Showing posts with label பா.ஜ.க. Show all posts
Showing posts with label பா.ஜ.க. Show all posts

Friday, July 3, 2015

பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்

பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்

குஜராத் கலவரம் - 1999ல் இந்திய விமானம் கடத்தப்பட்ட விவகாரம்
பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்

காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூலை 4_ 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக்கலவரம் நடைபெற்றது இதற்கு  அன்று முதல்வராக இருந்த மோடி பொறுப் பேற்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் கூறியதாக  ரா உளவுத்துறை முன்னாள் அமைப்பின் தலைவர் ஏ.எஸ்.துலாத் செய்தி தொலைக்காட்சி யில் நடந்த நேர்காணலில் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக மோடி விளக்கம் தரவேண்டும் என்று காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்கட்சிகள்  குர லெழுப்பியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய்குமார் முன்னாள் பிரதமர் வாஜ்பேயின் வார்த்தைகளை மதிப்பவர் என்றால், பிரதமர் மோடி குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க வேண் டும் என்று கூறினார்.
காங்கிரஸ்  கட்சியின் மற்றொரு செய்தி தொடர் பாளர் டாம் வடக்கன் 1999ஆம் ஆண்டு இந்திய விமானம் கடத்தப்பட்ட தற்கு தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததற்காகவும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு சாதகமாக நடந்து கொண்டதற்காக வும் பா.ஜ.க.வும் பிரதமர் மோடியும் நாட்டு மக்களி டம் நிபந்தனையற்ற மன் னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.
ரா உளவுத்துறை அமைப்பின் முன்னாள் தலைவர் தன்னுடைய பதவிக்கால நினைவுகள் என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நூல் தொடர்பாக இந்தி தொலைக்காட்சி ஒன்று அவரிடம் நேர் காணல்  நடத்தியது. அதில் பல திடுக்கிடும் உண்மை களை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
குஜராத் கலவரம்
2002-ஆம் ஆண்டு 27 பிப்ரவரி அன்று, அயோத்தி யிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி தொடர்வண்டி சில சமூக விரோதிகளால் தீவைத்து எரிக்கப்பட்டது  இதில் அய்ம்பதிற்கும் மேற்பட் டோர் மரணமடைந்தனர். பிரச்சினைக்குரிய இந்தச் சம்பவம் பெரும் கலவ ரத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் மாநில அரசு தடுப்பு நடவடிக்கை எது வும் எடுக்காமல் எரிந்த தொடர்வண்டிப் பெட் டியை கழற்றி தொடர் வண்டி மீண்டும் பயணம் செய்ய அனுமதித்தது. இந்தி செய்தி பத்திரிகை ஒன்று மோடி அரசின் இந்தச் சம்பவம் கலவ ரத்தை குஜராத் முழுவதும் பரப்பும் சூழ்ச்சியாக அமைந் தது என்று எழுதியி ருந்தது. அதுபோலவே அந்த வண்டி சென்ற ஒவ்வொரு ஊரிலும் கலவரம் வெடித்தது. அந்த தொடர்வண்டிக்கு எந்த ஒரு பாதுகாப்பும் அளிக் காமல் மோடி அரசின் கீழ் இயங்கும் காவல்துறை வேடிக்கை பார்த்தது. அந்த தொடர்வண்டி வடோதரா சென்றடைந்ததும் அங்கு கூடியிருந்த இந்து அமைப்பைச் சேர்ந்தவர் கள் ரயிலில் வந்தவர்கள் அனைவரையும் தாக்க ஆரம்பித்தனர். இதில் 4-பேர் மரணமடைந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் இந்துக்கள் ஆவர். இந்த நிலையில் மதக்கலவரம் குஜராத் முழுவதும் பரவியது. அகமதாபாத், சூரத் என பல இடங்களில் இஸ்லாமி யர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டனர்.
குழந்தைகளை தீயில் எரித்தனர்
இது குறித்து ஆஜ் தக் தொலைக்காட்சியும், தெஹல்காவும் இணைந்து நடத்திய புலன் விசார ணையில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளே இருந்த குழந்தையை தீயில் தூக்கி போட்டு எரித்ததையும், இவைகளுடன் முஸ்லீம் பெண்களை அநியாயமாக கூட்டு வன்புணர்வு செய்த கலவரக் காரர்களுக்கும், அகமதா பாத்தில் உள்ள நரோடா எனும் இடத்தில சுமார் எழுபது பேர்களை கொன்ற பா.ஜ.க தலைவ ருக்கு மோடி ஆதரவு தெரிவித்ததையும் அவரது அமைச்சர் பாதுகாப்பு அளித்ததையும் பகிரங் கமாக வெளிப்படுத்தியது.
மேலும் கலவரக்காரர் கள் முஸ்லிம்களை எவ் வாறு திட்டமிட்டு இன அழிப்பு செய்தார்கள் என்று குஜராத் பெண் அமைச்சர் ஒருவரும் பஜ் ரங்தள் தலைவர் ஒரு வரும் பேசிய காணொளி வாக்குமூலம்  நாடு முழு வதும் பரபரப்புக்குள்ளா கியது.  இந்தக்கலவரத்தில் 3000 முஸ்லீம்கள் கொல் லப்பட்டனர். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஜாவேத் ஜாவ்ரியும் அடங்குவர். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தக் கலவரம் தொடர்பான அனைவரும் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட காவல் துறை முன்னிலையில் 3 இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்துக் கொலைசெய்த பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர்,  சாட்சிகள் யாரும் இல்லை என்ற காரணத் தால் விடுதலை செய்யப் பட்டனர்.
கலவரத்திற்கு மோடி  காரணம் - வாஜ்பாய் வருத்தம்
இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் ஆட்சி யாளர்களும் சேர்ந்து நடத்திய இந்தக் கொடூரச் சம்பவம் அனைத்தும் மோடி அரசுக்குத் தெரிந்தே நடைபெற்றது என்றும் மோடி தனது அதிகாரத் தில் உள்ள காவல் துறையை இயங்க விடாமல் செய்தார் என்றும் குற்றச் சாட்டுயுள்ளது.  இந்தக் கலவரம் குறித்து இதுவரை மோடி எந்த ஒரு பதிலும் கூறாமல் மவுனம் சாதித்து வருகிறார். இந்தக் கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அப்போதைய பிரதமர் அடல்பிகாரி வாஜ் பாய், குஜராத் கலவரத் திற்கு மோடி அரசே கார ணம் என்று கூறி வருத்தப் பட்டார் என்று அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்த போது  கலவரம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிந்தும் குஜராத மாநில அரசு தடுப்பு நடவடிக்கையை எடுக்கவில்லை, மேலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பல அரசியல்வாதி கள் நேரடியாக இந்தக் கலவரத்தில் தொடர்புடை யவர்களாக இருந்தனர். இதைக் கட்டுப்படுத்த இயலாமல் போனது எங் களது மிகப்பெரிய தவறு என்று வாஜ்பாய் வருத்தம் தெரிவித்தார். அப்போது குற்ற உணர்வையும், வருத்தத்தையும் அவரது முகத்தில் காண முடிந்தது என பதிலளித்தார்.
கந்தகார் விமான கடத்தல் 1999ஆ-ம் ஆண்டில் கந்த கார் விமான கடத்தல் தொடர்பாக கருத்து தெரிவித்தபோது அப்போ தைய வாஜ்பாய் அரசு  இந்திய விமானத்தில் கடத்தப்பட்ட பயணிகளை விடுவிக்க மூன்று தீவிர வாதிகளை விடுதலை செய்ய முடிவு செய்தது. மேலும் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமானத்தை மீட்க நட வடிக்கை எடுக்க நல்ல வாய்ப்பிருந்த நிலையில் மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக் காமல் அமைதியாக இருந்து விட்டது. அமிர் தசரஸ் விமான நிலை யத்தில் பயணிகளை மீட்க இந்திய கமாண்டோ பிரிவினர் தயாராக இருந் தனர். ஆனால் மத்திய அரசின் மவுனம் காரண மாக சந்தேகமடைந்த தீவிரவாதிகள் விமானத்தை பாகிஸ்தானில் உள்ள லாகூர் அதன்பிறகு துபாய் கொண்டு சென்று இறுதி யில் கந்தகாரில் தரை யிறக்கினார்கள்.  மத்திய அரசின் இந்த  நடவ டிக்கை மிகவும் மோசமா னது  என்று அப்போதைய ஜம்மு காஷ்மீர் முதல் அமைச்சர் பரூக் அப் துல்லா பதவி விலகப்  போவதாக கூறினார்.  எட்டு நாள்களுக்குப் பிறகு கந்தகாரில் இருந்த விமானம் மற்றும் 180-க்கும் மேற்பட்ட பயணிகள் விடு விக்கப்பட்டனர்.
பயணி களை விடுவிக்க 3 தீவிர வாதிகளை மத்திய அரசு விடுதலை செய்தது, என்று அந்த நூலில் குறிப்பிட் டுள்ளார் இது தொடர் பான கேள்விக்கு பதில ளித்த போது கூறியதாவது: விமானம் டிசம்பர் 24-ஆம் தேதி கடத்தப்பட்டபோது, அரசு மிகப்பெரிய தவறு செய்து விட்டது,  விமா னம் அமிர்தசரஸில் நிறுத் தப்பட்டபோது அங்கி ருந்து விமானத்தை வெளியே கொண்டுசெல்வதை தடுக்க உடனடியாக முடிவு எடுக்கப்படவில்லை. விமா னம் கடத்தப்பட்டதை தொடர்ந்து உடனடியாக முடிவு எடுக்க அரசுத் தரப்பில் யாரும் முயற்சி செய்யவில்லை.  விமா னத்தை மீட்க தயாராக இருந்த பஞ்சாப் மாநில காவல்துறையின ருக்கு எந்த ஓர் ஆணை யும் வழங்கப்படவில்லை. மத்திய அரசின் இந்தச் செயல்களால் இந்தியாவை விட்டு விமானம் பறந்து சென்றுவிட்டது. மத்திய அரசு உடனடியாக செயல் பட்டிருந்தால் நமது நாட் டிலேயே இந்தப் பிரச் சினையை முடிவிற்கு கொண்டு வந்து பயணி களை மீட்டிருக்கலாம் என்று கூறினார். தீவிரவாதியின் மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்   பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன்  தலைவர் சையது சலா ஹுதீன், அப்போது அய்..பி. உளவு அமைப்பின் தலை வராக இருந்த கே.எம்.சிங் ரகசியமாகச் சந்தித்தார்.
அந்தச் சந்திப்பின்போது தனது மகன் ஷயத் அப் துல்வாகித்திற்கு மருத் துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருமாறு கூறி னார். அதைத் தொடர்ந்து, முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லாவை கே.எம்.சிங் சந்தித்தார்.   ஷயத் அப்துல் வாகித் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது.  இந்த விவகாரம் அனைத் தும் அப்போதைய வாஜ் பாய் அரசுக்குத் தெரிந்தே நடந்தது என்று அந்த நூலில் எழுதியுள்ளார்.
மேலும் தற்போது ஜம்முகாஷ்மீரில் பாஜக கட்சியுடன் கூட்டணி ஆட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் முஃப்திமுகமது வின் மகள்  மெஹ்பூபா வுக்கு ஹிஸ்புல் முஜாஹி தீன் அமைப்புடன் தொடர் புகள் இருந்தன என்று எ.எஸ்.துலாத் தெரிவித்தார்.
ரா அமைப்பின் தலை வர் இந்த தொலைகாட்சி நேர்காணல் மற்றும் நூல் மூலம் முந்தைய பாஜக அரசு தீவிரவாதிகளுடன் இணக்கமாக இருந்தது மற்றும் கலவரத்திற்கு முக்கிய காரணமாக இருந்த  விவகா ரங்கள் நிரூபணமாகி யுள்ளன.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, April 21, 2015

வன்முறையைத் தூண்டுகிறார் மத்திய அமைச்சர்?



மத்திய அமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேட்டி என்ற பெயரில் திருவாய் மலர்ந்துள்ளார்.

1. பெண்கள் தாலி அணிவது கலாச்சாரத்தின் சின்னம் என்கிறார். எந்தக் கலாச்சாரத்தின் சின்னம் என்பதை இந்த வரலாற்று அறிஞர் விளக்குவாரா?

காட்டுக்குச் சென்று புலியைக் கொன்று பல்லைப் பிடுங்கி வந்து, காதலியின் கழுத்தில் கட்டுவது வீரத்தின் சின்னம்!
சரி... அதன்படி அந்த வீரத்தை நிரூபிக்கவேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொல்ல முன்வரட்டுமே பார்க்கலாம்!

தாலி கலாச்சாரத்தின் சின்னம் என்றால், கணவன் இறந்தவுடன் அந்தத் தாலியை அறுத்து முண்டமாக்கி, விதவை என்று பெண்களுக்கு இழிபட்டம் சுமத்து வானேன்?

கணவன் இறந்தவுடனே அந்தப் பெண்ணின் வாழ்வு அத்தோடு முடிந்துவிடவேண்டும் என்பதுதானே அவர்கள் தூக்கிப் பிடிக்கும் இந்துத்துவாவின் லட்சணம்!

கணவனை இழந்த பெண் எதிரே வரக்கூடாது; அது அமங்கலம் என்று பெற்றதாயைக்கூட விதவைக் கோலப் படுத்தி அவமதிக்கும் இந்துத்துவாதான் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமா? கலாச்சாரக் குணமா?
மத்திய அமைச்சராக இருக்கக் கூடிய ஒருவருக்கு இவ்வளவுக் குரூரத்தனமான குணம் இருக்கலாமா?

கணவன் கட்டிய தாலியை, அந்தக் கணவன் இறந்த பிறகு அறுத்து அமங்கலி என்பதுதானா இந்து மதப் பாரம்பரியம்!?
அந்தப் பாரம்பரியம் உடைந்து இன்று சுக்கல் நூறாக சிதறிவிடவில்லையா? விதவைப் பெண்கள் மறுமணம் புரிந்து வாழவில்லையா?

1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டிலேயே விதவைப் பெண்கள் மறுமணம் செய்துகொள்ளவேண்டும் (தீர்மானம் எண் 10) என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வரலாறு எல்லாம் பொன்.ராதாகிருஷ்ணன் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

(சுயமரியாதை இயக்கத் தலைவர் ஊ.பு.அ.சவுந்தர பாண்டியனார் தலைமையில்தான் அந்த மாநாடு நடை பெற்றது என்பதை செவி வழியாகக்கூட கேள்விப்பட்டி ருந்தால் இதுமாதிரியெல்லாம் கேலிக்குரிய பேட்டி கொடுக்கமாட்டார்).

விதவைப் பெண்களைத் தரிசு நிலத்திற்கு ஒப்பிட்ட காஞ்சி சங்கராச்சாரியாரின் இந்து மதச் சீடர்களான இவர்கள் வேறு எப்படித்தான் பேசுவார்கள்?

(காஞ்சி மடத்திற்கு சு.சாமி போனால் சமமாக உட்கார முடியும்; பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் போனால் தரையில்தானே உட்காரவேண்டும்?).

கீழ்ஜாதி - ஈழவப் பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கக்கூடாது என்ற இந்துக் கலாச்சாரத்தை ஒழித் தவன் கிறித்துவனான வெள்ளைக்காரன் என்பதை இந்து மதத்தைத் தூக்கிச் சுமக்கும் மத்திய அமைச்சர் அறிவாரா? (தோள் சீலைப் போராட்டத்தை அறிவாரா?)

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற பழமொழிக்குச் சொந்தக்காரர்களா பெண்ணுரிமைக்காக அன்றாடம் குரல் கொடுக்கும் கருப்புச் சட்டையைப்பற்றிப் பேசுவது?

பூப்படைந்த பெண்கள் வெளியில் வர முடியாது என்று இருந்ததே - அதனை இவர்கள் இன்று கூறத் தயாரா?

பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்ததும், பாடுபட்டதும் தந்தை பெரியார் அவர்களின் இயக்கம் தானே! பெண்களின் திருமண வயதை உயர்த்துவது, பெண்களுக்கு உத்தியோக உரிமை, சொத்துரிமை,

விவாகரத்து உரிமை, மறுமண உரிமை என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் அடைந்த பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம்தான் ஆணுக்குத் திருமணம் ஆனவர் என்பதற் கான அடையாளம் இல்லாதபோது, பெண்ணுக்கு மட்டும் ஏன் என்ற கேள்வியின் இந்த வளர்ச்சி - தடுக்கப்பட முடியாததுதானே?

மாற்றம் என்பதுதான் மாறாதது என்ற அடிப்படை மனித உரிமையின் வாய்ப்பாடு தெரிந்தவர்கள் இதனை ஒப்புக் கொள்வார்கள்.

அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம் கொடுக்கப் பட்டதே - அதில் தாலி சட்டப்படி கட்டாயம் இல்லை என்பதை அறிவாரா அமைச்சர்? எந்த உலகத்தில் இருக்கிறார் - இந்த இந்துத்துவாவாதி?

கணவனைவிட அதிகம் படித்து சம்பாதிக்கும் பெண் கள் ஆண்களுக்கு அடங்கி நடக்கமாட்டார்கள் - அவர் களை விவாகரத்து செய்துவிட்டு வெளியில் வரவேண்டும் என்று புத்தி கூறுகிற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் சீடரான பொன்.ராதாகிருஷ்ணன் வேறு எப்படித்தான் பேசுவார்?

2. கருஞ்சட்டை அணிவது உரிமை என்றால், தாலி அணிவது இவர்கள் உரிமையாம்! அடேயப்பா எப்படிப் பட்ட தர்க்கம்?!

கருஞ்சட்டை அணிவது ஒரு கொள்கையின் வெளிப்பாடு; மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட இந்து மத தத்துவப்படி சூத்திரர்கள்தான் - அந்தச் சூத்திர இழிவை ஒழிப்பதற்கான அடையாளம்தான் கருப்புச் சட்டை.

நான் சூத்திரனாகவே இருந்துவிட்டுப் போகிறேன் - அதைக் கேட்க நீ யார்? என்று கேட்கிறாரா அமைச்சர் பெருமகன்?

திராவிடர் கழகத்தினர் கருப்புச் சட்டை அணிவது கொள்கையின் வெளிப்பாடு - இழிவை ஒழிக்கும் உணர் வின் சின்னம்; தாலி அத்தகையதா? பெண் ஓர் ஆணின் உடைமை, அடிமை என்பதற்கான அடையாளம்.

உரிமை உணர்வை வெளிப்படுத்தும் கருப்புச் சட்டை யும், ஆணின் உடைமை - அடிமைப் பெண் என்பதற்கான அடையாளமான தாலியும் எப்படி சமமானதாக இருக்க முடியும்?
கருத்துக்கள் சொல்ல விரும்பினால் திராவிடர் கழகத்திடம் பால பாடங்கள் படிக்கவேண்டியிருக்கும்.

3. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கருஞ்சட்டை அணிந்து பங்கேற்கக்கூடாது; பெண்கள் வெகுண்டெழுந் தால் இவர்கள் என்ன செய்வார்கள்? என்று மக்களை வன்முறைக்குத் தூண்டப் பார்க்கிறார் பொன்.ராதா கிருஷ்ணன்.

கருப்புடை அணிந்து வெண்தாடி வேந்தர் பெரியார் தலைமையேற்று நாட்டில் நடத்தி வைத்த திருமணங்கள் ஒன்றா, இரண்டா? இலட்சக்கணக்கானவை என்பதைப் பாவம் அமைச்சர் அறியமாட்டார்; அறிந்திருந்தாலும் அவர் இருக்கும் இடம் அந்த உண்மையைச் சொல்ல விடாது.

பெண்கள் வெகுண்டெழுவார்களாம்! பெரியார் என்ற பட்டம் கொடுத்தவர்கள் யார் தெரியுமா? பெண்கள் மாநாடு கூட்டி பெரியார் என்ற பட்டம் அளித்தனர் என்ற தகவல்கூட தெரியாமல் பெண்களை உசுப்பிடப் பார்ப்பது பரிதாபமே!

நம்பிக்கை  சார்ந்த விஷயங்களில் தலையிட்டால் தமிழகம் முழுவதும் கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும் என்கிறார் - பொறுப்பான பதவி வகிப்பவர் வாயிலிருந்து வெளிவரும் பொறுப்பான பேச்சா இது?

திராவிடர் கழகத்துக்காரர்கள் அணியும் கருப்புச் சட்டையை மட்டும்தானா? 
நீதிபதிகளும், வழக்குரைஞர் களும் அணியும் கருப்புடையைக்கூட கழற்றப் போகிறார்களா?

அய்யப்பப் பக்தர்களின் கருப்புடையையும் களை வார்களோ!
கண்ணின் கருவிழியைக்கூடப் பிடுங்கி எறிந்துவிடு வார்களோ!
ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு என்பது இப்படிப்பட்ட வர்களைப் பார்த்துத்தான் போலும்.

கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் என்றால் என்ன? இதில் வன்முறை வீச்சுத் தொனிக்கவில்லையா?
தாலி அகற்றுதல் என்பது தானாக முன்வந்து அடிமைச் சின்னத்தை அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி - அது ஒரு போராட்டமே அல்ல!

ஆனால், கருப்புச் சட்டையை அகற்றுவோம் என்றால், இன்னொருவர் அணிந்திருக்கும் அந்தச் சட்டையை அகற்றும் வன்முறைத்தனம் அல்லவா! இது பச்சையாக வன்முறையைத் தூண்டும் வேலையல்லவா! மத்திய அமைச்சராகப் போனாலும் அவர்களின் எண்ணத்தில் குடிகொண்ட ஆர்.எஸ்.எஸ். வன்முறைக் குணம் போய் விடுமா? பதவிக்கு ஏற்ற பண்பாடு இதுதானா?

நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடக் கூடாதாம்! நம்பிக்கை என்பதில் இரண்டு வகை; ஒன்று தன்னம்பிக்கை. இது கருப்புச்சட்டைக்காரர்களுக்கே உரித்தானது.

இன்னொன்று மூட நம்பிக்கை. அந்த மூட நம்பிக்கைகளில் தலையிடக்கூடாதா? இந்திய அர சமைப்புச் சட்டத்திலேயே (51ஏஎச்) விஞ்ஞான மனப்பான் மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறப்பட்டுள்ளதே - மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கு, சீர்திருத்த உணர்வு தேவை என்கிறதே - அந்த அர சமைப்புச் சட்டத்தின்மீது சத்தியம் செய்து பதவி ஏற்றவர் இவர்;

மூட நம்பிக்கையில் தலையிட்டால் போராட்டம் வெடிக்கும் என்கிறாரே - வீரமணியைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். அதிகாரத்தில் இருக்கிற காரணத்தால் எதையும் பேசலாம் என்ற நினைப்பா?
எந்தக் காரணத்துக்காக கைது செய்யப்படவேண்டும்? எந்த சட்ட விரோதமான காரியத்தை அவர் செய்து விட்டார்?

தானாக முன்வந்து தாலி அடிமைத்தளை என்று கூறி அகற்றிக் கொள்ளச் செய்தல் சட்டப்படி குற்றமா? மாட்டுக்கறி சாப்பிடுவது என்பதுதான் குற்றமா?

உண்மையைச் சொல்லவேண்டுமானால், சட்டப்படி யான இந்தக் காரியங்களை செய்யக்கூடாது என்று சொல்பவர்கள், தடுக்க நினைப்பவர்கள்தான் - அதற்கான செயல்களில் ஈடுபடுவோர்தான் சட்டப்படி குற்றவாளிகள்!

சட்டப்படியான வகையில் செயல்படுபவர்களைக் கைது செய்யவேண்டுமாம். ஒரு தனியார்த் தொலைக் காட்சியில் தாலிபற்றி சர்ச்சையைக் கருவாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது என்று காவிக்கும்பல் வன்முறையில் ஈடுபட்டதே - டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசியதே - அதனைக் கண்டித்துத் திருவாய்த் திறந்தாரா திருவாளர் பொன்.ராதாகிருஷ்ணன்?

அப்படி என்றால், ஒரு மத்திய அமைச்சர் யார் பக்கம் நிற்கிறார்? குற்றவாளிகளுக்குத் துணை போவதுதான் ஒரு மத்திய அமைச்சரின் வேலையா?

தாலியைப்பற்றி தாண்டிக் குதிக்கும் இவர், கழு தைக்கும், கழுதைக்கும் தாலி கட்டி புரோகிதரை அழைத்து கல்யாணம் நடத்தி வைத்தபோது எங்கே போயிருந்தார்?

கழுதைக்குக் கட்டும்போது தாலியின் புனிதத்தன்மை பூத்துக் குலுங்கியதோ!

மக்களின் சமத்துவத்துக்கு, சம உரிமைகளுக்கு, சமூகநீதிக்கு பாலியல் நீதிக்குப் பாடுபடுவது கருப்புச் சட்டை - இவற்றிற்கு நேர் எதிராக பிறப்பில் பேதம் விளை வித்து, உயர்ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பதை நிலை நிறுத்தும். தீண்டாமைத் தீயை நெய்யூற்றி வளர்ப்பது காவிக் கூட்டம் - காவித்தத்துவம்.

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கேவலப்படுத்தும் கீதையைப் புனித நூலாக மதிக்கும் - அதனைப் பாடத் திட்டங்களில் வைக்கத் துடிக்கும் (அரி யானாவில் வைத்தும் விட்டார்கள்) கூட்டம்தான் காவி.

மக்களிடம் வாருங்கள் பார்க்கலாம்! ஏற்கெனவே ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் தாலியகற்ற 71 சதவிகித மக்கள் ஆதரவு அளித்துவிட்டார்களே!

கருப்பா - காவியா? என்கிற கேள்வியை முன்வைப் போம் தமிழ்நாட்டில்! மக்கள் யார் பக்கம் என்பதைத் தீர்மானிக்கலாம்.

நடைபெற்ற சிறீரங்கம் இடைத்தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாதவர்கள், கனைத்துப் பார்க்கிறார்கள் - அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

- கருஞ்சட்டை -

 ----------------------------------------------------

இந்துக் காவிகளே,
காமெடித்தனத்தை அறிவித்தோரே...!


காவிக் கட்சியினர் சிலர் கருஞ்சட்டைகளுக்கு எதிராகப் போராட்டங்களை அறிவித்துள்ளனர். அதில் நமக்கெழும் சில சந்தேகங்கள்!
இந்தக் கருப்புச் சட்டை அகற்றும் அறிவிப்பு போ.........ர்......... ஆட்டம் யாருக்கு எதிராக?

1. சபரிமலைக்குப் போகும் அய்யப்பப் பக்தர்களுக்கு எதிராகவா?

2. கோர்ட்டுகளுக்குப் போகும் இருபால் வக்கீல்களுக்கு எதிராகவா?

3. நீதி வழங்கும் நீதிபதிகளுக்கு எதிராகவா?

4. கருப்புச் சேலை விற்பனையைத் தடுக்க, ஜவுளிக்கடைகள் முன்பாகவா?

5. கருப்பைக் கண்டு மிரளுவோரே, கருப்பு டை அடிப்போருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, கருப்பு புனிதத்திற்கு எதிரானது என்று கூறுவீர்களா?

அது சரி, சிலர் சட்டைகளைக் கழற்றினால், கருப்பு உடம்புடன் இருக்கிறார்களே, அவர்களை என்ன செய்வதாக உத்தேசம்?
தோலைக் கழற்றச் சொல்லி போராடுவீர்களா?

கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு - பாடலைத் தடை செய் என போராட்டம் நடத்துவீர்களா?
அட அறிவுக் கொழுந்துகளே!

இதன்மூலம்தான் உங்கள் மிஸ்டு கால் கட்சியைப் பலப்படுத்தப் போகிறீர்களா?

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Monday, January 26, 2015

விருதுகள் பார்ப்பனரின் ஏகபோகமா?

https://www.facebook.com/viduthalaidaily/photos/a.108670655853554.22641.101804026540217/809193122467967/?type=1&theater

ஜனவரி 26  - இந்தியக் குடிஅரசு நாளை யொட்டி, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ முதலிய விருதுகளுக் குரியவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள்

1) என்.கோபால்சாமி (அய்யங்கார்) ஓய்வு
2) சுதா இரகுநாதன்
3)    எம்.ஆர். சீனுவாசன்
4)    பி.வி. இராஜராமன் (அய்.ஏ.எஸ்.) ஓய்வு

அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் தேடித் தேடிப் பார்த்தாலும் தமிழ்நாட்டிலிருந்து பெரிதும் பூணூல் திருமேனிகளே தகுதி பெற்றவர்களாக உள்ளார்கள்;

தடவித் தடவிப் பார்த்தால் ஒன்று வெறும் முதுகு கிடைக்குமோ என்ன?

யாருக்கு வந்த சுதந்திரம் இது?
புரிகிறதா?

Friday, January 23, 2015

மத்திய புலனாய்வுத் துறை தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது இந்து நாளிதழ் தலையங்கம்

போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஜா விடுதலை

மத்திய புலனாய்வுத் துறை தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது
இந்து நாளிதழ் தலையங்கம்


ஷொராபுதீன் ஷெயிக்-கின் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த குஜராத் மாநில முன்னாள் அமைச் சரும், தற்போதைய பா.ஜ.க .யின் அகில இந்திய தலை வருமான அமித் ஷா மும்பை விசேட நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருப்பது பா.ஜ.க.க்கு ஊக்கமளிப்பதாக வும், சிறப்புப் புலனாய்வுத் துறைக்கு ஒரு பின்னடைவாக வும் அமைந்துள்ளது.

தனது அரசியல் எஜமானர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதில் ஆர்வம் மிகுந்த அமைப்பு என்று தன் மீது சாட் டப்படும் குற்றச்சாட்டை மத்திய புலனாய்வுத் துறையால் மறுதளிக்க முடியாமல் இருப்பதாகவே தோன்றுகிறது.

இந்த வழக்கு அரசியல் காரணங்களுக்காக அமித்ஷா மீது போடப் பட்டுள்ளது என்ற பிரதிவாதி தரப்பு வாதத்தில் நியாயம் இருப்பதாகத் தோன்றுவதாக  மத்தியப் புலனாய்வுத் துறை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.பி. கோசாவி கூறியுள்ளதை அடுத்து,  நாட் டின்  பிரதான புலனாய்வுத் துறை அமைப்புக்கு தனது நம்பகத்தன் மையைத் தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதாக இருக்காது.

இந்த வழக்கில்  விசாரணைக்கு அமித்ஷா உட்படவேண்டிய தேவை இல்லை என்று கருதிய நீதிபதி வழக்கில் இருந்து அவரை விடுவிக்க முடிவு செய்துள் ளதே,  மத்திய புலனாய்வுத் துறையால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் தன்மையைப் பற்றி நிறைய கூறுவதாக உள்ளது.


புலனாய்வுத் துறையின் விசா ரணை நடைமுறையில்  குறை காண்பது மட்டுமல்லாமல்,  அதன் செயல்பாடு களுக்கு அரசியல் காரணங்கள் கற்பித்துக் கூறப்படுகின்றன.

எப்படி இருந்தாலும்,  முன்பு ஆட்சிப் பொறுப் பில் இருந்த காங்கிரஸ் அரசை மகிழ்ச்சி அடையச் செய்வதற்காக அமித்ஷா மீது பொய் யான குற்றச்சாட்டுகளை புலனாய்வுத் துறை பதிவு செய்திருப்பது உண்மை யானால், தற்போதைய பா.ஜ.க. தலை மையிலான அரசை மகிழ்விப்ப தற்காக ஷா மீது பலமில்லாத வழக்கு ஒன்றை தயாரித்து இருக்கக்கூடும் என்றும் கூறலாம் அல்லவா?

நாட்டில் அதிகாரம் மிகுந்த இரண்டாவது நபராகவும், பிரதமர் நரேந்திர மோடி யின் நெருங்கிய நண்பராகவும் அமித்ஷா விளங்குகிறார் என்பதில் அய்யமேது மில்லை. இந்தக் கேள்வியைத்தான் ஷொராபுதீனின் சகோதரர் ருபாபுதீன் ஷெய்க்கும் எழுப்பியுள்ளார்.

அண்மைக் காலங்களில் மத்தியப் புலனாய்வுத் துறையின் செயல்பாடுகளைப் பார்க் கும்போது, இந்தக் கேள்வியை அவ் வளவு எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. அமித்ஷாவின் மீது வழக்கு தொடுக்க மத்திய புலனாய்வுத் துறைக்கு அர சியல் நிர்ப்பந்தங்கள் இருந் தன என்பது உண்மையா னால்,  இந்த வழக்கில் இருந்து அமித்ஷாவை விடுவிக்க அதே போன்ற அரசியல் நிர்ப்பந்தங்கள் புலனாய்வுத் துறைக்கு அளிக்கப்பட்டி ருப்பதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன.

நீதிபதி கோசாவி தெரி வித்துள்ள கருத்துகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர் களின் செல்வாக்கில் இருந்து மத்திய புலனாய்வுத் துறையை விடுவிக்க வேண் டியதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக உள்ளன.

மத்திய புலனாய்வுத் துறை இயக்குநரின் பதவிக் காலம் ஒரு குறிப்பிட்ட காலவரம்பு கொண்டது, அப்பதவிக்கான நியமனம் ஓர் உயர் நிலைக் குழுவினால் செய்யப்படுகிறது என்ற போதிலும், இந்த அமைப்பு இன்னமும் மத்திய அரசின் இழுப்பு களுக்கும், நிர்ப்பந்தங்களுக்கும் இடம் அளிப்பதாகவே இருக்கக்கூடும்.

உயர்மட்டங்களில் நிலவும் லஞ்ச ஊழல் பற்றி விசாரிக்க மேற்கொள் ளப்பட்ட சிவில் உரிமை போராட் டத்தின் விளைவாக, 2013 ஆம் ஆண்டு லோக்பால் சட்டம் அறிமுகப்படுத்தப் பட்டதுடன், அரசியல் குறுக்கீட்டி லிருந்து மத்திய புலனாய்வுத் துறையைக் காப்பதற்கான சட்டவிதிகளும் அதில்  சேர்க்கப் பட்டுள்ளன.

ஆனால், உயர் மட்டத்தில், அமித்ஷா சம்பந்தப் படுத்தப்பட்ட இந்த வழக்கு போன்ற அரசியல் உணர்வு மிகுந்த வழக்குகளில், உயர்நீதிமன்றங்கள் கடுமையான தொடர்ந்த கண் காணிப்பை மேற் கொள்ளாமல் போனால், புலனாய்வுத் துறையின் விசாரணை பணம் பெருத் தவர்கள், அதிகார பலம் பெற்றவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக் கவும், சரி செய்யப்பட இயன்றதாகவும் இருக்கக் கூடியதுதான்.

இந்த வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஷொராபுதீன் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். எனவே வழக்கின் சாட்சியங்கள் மறுபடியும் பரிசீலனைக்கு வரக்கூடும்.

இதில்  நிச்சயமான ஏதேனும் ஒன்று இருக்கிறது என்றால்,  அமித்ஷாவுக்கு எதிரான இந்த வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை மேற் கொண்ட விசாரணை பொதுமக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை என்பதுதான் அது.

நன்றி: தி ஹிந்து 01-.01_-2015
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்


Wednesday, January 21, 2015

நிதி நெருக்கடியில் திண்டாடும் மத்திய அரசு கோயில் நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே!

நிதி நெருக்கடியில் திண்டாடும் மத்திய அரசு கோயில் நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே!

தமிழர் தலைவர் ஆசிரியர்  அறிக்கை


நிதி நெருக்கடி என்று கூறி, பல முக்கியத் துறைகளுக்கான நிதியை வெட்டும் மத்திய அரசு, கோயில்களில் குவிந்து கிடக்கும் நிதியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. (மத்திய) அரசு தனது நிதிப் பற்றாக்குறைக்காக நல்ல லாபம் தரும் - பொன் முட்டை இடும் வாத்தைக் கொல்வது போன்று - பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஈடுபட்டு வருகிறது.

மக்களின் சுகாதாரத் திட்டத்திற்காக செலவு செய்வதில் 20 விழுக்காடு வெட்டு!
உயர் கல்வித் துறை வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டில் 3000 கோடி ரூபாய்க்கு மேல் வெட்டு.

வரிமூலம் பறிக்கும் அரசு

பெட்ரோல், டீசல் (ஏழை விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில்) உலகச் சந்தை விலை சரி பாதிக்கு மேல் வீழ்ச்சி அடைந்தும், அதன் பயனை நுகருவோரான மக்களைச் சென்று அடையாமல், மத்திய அரசு வரி விதிப்பின் மூலம் இடையே பறித்துக் கொள்கிறது!

உரவிலையும் கூடவே விவசாயிகளின் தலையில் விடிகிறது; சந்தைப் பொருளாதாரத்தின் கொள்ளை லாபக் குபேரர்கள் கொள்ளையடிக்க ஏதுவாக கட்டுப்பாடுகளை நீக்கி கதவுகள் -  திறந்து விடப்படும் கொடுமையும் நாளும் வளர்ந்துவருகிறது!

மக்களைத் துன்புறுத்தும் இந்த மாய வளர்ச்சியின் உண்மைத் தன்மையை வாக்களித்தவர்கள் உணரத் தலைப்பட்டு வருகிறார்கள்!

கோயில்களில் குவிந்துள்ள நிதியைப் பயன்படுத்தலாமே!

நிதி ஆதாரம் தேடும் மத்திய அரசு, பல லட்சம் கோடி ரூபாய்களை உள்ளடக்கிய கோயில்களான திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், குருவாயூரப்பன் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை  பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக கடன் பத்திரங்களாக்கி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு - திருப்பிக் கொடுக்கலாமே!
மக்கள் பணத்தை முழுமையாக மக்கள் நலத்திற்குச் செலவிடுவதில் என்ன தவறு?
   
திருப்பதி ஏழுமலையான் கோயில் பட்ஜெட்டைப் பாரீர்!

எடுத்துக்காட்டாக, கடவுள்களிலேயே அதிக வருவாய் பெறும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் வருமானம் 2014-2015 பற்றிய ஒரு புள்ளி விவரம் இதோ:

அதன் பட்ஜெட் ரூ.2401 கோடி,  ரூ.900 கோடி உண்டியல் மூலம் வசூல்; வங்கியில் உள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி மூலம் வருவாய் 655 கோடி ரூபாய், பக்தர்களின் மொட்டை - மயிர்மூலம் ரூபாய் 190 கோடி வருவாய், கட்டட வாடகை மூலம் ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு  ரூ.108 கோடி - வருவாய்.
செலவு விவரம் பாரீர்!

ஹிந்து தர்ம பிரச்சாரத்திற்கு ரூ.109 கோடி!
மருத்துவமனைகளுக்கு ரூ.55 கோடி
மற்ற பெரும் பகுதி - ஊழியர்கள் சம்பளம்.
இதன் வைப்பு நிதி மூலதனம் 7,000 கோடி ரூபாய்!


இந்து மதப் பிரச்சாரத்துக்கு
ரூ.100 கோடியாம்

மற்ற அறக்கட்டளைகளுக்கு வருமான வரித் துறையினர்  தரும காரியங்களுக்கு எவ்வளவு விழுக்காடு செலவு செய்தீர்கள் என்று கேள்வி கேட்கும்போது, வெங்கடாஜலபதி கோயிலில் கொழுத்த பார்ப்பனர் சுரண்டல் எப்படி உள்ளது பார்த்தீர்களா? இவர்கள் ஆண்டுக்கு ரூ.100 கோடியில் ஹிந்து தர்ம பிரச்சாரமாம்! அதன் விவரத்தை அளிக்கவேண்டாமா?

கிறித்துவர்களின் கல்வித் தொண்டு மருத்துவத் தொண்டுக்கு முன் இது எம்மாத்திரம்?  அரசின் மக்கள் நலப் பணிகள் மருத்துவம், கல்வி, முதலியவற்றை இவைகளை ஒருங்கிணைத்தாவது செய்தால் திருப்பதி ஏழுமலையான் கோபித்துக் கொண்டு வெளி நாட்டிற்கா போய் விடுவார்?

மூடபக்தியினால் திருப்பதிக்கு வாரி வழங்கும் பணக்காரர்களும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கட்டும்.

பக்தி வந்தால் புத்தி போகும்
புத்தி வந்தால் பக்தி போகும்
எனவே - மனிதர்களை வாழ விடுங்கள்.

விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்திட அரசுகள் வழி காணட்டும்!


பெரியார் கூறிய மூன்று வகை முதலாளிகளில்

1) உயிருடன் மூலதனம் போடும் முதலாளிகள்
2) கடவுள் (கல்) முதலாளிகள்
3) பிறவி முதலாளிகளான பார்ப்பனர்

இந்த முதலாளித்துவத்தை எதிர்த்து ஒழித்தால் ஒழிய சமதர்மம் வருமா? சிந்தியுங்கள்.


கி.வீரமணி
தலைவர்,     திராவிடர் கழகம்
சென்னை
21.1.2015

Saturday, January 3, 2015

தீவிரவாத ஒத்திகைக்குக் கிடைத்தவர்கள் முஸ்லீம்கள் தானா?


இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக இந்துத்துவா ஆட்சி என்று அறிவிக்கவில்லையே தவிர, மற்றபடி பிஜேபியும் சரி, அதன் சங்பரிவாரங்களும் சரி ஓர் இந்து ஆட்சி இந்தியாவில் அமைந்துவிட்டதாகவே கருதி, ஆட்டம் போட ஆரம்பித்து விட்டனர்!

இந்த உண்மை அம்மணமாகத் தெரிந்திருந்தும் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் சீப்பை ஒளிய வைத்து கலியாணத்தை நிறுத்துவது என்பது போல நடந்து கொள்வது மிகக் கேவலமான வெட்கக் கேடாகும்.

ஊடகங்கள் உயர் ஜாதி பார்ப்பனர்கள் கைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளிலும் குவிந்து கிடப்பதால் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியே!

ஊடகங்களில் பெரும்பாலும் பணியாற்றுபவர் களாகப் பார்ப்பனர்களாகவே இருக்கின்ற காரணத்தால் இந்துத்துவாவைத் தூக்கிப் பிடிக்கத்தானே செய் வார்கள். உண்மையைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு அதன்மீது பொய்களான குரோட்டன்ஸ்களை வளர்க்கவே செய்வார்கள். அதுதான் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

பிஜேபியில் ஏதோ அனாமதேயங்கள் அல்ல; பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திரமோடியே எப்படி நடந்து கொண்டு வருகிறார் என்பதைக் கவனித்தால் ஒளிவு மறைவு என்பதை எல்லாம் கடந்து, பச்சையாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள மதச் சார்பின்மையைத் தூக்கிப் போட்டு மிதித்து விட்டு, ஒளிந்திருந்த இந்துத்துவாவை ராஜ நடை போட வைத்து விட்டார்.
ஜப்பானுக்குச் சென்ற பிரதமர் நரேந்திரமோடி இந்தியர்கள் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் என்ன பேசினார்?

I brought Gita for gifting (the Japanese Emperor) I do not know what will happen in India after this. There may be a TV debate on this. Our secular friends will create ‘typhoon’ (storm).

ஜப்பான் நாட்டுப் பேரரசருக்கு கொடுக்கக் கீதையைக் கொண்டு   போன இந்தச் செய்தி இந்தியாவை அடைந்தால் அங்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. தொலைகாட்சிகளில் விவாதங்கள் அனல் பறக்கும்; எனது மதச் சார்பற்ற நண்பர்கள் புயலையே கிளப்புவார்கள் என்று பேசினார் என்றால் பார்த்துக் கொள்ளலாமே.

தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்பார்களே அதுபோலதான் செய்யும் தவறு என்ன என்று அவருக்கு மிக நன்றாகவே தெரியும்; இருந்தாலும் அவரைப் பீடித்து ஆட்டும் இந்துத்துவா வெறி அதனையும் கீழே தள்ளி மேலே எழுந்து நிற்கிறது. மதச் சார்பின்மை என்பதை எப்படியெல்லாம் எள்ளி நகையாடுகிறார். இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் இவ்வளவுப் பச்சையான மதவெறியரைத் தேடினாலும் எளிதில் கிடைக்கப் போவதில்லை.
குஜராத் மாநிலத்தை இந்துத்துவாவின் பரிசோ தனைக் கூடமாக உருவாக்கினார். மத அடிப்படையில் மக்களைக் கூறு போட்டு, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். அதையே இந்தியா முழுமைக்கும் பரவலாக்கும் எண்ணம் நொடிதொறும், நொடிதொறும் அவரை உசுப்பி எழுப்பிக் கொண்டு இருக்கிறது. குஜராத்தில் அவரைத் தொடர்ந்து வந்த முதல் அமைச்சர் மோடிக்குச் சளைத்தவரல்ல என்பதைக் காட்டிக் கொண்டு இருக்கிறார்.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் தீவிர வாதிகளை எப்படி முறியடிப்பது என்பதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.

தீவிரவாதிகளாக நடித்தவர்கள் அத்தனைப் பேரும் முசுலிம் உடை அணிந்து, தலையில் குல்லாய் அணிந்து காணப்பட்டனர். அவர்கள் வன்முறையில் ஈடுபடுவது போல குஜராத் காவல்துறையால் ஒத்திகை நடத்தப் பட்டது.

வன்முறையில் ஈடுபடுவதுபற்றி பிஜேபி.யோ அல்லது சங்பரிவார்க் கும்பலா பேசுவது? பாபர் மசூதி இடிக்கப்பட்டதை விடவா அராஜகத்துக்கும் பயங்கர வாதத்துக்கும் நிர்வாண வன்முறைக்கும் இன்னொரு எடுத்துக் காட்டுத் தேவை?

மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் யார்? ஒரிசா சட்டப் பேரவை வளாகத்துக்குள்ளேயே புகுந்து வன்முறை வெறியாட்டம் போட்டவர்கள் யார்? காவி பயங்கரவாதம் என்ற புதுமொழியை அன்றைய உள்துறை அமைச்சர் புதிய பட்டத்தைச் சூட்ட வில்லையா?

விசுவ ஹிந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் பொது மக்களுக்குத் திரிசூலங்களை வழங்கி கிறித்தவர் களையும், முசுலீம்களையும் மதச் சார்பின்மை பேசும் இந்துக்களையும் குத்திக் கிழிக்கத் தூண்டிட வில்லையா?

அரியானா மாநிலத்தில் ஜாஜா பகுதியில் இறந்து போன பசுவின் தோலை உரித்ததற்காக அய்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த கொடியவர்களால் கொல்லப்படவில்லையா?

விசுவ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான கிரிராஜ் கிஷோர் என்பவர் பசுவின் உயிர் (அதுவும் செத்துப் போன) மனித உயிரைக் காட்டிலும் புனிதமானது என்று அப்போது கூறியது எவ்வளவுப் பெரிய காட்டுவிலங்காண்டித்தனம்!

ஏன்? காவல்துறை ஒத்திகை நடத்திக் கொண்டு இருக்கும் குஜராத்தில் நடக்காத வன்முறையா? அரச பயங்கரவாதமாக அல்லவா நடந்தது.

 முசுலிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்து அந்தக் கருவை நெருப்பில் தூக்கி எறிந்து வெறிக் கூச்சல் போட்டுக் கூத்தாடவில்லையா? அடுக்கிக் கொண்டே போகலாம்.

 ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலின் வன்முறையைப் பட்டியல் போட்டால் நாட்டில் காகிதங்கள் போதாது.

இந்த யோக்கியதையில் உள்ளவர்கள்தான் தீவிர வாதத்தை முறியடிக்கும் பயிற்சிக்கான ஒத்திகைக்காக முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாக ஒப்பனை செய்து நிறுத்தியுள்ளனர்; இந்தியாவிற்கு இப்படி ஓர் ஆட்சியா? மகா மகா வெட்கக் கேடு!

ஊடகங்களுக்கு முக்கியம் நடிகர்கள்தான் - நோக்கியா அல்ல!


தமிழ்நாட்டின் நோக்கியா ஆலை மூடப்படு வது இந்தியாவின் தொழில் முதலீட்டை எப்படியெல்லாம் பாதிக்கும் என்று இந்த கட்டுரை விவரிக்கிறது.

ஆனால் இதில் நேரடியாகவும் உடனடியாகவும் பாதிக்கப்படும் தமிழ் நாட்டில் இவ்வளவு முக் கியத்துவம் வாய்ந்த பிரச்சினை  இது குறித்து தேவைப்படும் அளவுக்கு பெரிதாக எந்தக் கவ லையோ, விவாதமோ நடக்கவே இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டின் தமிழ் மொழியின் ஊட கங்கள் (செய்தித்தாள், சஞ்சிகைகள், 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சி கள் மற்றும் வானொலி) இவ்வளவு பெரிய மாநி லத்தின் தொழில்துறை, தொழிலாளர் வாழ்க் கையை நேரடியாக பாதிக் கும் பிரச்சினை குறித்து எவ்வளவு நேரம் ஒதுக்கி செய்தி வெளியிட்டன என்று நீங்கள் ஆராய்ந் தால் தமிழ்நாட்டின்/ தமிழ் மொழியின் ஊடகத் துறையின் உண்மையான பிரச்சினை என்ன என்று நீங்கள் தெரிந்து கொள் ளலாம்.

குறிப்பாக நடிகர் விஜயின் கத்தி மற்றும் ரஜினிகாந்தின் லிங்கா ஆகிய இரண்டு திரைப் படங்களுக்கு தமிழ் நாட்டு/தமிழ்மொழி ஊடகங்கள் ஒதுக்கிய இடம், நேரத்தை கணக் கிட்டு, இதே ஊடகங்கள் இந்த நோக்கியா ஆலை விவகாரத்துக்கு எவ்வளவு இடம், நேரத்தை ஒதுக் கின என்பதையும் கணக் கிட்டால் இதில் இருக்கும் விபரீதத்தின் ஆழ அக லங்கள் புரியக்கூடும். என்ன காரணம்?

தமிழ்நாட்டு, தமிழ் மொழியின் ஊடகங்களில் ஊடுருவிவிட்ட சுய தணிக்கை முறைதான் இதற்கு உண்மையான காரணம். அரசுக்கு எதி ரான செய்தியைப் போடாதே என்பது தமிழக ஊடகத்துறையின் எழுதப்படாத விதியாகவே இன்று ஆகிவிட்டது.

அப்படியானால் எதைச் செய்தியாக்குவது? சினிமாவைச் செய்தியாக்கி உண்மையான செய்தி களை ஒதுக்குவது என்பது இங்கே ஒருவித கலையா கவே வளர்க்கப்பட் டிருக்கிறது.

அதனால் தான் கமல் ஹாசன் தன் வீட்டை விற்பேன் என்று மிரட்டுவது முதல்பக்க தலைப்புச் செய்தியாகிறது. ரஜினிகாந்த் மனைவியின் சொத்துக்கள் ஏலத்துக்கு வரலாம் என்பது அதை விடப் பெரிய செய்தியாகிறது. ஆனால் ஒட்டு மொத்த தமிழ்நாட்டின், சுமார் 25000 தொழிலாளர்களை (நேரடியாகவும் மறைமுகமாகவும்) உட னடியாக பாதிக்கும், நூற்றுக்கணக்கான ஏக்கர் அரசு நிலம் அநியாயத் துக்கு வீணாகும் செய்தி முதல் பக்கத்துக்கு வரா மல் பார்த்துக் கொள்ளப் படுகிறது.

தமிழ்நாட்டின் பொருளாதார பலங்களில் ஒன்றான தயாரிப்புத் துறைக்கு இதனால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பின்னடைவு குறித்து எந்த விவாதமும் இதுவரை ஊடகங்களில் உரிய முறையில், உரிய அளவில் முன்னெடுக்கப் பட வில்லை.

உண்மையான செய்தியைக் கவனமாக புதைத்துவிட்டு, அதை மறைப்பதற்கு ஊருக் கெல்லாம் பயாஸ்கோப் காட்டிக் கொண்டிருக்கி றோம்   ஊடகங்களில்.
உண்மையை சொல்வ தானால் இன்றைய நிலை யில் தமிழ்நாட்டு ஊட கங்களுக்கு வெளியார் தணிக்கை என்று பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. 

அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எழும் சிறு சிறு சலசலப்புகளைத் தவிர. மாறாக தமிழ் நாட்டு ஊடகங்களின் உண்மையான பிரச்சினை இந்த சுய தணிக்கை முறை தான். ஊடகசுதந்திரத் திற்கு வெளி ஆபத்து இல்லை. உள் ஆபத்தே உண்மையான பேராபத்து.

(மோகன் குருசாமி முகநூலிலிருந்து)



ஜனவரி 16-31

Saturday, December 20, 2014

தேசிய நூலாக கீதை: பல இனங்கள் உள்ள நாட்டின் நலனுக்கு உகந்ததா?


பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரியிருப்பது பல்லின மக்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டின் நலனுக்கு உகந்ததாயிருக்காது என்கிறார் காந்தியச் சிந்தனையாளரும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான டாக்டர் ஜெயப் பிரகாசம்.

பகவத் கீதையை காந்தி போன்றோர் உயர்வாக மதித்தனர் என்பது உண்மை ஆனால், கீதை குறித்த அவரது பார் வைக்கும் மற்றவர்களின் பார்வைக்கும் வேறுபாடு உள்ளது. நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் வன் முறையாலும் தீமையை வெல்வது நீதி யானதுதான் என்ற அர்த்தப்படுத் தினால், இந்த அணு யுகத்தில் அது பேரழிவை உருவாக்கும் என்றார் ஜெயப்பிரகாசம்.

காந்தியோ, கீதையை நன்மைக்கும் தீமைக்குமான மோதலில் மனித மனது, தீமையை வென்று நன்மையாக மாற்று கிறது என்று அர்த்தப்படுத்தினார், என் றார் ஜெயப்பிரகாசம். இது சத்யா கிர ஹத்திற்கான ஒரு நூல் என்று காந்தி பொருள்கொண்டார், பாரதி கூட அப்படித் தான் அதைப் பார்த்தார் என்றார் ஜெயப்பிரகாசம்.

அதே சமயம் அம்பேதகர் போன் றோர் கீதையை போரை நியாயப்படுத் தும் ஒரு புத்தகமாகவும், வர்ண அமைப்பை நியாயப்படுத்தும் ஆவண மாகவும் பார்த்தது குறித்து குறிப்பிட்ட ஜெயப்பிரகாசம், திலகர் கூட தனது " கீதா ரகசியம்" என்ற புத்தகத்தில், கீதையை, போருக்கான புத்தகமாகவே பார்த்தார் என்றார். எனவே இது போன்ற திரு மறைகளை மறு வாசிப்பு செய்வது அவ சியம், தேவையானவற்றை எடுத்துக் கொண்டு தேவையற்றவற்றை ஒதுக்கித் தள்ளுவது அவசியம் என்றார் அவர்.

மற்ற மதங்களில் உள்ளது போல ஒரே ஒரு நூல்தான் இந்து மதத்தில் திருமறை என்று மதிக்கப்படும் இடத் தில் இல்லை என்றார் ஜெயப்பிரகாசம். தென்னிந்திய மரபில் சைவ சித்தாந்தம் மற்றும் வைணவ சித்தாந்தத்திலும், பகவத் கீதையை அறியாத ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். எனவே பாஜகவின் இந்த முயற்சி என்பது , இந்து சமயத்தை மையப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இருக்கிறது என்றார் ஜெயப்பிரகாசம். அதே சமயத்தில் ஒரு நாட்டுக்கு தேசிய நூல் என்ற ஒன்று அவசியம் தானா என்று கேட்டதற்கு, நாடு பல பிரச்சனைகளை எதிர்நோக்கும் நிலையில், இது போன்ற பிரச்சனை களைக் கையில் எடுப்பது தேவை யற்றது என்றும் அவர் கூறினார்.

Friday, December 19, 2014

பிபிசி தமிழ்ச் சேவை ஹிந்தி சேவையுடன் இணையும் நிலையை முறியடிப்போம்!

பிபிசி தமிழ்ச் சேவை ஹிந்தி சேவையுடன்
இணையும் நிலையை முறியடிப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


லண்டனைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி தமிழ்ச் சேவையை, டில்லிக்கு மாற்றி ஹிந்தியுடன் இணைப்பது தமிழர்களுக்குச் செய்யும் கேடு - இப்பொழுது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி .வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1920-களில் இங்கிலாந்து, தன்னுடைய காலனி நாடு களுக்கான ஒரு பொது வானொலிச் சேவை உருவாக்கியது.  இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ரெத் என்பவரின் சிந்தனை யில் துவங்கிய இந்த வானொலிக்கு ஆரம்பத்தில் ஜான் ரெத் தலைவராக இருந்துவந்தார் 1927 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இது மூடப்பட வேண்டிய நிலையில் இருந்தபோது பிபிசி உலகப் பொது அமைப்பின் (தற்போதைய அய்.நா. போன்ற அமைப்புடன்)  பொது நிதியில் இயங்க ஆரம்பித்தது. (அதுவரை பிரிட்டன் நாடாளுமன்ற கட்டுப்பாட்டில் இருந்து வந்தது) பிபிசி என்ற பெயர் பிரபலமாகிவிட்டதால்   எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து அழைக்கப்பட்டது.

பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் என்னும் பொருள்படும்British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும்.  பிபிசி தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத் தள சேவைகளை வழங்குகிறது. இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.

28 மொழிகளில் ஒலிபரப்பு!

இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்புகிறது. உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது.

தமிழோசை நிகழ்ச்சிகளை பிப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் நேரடி ஒலிபரப்பு செய்து வந்தது எனினும் ஈழப்போர்ச் செய்திகளைப் பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பிப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினூ டான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது.

இந்நிலையில் தமிழ்ச் சேவை ஒலிபரப்பினை பிபிசி ஹிந்தி சேவையுடன் இணைந்த நிலையில் டில்லியில் இயங் கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. செலவுகளைக் குறைக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிபிசி அறிவித்துள்ளது. 

பிபிசி பேச்சாளர் ஒருவர் இது தொடர்பில் தகவல் தருகையில், பெருகிவரும் நேயர்களுக்கு ஏற்ப பிபிசி தமிழ்ச் சேவை புதுடில்லிக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். பிபிசி தமிழ்ச் சேவை இந்தியாவில் உள்ள தமிழ் நேயர்களை கவர்ந்துள்ளது. இந்தநிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கை நேயர்களைக் கருத்திற்கொண்டு இந்த மாற்றம் இடம்பெறுவதாகவும் பிபிசியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழோசை என்பது பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையாகும். இவ்வானொலி சேவையானது 1941 மே 3 ஆம் நாள் முதல் இயங்கி வருகின்றது.

இவ்வானொலி ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் தமிழ் மொழியில் உலகச் செய்திகளையும் வேறு பல நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றது. இங்கு இந்திய, இலங்கைச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவ தோடு செய்தியரங்கம் பகுதியில் அவை விரிவாக ஆராயப் படுகிறது. தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் இச்சேவை வானலைகளில் ஒலிபரப்பப்படுவதோடு ஏனைய பிரதேசங்களில் இணைய தளத்தில் பரப்பப்படுகின்றன.

பிபிசி தமிழ் நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம்  தனது தேசியச் சேவையில் மறு ஒலிபரப்பு செய்கிறது.

இடமாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு

பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதி லுமிருந்து சுமார் 70 லட்சம் நேயர்கள் உள்ளனர்.  முக்கிய மாக பிபிசி தமிழோசை நிகழ்ச்சி உலகம் முழுவதிலுமுள்ள புலம்பெயர் தமிழர்களுக்குப் பொதுவான ஓர் தகவல் தளமாக இருந்து வருகிறது.
டில்லிக்கு மாற்றப்படும் நிலையில் இந்தி மொழியின் ஆதிக்கம் தமிழோசையிலும் மேலோங்கும். டில்லிக்கு மாற்றப்படும்போது பெருவாரியான இலங் கைத் தமிழர்களின் செய்தியைக் கொண்டு செல்வதில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இந்திய இலங்கை நட்புறவின் காரணமாக இலங்கை அரசுக்கு ஆதரவான செய்தி களையே அதிகம் ஒலிபரப்பப்படும், அதே வேளையில் இந்தியத் தமிழர்களுக்கான பயனுள்ள எந்த ஒரு நிகழ்ச்சி களும் அதில் இடம்பெறாத சூழல் ஏற்படும். பிபிசி போன்ற பொது ஒலிபரப்பு கூட்டு நிறுவனங்கள் தலைமையை விட்டு தூரச்செல்லும்போது அங்கு அரசியல் நுழையும் வாய்ப்புள்ளது. மேலும் பிபிசி தமிழோசை டில்லிக்கு மாற்றப்படும்போது ஒரே நிர்வாகத்தின்கீழ் இது வருவதால் பிபிசி தமிழோசைக்கு என்று முக்கியத்துவம் தரப்படுவது நிறுத்தப்படும் அபாயம் உண்டு.

முக்கியமாக சில தமிழ் விரோத சக்திகள் காழ்ப்புணர்ச்சி யுடன் செயல்படும்போது எதிர்காலத்தில் பிபிசி தமிழோசை முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும்.   எடுத்துக் காட்டாக இலங்கை வானொலியின் சுதந்திரமான அமைப் பில் அரசியல் நுழைந்த பிறகு தமிழ் ஒலிபரப்பு முற்றிலுமாக மக்களின் ஆதரவை இழந்து இன்று பெயருக்கு இயங்கி வருவதுபோல் பிபிசி தமிழோசையின் எதிர்காலமும் அமைந்துவிடும்.  இதனால் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களுக்குப் பொதுவான ஒரு தகவல் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

தமிழக அரசின் கவனத்துக்கு....

இத்தகைய காரணங்களால் இலண்டனைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம்  - அதே முறையில் செயல்படுவது தொடரப்பட வேண்டும்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களும், அமைப்புகளும், உலகத் தமிழர்களும், அமைப்புகளும் சிறப்பாக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மிக முக்கியமான பிரச்சினையில் கருத்தைச் செலுத்துமாறு வலியுறுத்து கிறோம்.

ஏதோ ஒரு வகையில் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கின்றன. எல்லாவற்றையும் அரசியல் கண்கொண்டு பார்க்காமல் தமிழர்களுக்கான பொதுப் பிரச்சினையில் ஒத்த குரல் கிளம்புவது அவசியமாகும்.


கி.வீரமணி   
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை5.11.2014

Wednesday, February 12, 2014

11 ரூபாய் முதல்வர்!

11 ரூபாய் முதல்வர்!
மோடி மோசடியை வெளுத்துவாங்கும் புதிய இணையதளம்
http://www.rs11.in/

குஜராத்தில் மோடி அரசு சார்பில் கடந்த டிசம்பர் மாதம் அரசின் இணையத்தில் உணவுப்பொருட்களுக்கான மானியம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்கிற அறிவிப்பு வெளிவந்தது. அதன் படி,  நாள் ஒன்றுக்கு ரூபாய் 10.80க்குள் வருமானம் இருப்பவர்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்கான அளவு என்று கருதப்பட்டு மானியத்தில் உணவுப்பொருள் பெற தகுதி உள்ளவர்கள் என்கிற குஜராத் மாநில அரசின் அறிவிப்பு வெளிவந்தது.
    இந்த அறிவிப்பின்மூலம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஏழை மக்களின் ஏழ்மையைக் கேலி செய்வதாக காங்கிரசு செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் கண்டித்ததும் விவாதங்கள் நடந்ததும் நாம் அறிந்தது.
    இது தொடர்பாக தற்போது புதிதாக  தொடங்கப்பட்டுள்ள www.rs11.in என்கிற இணையதளத்தில் நரேந்திர மோடியின் படத்துடன் கேள்வி பதில் பாணியில் கருத்துப்படம் வெளியாகி உள்ளது. நீங்கள் எந்த அளவில் பணக்காரன் என்பதை கேட்டு, மோடி அரசின் அளவுகோலின் படி, ”சிப்ஸ் பாக்கெட் ஒன்று வாங்க முடிந்தால் அவன் மிகப்பெரிய செலவாளி” என்றும், ”மாதம் ஒருமுறைக்குமேல் சிப்ஸ் தின்றால் அம்பானியுடன் தொடர்பில்லாதவர் என்று சொல்லிவிட முடியுமா?” என்று கேட்பதுடன், ”சிப்ஸ் தின்னும்போது குளிர்பானம் அருந்தினாலும், ஒரே நாளில் இரு வேளை உணவு உண்டாலும் குஜராத்திலேயே அவன்தான் பணக்காரன்” என்றும் கூறுவதாக உள்ளது.
    மேலும், அவ்விணையத்தில் குஜராத் மாநிலத்தில் உண்மையான வாழ்வாதார நிலை என்பது ரூ.11க்கு ஒரு பாக்கெட் நொறுக்குத்தீனி, ஒரு குவளை தேனீர், பெண்கள் தலையில் போடும் ரப்பர் பேண்ட் மட்டுமே வாங்க முடியும் என்றும், ரொட்டி குருமா, குளிருக்கு சால்வை, மருந்து மாத்திரைகள் என்று மற்ற அத்தியாவசியப்பொருட்கள் எதுவும் வாங்க முடியாது என்றும் விளக்கப்படத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
    குஜராத்தில் கடும் உழைப்பிற்குப் பிறகு என்னதான் பெற முடியும் என்றால் 250கிராம் சர்க்கரை, இரண்டு முட்டைகள், இரண்டு ரொட்டிகள், 3கி.மீ.தூரத்திற்கு பேருந்தில் பயணம் என்கிற அளவில்தான் முடியும். ஒரு கிலோ சர்க்கரை, ஆறு முட்டைகள், ஒரு முழு சாப்பாடு ஆகியவற்றை வாங்க முடியாது. கலுப்பூர் முதல் கன்கானியா ஏரி வரை 4 கி.மீ. கூட பயணம் செய்ய முடியாது என்பதுடன் அப்படி வாங்க முடியாத ஏழைகளை குஜராத்திலிருந்து விரட்டிவிடு என்கிற பாணியில், உண்மை குஜராத்தின் நிலையைச் சொல்லி நிறைவடைகிறது இணையத்தின் தகவல்.

இல. கணேசன் ஏன் பாடினார் வந்தே மாதரம்?

சென்னையை அடுத்த வண்டலூரில் கடந்த 8ஆம் தேதி நரேந்திர மோடி பேசினார். அந்தக் கூட் டத்தில் கலந்து கொண்ட திருவாளர் இல. கணேசன் வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடினா ராம். அவருக்குப் பாடத் தெரியும் என்பதற்காக தனது திருவாயைத் திறந் தாரா? சங்கீதத்தில் புலி என்பதற்காக தனது சாரீ ரத்தைக் காட்டிக் கொண் டாரா? அதெல்லாம் ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது!

நரேந்திரமோடி இப் பொழுதெல்லாம் முஸ்லீம் களைத் தாக்கிப் பேச மாட் டார் - வேண்டுமானால் தாஜா செய்வார்! அவர் முகத்தில் விழுந்த மத வெறி கரும் புள்ளியைத் துடைத்தெடுக்க படாத பாடுபடுகிறார். இந்த நிலையில் வீண் வம்பை விலைக்கு வாங்க முடியுமா?

அந்தக் குறையைப் போக்குவதற்குத்தான் திரு வாளர் இல. கணேசன் தன் சாரீரத்தை அரங்கேற்றினார்.

வந்தே மாதரம் என்ற பாடலை எழுதியவர் வங்கா ளத்தைச் சேர்ந்த பங்கிம்சந் திர சட்டர்ஜி என்பவர்; 1894இல் வங்காள மொழி யில் எழுதப்பட்ட ஆனந்த மடம் எனும் நாவலில் இடம் பெற்ற பாடல்தான் இந்த வந்தே மாதரம்!

அந்த நாவலில் காணப் படும் கதையம்சமும், உரை யாடலும் இஸ்லாமியர்க ளுக்கு எதிரானவை என்பது மட்டுமல்ல; அவர்களை நாட்டை விட்டே துரத்திய டிக்க வேண்டும் என்பது தான் அந்த நாவலின் அடி நாதம். அந்த நாவலின் எட்டாம் அத்தியாயத்தில் ஒரு காட்சி; ஒரு கிராமமே கொள்ளையடிக்கப்படுகிறது. திடீரென ஒரு முழக்கம்! முஸ்லீம் களைக் கொல்லு! கொல்லு!! என ஒரே ஆர்ப் பரிப்பு! வந்தே மாதரம் எனும் பாடல் பீறிட்டுக் கிளம்புகிறது.

அடுத்து ஒரு குரல்: ஓ சகோதரர்களே! மசூதிகளை யெல்லாம் தரை மட்ட மாக்கி, அந்த இடத்திலே மாதவர் ஆலயத்தைக் கட் டும் நாள் விரைவில் வரும் (பாபர் மசூதி இடிப்பை இந்த இடத்தில் நினைவு கொள்க!) என்றுபிரசங்கம்.
வந்தே மாதரத்தின் தாத்பரியம் என்ன என்பது ஓரளவிற்கு இப்பொழுது புரிந்திருக்குமே!

1937இல் ஒரிசா சட்டப் பேரவையில் வந்தே மாத ரம் தேசிய கீதமாகப் பாடப் பட்டது. சில அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை. சட் டப் பேரவைத் தலைவரி டம் முறையிடப்பட்டது. தேசிய கீதம் பாடும் பொழுது உட்கார்ந்திருப்பதும், எழுந் திருப்பதும் அவரவர்களின் விருப்பம் என்று கூறி விட் டார் சபாநாயகர்.
அதே கால கட்டத்தில் 1938இல் சென்னை மாநிலத் தில் என்ன நடந்தது? சக்ர வர்த்தி ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி) அப்பொழுது சென்னை மாநிலப் பிரதமர்.

சட்டப் பேரவைத் தலை வராக இருந்தவர் புலுசு சாம்பமூர்த்தி. சட்டப் பேரவை தொடங்கும் போது வந்தே மாதரம் பாடலைப் பாடச் செய்ய வேண்டும் என்பது அவரின் பேரவா! பாடவும் பட்டது; முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்த னர். இந்துக் கடவுள்களைப் போற்றித் துதிக்கும் பாடலை நாங்கள் எப்படிப் பாட முடி யும்? என்று எதிர்க் கேள்வி வைத்தனர்.

குல்லூகப்பட்டர் பிரத மர் ஆச்சாரியார் ஒரு தந்திரம் செய்தார் (அதுதானே அவ ருக்கே உரிய குணாம்சம்!)

சபை அலுவல் தொடங் கும் நேரம் காலை 11 மணி  -அதற்கு முன்னதாகவே வந்தே மாதரம் பாடி விட லாம், மற்றவர்கள் அதற்குப் பின் அவைக்கு வரலாம் என்று நரியை நனையாமல் குளிப்பாட்டப் பார்த்தார். வேண்டுமானால் வந்தே மாதரத்தோடு வேறு மதப் பாடல்களையும் இணைத் துக் கொள்ளலாம் என்றும் கூறினார். இந்தத் தந்திர வலைக்குள் சிக்கிக் கொள்ள முசுலிம்கள் தயாராக இல்லை; முடிவு வந்தே மாதரம் வராத மாதரமாக ஆக்கப் பட்டு விட்டது.

இதற்குள் இவ்வளவு சரக்குகள் இருக்கின்றன. முஸ்லீம்களை  நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்ற விஷம் அந்தக் குப்பிக் குள் இருக்கிறது.

இந்துத்துவா கூட்டத் தில் இஸ்லாமியர்களைத் தாக்கிப் பேசாமல் இருக்க முடியுமா? சந்தர்ப்பவாத மாக மோடி பேசாவிட்டா லும் நம் உணர்வின் வெறியை வெளிப்படுத்தா மல் இருக்க முடியுமா? இருக்கலாமா? என்ற எண்ணத்தோடுதான் திருவாளர் இல. கணேசன் வாள்(ல்) வந்தே மாதரம் பாடலை, வண்டலூர் கூட் டத்தில் முழுமையாகப் பாடித் தீர்த்திருக்கிறார் புரிகிறதோ!

காந்தியைப் படு கொலை செய்த நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தில் கடைசிப் பகுதியாகக் கூறி முடித்த வரியில்கூட அந்த வந்தே மாதரம் இருக் கிறதே!

அகண்டபாரத் அமர் ரஹே, வந்தே மாதரம்

- கருஞ்சட்டை


Read more: http://www.viduthalai.in/e-paper/75085.html#ixzz2t5BCvcCZ

Friday, October 18, 2013

மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா?


 ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக அய்.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர். குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் காவல்துறையும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை விலகல் செய்துவிட்டார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.


பயங்கரமும் படுகொலையும் தாண் டவமாடிய குஜராத்திலிருந்து வருகி றேன். வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட் டது. குற்றவுணர்வையும் அவமானத் தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.

அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக் கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள். அவர்களது முகத்தில் ததும்பும் துயரம் இப்படியொரு துக் கத்தை நான் இதுவரை கண்டதில்லை. வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர் களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும் உடைமை.

அச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால், காயம் பட்டவர்களுக்கு மருந்து என்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக் கிறார்கள் மற்றவர்கள்.

ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள். புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சி யடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது..

இருப்பினும், கண்டவை கேட்டவை களில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.

ஓர் எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக் கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெ டுத்து, அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றி ருக்கிறார்கள். இதற்கென்ன சொல் கிறீர்கள்?

உயர் அழுத்த மின்கம்பியால்...

19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சி யடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக் கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?

தன்னுடைய அம்மாவும், அக் காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.

மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்து ஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது. 3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை. எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம் என்று அங்கிருந்த காவல்துறையினிடம் அவள் வழி கேட்டாள். அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண் ணெண்ணெய் ஊற்றிக் கொளுத் தியது. பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை. குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் பாலியல் வன்முறை செய்திருக்கிறார்கள். பாலியல் வன்முறை முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக் கிறார்கள்; சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.

அமன் சவுக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது. திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங் களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணிய வைத்திருக்கிறது.

அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக் குதல், திட்டமிட்ட இனப் படுகொலை. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல் லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

வெறியூட்டும்படியான முழக்கங்களை ஒலிபரப்பியபடியே முதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற் றியில் காவித்துணியும் கட்டிய ஆட் களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும். வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில் களையும் அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன. கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள் இந்து  முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.

வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன. பிறகு லாரிகளில் கொண்டு வந்த எரிவாயு சிலிண்டர்களை கட்டடத்திற்குள் வைத் துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டடம் தீப்பிடித்து எரியும்.

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட் டுள்ளன. அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது. இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

காவல்துறை மற்றும் அரசு எந்திரத் தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத் தையும் எல்லோரும் குற்றம் சாட்டு கிறார்கள். பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்க வில்லை.கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைக்குத்தான் அவர்கள் பாது காப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக் குப் பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் காவல்துறையும் துப்பாக் கிச் சூடு நடத்தியிருக்கிறது. பல செய்தி கள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையின ரும் முசுலீம்கள்தான்.

இருபது ஆண்டுகளாக அய்.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டி ருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப் படுகிறேன். அரசியல்வாதிகளின் உத்தர வுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப் படுத்தவில்லை. சுயேச்சையாகவும், நடு நிலையாகவும், அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர் களைக் கோருகிறது.

அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரி யாவது நேர்மையாக நடத்து கொண்டி ருந்தால் இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்க முடியும். உள்ளூர் காவல்துறை மற்றும் அதிகாரி களின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.

கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்.

இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்! கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?

இதோ இன்னொரு பெருத்த அவமானம்!

இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கெனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம். இதோ இன்னொரு பெருத்த அவமானம்! பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம் இசுலாமிய அமைப்புகளால்தான் நடத்தப்படு கின்றன. முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம் கள் தான் கவலைப்பட வேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனர மைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லைஎன்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை.
குஜராத்தின் கொலைகாரக்கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது. அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெரு மிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:

சாரே ஜஹா ஸே அச்சா
இந்துஸ்தான் ஹமாரா

இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.

குஜாரத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 11 ஆண்டுகள் முடிந்துவிட்டன.கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, பாலியல் வன்முறை செய்த இந்து மதவெறி யர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப் படவில்லை. இந்தியா ஒரு மதச்சார் பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப் படவேண்டும், வேதனைப் படவேண்டும்.

இந்த இனப்படுகொலையின் நாயக னான நரேந்திர மோடி வரும் பாராளு மன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரய த்தனம் செய்து வருகிறார். குஜராத் மாநிலத்தை ஆஹா .ஓஹோ ..என்று வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளார் என்ற வெறும் மாயக் கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு இவர் தகுதியானவர் என்று சிலர் கூவிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் நாட்டிலேயே அதிகமாக வறுமையில் வாடுபவர்கள் குஜராத் மாநிலத்தில் வசிக்கிறார்கள் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியது. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் நபர்கள் அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்து கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கி கொண்டுள்ளனர். இவரை போன்றவர்கள் நாட்டை ஆண்டால் என்னவாகும்! நாட்டின் பிரதமர் பதவிக்கு இவர் தகுதியானவரா என் பதை மக்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆகவே வருங் கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசியம்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...