Showing posts with label தலைவர்கள். Show all posts
Showing posts with label தலைவர்கள். Show all posts

Wednesday, March 4, 2015

ஆஸ்திக சமாஜத்தில் எம்.ஜி.ஆர். பேசியது என்ன?

(ஆஸ்திக சமாஜத்தில் எம்.ஜி.ஆர். 10.4.1976 அன்று கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய உரை குறித்து சிலர் எகிறிக் குதிக்கிறார்கள். மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை விவாதத்துக்கு அழைத்து அவர்கள் கருத்தைக் கேட்டு பதில் கூறும் ஆற்றல் பகுத்தறிவாளர்களுக்கே உண்டு என்பதை எத்தனையோ நிகழ்ச்சி நடத்தி நிரூபித்துக் காட்டப்பட்டுள்ளது.

ஆஸ்திக சமாஜத்தில் வந்து பேசுகிறவர்கள் எல்லாம், பட்டை அடித்துக் கொண்டு, காவிஉடை தரித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்றால், அதற்கு எம்.ஜி.ஆர். போன்றவர்களை அழைத்திருக்கவே வேண்டாமே!

அவரவர்கள் கருத்தைக் கூறினாலே, மதத்தைப் புண்படுத்தும் பேச்சு என்று கூறுவார் களேயானால், மதம் சுயசிந்தனையை தடுக்கிறது என்ற பகுத்தறிவாளர்களின் கருத்துக்கு அவர்கள் கட்டியங் கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பொருள்!

ஆஸ்திக சமாஜத்தில் எம்.ஜி.ஆர். பேசியதுதான் என்ன? அவர் பேசிய பேச்சுக்களில் ஒரு சில பகுதி களையும், ஆஸ்திக சமாஜத்தில் நடந்த நிகழ்ச்சியையும் கீழே தந்துள்ளோம்.)

ஆஸ்திக சமாஜத்தில் நாத்திகத்துக்காக வாதாடு கிறவர்களைச் சார்ந்தவன் என்று பெயர் தரப்பட்டி ருக்கிற எம்.ஜி. ராமச்சந்திரனை அழைத்துள்ளீர்கள். ஆத்திக சமாஜத்தில் எம்.ஜி. ராமச்சந்திரனா?.. இந்தக் கேள்வி சிலருக்கு திகைப்பாக இருக்கக்கூடும். ஆத்தி கம் பற்றியும் நாத்திகம் பற்றியும் இதே மேடையில் நிறையப் படித்தவர்கள், நன்கு ஆராய்ந்தவர்கள் நிறையப் பேசியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால் அதைக் கேட்கும் வாய்ப்பை நான் பெற்றதில்லை. இவர்களும் அந்த வாய்ப்பை எனக்குத் தந்ததில்லை. இனிமேல் தருவார்கள் என்று கருதுகிறேன் என்று மட்டுமல்ல பொது மக்களுக்கும் தருவார்கள் என்று கருதுகிறேன். ஏனென்றால் பொது மக்களுக்குத் தெரியாத எந்தக் கருத்தும், எத்தகைய தத்துவமும் வரவேற்பு பெற முடியாது.

பரலோகத்தில் நம்பிக்கை உண்டா?

பரலோகத்தை நம்பாதவர்களையும், ஈஸ்வரனை வணங்காதவர்களையும், நாதப் பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் நாத்திகர்கள் என்று குறிப்பிட்டார்கள். பரலோகத்தை நம்பப் போகிறோமா, நாதப் பிரமாணத்தை ஏற்கப் போகிறோமா - அதுவல்ல பிரச்சினை. கருமம், நாதோபாசம், ஞானம் இவற்றை ஆத்திகக் கோட்பாடுகளாகக் கூறினார்களே அதை ஏற்றுக் கொண்டவர்கள் அவற்றைக் கடைப்பிடிக் கிறார்களா?

கருமம் எது?

நான் இங்கே மனம் திறந்து சில கேள்விகளை வெளிப்படையாகக் கேட்க விரும்புகிறேன். கருமம் என்று குறிப்பிட்டிருக்கிறார்களே, எதை? இன்றைய தினம் இந்த 76ஆம் ஆண்டிலும் அவரவர் கருமத்தை யார் ஒழுங்காகச் செய்கிறார்கள்? சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் ஆத்திகன் என்று சொல்லிக் கொள்ப வர்களில் எத்தனை பேர் அதற்குரிய கருமத்தை ஒழுங்காக நிறைவேற்றுகிறார்கள்?

வேஷம் போடுவதா?

நான் வேதனையோடு சொல்கிறேன்; ஆத்திகர் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களில் நூற்றுக்கு 95 பேர் கடவுளை நம்புவதாக வேஷம் போடுகிறார்கள். எம்.ஜி.ஆர். இவ்வாறு பேசி முடித்ததும், அந்த சமாஜத்தின் தலைவரான ரத்தினம் அய்யர் என்பவர் பேச வந்தார்.
அவர் பேசுகையில், எம்.ஜி.ஆர். எத்தனையோ தருமங்களை செய்துள்ளார். அவர் நாத்திகராக இருந் தால் தருமம் செய்ய வேண்டும் என்ற சிந்தனையே வராது. நிச்சயமாகச் சொல்கிறேன், சத்தியமாகச் சொல்கிறேன்.

நாத்திகர்கள் கடவுள் இல்லை. இல்லை என்று சொல்லத்தான் ஆத்திகம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறிவிட்டு, தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புத் தத்துவங்களை மிகவும் தாக்கிப் பேசினார்.

எம்.ஜி.ஆர். குறுக்கீடு

அப்போது எம்.ஜி.ஆர். எழுந்து ஒலி பெருக்கியை பிடித்துக் கொண்டு இடைமறித்துப் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறி ரத்தினம் அய்யர் நான் கொடுப்பதாகப் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நாத்திகர்கள் தரமாட்டார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் என்னை நினைத்து இதைச் சொல்லவில்லை. பொதுவாகவே இதைச் சொல்கிறேன்.

நாத்திகம் பரவப் பரவத்தான் ஆத்திகமும் பரவுகிறது என்று கூறிய அவர், பிறகு பெரியாரின் நாத்திகக் கருத்துகளை ஏன் தாக்க வேண்டும்? (சமாஜத் தலைவர் உண்மைதான்... உண்மைதான்...)

எம்.ஜி.ஆர். பேசுகிறார்: ஆஸ்திகம் என்ற சொல்லில் உள்ள ஆஸ்தி என்பதற்கு உள்ளது என்று ஒருபொருள் கூறப்படுகிறது. உள்ளது என்று கூறுவதற்கு ஒரு ஆள் இருந்தால் இல்லை என்று மறுப்பவர்களும் இருக்கவே செய்வார்கள். (சமாஜத் தலைவர்: உண்மைதான், உண்மைதான்).

எம்.ஜி.ஆர். பேசுகிறார்: ஜாதி உண்டு என்று சொல்பவர்கள் இருக்கும் வரை, ஜாதி இல்லை என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். பணக் காரர்கள் வேண்டும் என்று சொல்பவர்கள் இருந்தால் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருப்பார்கள்.

இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
(நன்றி: தென்னகம்)
(விடுதலை 19.4.1976)
இதற்குப் பதிலென்ன லட்சுமி நாராயணரே?

Saturday, December 20, 2014

தேசிய நூலாக கீதை: பல இனங்கள் உள்ள நாட்டின் நலனுக்கு உகந்ததா?


பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரியிருப்பது பல்லின மக்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டின் நலனுக்கு உகந்ததாயிருக்காது என்கிறார் காந்தியச் சிந்தனையாளரும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான டாக்டர் ஜெயப் பிரகாசம்.

பகவத் கீதையை காந்தி போன்றோர் உயர்வாக மதித்தனர் என்பது உண்மை ஆனால், கீதை குறித்த அவரது பார் வைக்கும் மற்றவர்களின் பார்வைக்கும் வேறுபாடு உள்ளது. நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் வன் முறையாலும் தீமையை வெல்வது நீதி யானதுதான் என்ற அர்த்தப்படுத் தினால், இந்த அணு யுகத்தில் அது பேரழிவை உருவாக்கும் என்றார் ஜெயப்பிரகாசம்.

காந்தியோ, கீதையை நன்மைக்கும் தீமைக்குமான மோதலில் மனித மனது, தீமையை வென்று நன்மையாக மாற்று கிறது என்று அர்த்தப்படுத்தினார், என் றார் ஜெயப்பிரகாசம். இது சத்யா கிர ஹத்திற்கான ஒரு நூல் என்று காந்தி பொருள்கொண்டார், பாரதி கூட அப்படித் தான் அதைப் பார்த்தார் என்றார் ஜெயப்பிரகாசம்.

அதே சமயம் அம்பேதகர் போன் றோர் கீதையை போரை நியாயப்படுத் தும் ஒரு புத்தகமாகவும், வர்ண அமைப்பை நியாயப்படுத்தும் ஆவண மாகவும் பார்த்தது குறித்து குறிப்பிட்ட ஜெயப்பிரகாசம், திலகர் கூட தனது " கீதா ரகசியம்" என்ற புத்தகத்தில், கீதையை, போருக்கான புத்தகமாகவே பார்த்தார் என்றார். எனவே இது போன்ற திரு மறைகளை மறு வாசிப்பு செய்வது அவ சியம், தேவையானவற்றை எடுத்துக் கொண்டு தேவையற்றவற்றை ஒதுக்கித் தள்ளுவது அவசியம் என்றார் அவர்.

மற்ற மதங்களில் உள்ளது போல ஒரே ஒரு நூல்தான் இந்து மதத்தில் திருமறை என்று மதிக்கப்படும் இடத் தில் இல்லை என்றார் ஜெயப்பிரகாசம். தென்னிந்திய மரபில் சைவ சித்தாந்தம் மற்றும் வைணவ சித்தாந்தத்திலும், பகவத் கீதையை அறியாத ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். எனவே பாஜகவின் இந்த முயற்சி என்பது , இந்து சமயத்தை மையப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இருக்கிறது என்றார் ஜெயப்பிரகாசம். அதே சமயத்தில் ஒரு நாட்டுக்கு தேசிய நூல் என்ற ஒன்று அவசியம் தானா என்று கேட்டதற்கு, நாடு பல பிரச்சனைகளை எதிர்நோக்கும் நிலையில், இது போன்ற பிரச்சனை களைக் கையில் எடுப்பது தேவை யற்றது என்றும் அவர் கூறினார்.

Wednesday, July 9, 2014

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் சிந்தனைகள்...!



பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சாரம் காரணமாகத்தான், பார்ப்பனர்களால் இழித்துக் கூறப்பட்ட ஜாதியில் பிறந்த காமராசர் தமிழக முதல்வராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் வர முடிந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

காமராசர் ஆட்சியைப்பற்றி இன்று நடப்பது காந்தி காங்கிரஸ் அல்ல; சுயமரியாதை காங்கிரஸ் என ஆச்சாரியாரே கூறினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்பட்டது காமராசரால்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கருப்பு காந்தி என்று அழைக்கப்பட்ட காமராசர் பெரியாரை தம் வழிகாட்டியாகக் கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கதர்ச் சட்டைக்குள் ஒரு கருப்புச் சட்டை ஆட்சி நடத்துகிறது என்று காமராசர் ஆட்சியை விமர்சித்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

எந்த இந்துமதப் பண்டிகையும் கொண்டாடாதவர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1954-1963 காமராசரின் ஆட்சிக்காலம் தமிழ்நாட்டின் பொற்காலம் என அறிவாசான் தந்தை பெரியாரால் போற்றப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

1954 தேர்தலில் காமராசரை பச்சைத் தமிழர் என வர்ணித்து தேர்தலில் ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அண்ணாவின் திராவிட ஏடு பத்திரிகையில் புகழ் பெற்ற குலக்கொழுந்தே, குணாளனே என பாராட்டி, காமராசரைப்பற்றி அறிஞர் அண்ணா தலையங்கம் எழுதினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1939 இல் 2500 ஆரம்பப் பள்ளிகளையும், 1953 இல் 6000 ஆரம்பப் பள்ளிகளையும் கிராமங்களில் இழுத்து மூடி, எஞ்சியுள்ள பள்ளிகளில் ஜாதித் தொழில் பயிற்சி (குலக்கல்வி) என்ற கொடுமையான கல்வித் திட்டத்தை ஆச்சாரியார் கொண்டுவர, பெரியாரின் கடும் போராட்டம் (கத்தி, பெட்ரோல், தீப்பந்தம்) காரணமாக ஆச்சாரியார் பதவியை விட்டு விலகினார். தந்தை பெரியாரே காமராசரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1954 இல் 16,000 தொடக்கப் பள்ளிகளை, காமராசர் ஆட்சியில் 30,000 தொடக்கப் பள்ளிகளாக உயர்த்தி, 16 லட்சம் மாணவர்கள் படித்த நிலையை மாற்றி, 48 இலட்சம் மாணவர்கள் படிக்க வழிவகை செய்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அதேபோல், 1954-இல் 450 உயர்நிலைப் பள்ளிகள் 2200 உயர்நிலைப் பள்ளிகளாக உயர்த்தி 3.86 இலட்சம் மாணவர் எண்ணிக்கையை 13 இலட்சம் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து படிக்கக் காரணமானவர் காமராசர்; அதற்குக் காரியம் ஆனவர் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?


பள்ளிக் கூடங்களையும், படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைகளையும் உயர்த்தியதோடு, மதிய உணவு திட்டமான பகல் உணவு மய்யங்களையும் காமராசர்தான் திறந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

காமராசரை கல்விக் கண் திறந்த இரட்சகர் எனப் பேராசான் தந்தை பெரியார் பாராட்டினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டு, காமராசர் வாழ்த்து பாடலாம் என காமராசருக்குப் புகழ் சேர்த்தவர் தந்தை பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பலரது பார்வையில் காமராசர் படிக்காதவர்; ஆனால், அவரால்தான் மக்கள் படித்தனர். அவருக்குக் குடும்பம் எல்லாம் மக்கள்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

காமராசரின் நிர்வாகத் திறன் காரணமாக, மக்கள் நல அணுகுமுறைகள், கிராமங்களிலெல்லாம் கல்வி நீரோடை வாய்ப்பற்ற மக்களுக்கு வாய்ப்பு தந்தவர்; பிரதமர் பதவிக்கு அவரை அழைத்தும்கூட, ஏற்காத தியாக உள்ளத்திற்குச் சொந்தக்காரர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பதை மாற்றி, பள்ளி இல்லாத ஊரில் யாரையும் குடியிருக்கவிட மாட்டேன் என்று ஆட்சி புரிந்தவர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உழைக்கவேண்டியதே, ஏழையாய் இருப்பதே தலையெழுத்து என்றால், அந்தத் தலையெழுத்தை மாற்றி எழுதுவேன் என்றவர் தான் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்பதற்காக அயோக்கியனாய், திருடனாய், சோம்பேறியாய் இருந்தாலும் உத்தமன் ஆகிவிடுகிறான். தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவன் நாணயப் பொறுப்புள்ளவனாக இருந்தாலும், இனப் பாகுபாடு அவனை முன்னுக்கு வராமல் தடுக்கிறது. இப்பிளவை நீக்கி அனைவரும் சமம் என்ற ரீதியில் மக்களை நடத்துவதுதான் சமதர்மம் என்றவர்தான் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தகுதி - திறமை பேசும் மோசடிப் பார்ப்பனர்களைப் பார்த்து,
எந்தத் தாழ்த்தப்பட்டவன் படித்து இன்ஜினியராகி பாலம் கட்டி இடிந்தது; எந்தத் தாழ்த்தப்பட்டவன் படித்து டாக்டராகி ஊசி போட்டு நோயாளி செத்தார் எனச் சாட்டையடியாகக் கேள்வி கேட்டு இடித்துரைத்தவர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?


1954-1957 அவரது அமைச்சரவையில் இந்து அறநிலையத் துறையில் பரமேஸ்வரன் என்ற ஆதிதிராவிடரை அமைச்சராக்கி, சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1961 இல் சென்னையில், தந்தை பெரியாருக்குப்பின் காமராசருக்குத்தான் உயிரோடு இருக்கும்போதே சிலை வைத்து, பிரதமர் நேருவால் திறக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

காமராசர் ஆட்சியில்தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

1966 இல் டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த காமராசர் வீட்டிற்கு, பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்ற பெயரால், திரிசூலங்களுடன் நிர்வாணச் சாமியார்கள், தீ வைத்து காமராசரை உயிரோடு கொளுத்திட முயற்சி செய்த கூட்டம்தான் இன்றைய பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். (அன்றைய ஜனசங்கம்) என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் இன்னும் 10 ஆண்டுகாலம் காமராசரை பதவியிலிருக்கும்படி பார்த்துக்கொண்டால், பார்ப்பான் கைக்கு மண் வெட்டியும், பாப்பாத்தி கைக்கு களைக்கொத்தும் வந்துவிடும் எனத் தந்தை பெரியார் கூறினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

------------------ தொகுப்பு: த. செயக்குமார் எம்.எஸ்ஸி., "விடுதலை" 15-7-2008

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...