்பிப்பேன்? - மணி சங்கர் அய்யர் கேள்வி


டில்லியில் 19ஆம் தேதியன்று ஜந்தர் மந்தரில் குடியுரிமைச் சட் டத்திற்கு எதிராக ஆர்ப்பாட் டக்காரர்கள் நடத்திய ‘ஆசாதி‘ (சுதந்திரம்) என்ற ஒத்திசை வான முழக்கங்களின் பின்ன ணியில், காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர், பாகிஸ் தானில் பிறந்ததால் தனது எதிர்காலம் குறித்து தனக்குத் தெரியாது என்றார். “நான் தங்குமிடம் தேடி இந்தியா வந்தேன். நான் என்ன ஆதா ரம் காண்பிப்பேன்? மிக முக்கியமாக, நான் ஏன் எனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டும்,”என்று மணிசங் கர்அய்யர் கூறினார்.
முஸ்லிம் சமூகத்தை தொந் தரவு செய்வதற்காக குடியுரிமை சட்டம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது என்று, அய்யர் கூறினார், “இந்த மாணவர்கள் இந்த சட்டத்தின் பின்னால் உள்ள நோக்கத்தை புரிந்து கொள்கிறார்கள், அதனால் தான் அவர்களிடையே பெரும் கோபம் இருக்கிறது. அவர்க ளின் குரல் நாடாளுமன்றத் திலும் தேர்தல்களிலும் எதி ரொலிக்கும்.”
ஜந்தர் மந்தரில் நடந்த “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த“ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக அய்யர் கூறினார், “ஜந்தர் மந்தரில் நடந்த, மோடி-ஷா கொடுங் கோன்மையின் வீழ்ச்சியைக் குறிக்கின்ற, இந்த வரலாற்று ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொண்டேன் என்று எனது பேரனிடம் கூற முடியும் என்பதில் மகிழ்ச்சி அடை கிறேன்.
ஜந்தர் மந்தரில் எதிர்ப்பா ளர்கள் ஒன்றுகூடத் தொடங் கிய நிலையில், அதிக அளவில் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்ட னர். மேலும் அவர்கள் முன் னேறுவதைத் தடுக்க போராட் டத் தளத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இரண்டு ஆர்ப்பாட்டங் கள் நடத்த திட்டமிடப்பட் டிருந்த செங்கோட்டை மற் றும் மண்டி மாளிகை அருகே தடுத்துக் காவலில் வைக்கப் பட்டிருந்தவர்களில் டி ராஜா, சீதாராம் யெச்சூரி, நிலோட்பால் பாசு, பிருந்தா காரத் ஆகிய இடதுசாரி தலைவர்களும், காங்கிரஸின் அஜய் மேக்கன், சந்தீப் தீட் சித், மற்றும் ஆர்வலர்கள் யோகேந்திர யாதவ், உமர் காலித் உள்ளிட்டோரும் அடங்குவர்.

விவசாயிகள் மீது மேலும் பேரிடி

நாடு முழு வதும் விவசாயிகள், விவசாயத் துக்கு தேவையான பணத் தைப் பெற வங்கிகளில் தங்களது நகைகளை வைத்து கடன் பெறுவது வழக்கம். இதற்கு 11 சதவிகிதம் வட்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலை யில், 4சதவிகிதம் வட்டி மானி யமாக அளிக்கப்பட்டு வந் தது. தற்போது, இந்த 4 சத விகித மானிய வட்டியை மத் தியஅரசு ரத்து செய்து உள் ளது. இது விவசாயிகளி டையே அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.
இனிமேல், 7% வட்டியில் விவசாய நகைக்கடன்களை வழங்கக் கூடாது என வங்கிக ளுக்கு மத்திய அரசு அறிவு றுத்தி உள்ளது. தேசியமயமாக் கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் நகைகளை வைத்து விவசாய கடன் பெறும்போது வட்டி 7 சதவிகிதமாக இருந்து வந்த நிலையில்,  கடந்த 2015ஆம் ஆண்டு 11 சதவிகித மாக மத்தியஅரசு உயர்த்தி யது.
இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், வட்டியில் 4 சத விகிதம் மானியமாக வழங்கப் படும் என்றும் 7 சதவிகித வட்டியே வசூலிக்கப்படும் என்றும் மத்தியஅரசு அறிவித்து. இந்த நிலையில், விவ சாயிகளுக்கான மானிய வட் டியில், விவசாயிகளாக இல் லாதவர்களும் விவசாய நகைக் கடன் பெற்று வருவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், மத் தியஅரசு வழங்கி வந்த 4 சதவிகித மானியத்தை ரத்து செய்துள்ளது. இனி மேல், 7 % வட்டியில் விவசாய நகைக் கடன் வழங்கக்கூடாது  என்று வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும், கடந்த  அக்டோ பர் 1ஆம் தேதி  முதல் வழங் கப்பட்ட விவசாய நகை கடன் வட்டியை உயர்த்த வங்கிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. இது விவசாயிகளி டையே பரபரப்பையும், அதிர்ச் சியையும்  ஏற்படுத்தி உள்ளது

காரணம் என்ன?

அரசு விளம்பரமும் நடிகையின் படம் நீக்கமும்
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சுட்டுரையில் பதிவிட்டதால் பெண் குழந்தை யைக் காப்போம் விளம்பரத் தில் இருந்து நடிகை பரிணீதி சோப்ரா நீக்கப்பட்டார்
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   எதிர்க் கட்சிகள் மட்டுமே இதை எதிர்த்து குரல் கொடுத்து வந்த வேளையில் அசாம் மாணவர் சங்கம் போராட்டத்தைத் தொடங் கியது. அந்த போராட்டம் பல மாநிலங்களுக்கும் பரவி பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.   நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள் ளது.
தற்போது இந்த சட் டத்தை எதிர்த்துப் பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  அதை அடக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல் கள் வருகிறன.  அவ்வகையில் சாவ்தான் இந்தியா என்னும் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துக் கொண்ட நெறியா ளர் சுஷாந்த் சிங் சட்ட எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டதை அடுத்து அவர் அந்நிகழ்வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அரியானா மாநிலத்தில் மத்திய அரசின் அபிமான திட்டமான பெண் குழந்தை களைக் காப்போம் விளம்ப ரத்தில் புகழ்பெற்ற நடிகை யான பரிணீதி சோப்ரா பங்கேற்று வருகிறார்.  அவர் சமீபத்தில் இந்த புதிய சட் டத்தை எதிர்த்து தனது சுட் டுரையில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்த பதிவுக்காக அவரை விளம்பரத்தில் இருந்து அரி யானா அரசு நீக்கி உள்ளது. ஆனால் இது குறித்து அரசு தரப்பில் கூறப்படும் போது அவரது விளம்பரம் தொடர் பான ஒப்பந்தம் முடிந்துவிட் டது, மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற நிலையில் இந்த முடிவெடுத் துள்ளோம் என்று கூறியுள்ளது.

முசாரப் உடலை தூக்கில் தொங்க விட உத்தரவிட்டவர் நீதிபதியாக பதவி வகிக்க மனரீதியாக தகுதியற்றவர்

உச்சநீதிமன்றத்தில் முறையிட இம்ரான் முடிவு
‘பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முசாரப் உடலை இழுத்து வந்து மூன்று நாட்கள் தூக்கில் தொங்க விட வேண்டும்,’ என்று தீர்ப் பளித்த நீதிபதியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முசாரப் மீதான தேசத் துரோக வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இதற்கு ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பெசாவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வக்கார் அகமது சேத் தலைமையிலான சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முழு விவரம் நேற்று முன்தினம் வெளியானது. அதில், ‘துபாயில் பதுங்கி இருக்கும் முசாரப்பை பாகிஸ்தான் அதிகாரிகள் எப்படியாவது பிடித்து வந்து தூக்கில் போட வேண்டும். அப்படி செய்யும் முன்பாக, அங்கேயே அவர் இறந்து விட் டால், அவருடைய உடலை இழுத்து வந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனநாயக சதுக்கத்தில் மூன்று நாட்கள் தூக்கில் தொங்க விட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.
இந்த அதிரடியான தீர்ப்பு, பாகிஸ் தான் அரசை அதிர்ச்சியில் அலற வைத் துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நேற்று அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்துக்குப் பின்  பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பரோக் நசீம் அளித்த பேட்டியில், ‘‘முசாரப் உடலை பொது இடத்தில் மூன்று நாட்கள் தூக்கில் தொங்க விட வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ள நீதிபதி வக்கார் அகமது சேத், நீதிபதியாக பணியாற்ற தகுதியற் றவர். மனநிலை பாதித்துள்ள அவர், இப்பதவியில் நீடிக்க தகுதியற்றவர். முசாரப்புக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை, பாகிஸ்தான் சட்டத்துக்கு எதிரானது. நீதிபதி சேத்தை பதவி நீக்கம் செய்யும்படி, உச்ச நீதிமன்ற நீதி குழு விடம் அரசு முறையிட முடிவு செய்துள் ளது. இதுபோன்ற நபர்கள் உச்ச நீதி மன்ற, உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக் கக் கூடாது,’’ என்றார்.
பல்வேறு நோய்களால் பாதிக்கப் பட்டு, துபாய் மருத்துவமனையில் முசா ரப் சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை குறித்து, மருத்துவமனையில் படுத்தப்படி அவர் பேசிய காகொணலியை அவரு டைய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெளியிட்டுள்ளது.
அதில் அவர், ‘என் மீதான தேசத் துரோக வழக்கை, விசாரணைக்கு ஏற்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. ஆனால், என்மீது சிலருக்கு உள்ள தனிப்பட்ட பகையின் காரணமாக, இது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. அதனால், எனது தரப்பு நியா யங்களை கேட்க நீதிமன்றம் மறுத்து விட்டது. ஆனால், நீதி வெல்லும் என்ப தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனக்கு துணை நிற்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.

ஜனவரி 9இல் துவங்குது சென்னை புத்தகக் கண்காட்சி


சென் னை புத்தகக் கண்காட்சி, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதா னத்தில், ஜனவரி, 9இல் துவங் குகிறது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான, 'பபாசி' சார்பில், 43ஆவது சென்னை புத்தக கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், ஜனவரி, 9இல் துவங்கி, 21ஆம் தேதி வரை, 13 நாட்கள் நடைபெற உள்ளது.
தள்ளுபடிகண்காட்சியில், 700 அரங்குகளில், 15 லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற உள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும், 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். வேலை நாட்களில், பிற்பகல், 3:00 மணிக்கும், விடுமுறை நாட்களில், காலை, 11:00 மணிக்கும் புத்தக கண்காட்சி தொடங்கும்.
அனைத்து நாட்களிலும் இரவு, 9:00 மணிக்கு முடியும்; நுழைவு கட்டணம், 10 ரூபாய்.இது குறித்து, பபாசியின் தலைவர், ஆர்.எஸ்.சண்முகம், செயலர், எஸ்.கே.முருகன், பொருளாளர் ஆ.கோமதிநாயகம் உள்ளிட்டோர், நேற்று முன்தினம் கூறியதாவது: சென்னையில், மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை துண்டும் வகையில், ஜனவரி, 6 காலை, 10:00 மணிக்கு, 'சென்னை வாசிக்கிறது' என்ற நிகழ்ச்சியை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடத்த உள்ளோம். அதில், அமைச்சர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.மாணவர்களின் படைப் பாற்றலை வெளிக்கொணரும் வகையில், போட்டிகள் நடத்தி, பரிசுகளும், பாராட்டு சான்றிதழ் களும் வழங்கப்படும்.வாசகர்களுக்கு தமிழரின் பழமையான நாகரிகத்தையும், திருக்குறளின் பெருமையையும் உணர்த்த, 'கீழடி - ஈரடி' என்ற, முப்பரிமாண கண்காட்சியை, தமிழக தொல்லியல் துறையுடன் இணைந்து நடத்த உள்ளோம்.
புத்தகக் கண்காட்சியின் மேடையில், தினமும் புத்தக வெளியீடுகள், படைப்பாளர்கள், அறிஞர்களின் நிகழ்ச்சிகளும், குறும்படங்கள் திரையிடலும் நடைபெறும்.
சென்னை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, இலவச நுழைவு சீட்டுகள் வழங்கப்படும். மெட்ரோ ரயில் பாஸ் வைத்திருப்போருக்கு, இலவச அனுமதி வழங்கப்படும். இணையம் வழியாகவும் நுழைவுச்சீட்டு பெற முடியும்.
கண்காட்சி அரங்கில், மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்; மைதானத்தில், ஏ.டி.எம்., மய்யங்கள்; அரங்குகளில், கிரெடிட் கார்டுகளின் வழியே புத்தகம் வாங்கும் வகையில், பி.ஓ.எஸ்., கருவிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருக்கும்.  இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தொலைத் தொடர்புத் துறையும் 7.06 சதவிகிதம் வீழ்ச்சி! மாநிலங்களவையில் மத்திய அரசே ஒப்புதல்!

இந்திய தொலைத் தொடர்புத்துறை வருவாய், 7.06 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசே மாநிலங்களவையில் ஒப்புக்கொண்டுள்ளது.
மத்திய அரசு, புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை அமல்படுத்தி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருவாயில் குறிப்பிட்ட பகுதி தொகையை அரசுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசின் வருவாய் அதிகரிக்கும் என்ற அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், புதிய தொலைத் தொடர்பு கொள்கை மூலம் மத்திய அரசு ஈட்டிய வருவாய் எவ்வளவு? என மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அதில், “தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள தகவலின்படி, தொலைத்தொடர்பு சேவைத் துறையின் 2018_2019ஆம் ஆண்டுக்கான வருவாய் 1 லட்சத்து 44 ஆயிரத்து 681 கோடி ரூபாய் இது 2017-2018இல் 1 லட்சத்து 55 ஆயிரத்து 680 கோடி ரூபாயாக இருந்தது.
தற்போது 7.06 சதவிகிதம் வருவாய் குறைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2017-2018ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு பயனாளர் மூலம் சராசரியாக 12,485 ரூபாய் வருவாய் கிடைத்து வந்தது. இது 2018_19 நிதியாண்டில் 7,139 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

"கல்கி" சாமியாரின் சொத்துக்கள் முடக்கம்

"கல்கி' சாமியாருக்கு சொந்தமான, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி, வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆந்திர மாநிலம், சித்துர் மாவட்டத்தில் உள்ள, வரதய்யா பாளையத்தில், கல்கி சாமியார் ஆசிரமம் உள்ளது. இதன் கிளைகள் மற்றும் அலுவலகங்கள், ஆந்திரா, தமிழகத்தில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் உள்ளன. இந்த ஆசிரமத்தின் மீது எழுந்த வரி ஏய்ப்பு புகாரில், அக்., 10ஆம் தேதி, ஆசிரமங்கள், அலுவலகங்களில் சோதனை நடந்தது.
சோதனையின் முடிவில், கல்கி சாமியார், 800 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. வரி ஏய்ப்பு தொடர்பாக, கல்கி சாமியார் விஜயகுமார், அவரது மகன் கிருஷ்ணா, மருமகள் பிரீத்தா உள்ளிட்டோரிடமும், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்களுக்கு சொந்தமான, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, வருமான வரித்துறை முடக்கி உள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:கல்கி ஆசிரமம் சார்பில், 'ஒன்னெஸ் பல்கலை' செயல்படுகிறது, இதில் பணியாற்றும் பேராசிரியர்களின் பெயரில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், பல நுறு ஏக்கர் நிலத்தை, சாமியார் வாங்கி குவித்துள்ளார்.
யார் யார் பெயரில், இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்து, விசாரணை நடந்து வருகிறது. இவற்றில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், தற்போது முடக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Saturday, December 21, 2019

உன்னாவ் சிறுமி பாலியல் வன்முறை வழக்கு பாஜக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை


உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்த வழக்கில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி, 2017 ஆம் ஆண்டில் பங்கர்மா தொகுதி யில் பாஜக சார்பில் 4 தடவை  சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்கார் என்பவர் தன்னை கடத்தி பாலியல் வன்முறை செய்ததாக குற்றம்சாட்டினார். இந்த புகாரைத் தொடர்ந்து குல்தீப் சிங் செங்காரும், அவரது கூட்டாளியான சாஸ்திரி சிங் என்பவரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி உறவினர்களுடன் கடந்த ஜூலை மாதம் காரில் சென்ற போது லாரி மோதியது. இதில் உறவினர்கள் 2 பேர் பலியாகினர். அந்த சிறுமியும் வழக்குரைஞரும் படுகாய மடைந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை கொலை செய்யும் நோக்கத்தில் இந்த சம்பவம் நடந்ததாக குற்றம் சாட்டப் பட்டது. இந்த விபத்து தொடர் பாக குல்தீப் சிங் செங்கார்மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வந்ததால், வேறுவழி இல்லாமல், குல்தீப் சிங் செங்காரை கட்சியில் இருந்து பாஜக நீக்கியது.
உச்சநீதிமன்றத்தின்  உத்தர வுப்படி இந்த  வழக்கு விசா ரணை லக்னோ நீதிமன்றத்தி லிருந்து டில்லியில் உள்ள மாவட்ட நீதி மன்றத்திற்கு  மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து  ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் வழக்கின் விசா ரணை நாள்தோறும் நடை பெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை டில்லி  மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா முன்னிலையில் டிசம்பர்  10 அன்று நடைபெற்றது. டிசம்பர்  16 அன்று   நீதிபதி தர்மேஷ் சர்மா அளித்த தீர்ப்பில், எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் குற்ற வாளி என்று அறிவித்தார். அவரது கூட் டாளி சாஸ்திரி சிங் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தண்டனை விவரங் களை டிசம்பர் 20 அன்று  நீதிபதி அறிவித்தார். சிறுமியை பாலியல் வன்முறை செய்த குற்றவாளியான சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கா ருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து டில்லி மாவட்ட  நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தர விட்டார்.  பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பிரச்சினை

ஜம்மு - காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் இந்திய அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால் தாக்கல் செய்துள்ளார்.
அவர் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை டில்லியில் சந்திக்க விரும்பினார். ஆனால் ஜெய்சங்கர் சந்திக்க மறுத்து விட்டார்.

வன்புணர்ச்சியை (Rape) சமஸ்கிருத சுலோகங்கள் தடுக்குமாம்!


நமது நாட்டில் மத்தியில் ஏற்பட்ட காவி ஆட்சியில் கவர்னர்களாக நியமிக் கப்பட்ட பலரும் "அதி மேதாவிகளான நவீன பிரகஸ்பதிகள்!"
என்ன அற்புதமான யோசனைகளை இலவசமாகவே அள்ளி விடுகின்றனர்!
நோபல் பரிசுக் குழுவினர் ஏனோ இன்னமும் இத்தகைய மஹா, மஹா "அறிவியல் அற்புதானந்தாக்களை"க் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்! வருத்தமாக இருக்கிறது!
நாட்டில் நடைபெறும் 'ரேப்' எனப்படும் வன்புணர்ச்சிகள் (Rape) - பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க மராத்திய கவர்னர் 'பக்தசிங் கோஷியாரி' என்ற உலக மகா அறிவாளி ஒரு அரிய யோசனையை தள்ளினார்.
சமஸ்கிருத சுலோகங்கள் 'ரேப்'பை, வன்புணர்ச்சியைத் தடுக்கும். எனவே மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், சமஸ்கிருத சுலோகங்களைச் சொல்லிக் கொடுத்தால் இவைகளை நடக்காமல் தடுத்து விடலாமாம்!
'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில நாளேட்டில் 20.12.2019 அன்று இப்படி ஒரு செய்தி!
எப்படி வாயால் சிரிப்பது என்று தெரியாமல் திணறுகிறீர்களா? பாவம்.
பா.ஜ.க. ஆட்சியில் எப்படிப்பட்ட "கான்சிஸ்டியூஷனல் எக்ஸ்பர்ட்டுகள்" கவர்னர்களாக நியமனம் ஆகி இருக் கிறார்கள் பார்த்தீர்களா?
அதிகாலை எழுந்து கட்சி மாறிய வர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து, 72 மணி நேரத்திற்குப் பின் ராஜினாமா வாங்கி, அடுத்தவருக்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்யத் தயாரான அரசியல்சட்டப் பாதுகாவலர் இவர்!
இவர் ஒரு நிகழ்ச்சியில், ஜம்னா லால் பஜாஜ் நிறுவன விழாவில் மேற் கண்டவாறு திருவாய் மலர்ந்துள்ளார்!
ஹிந்துத்துவாவில் மூழ்கித் திளைத்த ஒரு தகுதியாலேயே  - இவர்கள் கவர்னர்களாக நியமிக்கப்படுகிறார்கள்!
அதனால் இப்படி தங்களிடம் உள்ள 'சரக்கை' வெளியே அவிழ்த்துக்  கொட்டுகிறார்கள்!
"என்ன விநோதம் பாரு
எவ்வளவு ஜோக்குப் பாரு பாரு!"
என்று பாடுங்கள்!
இந்தயோசனையை முன்பே தந்திருந்தால் "பொள்ளாச்சி" நிகழ்வு களைத் தடுத்திருக்கலாமோ!
தேவபாஷை சமஸ்கிருதம் - தேவர் களுக்குத் தலைவர் புராணப்படி தேவேந்திரன் -
அந்த இந்திரன் அகலிகையை "கற்பழித்தானே" அப்போது சமஸ்கிருத சுலோகங்கள் ஏதும் கிடைக்காததால் தானோ? அட சாம்பிராணிகளா?
சிவபெருமான் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளிடம் நெருங்கியபோது சமஸ்கிருத சுலோகங்களை  அவர்கள் ஓதப்பட வாய்ப்பில்லாததால்தானோ அந்த அசம்பாவிதங்கள் நடந்தனவோ - நமக்குப் புரியவில்லை.
மராத்திய கவர்னர் பெருமான் தான் விளக்க வேண்டும்.
அவருக்குத் தெரிந்திருக்காத ஒரு தகவலை நாம் தெரிவித்து சந்தேகம் கேட்கத் தோன்றுகிறது?
காஞ்சிபுரத்தில் ஓர் அர்ச்சகன் சமஸ்கிருத சுலோகங்களைத்தான் தினமும் கடவுள் பிரார்த்தனையின்போது கூறி அர்ச்சனை செய்பவன், கர்ப்ப கிரகத்திற்குள்ளேயே எத்தனைக் குடும்பப் பெண்களிடம் முறையற்ற (வன்புணர்ச்சி) செய்கையில் ஈடுபட்ட கதை சிரிப்பாய் சிரிக்கிறது.
சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் அர்ச்சகன் பத்ரிநாத்தையும் இதில் இணைத்துக் கொள்ளலாம்.
சமஸ்கிருத சுலோகங்கள் ஏன் இவர்களை தடுக்கவில்லை?
இதுதான் யாருக்கும் புரியாத 'தேவரகசியம்' போலும்!
பல கோடி மக்களால் பேசப்படும்(?) எழுதப்படும்(?) நம் தேவபாஷைக்கு 'ஜே ஜே!' .
இவரையே அடுத்து துணை ஜனாதி பதி - ஜனாதிபதியாகவும் ஆக்கினாலும் ஆக்குவார்கள் - யார் கண்டது?

குடியுரிமை திருத்தச் சட்டம் உ.பி.யில் 11 பேர் மரணம்; முஸ்லிம்கள் போல் வேடமிட்டு தீ வைத்த பிஜேபியினர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட் டத்தில் கலவரம் நிகழ்ந்து 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின்படி 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வங்கதேசம், பாகிஸ்தான்,  ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறிய இஸ்லாமியர் அல்லாதோருக்குக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது   இதற்கு நாடெங்கும்  குறிப்பாக பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களால் கடும் கலவரம் ஏற்பட்டுள்ளது.
கருநாடக மாநிலத்தில்  நேற்று முன் தினம் நடந்த கலவரத்தின் போது காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் மரணம் அடைந்தனர்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13 மாவட்டங்களில் நேற்று மதியம் மசூதிகளில் தொழுகையை முடித்த இஸ்லாமியர்கள் தடையை மீறி போராட்டம் நடத்தி உள்ளனர்.
அவர்களைக் கலைக்க காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு ஆகியவற்றை நிகழ்த்தினர். இம்மாநிலத்தில் பிஜ்னூர்,சம்பல், பெரோசாபாத், மீரத், கான்பூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு 11 பேர் மரணம் அடைந் துள்ளனர்.
சுமார் 3500 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  உ பி யில் 16 மாவட்டங் களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்குவங்கத்தில் இஸ்லாமியர்களைப் போல் வேடமிட்டு ரயில் எஞ்சீனுக்கு தீவைத்த பாஜகவினரைப் போல் உபி மாநிலம் கோரக்பூரிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச்சேர்ந்தவர்களான சத்ய பிரகாஷ் மற்றும் விகாஸ் ஜலான் என்பவர்கள் காவல் துறையின் மீது கல்லெறிந்து ஓடிவிட்டனர். அமைதிய நடந்துகொண்டு இருந்த பேரணி கலவரமாக வெடித்தது காவல்துறையினர் மீதான கல்லெறிக்குப் பிறகுதான் காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் மோதலாக மாறியது.

Thursday, December 19, 2019

ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது


இந்தியா கட் டமைப்பு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும் என பன்னாட்டு நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கீதா கோபி நாத் மேலும் கூறியுள்ளதாவது:
உள்நாட்டு தேவையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை கையாளும் வகையிலும், உற் பத்தி வளர்ச்சியை ஊக்கு விக்கும் விதத்திலும், நடுத்தர வேலைவாய்ப்புகளை உரு வாக்க ஆதரவளிக்கும் வகையிலான கொள்கைகளை உருவாக்குவதில் அதிக முக்கி யத்துவம் கொடுத்து இந்திய அரசு செயல்பட வேண்டும்.
ஆறு ஆண்டுகளில் இல் லாத அளவுக்கு பொருளா தார வளர்ச்சி குறைந்துள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு தேவையை ஊக் குவிக்கும் விதத்தில் வங்கி மற்றும் தொழிலாளர் சீர்தி ருத்தம் உள்ளிட்ட நாட்டின் கட்டமைப்பு துறைகளில் உரிய மாற்றங்களை ஏற்படுத் துவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
மேலும், பரந்த அடிப் படையிலான வளர்ச்சியைப் பெறுவதற்கு கல்வி, சுகாதா ரம் ஆகியவற்றை மேம்ப டுத்துவது அத்தியாவசியமான தாகும் என்றார் அவர்.

குழந்தையை காப்பாற்ற சிறுநீரகத்தை கொடையளித்த இந்திய வம்சாவளி பெண்


இங்கிலாந் தில் வசிக்கும் இந்திய வம்சா வளிப் பெண் ஒருவர் சிறு நீரகத்தை கொடையளித்து குழந்தையின் உயிரை காப் பாற்றியுள்ளார்.
இங்கிலாந்தில் வசிக்கும் அம்ரிக் கண்டோலா மற்றும் ஜோட்டி இணையருக்கு குறைப் பிரசவரத்தில் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அனயா கணடோலா என பெயரிடப்பட்டது. அந்த குழந்தைக்கு ஒருவித நோய் காரணமாக சிறுநீரகம், ஈரல் ஆகியவை பெரிதாக இருந் தது. நுரையீரல்கள் வளர்ச்சி யடையாமல் இருந்தன. இதய பாதிப்பும் இருந்தது. அந்த குழந்தையின் சிறுநீரகம் பெரி தாகி 1.5 கிலோ எடையுடன் காணப்பட்டது. இதனால் அந்த சிறுநீரகங்கள் அகற்றப் பட்டன. இதன் காரணமாக 10 முதல் 12 மணி நேரத்துக்கு ஒரு முறை அந்த குழந்தைகள் டையாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.
சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டால்தான் அந்த குழந்தை இயல்பாக வாழ முடியும். இதற்காக சமூக இணையதளத்தில் ‘ஹோப் பார் அனயா’ என்ற பெயரில் ஹேஸ்டேக் உருவாக்கப் பட்டு பிரசாரம் மேற்கொள் ளப்பட்டது. இதையறிந்த இந் திய வம்சாவளியைச் சேர்ந்த  ரேடியோகிராபர், சுரேந்தர் சபால் (36) சிறுநீரகத்தை கொடையாக அளிக்க முன் வந்தார். இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த இவரது சிறு நீரகம் மாற்று அறுவை சிகிச் சைக்கு பொருத்தமான தேர் வாக அமைந்தது. அதன்படி சபாலின் சிறுநீரகம் அனயா வுக்கு பொருத்தப்பட்டது. இதுகுறித்து  அனயாவின் தந்தை அம்ரிக் கூறுகையில், ‘சூப்பர் ஹீரோக்கள் உண்மை யானவர்கள் அல்ல என கூறு கிறார்கள். ஆனால் உண்மை யான சூப்பர் ஹீரோ எங்க ளுக்கு கிடைத்துள்ளார்’’ என சுரேந்தர் சபால் பற்றி பெரு மையாக கூறினார்.

மந்தநிலையை முன்பே அறிந்தது ரிசர்வ் வங்கி

நாட்டின் வளர்ச்சியில் மந்தநிலை இருப்பதை முன்பே அறிந்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது ரிசர்வ் வங்கி என, அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
தனியார் அமைப்பு ஒன் றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்ததாஸ், இது குறித்து மேலும் தெரிவித்து உள்ள தாவது:
அரசும், ரிசர்வ் வங்கியும் சரியான நேரத்தில் செயல் பட்டுள்ளன. நாங்கள் சற்று முன்பாகவே செயல்பட்டு, வட்டி விகிதங்களை குறைப் பதில் ஈடுபட்டோம்.நாட் டின் வளர்ச்சியில் மந்தநிலை இருப்பதை, இந்த ஆண்டின் பிப்ரவரி மாதமே ரிசர்வ் வங்கி கண்டுகொண்டது. மந்தநிலைக்கான சூழல் ஏற்பட்டு வருவதை முன்பே கண்டு, தொடர்ந்து வட்டி விகிதங்களை குறைப்பதில் ஈடுபட்டோம்.
நாங்கள், பிப்ரவரி மாதத் தில் நடைபெற்ற நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், வட்டி விகித குறைப்பு அறிவிப்பை வெளியிட்டோம். இந்த வட்டி குறைப்பு குறித்து, சந்தைகள் ஆச்சரியம் அடைந் தன. இதேபோல், தற்போது டிசம்பர் மாத கூட்டத்தில், வட்டி விகிதத்தை குறைக்கா மல், அதே நிலை தொடரும் என அறிவித்தபோதும், சந்தை ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தது. வட்டியை குறைத்த  போதும், குறைக்காத போதும், சந்தை பங்கேற்பா ளர்கள் ஆச்சரியமும் அதிர்ச் சியும் அடைந்தனர்.
தொடர்ந்து, நாங்கள் வட்டியை குறைத்து அறிவித்த முடிவு சரியானது என்று அனைவரும் பின்னர் ஏற்றுக்கொண்டதற்காக நான் மகிழ்ச்சி அடைந்தேன்; அதற்காக நன்றியை தெரிவித் துக் கொள்கிறேன்.மாநிலங் கள் இந்த முறையும் நிதிக் கொள்கை குழு, வட்டியை குறைக்காமல் இருந்த முடிவு சரியானது தான் என்பதை ஏற்றுக்கொள்வர். அதை நிரூ பிக்கும் வகையில் நிகழ்வுகள் வெளிப்படும் என நான் நம்பு கிறேன்.

நிர்பயா வழக்கில் கொலைக் குற்றவாளி அக்ஷய்குமார் சிங்கிற்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

 நிர்பயா வழக்கில் கொலை குற்றவாளி அக்ஷய் குமாருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அக்ஷய்குமார் சிங்கின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
2017ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த தவறும் இல்லை என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கான முகாந்திரம் ஏதுமில்லை என்றும் நீதிபதி பானுமதி அமர்வு தெரிவித்துள்ளது.
டில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்டு பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அதன்பின் மீட்கப்பட்ட அந்த மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
மாணவியைப் பாலியல் வன்முறை செய்ததாக ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டில்லி காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும்   பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் தொடர்புடைவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் டில்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் உறுதி செய்தன.
இதற்கிடையே, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி இந்த 4 குற்றவாளிகளில் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆனால் வழக்கில் 4ஆவது   குற்றவாளியான அக்சய் குமார் சிங் மட்டும் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி அக்சய் குமார் சிங் சார்பில் அவரின் வழக்குரைஞர் ஏ.பி.சிங் சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த  மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற் கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அக்சய் குமார் சிங் மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி சார்பில்   மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.  இந்த இரு மனுக்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிபதி கள் ஆர் பானுமதி, அசோக் பூஷன் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசா ரிக்கும் அமர்வில் இருந்து தான் விலகிக் கொள்வதாகத் தலைமை நீதிபதி போப்டே தெரிவித்தார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே வழக்கில் இருந்து விலகியதையடுத்து, அக்சய் குமார் சிங் சீராய்வு மனுவை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா அடங்கிய அமர்வு வழக்கை நாளை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.  அக்சய் குமார் சிங் சீராய்வு மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அக்ஷய் குமார் சிங்கின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.  கொலை குற்றவாளி அக்ஷய் குமாரின் தூக்கு தண்டனையையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது

ராஜீவ் கொலை வழக்கு: தமிழக அரசே தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில் பரோல் விண்ணப்பங்களை நிராகரித்தது ஏன்? உயர்நீதிமன்ற கிளை கேள்வி


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசே தீர் மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், அவர்களின் பரோல் விண்ணப்பங்களை நிராகரிக்க என்ன காரணம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, ரா பர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன், ரவிச்சந்திரன், சாந் தன் ஆகியோர் 28 ஆண்டு களாக சிறைவாசம் அனு பவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க கோரி அவரது தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தார்.
ஆனால், ரவிச்சந்திரனின் பரோல் மனுவை மதுரை சிறைத்துறை நிராகரித்தது. பரோல் வழங்க இயலாது என்று ரவிச்சந்திரனின் தாயா ருக்கு மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் கடிதம் எழுதியிருநதார்.
மேலும், 2020ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ரவிச்சந்திரனின் பரோல் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், தனது மகனுக்கு ஒரு மாத காலம் பரோல் கோரிய விண்ணப் பத்தை, உள்ளாட்சி தேர்தல் மற்றும் திருவிழாக்கள் வருவ தால் போதிய பாதுகாப்பு வழங்க முடியாது எனக் கூறி மதுரை மத்திய சிறை கண் காணிப்பாளர் நிராகரித்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்ற கிளை நீதி பதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசே தீர்மானம் நிறை வேற்றியிருக்கும் நிலையில், அவர்களின் பரோல் விண் ணப்பங்களை நிராகரிக்க என்ன காரணம்? என நீதி பதிகள் கேள்வியெழுப்பனர்.
மேலும், 30 நாட்களுக்கு குறைவாக விடுப்பு கோரினால் வழங்கலாம் என கடந்த முறை கூறிய நிலையில், தற்போது பரோல் விண்ணப்பத்தை நிராகரிக்க என்ன காரணம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

பெரும்பான்மை உள்ளது என்பதற்காக நினைத்ததையெல்லாம் மோடி அரசு நிறைவேற்ற நினைப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

புதுடில்லி,டிச.18-பெரும் பான்மை உள்ளதால் நினைத் ததை எல்லாம் நிறைவேற் றிக் கொள்ள முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு உகந்த தல்ல என முன்னாள் குடி யரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற வாஜ்பாய் நினைவு சொற் பொழிவில் பிரணாப் முகர்ஜி கலந்து கொண் டார். அப்போது பேசிய அவர் அரசியல் கட்சி க ளுக்கு, தேர்தல்களில் பெரும் பான்மை இடங்கள் கிடைத் திருக்கலாம். ஆனால், பெரும்பான்மை மக்கள் ஒரு அரசியல் கட்சியை எப்போதும் ஆதரித்த தில்லை என்று கூறினார்.
பெரும்பான்மை உள்ள தால் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பது ஜன நாயகத் திற்கு உகந்ததல்ல என்று கூறிய அவர், இவ்வாறு நினைப்பவர்களை மக்கள் தண்டித்து வந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப் பினர்களின் எண்ணிக்கை இல்லை என்று தெரிவித்த பிரணாப் முகர்ஜி, மக்க ளவை உறுப் பினர்களின் எண்ணிக்கையை 543லிருந்து ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாநிலவாரியாக மதங்களை வகைப்படுத்த முடியாது!: உச்சநீதிமன்றம் அறிவிப்பு!!

மாநில வாரியாக மதங்களை வகைப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி, இந்துக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலங்களில் அவர்களை சிறுபான்மையினர் என்று அறிவிக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேசிய கணக்கீட்டின்படி அல்லாமல் மாநில வாரியான மக்கள் தொகை அடிப்படையில் மைனாரிட்டி சமூகத்தினரை வகைப்படுத்த வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், சில மாநிலங்களில் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் மட்டும் இந்துக்களை சிறுபான்மையினர் என்று அறிவிக்க முடியாது. சிறுபான்மையினர் சமூகத்தை தேசிய அளவில் கணக்கிட வேண்டுமே தவிர மாநில அளவில் வகைப்படுத்த முடியாது. மொழிகளை மட்டுமே மாநில வாரியாக வகைப்படுத்த வேண்டும், மதங்களை அவ்வாறு வகைப்படுத்த முடியாது என்று கூறினர்.

பெண்களின் நிலை: 112 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா

பெண்களின் நிலை குறித்து, உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில், இந்தியா, 112 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
பன்னாட்டளவில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் வளர்ச்சி குறித்து, உலகப் பொருளாதார அமைப்பு, 2006 முதல் ஆண்டு தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்தாண்டுக்கான அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகெங்கும் உள்ள, 153 நாடுகளில், பெண்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டுக்கான அறிக்கையில், ஆண் - பெண் விகிதாசாரத்தில், இந்தியா, 112 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு, 108 ஆவது இடத்தில் இருந்தது. சீனா, 106 ஆவது இடம்; இலங்கை, 102 ஆவது இடம்; பாக்., 151 ஆவது இடத்தில் உள்ளது. இதில், அய்ஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.
பன்னாட்டளவில், ஆண் - பெண் விகிதா சாரத்தில் உள்ள இடைவெளியை குறைப்பதற்கு, மேலும், 108 ஆண்டுகளாகும் என, கடந்தாண்டு ஆய்வில் தெரியவந்தது. அது தற்போது, 99.5 ஆண்டாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், கல்வி, சுகாதாரம், வேலை, அரசியலில் இந்த இடைவெளி மிக அதிகமாக உள்ளது.
அரசியலில் ஆணுக்கு இணையாக பெண் களுக்கு சமவாய்ப்பு அளிப்பதற்கு, மேலும் 107 ஆண்டுகளாகும் என, கடந்தாண்டு ஆய்வில் கணக்கிடப்பட்டது. அது தற்போது, 95 ஆண்டுகளாக குறைந்துள்ளது. உலகெங்கும், நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கு, 25.2 சதவீதமாக உள்ளது. இது முந்தைய ஆண்டு, 24.1 சதவீதமாக இருந்தது.
அதேபோல் அமைச்சர்கள் பதவியில் பெண்களின் பங்கு, 19 சதவீதத்தில் இருந்து, 21.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆணுக்கு இணை யாக பெண்களுக்கு பொருளாதார வாய்ப்பு கிடைப்பதற்கு, 202 ஆண்டுகளாகும் என, கடந் தாண்டு கணிக்கப்பட்டது. தற்போது, அது, 257 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. பல்வேறு முக்கிய துறைகளில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.
இந்தியாவைப் பொருத்தவரை, அரசியல் அதிகாரம் அளிப்பதில், உலகளவில், 18 ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், சுகாதாரத்தில், 150 ஆவது இடம், பொருளாதார வாய்ப்புகளில், 149 ஆவது இடம், கல்வியில், 112 ஆவது இடத்தில் உள்ளது. அதனால், ஒட்டுமொத்த பட்டியலில், இந்தியா, 112 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கலவரக்காரர்களை ஆடையை வைத்தே கண்டறியலாமா?

‘‘மோடிஜி என் உடையை வைத்து

நான் யாரென்று சொல்லுங்கள்'': மம்தா

கொல்கத்தா, டிச.19  தவறு செய் பவர்களை அவர்கள் அணியும் உடைகளை வைத்து வேறுபடுத்தி பார்க்க முடி யாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
குடியுரிமைத் திருத்தச் சட் டத்துக்கு எதிராகப் போராட் டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல், பேரணி என நாடே கொந்தளித்து வருகிறது. அந்த வகையில் கொல்கத்தா வில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் குடி யுரிமைத் திருத்தச் சட்டத் துக்கு எதிராக நேற்று முன் தினம் பேரணியை தொடங் கினார். அப்போது அவர் பேசுகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும் பப் பெறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றார். அந்த வகையில் நேற்றும் அவர் பேரணியை தொடர்ந்தார்.
அப்போது அவர் பேசுகை யில், தலையில் அணிந்திருக் கும் தொப்பியை வைத்து பாஜகவினர் மக்களை வேறு படுத்தி பார்க்கின்றனர். ஆனால், போராட்டம் நடத் துபவர்களை மட்டும் அவர் கள் அணிந்திருக்கும் உடையை கொண்டே அடை யாளம் கண்டு கொள்கின்ற னர்.
அசாம், திரிபுராவைப் பாருங்கள்...
இந்த நாடு மோசமான கட்டத்தை நோக்கி செல் கிறது. நான் அணிந்திருக்கும் உடையை வைத்து நான் யார் என்பதை  மோடியால் சொல்ல முடியுமா? என்ன நடக்கிறது இந்த நாட்டில்? பாஜகவினர் தங்கள் சொந்த நலனுக்காக எல்லாவற்றையும் செய்கின்றனர். அவர்கள் பிரிவினை மற்றும் அருவெறுக் கத்தக்க அரசியலில் ஈடுபடு கின்றனர். அசாமில் நடந்து கொண்டிருப்பதைப் பாருங் கள். திரிபுராவில் நடந்து கொண்டிருப்பதை பாருங் கள்.
வருங்காலங்களில் பாஜக ஆளும் மாநிலங்களிலும்கூட இந்த சட்டத்துக்கு எதிர்ப்புக் கிளம்பும். அவர்களை பொறுத்தமட்டில் நாம் இந் தியர்கள் அல்ல. அவர்களை பொறுத்தமட்டில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வர்கள் இந்தியர்கள் அல்ல. பாஜக தலைவர்கள், பாஜக தொண்டர்கள், பாஜக ஆதர வாளர்கள் மட்டுமே இந்தி யர்கள். மேற்கு வங்கத்தில் 30- க்கும் மேற்பட்டவர்கள் தேசிய குடிமக்கள் பதிவுக்காக தற்கொலை செய்து கொண் டனர். இவர்களின் இறப்பிற்கு யார் பொறுப்பேற்பது? மக்கள் அனைவரும் போராட வேண்டும். ஆனால் சட்டத்தை ஒரு போதும் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார். ஜார்க்கண்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கலவரக் காரர்களை ஆடையை வைத்தே கண்டறியலாம் என தெரிவித்திருந்தார்.

Wednesday, December 18, 2019

இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்தை புதுச்சேரியில் அனுமதிக்கமாட்டோம் முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்


‘‘இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தை புதுச்சேரியில் ஒருபோதும் ஏற்க மாட்டோம், இதற்காக ஆட்சியே போனாலும் கவலையில்லை’’ என தி.மு.க. ஆர்ப் பாட்டத்தில் புதுச்சேரி முதல் வர் நாராயணசாமி பேசினார்.
ஈழத்தமிழர், சிறுபான்மையினருக்கு எதிராக இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத் தம் கொண்டு வந்த மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்தும், அதற்கு ஆதரவு அளித்த அதிமுக அரசை கண்டித்தும் புதுச்சேரி வடக்கு மாநில தி.மு.க. சார்பில் தலை மை அஞ்சல் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந் தது. வடக்கு மாநில அமைப் பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை தாங்கினார்.
இதில் முதல்வர் நாராயண சாமி கலந்து கொண்டு பேசிய தாவது: இந்திய அரசியல மைப்பு சட்டத்தின்படி மதம், இனம், மொழி வாரியாக மக் களை பிரிக்க கூடாது. ஆனால் இந்த சட்டத்தில் இஸ்லா மியர்கள் பிரிக்கப்பட்டுள் ளனர். இதனால் ஒரு கோடி இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்திருத்தம் கொண்டு வந்ததால் நாடே பற்றி எரி கிறது. அசாம், மிசோரம், மணிப்பூர், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் போ ராட்டம் தீவிரம் அடைந்துள் ளது. தமிழகம், புதுச்சேரியிலும் போராட்டம் நடந்து வரு கிறது.
மேற்கு வங்காளத்தில் இந்த சட்ட திருத்தத்தை என் உயிரே போனாலும் அமல்படுத்த மாட்டோம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். புதுச் சேரியிலும் இந்த சட்டதிருத் தத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இத னால் ஆட்சியே போனாலும் கவலை இல்லை.
புதுச்சேரியில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் மரியாதை யுடன் நடந்து கொள்கிறார்கள். எனவே இந்த சட்டத் திருத் தத்தை அனுமதிக்க மாட் டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக மறியல் போராட்டம்: காவல்துறையினர் கல்லூரி மாணவர்களிடம் அத்து மீறல்


குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தஞ்சையில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் விரட்டி அடித்த தால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. டெல்டா மாவட் டத்திலும் போராட்டம் தீவிரமடைந் துள்ளது.
தஞ்சை
தஞ்சை மன்னர்சரபோஜி அரசு  கல்லூரி மாணவ, மாணவிகள் 1,000க்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அங்கு வந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தை நிறுத் துமாறு வலியுறுத்தினர். அத்துடன் இந்திய மாணவர் சங்க தலைவர் அரவிந்த்சாமி  உள்ளிட்ட மாணவர் களை கையை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தனர். இதனால்  ஆத்திரமடைந்த மாண வர்கள், காவல்துறையினருக்கு எதிராக முழக்கம் எழுப்பியவாறு கல்லூரி  வளாகத்தை விட்டு வெளியே வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் மாண வர்களை விரட்டி அடித்ததால் மாணவர்கள்  கலைந்து சென்றனர்.
திருவாரூர்
திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய  பல்கலைக்கழக மாணவர்களும் நேற்றுமுன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்ட தோடு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின்  உருவ பொம்மையை எரித்து தங்கள்  எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதையடுத்து 20ஆம் தேதி வரையில் விடுமுறை அளித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டதுடன் உட னடியாக 24 மணி நேரத்திற்குள் மாணவர்கள் விடுதியை விட்டு  வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
பல்வேறு வெளிமாநிலங்களை சேர்ந்த  மாணவர்கள், உடனடியாக தங்கள் ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் கிடைக்காததால்  விடுதியை விட்டு வெளியேற முடியாது என நள்ளிரவு வரை உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பல்கலைக்கழக நிர்வாகம்  சம்மந்தப்பட்ட மாணவர் களிடம் தனித்தனியாக கடிதம் பெற்றுக் கொண்டு 2  நாட்கள் வரையில் விடுதி யில் தங்குவதற்கு அனுமதி அளித் துள்ளனர்.
பிரதமர் உருவ

பொம்மை எரிப்பு
மேலும் போராட்டத்தில் ஈடு பட்டு,  பிரதமர் உருவபொம்மையை எரித்ததாக 30 மாணவிகள் உட்பட மொத்தம் 75  மாணவர்கள் மீது நன்னிலம் காவல்துறையினர் பல் வேறு  பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டிச.26இல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்: வெறும் கண்களால் பார்க்கக் கூடாது


'டிச. 26ஆம் தேதி நடக்கவுள்ள நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பார்க்க முடியும். ஆனால் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது'- என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கிரகணம் என்பது நிழல். சூரிய னுக்கும் பூமிக்கும் நடுவே ஒரே நேர்கோட்டில் நிலவு வருவதால் பூமியில் விழும் சூரிய ஒளி தடுக்கப் பட்டு நிலவின் நிழல் பூமியின் மேல் விழுவது சூரிய கிரகணம் எனப்படு கிறது. இதில் மூன்று வகை உண்டு. சந்திரனின் நிழல் முழுதாக சூரியனை மறைத்தால் அது முழு சூரிய கிரகணம்.
நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்க முடியாமல் அதன் விளிம்பு பகுதி ஒரு நெருப்பு வளையம் போல் காட்சியளித்தால் அது கங்கண அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணம். சூரிய ஒளி முழுமையாக மறைக்கப்படாமல் ஒளி குறைந்தாலும் வெளிச்சம் இருக்கும். இது பகுதி சூரிய கிரகணம். டிச.26ஆம் தேதி கங்கண சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
இது குறித்து பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மய்யத்தின் பொறுப்பு செயல் இயக்குனர் சவுந்திரராஜன் கூறியதாவது:
கிரகணத்தின் உச்சத்தில் ஒரு கங்கணம் போல சூரியனின் வெளி விளிம்பு தெரியும்.
இதனை கங்கண அல்லது நெருப்பு வளைய சூரிய கிரஹணம் என்கிறோம். இந்தியாவில் 2010 ஜன. 15இல் கங்கண சூரிய கிரகணத்தை காண முடிந்தது. டிச. 26ஆம் தேதி நிகழ உள்ள சூரிய கிரகணம் சவுதி அரேபியா, கத்தார், இலங்கை, மலேசியா, மாலத்தீவு, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் தென்மாநிலங்களில் தெரியும். இந்த அரிதான வான் நிகழ்வை தமிழகத்தில் 26ஆம் தேதி காலை 8.06 முதல் 11.19 மணி வரை மூன்று மணி நேரம் பார்க்கலாம்.
திருப்பூர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக் கல், மதுரை, பழநி, கரூர், ஈரோடு, கோவை, உதகை ஆகிய நகரங்களில் கிரகணத்தை பார்க்கலாம். சென்னையில் 84.7 சதவீதம் சூரியனை சந்திரன் மறைத்து செல்லும்.
காலை 8:09க்கு துவங்கி 9:35 மணிக்கு உச்சம் பெற்று காலை 11:19க்கு கிரகணம் நிறைவு பெறுகிறது.கிரகணத்தை உரிய பாதுகாப்புடன் 'வெல்டிங்' கண்ணாடி - ஷேட் நம்பர் - -14' பயன்படுத்தி பார்க்கலாம். தொலை நோக்கி வழியே நேரடியாக பார்க்கக் கூடாது.
சூரியன் பிம்பத்தை திரையில் விழச் செய்து பார்க்கலாம்.
சென்னை பிர்லா கோளரங்கில் பொதுமக்கள் சூரிய கிரகணம் பார்ப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்ரகண்ட் ஆகிய மாநிலங்களில் கங்கண சூரிய கிரகணத்தை காணலாம்.
மீண்டும் 2031 மே. 21இல் தமிழ கத்தில் இந்த நிகழ்வை காணலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

வட இந்தியா போராட்டத்தில் பெரியார் முழக்கம்


வட இந்தியாவில் நடக்கும் போராட்டங் களில் ஒலிக்கும் மராட்டிய முழக்கங்கள்:
நா சாவர்க்கர், நா திலக், நா சாது அவுர் சன்யாசி

ஹமாலா ஹவேது பக்து புலே, சாகு,

பெரியார் அவுர் அம்பேத்கர்.
தமிழாக்கம்:
வேண்டாம் சாவர்கர், வேண்டாம் திலகர்,

வேண்டாம் சாது சன்யாசி

எங்களுக்குத் தேவை புலே, சாகு மகராஜ்,

பெரியார், அம்பேத்கர்
வடமாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், புலே, சாகு பெயர்கள் முழங்கப்பட்டு வருகின்றன.

Tuesday, December 17, 2019

கடற்படையில் முதல் பெண் பைலட்


பீகாரைச் சேர்ந்த துணை லெப்டினென்ட் ஷிவாங்கி, இந்தியக் கடற்படையின் முதல் பெண் பைலட்டாகப் பொறுபேற்றுள்ளார். கடற்படையில் பெண் விமானிகளைப் பணியமர்த்துவதற்கான ஒப்புதலை அமைச்சரவை 2018இல் வழங்கியது. அதையடுத்து கடற்படை அகாடமியில் ஷிவாங்கி விமானப் பயிற்சியில் இணைந்தார். சில மாதங் களுக்கு முன் அவர் பயிற்சியை நிறைவுசெய்தார்.
பின்னர் டிசம்பர் 2 அன்று கொச்சியில் உள்ள கடற்படைப் பயிற்சித் தளத்தில் துணை லெப்டினென்டாகத் தன் பணியைத் தொடங்கினார் ஷிவாங்கி. கடற்படையில் டார்னியர் கண்காணிப்பு விமானப் பிரிவில் அவர் பணியாற்றவுள்ளார்.
கடற்படையில் பல்வேறு பிரிவுகளில் பெண்கள் பணியாற்றிவருகிறார்கள். ஆனால், விமானப் பிரிவில் இந்தத் தொடக்கம் மற்ற பெண்களுக்கு உந்துசக்தியாக இருக்கும் என நம்புகிறேன். எதிர் காலத்தில் கடற்படை விமானப் பிரிவில் இணையும் பெண்கள் போர் விமானங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் எனக் கூறியுள்ளார் ஷிவாங்கி.

உதவுவதால் வாழ்க்கை உயர்வடையும்

 மதிய வேளை. கொட்டித் தீர்த்த கனமழைக்கு நடுவே சொட்டச் சொட்ட நனைந்தவாறு ஆதரவற்றவர்கள், முதியவர்கள், மாநகரில் சுற்றித் திரியும் யாசகர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிக் கொண்டிருந்தார் பெண் ஒருவர்.
கோவை காந்திபுரம் புதிய மேம்பாலத்தின் அடியிலும் மாநகரின் சில பகுதிகளிலும் இருக்கும் ஆதரவற்றோருக்கு அவர் அன் றாடம் உணவளிப்பதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அந்தப் பெண் தினமும் தங்களுக்கு மதிய உணவளிப்பதுடன், கிழிந்த கந்தலான ஆடைகளை அணிந்திருப்பவர் களுக்குச் சேலை, லுங்கி, சட்டை போன்ற வற்றை வாங்கித் தருவதாகவும் ஆதரவற்றோர் சிலர் சொன்னார்கள்.
அவர்கள் சொல்லிக் கொண்டிருக் கும்போதே கையில் பையுடன் அந்தப் பெண் வந்தார். நாம் பேச முயன்றபோது சில நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொல்லி விட்டுச் சென்றார். இன்னைக்குக் கொஞ்சம் தாமதமாகிடுச்சு. அவங்க பசியோடு காத்தி ருப்பாங்க. அதனாலதான், காத்திருக்கச் சொன்னேன் என்று தன்மையுடன் சொன்னவரின் பெயர் வெண்ணிலா.
வெண்ணிலாவின் பூர்விகம் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை. கோவைக்குக் குடிபெயர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தற்போது கோவை கணபதி பகுதியில் குடும்பத்தினருடன் இருக் கிறார். கேவையில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலைசெய்துவருகிறார்.
சிறு வயது முதலே மற்றவர்களின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் குணம் கொண்ட வெண்ணிலா தன்னால் முடிந்த அளவுக்குப் பிறருக்கு உதவுவது வழக்கம். கோவைக்கு வந்த பிறகு இங்குள்ள தன்னார் வலர்களுடன் இணைந்து, சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஆதரவற்ற வர்கள், முதியவர்கள், யாசகர்கள்னு நிறையப் பேர் பட்டினியால் வாடுவதைப் பார்க்க வருத்தமாக இருந்தது. அவர்களுக்கு ஒரு வேளையாவது உணவளிக்க நினைத்தேன். வீட்டிலேயே சமைத்து, பொட்டலம் கட்டிக் கொண்டுவந்து கொடுக்கத் தொடங்கினேன் என்று சொல்லும் வெண்ணிலா இதைச் சில ஆண்டுகளாகச் செய்துவருகிறார். உண வோடு அவ்வப்போது ஆடைகளையும் தரு கிறார்.  விழா நாட்களில் பிரியாணி, இனிப்பு, காரம் போன்றவற்றைத் தருகிறார்.
மேலும் இவர் 'Beggerless City in India' என்ற பெயரில் முகநூல் குழு ஒன்றைத் தொடங்கி, அதன்மூலம் முகநூல் நண்பர்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்திவருகிறார்.

2019இல் தடம் பதித்த வீராங்கனைகள்


பூட்டிய விலங்கு அறுபட்டால் பெண்கள் நிகழ்த்தும் சாதனைகளுக்கு எல்லையே இல்லை என்பதற்கு இந்திய விளையாட்டு வீராங் கனைகளே சாட்சி. 2019-இல் பல வரலாற்று சாதனைகள் படைத்த வீராங்கனைகள் பற்றிய தொகுப்பு:
போராடி வென்றவர்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பி.யு. சித்ரா, ஆசியத் தடகளப் போட்டியில் 1500 மீட்டர் பிரிவில் மூன்றாம் முறை யாகத் தங்கம் வென்று சாதித்தார். பெற் றோர் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். சித்ராவுக்கு இந்த வெற்றி சாதாரணமாகக் கிடைத்துவிட வில்லை. ஆசியப் போட்டியில் பங்கேற் பதற்கான வீரர்கள் பட்டியலை இந்தியத் தடகள சம்மேளனம் வெளியிட்டது. அதில் சித்ராவின் பெயர் இல்லை. எதற்கும் துவளாத அவர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் வழங்கிய நீதி சித்ராவைப் போட்டியில் கலந்துகொள்ள வைத்தது.
சச்சினை வென்ற ஷபாலி
அரியானாவைச் சேர்ந்த பதினைந்து வயதான ஷபாலி வர்மா மிக இளம் வயதில் அரை சதம் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்தார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர் பதினாறு வயதில் புரிந்த சாதனையை இவர் முறியடித் துள்ளார். சர்வதேச டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 49 பந்துகளுக்கு 73 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருக்கிறார் ஷபாலி.
மாவட்டத்தின் முதல் பெருமை
புதுக்கோட்டை வட்டாப்பட்டியைச் சேர்ந்த பூவிதா, தேசியக் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் ராணியார் அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்துவரு கிறார். ஹரியாணாவில் உள்ள ரோஹ் தக்கில் நடைபெற்ற தேசியக் குத்துச்சண் டைப் போட்டியில் பெண்களுக்கான ஜூனியர் பிரிவில் இவர் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை பூவிதா.
போல்ட்டின் சாதனையை

முறியடித்த அல்லிசன்
அமெரிக்க வீராங்கனை அல்லிசன் பெல்லிக்ஸ் உலக தடகளப் போட்டிகளில் ஜாம்பவானாக இருந்த ஜமைக்கா வீரர் உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்தார். தோஹாவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4400 தொடர் ஓட்டத்தில் முதலிடத்தைப் பிடித்தார் அல்லிசன். இதன்மூலம் உலக தடகளப் போட்டியில்12 தங்கப் பதக்கங் களைப் பெற்றுள்ளார் அல்லிசன். ஆனால், உசேன் போல்ட் 11 தங்கப் பதக்கங்கள் மட்டுமே பெற்றிருக்கிறார்.
தடகளத்தின் தங்க மங்கை
ஹிமா தாஸ், தடகளத்தின் தங்க மங்கை. 2019-இல் மட்டும் சர்வதேசத் தட களப் போட்டிகளில் அய்ந்து தங்கப் பதக் கங்களை வென்று சாதனை படைத் துள்ளார். 2018-இல் ஆண்டு உலக ஜூனியர் தடகளப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்தவர் ஹிமா தாஸ்.
ஒரே தோட்டா இரண்டு தங்கம்
இளவேனில் வாலறிவன், இந்த ஆண்டில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று. சர்வதேச அளவில் நடைபெற்ற உலகத் துப்பாக்கி சுடும் போட்டியில் பத்து மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஒரே ஆண்டில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த இவர், குஜராத் மாநிலத்தில் வசித்து வருகிறார். சர்வதேச அளவில் பத்து மீட்டர் ஏர் ரைபிள் தர வரிசையில் முதலிடத்தில் உள்ளார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிறந்த வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் கோல்டன் ராக்கெட் விருதை இவர் பெற்றிருக்கிறார்.
உலகப் போட்டியில் ஒருவர்
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள 17 வயதுக்கு உட்பட்டோருக் கான ஃபிபா பெண்கள் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கேற்பதற்காக சேலம் வீராங்கனை மாரியம்மாள் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சேலம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த இவர், கைத்தறித் தொழிலாளியின் மகள்.
வாகையர் பெண்கள்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அய்ந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்ஸை 15 வயதான கோரி காஃப் முதல் சுற்றிலேயே வென்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த சர்வதேசத் தடகளப் போட்டியில் 32 வயதான ஜமைக்கா வீராங்கனை செல்லி ஆன் ஃபிரேசர் பிரைஸ், தங்கம் வென்றார். குழந்தை பிறப்புக்குப் பிறகு ஷெல்லி கலந்துகொண்ட முதல் போட்டி இது. இதில் 100 மீ. பிரிவு ஓட்டத்தை 10.71 விநாடிகளில் கடந்த முதல் பெண் என்ற சாதனையை நிகழ்த்தி, உலகின் மிக வேக மாக ஓடும் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
மாற்றத்தின் வெற்றி
ஸ்லோவாகியா நாட்டில் நடந்த உலக மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் திருச்சி வீராங்கனை ஜெனிதா ஆண்டோ தங்கம் வென்றார். இப்போட்டியில் வென்றதன்மூலம் தொடர்ந்து ஆறாம் முறையாகத் தங்கம் வென்றவர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
கபடிப் போட்டியில் மகளிர் அணி
மலேசியாவில் நடைபெற்ற உலகக் கபடிப் போட்டியில் இந்திய மகளிர் அணி கோப்பையை வென்றது. இந்த அணியில் தமிழகம் சார்பில் மதுரையைச் சேர்ந்த குருசுந்தரி மட்டுமே இடம் பெற்றி ருந்தார். 15 ஆண்டுகளாகக் கபடி ஆடி வரும் குருசுந்தரி கோவை வனத்துறை வனக்கோட்டத்தில் பணிபுரிந்துவரு கிறார்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...