Showing posts with label தலித்துகள். Show all posts
Showing posts with label தலித்துகள். Show all posts

Tuesday, May 23, 2017

உ.பி.யில் சாமியார் ஆளும் பி.ஜே.பி. ஆட்சி இதுதான்! தாழ்த்தப் பட்டோரைத் தாக்கிய உயர்ஜாதிக் கும்பல்!

டில்லியை கிடுகிடுக்க வைத்த தாழ்த்தப்பட்டோர் போராட்டம்!
50 ஆயிரம் தலித்துகள் நீலத் தொப்பியணிந்து போர் முழக்கம்!

புதுடில்லி, மே22 உத்தரப்பிரதேச மாநிலத்தில் சகரன்பூரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடைபெற்றவன்முறைகளைக்கண்டித்துடில்லி ஜந்தர்மந்தரில்நேற்று(21.5.2017)நடைபெற்ற மாபெரும் கண்டனக் கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட வர்கள், இளைஞர்கள், செயற்பாட்டாளர்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
தாழ்த்தப்பட்டவர்களுக்குஎதிரான வன்முறைகளைக் கண்டித்து தாழ்த்தப்பட்டவர் களின் உரிமைகளுககாகப் போராடி வருகின்ற  பீம் ஆர்மி  எனும் தாழ்த்தப்பட்டோருக்கான தொண்டறப்படையின் சார்பில் கண்டன விளக் கப் பொதுக்கூட்டம் டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்றது.
டில்லியில் கண்டன ஊர்வலம் நடத்த டில்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
இளம் வழக்குரைஞர் சந்திரசேகர் தலைமையில் உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடை பெற்ற கண்டனப் போராட்டத்தின் விளக்கக் கூட்டத்தில் பீம் ஆர்மியின் தாழ்த்தப்பட்டவர்கள் ஒற்றுமைப்பணி என்கிற திட்டத்தின்கீழ் நீல உடை அணிந்து ஏராளமானவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக திரண்டிருந்தார்கள்.
டில்லி ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும்  ஜெய் பீம்  ஒலி முழக்கம் நிரம்பியிருந்தது. மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் டில்லி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இளைஞர்கள் தலித் சங்கர்ஷ் மோர்ச்சா, யுவ சக்தி தள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலிருந்து திரண்டிருந்தார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் சகரன்பூர் பகுதி யில் உயர் ஜாதி பார்ப்பனர்களான தாக்கூர் வகுப்பைச் சேர்ந்தவரான மகாராணா பிரதாப் பிறந்த நாள்விழா கொண்டாடுவதாகக் கூறி, அப்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டனர்.
5.5.2017அன்றுவன்முறையின்போது,தாக்கூர் வகுப்பைச் சேர்ந்த கும்பல் தாழ்த்தப்பட்டவர்
களின்25வீடுகளைதீக்கிரையாக்கியது.தாழ்த்தப்பட்டவர்கள் 15 பேர் படுகாயம் அடைந் தார்கள்.9.5.2017அன்றுகாவல்துறைக்கும்,போராட் டக்காரர்களுககும் இடையே மோதல் வெடித்தது.
சந்திரசேகர் இதுகுறித்து பேசுகையில், ஒடுக்கு முறைக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். ஆயிரக்கணக்கில் கிளர்ந்தெழுவோம். ஆர்.எஸ்.எஸ்-. இந்து வலது சாரிகள் நூற்றாண்டுகளாக எங்களை ஒடுக்கி வருகிறார்கள். ஆனாலும், நாங்கள் பலவீனமடைந்துவிடவில்லை.
பாதிப்புக்குள்ளாகின்ற தாழ்த்தப்பட்டவர்கள் தொலைபேசி, வாட்ஸ்அப் சமூக ஊடகங்களின் மூலமாக ஒடுக்குமுறைகள் குறித்து வெளிப்படுத்த வேண்டும்என்றும்கூறியுள்ளோம்என்று பேசினார்.
உத்தரபிரதேசம் மாநிலம், சகரன்பூரில் மே 5 ஆம் தேதி உயர் சமூகத்தினரான தாக்குர் மக்கள் நடத்திய பேரணியின் போது ஒலிபெருக்கி மிகவும் சத்தமாக ஒலிபரப்பப்பட்டதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதி தலித் சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, வன்முறையாக வெடித்தது.
இந்த வன்முறை சம்பவத்தில் ஒருவர் பலியானார். 15-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சகரன்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சகரன்பூர் நகரில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து தலைநகர் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தலித் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட் டத்தில் சுமார் 50 ஆயிரம் தலித்கள் பங்கேற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலையில் நீல நிற தொப்பிகளை அணிந்து இருந்தனர். பீம் படை என்ற அமைப்பின்கீழ் இந்த போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தாக்குதல் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவா ரணம் வழங்கவேண்டும், தாக்குதலில் ஈடு பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...