Showing posts with label அறிஞர்கள். Show all posts
Showing posts with label அறிஞர்கள். Show all posts

Monday, February 16, 2015

இங்கர்சால் கூறுகிறார்...



போப்பாண்டவர்களை விட, குருமார்களைவிட, பாதிரிகளைவிட, அர்ச்ச கர்களைவிட, ஆண்டவ னின் அடியார்களைவிட குண்டூசியைக் கண்டுபிடித் தவன் ஓராயிரம் மடங்கு மக்களுக்கு நன்மை புரிந் திருக்கிறான்.

மத ஸ்தாபனங்களைக் காட்டிலும், அதனைத் தோற்றுவித்த மூல கர்த்தாக்களைக் காட்டிலும், சித்தாந்தங்களை சிருஷ்டித்தவர்களைக் காட்டிலும் சாமியார்களைக் காட்டிலும், சாதாரண தீக் குச்சியைக் கண்டுபிடித்தவன் மக்கள் சமூகத்தின் சுக வாழ்விற்கும், சவுகரியத்திற்கும் எவ்வளவோ நன்மை புரிந்தவனாகிறான்.

- கடவுள்கள் - கோயில்கள் நூல்
க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

சாக்ரட்டீஸின் பொன்மொழிகள்



தங்கத்தைக் கண்டுபிடிக்கச் சுரங்கத்திற்குள் நுழைகிறவன் மரியாதையை பார்த்தால் முடியுமா? தங்கத்தை விட மேலான பொருளை அதாவது நீதியைத் தேடி கண்டுபிடிக்க நாங்கள் புறப்பட்டிருக்கிறோம். இதில் மரியாதையை பார்த்துக் கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடு வோமா?
 
***************
 
நீதிக்கு நான் மிக உயர்ந்த ஸ்தானம் கொடுக்கிறேன். அதாவது எந்த விஷ யத்தை அந்த விஷயத்திற்காகவும் அதன் விளைவு களுக்காகவும் நேசிக்கிறோமோ அந்த மாதிரியான விஷயங்களில் ஒன்றாக நீதியை நான் கருதுகிறேன்.
 
***************
 
ஒரு மனிதனுக்கு எந்தத் தொழிலைச் செய்ய இயலுகையிலேயே ஒரு திறமை இருக்கிறதோ அந்தத் தொழிலை மட்டும் அவன் செய்து கொண்டு போனால் நல்லது.
 
***************
 
விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களை சிருஷ்டித்து அந்தக் கடவுள்களின் கதைகளைச் சிறுவர் களுக்கு சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு விடுகிறார்கள் தெரியுமா? கடவுளர்களே  பல குற்றங்களை செய்திருக்கிறபோது நாமும்தாம் செய்தாலென்ன! என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.

இந்த மாதிரியான கதைகளை நாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தவிர, ஒரு தெய்வத்திற்கு விரோதமான மற்றொரு தெய்வம் சதி செய்வதாகவோ, யுத்தம் செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக் கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது.

மனிதர்கள் ஒருவரை யொரு வர் நேசிக்க வேண்டுமென்றும், ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இதை போன்ற நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.
 
***************
 
அதிகமான செல்வமோ அதிகமான வறுமையோ தங்கள் ராஜ்யத்திற்குள் வரவொட்டாதபடி அரசர்கள் பாதுகாக்க வேண்டும். அதிக செல்வத்தினால் ஆடம்பரத் தன்மையில் சோம்பேறித்தனமும் உண்டாகும். அதிக வறுமையினால் புரட்சியும், இழிதகைமையும், துரோகமும் ஏற்படும்.


Thursday, December 6, 2012

தமிழை, தமிழனை நேசித்த ஒரே வடநாட்டுத் தலைவர்


அரசியலில் நேர்மையையும் நியா யத்தையும் கடைப்பிடிப்பவர்களுக்குச் சோதனைகள் அதிகமாகவே இருக்கும். வி.பி.சிங்கிற்கும் அப்படித்தான். ஆதர வளித்துவந்த பாரதிய ஜனதா கட்சி தரப்பிலிருந்து நெருக்கடிகள், துணைப் பிரதமர் தேவிலால், சந்திரசேகர், சுப்ர மணியசாமி போன்றவர்களும் வி.பி. சிங் கிற்கு நெருக்கடிகளை உண்டாக்குபவர் களாக இருந்தார்கள். எத்தனை குறுக் கீடுகள் ஏற்பட்டாலும் அவர் அது பற்றிக் கலங்காதவராகவே செயல்பட்டார்.
எது நியாயம் என நினைத்தாரோ அதனைச் செயல்படுத்துவதில் உறுதியாகவே இருந்தார். உள்கட்சி நெருக்கடிகள் அதி கரித்துக் கொண்டிருந்த நேரத்தில் மண்டல் ஆணையத்தின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவேன் என்ற உறுதியை மேற்கொண்டார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரி அவர் நிகழ்த்திய உரையில் சமூக நீதியின் அவசியத்தை அழுத்தமாக வலியுறுத் தினார். அதனை வலியுறுத்திப் பேசும் போதெல்லாம் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகியோரது பெயர்களை உச்சரித்தார்.
தன் அரசைக் கவிழ்க்க முயல்வது ஏன் என்பதை விளக்கிப் பேசிய அவர், மண்டல் பரிந்துரையை அமல்படுத்த முயன்றது தான் எல்லாவற்றிற்குமே அடிப்படைக் காரணம். அதை நேரடியாக எதிர்க்க முடியாத சக்திகள் வேறு காரணங்களைக் காட்டி திரை மறைவிலிருந்து ஆட்சியைக் கவிழ்க்கச் செயல்பட்டனர் என்றார். எனது கால்கள் உடைக்கப்பட்டிருக் கலாம். ஆனால் அடைய வேண்டிய இலட் சியத்தை நான் அடைந்துவிட்டேன். மரியாதையோடு ஆட்சியை விட்டு நாங்கள் வெளியேறுகிறோம்.
அதற்காகப் பெருமைப்படுகிறோம். அரசியல் நாள்காட்டிகளில் கடைசி தேதி என்று எதுவும் கிடையாது என்று உறுதியான குரலில் தெரிவித்துவிட்டு தோல்வியைத் துணிச்சலாக எதிர்கொண்டார். பிரதமர் பதவியைத் துறந்ததுமே தனக்கு அளிக் கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும்படி தெரிவித்த கண்ணியமான மனிதர் வி.பி.சிங். அவரது அரசைக் கவிழ்ப்பதில் முக்கிய பங்காற்றியவர் சந்திரசேகர்.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எம்.பி.க் களை மட்டுமே தன்வசம் வைத்திருந்த அவரை காங்கிரஸ் கட்சி ஆதரித்ததால் சந்திரசேகரை பிரதமர் பொறுப்பேற்க அழைத்தார் அன்றைய குடியரசுத் தலை வர் ஆர். வெங்கட்ராமன். தனது ஆட்சி யைக் கவிழ்த்துவிட்டு சந்திரசேகர் பிரதம ராகப் பதவியேற்றார் என்றபோதும் அது பற்றிய அரசியல் காழ்ப்புணர்வு ஏதுமின்றி சந்திரசேகரின் பதவியேற்பு விழாவில் தம் மனைவி சீதாசிங்குடன் கலந்து கொண்ட பண்பாளர் வி.பி.சிங். தமிழகத்தின் பல முக்கிய நகரங்களுக் கும் கலைஞருடன் சுற்றுப் பயணம் மேற் கொண்டார் வி.பி.சிங். மண்டல் ஆணை யத்தின் அறிக்கையை அமல்படுத்திய வெற்றிவீரராக அவரைப் பொதுமக்கள் திரண்டு வரவேற்றனர்.
எந்த ஊருக்குச் சென்றாலும் வழியெங்கும் கூட்டம் நிறைந் திருந்தது. அவரை வரவேற்று ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் தன் இனிஷியல் ஆங்கிலத்திலும் சிங் என்பது தமிழிலும் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்த வி.பி.சிங் காரில் பயணித்தபடியே அதை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதிப் பழகினார். தமிழ்மொழியும் தமிழர்களின் அன்பும் அவரைக் கவர்ந்தன. தன் கவிதைகள் தமிழில் வெளிவரு வது பற்றிக் குறிப்பிட்டு எழுதியுள்ள வி.பி.சிங் தமிழக மக்கள் என்மீது நிறைந்த பாசத்தைப் பொழிந்துள்ளனர்.
அவர்கள் எனக்குக் காட்டும் பாசவுணர்வுக்கு எந்தவொரு பொருளும் மாற்றுப் பரிசாக இருக்க முடியாது. ஆகையால் என்னுடைய ஆழ்ந்த உணர்வுகளை அவர்கள் முன்பு வைக்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரி வித்தார். அதோடு தனது தமிழாக்க கவிதை நூலிலிருந்து கிடைக்கும் வரு மானத்தை திருச்சியிலுள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அளித்துவிடு மாறு தெரிவித்தார் வி.பி.சிங். பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் பல மாநிலங் களில் கலவரங்கள் வெடித்தன.
இத்தகைய தொடர் வன்முறைகளால் இந்தியா மதவெறிக்காடாக மாறிவிடும் என அச்சம் கொண்டு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவரை எதிர்த்து உண்ணும்விரதம் இருந்தனர் மதவாதிகள். தனது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதால் தண்ணீர் கூடக் குடிப்பதை நிறுத்திவிட்டார் வி.பி.சிங். அதனால் சிறுநீர் வெளியேறுவது நின்றது. இதனால் அவரது இரண்டு சிறுநீரகங் களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப் பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வி.பி.சிங்கின் ஆட்சியைப் பறித்த மதவாதம் அவரது சிறுநீரகங்களையும் பறித்துவிட்டது. வி.பி.சிங்கிற்கு சிறுநீரகக் கோளாறு என்றதும் துடித்துப் போயினர் தமிழக மக்கள். அவருக்கு மாற்று சிறு நீரகம் பொருத்துவதற்காகத் தங்களின் சிறுநீரகத்தைத் தர முன்வந்தனர் ஒரத்த நாட்டைச் சேர்ந்த திராவிடர் கழக இளை ஞர்கள். ஆனால் வி.பி.சிங் வாழவேண்டிய இளைஞர்களின் சிறுநீரகத்தைப் பெற்று என் ஆயுளை நீட்டித்துக்கொள்ள விரும்ப வில்லை.
என்மீது அன்பு கொண்டு சிறு நீரகம் தர முன்வந்த இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொன்னதுடன் அடுத்த பிறவி என ஒன் றிருந்தால் நான் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன் என்றார் இதயம் நெகிழ. 15 ஆண்டுகளாக அவரை வாட்டி வதைத்த நோய்கள் உச்சக்கட்டத்தை எட்டின. 2008 நவம்பர் 27ஆம் நாள் (இன்று) தமது (77 வயது) இறுதி மூச்சு வரை சமூகநீதியையும் மதச்சார்பின்மை யையும் இறுகப் பற்றியிருந்த வி. பி. சிங்கின் உயிர் பிரிந்தது. அவர் கொள்கையும் எண்ணமும் வென்றது. (நன்றி: கவின்மீடியா)


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அம்பேத்கர் தழுவிய பவுத்தம் எது? - கி.வீரமணி


அம்பேத்கர் தழுவிய பவுத்தம் எது?     - கி.வீரமணி
நமது நாட்டில் புத்தரையே கடவுளாக்கி விட்டார்கள். புத்த நெறியைப்பற்றிச் சொல்லும் பொழுது என்ன சொன்னார்கள்?  முதலில் `தரவாடா என்ற ஒரு நெறி. தரவாடா என்றால் ஹீனாயானம். அதாவது சிறிய  வண்டி. பெரிய வண்டி என்பது மாதிரி வைத்துக்கொள்ளுங்கள். மற்றொன்று மகாயானம். கடவுள் அவதாரக் கதையெல்லாம் இதற்குள் நடுவில் சேர்ந்தன. கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கொள்கைகள் மாறுபட்டன. திரிபுவாதங்களைச் செய்தார்கள். மூன்றாவது `வஜ்ராயானா. அம்பேத்கர் அவர்கள் தழுவிய நெறி இருக்கிறதே அது இந்த மூன்றும் அல்ல.
அதற்கு மாறாக அவர்கள் அற்புதமான ஒரு பெயரைச் சொன்னார்கள். `நவயானா என்று சொல்லக்கூடிய  அளவுக்கு அவர்கள்  புதுமையைப் பயன்படுத்தினார்கள். இந்தக் கருத்துதான் மிக மிக முக்கியம் என்பதை அவர்கள் தெளிவாகவே சொன்னார்கள்.
புத்த நெறியிலே பார்ப்பனீயம் ஊடுருவல்
பகுத்தறிவுக்கு உடன்பாடான சிந்தனையை எடுத்து  வைத்தார். இந்த மாதிரியான கருத்து களுக்குத்தான் அம்பேத்கர் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.  `தீட்க்ஷா பூமி என்பதிலே அவர்கள் போய்ச் சேருகிறார்கள். 1956 அக்டோபரில் போய்ச் சேருகிறார்கள். புத்த நெறிக்குப் போக வேண்டும் என்று அம்பேத்கர் அவர்கள் நினைக் கின்றார். ஆனால், புத்த நெறியிலே பார்ப்பனீயம் ஊடுருவியிருக்கிறது என்பது அவருக்கு ஏற்பட்ட  சங்கடம்.
கல்கத்தாவில் மகாபோதி சங்கத்தில் (சொசைட்டியில்)  உள்ள புத்த பிக்குகள் மூலம்தான் புத்த நெறிக்குச் செல்ல முடியும் என்ற சூழ்நிலை. அங்கு இருக்கிற பெரிய புத்த பிக்குகள் மூலமாகத் தீட்சை வாங்க இவர் தயாரில்லை. இந்தச் செய்தி மிக மிக முக்கியமானது. இந்தச் செய்திகள் எல்லாம் இந்த நூலிலே தெளிவாகச் சுட்டிக்காட்டப் பட்டிருக்கின்றன.
`வசந்த் மூன் என்பவர்தான் அம்பேத்கர் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு குறிப்புகளை எல்லாம் தொகுத்துக் கொடுத்தவர். எழுதியவர். நாக்பூர்  அரசில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரான `வசந்த் மூன் என்பவர் அதிகாரியாக இருந்தவர். அவர் ஓய்வுபெற்ற பின் அம்பேத்கர் அவர்கள் எழுதிய ஆங்கில எழுத்துக்களுக்கு ஆசிரியராக வருகின்றார்.
`சம்தா சைனிக்தல் என்று சொல்லக்கூடிய சமத்துவ சமுதாயத் தொண்டர்கள் அணியிலே அவர் இருந்து இவர்களை வரவேற்று எல்லா ஏற்பாடுகளையும் அவர் செய்கின்றார்.
Sangaraksaga is the English Buddist monk, founder of the ‘Friends of the western Buddhist order’. He was to play an important role in spreading Buddhism.
(சங்கரக்சகா என்பவர் ஆங்கிலேய புத்த பிக்கு ஆவார். மேலை நாடுகளின் புத்த நெறி நண்பர்கள் அமைப்பு என்பதன் நிறுவனர் அவர். புத்த நெறியைப் பரப்புவதில் மிகவும் தலையாய பங்கினை அவர் ஆற்றவிருந்தார்.)
வெள்ளைக்காரருக்கு ஜாதி உணர்ச்சி எல்லாம் இல்லை. ஆனால், இங்கே இருந்த புத்த பிக்குகள் ஜாதி உணர்ச்சிக்கு ஆளானவர்கள்  என்று நினைத்தது மாத்திரமல்ல, பார்ப்பனீய இந்து மதம் என்பதே இருக்கக்கூடாது என்று அம்பேத்கர் நினைக்கின்றார். அதனால் வெளிநாட்டு வெள்ளைக்கார புத்திஸ்ட் உதவியை நாடி, புத்த நெறிக்குச் செல்ல அம்பேத்கர் தயாராகிறார்.  இந்தியாவில் மிகவும் மூத்த பிக்கு யார் என்று இவர் ஆய்வு செய்கிறார். பர்மாவிலே இருந்து வந்த சந்திராமணி என்பவரிடத்திலே சென்று பேசுகிறார்.
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
என்ற மூன்று உறுதி மொழிகளுக்கு மேலே அம்பேத்கர்  அவர்கள் மேலும் 22 உறுதிமொழி களை எழுதுகின்றார்.
மகாபோதி சங்கம் அதிர்ச்சி
மகாபோதி சங்கத்துக்கு (சொசைட்டிக்குப்) பவுத்தத்தைத் தழுவப் போகிறேன் என்று அம்பேத்கர் எழுதுகிறார். அப்பொழுது அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்கத்தாவில் உள்ள மகாபோதி சொசைட்டியின் செயலாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்குத் தந்தி மூலம் ஒரு செய்தியை அனுப்புகின்றார். அம்பேத்கர் அவர்கள் பவுத்தத்தைத் தழுவப் போவதாகச் சொன்னதைப் பாராட்டித் தந்தி  வரவில்லை. என்ன செய்திருக்க வேண்டும் அவர்கள்?  நீங்கள் தழுவ வருவதை நாங்கள் பாராட்டுகிறோம் வரவேற்கிறோம் என்று அவர்கள் சொல்லியிருக்க வேண்டும்.  அதற்குப் பதிலாக தந்தியில்  என்ன குறிப் பிட்டிருந்தார்கள் என்றால் `நீங்கள் பவுத்தத்தைத் தழுவப் போவதாக எடுத்த முடிவைக் கண்டு இந்து மதத்தை விட்டு வெளியே வருவதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியுற் றோம். தயவு செய்து  உங்களுடைய முடிவை மறுபரிசீலனை பண்ணுங்கள் என்று தந்தியில் குறிப்பிட்டிருந்தார்கள்.
இப்படி  எழுதியவர் யார்? இவரென்ன ஆர்.எஸ்.எஸ்.காரரா? இப்படிப்பட்டவர் பவுத்த சங்கத்தில் இருந்திருக்கிறார் என்றால், பார்ப்பான் உள்ளே நுழைந்தான் என்றால் என்னென்ன கேடுகள் வரும் என்பதற்கு இதைவிட பெரிய எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது. பார்ப்பனீயம் புத்தமதத்தில் நுழைந்தது, .  கடவுளாக ஆக்கியது, ஆத்மாவைக் காட்டிய தெல்லாம் அப்புறம். ஆனால், அம்பேத்கர் அவர்களி டமே இந்த வேலையைக் காட்டினார்கள்.  இவருக்கே அந்த அனுபவம் ஏற்பட்டதால் தான் அம்பேத்கர் அவர்கள் - இவர்கள் மூலம் பவுத்தத்தை ஏற்காமல் வெளிநாட்டு, வெள்ளைக்கார பிக்கு மூலம் பவுத்த நெறியைத் தழுவுகிறார்.
`சங்கராட்சகா என்பவரிடம் நெருங்கிப் பழகியிருக்கின்றார். அவரைப்பற்றி நிறைய குறிப்பு களை அம்பேத்கர்  அவர்கள் எழுதியிருக்கின்றார்.  அப்பொழுது அம்பேத்கர்  அவர்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள்தான்  மிக முக்கிய மானவை.
அம்பேத்கருக்கு மாபெரும் துரோகம்
நண்பர்களே! நம்முடைய நாட்டில் நம் நண்பர்களில் பலபேர் கூட பவுத்தத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அம்பேத்கரைப் பின்பற்றிவிட்டோம். நாங்களும் பவுத்தத்தைப் பின்பற்றி விட்டோம் என்று சொல்லிவிட்டு, எல்லா இந்துக் கடவுளின் படங்களையும் ஒன்று விடாமல்  டஜன் கணக்கில் மாட்டி வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். எல்லா இந்துப் பண்டிகைகளையும் கொண்டாடு கின்றார்கள். கடவுள் படங்களை மாட்டி வைத்துக் கொண்டு, அம்பேத்கர் அவர்களுடைய படத்தையும் மாட்டி வைத்துக் கொண்டிருந் தால், இதைவிட அம்பேத்கர் அவர்களுக்குச் செய்யக்கூடிய மாபெரும் துரோகம் வேறு இருக்க முடியாது. ஏனென்றால் தலைவர்களுக்குப் பிறந்தநாள் விழா கொண்டாடுவது, அம்பேத்கர் ஜெயந்தி என்று சொல்வது, சிலைக்கு மாலை போடுவது - இதுதான் அம்பேத்கர் அவர்களுக்கு நாம் காட்டுகின்ற மரியாதையா? அவருடைய கொள்கைக்குத் திரிபுவாதம் இல்லாமல் நடக்கவேண்டும். அம்பேத்கர் அவர்கள்  எதைச் சொன்னாரோ அதைக் கடைபிடிக்கவேண்டும்.
(நூல்:அம்பேத்கர் புத்த நெறியைத் தழுவியது ஏன்?)

Tuesday, August 21, 2012

அமெரிக்காவின் பகுத்தறிவு மேதை இங்கர்சால்


செய்யாறு
இர. செங்கல்வராயன்
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எங்ஙனம் இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இந்து மதக் கொடுமைகளையும், மூடப் பழக்க வழக்கங்களையும் எதிர்த்து ஓய்வில்லாமல் பிரச்சாரம் செய்து வந்தாரோ அதைப் போலவே அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறித்துவ மதத்தின் மூடநம்பிக்கைகளை எதிர்த்து நாற்பது ஆண்டு காலம் தீவிர எதிர்ப்புக்கிடையே பிரச்சாரம் செய்து வந்தார்.
தமிழகத்தில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் எங்ஙனம் மூடநம்பிக்கையாளர்களிடம்  தீவிர எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியி ருந்ததோ, சிறந்த சொற்பொழிவாள ராக இங்கர்சால் அமெரிக்காவில் கிறித்தவ மதவெறியர்களிடம் இருந்து தீவிர எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி இருந்தது. முட்டாளே! நாளை முதல் நீ மேடை ஏறினால், உன் தலை அட் லாண்டிக் பெருங்கடலில் மிதக்கும்.
மதததை நீ கண்டித்துப் பேசினால் உன் வீட்டிற்குத் தீ வைத்து உன் னையும் உன் குடும்பத்தையும் சாம்பலாக்கி விடுவோம்.
கிறித்துவ மதவெறியர்களின் எதிர்ப்பைத் துச்சமாக மதித்து அமெரிக்காவில் சிறிய பெரிய நகரங்களில், பட்டி தொட்டிகளில் அவரது பகுத்தறிவுப் பிரச்சாரம் தங்கு தடையின்றி நடந்தது.
ஜான் இங்கர்சால் என்ற பாதிரி யாருக்கும் மேரி லிவிங்ஸ்டன் என்ற அம்மையாருக்கும் 1833 ஆகஸ்ட் 11 ஆம் நாள் நியூயார்க்  மாநகரத்தில் திரிஸ்டன் என்ற ஊரில் ராபர்ட் கிரீன் இங்கர்சால் பிறந்தார்.
தந்தையாரின் வேத நூலான பைபள் மகனின் பாடபுத்தகமாக சிறு வயதில் விளங்கியது! ஆனால் மத நூல்களைப் படித்ததனால் இளமை யிலேயே இங்கர்சால் பிஞ்சு உள்ளத் தில் கிறித்தவ மதக் கொள்கைகளில் அவநம்பிக்கை ஏற்படத் தொடங் கியது!
தந்தை பெரியாரின் ஈரோட்டு இல்லத்தில் வைணவ மத பிரச் சாரகர்கள் பொய்யான புராணக் கதைகளைப் பரப்பினர். பெரியார் சிறு பையனாக இருந்தபோதே இந்து மதப் புராணக் கதைகளைப் பற்றி கேள்விகள் எழுப்பத் தொடங்கினார் இங்கர்சாலைப் போல. இங்கர்சால் மத நம்பிக்கை அற்ற முறையில் பேசி வருவதைக் கேட்டு அவர் தந்தையார் ஜான் கவலை அடைந்தார்.
மகனை அறியாமை இருள் கவ்விக் கொண்டிருப்பதாக எண்ணி இருந்த ஜான் நாளடைவில் இங்கர் சாலின் பகுத்தறிவுக் கருத்துக்களைக் கேட்கக் கேட்க தான்தான் மூட நம்பிக்கை எனும் இருளில் தத் தளிப்பதாக உணரத் தொடங்கினார். வாழ்க்கையின் இறுதி நாட்களில் ஜான் ஒருபுது மனிதராகத் தன் மகனால் மாற்றப் பட்டுவிட்டார்!
இங்கர்சால் தன் இளமைக் காலத்தில் இலினாய்ஸ் மாநிலத்தில் மவுண்ட் வெர்னான் என்ற ஊரிலும் பின்னர் மெட்ரோபோலிஸ் என்ற ஊரிலும் ஆசிரியராக வேலை பார்த் தார். அவர் தங்கியிருந்த வீட்டில் சில மத  போதகர்களும் தங்கியிருந்தனர். ஒரு நாள் மத போதகர்கள் ஞானஸ்நானம் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார்கள்.
ஞான ஸ்நானத்தை விட சோப்புக் குளியல் நல்லதென்பதே என் கருத்து என்று இங்கர்சால் கூறினார்.
மதவெறியர்கள் இங்கர்சாலை ஒரு நாத்திகர் என்று ஊர் முழுதும் பிரச்சாரம் செய்தனர். பாடசாலை அதிகாரிகள் இங்கர்சாலை உடனே ஆசிரியர் வேலையில் இருந்து நீக்கிவிட்டனர்.
ஆசிரியர் வேலையிலிருந்து நீக்கப் பட்டதும் இங்கர்சால் சட்டப்படிப்பு படித்து வழக்குரைஞர் ஆனார். வழக்குரைஞர் ஆன சில ஆண்டு களிலேயே தன் அறிவாற்றலாலும், உழைப்பாலும் இலினாய்ஸ் மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்வகேட் ஜெனரல்) நியமிக்கப் பட்டார். 1878 இல் அவர் தன் குடும் பத்தை தலைநகர் வாஷிங்டனுக்கு மாற்றிவிட்டார். வாஷிங்டனில் ஏழு ஆண்டுகள் வாழ்ந்த பிறகு 1885 இல் தன் குடும்பத்தை நியூயார்க்குக்கு மாற்றிவிட்டார்.
1864 ஆம் ஆண்டு ஆப்ரகாம் லிங்கனின் குடியரசுக் கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநில ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்டார். ஜனநாயகக் கட்சியில் இருந்த மத வெறியர்கள் இங்கர்சால் ஒரு தீவிர நாத்திகர்; அவருக்கு வாக்களிக்காதீர் என்று மாநிலம் முழுதும் பிரச்சாரம் செய்து அவரைத் தேர்தலில் தோற் கடித்தனர். பிறகு அவர் அரசியலில் இருந்து விலகி தன் கடைசி முப்பது ஆண்டுகளில் பகுத்தறிவுப் பிரச் சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
கிரேக்க மொழிக்கு சாக்ரடீஸ் என்ன செய்தாரோ, தமிழ் மொழிக்கு பெரியார் என்ன செய்தாரோ, அதையே ஆங்கிலத்திற்கு இங்கர்சால் செய்தார். பெரியார் எப்படி தான் மறைவு எய்திய 24-12-1973 வரை ஓயாது பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தாரோ (தியாகராயநகரில் 19-12-1973 அன்று இறுதிப் பேருரை ஆற்றினார்.) அதைப் போலவே இங்கர்சால் தான் இயற்கை எய்திய 1899 ஜூலை 20 வரை சுமார் நாற்பது ஆண்டு காலம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார்.
இங்கர்சாலின் பகுத்தறிவுச் சொற்பொழிவுகளில் சில முக்கியமான பொன்மொழிகளைக் கீழே தருகி றோம்.
  • மனிதன் வாழவேண்டுமானால், மனிதன் முன்னேற வேண்டுமானால் மதத்தை அழித்தாக வேண்டும்.
  • உண்மைதான் இந்த உலகின் அறிவுச் செல்வம்.
  • உண்மை முன்னேற்றத்தின் அடித்தளம்; சுவர்கள்; அழகிய கட்டடம்.
  • உண்மை இன்பத்தின் தாய். உண்மை மனிதனை நாகரிகமாக்கு கிறது; தூய்மையாக்குகிறது. மனிதனுக்கு தைரியம் அளிக்கிறது.
  • உண்மைதான் பகுத்தறிவுவாதி யின் வாளும், கேடயமும்.
  • சிந்தனையில் மலரும் உண்மை யான எண்ணத்தை யார் யார் வெளி யிட மறுக்கிறார்களோ, மறுக்கப் படுகிறார்களோ, அவர்கள் மனித நாகரிகத்தின் எதிரிகள்; முன்னேற் றத்தின் பகைவர்கள்.
  • அறிவாற்றலால் தீர்க்கப்படாத எந்தப் பிரச்சினையும் வன்முறையால் தீர்க்க முடியாது என்பதை உலகம் உணர வேண்டும்.
  • மூடநம்பிக்கை மனித ரத்தத்தைச் சிந்தச் செய்கிறது; விஞ்ஞானம் அறிவு வெளிச்சம் தருகிறது.
  • சகோதர மனிதர்களை நாம் நேசிக்க வேண்டும். சலிப்பு காட் டாமல உழைக்க வேண்டும். நாம் தைரியமாக இருக்கவும், இன்பமாக வாழவும் பழகிக்கொள்ள வேண்டும்.
  • கல்வி மனிதனுக்கு உண்மை யான அறிவையும், ஆராய்ச்சித் திறமையையும் தருவதாக இருக்க வேண்டும்.
குழந்தைகளின் மனத்தினுள் எவ்விதமான மூட நம்பிக்கையும் புகவிடக்கூடாது.
  • குழந்தைகளுக்கு நம்ப அல்ல; சிந்திக்கக் கற்றுக் கொடுக்க வேண் டும்.
  • மதவாதிகள், மந்திரவாதிகள், குறி சொல்வோர்கள் ஆகியோரை உங்கள் குழந்தைகளை நெருங்க விடாதீர்கள்.
  • இதுவரை மனித சமுதாயம் செய்துள்ள கோடானு கோடி பிரார்த்தனைகளில் ஒன்றுக்காவது ஆண்டவன் விடை அளித்ததாக உலக வரலாற்றில் சான்று உண்டா?
பகுத்தறிவாளர்களாகிய நாம் தந்தை பெரியார், அறிஞர் இங்கர்சால் ஆகியோரின் பொன்மொழிகளை உள்ளத்தில் பதிய வைத்து வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்வோமாக!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Monday, August 13, 2012

உண்மை


உண்மைதான் உலகத் தின் அறிவுச் செல்வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம்.
உண்மையே இன்பத்தின் தாய். உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மை யைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான். ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவினாலும் உண்மையைக் கண்டு பிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மை யோடு நடக்க முடியும்.
கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும்.
உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத்தைக் காட்டுபவன் ஆவான்.
-ஆர்.ஜி.இங்கர்சால்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Sunday, July 22, 2012

நீதிக்கட்சியின் திருமகன் ஓ.தணிகாசலம் (செட்டியார்) (2


சட்டமேலவை உறுப்பினராக ஓ. தணி காசலம் அநேக முக்கிய குழுக்களில் பணியாற்றியிருக்கிறார். தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்காலம் முழு வதும் நிதிக்குழு, சிக்கனக் குழு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாக் குழுக்களி லும் உறுப்பினராகப் பணியாற்றியிருக் கிறார். அவரது சட்ட அறிவும், பரந்த அனுபமும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக் களில் அநேக சட்ட முன் வரைவுகளை பரிசீலிக்கவும், பின்பு சட்டமாக இயற்றவும் பேருதவியாக இருந்தன.
இந்து சமய அறக்கட்டளை மசோதா அப்போதைய முதன் மந்திரியான பனகல் அரசர் அவர்களால் சென்னை சட்ட மேலவையில் அறிமுகப்படுத்தப்பட்ட போதும், 1923இல் சட்டமாக்கப்பட்ட போதும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு இருந்தது. சில வாரங்கள் முன்பு வரை நீதிக்கட்சியின் முக்கியமான உறுப்பினராக இருந்தவரும், திறமை வாய்ந்த பேச்சாளரும், அப்போதைய சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவரும் எல்லோராலும் சி.ஆர்.ரெட்டி என்று அழைக்கப்பட்ட திரு.சி.ராமலிங்க ரெட்டி அவர்கள் இப்போது பனகல் அரசர் அவர்களை முதன் மந்திரியாகக் கொண்ட நீதிக்கட்சி மந்திரி சபையைக் கவிழ்த்து விடடு தானே முதன் மந்திரியாகப் பதவியேற்க மிகச் சரியான சந்தர்ப்பம் வாய்ந்திருப்பதாக நினைத்தார். நீதித் துறையில் அதிருப்தியாளர்கள் சிலர், சுயராஜிகள், தேசிய வாதிகள், மற்றும் சில சுயேச்சைகள் அவரது ஆதரவாளர்கள் அடங்கிய கூட்டத்தின் துணையோடு சட்டமேலவையில் ஆளும் கட்சியான நீதிக்கட்சி மற்றும் அதன் தலைவராக முதன் மந்திரி பனகல் அரசர்  அவர்கள் மீது ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த நெருக்கடியான தருணத்தில் தணிகாசலம் செட்டியார் அவர்கள் பனகல் மந்திரி சபைக்கு ஆதரவாக ஏராளமான புள்ளி விபரங்களுடன் தனது மிகவும்  ஆற்றல் வாய்ந்த விவாதத்திறமையான சொற்பொழிவினால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த திரு.சி.ஆர். ரெட்டி அவரது ஆதரவாளர்களும் முன் வைத்த அநேக வாதங்களையும் நொறுக்கி தள்ளினார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு நீதிக்கட்சி மந்திரிசபை காப்பாற்றப்பட்டது. மறுநாள் 27.11.1923 இல் தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடைபெற்று தீர்மானம் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. ஓட்டு விபரம்:- தீர்மானத்திற்கு  ஆதரவாக 43 உறுப்பினர் எதிராக 65 உறுப்பினர், நடுநிலை  10 உறுப்பினர்.(தணிகாசலனார் ஆற்றிய சொற்பொழிவின் பெரும்பகுதி இந்த வரலாற்றின் இறுதியில் (எண் 4) இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி ஒ.டி.செட்டியார் அவர்களின் வாக்கு வன்மைக்கும் பனகல் அரசர் அவர்கள் செட்டியார் மீது கொண்டி ருந்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் சிறந்த சான்றாகும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபைக்கு வருவதற்கு முந்திய நாள் முதன் மந்திரி திரு.பனகல் அரசர் அவர்கள் ஒ.டி.செட்டியார்வீட்டிற்கு வருகை தந்து தீர்மானத்தை தோற்கடிக்கச் செய்ய தன்பக்கம் இருக்க வேண்டும் என்று  கேட்டுக் கொண்டார் என்பதும் இந்த  சந்தர்ப்பத்தில் நினைவு கொள்ளத்தக்கது.
சமுதாயஇட ஒதுக்கீட்டுத் திட்டத்தின் முன்னோடி
1921ஆம் ஆண்டு ஆகஸ்டு சென்னை சட்ட மேலவையில் திரு.தணிகாசலனார் அவர்களால் கொண்டு வரப்பட்ட வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு தீர்மானங்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான பிராமணரல்லாத சமு தாய மக்கள்  தணிகாசலனார் அவர்களது பெயரை எப்போதும் பாசத்துடனும் நன்றி யுடனும் நினைத்துக் கொள்வார்கள்.
திரு.தணிகாசலனாரால் கொண்டு வரப்பட்டு திரு.சி.நடேச முதலியார் அவர் களால் வழி மொழியப்பட்ட முதலாவது தீர்மானத்தின்படி கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள், இதர நலிவடைந்த பிரிவினர் கள் உள்ளடங்கிய பிராமணரல்லாத சமுதாயங்களைச் சேர்ந்தவர்களே  இனி மேல் சென்னை அரசாங்கத்தின் எல்லாத் துறைகளிலும் எல்லா பணியிடங்களுக்கும் அவர்கள் அந்தப் பணிகளுக்கு என்று விதிக்கப்பட்ட குறைந்த பட்ச தகுதியே பெற்றிருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் (பிராமணர்கள் அதிகத் தகுதி வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது).
மற்றும் அவரது தீர்மானம் கூறிய தாவது:- மேலே கூறப்பட்டவைகளை உள்ளடக்கி அரசாங்கம் ஒரு நிலை ஆணை பிறப்பிக்க வேண்டும். அந்த நிலை ஆணை மாதம் ரூ.100க்கு குறைந்து சம்பளம் பெறும் பணிகளில் 75 சதவீதமும் மாதம் ரூ.100 க்கு மேல் சம்பளம் பெறும் பணிகளில் 66 சதவீதமும் பிராமணரல்லா தாரால் நிரப்பப்படும்வரை செயல்படுத்தப் பட வேண்டும். குறைந்தபட்சம் இந்தநிலை ஆணை 7 ஆண்டுகள் செயல்படுத்தப்பட வேண்டும்.
இந்த தீர்மானம் அவையில் இருந்த போது ஆளுநரது அமலாக்கக் குழுவில் அப்போதைய நிதி உறுப்பினரான திரு.எ. ஆர்.நாப் அவர்கள்  1854ஆம் ஆண்டு வருவாய் குழு மாவட்ட ஆட்சியாளர் களுக்கு அனுப்பிய நிலை ஆணை எண். 128(2)அய் அவையின் கவனத்திற்கு  கொண்டு வந்தார்.  அந்த நிலை ஆணை மாவட்ட ஆட்சியர்கள் தமது மாவட் டங்களில் கீழ்நிலைப் பணியிட நியமனங் களை ஒரு சில செல்வாக்குள்ள குடும் பங்களே ஏகபோகமாக அனுபவிக்காமல் எச்சரிக்கையாகக் கவனிக்க வேண்டும் என்றும் எப்போதும் தமது மாவட்டங்களில் உள்ள பணியிட  நியமனங்களை மாவட் டத்தில் உள்ள முக்கிய சமுதாயத்தினர்களி டையே பிரித்துக் கொடுக்க முழு முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறிற்று.
திரு.எ.ஆர்.நாப் அவர்கள் ஆலோ சனைப்படி ஒ.டி.செட்டியார் கொண்டு வந்த தீர்மானம் திருத்தப்பட்டது. திருத்தப்பட்ட தீர்மானமாவது:- 1854ஆம் ஆண்டு வருவாய்க் குழு பிறப்பித்த நிலை ஆணை எண் 128(2) அரசாங்கத்தின் எல்லாத் துறைகளுக்கும் அரசாங்கப் பணிகளின் எல்லா நிலைகளுக்கும் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்று  இந்த சபை அரசாங் கத்திற்குச் சிபாரிசு செய்கிறது. அரசாங் கம் இதன்படி ஒரு நிலை ஆணை பிறப் பித்து அரசாங்கத்தின் எல்லாத்துறைத் தலைவர்களும் இந்த ஆணையைச் செயல் படுத்த வேண்டுமாறு கட்டாயப்படுத்த வேண்டும்; மற்றும் 6 மாதங்களுக்கு ஒரு முறை இது சம்பந்தமாக அடைந்த முன் னேற்றம் பற்றிய அறிக்கையைச் சமர்ப் பிக்கச் செய்ய வேண்டும்; இந்த அறிக்கை சட்ட மேலவை உறுப்பினர்களுக்குக் கிடைக்க செய்ய வேண்டும்.
ஒ.தணிகாசலம் செட்டியார் அவர்கள் முன்மொழிந்த முதலாவது தீர்மானத்தைப் போல திருத்தப்பட்ட தீர்மானம் உறுதி ஆக இல்லாத போதிலும், சட்ட மேலவையில் அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்பதே ஒ.டி.செட்டியார் அவர்களின் சட்ட நுணுக்க அறிவுக்கும் பிறரை ஏற்றுக் கொள்ளச் செய்யும் திறமைக்கும் ஒரு சிறந்த புகழாரம் ஆகும்.
அன்றையதினமே அவரால் சட்ட மேலவையில் முன்மொழியப்பட்ட இரண்டாவது தீர்மானம்:- சென்னை தலைமைச் செயலகத்தில்  உள்ள எல்லாப் பணிகளுக்கும் (அய்.சி.எஸ் அலுவலர்கள் தவிர) பிராமணரல்லாதார் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்பதாகும். ஒ.டி.செட்டியார் அவர்களின்இந்த தீர்மானமானது திரு.பி.சிவராவ் மற்றும் திரு.எல்.எ.கோவிந்தராஜ அய்யர் போன்ற பிராமண உறுப்பினர்களால் முழு மூச்சாக எதிர்க்கப்பட்ட போதிலும், சர்.ஆர்.கே. சண்முக செட்டியார் போன்ற பிராமண ரல்லாத  தீவிர ஆதரவாளர்களால் உறுதி யாக ஆதரிக்கப்பட்டது. மேலவையில் தனது உரையின்போது சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் கூறிய தாவது: இந்த மாவட்டத்தின் எதிர்கால சந்ததியினர் அவர்களது நியாயமான உரிமைகளை இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் உறுதி செய்தவர்களாக நம்மைக் கருதுவார்கள். இந்தத்தீர்மானம் மேலவையில் மிகத் தெளிவான வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை ஆதரித்து 49 உறுப்பினர்கள் வாக்களிக்க அதனை எதிர்த்து 22 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர்.
1921இல் திரு.ஒ.தணிகாசலம் செட்டி யார் அவர்களால் கொண்டு வரப்பட்டு சென்னை சட்ட மேலவையில் நிறைவேற்றப் பட்ட இந்த இரு தீர்மானங்களுமே பின்பு அரசாங்கப் பணியிடங்களை சமுதாயப்படி பகிர்ந்தளிப்பது என்ற (எல்லோராலும் சமுதாய அரசாணை என்றழைக்கப்பட்ட) புகழ் வாய்ந்த திட்டத்திற்கு அடிப்படையாய் அமைந்து 1928இல் அப்போதைய மந்திரி யான திரு.எஸ்.முத்தையா முதலியார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடதக்கது.
நீதித்துறையில் நீதிக்காக போராட்டம்
1914ஆம் ஆண்டு சென்னை ராஜதானி யில் மொத்தம் இருந்த மாவட்ட முன்சீப்களில் 121 பேர் பிராமணர்கள், 35பேர் மட்டுமே பிராமணரல்லாத இந்துக் கள்   என்ற நிலைமை தணிகாசலனாருக்கு வியப்பையும் வேதனையையும் அளித்தது. ஏழு ஆண்டுகளுக்குப் பின்பும் அதாவது 1921இல் பிராமண முன்சீப்கள் எண் ணிக்கை 31பேர் அதிகரித்து 121இல் இருந்து 152 ஆகியிருந்த சமயத்தில் பிரா மணரல்லாத முனிசீப்கள் எண்ணிக்கை வெறும் 3 மட்டுமே அதிகரித்து, 35இல் இருந்து 38 ஆகியிருந்தது என்ற நிலமை அவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இவ்வாறாக நீதித்துறையில் பிராமண சமுதாயத்தினர்கள் நிலைமை மேலும் மேலும் பலம் வாய்ந்ததாக ஆகிக் கொண் டிருந்தபோது பிராமணரல்லாதார் நிலை மையோ மோசமாகிக் கொண்டே வந்தது. அந்த நாட்களில் மாவட்ட முன்சீப்களை நியமிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத் திற்கு அளிக்கப்பட்டிருந்தது. மேலே குறிப்பிட்ட புள்ளி விபரங்களை ஆராய்ந்த தணிகாசலானார் உயர்நீதிமன்றம் எல்லாச் சமுதாயத்தினருக்கும் பாசம்மிக்க பெற்றோரைப் போல் இருப்பதற்குப் பதிலாக ஒரு சமுதாயத்தினருக்கு மட்டும் ஞானத்தந்தையாகவும் மற்ற அனைத்து சமுதாயத்தினர்களுக்கும் மாற்றாந்தாய் ஆகவும் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தார்.
எனவே பிராமணரல்லாத சமுதாயத் தினர்களுக்கு மாவட்ட முன்சீப் நியம னங்களில் நியாயம் கிடைக்கும் பொருட்டு தணிகாசலனார் 1921 ஏப்ரல் முதல் தேதியன்று  சென்னை சட்டமேலவையில் இப்போது சென்னை உயர்நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டிருக்கும் மாவட்ட முன்சீப் நியமன அதிகாரத்தை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சென்னை அரசாங்கத்திற்குச் சிபாரிசு செய்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
ஆளுநரது அமலாக்க குழுவில் உள்ளாட்சி அங்கத்தினர் ஆக இருந்த சர் லயோனல் டேவிட்சன் விவாதத்தின் முழு சாராம்சமும் உயர்நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டு முழு விஷயமும் உயர்நீதிமன்றத்தாலும் அரசாங்கத்தாலும் ஆராயப்படும் என்று அளித்த வாக் குறுதியின் பேரில் தணிகாசலனார் அந்த தீர்மானத்தை திரும்ப பெற்றுக் கொண்ட போதிலும் தீர்மானம் கொண்டு வந்த மையும் அதனை விளக்கி தணிகாசலனார் சட்டமேலவையில் ஆற்றிய சிந்தனையைத் தூண்டும் சொற்பொழிவும் பிராமணரல் லாத சமுதாயத்தினருக்கு நீதித்துறையில் இழைக்கப்பட்ட தவறுகளை உடனே சரி செய்ய வேண்டும் என்ற சிந்தனையை சம்பந்தபட்டவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள செய்தது.(அவரது பேச்சில் பெரும் பகுதி இவ்வரலாற்றின் பிற்பகுதி யில் 1,2 ஆக இணைக்கப்பட்டிருக்கிறது)
(நூல்: ஓ. தணிகாசலம் செட்டியார் சமுதாய நீதியின் மகத்தான தலைவர் - மா. இளஞ்செழியன், ச. ரத்னசாமி)


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


1புரியும் வரை
2வரைந்து பழகுவோம்
3சுடோகு
4சுடோகு
5ஜூலை மாதத்தில்.......
6படப்புதிர்
7விளையாட்டு
8சின்னக்கை சித்திரம்
9சிந்தனை செய்!
10லண்டன் ஒலிம்பிக் 2012
11ராகுல் வென்றது எப்படி?
12உங்களுக்குத் தெரியுமா?
13சேதி தெரியுமா?
14Funny Facts of English
15உலகில் புதுசு சூரிய ஆற்றல் விமானம்
16இரு சக்கர மகிழுந்து
17சூழல் காப்போம்
18பெரியன கேட்கின் உலகின் மிக உயர்ந்த தங்கும் விடுதி கிரேக்க ராயல் வில்லா
19சேதி தெரியுமா?
20தலைவர்கள் வாழ்வில்........
21கடலின் வரலாறு
22விளையும் பயிர் வீரத்துடன் நேர்மை
23விந்தைக் கணக்கு
24உலக புகழ் பெற்றவர்கள் பசுமை வெளி இயக்கம் கண்ட வாங்கரி மாத்தாய் 1940 -2011
25ஞாயிற்றைக் கடந்த வெள்ளி....
26தகுதி-திறமை-மோசடி:தகர்த்த மாணவன்
27விளையும் பயிர்


குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...