Showing posts with label பார்ப்பனீயம். Show all posts
Showing posts with label பார்ப்பனீயம். Show all posts

Wednesday, February 24, 2016

பார்ப்பனரைத் தெரிந்துகொள்ள சமஸ்கிருதமே சரியான அளவுகோல்!


சமஸ்கிருதம் என்று சொன்னால் அது செத்தொழிந்த மொழி என்பது ஊருக்கே, உலகத்துக்கே தெரிந்த வெளிச்சமான உண்மை.

இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை வெறும் 14 ஆயிரமே என்று சொல்லப்பட்டாலும்கூட, அது நடைமுறை சாத்தியமில்லாமல் தானிருக்கிறது. 2013 இல் வெளிவந்த புள்ளி விவரம் இது; 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகும் எண்ணிக்கை உயரவில்லை; அதே தேக்க நிலைதான். (சங் பரிவார் வகையறாக்களுக்கு நமது அனுதாபங்கள்!)

அம்மொழி ஏதோ இருக்கிறது என்றால், புரோகிதத்திலும் அர்ச்சனையிலும்தான் - அதுகூடப் பொருள் புரிந்து சொல்லப் படுகிறதா என்பது சுவையான கேள்வி.

1960 ஆம் ஆண்டில் சர்.சி.பி.ராமசாமி அய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்து இந்துக் கோவில்களின் நிலவரங்களை நிரல்படுத்தியுள்ளது.

அர்ச்சகர்களைப்பற்றிக் கூறும்போது, ‘‘அனேகமாக இவர்கள் தற்குறிகளாக இல்லையென்றால், தப்பாகக் கற்றுக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்’’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இதன் பொருள் என்ன? சமஸ்கிருத மொழியை அறிந்த வர்கள் என்பதைவிட பாரம்பரியமாக அர்த்தம் தெரியாது. நெட்டுருப் போட்டு ஒப்பித்துக் கொண்டுள்ளனர்.

பார்ப்பனப் புரோகிதரை வைத்து நடத்தப்பட்ட விவாக சுபமுகூர்த்தத்திற்குச் சென்ற நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள், அந்தப் புரோகிதப் பார்ப்பான் கல்யாண வீட்டில் கருமாதி மந்திரத்தை சொல்லிக் கொண்டிருந்ததைக் கண்டு பிடித்துச் சுட்டிக்காட்டிய நிகழ்ச்சியும் உண்டு.

பார்ப்பனர்களின் தாய்மொழி சமஸ்கிருதம் என்று சொல்லிக் கொண்டாலும், அவர்கள் வீட்டிலாவது சமஸ்கிருத மொழியில் உரையாடல் உண்டா என்ற கேள்விக்கு இல்லை என்பதுதான் உண்மையான பதில்.

இந்த நிலை இருந்தாலும்கூட பார்ப்பனர்கள் சனாதன சங்கராச்சாரியாரிலிருந்து, அரசியல் ஆச்சாரியார் என்று சொல்லப்படும் ராஜகோபாலாச்சாரியாராக இருந்தாலும் சரி (ராஜாஜி) சமஸ்கிருதத்தின்மீது வைத்துள்ள பற்று என்பதைவிட வெறித்தனம் என்பது அளவிட்டுச் சொல்லப்பட முடியாத ஒன்றே.

இதுகுறித்து அறிஞர் அண்ணா அவர்கள் எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது.

‘‘தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழி யாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான்.’’ (‘திராவிட நாடு’, 2.11.1947) என்று அண்ணா சொல்லும் உரைக்கல்லில் வைத்து உரைத்துப் பார்த்தால், பார்ப்பனர் தம் உள்ளத்தின் தன்மை உண்மையாகவே விளங்கும்.

‘‘சமஸ்கிருத பாஷை பிரம்மத்திற்குச் சமானம். அதாவது பரம்பொருளுக்குச் சமானம். பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது - அதற்கென்று ஒரு குறிப்பிட்ட பகுதியோ, தேசமோ கிடையாது. இதைத்தான் ‘‘சர்வ வியாபசத்வம்’’ என்பார்கள்.

உலகில் முதன்முதலில் தமிழ்மொழி தோன்றிற்று. அதுவும் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகுதான் சமஸ்கிருதம் வந்தது. அதுவும் கொஞ்சம் நூற்றாண்டுகளுக்கு முன்புதான் ‘‘பாணிணி’’ என்ற ஒருவர் இந்த சமஸ்கிருதத்திற்கு இலக்கண சாஸ்திரங்களை இயற்றினார். அது முதற்கொண்டுதான், அந்த மொழியும், பாஷையும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், பாஷா சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய (றிலீவீறீஷீறீஷீரீஹ்) சாஸ்திரத்தில் சமஸ்கிருதம்தான் பண்டைய காலத்திலிருந்து வந்த ஒரு பாஷை என்று கூறப்பட்டுள்ளது’’ - இப்படி சொல்லியிருப்பவர் யார் தெரியுமா?

‘முற்றுந் துறந்த லோகக் குரு’ என்று அக்கிரகாரம் போற்றும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியார்தான் (‘ஞானவழி’ - வானதி பதிப்பக வெளியீடு).

சங்கராச்சாரியார் எல்லாவற்றையும் கடந்தவர் என்று அவர்கள் சொல்லிக் கொள்ளலாம்; எதைத் தாண்டினாரோ இல்லையோ, அவாளின் சமஸ்கிருதப் பற்றை மட்டும் தாண்ட முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பூஜை வேளையில் எந்த  காரணத்தை முன்னிட்டும் தமிழில் பேச மாட்டார். அப்படிப் பேச நேரிட்டாலும் குளித்து முழுகி விட்டுத்தான் மறுபடியும் பூஜையை ஆரம்பிப்பார்; காரணம், அவாள் பார்வையில் தமிழ் நீஷ பாஷையாம்.

இவர் ஆன்மிக ஆச்சாரியார் - அரசியல் ஆச்சாரியார் ராஜாஜி என்ன சொல்கிறார்?

‘பள்ளிக்கூடங்களிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு வைத்துவிட்டுப் போன பெருமைகளின் சாவி என்ற ஸம்ஸ்கிருதம் தெரியாவிட்டால், மகாபெரிய விபத்தாகும்’’ என்று கூறுகிறார்.

அவரை விட்டுத் தள்ளுங்கள், கோமாளி என்று பொதுவாகச் சித்தரிக்கப்படும் திருவாளர் சோ.ராமசாமி கோவிலில் அர்ச்சனை மொழி தமிழ் என்றால், எப்படியெல்லாம் எகத்தாளமாக எழுதுகிறார்.

‘‘நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால், அர்த்தம் இருக்கும், அருள் இருக்காது; ரிஷிகளும் பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால், பொருள் இருக்கும் புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல - ஒலிக்கு’’ என்று தலையங்கம் தீட்டுகிறார் (‘துக்ளக்’, 18.11.1998) எல்லாம் வல்ல கடவுள் என்று பசப்புவார்கள். ஆனால், அவரைக்கூட அவாளின் சமஸ்கிருதக் குடுவைக்குள் அடைக்கிறார்களே - புரிகிறதா - அதுதான் அவாளின் இனப்பற்றும் - மொழிப்பற்றும்.

சமஸ்கிருதத்திலிருந்து எதற்குத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமாம்? அதுபற்றி அவர் ஒன்றும் கூறவில்லையே! கோவிலில் வழிபாடு செய்ய தமிழில் பாடல்கள் இல்லையா?

திருவாசகம், தேவாரம் என்று ஒரு பட்டியல் இருப்பதாக சைவ மெய்யன்பர்கள் சொல்லுகிறார்களே, அவையெல்லாம் குப்பைக் கூளங்களா?
பார்ப்பனரைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், சமஸ்கிருதம்தான் சரியான அளவுகோல்! மத்தியில் உள்ளது பார்ப்பன ஜனதா ஆட்சி என்பதால், சமஸ்கிருதத் திணிப்பு திட்டமிட்டு நடக்கிறது - எச்சரிக்கை!

Tuesday, January 27, 2015

இதோ ராஜபக்சேயின் வாரிசுகள்!














கேள்வி: இலங்கை அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவது இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும், இலங்கைத் தமிழர் களுக்கும் நல்லது என்று நீங்கள் நினைக் கிறீர்கள்?

பதில்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரி பால சிறீசேனா ராஜபக்சே போல் அல்லாமல், சமஷ்டி அமைப்பு ஏற்பட வழி செய்ய முன் வருவார் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம் இருந்தது. ஆனால், அவரோ, அப்படி எண்ணம் இல்லை என்பதைத் தெளிவாக்கி விட்டார்.

இது தவிர, அவர் எது செய்ய நினைத் தாலும் தன்னை ஆதரிக்கிற பல கட்சிகளின் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்ய முடியாது.

தமிழர்கள் விஷயத்தில் அந்த மாதிரி ஒப்புதல், பல கட்சிகளிடம் இருந்து சுலப மாகப் பெறக் கூடியது அல்ல. ராஜபக்சே நிலை இப்படிப்பட்டது அல்ல. ஆகையால் அவரிடம் காரியம் சாதித்துக் கொள்ள முயல்வதே மேல். அந்த வகையில் பார்த்தால் அவர்  வெற்றி பெறுவது இந்தி யாவிற்கு ஓரளவுக்காவது நல்லதாக இருக்கக் கூடும்.

(துக்ளக் 24.12.2014 பக்கம் 11)
சோ மட்டுமல்ல; ஒட்டு  மொத்தமான பார்ப்பனர்களின் நிலைப்பாடும் இதுதான்.
ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல நடக்கவில்லை; ராஜபக்சே தோல் வியைத்தான் தழுவினார்.

ஒன்றை இந்த இடத்தில் குறிப்பிடுவது முக்கியம்; வெற்றி பெற வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்த்த அந்த ராஜபக்சே எத்தகையவர் என்பது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எவ்வளவுக் குரூரமான மனிதர் இவர்! இந்த குடும்பமே பெரிய கொள்ளைக்காரக் குடும்பமாக அல்லவா இருந்திருக்கிறது.

ராஜபக்சேயின் தம்பி கோத்தபாய ராஜபக்சே தனது பினாமி பெயரால் ஆயுதக் கப்பலே வைத்திருந்தார் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு எதிரானவர்களைப் படு கொலை செய்ய மரணப் படை ஒன்றைக் கையில் வைத்திருந்தார் இவர். வெள்ளை நிற வாகனங்கள் இதற்குப் பயன்படுத்தப் பட்டன என்கிற தகவல்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகப் புற்றீசல் போல வெளி வரத் தொடங்கி விட்டன.

சர்வாதிகாரி போல் ஆடம்பரமாக வாழ்ந்த மகிந்த ராஜபக்சேபற்றி ஏராளமான தகவல்கள் வெளி வந்துள்ளன; அவற்றில் சில வருமாறு:

1. மகிந்தா அணியும் ஸன்கிளாஸின் மதிப்பு  35 லட்சம் ரூபாய்

2. மகிந்தா அணியும்கைக்கடிகாரத்தின் மதிப்பு 9 லட்சம் ரூபாய்; அவரிடம் அவ் வாறான 9 கைக்கடிகாரங்கள் உள்ளன

3. மகிந்தாவின் 2 ஆம் மகன் தன் காதலியின் பிறந்தநாளுக்குக் கொடுத்த பரிசு இங்கிலாந்து அரண்மைனையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி பெறுமதியான வெண் குதிரை.

4. உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த லம்போகினி கார் ரூ.1000 கோடி மதிப்புக்கு 9 கார்களை இறக்குமதி செய்தார். இதற்காக நமால் ராஜபக்சேக்குக் கிட்டத்தட்ட ரூ.500 கோடி வரிவிதிவிலக்கு வழங்கப்பட்டது. இதற்கு வரிவிலக்கு பாராளுமன்றத்தால் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

5. 100 மில்லியன் டொல் 5000 ரூபா தாளில் மத்தியவங்கியிலிருந்து மாற்றிச் சென்றுள்ளார்கள். அதாவது 1300 கோடி ரூபாய் தேர்தல் நடவடிக்கை களுக்கு லாரிகளில் எடுத்துச் சென்றுள் ளார்கள்.

6. தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஞிவீணீறீஷீரீ  நிறுவனத்திலிருந்து 500 கோடி ரூபாய் பெற்றுள்ளார்கள்

7. மகிந்தா சிறீ லங்கா டெலிகொம் மூலம் ரூ.150 மில்லியன் பணம் தேர்தல் நடவடிக் கைக்காக எடுத்துள்ளனர்

8. நாடாளுமன்ற மந்திரி ஒருவரை விலகிப் போகாமலிருக்க வைப்பதற்காக  ஒன்றரைக் கோடி ரூபாய் கை மாறியுள்ளது

9. பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினரை தமது பக்கம் இழுக்க 500 கோடி ரூபாய் செலவழித்திருக்கின்றனர்.

10. அநுராதபுர மகிந்தாவின் கூட்டத் துக்கு 1100 பேருந்துகள் கொண்டு வரப் பட்டன இதற்காக கொடுக்கப்பட்ட செலவு 250 லட்சம் ரூபாய். அனுராதபுர கூட்டத் திற்கு மாத்திரம் ரூ.70 கோடிகளுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.

11.  கோத்தபய ராஜபக்சவின் மகளின் திருமணத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பூக்கள் 2 கன்டெய்னர்களில் இந்தோனே சியா விலிருந்து வரவழைக்கப்பட்டன.

12.  சிரானி பண்டாரநாயக்கசட்டமா அதிபராக இருந்த போது 2 தீர்ப்புக்களை அரசுக்கு எதிராக வழங்கியதால் அவரை போலி குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பதவி யிலிருந்து துரத்திவிட்டு, இதுவரை எந்த வழக்கிலும் ஆஜராகாத நீதித்துறையில் எந்த ஆழமான சட்ட நுணுக்கமும் தெரியாத மொஹான்பீரிஸை இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக  ஜனாதிபதி நியமித்தார்

13.  பொதுவிடத்திலேயே மதுபானம் அருந்தி பெண்களுடன் பாலியல் குற்றத் தில் ஈடுபட்ட பாலசூரியவை இலங்கை காவல்துறைத் தலைவராக தனது நிறை வேற்றும் அதிகாரம் மூலம் நியமித்தார்.

மஹிந்தா பற்றிய மேலும்  தகவல்கள் உண்டு.

1. மகிந்தாவின் மனைவி இலங்கையி லேயே அதிக  வசதிகளைக் கொண்ட கால் டன் என்ற மொன்டசூரியின் (கேளிக்கை விடுதி) உரிமையாளர்.

2. நமால் ராஜபக்ச 5 ரேடியோ  2 தொலைக்காட்சிகளுக்கு சொந்தக்காரர்.

3. மகிந்தாவின் இரண்டாம் மகனுக்கு ரக்பி போட்டியில் போட்டியாக இருந்த துவான் என்றதிறமையான முஸ்லிம் இளைஞனை நாரஹேன்பிட்டியில் வைத்து இரவு வேளையில் உயிருடன் தீ வைத்து எரித்துக் கொலை செய்தனர்.

4. மியான்மாவில் பலரை உயிருடன் எரித்துக் கொலை செய்து மியான்மா படுகொலைகளுக்கு தலைமை தாங்கிய விராது என்ற பிக்குவுக்கு உலகில் எந்த நாடும் இதுவரை விசா வழங்கவில்லை. ஆனால், மகிந்தாவின் அரசு வழங்கியது. விராது  தனது உரையை மகிந்தாவுக்கு நன்றி செலுத்தி விட்டே தொடங்கினான்.

5. யாழ்ப்பாணத்தில் யுத்தத்தின்பின் கைப்பற்றிய பல பில்லியன் மதிப்பான தங்கங்களை 6கண்டெய்னர்கள் மூலமாக திருப்பதி ஏழுமலையானுக்குத் தானமாக கொடுத்தார்.  6. மகிந்தாவுக்கு எதிராக செயற்பட்ட பல ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தான். நூற்றுக்கணக்கான ஊடகவிய லாளர்கள் நாட்டை விட்டே போய் விட்டார்கள்

7. மகிந்தாவுக்கு எதிரான இன்னும் ஆயிரக்கணக்கானோர் வெள்ளை வேன் களில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட் டார்கள்; இவர்கள் இறந்தார்களா? உயிருடன் இருக்கிறார்களா? என்று கூடத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக் கிறார்கள் இவர்களின் குடும்பத்தார்கள்.

8. பவுத்த பிக்குகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி எதனால் இறக்குமதிக்கு அனுமதிகொடுத்து மக்களை - இலங்கைத் தீவை மதுவிற்கு அடிமையாக்கி வைத்தார்.

9. மாசடைந்த குடிநீரினால் அவரது சொந்தத் தொகுதியான அனுராதபுரத்தில்  சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த மருத்துவ உதவியும் கொடுக்காமல், தனது ஓர் ஆண்டு செல வுக்காக ரூ.942 கோடிகளை ஒதுக்கிக் கொண்டார்.

10. நாட்டு மக்களிடமிருந்து வரி என்றபெயரில் சூதாட்டவிடுதிகளுக்கு அதீத உரிமைகளை வழங்கினார்.

11. பல்வேறு பாலியல் குற்றச்சாட்டு மற்றும் பெண்களை அயல்நாடுகளுக்கு கடத்தும் குற்றவாளிகளான மதுமிந்த சில்வா போன்றவர்களுக்கு முக்கிய பிரமுகர் களுக்கு நிகரான பாதுகாப்பு வழங்கினார்

12. நாட்டின் உச்சநீதிமன்றத்தையே முடக்கி நீதி, நியாயத்தையே கொலை செய்தவர்
இப்படிப்பட்ட ஒரு கொடூரனைத் தான் சோ உள்ளிட்ட பார்ப்பனர்கள் தோளில் தூக்கி வைத்து ஆடினார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இவரே மீண்டும் வர வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் ஆசைப்பட்டது - இவர்கள்  ராஜபக்சேயின் இன்னொரு வகை வாரிசுகள் என்பதை மறந்து விட வேண் டாம்! தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அக்கிரகாரவாசிகளுக்கு அவல் பாயசம் சாப்பிட்டது மாதிரிதானே!

- மின்சாரம்


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Monday, January 26, 2015

கலைஞரைக் கேலி செய்வதை பார்ப்பனர்கள் நிறுத்த வேண்டும்

பார்ப்பனர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதுதான் சாஸ்திரம், அதுதான் சட்டம் - அதனை ஏற்க மறுத்தால் அவர்கள் ஏதாவது உள்நோக்கம் கற்பிப்பது, முத்திரை குத்துவது என்பதைத் தங்கள் பிழைப்பாகக் கொண்டு திரிகிறார்கள்.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டே, தமிழால் பிழைத்துக் கொண்டே தமிழர்களை இழிவுபடுத்துவதில் மூர்க்கக் குணம் கொண்டு திமிராக எழுத ஆரம்பித்துள்ளனர்.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று இந்த ஆண்டும் திமுக தலைவர் கலைஞர் வலியுறுத்தி எழுதி விட்டாராம். துர்வாசர் என்ற பெயரில் துக்ளக்கில் உண்டு இல்லை என்று கலைஞர் அவர்களை எழுதித் தீர்க்கின்றனர் (துக்ளக் 28.1.2015 பக்.28).

யுகாந்திரமாக சித்திரை முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்தால் கலைஞருக்கு என்ன வந்தது? இவர் யார் இப்படி சொல்லுவதற்கு? இவரது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள மறைமலை அடிகளே சொல்லி விட்டார், சோமசுந்தர பாரதியாரே சொல்லி விட்டார் என்று அறிக்கை வெளியிடுகிறார். மறைமலை அடிகளும், சோமசுந்தர பாரதியாரும் தமிழர்களின் மகா சன்னி தானங்களா?  மடாதிபதிகளா? மகாசன்னிதானங்களும், மடாதிபதிகளும் சொன்னாலே மக்கள் காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகிற நம்பிக்கைகளை எளிதில் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இந்த லட்சணத்தில் திராவிட மகா சன்னிதானம் என்று தன்னைக் கருதிக் கொண்டிருக்கும் இந்தக் கருணாநிதி சொல்வதையா போயும் போயும் கேட்பார்கள்? என்று பொரிந்து தள்ளுகிறது துக்ளக்.

முதலில் கருணாநிதி என்ன சன்னிதானமா என்ற கேள்வியை எழுப்புகிறார் - சரி, கலைஞர் சொன்னால்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் அறிஞர்களான, கற்றுத் துறைபோகிய பெரு மக்களாகிய தமிழ்க் கடல் மறைமலை அடிகளும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும் சொல்லுகிறார்கள்  என்றால் அவர்கள் என்ன மடாதிபதிகளா? சன்னிதானங்களா? என்று கேள்வி கேட்கிறார்.

தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிப் பேச தமிழறிஞர்களை விடத் தகுதியானவர்கள் இந்த அம்மாஞ்சிப் பார்ப் பனர்களா? தமிழர் பிரச்சினையில் கருத்துச் சொல்லு வதற்கு இந்தப் பார்ப்பனர்கள் யார் என்று திருப்பி நம்மால் கேட்கமுடியாதா?

மகா சந்நிதானங்களும்,  மடாதிபதிகளும் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்னால் ஏற்க வேண்டியதுதானே? ஏற்பார்களா? அடுத்து ஒரு முரண்பாட்டைக் கவனிக்கவும். இவர்கள் எல்லாம் மடாதிபதிகளா? சந்நிதானங்களா? என்று கேள்வி கேட்டு விட்டு, அடுத்த வினாடியே மகா சன்னிதானங்களும், மடாதிபதிகளும் சொன்னாலே மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எழுதுகிறார். முதல் வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையிலேயே முரண்பாடு வழிந்து ஓடுகிறது. இந்த லட்சணத்தில் துக்ளக் பார்ப்பனர் துடை தட்டுகிறார்.
தமிழ் ஆண்டுகள் என்று சொல்லுகிறார்களே - அதில் ஒரே ஓர் ஆண்டுக்காவது தமிழில் பெயரில்லையே - ஏன்? இதற்கு என்ன பதில்? அறுபது ஆண்டுகள் சமஸ்கிருதத் தில் இருக்கின்றன என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இந்தப் பார்ப்பனக் கூட்டம் அதையே பிடித்துக் கொண்டு தொங்குகின்றது என்பதை மறந்துவிடக் கூடாது.

உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர்களின் பிரதிநிதிகள் மலேசியாவின் தலைநகரமான கோலாலம் பூரில் கூடி தை முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவித்துவிட்ட பிறகு, பூஜை வேளையில் பெரியவாள் சங்கராச்சாரியார் நீஷப்பாஷையான தமிழில் பேச மாட்டார் என்று சொல்லுகிற கூட்டம் தமிழ்ப் புத்தாண் டைப்பற்றியா பேசுவது?

யுகாந்திரமாக வந்ததை எல்லாம் மாற்றலாமா என்று அதி புத்திசாலிபோல துக்ளக் கேள்வி கேட்கிறதே - யுகாந்திரம் என்றால் எந்த ஆண்டு அதற்கான தொடக்கம் என்று சொல்ல முடியுமா? சரி, அவர்கள் சொல்லுவதை விவாதத்துக்காக ஏற்றுக் கொள்கிற முறையில் ஒரு வினாவைக் எழுப்புகிறோம். அப்படி வந்த எதையும் மாற்றிக் கொள்ளவேயில்லையா?

நிர்வாணமாக அலைந்து திரிந்த மனிதன் பின் இலைகளால் உடையணிந்த மனிதன் படிப்படியாக மாறுதலுக்கு உட்படவில்லையா? மாறுதலின் அடையாளம் தானே புத்தி வளர்ச்சி என்பது - புத்தியைப் பயன்படுத் தினால் இதன் உண்மை விளங்கும், மாறுதலே கூடாது என்று ஒருவர் பேசுகிறார், எழுதுகிறார் என்றால் அவர் புத்தி இன்னும் வளரவேயில்லை; அந்த காட்டுவிலங்காண்டி காலத்திலேயே சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார் என்று தானே பொருள்படும்?

தீண்டாமை க்ஷேமகரமானது என்று அவாளின் சீனியர் சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சொல்லி இருக்கிறார்- அவர் சொன்னார் என்பதற்காக அதனை ஆதரித்து இதே துக்ளக்கில் எழுதட்டுமே பார்க்கலாம் - ஜாமினில் வெளியே வர முடியாத அளவுக்கு சிறைக்கும் போக வேண்டியிருக்குமே!

இந்து ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறோம், ராம ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறோம் என்று நரேந்திர மோடியும், பிரவீன் தொகாடியாவும், அசோக் சிங்காலும் உளறிக் கொட்டுகிறார்களே - இவர்கள் யார்? குருக்களா சன்னிதானங்களா? மடாதிபதிகளா? இவற்றையெல்லாம் சொல்லுவதற்கு என்று திருப்பிக் கேட்க முடியாதா?

புராணத்தில் எழுதப்பட்டு இருக்கிறது என்பதற்காக இரண்யாட்சதன் பூமியைப் பாயாக சுருட்டிக் கடலில் விழுந்தான் என்பதை நம்ப வேண்டும் என்றுகூடச் சொல்லுவார்களோ!

பார்ப்பனர்கள் படித்தவர்களே தவிர அறிவாளிகள் அல்லர் என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
 
தொண்ணூறையும் தாண்டிய திராவிட இயக்கத் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களை பார்ப்பனர் மனம் போனவாறு தரம் தாழ்ந்து எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இவர்களின் ஜெகத் குருக்களின் வண்டவாளங்களை தெருமுனைக் கூட்டங்கள் மூலம் நார்நாராய்க் கிழிக்கத் தயங்க மாட்டோம் - எச்சரிக்கை!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:



விருதுகள் பார்ப்பனரின் ஏகபோகமா?

https://www.facebook.com/viduthalaidaily/photos/a.108670655853554.22641.101804026540217/809193122467967/?type=1&theater

ஜனவரி 26  - இந்தியக் குடிஅரசு நாளை யொட்டி, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ முதலிய விருதுகளுக் குரியவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள்

1) என்.கோபால்சாமி (அய்யங்கார்) ஓய்வு
2) சுதா இரகுநாதன்
3)    எம்.ஆர். சீனுவாசன்
4)    பி.வி. இராஜராமன் (அய்.ஏ.எஸ்.) ஓய்வு

அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் தேடித் தேடிப் பார்த்தாலும் தமிழ்நாட்டிலிருந்து பெரிதும் பூணூல் திருமேனிகளே தகுதி பெற்றவர்களாக உள்ளார்கள்;

தடவித் தடவிப் பார்த்தால் ஒன்று வெறும் முதுகு கிடைக்குமோ என்ன?

யாருக்கு வந்த சுதந்திரம் இது?
புரிகிறதா?

Sunday, October 12, 2014

ஜீவா என்னும் சினிமா - பலே! பலே!!


திரைப்படம் பார்ப்பவர்கள் ஜீவா என்னும் திரைப்படத்தைப் பார்த்திடப் பரிந்துரைக்கின்றோம். என்ன, விடுதலை திரைப்படத்தைப் பார்க்கச் சொல்லுகிறதா என்று புருவத்தை உயர்த்த வேண்டாம்!

படமே பார்ப்பதில்லை என்றால், அது வேறு; படம் பார்ப்பவர்களாக இருந்தால் இந்தப் படத்தைப் பார்த்தே தீர வேண்டும்.

கிரிக்கெட் என்பது எப்படி முழுக்க முழுக்கப் பார்ப்பனர்களின் சுரண்டல் கிடங்காக இருக்கிறது என்பதைத் தோலுரித் துக் காட்டியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன். உண்மையிலேயே இது ஒரு படம் அல்ல - சமூகத் தொண்டு- விழிப்புணர்வும்கூட!

ஜீவா என்ற கதாநாயகனை உருவாக்கி, அவனுக்குக் கிரிக்கெட்டில் மிகப் பெரிய அளவிற்குத் திறமை இருந்தும் இந்திய அணியில் இடம் கிடைக்காததற்குக் காரணம் என்ன? ரஞ்சி  டிராஃபி என்பது என்ன? அதில் இடம் பிடிப்பது யார்? தேர்வு செய்வதற்கு என்ன அளவுகோல் என்பதை சும்மா புரட்டிப் புரட்டி எடுத்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து 16 பேர் இந்திய அணிக்கு இதுவரை சென்றுள்ளனர் என்றால் அதில் 14 பேர் பார்த்தசாரதி இனத்தைச் (பார்ப்பனர்களைத்தான் அப்படி சொல்லுகிறார்) சேர்ந்தவர்கள் தான்.

ஒரு காட்சி! கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவரான பார்த்தசாரதி அய்யங்கார் ராஜா என்ற பார்ப்பனர் அல்லாத சிறந்த விளையாட்டுக்காரை முதுகில் தட்டிக் கொடுப்பது போல எதையோ துழாவுவார்! வேறு ஒன்றுமில்லை. அவன் முதுகில் பூணூல் தட்டுப்படுகிறதா என்று பார்ப்ப தற்குத்தான் அந்த வேலை.

ராஜா என்ற பார்ப்பனர் அல்லாத கிரிக்கெட் விளையாட்டுக்காரரின் நண்பன் - அவனும் மிகச்சிறந்த விளையாட்டு வீரன்! பந்தயத்தில் விளையாட வாய்ப்பு அளிக்கப் படவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி கல் நெஞ்சங் களையும் கழிவிரக்கம் கொள்ளச் செய்யும்.

இந்த விவரங்கள் எல்லாம் புரியாமல் நமது தமிழின இளைஞர்கள் இந்தப் பாழாய்ப் போன பார்ப்பன விளையாட்டின் ரசிகர்களாக மாறி இருப்பதன் அவலத்தை என்ன சொல்ல!

கிராமப்புறங்களிலும், வயல்களிலும், ஆற்றுப்படுகைகளிலும் இடம் பெற்ற தமிழர்களின் உண்மையான வீர விளை யாட்டான சடுகுடு (கபடி) இருந்த இடம் தெரியவில்லை; அந்த இடத்தை இந்தச் சோம்பேறி   - பார்ப்பனீய கிரிக்கெட் பிடித் துக் கொண்டு விட்டதே!கிரிக்கெட்டைப் புறந்தள்ளி தமிழர் களின் வீர விளையாட்டைப் புதுப்பிப்போம்!

தந்தை பெரியார் வீர விளையாட்டுக் கழகம் இதனை முன்னெடுத்துச் செல்லுகிறது!

கிரிக்கெட் என்பது பதினோரு முட்டாள் கள் விளையாட, பதினோராயிரம் முட்டாள் கள் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர் என்றார் அறிஞர் பெர்னாட்சா.

போட்டிகள் நடந்து கொண்டிருக்கும்  பொழுது எந்த விளையாட்டிலாவது, பார்வையாளர்களுக்கு ஆட்டோ கிராபிஃல் விளையாட்டு வீரர்கள் கையொப்பம் போட்டுக் கொடுத்துக் கொண்டு இருப் பார்களா? கிரிக்கெட்டில்தான் இந்தக் கூத்தைப் பார்க்கலாம்.

ஆடும் 11 பேர் கொண்ட அணியில் பந்து வீசுபவன் ஒருவன், ஓடுபவர் இருவர், துரத்துபவன் ஒருவன்; மற்றவர்கள் பேன் குத்திக் கொண்டு இருப்பார்கள். இந்திய அணி, இந்திய அணி என்று  நமது இளைஞர்கள் கூறும் மட்டைப் பந்து குழுவிற்கும் இந்தியாவிற்கும் முற்றிலும் தொடர்பில்லை.

விளையாட்டை ஒருவகை வியாபார மாக்கி லாபம் பார்க்கும் கம்பெனிதான் பி சி சி அய்; இதன் கீழ் வருவது தான் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் என்னும் டிஎன்சிஎ; அமைப்பின் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை அது ஆரம்பித்த காலமான 1938ல் எப்படி தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கம் இருந்ததோ அதே நிலையில் தான் இருக்கிறது இன்று வரை! தமிழக அணியில் இடம் பெற விளையாடத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது, காலில்  காலணிகளில் கயிறு இருக்கிறதோ இல்லையோ, உடலில் தோளில் இருந்து இடுப்புவரை உருண்டோடும் குறுக்கு கயிறான பூணூல் இருந்தே ஆகவேண்டும். இதுவரை தமிழ் நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அணிக்காக விளையாடியவர்கள் மொத்தம் 21 பேர் இதில் எத்தனை பேர் என்ன சாதியினர் என்று பார்த்தோம் என்றால் அத்தனையும் அய்யர், அய்யங்காராகவே இருப்பார்கள். இதில் அய்யர்களை விட அய்யங்கார்களே அதாவது பார்த்தசாரதிகளும் சேஷாத்ரி களுமே அதிகமாக இருப்பார்கள். வைஷ்ணவத்தைப் பின்பற்றும் அய்யங்கார்களின் ஆதிக்கமே இங்கு அதிகம்.
இந்த 21 பேரில் இரண்டு பேர் தான் அய்யர் அல்லது அய்யங்கார் இல்லாத வர்கள். சரி அப்படியென்றால் மற்ற சாதி யினர்  விளையாடுவதில்லையா என்று கேட்டால் விளையாடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கான வாய்ப்பு என்பது எவ்வளவு நன்றாக விளையாடினாலும், பாராட்டு என்ற பெயரில் முதுகைத் தடவி பூணூல் இருக்கிறதா என்று பார்த்து தான் கொடுக்கப்படும்.

உதாரணமாக அனிருத் முன்னாள்  இந்தியக் கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்தின் மகன், வருங்கால விளையாட்டு வீரர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிக்கு அனுப்பப்பட்டார் இந்தியா சார்பாக;  அப்பொழுது தேர்வுக் குழு உறுப்பினாராக இருந்தவர் ஸ்ரீகாந்த், இதைக் குறித்து வினாக்கள் எழுப்பப்பட்ட பொழுது   தேர்வுக் குழு உறுப்பினர்கள் மூவரும் ஸ்ரீகாந்தைக் காப்பாற்றினார்கள்.    ஆனால், அவர் சாதித்துக் கிழித்தது என்னவாம்? அனிருத் மட்டைப்பந்து விளையாட்டில் இன்றளவும் திறமையற்ற வராகத்தான் இருக்கிறார்.

ரஞ்சிக் கோப்பை போட்டிக்கு தேர்ந்து எடுக்கப்படும் வீரர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்  பூணூல்காரர்களாகவே இருப் பார்கள். மற்றவர்கள் எவ்வளவு நன்றாக விளையாடினாலும் ரஞ்சிப் போட்டிகளுக்கு அனுப்ப மாட்டார்கள், அப்படியும் திறமையை நிரூபித்து ஒரு சிலர் வந்தால் அவர்களை அணியில் எடுத்துக் கொள் வார்கள் ஆனால் ரஞ்சிக் கோப்பை போட் டிகள் அனைத்திலும் அனுமதிக்காமல் பார்வையாளர்கள் பகுதியிலேயே (ஷிதீவீமீ) அமர வைக்கப்படுவார்கள், ஆண் டிற்கு இரண்டு போட்டிகளில் அனுமதிக் கப்பட்டாலே அது அதிகம். ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் பொழுது இங்கே நடக்கும் முதல் டிவிசன் லீக் போட்டிகளிலும் கலந்து கொள்ள இயலாமல் இருப்பார்கள். அடுத்த ஆண்டு ரஞ்சி அணி தேர்ந்தெடுக்கும் பொழுது அதிக ரன் அடிக்கவில்லை என்று போட் டிகளில் விளையாடாமலேயே தேர்வுக் குழுவினரால்  தோற்கடிக்கப்படுகின்றனர், இப்படி பலரின் வாழ்க்கையைக் குதறியிருக் கிறார்கள்.

பி.கே.தர்மா என்ற தமிழக வீரர் தனது 14 வயதில் டிவிசன் லீக் போட்டிகளில் விளையாட ஆரம்பித்து மிக வேகமாக முதல் டிவிசன் லீக் போட்டிகளில் விளையாடியவர்; பி.கே. தர்மா  இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர், லட்சுமி பதி பாலாஜியின் உடல் நிலை சரியில்லாத பொழுது தமிழகத்துக்கு விளையாடினார். ஆனால், அதற்குப் பிறகு நிலையாக தமிழக அணியில் இவரை வைத்துக் கொள்ள வில்லை. இரண்டு ஆண்டிற்கு முன்பு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்; அதுவும் காலையில் ஒரு போட்டியில் விளையாடிவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தவர் தற்கொலை செய்து கொண் டுள்ளார்; இவரின் தற்கொலைக்குக் காதல் என்று கிளப்பி விட்டார்கள்; ஆனால் அதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை, 21 வயதில் ஒரு அருமையான விளையாட்டு வீரர் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

சடகோபன் ரமேஷ் மற்றும் திருக் குமரன் என்ற கென்னி இருவரும் சம காலத்தில் விளையாடியவர்கள் 1999 ஜனவரியில் சடகோபன் ரமேஷ் இந்திய அணிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டு 2001 செப்டம்பர் வரையில் இருந்தார். இவர் என்ன விளையாடினார் என்பது நமக்கு நன்றாகவே தெரியும், ஆனால் 1999 நவம் பரில் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக் கப்பட்டவர் தான் திருக்குமரன். ஆனால் 2000 ஜூனுக்குப் பிறகு திரும்பவும் இந்திய அணிக்குத் தேர்ந்து எடுக்கப்படவில்லை; அவருக்கான விளை யாடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. தமிழகத்திற்காக 2007ஆம் ஆண்டு வரை விளையாடிவிட்டு அதாவது ஆடாமல் தோற்றுவிட்டு, தனது ஓய்வை அறிவித்து விலகினார்.

இவரின் திறமையை உணர்ந்து அமெரிக்கா தனது தேசிய அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமித்துள்ளது.  ரஞ்சிக்கோப் பைக்கான 14 பேர் கொண்ட அணியில் கிட்டத்தட்ட 10 பேர் பார்ப்பனர்களே! ஆனால் ஒரே ஒரு மகிழ்ச்சி, முதன் முதலாக இரண்டு கிறித்துவர்களுக்கு இடம் கொடுத்துள்ளனர். ஆமாம் தமிழ்நாடு மட்டைப்பந்து விளை யாட்டில் சாதியம் பார்ப்பது மட்டுமில்லை; மதமும் தொடர்ந்து கடைப்பிடிக்கப் படுகிறது, தமிழ்நாட்டில் இருந்து இஸ்லாமி யர்களோ கிறித்துவர்களோ இது வரை இந்திய அணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட தில்லை.

இப்படி மிகச்சிறந்த பூணூல் ஆதிக்க அணியாக இருக்கும் தமிழ்நாடு மட்டைப் பந்து விளையாட்டுக் குழு 1935ல் இருந்து நடக்கும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது, ஆனால் தமிழக அணி இது வரை இரண்டு முறை தான் கோப்பையை வென்றுள்ளது. 1987-88ஆம் ஆண்டு போட்டியில் தான் கடைசியாக ரஞ்சிக் கோப்பையை தமிழ்நாடு பூணூல் அணி கைப்பற்றியது; அதற்குப் பிறகு 26 ஆண்டுகளாக பூணூல் அணி கோப்பைக் கனவு மட்டுமே கண்டு கொண்டுள்ளது.

மும்பை அதிகபட்சமாக 40 முறை கோப் பையைக் கைப்பற்றியுள்ளது மட்டைப்பந்து விளையாட்டைப் பொறுத்த வரை மும்பை, டில்லி, கொல்கத்தாவிற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு அணி உள்ளது ஆனால் ராஜஸ்தானிடம் எல்லாம் மரண அடி வாங்கி ஓடி வந்தது தான் பூணூல் அணியின் வரலாறு.
இந்திய அணியிலும் பார்ப்பனீயம் காப்பாற்றப்பட்டாலும் அவ்வப்பொழுது கபில்தேவ், அசாருதீன், தோனி போன்றவர் களால் பார்ப்பனீயம் உடைக்கப்படுகிறது. கபில், தோனி தலைமையில்தான் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது.

தமிழ்நாட்டில் பார்ப்பனீயம் தனது கால்களை ஆழமாகவும் நல்ல அகல மாகவும் வேரூன்றி நிற்கிறது, இதை வேருடன் கெல்லி எறிய வேண்டிய தேவை உள்ளது.

நிறவெறியைப் பாவித்த தென் னாப்பிரிக்க அணி சர்வதேச மட்டைப்பந்து

விளையாட்டுடிலிருந்து ஒதுக்கப்பட்டது போல் இந்தியாவும் ஒதுக்கப்பட வேண்டும். இப்பொழுது தென்னாப்பிரிக்காவில் கிரிக் கெட்டிலும் கறுப்பர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஜிம்பாவே மட்டைப்பந்து விளையாட்டு அணியில் இருப்பது போல் இடஒதுக்கீடு முறை தமிழ் நாடு மட்டைப்பந்து விளையாட்டு வாரியத் திலும் கொண்டு வரப்பட வேண்டும். இல்லையென்றால் பார்ப்பனீயம் பெரு வாரியான இளைஞர்களின் விளையாட்டுப் போதையைப் பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கி விடும்!



பார்ப்பனக் கொள்ளையைக் கேட்பார் உண்டோ!

கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களுக்கு பிசிசிஅய் ஒப்பந்த அடிப்படையில் ஓர் ஆண்டு சம்பள விபரம்:

பிசிசிஅய் தனக்கு ஒப்பந்தமான அணிகளை 3 பிரிவாக பிரித்துள்ளது. ஒன்று எ குழுமம், பி குழுமம், சி குழுமம்  ஏ குழுமத்திற்கு நாடு முழுவதிலுமுள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுத்து இணைக்கப்படுவார்கள் இவர்களுக்கு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஏ குழுமம் 9 பேர் 1 கோடி ரூபாய் ஆண்டிற்குப் பெறுகின்றனர்
சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ் தோனி, ஜாகிர்கான், வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், சுரேஸ் ரயினா, யுவராஜ் சிங், வீராத் கோலி, அஸ்வின் பி குழுமத்தில் 50 லட்சம் ஆண்டிற்குப் பெறுகிறார்கள்

ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, பிரகயான் ஓஜா, ரோஹித் சர்மா,சித்தேஷ்வர் பூஜாரா, அஜின்கியா ரஹனே, இர்பான் பதான், உமேஷ் யாதவ்

சி குழுமத்தில் 35 லட்சம் ஆண்டிற்கு  பெறும் வீரர்கள்

ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, வினய் குமார், முனாஃப் படேல் அபிமன்யூ மிதுன் எம் விஜய் சேகர் தவான், விரித்திமன் சாஹா, பர்திவ் படேல், மனோஜ் திவாரி, எஸ் பத்திரிநாத், பியூஸ் சாவலா, தினேஷ் குமார், யுசூப் பதான், பிரவீன் குமார், எல் பாலாஜி  சச்சின் டெண்டுல்கர் 2012 ஆண்டு வருமானம் 129,024,000 (சுமார் ரூ.13 கோடி)

டெஸ்ட் மேட்ச் 7 லட்சம் உள்ளூர் போட்டிகளுக்கு; 12 முதல் 15 லட்சம் வெளிநாட்டுப் பயணங்களுக்கு.

ஒரு நாள் போட்டிக்கு 4 லட்சம் உள்ளூர் விளையாட்டுகளுக்கு;  8 முதல் 10 லட்சம் வெளிநாட்டுப் பயணங்களுக்கு

20-20 போட்டிக்கு 2 லட்சம் உள்ளூர்; 5 முதல் 8 லட்சம் வெளியூர் போட்டிக்கு   .

இதில் விளம்பரதாரர்கள் அளிக்கும் சிறப்பு பரிசு மற்றும் பி சி சி அய் அறிவிக்கும் சிறப்புப் பரிசுகள் என சேர்த்தால் முன்னணி வீரர்களுக்கு ரூ.20 முதல் 25 லட்சம் வரை ; டெஸ்ட் போட்டி 12 முதல் 15 லட்சம் வரை ; ஒரு நாள் போட்டிகளில் 10 லட்சம் 20-20 போட்டிகளில் கிடைக்கும்

உள்ளூர் ரஞ்சி கோப்பைக்கான போட்டிகளில் விளையாடும் வீர்ர்களுக்கு  1,8 லட்சம் பி.சி.சி.அய் வழங்கும்

வெளிநாடு செல்லும் குரூப் பி மற்றும் டி அணி வீர்ர்களுக்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஊதியமாக கொடுக்கப்படுகிறது,  புதிய வீரர்களுக்கு விளையாட்டுத் திறனிற்கேற்ப ஊக்கத்தொகை 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை தரப்படுகிறது,  புதிய வீரர்களுக்கு விளம்பரதாரர் நேரடியாக எந்த தொகையும் விளையாட்டுப் போட்டியின் போது வழங்க அனுமதியில்லை.

Monday, April 15, 2013

மோடிமஸ்தான் பராக்! பராக்!!


மோடியைப் பிரதமருக்கான வேட் பாளராக முன்னிறுத்துவோர் யார்?
பார்ப்பன பனியா கூட்டம்தான் இதன் பின்னணியில் இருக்கிறது.
பார்ப்பனர் கூட்டம் பின்புலத்தில் ஏன் இருக்கிறது? இந்துத்துவா கொடியைப் பறக்க விட மோடியால் தான் முடியும் - இந்துத்துவா கொடி ஏறினால்தான் மனுதர்ம சாம்ராஜ்யம் உருவாகும்.
மனு தர்மம் வந்தால்தான் பிரம்மாவின் நெற்றியில் பிறந்ததாகக் கூறி வந்தார்களே, அப்படி பிறந்த பிராமணர்களுக்காகத்தான் இந்தப் பூலோகமே படைக்கப்பட்டது என்று நம்பப்பட்டதே, அந்தப் பொற்காலம் பூக்க வேண்டும் என்பதிலே பூதேவர் களான பார்ப்பனர்கள் மிதந்து கொண்டிருக்கிறார்கள்!
நரேந்திரமோடி பார்ப்பனர் அல்லவே; - அப்படி இருக்கும் பொழுது அவரை ஏன் ஆரியம் தூக்கிப் பிடிக்கிறது என்ற கேள்வி எழுலாம்.
இந்த இடத்தில்தான் ஆரியத்தின் தந்திரப் பொறி வஞ்சகமாக ஒளிந் திருக்கிறது.
பார்ப்பனராக இருந்து ஒருவர் அதனைச் செய்யும்போது அது எளிதில் அம்பலப்படுத்தபட்டு விடும்.
பார்பார், பார்ப்பனப் புத்தியை! பார்ப்பன உணர்வோடு செயல்படும் சூழ்ச்சிகளைப் பாரீர் பாரீர்! என்ற எளி தாக பொது மக்களை பார்ப்பனர் களுக்கு எதிராகக் கிளப்பிவிட முடியும்.
அதே வேலையை மோடியைப் போன்ற பார்ப்பனர் அல்லாதார் செய் யும்போது அப்படி ஒரு குற்றச்சாற்றை எளிதில் வைக்க முடியாதல்லவா! உணர வைப்பது எளிதல்லவே!
அப்படியே குற்றம் சொன்னாலும் அந்த இடத்தில் பார்ப்பனர் இருக்கும் பொழுது வைக்கப்படும் குற்றச்சாட்டு அளவுக்கு வலிமை பெறாது!
இந்த தந்திரம் தான் மோடியை முன்னிறுத்துவதில் இருக்கக் கூடியதாகும்.
தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்களே நிஜப் புலியைவிட வேஷம் போட்ட புலி அதிகமாக குதிக்கும் என்று; தான் உண்மையான புலியல்ல என்று வேஷம் போட்ட புலிக்குத் தெரியும். ஆகையால், நம்மை சந்தேகப்படுவார்களே என்ற எண்ணத்தால் அதிகமாகக் குதிக்கும்.
மோடியும் அப்படிதான் நடந்து கொண்டு வருகிறார்; பிராமணர் நம் சமூகத்துக்கு எவ்வளவோ சாதித்துக் கொடுத்திருக்கிறார்கள் என்றுகூட சொன்னதுண்டு.
பிரதமர் நாற்காலியில் அமரும் ஆசை மோடிக்கு அதிகமாகவே இருக்கிற காரணத்தாலும், பார்ப்பனர்கள் பனியாக்கள் கைகளில் தான் ஊடகங்களும், பண பலமும் இருக்கிற காரணத்தாலும் இவர்களைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளும் யுக்தியும் மோடிக்கு உண்டு.
ஆக ஒருவர் இன்னொருவரால் பயன் அடையும்போது,  அதற்கான திட்டங்களும் செயல் முறைகளும் உருவாகத்தானே செய்யும்.
அதுவும் மோடி இருக்கிறாரே மோசடியான திட்டங்களை உருவாக்குவதில் மிகவும் கில்லாடி! செயற்கையாக, தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டும் வேலைகளைச் செய்வதில் கை தேர்ந்தவர். குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி சமூக இணைய தளங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அவரது டிவிட்டர் என்ற சமூக வலைதளத்தில் பத்து லட்சம்  பேர்  இணைந்திருக் கிறார்கள், அதுவும் அவர் கணக்கு துவங்கி குறுகிய காலத்தில் இது நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து மோடி கூறுகையில், இது வெறும் எண்ணிக்கை அல்ல மாறாக உங்களது அன்பு என்று பதிவு செய்திருந்தார். ஆனால் அவரது கணக்கில் 50 சதவீதம் போலி கணக்கு என்பது தற்போது தெரியவந்துள்ளது. லண்டனில், ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதள பொறியாளர்கள் குழு ஒன்று இது குறித்து ஆய்வு  செய்ததில் மோடியின் டிவிட்டர் கணக்கில் 50 சதவீதம் போலிப் பயனா ளர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள்.
அதாவது அவரது கணக்கில் 46 சதவீதம் போலி கணக்கும், 41 சதவீதம் பேர் பயன்படுத்தப்படாத கணக்கா ளர்கள் எனவும் கூறியுள்ளனர். மீதமுள்ள 13 சதவீதம்  பேர் மட்டுமே உண்மையாக பின் தொடர்பவர்கள் என்பது தெரிகிறது.
மோடியின் டிவிட்டர் கணக்கு 2010 ஆம்  ஆண்டு வரை ஒரு லட்சம் பேர் இணைந்திருந்தனர். 2011 ஆம் ஆண்டு முடிவில் நான்கு இலட்சம் பேர் இணைந்திருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களில் மட்டுமே அதிகமானவர்கள்  இணைந்திருப்ப தாக காணப்பட்டது. இப்போது அது போலித்தனமாக காட்டப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லுவது போல பா.ஜ.க. முன்னணி தலைவராக திகழும் மோடியின் மோசடி ஒட்டு மொத்த பா.ஜ.க.வுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்!
மகா மகா யோக்கியர் - நாணயமான வர் திருவாளர் பரிசுத்தம் என்பது போன்ற ஒரு தோற்றத்தையும் உரு வாக்க பல திட்டங்களைக் கையில் வைத்துள்ளார்.
இவரது புகழ் உலகெங்கும் பரவி யிருப்பது போல பிரச்சாரம் செய் கின்றனர்.
அதுவும் சமீபத்தில் சாயம் வெளுத்துப் போய்விட்டது.
அமெரிக்காவின் சிகாகோவிலி ருந்து தொழில் அதிபர்கள் சிலரும் எம்.பி.க்கள் சிலரும் மோடியைச் சந்திக்க வந்தனர் - அழைப்புக் கொடுத் தனர் என்று ஒரு கதையைக் கட்டி விட்டனர்.
உண்மை என்னவென்றால் மோடியைச் சந்திக்க வந்தவர்கள் அல்லர் அவர்கள். சுற்றுலாப் பயணி களாக வந்தவர்கள் அதற்காக அவர்களிடமிருந்து பணமும் வசூலிக் கப்பட்டது. இந்த விவரங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன.
அமெரிக்கா தொடர்ந்து மோடிக்கு விசா அளிக்க மறுத்து வருகிறது, பிரிட்டனும் அந்த நிலையில் தான் இருக்கிறது.
உள்ளூரிலேயே டெல்லி பல்கலைக் கழகத்தில் பேசச் சென்றபோது மாண வர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்தனர். கொல்கத்தாவில் தொழில் அதிபர் கூட் டத்தில் கலந்து கொள்ள செல்கிறார். குஜராத் முதல் அமைச்சர் மோடி என்று முதல் நாள் செய்தி வருகிறது.
அந்த இடத்தில் தொழில் அதிபர் கள் கூட்டத்தை நடத்திட மம்தா அரசு அனுமதி மறுத்தது என்ற செய்தி வருகிறது.
உள்ளூரிலேயே விலை போகாத ஒன்றாக ஆகி விட்டார்.
இதுதான் உண்மையான நிலை ஊழலை ஒழிப்பதில் உத்தமர் என்று சொல்லுகிறார்களே அவர்களை நோக்கி ஒரே ஒரு கேள்வி மாநிலத்தில் ஊழலை ஒழிப்பதற்காக அமைக்கப்படும் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கு ஏன் மோடி தயங்க வேண்டும்?
அதற்குரிய நீதிபதியை நியமிப்பதில் ஏன் கால தாமதம் செய்ய வேண்டும்?.
நீதிபதியை நியமிக்க மோடி முன்வராத நிலையில் ஆளுநரே அதற்கான நீதிபதியை நியமித்தபோது அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற வர்தானே இந்த யோக்கிய சிகா மணியான குஜராத் முதல் அமைச்சர் மோடி! அதிலும் தோல்வியை வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பதுதான் பரிதாபம்!
இப்பொழுது தனக்குத்தானே ஒரு லோக் அயுக்தாவை ஏற்படுத்திக் கொண்டார்.
குஜராத்
குஜராத் சட்டசபையில், ஊழல் களை கண்காணிக்கும் அமைப்பான, புதிய லோக் ஆயுக்தா மசோதா, காங் கிரஸ் கட்சியின் பலத்த எதிர்ப்புக் கிடையே நிறைவேறியது.
குஜராத்தில், முதல்வர் தலைமை யிலான தேர்வுக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான லோக் ஆயுக்தா சட்ட திருத்த மசோதா, ஆளுநர் கமலா பெனிவாலின் பரிந் துரைக்காக, மாநில அரசு, கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், அனுப்பியது. ஆனால், இதனை நிராகரித்த ஆளு நர், லோக் ஆயுக்தாவின் தலைவராக, நீதிபதி மேத்தாவை நியமித்தார்.
இதனை, குஜராத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவையும் உறுதிபடுத்தின. லோக் ஆயுக்தா நீதிபதி தீர்ப்பே இறுதியானது என, உச்சநீதிமன்றமும் கூறியது. இந் நிலையில், மாநில முதல்வர் தலைமையிலான தேர்வுக் குழுவிற்கு அதிகாரமளிக்கும், சர்ச்சைக்குரிய புதிய லோக் ஆயுக்தா மசோதா, குஜராத் சட்டசபையில்,  பலத்த எதிர்ப்புக் கிடையே நிறைவேறியது.
தற்போதுள்ள லோக் ஆயுக்தா சட்டம் 1986இன் படி, மாநில ஆளுநர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரது அதிகாரங்களைக் குறைத்து, நிறை வேற்றப்பட்டுள்ள இந்த மசோதா வலுவற்ற ஒரு அமைப்பாகும் என, சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரி வித்துள்ளனர்.
குஜராத் மாநில எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா கூறுகை யில், ""மாநில அரசின் ஊழல்களை, நீதிபதி மேத்தா அம்பலப்படுத்தி விடுவார் என்று நரேந்திர மோடி தலைமையிலான அரசு பயப்படுகிறது,'' என்றார். இந்தியாவுக்குப் பிரதமராகத் துடிக்கும் பேர் வழியின் முகவிலாசம் இதுதான்.
இப்பொழுது சி.ஏ.ஜி. ஒரு புதுக்கரடியை அவிழ்த்து விட்டுள்ளது. மோடி ஆட்சியில் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்பதுதான் அந்தக் கரடி!
அந்தோ பாவம் நரேந்திர மோடி!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Monday, January 7, 2013

கபடி - பல்லாங்குழி விளையாட்டா?


கேள்வி: உலகக் கோப்பை கபடிப் போட்டி யில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா மூன் றாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளதே?
பதில்: ரொம்ப மகிழ்ச்சி. இதுபோல எப் படியாவது கஷ்டப்பட்டு பெண்கள் போட்டியில் பல்லாங்குழி ஆட்டத் தைச் சேர்த்து விட்டோ மேயானால், அதிலும்கூட இந்தியாதான் முதலிடத் தில் வரும்; சேம்பியன் பட்டத்தைப் பெறும். நாம் மீண்டும் சந்தோஷப்பட் டுக் கொள்ளலாம். (துக்ளக் 9.1.2013 பக்கம் 29)
எதிலும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பார்வையா? இதுதான் தி.க.வின் வேலையா என்று சில அதிமேதாவி ஆசாமிகள் அவசரக் குடுக் கையாக பேசுவார்கள்.
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புப் போதையில் அகப்பட்டவர்கள் திரு சோவின் இந்தப் பதிலுக்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்?
கபடி - என்பது பல்லாங் குழி விளையாட்டா?  அப்படிச் சொல்லுகிற கூட்டத்தைச் சேர்ந்த பார்ப்பனர்களில் ஒரே ஒருவரை கபடி ஆடச் சொல்லுங்கள் பார்ப்போம் - பல்லாங்குழியா? பல் காணாமல் போகும் விளை யாட்டா என்பது அப்பொ ழுது தெரிந்து விடுமே!
முட்டாள்கள் விளை யாடுகிறார்கள் - 11 ஆயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று கிரிக்கெட்டைப் பற்றி அறி ஞர் பெர்னாட்ஷா சொன் னதுண்டு.
ஒரே நேரத்தில் இருவர் (விக்கெட் கீப்பரைச் சேர்த்து மூவர் என்றும் வைத்துக்  கொள்ளலாம்) விளையாடுவர்; மற்றவர் களோ மைதானத்தில் பேன் குத்திக் கொண்டு இருப் பார்கள் - இந்த விளை யாட்டுக்குப் பெயர்தான் கிரிக்கெட் (டு).
கபடியோ, கால் பந்தோ அப்படியல்ல; மைதானத் தில் உள்ள அத்தனைப் பேரும்  ஆவேசத்துடன் அதி சுறுசுறுப்புடன் விளை யாடியே தீர வேண்டிய வர்கள். கிரிக்கெட் சோம் பேறிகளின் கூடாரமாக இருப்பதால்தான் அந்த விளையாட்டைப் பார்ப் பனர்கள் தேடிக் கொண்டு விடுகிறார்கள். அதுவும் இல்லாமல் அது பணம் காய்ச்சி மரம். கொட்டிக் கொண்டே இருக்குமே!
தேர்வுக் குழுவிலும் பார்ப்பனர்கள் (பி.சி.சி.அய்) என்பதால் தோளைத் தட் டிக் கொடுத்து, பூணூலைத் தடவிப் பார்த்து தேர்வு செய்வார்கள்.
பல்லாங் குழியோடு கபடியை ஒப்பிட்டுச் சொல் கிறாரே திருவாளர் சோ. இதுவரை ஒரே ஒரு பார்ப்பனர் சடுகுடு பக்கம் தலை வைத்துப் படுத்ததாக எடுத்துக்காட்டுக்குகூடச் சொல்ல முடியுமா?
நாலு பேர் அமுக்கிப் பிடிப்பான் ஆவேசமாக; புளியோதரைகள் தாக்குப் பிடிக்குமா? ஏனிந்த வீண் வம்பு? நமக்குத்தான் இருக் கவே இருக்கு - கிரிக்கெட் என்னும் சோம்பேறி விளையாட்டு - பணம் கொட்டும் பிழைப்புக்கு வசதி இருக்கும்போது கால் முறியுமோ, கை முறியுமோ, விலா எலும்பு முறியுமோ என்னும் ஆபத்தான விளை யாட்டை வரித்துக் கொள்ள அவாள் என்ன பைத்தியக் காரர்களா?
ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண் டுல்கர், ராகுல் டிராவிட், சவ்ரவ் கங்குலி, ஜவகர் சிறீநாத், வெங்கடேஷ் பிரசாத், அணில்கும்ளே, வி.வி.எஸ். இலட்சுமணன், கிருஷ்ணமாச்சாரி சிறீகாந்த், சுனில் ஜோஷி, மனோஜ் பிரபாகர், அஜீத் அகர்கர், ரோஹித் சர்மா, இஷாத் சர்மா,  சிறீகாந்த்,   ரவீந்திர அஷ்வின், சடகோ பன் ரமேஷ், நிலேஷ் குல் கர்னி, சிவராமகிருஷ்ணன், வெங்சர்க்கார் டபுள்யூ வி. ராமன் = இப்படி ஒரு நீண்ட அக்கிரகாரப் பட்டியல். இவர்களையடுத்து இவர் களின் பிள்ளைகளும் களத்தில் இறக்கப்படுவதும் உண்டு. இதில் என்ன வேடிக்கை தெரியுமா? இவ்வளவுப் பார்ப்பனர்கள் இருந்தும் ஒரு கபில்தேவ், ஒரு எம்.எஸ். தோனி என்று பார்ப்பனர் அல்லாதார் (ஏதோ விதி விலக்காக இவர்கள்) அணிக்குத் தலைமையேற்றபோதுதான் உலகக் கோப்பை இந்தியா வுக்குக் கிடைத்தது!
(எம்.எஸ். தோனியை அணித் தலைவர் பதவி யிலிருந்து ஒழித்துக் கட்ட குழிபறிக்கும் வேலையில் பார்ப்பன ஊடகங்கள் இறங்கியுள் ளன).
அணி வெற்றி பெற வேண்டும் என்பதைவிட தன்னலத்தின், அடிப் படையில் விளையாடி பரிசுகளைத் தட்டிச் செல் லுவதும் பார்ப்பனர் களுக்கே உரித்தான ஒன்றாகும்.
விசுவநாதன், ஆனந்த் என்ற பார்ப்பனர்   செஸ்லில் வெற்றி பெற்றால் சோ கூட்டத் திற்கு இனிக்கிறது; நம் பெண்கள் பல்லாங்குழி விளையாடினால் வேர்க் கிறதோ! அதில்கூட பெண்களை மட்டம் தட்டும் மனுதர்மப் புத்தி.
இந்த நுணுக்கங் களை எல்லாம் ஈரோட் டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் துல்லிய மாக விளங்கும்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Saturday, December 29, 2012

தகுதி - திறமை...?


எதைக் கொடுத்தாலும் சூத் திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்று கூறுவதுதான் மனுதர்மத்தின் அடிப்படைத் தத்துவம் ஆகும்.
எனவே அதனை அடியொற்றி நடக் கின்ற பார்ப்பனர்கள் சூத்திர மக் களுக்கு கல்வியைக் கொடுக்காமல் பல்லாண்டு காலமாக அவர்களை ஏய்த்து, அடக்கி, ஒடுக்கி கோலோச்சி வந்தனர்.
இத்தகைய அநீதியைக் கண்ட பெரியார் சிங்கமெனச் சிலிர்த்தெழுந்து பாமர மக்களிடையே கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தை யும், அதன் இன்றியமையாத் தேவை யையும் எடுத்துக் கூறி பாமர மக்களை சிந்திக்கத் தூண்டினார்.
அதன் பயனாய் விதியை நினைத்து, வெந்ததைத் தின்று வீதியில் உறங்கிக் கிடந்த பாமர மக்கள் மெல்ல மெல்ல சிந்திக்கத் தொடங்கினர். இதன்மூலம், பாமர மக்கள் மத்தியில் எழுச்சியும், நம்பிக்கையும் ஏற்பட்டு புதிய இரத்தம் பாய்ச்சியது போன்ற ஓர் உணர்வைப் பெற்றனர்.
உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள், மற்ற நாட்டு மக்களைப் போன்று நம் நாட்டு மக்களும் கல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்று இரவு - பகலாக சிந்தித்ததன் விளைவால்;
தந்தை பெரியார் காரணமாகவும், கல்வி வள்ளல் காமராசர் காரியமாக வும் இருந்து செயல்பட்டதன் பயனாய் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை பள்ளிகள் திறந்து கல்வி நீரோடையை வெள்ளம் போல் பாய்ந்தோடச் செய் தனர்.
இவ்விரு தலைவர்களின் தன்னல மற்ற, தளராத உழைப்பின் பயனாய் பாமர மக்கள் கல்வியின் அவசியத்தை யும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க ஆர்வமுடன் முன்வந்தனர்.
ஆண்டாண்டு காலமாக இன எதிரி களால் வஞ்சிக்கப்பட்டு கல்வி - வேலை வாய்ப்பின்றி முடங்கி முடமாகிப் போன பாமர மககள், மேற்கண்ட அப்பழுக்கற்ற இரு பெரும் தலைவர்களின் பெரு முயற்சியால் கல்வியின் பயனை நுகரத் தொடங்கி அதன் மூலம் தற்போதுதான் வேலை வாய்ப்பினை எட்டியுள்ளனர்.
அதற்குள்ளாக, நாட்டின் பெரும் பான்மை மக்களாக உள்ள ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அங்கம் வகிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள், எப்படியாவது இதனை தடுத்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தகுதி - திறமை பற்றி கூப்பாடு போட ஆரம்பித்து விட்டனர்.
ஆம், அண்மையில் நாளேட்டினை நோக்கியபோது (19.11.2012) ஆசிரியர் பணிக்கு தகுதிதான் அடிப்படை! எனும் தலையங்கத்தை கண்ணுற்றேன்.
அத்தலையங்கத்தின்படி, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதித் தேர்வுதான் திறமையைத் தீர்மானிக்கும் அளவுகோல் என்றால்; பட்டப் படிப்பு முடித்து அதன் பிறகு ஆசிரியர் பணிக்காக பயிற்சி மேற் கொண்ட மாணவர்களுக்கு கல்வித்துறை சான்றிதழ் வழங்கியது எதற்காக?
தகுதித் தேர்வு தான் அடிப்படை எனில், ஆசிரியர் பணிக்கென்று படித்த மாணாக்கர்களுக்கும், சான்றிதழ் வழங்கிய கல்வித் துறைக்கும் தகுதி இல்லை என்று பொருளா? கல்வித் துறை, ஆசிரியர் பணிக் கென்று தனியாக பட்டயப் பயிற்சி அளித்து அதில் தேர்ச்சி பெற்றவர்களைத் தானே பதிவு மூப்பு மூலம் இத்தனை ஆண்டுகாலம் ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுத்தது.
பிறகு, தற்போது எங்கிருந்து குதித் தது மேலும் ஓர் தகுதித் தேர்வு? பட்டப் படிப்பும் அதனைத் தொடர்ந்து ஆசிரியர் பட்டயப் பயிற்சியும் (பி.எட்) முடித்து பத்து அல்லது பதினைந்து வருடங்கள் ஆன நிலையில் தகுதித் தேர்வு என்று ஒன்றை அவர்கள்மீது திணித்தால், அதில் அவர்களால் எப்படி தேர்ச்சி பெற இயலும்?
சமூக நீதிக் கொள்கையை நேரடியாக எதிர்க்க முடியாத இன எதிரிகள், மறைமுகமாக தகுதித் தேர்வு என்று ஒன்றை திணிப்பதன் மூலம் சமூகநீதியை சவக்குழிக்கு அனுப்புவதற்கான சதி வலையை சன்னமாகப் பின்னுகின்ற வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
சமூகநீதி அடிப்படையில் ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படாமல், சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் நோக்கத்தில் இத்தகைய தகுதித் தேர்வினை நடத்து வது என்பது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நல னுக்கு எதிராக நடத்தப்படும் அநீதி அல்லாமல் வேறு என்ன? என்று சமூக நலனில் அக்கறை கொண்ட சமூகநீதிச் சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் ஆகியோர் கேள்வி எழுப்புகின்றனர்.
தகுதி - திறமை என்பது ஒரு மோசடிச் சொல் என்று கல்வி வள்ளல் காமராசர் கூறியதில், எவ்வளவு பொருள் பொதிந்த உண்மை அடங்கியிருக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
பகுத்தறிவுப் பகலவன் - தந்தை பெரியாரின் பெரு முயற்சியால் கிடைக்கப் பெற்ற இடஒதுக்கீட்டின் பயனை, நாட்டின் பெரும்பான்மை மக்களாக உள்ள ஒடுக் கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் எந்த வகையிலும் அனுபவித்து விடக் கூடாது என்கின்ற நயவஞ்சக நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட இத்தகைய தகுதித் தேர்வினை அனைத்து தரப்பு மக்களும் கடுமை யாக எதிர்க்க முற்பட்டுள்ளனர்!
மேலும், இவை பெரும்பான்மை மக் களுக்கு எதிரானதும், விரோதமான தும் ஆகும் என்பதால் முற்போக்கு சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், பகுத்தறிவாளர்கள், சமூகநல ஆர்வலர் கள், ஆசிரியர் சங்கங்கள், மகளிர் நல அமைப்பினர் ஆகியோர் மத்தியில் தகுதித் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுக் கப்படுபவர்கள் ஒழுக்கமுள்ளவர் களாக, அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர் களாக, மனிதநேயம் மிக்கவர்களாக, கட்டுப்பாடு உடையவராக இருந்தாலே ஆசிரியர் பணி என்பது அறப்பணி  யாக அமையும் என்பதே பெரும் பான்மை மக்களின் கருத்தாகவும், எண்ணமாகவும் உள்ளது.
ஆதலால், சமூகநீதிக்கு எதிராக வும், விரோதமாகவும் எந்த அரசு செயல்பட்டாலும் அதனை தமிழ் மண் ஏற்றுக் கொள்ளாது - அனுமதிக்காது என்பதை எடுத்துக்காட்டும் வகை யிலும்; மேலும் தகுதித் தேர்வால் ஏற்படுகின்ற இன்னல்களையும், அதில் அடங்கியுள்ள சூட்சுமத்தையும், அத னால் பெரும்பான்மை மக்களுக்கு எதி ராக இழைக்கப்படுகின்ற அநீதிகளை யும் விளக்கிடும் வகையில் இளைஞர் களும், மாணவர்களும் ஒன்றிணைநது நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை உள்ள மக்களிடையே மாபெரும் பிரச்சாரப் பயணத்தை துவக்கிட ஆயத்தமாகி விட்டனர்!
ஆகவே, தமிழக அரசு சமூக நீதிக் கண்ணோட்டத்தோடு இவ்விடயத்தில் சிறப்புக் கவனம் செலுத்தி, ஆசிரியர் பணிக்காக நடத்தப்படுகின்ற தகுதித் தேர்வினை ரத்து செய்து பெரும்  பான்மை மக்களாக உள்ள ஒடுக் கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகோல ஆவன செய்ய வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் கனிவான வேண்டுகோளாகும்.
- சீ. இலட்சுமிபதி,
தாம்பரம், சென்னை - 45

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...