Thursday, June 14, 2018

இராமாயணம்-இராமன்-இராமராஜ்யம் ஆய்வு சொற்பொழிவு-6

அரங்கம் நிரம்பி வழிந்தது  ரூ.10 லட்சம் நன்கொடையாளருக்கு பாராட்டு
 

பத்மினி வாசுதேவன் புற்றுநோய் ஆய்வு மய்யம் அமைத்திட ரூபாய் 10 லட்சம் தொகையை நன்கொடையாக வழங்கிய பொறியாளர் கோவிலூர் வாசுதேவன் இணையரை மேடையில் அமரவைத்து பாராட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணி வித்து சிறப்பு செய்தார்.

பத்மினி வாசுதேவன் புற்றுநோய் ஆய்வு மய்யம் அமைத்திட ரூபாய் 10 லட்சம் தொகையை நன்கொடையாக வழங்கிய பொறியாளர் கோவிலூர் வாசுதேவன் இணையரை மேடையில் அமரவைத்து பாராட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணி வித்து சிறப்பு செய்தார்.

சென்னை, ஜூன் 13 இராமாயணம் இராமன் இராமராஜ்யம் ஆய்வு சொற்பொழிவின் ஆறாவது சிறப்புக்கூட்டம் நேற்று (12.6.2018) மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடை பெற்றது.

இராமாயணம் இராமன் இராமராஜ்யம் ஆய்வு சொற் பொழிவு 6 சிறப்புக்கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.

“கம்பனின் புளுகும் வால்மீகியின் வாய் மையும்“  எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இராமாயணம் இராமன் இராமராஜ்யம் ஆய்வு ஆறாவது சொற்பொழிவை ஆற்றினார்.

நீட் உள்ளிட்ட அனைத்துக்கும் போராட வேண்டியதாக இருக்கிறது. தந்தை பெரியார் சொன்னதைப்போல், நடக்கின்ற அனைத்தும் அரசியல் போராட்டங்கள் அல்ல, ஆரிய திராவிடப் போராட்டமே. இருவேறு பண்பாடு களுக்கு  இடையிலான போராட்டம்.

தமிழ்நாட்டின் ஹரப்பா கீழடி அகழ்வாய்வு களை மறைத்திட முயன்றார்கள். அதற்கும் போராடினோம். மாநில அரசு செய்ய முன்வந்தது. கீழடி அகர்வாராய்ச்சி செய்த ஆய்வாளர் அமர் நாத் ராமகிருஷ்ணனை வடஅமெரிக்காவில் டல்லாஸ் விழாவில் அழைத்தார்கள் என்றால், அவருக்கு  அனுமதி மறுக்கப்படுகிறது.

திராவிடம் எந்த ரூபத்திலும் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். அது முடியாது. நாட்டுப் பண்ணில் திராவிட உத்கல.... என்று இருக்கிறதே அதை மாற்ற முடியுமா?

எண்ணற்ற ராமாயணங்கள் உள்ளன. லங்கேஸ்வரன் நாடகத்தில் இராவணனுக்கு சீதை மகள் என்றிருக்கிறது.

கதையில் ராமன் 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக கூறப் படுகிறது. ஆனால், வரலாற்று அறிஞர்களின், அகழ்வாராய்ச்சியாளர்களின் ஆய்வுகளில் இராமன் வாழ்ந்ததற் கான தடயமே இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பார்ப்பனர்களுக்கு இக்கட்டான நேரத்தில் இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்று சங்கராச்சாரி கூறுகிறார்.

பார்ப்பனர்களுக்கான குற்றவியல் நடை முறைச் சட்டம், சிவில் நடைமுறைச் சட்டம் எல்லாம் இராமாயணம்தான் என்கிறார். 


உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களுக்கான சந்தா தொகையை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் அந்தமான் தேவா, அன்பு ஆகியோர் வழங்கினர்.

எதேச்சதிகார மோடி அய்.ஏ.எஸ். அல்லாத வர்களை இணைச் செயலாளர்களாக நியமித்து, பின்னர் கூடுதல் செயலாளர், செயலாளர் ஆக்கிவிடலாம் என்று உத்தரவு பிறப்பித் துள்ளார். யுபிஎஸ்சி நடத்துகின்ற அய்.ஏ.எஸ். தேர்வு நடைமுறைகள், அரசமைப்புச் சட்டத் தைப்பற்றி கவலைப் படாமல் இருக்கிறார்கள். அதன் உள்நோக்கம் சமூக நீதி, இட ஒதுக்கீட்டை ஒழிப்பதாகவே இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பணியிலிருக்கும் போது பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளது.  கிஜீஜீஷீவீஸீtனீமீஸீt வீஸீநீறீuபீமீs றிக்ஷீஷீனீஷீtவீஷீஸீ என்று ரங்காச்சாரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது.

நீட் உள்ளிட்ட தொடர்போராட்டங் களுக்கு முடிவு கட்டுவதற்கு ஒரே வழி ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி  ஆட்சியை எவ்வளவு சீக்கிரம் வீட் டுக்கு அனுப்பவேண்டும் என்பதில் தான் இருக்கிறது. ஆகவே இவை யாவும் சுலபமாக மறைத்துவிடக் கூடிய பிரச்சினைகள் அல்ல என்று பல்வேறு தகவல்களை எடுத்துக் காட்டி தமிழர் தலைவர் உரையாற்றினார்.

பா.வே.மாணிக்கநாயக்கரின் ‘கம்பனின் புளுகும் வால் மீகியின் வாய்மையும்’ நூல், வால்மீகி இராமாயண ஆய்வாளர் தி.அமிர்த லிங்க அய்யர் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங் களை முன்வைத்து, கம்பனின் ராமன், வால் மீகியின் ராமன் மற்றும் கம்பனின் கோசலை, வால்மீகியின் கோசலை உள்ளிட்ட அனைத்து இராமாயணப் பாத்திரங்களின் வழியே கம்பன் செய்த மோசடிகளை தோலுரித்துக்காட்டினார் தமிழர் தலைவர்.

அடுத்த கூட்டம் தொடரும் அறிவிப்புக்கு வரவேற்பு

‘கம்பனின் புளுகும் வால்மீகியின் வாய் மையும்’ தலைப்பில் கூட்டம் முடிந்து அடுத்ததாக கம்பனின் கூற்றுக்கு கம்பனே மறுத்துக் கூறுவதை எடுத்து விளக்கும் வகையில் அடுத்தக்கூட்டம் அமையும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்ததை யடுத்து பார்வையா ளர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

சுயமரியாதை திருமண விழா



பூ.வள்ளி - பு.மணிகண்டன் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவை தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார்.

தொடக்க நிகழ்வாக எளிமையான சுயமரி யாதை திருமண விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கல்லாய் சொரத்தூர்  பூபதி- மஞ்சுளா மகள் பூ.வள்ளிக்கும், விழுப்புரம் மாவட்டம், அன்னியூர் புரட்சி வீரன்- நாகம்மாள் மகன் பு.மணிகண்டனுக்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உறுதிமொழி கூறச் செய்து நடத்தி வைத்து வாழ்த்துரை யாற்றினார்.

இணையேற்பு விழா மகிழ்வாக விடுதலை நாளிதழுக்கு ஓராண்டு சந்தாத் தொகையை தமிழர் தலைவரிடம் மணமக்கள் அளித்தார்கள்.

நூல் வெளியீட்டு விழா

தமிழர் தலைவரிடமிருந்து நூல்களை பெறுகின்றனர்

பா.வே.மாணிக்க நாயக்கர் எழுதிய “கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும்” நூலின் புதிய பதிப்பு (ரூ.50), ராவ்பகதூர் பேராசிரியர் ஏ.சக்ரவர்த்தி எழுதிய “இராவணன் வித்யா தரனா?” (ரூ.10), மு.அண்ணாமலை எழுதிய “கம்பன் கெடுத்த காவியம்” (ரூ.12), “அறிவரசன் எழுதிய யார் இந்த ராமன்?” (ரூ.20), பண்டிதர் இ.மு.சு. எழுதிய “இதிகாசங்களின் தன்மைகள்” (ரூ.20), அன்னை மணியம்மையார் எழுதிய “கந்தபுராணமும், இராமாயணமும் ஒன்றே!” (ரூ.6) ஆகிய நூல்கள் வெளியிடப் பட்டன. புத்தகங் களின் நன்கொடை ரூ.118 சிறப்புக்கூட்டத்தில் ரூ.100க்கே வழங்கப்பட்டது.

நூல்களை பெற்றுக்கொண்டவர்கள்

நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து மேனாள் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன்,  சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வழக் குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, தலைமை செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, மயிலாடுதுறை மாவட்டச் செய லாளர் கி.தளபதிராஜ், கவிஞர் கண்மதியன், த.கு.திவாகரன், புலவர் பா.வீரமணி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், மாவட்டச் செயலார் கோ.நாத்திகன், தங்க.தனலட்சுமி, சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவ சாமி, கு.சோமசுந்தரம், பழ.சேரலாதன், ஆதம்பாக்கம் சவரி யப்பன், செந்துறை இராசேந்திரன், கொரட்டூர் பன்னீர் செல்வம்,  அரிமா கு.திவாகரன், திண்டிவனம் சிறீராமுலு, அந்தமான் டான்போஸ்கோ, திராவிட மாணவர் கழகம் சீர்த்தி, தொண்டறம் உள்பட ஏராளமானவர்கள் புத்தகங்களை உரிய தொகையை அளித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

கலந்துகொண்டவர்கள்

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி.வெற்றிசெல்வி, சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, பெரியார் களம் இறைவி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பாமணி யம்மை, செல்வி, கோ.வீ.ராகவன், பெரி யார் மாணாக்கன், மஞ்சநாதன்,கொடுங்கையூர் தங்கமணி, ஊரப்பாக்கம் வேமன்னா உள்பட பலர் கலந்துகொண்டனர்.




குலக்கல்வி'' திட்டத்தைவிட மோசமானது குருகுல கல்வித்'' திட்டம்

இந்தப் பாடத் திட்டங்களை தெருத்தெருவாக கொளுத்தவேண்டும்!
சென்னை சிறப்புக் கூட்டத்தில் வைகோ போர் முழக்கம்




சென்னை, ஜூன் 13-  குலக்கல்வி திட்டத்தைவிட மோசமானது மத்திய பி.ஜே.பி. அரசு கொண்டுவரத் துடிக்கும் குருகுலக் கல்வி. சி.பி.எஸ்.இ. பாடத் திட்டமும் நமக்குத் தேவையில்லாதது - இவற்றை தெருத் தெருவாகக் கொளுத்தவேண்டும் என்றார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள்.

”குருகுலக் கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா?”

6.6.2018 அன்று மாலை வடசென்னை மாவட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில், சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் குருகுலக்கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா? எனும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ  அவர்கள் உரையாற்றினார்

அவரது உரை வருமாறு:

குருகுலக் கல்வி எனும் பெயரால், குலக்கல்வித் திட்டத் தைவிட கொடுமையான அநீதியைத் திணிக்க முயன்றுவிட்ட மத்திய அரசைக் கண்டித்து, கருப்புடை தரித்தோர் உண்டு கொடுமையை நறுக்கியே திரும்பும் வாட்கள் என்ற உணர் வோடு, சரியான வேளையில், போர் முரசு ஒலிக்கின்ற இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்ற தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் எனது ஆருயிர் அண்ணன் மானமிகு வீரமணி அவர்களே,

இணைப்புரை நிகழ்த்திய திராவிடர் கழக துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

வரவேற்புரை நிகழ்த்திய வடசென்னை மாவட்டத் தலைவர் சகோதரர் வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களே,

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இனிய சகோதரர் அன்புராஜ் அவர்களே,

திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் மானமிகு கும ரேசன் அவர்களே, அமைப்புச் செயலாளர் மானமிகு பன்னீர் செல்வம் அவர்களே, மானமிகு ஒளிவண்ணன் அவர்களே, திராவிடர் கழகத் தோழர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களே, விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் செல்வம் அவர்களே, வருக தந்திருக்கின்ற தமிழ்ப் பெருமக்களே, அன்புடைய சகோதரிகளே, இல்லங்களிலிருந்து எங்கள் உரையை செவிமடுத்துக் கொண்டிருக்கின்ற பேரன்பிற்குரிய தாய்மார்களே, பெரியோர்களே, வாலிப வேங்கைகளே, மாணவச் செல்வங்களே, பத்திரிகையாளர்களே, தொலைக்காட்சி ஊடக நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய்க்கழகமான திராவிடர் கழகத்தினுடைய கட்டளை

இடி இடித்தாலும், மின்னல் கீற்றுகள் வானிலே பளிச் சிட்டாலும், பெருமழை கொட்டினாலும், அறிவிக்கப்பட்ட கூட்டத்தை நடத்தியே தீருவோம் என்று சொல்லக்கூடிய உறுதி, அறிவாசான் தந்தை பெரியார் காலத்திலிருந்து நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வருவதால், இந்த நிகழ்ச்சியும் நடக்கிறது. இன்று மாலையில் நான் கோவை செல்வதாக இருந்தேன். அண்ணன் வீரமணி அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வரச் சொன்னபொழுது, மறுமலர்ச்சி தி.மு.க.விலிருந்து முன்னணி தலைவர் ஒருவரை அனுப்புகிறேன் என்று சொன்னபொழுது, இல்லை, நீங்கள்தான் வந்து கலந்துகொள்ளவேண்டும் என்றபொழுது, தாய்க்கழகத்தினுடைய, அனைத்துக்கும் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தினுடைய கட்டளை என்று நான் ஏற்றுக்கொண்டு, இன்று இரவு பயணத்தை, நாளை காலை பயணமாக மாற்றிக்கொண்டு இங்கே நான் வந்திருக்கிறேன்.

அண்ணன் அவர்களே, முதன்முதலாக உங்களுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு முன்னால், நீங்கள் இருதய வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் இருந்தபொழுது அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களோடு வந்து நான் பக்கத்தில் நின்று பார்த்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று கருதுகிறேன்.

பலமுறை மருத்துவர்களுடைய கத்தி உங்கள் இருதயத் திலே பட்டிருக்கிறது; உயிர் போவதைப்பற்றி நான் கவலைப் படவில்லை என்றீர்கள்; அறிவாசான் பெரியார் காலத்தில், காமராசர் காலத்தில், அண்ணா காலத்தில் ஏற்படாத கொடு மைகளும், ஆபத்துகளும், அபாயங்களும் நம்மை சூழ்ந் திருக்கின்ற காரணத்தினால், நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழவேண்டும்.

குலக்கல்வித் திட்டத்தைவிட கொடுமையானது குருகுலக் கல்வி

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, நான் ஒரு வழக்குரைஞர் என்கிற முறையில் சொல்கிறேன், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, இப்படி வாதிடு, இப்படி வாதிடு என்று சொன் னால்தான், ஒரு வழக்குரைஞன் சரியாக வாதிட முடியும். அப்படி எங்களுக்கு ஆவணங்களை, கோப்புகளை சேகரித்து, உங்களுடைய ஆங்கில புலமையாலும், அறிவாற்றலாலும், எங்கெங்கே கேடுகள் வருகிறது என்று - நாங்கள் பரபரப்பான அரசியலில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் -  நீங்கள் எங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறபொழுதுதான், இப்படியொரு ஒரு ஆபத்து வந்திருக்கிறதா? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குருகுலக் கல்வியை தீர்மானமாக கொண்டு வந்த நேரத்தில், எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இது குலக்கல்வித் திட்டத்தைவிட கொடுமையானது.

அண்ணன் மானமிகு வீரமணி அவர்கள் கொண்டு வந்திருக்கக்கூடிய இந்த தீர்மானத்தை எழுத்து பிசாகாமல் அப்படியே அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்று திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் என் ஆருயிர் சகோதரர் மானமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள்.

அனைவரும் ஆர்.எஸ்.எஸ். குருகுலத்திலிருந்து வந்தவர்கள்

குருகுலக் கல்வியினுடைய கொடுமைகளைப்பற்றி அண்ணன் வீரமணி அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடியின் ஆட்சி மத்தியில் அமைந்தவுடன், நம்மீது தொடுக்கப்பட்ட அஸ்திரம் - சமஸ்கிருத கல்வி வாரியம் என்று 2015 ஆம் ஆண்டு அறிவித்து, அதற்கு ஒரு ஆணையம் அமைத்து, அதில் 13 பேரை நியமித்தார். அவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். குருகுலத்திலிருந்து வந்தவர்கள். தேர்தல் ஆணையராக இருந்த கோபால்சாமி அவர்களை அந்த ஆணையத்திற்குத் தலைவராக நியமித்தார்கள்.

அவர்களுடைய பரிந்துரையின்படி, யுனெஸ்கோ நிறுவனத் திற்கு, சமஸ்கிருதத்தை அவர்கள் வளர்ப்பதற்கு 300 கோடி ரூபாய் வழங்கவேண்டும் என்று அறிவித்து, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுவிட்டதாக நான் அறிகிறேன்.

சர்வாதிகாரி நாட்டில்கூட, இட்லரின் சர்வாதிகாரத்தில்கூட...

ஒன்றல்ல, இரண்டல்ல - அவர்களின் சமஸ்கிருத பாடங்களை அனைத்துக் கல்விச் சாலைகளிலும் கொண்டு வரவேண்டும்; தகவல் ஊடகங்களில் கொண்டுவரவேண்டும்; மின்னணு பொறிகளில் கொண்டு வரவேண்டும். இந்த சமஸ்கிருதம்தான் இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இடம்பெறவேண்டும். இந்தியில் இலக்கணமும் கிடையாது; இலக்கியமும் கிடையாது. அதைப்பற்றி நாம் பேசவேண்டியதில்லை. இது செத்துப்போன மொழி சமஸ் கிருதம். மீண்டும் எங்களை சாகடிக்கத் தூண்டாதே! எங்கே எடுத்துக்கொண்டு வந்து திணிக்கிறாய்! சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, அவரே மதிப்பெண் போட்டுக்கொண்டு 10 ஆம் வகுப்பில் சேரலாம் என்றால், உலகத்தில் வேறு எந்த நாட்டிலும், சர்வாதிகாரி நாட்டில்கூட, இட்லரின் சர்வாதிகாரத்தில், தர்பாரில்கூட அவர் இதை நிறைவேற்றியதில்லை.

யூதர்களை ஒழிக்கவேண்டும் என்கிற விதத்தில், நேஷ னல் சோசலிசம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன், நான் ஒரு ஆரியன் என்று சொல்லிக் கொண்டிருந்தவன் - அவன்கூட இப்படிப்பட்ட கல்வி முறையை ஜெர்மனியில் கொண்டுவரவில்லை.

எனவே, இந்த சமஸ்கிருத மொழி என்பதைத் திணிக்க முற்பட்டிருக்கக் கூடிய வேளையில்தான், நம்முடைய ஒடுக் கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட சகோதரர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள் - நம்முடைய பிள்ளைகள் இனி டாக்டராக முடியாது; எம்.பி.பி.எஸ்.சில் சேர முடியாது. 91.1 சதவிகிதம் பள்ளி இறுதித் தேர்வில் தமிழகத்தில் மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். வட மாநிலங்களில் 60 சதவிகிதம், 65 சதவிகிதம்தான் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆனால், மருத்துவக் கல்லூரி நீட் தேர்வில் நாம் 34 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டோம்.

அனிதாவும், பிரதீபாவும் ஏன் தன்னுயிரை

மாய்த்துக் கொண்டார்கள்?

அனிதா ஏன் தன்னுயிரை முடித்துக்கொண்டாள்? பிரதீபா ஏன் தன்னை சாகடித்துக் கொண்டாள்? அனிதாவிற்கு பள்ளி இறுதி வகுப்பில், மூட்டைத் தூக்கும் தொழிலாளியின், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலித் தொழிலாளியின் மகள் 1,176 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். 1,176 மதிப்பெண் களைப் பெற்ற பெண்ணுக்கு மருத்துவப் படிப்பு படிப்பதற்கு, நீட் தேர்வால் இடம் கிடைக்கவில்லை. இந்த உலகில் நான் வாழ விரும்பவில்லை.

மத்திய அரசுக்கு குற்றேவல் புரிகிற எடுபிடி அரசு

ஒரு கூலித் தொழிலாளி வீட்டில், குடிசை வீட்டில், தாய், தந்தைக்கு உதவியாக வேலை செய்துகொண்டே படித்து, 1,176 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். நான் ஒரு டாக்டராகி சேவை செய்யவேண்டும்; என் கனவு கானல் நீராகிவிட்டதே, என்னை நானே அழித்துக்கொள்கிறேன் என்று தன்னை தானே அழித்துக்கொண்டாள். இந்த சாவிற்குக் காரணம் மத்திய அரசு. மத்திய அரசுக்கு குற்றேவல் புரிகிற எடுபிடி அரசு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.

பிரதீபா 1125 மதிப்பெண் பெற்றிருக்கிறார். கொடுமை என்ன தெரியுமா? கடந்த ஆண்டு நீட் தேர்விலும் மதிப்பெண் பெற்றாள். ஆனால், அரசு கல்லூரியிலே அவளால் சேர முடியவில்லை. தனியார் கல்லூரியில் சேருவதற்கு அவர்களிடம் பணம் இல்லை. நான் அடுத்த ஆண்டு, அரசு கல்லூரியில் சேருவதற்குரிய மதிப்பெண்களைப் பெற்றுவிடுவேன் என்று சொன்னாள். அய்யோ, செத்துப் போனாள்.

டாக்டர் தணிகாசலத்தைவிடஇருதயசிகிச்சையில்

சிறப்பான டாக்டர் இந்தியாவில் உண்டா?

தமிழகத்தில் உள்ள டாக்டர்களைவிட உயர்ந்த டாக்டர்கள் உலகத்தில் இருக்கிறார்களா? டாக்டர் தணிகாசலத்தைவிட இருதய சிகிச்சையில் சிறப்பான டாக்டர் இந்தியாவில் உண்டா? நான் இப்படி பட்டியலை வெளியிட முடியும். இவர்கள் எல்லாம் நம்முடைய பள்ளியில் இறுதித் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தவர்கள்.

ஒட்டுமொத்தமாக வடபுலத்தில் இருப்பவர்களைக் கொண்டு வந்து திணித்து, எங்கள் ஏழை, எளிய வீட்டுப் பிள்ளைகளை, தாழ்த்தப்பட்ட வீட்டுப் பிள்ளைகளை, பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துப் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்வி என்பதே கிடையாது. பல் மருத்துவக் கல்லூரிகளில் இடம் இல்லை என்கிறார்கள். இதை பொறியியல் கல்லூரிகளிலும் கொண்டு வரப் போகிறோம் என்கிறார்கள்.

பகைவர்களுடைய கவசங்களை உடைத்துத்

தகர்க்கின்ற வாளாக இருக்கும்

அதனால்தான் சொன்னேன், பெரியார் காலத்தில் இவ் வளவு பெரிய ஆபத்து வரவில்லை; காமராசர் காலத்தில் இவ் வளவு பெரிய ஆபத்து வரவில்லை; அண்ணா காலத்தில் இவ்வளவு பெரிய ஆபத்து வரவில்லை. ஆனால், அவர்களால் வார்ப்பிக்கப்பட்ட நாங்கள் இருக்கிறோம். அண்ணன் வீரமணி அவர்களே, உங்கள் வாயால் சொன்னீர்கள், திராவிட இயக்கத்தின் போர் வாள் என்று - வழக்கமாக நான் எந்தப் பட்டத்தையும் ஏற்றுக்கொள்பவன் அல்ல - ஆனால், உங்கள் வார்த்தைப்படி இந்த வாள் உறைக்குள் இனி போகாது; இந்த வாள் பகைவர்களுடைய கவசங்களை உடைத்துத் தகர்க்கின்ற வாளாக இருக்கும். லட்சியங்களுக்காக வாழ்வேன். தமிழ் இனத்தின் உயர்வுக்கு வாழ்வேன். தன்மானத்திற்காக, தமிழர்களின் உயர் வுக்காக, சமூகநீதி தழைப்பதற்காக, மதச்சார்பின்மை என்ற கொள்கையை காப்பதற்காக, இந்துத்துவாவின் சக்திகளின் இடுப்பை உடைத்து, பொடிப்பொடியாக நொறுக்கி, தூள் தூளாக ஆக்குவதற்காக நான் வாழ்வேன்.

இடது பக்கத்தில் அண்ணன் வீரமணி - வலது

பக்கத்தில் சகோதரர் தளபதி ஸ்டாலின்

54 ஆண்டுகள் ஓடி மறைந்தவிட்டன என்னுடைய பொதுவாழ்க்கை. ஆனால், நான் இன்றைக்கு மன மகிழ்ச்சியோடு இருக்கிறேன். இடது பக்கத்தில் அண்ணன் வீரமணி - வலது பக்கத்தில் சகோதரர் தளபதி ஸ்டாலின். நான் மனமகிழ்ச்சியோடு இருக்கிறேன். திராவிட இயக்கமாக இருக்கிறோம்.

ஆனால், எனக்கு வருகிற வேதனை என்னவென்றால், இந்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தினுடைய புகழ்மிக்க, நேர்மை தவறாத, குன்றிமணி அளவும் குறை காண முடியாத, உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், லோகூர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு நீதிபதிகளும், ஜஸ்டீஸ் செல்லமேஸ்வர் தலைமையில் கூடி, பாசிச பாதையில் இந்த நாடு போகிறது என்றார்கள்.

நீதியைக் கொன்று குழிதோண்டி புதைத்துவிட்டார்

இப்படி இந்திய நாட்டின் வரலாற்றில் நீதிபதிகள் சொன்ன வரலாறு கிடையாது. நான்கு நீதிபதிகளும் புகழ்மிக்க நீதிபதிகள். தலைமை நீதிபதியாக இருக்கிறாரே, நீதிபதி மிஸ்ரா. நான் குற்றம்சாட்டுகிறேன், காவிரி பிரச்சினையில், தமிழகத்திற்கு வஞ்சகமும், கேடும் செய்து நீதியை குழிதோண்டி புதைத்தவர் இந்திய நாட்டினுடைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. ஏழு தொலைக்காட்சிகள் என்னுடைய உரையினைப் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அய்.பி. ஒரு பக்கத்தில் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ரிப்போர்ட்டை அனுப்புங்கள். இந்திய நாட்டினுடைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியைக் கொன்று குழிதோண்டி புதைத்துவிட்டார் காவிரி பிரச்சினையில்.

I accused the Cheif Justice of  the Supreme Court of India who has betrayed the tamils on Cauvery issue buried justice.

இப்படியே போடு - தமிழில் சொன்னால் எங்களுக்குப் தெரியாது என்பீர்கள், அதனால்தான் ஆங்கிலத்தில் சொன் னேன்.

பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தது உண்டா?

இந்தக் கட்டத்தில்தான் சகோதரர்களே, தாத்ரியிலே ஒரு முகமது சகோதரன் முகமது அக்லக்,104 டிகிரி டைபாய்ட் காய்ச்சலில் படுத்துக் கிடந்தார். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. பசு மாட்டைக் கொன்று இறைச்சி வைத்திருக்கிறார் என்று அவரை அடித்தே கொன்றனர் பாவிகள். பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தது உண்டா? காஷ்மீரிலே கது வாவில், ஆசீபா என்கிற ஒரு முசுலிம் பெண். சின்னஞ்சிறு 8 வயது பெண் - கோவிலின் கர்ப்பக்கிரகத்திற்குப் பின்னால்  நாசமாக்கப்பட்டாள். யார் கோவிலைப் பழிப்பது - நாங்களா?

டாக்டர் கலைஞர் சொன்னதைப்போல, பராசக்தி படத்தில், கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்; கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடிய வர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன், அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேசமாகிவிட்டது என்பதை வெளிப்படுத்துவதற்காக.

இன்றைக்கு ஆசீபா என்ற பெண் கோவில் கர்ப்பக் கிரகத்திற்குப் பக்கத்தில் நாசமாக்கப்பட்டுவிட்டாள். கொல்லப்பட்டு விட்டாள். கண்டனம் தெரிவித்தாரா மோடி?

அதைவிட கொடுமை உத்தரப்பிரதேசத்தில், குல்தீப் சிங் பாரதீய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர், 17 வயது பெண்ணை நாசப்படுத்திக் கொன்று விட்டான். அந்தப் பெண்ணின் தந்தை, புகார் கொடுத்தார் காவல் நிலையத்தில். புகார் கொடுத்த நான்காவது நாள் அவர் கொல்லப்பட்டார்.

உனாவிலே, தலித் இளைஞர்கள் கட்டி வைத்து சித்திரவதை செய்யப்பட்டார்கள். கல்புர்கி கொல்லப்பட்டார் கருநாடகத்தில். சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டார். நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார் - இவர்கள் எல்லாம் பொதுவுடைமை சித்தாந்தத்திலே வளர்ந்தவர்கள். எல்லாவற் றையும்விட மிகக் கொடுமை - கவுரி லங்கேஷ் - சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் - மதச்சார்பற்ற தன்மை யைக் காப்பதற்காக போராடியவர் - இந்துத்துவா சக்திகளின் முகத்திரையைக் கிழித்தவர். வீட்டு வாசலிலே வைத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். லங்கேஷ் என்ற பத்திரிகை ஆசிரியரான கவுரி லங்கேஷ்.

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை - தெருத்தெருவாகப் போட்டு

தீ வைத்துக் கொளுத்தவேண்டும்

ஆக, படுகொலையாளர்கள் இவர்கள் -சிந்தனை யாளர்களை கொலை செய்கிறார்கள். எதிர்ப்பவர்களை கொலை செய்கிறார்கள். கோட்சேவுக்கு சிலை வைக்கவேண்டும் என்கிறார்கள். கோவில் கட்டுவோம் என்கிறார்கள். இதையெல்லாம்விட கொடுமை, இந்த ஆண்டு பாடத் திட்டம் - சி.பி.எஸ்.இ. மத்திய இடைநிலைக் கல்வித் திட்டத்தில், 12 ஆம் வகுப்புப் பாடத்தில், நரேந்திர மோடியைப்பற்றி ஒரு அத்தியாயம் இருக்கிறது. அவர் தேர்தல்களில் வெற்றி பெற்ற கீர்த்திகளைப் பாராட்டி ஒரு அத்தியாயம் இருக்கிறது. அவர் ஒரு பெரிய மகான் என்ற வர்ணனை இருக்கிறது. இந்துத்துவா என்ற கொள்கைக்கு விளக்கம் இருக்கிறது. தீ வைத்துக் கொளுத்தவேண்டும் இந்த சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை - தெருத்தெருவாகப் போட்டு தீ வைத்துக் கொளுத்தவேண்டும்.

மகாத்மா காந்தியின் படுகொலைக்குக் காரணமானவன் சாவர்க்கர்

மகாத்மா காந்தியார் பெயர் அதில் கிடையாது; பண்டிதர் நேரு பெயர் அதில் கிடையாது. வீரசவார்க்கர், ஒரு காலத்தில் லண்டனில் இருந்தபொழுது, விடுதலைக்குப் போராடி இருக் கலாம். பிரான்சு நாட்டு ஓரத்தில், தப்பிச் செல்ல முயன்றபொழுது கைது செய்யப்பட்டு இருக்கலாம்; அந்தமான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்கலாம்; சுதந்திரப் போர் எரிமலை என்ற புத்தகத்தை எழுதியிருக்கலாம். எட்டப்பன் முதலில் நல்லவனாக இருந்தான், அவன் துரோகம் செய்த பிறகு, அந்தத் துரோகத்தை காறி உமிழ்கிறோம் அல்லவா! அதைப்போல, வெள்ளைக்கார அரசாங்கத்திடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவன்தான், வீரசாவர்க்கர் என்ற சாவர்க்கர். மகாத்மா காந்தியின் படுகொலைக்குக் காரணமானவன் சாவர்க்கர்.

நாங்கள் மத சமயங்களுக்கு விரோதியல்ல. அய்யா பெரியாருடைய வழியில், நாங்கள் சுடரேந்தி வந்தாலும்கூட, இங்கே என் உரையைக் கேட்டுக்கொண்டிருக்கின்றவர்கள் அனைவரும் நாத்திகம் பேசுகிறவர்கள், இவர்கள் எல்லோரும் கடவுள் விரோதிகள் என்று நினைக்கக்கூடாது.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

பெரியாரிடமே கேட்டார்கள், கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே, கடவுள் நேரே வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? என்று.

உடனே பெரியார் சொன்னார், இருக்கார் என்று சொல்லிவிட்டுப் போகிறேன் என்றார்.

தேவாரம் ஒலிக்கட்டும், திருவாசகம் ஒலிக்கட்டும், தமிழ்ப் பண்கள் ஒலிக்கட்டும், சோமனுக்கு ஒரு நாள் மனைவியாக இருந்துவிட்டு, கந்தர்வனுக்கு ஒரு நாள் மனைவியாக இருந்துவிட்டு, அக்னிக்கு ஒரு நாள் மனைவியாக இருந்து விட்டு, இப்பொழுது போனால் போகுது என்று உனக்கு மனைவியாக்குகிறேன் என்று சொல்லும் சமஸ்கிருத மொழிக்கு அர்த்தம் புரிந்தால், செருப்பாலடித்து கையை உடைத்துவிடுவார்கள்.

நமக்கெல்லாம் தெரியாததை அய்யா

பெரியார் அவர்கள் கண்டுபிடித்திருக்கிறாரே!

சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியார் கொண்டு வந்தார் என்றால், அதை சட்டமாக்கும்பொழுது, அண்ணா அவர்கள் டபுள் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சட்டத்துறை செய லாளர்கள் எல்லாம் அந்த சட்டத்திற்கான பில்லை அய்யாவிடம் கொண்டு போய் காட்டுகிறார்கள்.

and tying of Thali - தாலியைக் கட்டுவதும் சேர்த்து என்று அதில் இருக்கிறது. ஆங்கிலத்தில்தான் அந்த டிராப்ட் இருக்கிறது.

அய்யா அவர்கள் அந்த அதிகாரியைப் பார்த்து,and tying of Thali  என்று சொன்னால், தாலி கட்டவில்லை என்றால், அந்த மணமுறை செல்லாது என்று ஆகிவிடுமே! என்றார்.

இந்தத் தகவலை அண்ணா அவர்களிடம் சொன்னதும், அண்ணா அவர்கள், வீரமணி, நான் எம்.ஏ., படித்திருக்கிறேன்;  நீ எம்.ஏ.,பி.எல்., படித்திருக்கிறாய். சட்டத்துறை செயலா ளர்கள் எல்லாம் சட்ட நுண்ணறிவு பெற்றவர்கள். நமக் கெல்லாம் தெரியாததை அய்யா பெரியார் அவர்கள் கண்டு பிடித்திருக்கிறாரே என்றாராம்.

சட்டக்கல்லூரி விடுதி விழாவில் தந்தை பெரியார்!

சட்டக்கல்லூரி விடுதியின் ஆண்டு விழாவில் உரையாற்ற தந்தை பெரியார் அவர்களை அழைத்திருந்தோம். சமுதாய சீர்திருத்தம் என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தார். கல்லூரிக்குச் செல்லாத கிழவனை நீங்கள் அழைத்துக் கொண்டு, எனக்கு இவ்வளவு பெரிய கவுரவத்தைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று பேசினார். 20 நிமிடங்களில் மின்சாரம் நின்று போனது; நாங்கள் ஜெனரேட்டர் வைக்கவில்லை.

நாங்கள் எல்லாம் பயந்துகொண்டே இருந்தோம் ஏனென்றால், அது விடுதி நாள் என்பதால், மாணவர்கள் விசில் அடித்து கலாட்டா செய்வார்களோ என்பதால்தான்.

15 நிமிடங்களும் ஒரு சத்தமும் இல்லாமல் கடந்தது. மின்சாரம் வந்து வெளிச்சம் வந்தவுடன், பெரியார் பேச ஆரம்பித்தார். சட்டக் கல்லூரி பையன்கள் மிகவும் முரட்டுப் பையன்கள் என்றார்கள்.  ஆனால், கல்லூரி காணாத இந்தக் கிழவனுக்காக இந்த 15 நிமிடமும் நீங்கள் அமைதி காத்தீர்களே, நான் அதை மறக்கமாட்டேன் என்று சொன்னார்.

அந்த நிகழ்வுதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. கடைசி நிமிடம் மூச்சு அடங்குகிற வரை தியாகராயர் நகரில், அறிவாசான் பெரியார் அவர்களே, நீங்கள் என்ன முழங்கினீர்களோ, அது எங்கள் இருதயத்திற்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்த முழக்கத்தை நாங்களும் எழுப்பி, அந்தக் களத்தை தயார்படுத்துகிற ஒரு நாள் வரும் என்கிற நம்பிக்கையில் நாங்கள் இருப்போம்.

அம்னெஸ்டி இன்டர்நேசனல்

உலக பொது மன்னிப்பு ஸ்தாபனம் - அம்னெஸ்டி இன்டர்நேசனல் சொல்லியிருக்கிறது - இந்தியாவிலே மத சகிப்பின்மை ஆபத்தாக வளர்ந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய ஆபத்து நம்மை சுற்றி வளைக்கிறது என்று பாருங்கள்.

ஆக, இத்தனை நிலைமைகளும் நடக்கிறபொழுது, பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்கிறாய். கீதையைப்பற்றி ஆசிரியர் அண்ணன் அவர்கள் எழுதிய புத்தகத்தை படிக்கச் சொல்லி அவர்களுக்கு அனுப்பவேண்டும்.

திருக்குறளைவிட உயர்ந்த நூல் உலகத்தில் வேறொன்று இருக்கிறதா? திருக்குறள் உலகப் பொது மறை. ஆனால், ஒருவகையில், இன்றைக்கு நான் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மத்தியில் உள்ள ஆட்சி அகற்றப்பட்டால், இந்த நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கும். கொடுமையான, அக்கிரமமான ஆட்சி  நீடிக்காது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக 145 இடங்களைத்தான் பெறும் என்பது என்னுடைய கணக்காகும்.

மேகலாயா நடைபெற்ற தேர்தலுக்காக 36 ஆயிரம் கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறார்களாம்; ஒரு ஓட்டிற்கு 50 ஆயிரம் கொடுத்தார்களாம்.

தமிழகத்தில் உள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர்மீதெல்லாம் பிரச்சினை இருப்பதினால், இவர்களை வளைத்துப் போட்டுக்கொண்டு, அ.தி.மு.க. எதிர்ப்பு ஓட்டுகளையெல்லாம் தி.மு.க. அணிக்குப் போகாமல் தடுப்பதற்காக என்னென்ன உபாயங்களை நீங்கள் செய்ய முனைகிறீர்களோ - சாணக்யத்தனத்தினை நீங்கள் செய்கிறீர்கள்.

அ.தி.மு.க.வின் எதிர்ப்பு ஓட்டுகள் - தி.மு.க. அணிக்குப் போகக்கூடாது - இதற்காக நீங்கள் புதிய புதிய உத்திகளை கையாளுகிறீர்கள்.

பாஷாணத்தில் புழுத்த புழு என்று அண்ணா ஒருமுறை சொன்னார். யாரிடம் வந்து உங்கள் வேலையைக் காட்டுகிறீர்கள். இவர்கள் தப்பித் தவறி இன்னொருமுறை மத்தியில் ஆட்சிக்கு வந்தார்களேயானால், இந்தியா ஒன்றாக இருக்காது. அதிலொன்றும் சந்தேகம் வேண்டாம்.

நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க முனைபவர்கள் - உபகண்டத்தை ஒரு நாடாகவே தொடர்ந்து நீடிக்க விரும்புகிறவர்கள் - இந்துக்களும், இசுலாமியர்களும், கிறித்துவர்களும், சீக்கியர்களும், பவுத்தர்களும், சமணர்களும், பகுத்தறிவாளர்களும் எல்லோரும் இணைந்து கரம் கோர்த்து வாழ முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள்.

ஒருசேர களத்தில் திரளவேண்டிய காலகட்டம் வந்திருக்கிறது. தெற்கு திசை தமிழ்நாடு அதற்கு வழிகாட்டட்டும். இந்தக் குரல் எங்கும் ஒலிக்கட்டும்.

சமூகநீதியைக் கொண்டு வந்த பெரியாரை வடநாட்டில் மதிக்கிறார்கள். பிஷம்பர்நாத் பாண்டே என்பவர் மாநிலங்களவை வைஸ் சேர்மனாக இருந்தார். காங்கிரசு கட்சியில் பெரிய தலைவர். வயது 80-க்கு மேல் இருக்கும். நான் அப்பொழுதுதான் மாநிலங்களவைக்குச் சென்றிருந்தேன். சேர்மன் நாற்காலியில் அவர் அமர்ந்திருப்பார். எனக்கு ஏழு நிமிடம்தான் ஒதுக்கியிருப்பார்கள். நான் 10, 15 நிமிடம் பேசுவேன். பேச விடுவார்.

நான்கூட நினைப்பேன். நான் புதிய ஆளாயிற்றே! எனக்கு சட்டசபை பயிற்சியும் கிடையாது. நான் சென்ட்ரல் ஹாலில் வருகிறபொழுது, என்னை அழைத்தார். நான் அவரிடம் சென்றேன், உட்கார் என்றார்.

பெரியார் வீட்டிற்குச் சென்று மூன்று மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டுவா!

நான் ஏன் உனக்கு ஒவ்வொரு நாளும் பெல் அடிக்காமல் நேரம் கொடுக்கிறேன் தெரியுமா? என்றார்.

என்மேல் உங்களுக்கு ஏதோ ஒரு அன்பு என்றேன்.

காந்தியார் அவர்கள் சொன்னார், ஈரோட்டிலுள்ள பெரியார் வீட்டிற்குச் சென்று மூன்று மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டு வா என்றார். நான் 22 வயது இளைஞனாக, ஈரோட்டிற்கு வந்து, மூன்று மாதம் பெரியாரிடம் இருந்தேன். உன்னைப் பார்க்கும்பொழுதெல்லாம், பெரியாருடைய பேரன் போன்ற ஞாபகம் வருகிறது. அதற்காகத்தான் உனக்குப் பேசுவதற்கு அனுமதி கொடுக்கிறேன் என்றார்.

அதைக் கேட்டு நான் பூரித்துப் போனேன்.

பெரியாருக்கு  - அண்ணா எழுதிய கடிதம்!

அண்ணா அவர்கள் அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கிலிருந்து எழுதுகிறார்கள்.

உடல் தேறி வருகிறது; குணம் பெற்று வருகிறது. ஆனால், களைப்பாக இருக்கிறது. கொஞ்சம் பசியின்மை இருக்கிறது. என்னை விமான நிலையத்தில் வழியனுப்ப வந்தபொழுது, உங்கள் முகத்தில் கலக்கத்தைக் கண்டேன். சமீபத்தில் நான் துறவியாகப் போய்விடுவேனோ என்று நீங்கள் எழுதிய கட்டுரையைப் பார்த்தேன் தந்தைக்குத் தனயன் - தலைவருக்குத் தலைமாணாக்கன் எழுதுகிறார்.

உலகத்தில் எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைக்காத வெற்றியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்று அண்ணா, பெரியாருக்கு எழுதுகிறார்.

அந்த வார்ப்புகள்தான் நாம் இருக்கிறோம். ஒரு உறுதியை எடுத்துக்கொள்ளவேண்டும். இன்றைய விடுதலையில் மிக அருமையான அறிக்கையை அண்ணன் அவர்கள் எழுதியிருக்கிறார். அதனை துண்டறிக்கையாக வெளியிட்டு, எல்லா இடங்களிலும் கொடுக்கவேண்டும்.

நீட்டை ஒழித்துக்கட்டவேண்டும். நீட் பிரச்சினைபற்றி பேசுவதற்கு ஒரு முதலமைச்சரையே சந்திக்க நேரம் ஒதுக்கமாட்டேன் என்கிறார் பிரதமர்.

ஏழரை கோடி மக்களை நீங்கள்

உதாசீனப்படுத்தி விட்டீர்கள்!

தமிழ்நாட்டில் உள்ள ஏழரை கோடி மக்களின் பிரதிநிதிகளாக முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், அனைத்துக் கட்சித் தலைவரும் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கவேண்டும் என்று கேட்டால், மிஸ்டர் நரேந்திர மோடி, சந்திக்க முடியாது என்று மறுக்கின்ற அதிகார ஆணவத் திமிராக அல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்? ஏழரை கோடி மக்களை  நீங்கள் உதாசீனப்படுத்தி விட்டீர்கள். அதனை என்றைக்கும் நாங்கள் மறக்கமாட்டோம்.

எனவே, மத்தியில் இப்பொழுது உள்ள அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது. வரக்கூடாது.  மதச்சார்பின்மையைப் பாதுகாக்கின்ற ஆட்சிதான் வரவேண்டும். வரும்.

செக்குலரிசத்தையே பிரியாம்பிளிலிருந்து எடுத்துவிடவேண்டும் என்கிறார்கள்.

ஆனால், எல்லா இடங்களிலும் மரண அடி விழுந்து கொண்டிருக்கிறது தேர்தல்களில். ராஜஸ்தான் கைவிட்டுப் போய்விட்டது; மத்தியப் பிரதேசம் கைகழுவப் பட்டுவிட்டது. கருநாடகாவிலும் அடிவாங்கியிருக்கிறீர்கள்.

ஒரு மாநிலத்திலும் இனிமேல் நீங்கள் வெற்றி பெற முடியாது. ஆகவே, அத்தகைய முடிவை எடுத்துக்கொண்டு, இங்கே வந்திருக்கின்ற தோழர்கள் ஒவ்வொருவரும் 100 பேராக மாறவேண்டும்.

அய்யா பெரியாரின் கனவுகள் நனவாகும்

நம்முடைய களம் சமூகநீதியைக் காக்க, ஜனநாயகத்தைக் காக்க, மதச்சார்பின்மையை காக்க -நம்முடைய பிள்ளைகள் டாக்டர்களாக, என்ஜினியர்களாக, பல் மருத்துவர்களாக வருவதற்கு இந்த நீட் தேர்வு என்கிற இந்த நாசகார திட்டத்தை குப்பைத் தொட்டியில் கிழித்துப் போடுகிற நிலையை உருவாக்க - இந்த அரசு அகலும் - புதிய அரசு அமையும். அந்த அரசு திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் பங்கெடுத்து அமைகின்ற அரசாக இருக்கும். அய்யா பெரியாரின் கனவுகள் நனவாகும்.

எப்பொழுது அழைத்தாலும் வைகோ வருவான்!

அண்ணன் வீரமணி அவர்களே, எப்பொழுது அழைத்தாலும் வைகோ வருவான்; வைகோ மட்டுமல்ல, என் சகாக்களும், என் சகோதரர்களும் வருவார்கள். நாளைய போராட்டக் களத்திற்கு இங்கே டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் வந்திருக்கிறார், மாவட்டச் செயலாளர் ஜீவன் வந்திருக்கிறார், மாவட்டச் செயலாளர் கழகக் குமார் வந்திருக்கிறார், மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி வந்திருக்கிறார், மாவட்டச் செயலாளர் மகேந்திரன் வந்திருக்கிறார். இவர்கள் எல்லோரும் நாளை நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்முன் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்று கேட்டு அமைகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றினார்.

பார்ப்பன மயமாகும் மத்திய அரசுத் துறைகள்

மத்திய அரசின் முக்கிய பத்து துறைகளுக்கு கூட்டுச் செயலாளர் பதவிகளுக்கு வெளியிலிருந்து யாரும் விண்ணப்பிக்கலாம் - தனியார்த் துறைகளில் பணியாற்றுவோரும் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். (விடுதலை 12.6.2018) அரசமைப்புச் சட்டப்படி அது தவறானது என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

மத்திய அரசின் இணைச் செயலாளர்கள் பதவிகளில் நியமனம் செய்வதற்குப் புதிய அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அரசுத் துறைகளில் திறமை வாய்ந்தவர்களைக் கொண்டுவரும் பொருட்டு இந்த ஏற்பாடாம்.

இந்த இணைச் செயலாளர் பதவிகளுக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து  2 லட்சத்து 18 ஆயிரத்து 200 ரூபாய் வரை மாத சம்பளமாம் - மூன்றாண்டுகள் வரை பணியாற்றலாம்; தேவைப்படும் பட்சத்தில் 5 ஆண்டுகள்வரை கூடத் தொடர வாய்ப்புள்ளது.

மத்திய பி.ஜே.பி. அரசின் நிர்வாகத் திறனும், அணுகுமுறையும் எவ்வளவுக் கேவலமாக, பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு என்றாலும், அந்தப் பட்டியலில் இது சிகரம் வைத்தது போன்றதாகும். தகுதி - திறமை பார்த்து, அய்.ஏ.எஸ். போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று, பல்லாண்டுகாலம்  அரசுத் துறைகளில் பணியாற்றிய மூத்த அதிகாரிகள் எல்லாம் திறமையற்றவர்கள்தானா?

உண்மையைச் சொல்லப்போனால் இப்படி எல்லாம் நிருவாகத்தில் குழப்பம் உண்டாக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிடும் இத்தகைய அமைச்சர்கள்தான் திறமையற்றவர்களாக இருக்கிறார்கள். தகுதி - திறமை அடிப்படையில்தான் அமைச்சர்கள் வரவேண்டும் என்றால், அதில் பிரதமர் நரேந்திர மோடிகூடத் தேறுவாரா?

மத்திய அரசின் இந்தப் புதிய முடிவால் ஏற்கெனவே பணியாற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியும், மன உளைச்சலும் ஏற்பட்டு, நிர்வாகக் குழப்பத்தில்தான் முடியும்.

தனியார்த் துறையிலிருந்து அதிகாரிகளை மத்திய அரசுத் துறைகளுக்குக் கொண்டு வந்தால், மத்திய அரசின் கொள்கை முடிவுகளும், திட்டங்களும் மாஜி முதலாளிகளுக்குக் கையும், உறையுமாகப் போய்ச் சேரும் என்ற அடிப்படைப் பொது அறிவுகூட மோடி அரசுக்குக் கிடையாதா? வெட்கக்கேடு!

இதில் இன்னொரு முக்கியமான அடிகோடிட்டுக் கவனிக்கத்தக்க அம்சம் ஒன்று விஷக் கொடுக்கை நீட்டிக் கொண்டுள்ளது.

இப்படி வெளியிலிருந்து இணைச் செயலாளர் பதவிகளை நியமனம் செய்வதில் இட ஒதுக்கீடுக்கு இடம் இருக்கப் போவதில்லை. அது குறித்த விவரம் அறிவிப்பில் இல்லை என்பதைக் கவனிக்கவேண்டும்.

தனியார்த் துறைகளில் பெரிய பெரிய அதிகாரிகளாக இருப்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களே! அவர் களையெல்லாம் மத்திய அரசுத் துறைகளில் கொண்டு வந்து திணிக்கும் திரைமறைவு சூழ்ச்சி இதற்குள் பதுங்கிக் கொண்டிருக்கிறது.

மத்திய பி.ஜே.பி. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் (நீட்' முதல் குருகுலக் கல்வி உள்பட) சமூகநீதியின் கழுத்தில் கத்தி வைப்பதில்தான் கூர்மையாக இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. இன்னும் ஓராண்டுதான் மத்தியில் பி.ஜே.பி. இருக்கப் போகிறது. அதற்குள் தங்க ளுக்கு வேண்டிய பார்ப்பன அதிகாரிகளை முக்கிய துறை களில் எல்லாம் கொண்டு வந்து வைத்துவிட வேண்டும் - பார்ப்பன அதிகார மய்யத்தை உருவாக்கவேண்டும் என்ற உள்நோக்கம் இதில் சூட்சமமாக இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட, சிறுபான்மை உறுப்பினர்கள் எல்லாம் கட்சி வேறுபாடின்றி எதிர்க்கவேண்டும். நாடாளுமன்றம் கூடும்வரை காத்திராமல், இவர்கள் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றவர்களைச் சந்தித்து இத்திட்டத்தைக் கைவிடவேண்டும் என்று வற்புறுத்தவேண்டும்.

இது மிகமிக அவசரம், அவசியம்! மனுதர்ம ஆட்சியின் கடைசிக் காலத்தில் இன்னும் என்னென்ன சமூக அநீதிகள் தலைதூக்குமோ என்று தெரியவில்லை.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! எதற்காகப் போராட்டம் என்று கேட்கும் அதிமேதாவிகள் மத்திய அரசின் இத்தகு சமூக அநீதிப் போக்குகளைப் பார்த்துக்கொண்டு பேன் குத்திக் கொண்டு இருக்கவேண்டுமா? இப்படிக் கருத்துக் கூறுபவர்கள் எல்லாம் பி.ஜே.பி.யின் ஊதுகுழல்கள் என்பதையும் அம்பலப்படுத்துவோம்!

தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த 68 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வாழும் மூத்த பத்திரிக்கையாளர் - மூத்த எழுத்தாளர் - இலக்கியவாதி - திரை கலைத்துறை விமர்சகர் 80 வயதினைத் தாண்டிய மதிப்பிற்குரிய அய்யா ஏ.பி.ராமன் அவர்கள்.

எல்லாப் பொது நிகழ்ச்சிகளின் அழைப்பை ஏற்று, பார்வையாளராக இருந்து, அது பற்றிய சுருக்கமான செய்தியையும் விருப்பு வெறுப்புக்கு இடந்தராமல் எழுதிடுவார் இணையத்தில்!

இவ்வளவு பரந்த அனுபவமும், சிறந்த ஞானமும் உடைய திரு. ஏ.பி.இராமன் அய்யா அவர்கள் 'சிங்கையில் தமிழும் தமிழரும்' என்ற தலைப்பில் எழுதிய நூலின் பிரதியை சிங்கப்பூர் கவிதா மாறன் மூலம் அனுப்பினார். நன்றியுடன் பெற்றோம்.

படித்தேன் - சுவைத்தேன் - இந்நூல் ஒரு கொம் புத்தேன் என ஆற்றொழுக்கான நடையில், எடுத்தவுடன் கீழே வைக்க இயலாது ஒரே மூச்சில் படித்துவிட்டேன்!

இந்நூலுக்கு இவருக்குத் துணையாகவும், தூண்டுகோலாகவும் இருந்தவர் திருமதி சவுந்திர நாயகி வைரவன் அவர்கள் ஆவார்கள்.

சிங்கப்பூரின் அறிஞர்கள் திருவாளர்கள் கேசவ பாணி (தலைவர், சிங்கப்பூர் இந்தியர் சங்கம்), ஆர்.இராஜாராம் (தலைவர், சிங்கப்பூர் வளர் தமிழ் இலக்கியம்), அவ்விருவரின் முகவுரைகளும், சிங் கையில் தமிழ் மணம் என்ற தலைப்பில் சிறந்ததோர் பீடிகை உரையாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் (N.U.S.) - பின் சிம் (SIM) பல்கலைக் கழகத்தில் பேராசிரியர், முனைவர் சுப.திண்ணப்பன் அவரின் அரிய கட்டுரையும் இந்நூலுக்கு அணி சேர்த்து ஒளி வீசச் செய்கின்றன.

என்னுரை என்ற தலைப்பில் புத்தக ஆசிரியரின் மிக அருமையான கருத்தோட்டம் பளிச்'சிடுகிறது.

இது ஓர் ஆய்வு நூல் அல்ல. நானும் ஓர் ஆய்வாளன் அல்லன்.

சிறந்த ஆய்வாளர்களின் நூல்கள் பலவற்றைப் படித்த பின் எழுதப்பட்ட நூல் இது.

1950லிருந்து சிங்கப்பூரில் வளர்ந்து வாழும் என் நேரிடை வாழ்வனுபவங்களைப் பின்னிப் பிணைந்த  சம்பவங்களும், அதனை சுற்றிச் சூழும் விவரங் களும் இதன் பொருளடக்கம்.

ஒரு கிராமம் எப்படி உலகம் புகழும் நகரமாகி யது? ஆள் அரவமில்லாத சதுப்புக்காடு உலகத் தொழில்மயபூமியாக ஏன் விளங்குகிறது? இந்தியாவின் தென்கோடித் தமிழரும், அவர்களின் உயிர் மூச்சான தமிழும் சிறப்பாக இங்கே எப்படி விளங்க முடிகிறது? இதை விளக்க முயற்சிப்பது என் நோக்கம்.

இதுதான் ஒருவிதத்தில் என் ஆய்வுப் பொருளும் கூட!

தமிழின் ஊற்றகம் தமிழ் நாடு. அங்கே ஊறிய தமிழ்தான், தமிழன் வாழும் பூமியெல்லாம் பீறிட்டுப் பாய்ந்து ஓடுகிறது. அந்த வற்றாத நீர் ஊற்றிலிருந்து நனைந்து புறப்பட்ட தமிழ் இனம், இன்று தாம் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழைக் கொண்டு போய் சேர்க்கபடாத பாடுபடுகிறது.

சிங்கப்பூரில் தமிழ் வளர்ந்த வரலாறு சுவையானது. சீனர், மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் எதிர்நீச்சல் போட்டு வளர்ந்த மெ ழி தமிழ்! இது, மற்ற பெரும்பான்மையினர் மனமுவந்து நமக்குத் தந்த மிகப் பெரிய சலுகையும்கூட.

இன்று நாம் தமிழைப் போற்றுகிறோம். தாய் மொழிக்குப் பெருமை சேர்க்கிறோம். அதிகாரத்துவ மொழியாக விளங்கும் தமிழை, அடுத்த தலை முறையினருக்கும் உரிமையாக்கும் முயற்சியில் நாம் இறங்கியுள்ளோம். அதற்கு நமக்கு இன்று முன்னின்று உதவுவது நம் அரசாங்கம்!

- இவ்வாறு சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ்ப் பாதுகாப்புக்கும் பெரிதும் அரசு துணை நிற்கிறது! தூண்டுகோலாக இருந்து துணை புரிந் துள்ளது.

நவீன சிங்கப்பூரின் தந்தையாக போற்றப்படும் மேனாள் பிரதமர் மதியுரை மந்திரி (Mentor Minister) ஆக நீண்டகாலமிருந்து வழிகாட்டி இரண்டாம், மூன்றாம் நிலை தலைவர்களையும் உற்பத்தி செய்து சிங்கப்பூர் ஒரு உலக மய்யம் எல்லாவற்றிற்கும் என்ற நற்பெயர் ஈட்டியுள்ள சிங்கப்பூர் வளர்ச்சி அபாரமான ஒன்று என்பது உலகம் அறிந்ததோடு, பாராட்டி, அதனைப் பின் பற்றவும் முயலுகின்றன.

லீக் குவான்யூ (Lee Kuan Yew) அவர்கள் 70 விழுக் காட்டிற்கு மேற்பட்டோரின் சீன மொழியையும் தேசிய மொழி - ஆட்சி மொழியாக ஆக்குங்கள் என்று பலரும் யோசனை கூறியதோடு பெரும் அழுத்தத்தையும் தந் தனர். லீக்குவான்யூ அவர்கள் அதற்கு இணங்காமல் மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் வணக்கம் ஆரம் பித்து ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி, வானொலி எல்லாவற்றிலும் 4 மொழிகளில் வணக்கம் கூறிடும் நிலை அங்கே உண்டு.


நாடாளுமன்றத்தில் 4 மொழிகளிலும் ஒரே நேரத்தில் (Simultaneous Translation) மொழி பெயர்ப்பு வசதிகளைச் செய்து தந்துள்ளனர்.

லீக் குவான்யூ அவர்கள் தான் எழுதிய "இரு மொழிக் கொள்கைகள்" பற்றிய நூலில்,

சீன மொழி பேசுவோர் பெரும்பான்மை என்பதால் அதை ஆட்சி மொழியாக்கிட பலரும் சொன்ன யோசனையை நான் ஏற்கவில்லை; காரணம் பெரும்பான்மை - சிறுபான்மை பிரச் சினை வந்துவிடும்.

ஆங்கிலம் ஆட்சி மொழியானால், அதனால் ஏற்படும் வசதிக்குறைவு, மற்ற அத்தனை மொழி பேசுவோருக்கும் சம ஈவு அளவில் பிரித்துக் கொடுக்கப்படும் வாய்ப்பு உண்டாகுமே என்ற தொலைநோக்குடன் எழுதியுள்ளார்!

தமிழர்கள் எண்ணிக்கை 8 சதவிகிதம்தான் என்றாலும், 70 சதவிகித சீனர்களுடன் சமஉரிமை யைப் பெற்று பிரச்சினைக்கு இடமன்றி வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றனர்.

சிங்கப்பூர் பற்றி 19 தலைப்புகளில் அரிய தகவல் களஞ்சியமாக, ஆவணமாக பதிவு ஆகி உள்ளது. நவில்தோறும் நூல் நயம் - பயில்தொறும் பண் புடையாளரால் எழுதப்பட்டுள்ளது!

ஆய்வு நூல் அல்ல என்பது ஓரளவு உண்மை தான் - அத்தகுதி இதில் உள்ளது? அதேநேரத்தில் ஒரு "சாய்வு நூலும்" அல்ல?

வட அமெரிக்க தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்கு ஆய்வாளரான தமிழர் அமர்நாத் இராமகிருஷ்ணனை அனுப்ப மறுப்பது ஏன்?

ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டது திராவிட நாகரிகம் என்பதை இருட்டடிப்பதா?
 

கீழடியில் அகழ்வாராய்ச்சியில் மேற்கொண்டு, திராவிட நாகரிகத்தின் தொன்மையை வெளி யில் கொண்டு வந்த ஆய்வாளர் அமர்நாத் இராம கிருஷ்ணனை கீழடியிலிருந்து முன்பு இடமாற்றம் செய்ததோடு மத்திய அரசு, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சிறப்புக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள  அறிக்கை வருமாறு:

கீழடி அகழாய்வு ஆராய்ச்சி 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியோடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மூத்த குடி தமிழ்க்குடி' என்ப தற்கான வரலாற்று ஆவணம் கீழடியில் கிடைத்திருப் பது உலகத் தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை! மிகவும் தொன்மையான கீழடி ஆய்வு, இன்றைக்குப் பாதியோடு நிறுத்தப்பட்டு இருக்கிறது. இங்கே மனி தர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் இல்லை. தொழிற்சாலைகள் இருந்திருக்கலாம் என்ற ரீதியில் மழுப்பலான அறிக்கையைக் கொடுத்து, மண் ணைப் போட்டு மூடுவிழா கண்டிருக்கிறார், இதன் கண்காணிப்பாளரான சிறீராமன்.

தமிழர்களின் நாகரிகத்தை, தொன்மையை இருட் டடிப்பு செய்வதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இப்பொழுது ஏற்கெனவே தோண்டப் பட்ட 9 குழிகளையும் மூடும் பணி நடைபெற்று வருகிறது.

2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகம்
சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தில், கடந்த 2015-2016 ஆம் ஆண்டுவரை தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில், 2,500 ஆண்டுகள் பழைமையான தமிழர்களின் நாகரிகம், 5000-த்துக்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் என முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய் வில்கண்டுபிடிக்கப்பட்டன.ஆரியநாகரிகத்திற்குமுந் தையது என்றும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த அகழ் வாராய்ச்சியைக் கீழடி அகழாய்வுக் குழுவின் தலைவராக அப்போது இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் மிகுந்த ஆர்வத்துடன், முழுமையாக ஆய்வை மேற்கொண்டார்.

மூன்றாம் கட்ட ஆய்வுப் பணிகள் முடிவடைந்துள்ளன. நீதிமன்றம் நான்காம் கட்ட ஆய்வுக்கு, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தொல்லியல் துறை தொடர்ந்து ஆய்வு செய்ய அனுமதி வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. அதிகாரிகள் யாரும் அங்கு இல்லாததாலும், கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களைப் பார்க்க முடியாமலும் சுற்றுலாப் பயணிகள் கீழடிக்கு வந்து ஏமாற்றத்துடனும் திரும்பிச் செல்கின்றனர். நான்காம் கட்ட ஆய்வு நடக்குமா? நடக்காதா? என்கிற சந்தேகம் சமுக ஆர்வலர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. 110 ஏக்கரிலும் ஆய்வு செய்யப்படவேண்டும். மக்களோடு மக்களாக இருக்கும் ஆய்வாளர்கள் வரவேண்டும். அப்போதுதான் நாங்கள் நிலம் கொடுப்போம் என்று விவசாயிகள் ஒரு பக்கம் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந் நிலையில்தான் குழிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதோடு நின்றுவிடுமா கீழடி அகழாய்வு ஆராய்ச்சிப் பணி? இந்தக் கேள்வி, ஒவ்வொரு தமிழரின் கேள்வியாக இன்று எழுந்து நிற்கிறது.

ஹரப்பா திராவிடர் நாகரிகம் பாதுகாக்கப்படுகிறது
140 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஹரப்பா திராவிடர் நாகரிக அடையாளங்கள், இன்றும் பாகிஸ்தானின் அழகு குலையாமல் காக்கப் படுகின்றன. கீழடியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட கீழடி ஆய்வு முழுமையாக ஆய்வு முடியாத நிலையில் குழிகள் மூடப்படுவது அதிர்ச்சிக்குரியது.

தமிழரான ஆய்வாளர் மாற்றப்பட்டார்


வரலாற்றுச் சிறப்புமிக்க ஆய்வினை மேற்கொண்ட தமிழரான அமர்நாத் இராமகிருஷ்ணன் திடீரென அசாம் மாநிலத்திற்கு மத்திய அரசு மாற்றியதே உள் நோக்கம் கொண்டது என்று கடும் எதிர்ப்பு தமிழ்நாட்டில் வெடித்துக் கிளம்பியது.

அந்த அதிகாரி தொடர்ந்திருந்து, ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்நேரம் மிகப்பெரிய உண்மைகள் வெளிப்பட்டிருக்கும்.

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்க கூட்டமைப்பின் அழைப்பும் -

அமர்நாத் இராமகிருஷ்ணனுக்குத் தடையும்!


இந்நிலையில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கக் கூட்ட மைப்பின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள 50 தமிழ்ச் சங்கங்கள் இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. கூட்டமைப்பின் ஆண்டு விழாவையொட்டி இந்த சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை ஒன்றாம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது.  அவ்வமைப்பின் அழைப்பின் பேரில் இதில் பங்கேற்க, இதற்கான அனுமதி கோரி, பயண ஆவணங்களுடன் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் கடிதம் எழுதினார். ஆனால், இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று அதன் துணை இயக்குநர் தாரா சந்தரிடமிருந்து மே 25 ஆம் தேதி பதில் கடிதம் வந்துள்ளது. இதற்கான காரணம் தெரிவிக் கப்படவில்லை.

ஆரியர் - திராவிடர் போராட்டம்

இது மத்திய அரசின் மிகவும் கீழ்த்தரமான ஓர் உள்நோக்கம் கொண்ட முடிவாகும்.  இவரை அமெ ரிக்கத் தமிழர்கள் அழைப்பது தமிழர் நாகரிகம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான். அதற்கு இந்திய அரசு பெருமைப்பட வேண்டுமே தவிர, ஆத்திரப்பட்டு இம்மாதிரி தவறான உரிமைப் பறிப்பு செய்கைகளில் ஈடுபடக்கூடாது. இவர் அமெரிக்கா சென்றால், கீழடி அகழாராய்ச்சிபற்றிய  உண்மை நிகழ்வு கள் தமிழர் மாநாட்டில் வெளிப்படுத்திவிடுவார். இதனால், அந்நிய மண்ணிலும் தமிழர் பழைமை நாகரிகம் குறித்த பேச்சு எழும் என்னும் எண்ண ஓட்டத்தினாலேயே மத்திய அரசின் சூழ்ச்சிதான் இந்த அனுமதி மறுப்பு ஆகும். தொன்று தொட்ட தமிழர் நாகரிகம் உலகுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் இந்திய மத்திய அரசு முனைப்பாக உள்ளது. அரசமைப்புச் சட்ட உரிமையைப் பறிக்கலாமா?

நாட்டில் நடப்பது ஏதோ அரசியல், அரசாட்சி என்று கருதக்கூடாது. ஆரியர் - திராவிடர் போராட்டம்தான் என்பதற்கு மேலும் இது ஓர் எடுத்துக்காட்டே!

திராவிட' பெயரைக் கட்சியில் வைத்துள்ள அதிமுக அரசு - இதில் தலையிட்டு திராவிட நாகரிகத்தை உலக அரங்கில் கொண்டு செல்லக் கிடைத்த வாய்ப்பிற்கு முட்டுக்கட்டை போடும் மத்திய அரசிடம் வற்புறுத்தி, தமிழரான ஆய்வு அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களை அமெரிக்க மாநாட்டிற்கு அனுப்பி வைக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.


கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

13.6.2018

Monday, June 11, 2018

"சாதி ஒழிப்பும் ஆச்சாரியார் கல்வித் திட்ட ஒழிப்பும் ஒன்றே!"

                                                           **தந்தை பெரியார்**

மனித சமுதாயத்தின்  மக்கள் பிறவியில் உள்ள பேதத்தை  ஒழிப்பதற்காகவும், மற்ற நாட்டு  மக்களைப்போல் நாமும் நம் நாட்டில் பூரண சுயேட்சை, சம அந்தஸ்து, சம உரிமையோடு வாழ்வதற்காகவும் பாடுபடுவதாகும். சமு தாயத்தின் பேரால், சாஸ்திரங்களின் பேரால், மதத்தின் பேரால், சட்டங்களின் பேரால் நம்  மக்களுக்குள்ள இழிவு களைப் போக்கப் பாடுபட்டு வருகிறது. சமுதாயத்துறையிலே, மதத்துறையிலே, கடவுள் துறையிலே,  திராவிட மக்களுக்கு இழைத்த கேடுகளை  ஒழிக்கவே சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற புத்தர் கொள்கைப் பிரசார மாநாட்டில் தீர்மானம் போட்டோம்.

அம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் - உலக புத்த மத அய்க்கிய சங்கத் தலைவர் (ஜி. பி. மல்லலசேகரா). மாநாட்டைத் திறந்து வைத்தவர் எல்லா இந்திய தாழ்த்தப் பட்டவர் சங்கக் காரியதரிசியும், பார்லிமெண்டு மெம் பருமான தோழர் ராஜ்போஜ் அவர்கள் ஆவார்கள். இப்போது இங்கு ஷெட்யூல்வகுப்பு ஸ்தாபன சார்பாக மாலையிட்ட நண்பர். நாங்கள் இம்மாநாடுகளின் தீர்மானங் களைஆதரிக்கின்றோம்; ஆச்சாரியார் கல்வித்திட்ட ஒழிப்புமாத்திரமல்ல, ஜாதி ஒழிப்புக்கும் நீங்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திராவிடர் கழகக் கொள்கை என்ன என்பதை அவர் சரிவர புரிந்துகொள்ள வில்லை என்று கருதுகிறேன்.

ஜாதி ஒழிப்பு என்பதும், ஆச்சாரியார் கல்வித்திட்ட ஒழிப்பு என்பதும்  வேறு அல்ல. ஆச்சாரியார் கல்வித்திட்டம் ஒழியவேண்டும் என்று ஏன் கூறுகிறோம்? அவர் கல்வித்திட்டமே தன் சுயஜாதி பாதுகாப்புத் திட்டமாகும். அதாவது வருணாசிரம பாதுகாப்புத் திட்டம். ஆகையால் அதை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஜாதி என்பது வருணாசிரமத்தின்படி ஏற்பட்டதாகும். ஜாதிகளை எடுத்துக் கொண்டால் அவை அத்தனையும் 3 ஜாதிக்குள் அடங்கி விடும். இன்று செட்டியார், நாயுடு, முதலியார், கவுண்டர், ரெட்டியார், படையாச்சி, பறையன், சக்கிலி என்று சொல்லப் படும் அத்தனை ஜாதிகளும் அந்த 3 ஜாதிக்குள்ளேயேதான் அடங்கிவிடுகின்றன. என்ன அந்த 3 ஜாதி? 1. பார்ப்பான் அதாவது பிராமண ஜாதி என்று ஒருவன் சொல்லிக் கொள்வது; 2. சூத்திரஜாதி நம்மவர்களை - திராவிடர்களைக் காட்டுவது 3. அடுத்தாற்போல் ஆதாரம் இல்லாமல் தந்திர மான முறையில் புகுத்திய பஞ்சம ஜாதி அல்லது சண்டாள ஜாதியாகும். இன்றைய தினம் நாட்டிலே வருணாசிரம  முறைப்படிதான் இந்தப் பார்ப்பனனும், நம்மவர்களான சூத்திரர்களும், பஞ்சமர்களும் இருக்கின்றனர்.

நம்மவர்களில் சிலபேர் அவனை பிராமணன்  என்றே கூப்பிடுகிறார்கள்.

சில பார்ப்பன அடிமைகள் "திராவிடர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?" என்று தெரிந்தோ தெரியாமலோ கேட்கிறார்கள். பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்களெல் லாரும் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள் தான். இதை அவர்கள்  பின்பற்றுகிற கலாசாரப் படி கூறுகிறோம். உதாரணமாக, முஸ்லிம் ஒருவரை இரத்தப் பரிட்சை செய்து பார்த்தால், நமக்கும் அவருக்கும் பேதம் இருக்காது. அவன் முன்பு நம்மவனாக இருக்கலாம். ஆனால் கலாசாரப்படி முஸ்லிம் என்கிறான். பார்ப்பானை ஏன் ஆரியன் என்கிறோம்? ஆரிய கலாசாரம் வேறு; அவன் பூணூல் போட்டுக் கொள்கிறான். ஆரியர்கள், மற்றும் ஆரியர் கடவுள்கள், இதிகாசங்கள், சாஸ்திர புராணங்கள் வேறு. ஆனால் இவற்றையெல்லாம் நம் தலைமையில் கட்டினான். அவன் வேறு ஜாதி, பிறப்பு; நாம் வேறு ஜாதி, பிறப்பு என்ற முறையைப் புகுத்தினான்.

ஆச்சாரியார் புதுக் கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்ததன் நோக்கமென்ன? அந்தக் கல்வித்திட்டத்தின் அடிப்படை என்ன? நீங்கள் கவனிக்க வேண்டும். சூத்தி ரர்கள் படிக்கக்கூடாது. இதுதான் ரகசியம். வேறு ஒன்று மில்லை. பாதிநேரம் படிக்கச்சொல்லுகிறார். அந்தந்த சாதித் தொழில் சரிவர செய்யும் அளவுக்குப் படிக்கவேண்டும். ஆரியரின் ஜாதிமுறை, வருணாசிரம முறை. வருணாசிரம முறைப்படி, நாம் படிக்கவே கூடாது. ஏதோ வெள்ளைக்காரன் காலத்தில் நாம் 100க்கு 10 பேர் படித்துவிட்டோம். அந்தப் படிப்பைப் படித்ததால் இன்று நாம் பார்ப்பனர்களை மதிப்பது கிடையாது. அவர்கள் என்ன உசத்தி, நாம் என்ன தாழ்வு என்கிறோம். இன்று நகரங்களில் யாரும் பார்ப்பானை "சாமி" என்று கூப்பிடுவது கிடையாது. ஏதோ பட்டிக்காட்டில் தெரியாத காரணத்தால் கூப்பிட்டுக் கொண்டிருக் கிறார்கள். சிலர் மான உணர்ச்சி இல்லாமல் "சாமி" என்கிறார்கள். அதுவும் மாறிக்கொண்டுவருகிறது.

திராவிடர்களாகிய நாம் இங்குக் குடி புகுந்த அந்நியனை "பார்ப்பானை ஒழி; அவனை வெளியேற்று" என்று சொல் கிறோம். சர்க்காரால் (அரசால்) ஒன்றும் செய்ய முடியாது. இந்தியப் பிரதமர் நேருவும் சென்னைப் பிரதமர் ஆச்சாரி யாரும், "பார்ப்பனரே வெளியேறு" என்றால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. இவர்களின் கூப்பாட்டினால் பெரிய கிளர்ச்சி உண்டாகிவிடுமே என்று பயப்படுகிறார்கள். ஏன்? "பார்ப்பானே வெளியேறு" என்பதற்கும் "வெள்ளை யனே வெளியேறு" என்பதற்கும் சிறிதும் வித்தியாச மில்லை. பார்ப்பான் மேல்ஜாதிக்காரனாம். உழைத்து உண்பவர்க ளாகிய நாம் கீழ்ஜாதிக்காரர்களாம்; இந்த நிலைமையைச் சகிக்க முடியாமல்தான் மேல்ஜாதிக்காரனே வெளியேறு என்கிறோம். இந்தக் கிளர்ச்சி இன்று நேற்றல்ல. 25 வருடங்களாகவே பார்ப்பானை ஒழிப்பது என்ற கருத்தில் நாம் இயக்கம் நடத்திவந்தோம்.

வெள்ளைக்காரனை வெளியேற்ற நாமும் காலித் தனமாக  ரயிலைக் கவிழ்த்துத் தண்ட வாளத்தைப் பிடுங் கினதாலே வெள்ளையன் "இந்தப் பசங்கள் முட்டாள்கள்; ஆகையால் நாம் பார்ப்பானிடமே அதிகாரச் சாவியைக் கொடுத்து விட்டுப் போவோம். அவன் கிட்டேயிருந்தால் தான் இவனுங்களுக்குப் பார்ப்பனர்கள் தக்க புத்தி கற்பிப்பார்கள்" என்று நினைத்துக் கொடுத்து விட்டுப் போயிட்டான். அதுவும் வெள்ளைக் காரன் இவ்வளவு நாளாக நம்மைச் சுரண்டி நம் நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தால், இப்பொழுது முடியாமற் போகும் எனப் பயந்து பார்ப்பானிடம் லேவாதேவி, பாங்க், மில்கள் முதலியவற்றின் மூலம் சுரண்டுவதற்குப் பூரண உரிமை ஒப்பந்தம் செய்துகொண்டு சாவி கொடுத்துவிட்டுப் போய் விட்டான்.

அந்தப்படி சாவி வாங்கின பார்ப்பான் அம்பாரம் அம்பாரமாகப் பதவி, உத்தியோகக் கொள்ளை அடிக்கிறான். கூன், குருடு, செவிடு, கைகால் நடுக்கம் உள்ள தன் இனத்தாருக்கு கவர்னர், மந்திரி, எஞ்சினியர், எலக்ட்ரிக் எஞ்சினியர் முதலிய 1000 கணக்கான ரூபாவுக்கு  மேலும் உள்ள பதவிகளில் அமர்த்துகிறான்.  பிரசிடெண்ட் (குடி யரசுத் தலைவர்) இராசேந்திர பிரசாதுக்கு ரூ. 10000 சம்பளம். ஒரு சாதாரண புரோகிதகுடும்பம்; அவர் தகுதியெல்லாம் காந்திக்கு நல்லபிள்ளை. வெள்ளைக்காரனிடம் சாவி வாங்கியதும் சம்பளம்மாதம் 1-க்கு 10000 ரூபாய். வருடம் ரூ. 400000 படி, இவர்கள்தான் மாதம் 1-க்கு  500க்கு மேல் சம்பளம் வாங்கமாட்டோம் என்ற தீர்மானம் போட்டவர்கள். இன்னும் அந்தத் தீர்மானம் அப்படியே இருக்கிறது. பிரசிடெண்ட் தங்கியிருப்பதற்கு வைசிராய் பங்களா. இவர்கள்தான் தியாகிகளாம்! ஏழை பங்காளர் இவர்கள்! இப்படிக் கொள்ளையடிக்கிறார்கள். சுகவாழ்வு வாழ் கிறார்கள். நம்மவர்கள் பார்ப்பான் காலைக் கழுவிக் கும்பிட்டு மானம் கெடுகிறார்கள். வெள்ளைக்காரன் போனதும் அரையணா கார்டை (அஞ்சல் அட்டையை) முக்காலணா ஆக்கினார்கள். ஓரணா கவரை (அஞ்சல் உறையை) இரண்டணா ஆக்கினார்கள். நாலணா தந்தியைப்  பனிரெண்டணா ஆக்கினார்கள். மைலுக்கு 3 காசு; 4காசு ரயில் சார்ஜ்  (கட்டணம்) 5-6 பைசாவாக ஆக்கினார்கள். ஒன்றையும் குறைக்கவில்லை. எங்களுக்கு இவர்கள் என்ன பண்ணினார்கள்? மாறாக, நம்மை அப்பன் தொழில்செய்யணும்; உத்தியோக வேலை செய்யக்கூடாது; ஜாதிக் தொழில்தான் செய்ய வேண்டும். லு நாள் தான் படிக்கவேண்டுமாம். இதுதான் ஆச்சாரியார் கல்வித்திட்டம். வெள்ளையன் போன பின்பு அவர்கள் எல்லாத்துறையிலும் ஆக்கிரமித்து நம்மைப் பாழாக்கிவிட்டார்கள். ஆகையால் தான் நாம் வருணாசிரம கல்வித்திட்டத்தை எதிர்க்கிறோம். சாதியை மேலும் வளர்க்கின்ற காரணத்தினால் தான் இத்திட்டத்தை எதிர்க்கின்றோம். உண்மையிலேயே இந்த நாட்டில் மாத்திரமல்ல; இந்தியா முழுமைக்குமே சாதி ஒழிய வேண்டும் - அது அழிந்து பட வேண்டும், என்று சொல்லு கின்ற ஒரு ஆள்-ஒரு கழகம் இருக்கிறதென்றால் திராவிடர் கழகமும் நாங்களும்தான். இப்படிப் பேசுவது சும்மா சவடால், புளுகு சொல்லிப் போவதற்காக அல்ல. யாராவது சொல்லட்டுமே என்னைத் தவிர, திராவிடர் கழகத்தைத் தவிர ஜாதி ஒழிய வேண்டும். என்று சொல்பவர்களைக் காட்டுங்கள் பார்க்கலாம் - இந்த 2000 வருடங்களாய் எங்களைத் தவிர? காந்தியாராவது ஜாதி ஒழிய வேண்டும் என்று சொன்னதுண்டா? இன்று தானாகட்டும் யாராவது சொல்லட்டுமே! காந்தியார் "சாதியைக் காப்பாற்ற வேண் டும். அது நீடித்திருக்க வேண் டும். என் மூச்சே வருணாசிரமம் காப்பற்றப் படத்தான்" என்று தானே சொன்னார். தீண்டாமை ஒரு வழக்கம் தீண்டாமை ஒழிந்த தினமே பறையன் மாறிப் போவானா? தீண்டாமை ஒழிந்து விட்டதால் சக்கிலி வேறாய் விட் டானா? நமக்குத் தீண்டாமை இல்லையென்பதாலேயே நமக்குச் சூத்திரப்பட்டம் போய் விட்டதா?

டெல்லி ஆட்சியின் அரச மைப்புச் சட்டத்திலே ஒரு வார்த்தை  "ஜாதி  ஒழிக" என்று இருக்கிறதா? இந்தியாவைத் தவிர, தமிழ் நாட்டைத் தவிர, வேறு எங்காவது ஜாதி இருக் கிறதா? இந்த அரசமைப்புச் சட்டத்தை எழுதியவர் டாக்டர் அம்பேத்கர்தானே, ஜாதி ஒழிக்க வேண்டுமென்று அவர் கூட ஒரு வரி எழுதவில்லையே! டாக்டர் அம்பேத்கர் தான் அரச மைப்புச் சட்ட கர்த்தா; கீழ்ஜாதி, தீண்டாதார்களுக்குத் தலைவர். அவர் எழுதின சட்டத்தில் அவர்களுக்குச் "சலுகைகொடு" என்றுதான் கேட்டார். உடனே  பார்ப்பான் சலுகை கொடுத்து விட்டான். அவர்களின் 'விகிதா சாரப் படி 100க்கு 15 பேருக்குப் பதவி கொடுக்கிறேன்' என்று சொன்னான். 2000 மைசூர் ஆனைக்குட்டிகளைக் கொண்டு வந்து பஞ்சமர் கிட்டே உங்கள் விகிதாசாரம் 100க்கு 15 வீதம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றால் அவன் எடுத்துக் கொள்வானா? அவனால் முடியுமா அதைக் காப்பாற்ற? அனுபவிக்க? அவ்வளவு காசுக்கு எங்கே போவான்? அதுபோல் அவர்களில், 15 முனிசீஃபு உத்யோகம் கொடுக்கிறேன் என்றால் ஒரு ஆள்தான்தேருவான். இரண்டொரு ஆண்டுகளுக்கு முன் 72 முன்சீஃப் பதவிகளுக்கு ஷெட்யூல் வகுப்பாருக்கு 12 பேருக்கு ஒரு ஆள்தானே விண்ணப்பம் போட்டார். பாக்கி ஆட்கள் வரவேண்டுமென்றால் 18 வருடம் படித்து பாஸ்செய்து, (தேர்ச்சிசெய்து) 3 வருடம் பிராக்டிஸ் செய்தல்லவா வரவேண்டும்? ஆதலால் அந்த 12-ல் ஒன்று தாழ்த்தப்பட்டவனுக்கு. பாக்கியெல்லாம் அவன் சாக்கில்  பார்ப்பானுக்குத்தானே போயிற்று? இது எவ்வளவு பெரிய சூழ்ச்சி? நாங்கள் படித்துவிட்டு தகுதியோடு தயாராய்  இருக்கிறோம். எங்கள் விகிதாசாரப்படி எங்களுக்குப் பதவிகொடு என்றால் அதைப்பார்ப்பான் இது வகுப்புவாதம்; திறமை கெட்டுவிடும்; கொடுக்கமாட்டேன் என்கிறானே? படிக்க முடியாத, படிக்காத, தயாராக வேண்டிய அளவுபடி இல்லாத மக்களுக்கு வகுப்பு நீதி வழங்கி இருப்பதாகப் பித்தலாட்டம் செய்கிறான்.

தோழர் ராஜ்போஜ் தெளிவாக திருப்பத்தூரில் இதை சொல்லிவிட்டாரே! "அரசாங்கத்தார் எங்களை ஏமாற்றி விட்டார்கள். நாங்களும் தெரிந்துதான் ஏமாந்தோம். அதை ஒப்புக்கொள்ளாதிருந்தால் இந்நேரம் எங்கள் அம்பேத் கரைக் கொன்றிருப்பார்கள். அம்பேத்கருக்கு உயிர் மேல் கவலையில்லை யென்றாலும், கொன்று விடுவதாக வந்த கடிதங்களைக் கண்டு பயந்து, ஏதோ நாம் இன்னும் சில காலம் உயிருடன்  இருந்தாலும் ஒன்றிரண்டு நன்மை களாவது செய்யமுடியுமே என்ற எண்ணத்தில், அவர்கள் காட்டின இடத்தில் கையெழுத்துப்போட்டார்" என்பதாக. அதாவது காந்தியார் உண்ணாவிரதம் இருந்தார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். மறுத்ததன்  காரணமாக அவரைக் கொல்ல முயற்சிசெய்தார்கள். அதிலிருந்து தப்பி மறுநாள் கையொப்பம் போட்டதனால்தான் அவர் உயிர் தப்பியது என்றார்.

ஆச்சாரியார் கல்வித்திட்டம் சாதியை வளர்க்கும் கல்வித்திட்டம், ஆகையால்தான் சாதி ஒழிக்கும் பணியில் முன்நின்று இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். சாதி ஒழிய  வேண்டுமாயின்  சாதிக் குறைபாட்டை எடுத்துச் சொன்னால் மட்டும் போதாது.  நீங்கள்  நன்றாக  ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதி அடிப்படையை ஒழித்தாக வேண்டும். பணக்காரர் களெல்லாரும் 'சூத்திரர்கள்'தானே, ராஜாக்கள் எல்லாரும் 'சூத்திரர்கள்' தானே? பணம் மட்டும் சேர்ந்து விட்டால் 'சூத்திர'ப் பட்டம் போய் விடுமா? தஞ்சாவூர் புதுக்கோட்டை திருவாங்கூர்- கொச்சி ராஜாக்களெல்லாரும் 'சூத்திரர்'கள் தானே. பணம் இருக்கிறதாலேயே பதவி இருக்கிறதாலேயே, மடாதிபதியாக இருப்பதாலேயே 'சூத்திரப்'பட்டம்  போய் விடுகிறதா? கவர்னராக (ஆளுநராக) இருந்த சர். கே.வி.ரெட்டி, மந்திரியாக இருந்த பி.டி. ராஜன், இவர் களெல்லரும் சூத்திரர்கள் தானே? ஜாதி ஒழிய சூத் திரப்பட்டம் போக நாங்கள் தானே பாடு படுகிறோம்? ஜாதி எதனால் ஏற்பட்டது? சாஸ்திரங்களினால், மதங்களினால், புராணத்தினால், கடவுளால் ஏற்பட்டது. பார்ப்பான் ஆட்சியில் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், பார்ப்பான், இவைகளை ஒழித்தால்தான் ஜாதி ஒழிய முடியும்.

தாழ்த்தப்பட்டவர்கள் மந்திரி ஜோதி அம்மையார் உட்பட நான் சொல்லுகிறேன். இவர்கள்  கடவுள், மதத்தை ஒழித்தால்தான், அதிலிருந்து விடுபட்டால்தான் அவர்கள் மனிதர்கள் ஆவார்கள். என்னுடைய  சிநேகிதர்கள்தான் சிவராஜும் அவரது மனைவியாரும். அவர்கள் வீட்டில் இந்துமதம் இருக்கிறது! சாமிபடம் இருக்கிறது. செட்யூல்ட் (ஆதிதிராவிட) வகுப்புத் தோழர்கள் சொல்லட்டுமே, சாமி, சாஸ்திரம், மதத்தில் கைவைத்தால் சர்க்கார் (அரசு) ஒழித்துக் கட்டிவிடுவோம் என்று! யாரோ சிலர் தைரியசாலிகள், சட்ட சபைக்குப் போகாதவர்கள் தான் அவற்றை ஒதுக்கி விடுகிறார்கள். நாங்கள் கடவுளை உடைத்து ரோடுக்கு (சாலைக்கு) ஜல்லி போட்டால்தான்  இவைகளை ஒழிக்க முடியும் என்று கூறுகிறோம்.  தலையில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறப்பித்த சாமி இருந்தால் எப்படி நமக்கு 'சூத்திரன்' என்ற பட்டத்தைத்  தோளில் போட்டுக்கொண்டு  நம்மக்கள், மந்திரிகள், மடாதிபதிகள் மகான் மற்றும் கடவுள், மதப்பிரச்சாரம் செய்கிறார்களே! ஆகையால் கடவுள், மதம், சாஸ்திரம் இவைகளை ஒழித்தால்தான் சாதி ஒழிய முடியும்.

24-2-1954ஆம் தேதியன்று  சேலம் மாவட்ட பள்ளிப்பட்டியை

அடுத்த அதிகாரப்பட்டியில் தந்தை பெரியார் சொற்பொழிவு

('விடுதலை' 27-2-1954)

கச்சநத்தத்திற்கும் - தூத்துக்குடிக்கும் தமிழர் தலைவர் நேரில் செல்கிறார்


ஜாதி கலவரம் நடைபெற்ற கச்சநத்தம் கிராமத்தில் பாதிக் கப்பட்ட தோழர்களை 11.6.2018 காலை 10 மணியளவிலும், 'ஸ்டெர் லைட்'போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிக் குண்டுக்கு ஆளாகி தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தோழர்களை பிற்பகல் 1 மணிக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேரில் சென்று சந்திக்கின்றார்.

இனமானத்தோடு ஒன்றிணைந்து முறியடிப்போம் வாரீர்! வாரீர்!!

 குருகுலக் கல்வி என்னும் பெயரில் குலக்கல்வி திட்டமா?
தமிழ்நாட்டில் சமஸ்கிருதப் பல்கலைக் கழகம் துவக்க ஏற்பாடா?
 

சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்

சென்னை, ஜூன் 10-  குருகுலக்கல்வி என்ற பெயரால் மீண்டும் குலக்கல்வியைக் கொண்டு வரத் திட்டம் தீட்டி விட்டார்கள். தமிழ்நாட்டில் சமஸ்கிருதப் பல்கலைக் கழகம் கொண்டு வரவும் ஏற்பாடாகி இருக்கிறது. மனுதர்ம ஆதிக்கத்தை முறியடிப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

"குருகுலக் கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா?"
6.6.2018 அன்று மாலை வடசென்னை மாவட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில், சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் குருகுலக்கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா? எனும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்

அவரது உரை வருமாறு:

கல்விக் கண்ணைக் குத்தக்கூடிய ஒரு திட்டம்


குருகுலக் கல்வி என்ற பெயராலே மீண்டும் சமஸ்கிருத படையெடுப்பு, மனுதர்ம ஆட்சி இவைகளுக்கு அடிகோலக்கூடிய மிக ஆபத்தான போக்கை, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள், பெண்கள், கிராமப்புறத்து இளைஞர்கள் ஆகியோரின் கல்விக் கண்ணைக் குத்தக்கூடிய ஒரு ஆழ்ந்த திட்டத்தை, ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பால், ஆரிய அமைப்பால் திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கக் கூடிய இன்றைய மோடி அரசு, பா.ஜ.க.வினுடைய அரசு எவ்வளவு பெரிய கொடுமையை திட்டமிட்டு நடத்தியிருக்கிறது என்பது இன்னும் நாட்டுக்குத் தெரியவில்லை.

முதல் எச்சரிக்கை மணி

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதனை திராவிடர் கழகம் அம்பலப்படுத்தவேண்டும் - பாதிக்கப்பட்ட மக்கள் அத்துணை பேருக்கும் எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்று முதல் எச்சரிக்கை மணி அடித்து, எல்லோருக்கும் விழிப்புணர்வை உருவாக்குகின்ற அதற்காகக் கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனக்குப் பணிகள் இருந்து, இந்தப் பொது க்கூட்டத்திற்கு வேறொருவரை அனுப்பலாம் என்று சொன்ன நேரத்தில், இது மிக முக்கியமான பணி என்று சொன்னபொழுது, அன்பு சகோதரர், நாங்கள் உரிமை எடுத்துக்கொண்டு, இன்றைக்கு திராவிடர் இயக்கத்தைக் காப்பாற்றுவதற்கு ஒரு பெரிய போர் வாளாக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன பொதுச்செயலாளர் பாராட்டுதலுக்கும், பெருமிதத்திற்கும் உரிய சகோதரர் வைகோ அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொள்கிற, கலந்துகொள்ள வரவிருக்கின்ற அருமை ஏனைய தோழமைக் கட்சித் தலைவர்களே,

இந்த மழையில் கூட்டம் நடக்குமா? என்று பல பேருக்கு அய்யம். தோழர் பாண்டியன் அவர்களுக்கு உடல்நலக் குறைவின் காரணமாக, பெரியார் திடலுக்கு வந்து என்னிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றார்கள்.

கொட்டும் மழை - கொளுத்தும் வெயில் எதுவாக இருந்தாலும்...

அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இன்றைக்கு இது மிக முக்கியமான ஒரு பணி. கொட்டும் மழை - கொளுத்தும் வெயில் எதுவாக இருந்தாலும், சமுதாய பணி செய்யக்கூடிய நாங்கள், அந்தப் பணியில் எங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கிற அத்துணை இயக்க நண்பர்களும், இதில் அரசியல் இல்லை - இது நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பொறுத்தது - வாழ்வைப் பொறுத்தது - பெற்றோர்களுடைய நலனைப் பொறுத்தது. எனவேதான், இந்த இயக்கமே அதற்காகத்தான் தொடங்கப்பட்டது.

திராவிடர் இயக்கம் என்பது அரசியலுக்குச் சென்றிருக்கிறது என்று சொன்னால், அரசியலுக்காக அல்ல - இதுபோன்ற சூழ்நிலைகளை மாற்றி அமைக்கவேண்டும் என்பதற்காகத்தான் - இந்தப் பணியை செய்வதற்காக சென்றிருக்கிறது.

நோய்நாடி நோய் முதல் நாடக்கூடிய அளவிற்கு...

இன்றைக்கு சுதந்திரம் வந்து 72 ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கு சொல்கிறார்கள். இந்த 72 ஆண்டுகள் சுதந்திரத்தில், ஜாதி, தீண்டாமை எந்த அளவிற்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை நீங்கள் நினைத்துப் பார்த்தால், அதனைப் போக்கவேண்டும் என்ற முயற்சி எடுக்கக்கூடிய தலைவர்கள் ஓரணியில் நின்று, அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் வாழ்நாள் போராட்டமாக நடத்தி அதில் பெரிய அளவிற்கு அவர் வெற்றி கண்டார். ஜாதியினுடைய அஸ்திவாரத்தை மிகப்பெரிய அளவிற்கு கலகலக்கச் செய்திருக்கிறார்.

மேலே இருக்கிற இடிபாடுகள், அர்ச்சகர் போன்ற அந்தப் பிரச்சினைகள் இருக்கின்ற காரணத்தினால்தான், நோய்நாடி நோய் முதல் நாடக்கூடிய அளவிற்கு அவர்கள் அந்தப் பணியை எடுத்துச் செய்தார்கள்.

இட ஒதுக்கீட்டினால் இந்த வாய்ப்புகள் எல்லாம் வந்திருக்கிறது!
அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், எளிமையாக மக்கள் மத்தியில் கேட்டார், தாழ்த்தப்பட்டவரை, என்னுடைய சகோதரரை, எங்கள் இனத்து உழைப்பாளியை நீங்கள் கேவலமாக நடத்தியது மட்டுமல்ல, படிக்கின்ற உரிமையை மறுத்தீர்கள்; படிக்க வைத்தோம். பதவியில் அமரக் கூடாது என்று சொன்னீர்கள்; பதவியில் அமர வைத்தோம். அய்க்கோர்ட் ஜட்ஜாக முடியவில்லையே என்கிற குறை இருந்தது - அதை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், கலைஞர் அவர்களுடைய ஆட்சி என்னுடைய அறிவுரைகேற்ப செய்தது என்றார்.

அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக இன்றைக்கு ஏராளமான ஆதிதிராவிட சமுதாயத் தோழர்கள் இருக்கிறார்கள். நமக்கு ஜாதி முக்கியமல்ல; பங்கேற்பு இருக்கிறது - சமத்துவம் இருக்கிறது- சம வாய்ப்பு இருக்கிறது  - இட ஒதுக்கீட்டினால் இந்த வாய்ப்புகள் எல்லாம் வந்திருக்கிறது!

அய்க்கோர்ட் ஜட்ஜாக முடிகிறது;

அர்ச்சகராக முடியவில்லையே, ஏன்?

அப்படிப்பட்ட தந்தை பெரியார் கேட்டார், ஒரு ஆதிதிராவிட சகோதரனால், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். ஆக முடிகிறது; அய்க்கோர்ட் ஜட்ஜாக முடிகிறது; ஆனால், அர்ச்சகராக முடியவில்லையே, ஏன்? ஜாதியினுடைய பிடிப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்; எனவே, அதனைத் தகர்த்து எறியவேண்டாமா? என்றார்.

இன்னுங்கேட்டால், திருப்பதி வெங்கடாசலதி பதியையே அர்ச்சகர்தான் கண்ட்ரோல் செய்கிறார். மோடி அதையும் விட்டு வைக்க விரும்பவில்லை. திருப்பதியையும் தன்வசம் எடுக்கவேண்டும் என்று மோடி முயற்சிக்கிறார் என்று சந்திரபாபு நாயுடு அவர்களின் குற்றச்சாட்டு மிகப்பெரிய அளவில் சமீபத்தில் இருக்கிறது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக

சட்டம் கொண்டு வரவேண்டும்


எனவேதான், இந்த மண்தான் இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய மண். அந்த வகையில், தந்தை பெரியார் சொன்னார், நான் வைக்கத்தில் தொடங்கிய ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் இன்றைக்கு எங்கே வந்திருக்கிறதென்றால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது. காரணம், கோவில் கருவறைக்குள் நுழைய முடியாது என்று சொல்கிறார்கள். இது மனித உரிமை - இது ஆணுக்கும் இருக்கவேண்டும்; பெண்ணுக்கும் இருக்கவேண்டும். அந்த உரிமைகள் வரவேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச்சொல்லி, அந்த உரிமைகளை நிலைநாட்டுவதற்கு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சொன்ன நேரத்தில்தான்,

கலைஞர் சொன்னார், இதற்காக நீங்கள் போராட வேண்டிய அவசியமில்லை. இது உங்கள் ஆட்சி - உங்களுக்காக இந்த சட்டத்தை நான் கொண்டு வருகிறேன் என்று சொல்லி, சட்டத்தைக் கொண்டு வந்தார்.

உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் தோற்றார்கள்;

நாம் வென்றோம்!


வழக்கம்போல பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத் திற்கு ஓடினார்கள். உச்சநீதிமன்றத்தில் அவர்கள் தோற்றார்கள்;  நாம் வென்றோம்; திராவிட முன்னேற்றக் கழகம் வென்றது; பெரியார் வென்றார்; கலைஞர் வென்றார்; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகக்கூடிய சட்டம் செல்லும் என்று.

பார்ப்பனர்கள் அதற்கடுத்தபடி என்ன செய்தார்கள் என்றால், நாத்திகர்கள் எல்லாம் அர்ச்சகர் ஆகிவிடுவார்கள்; எனவே, அதற்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று சொன்னார்கள்.

அப்படியா? என்ன செய்யவேண்டும் என்று கேட்டார் கலைஞர்.

ஆகமங்கள் தனித்தனியே இருக்கின்றன; சடங்கு, சம்பிரதாயம் கெட்டுப் போகும் என்றனர் பார்ப்பனர்.

அப்படியா, சரி! ஆகம விதிகளின்படி சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்கட்டும் என்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு இன்னொரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார் கலைஞர் அவர்கள்.

பார்ப்பனர் முதல் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர்

சகோதரர்கள் வரையில்...

ஆகம விதிகள்படி இரண்டு பள்ளிக்கூடங்கள். ஒன்று வைணவ முறைப்படி; இன்னொன்று சைவ முறைப்படி பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி, பார்ப்பனர் முதல் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் சகோதரர்கள் வரையில் 210 பேர் பயிற்சி முடித்து இருக்கிறார்கள்.

ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, பத்தாண்டுகளாக அந்த வழக்கு நடைபெற்று, தி.மு.க. கொண்டுவந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வந்தது.

ஒரு ஆட்சி, அதை செய்யவில்லை. எம்.ஜி.ஆர். உறுதிமொழி கொடுத்து, அதற்குப் பிறகு ஜெயலலிதா சட்டமன்றத்தில் உறுதிமொழி கொடுத்த பிறகும் அதை நிறைவேற்றவில்லை. காரணம் என்ன? அந்த ஜாதியினுடைய பிடிப்பு.

அறிவியல் வளர்ந்திருக்கின்ற காலகட்டத்தில், செவ்வாய்க்கிரகத்திற்குப் போய் மனிதன் இறங்கிவிட்டான். ஆனால், இங்கே இருக்கிற கர்ப்பக் கிரகத்திற்குள் போக முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அதனை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். இதை நாங்கள் சொல்லும் பொழுது, என்ன இந்தப் பிரச்சினையைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று சிலர் நினைக்கலாம்.

அருமை நண்பர்களே, அதற்கு ஒரு சிறிய உதாரணத்தை சொல்லிவிட்டு, அடுத்த செய்திக்கு நான் செல்ல விருக்கிறேன்.

மோடி பல வித்தைகளைக் காட்டுவார்!
நாளைக்கு ஒரு போராட்டம்! என்ன போராட்டம்? மோடி பல வித்தைகளைக் காட்டுவார்; மோடி வித்தை என்ன என்பது ஏற்கெனவே நமக்குத் தெரியும். மற்ற வித்தைகள் எல்லாம் பிரதமர் மோடி வித்தைக்குமுன் நிற்க முடியாது. ஆகவே, அவர் என்ன செய்தார் என்றால், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நாட்டின் குடியரசுத் தலைவராகக் கொண்டு வந்திருக்கிறோம் பாருங்கள் என்று. அதற்காக பொம்மை ஆட்களைப் பிடிப்பார்கள். அதற்குமுன் அவர் யார் என்று யாருக்குமே தெரியாது. ராம்நாத் கோவிந்த் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவரானார்.

அர்த்தமுள்ள இந்து மதத்தின் யோக்கியதை!

இவர், பா.ஜ.க. ஆளுகின்ற ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள  அஜ்மீர் மாவட்டத்திலுள்ள புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கே இவரை அனுமதிக்கவில்லை. என்ன காரணம் என்றால், தாழ்த்தப்பட்டவரை இந்தக் கோவிலுக்குள் அனுமதிக்கமாட்டோம் என்றார்கள். இவர் குடியரசுத் தலைவர் என்றார்கள்; எந்தத் தலைவராக இருந்தால் எங்களுக்கு என்ன? இந்து மதம், அர்த்தமுள்ள இந்து மதத்தினுடைய ஆதிக்கம் இதுதான். ஆகவே, அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று சொன்னார்கள்.

வேறு வழியில்லாமல் குடியரசுத் தலைவர் என்ன செய்தார் தெரியுமா? சரி பரவாயில்லை,  படிக்கட்டுகளில் அமர்ந்து நான் கடவுளை வணங்கிவிட்டுப் போகிறேன் என்று, படிக்கட்டில் அமர்ந்துவிட்டு வந்தார்.

முப்படைக்கும் தலைவரான குடியரசுத்

தலைவருக்கு நேர்ந்த அவமானம்!

2018 ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசுத் தலைவராக உள்ள ஒருவர் - இவருடைய பதவிக்கு மேல், உயர் பதவியே கிடையாது என்ற நிலை. இவர்தான் முப்படைக்கும் (தரைப்படை - வான்படை - கப்பற்படை) சுப்ரீம் கமாண்டர் குடியரசுத் தலைவர்தான் - அரசியல் சட்டப்படி. இந்த மூன்று படைகளும் இவருடைய உத்தரவுப்படிதான் நடக்கவேண்டும். எந்த நாட்டின்மீது வேண்டுமானாலும் படையெடுக்கச் சொல்லும் அதிகாரம் படைத்தவர். ஆனால், இவ்வளவு படைகள் இருந்தாலும், பூணூல் படைக்கு முன் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்பொழுது புரிகிறதா நண்பர்களே, ஜாதி - தீண்டாமை - வருணாசிரம தர்மம் - மனுதர்மம் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அதற்காகத்தான் நாளைக்கு தமிழகமெங்கும் போராட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்த செய்தியையே மறைத்துவிட்டார்கள். அதையும் மீறி இந்த செய்தி வெளியில் வந்தவுடன், மிக சாமர்த்தியமாக அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கிறார்கள். குடியரசுத் தலைவர் மனைவிக்கு மூட்டு வலி. அதனால் படிக்கட்டுகளிலேயே அமர்ந்து பூஜை செய்துவிட்டு வந்தார்கள் என்று ஒரு சமாதானத்தை சொல்கிறார்கள். கோவிலுக்குள் விடாமல் அவமானப்படுத்தினார்களே, அதைவிட கொடுமையானது இவர்கள் சொல்கின்ற விளக்கம்.

சரி, அந்தம்மா மூட்டு வலி காரணமாக கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நன்றாகத்தானே நடக்கிறார், இவர் ஏன் படிக்கட்டுகளில் அமர்ந்து பூஜை செய்தார்.

ஆர்ப்பாட்டம் ஏன்?

ஆகவேதான், நாம் ஒருபக்கம் படி, படி என்று சொல்கிறோம். இன்னொரு பக்கம் அவர் எனக்கு இருப்பது படி, படிதான் அதற்குமேல் ஏறி வர முடியாது என்கிற நிலைக்கு ஆக்கி விட்டார். இதையெல்லாம் எதிர்த்துத்தான் நாளைக்கு (7.6.2018) ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

இப்பொழுது குருகுலக் கல்வியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இங்கே வெளியிடப்பட்ட புத்தகத்தினுடைய அட்டையைப் பார்த்தாலே உங்களுக்குத் தெளிவாக விளங்கும்படியான விளக்கங்கள் இருக்கின்றன.

குருகுலக் கல்வி என்றால் என்ன? வீட்டுத் தொழுவத்தில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அமர்ந்திருக்கவேண்டும். ஞானாசிரியராக இருக்கின்ற பார்ப்பனர் வேதத்தை சொல்லிக்கொடுக்க அவருக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது அவர் அழைப்பார். இதுதான் குருகுலக் கல்வி. இதுதான் வேதக் கல்வி.

அவர் வாயால் சொல்வார்; அதனை இவர்கள் திருப்பிச் சொல்லவேண்டும். உபாத்தியாயர் என்கிற வார்த்தைக்குப் பொருள் என்னவென்றால், அத்தியாயனம் என்றால் சொல்வது; உபாத்தியாயர் என்றால், அவர் சொல்வதை திரும்பச் சொல்வது. இதிலிருந்துதான் வாத்தியார் என்ற சொல் வந்தது.

அரசர்களாக இருந்தாலும்,

படிப்பதற்குத் தகுதி கிடையாது

குருகுலக் கல்வியைத்தான் அறிவு என்று சொல்லி வைத்திருந்தான். அதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. மற்றவர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கக் கூடாது; கல்வியைக் கொடுக்கக் கூடாது. மனுதர்மம் நடைமுறையில் இருந்ததினால்தான், ராஜாக்கள்கூட படிக்காதவர்களாக இருந்தார்கள். அவர்கள் அரசர்களாக இருந்தாலும், படிப்பதற்குத் தகுதி கிடையாது அவர்களுக்கு.

அப்படிப்பட்ட ஒரு கல்வி முறையை மீண்டும் மோடி அரசு இங்கே கல்வித் திட்டமாகக் கொண்டுவருவதற்கு ஏற்பாடு செய்து - வேகமாக அவர்கள் வேலை செய்கிறார்கள்.

இதோ என்னுடைய கைகளில் இருப்பது பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான ஆர்கனைசர் ஆகும். மே மாதம் வெளிவந்த இந்தப் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.. என்று சொன்னால், அது ரகசிய இயக்கம். அவர்கள் கூட்டம் போடுவது ரகசியமாக இருக்கும். ஊர்வலம் ஒன்றைத்தான் வெளியில் காட்டுவார்கள்.

உஜ்ஜயினியில் ஒரு மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள். இந்தத் தகவல்கள் எல்லாம் பத்திரிகைகளில் முதலில் வெளிவரவில்லை. நாம்தான் அதனை வெளியிட்டோம்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான மோகன் பகவத் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் மடாதிபதிகள், மற்றவர்களும் கலந்துகொண்டனர்.

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன தெரியுமா?

நாம் மீண்டும் பழைய குருகுலக் கல்வியை உருவாக்கி, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அத்தீர்மானம்.

ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறதோ,

அதைத்தான் மோடி செய்வார்


இந்த மாநாடு முடிந்து ஊருக்குச் சென்றதும், அந்தத் திட்டத்தை விரைவாக மேற்கொள்ள வேண்டும். என்று தொண்டர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறதோ, அதைத்தான் மோடி செய்வார். ஆர்.எஸ்.எஸ். கல்வித் திட்டம் என்னவென்று சொன்னால், முழுவதும் வேத கணித பாடம், சமஸ்கிருதம்தான். நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் என்னாவது? என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள்.

இந்தச் செய்தியை நாங்கள் வெளிக் கொணர்ந்து, அது மக்களிடம் போய்ச் சேருவதற்குள், அவர்கள் வேக வேகமாக திட்டத்தைப் போட்டு, ஒரு சுற்றறிக்கையை அனுப்பி விட்டார்கள். இந்தத் தகவல் பலருக்குத் தெரியாது. ஏற்கெனவே கல்வித் திட்டத்தை சமஸ்கிருதத்தைத் திணிக்கிறார்கள் என்றவுடன், நம்முடைய எதிர்ப்பைக் காட்டினோம்.

உஜ்ஜயினியில் பார்ப்பனர்கள்

நடத்திய மாநாடு


குருகுலம் என்ற பெயரில் வீட்டிலோ, வேறு தனி இடத்திலோ சிறுவயதிலேயே,

1. வேத அத்யாயனம் (வேதம் கற்றல்)

2. பாரதீய தரிசனம் (இந்தியச் சிந்தனை)

3. சமஸ்கிருத வியாகரணம் (சமஸ்கிருத இலக்கணம்)

4. சமஸ்கிருத சாகித்திய (சமஸ்கிருத பாடப் புலமை)

5. சமஸ்கிருத மொழி (புலமை) கற்றல்


இந்த 5 பாடங்களில் கற்று தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று அந்த மாணவரே தானே சான்றிதழ் எழுத்துமூலம் கொடுப்பதை வைத்துக்கொண்டு, உடனடியாக நேரே 10 ஆம் (X Standard) வகுப்பில் சேரலாம் (பழைய கால Private Study என்பது போன்றது) பிறகு 11, 12 வகுப்பினை முடித்துவிடலாம்.

மேலே காட்டிய 5 பாடங்களில் வெற்றி பெறுவதற்கு வெறும்  33 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றாலே போதுமானது.

10 ஆம் வகுப்பிற்கு முன்னர் முறையாக பல வகுப்புகளில் 6, 7, 8, 9 வகுப்புகளில் - மாணவர்கள் படிக்கும் பல்வேறு பாடங்களான அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல் போன்றவைகள் ஏதும் படிக்கத் தேவையில்லை. குருகுலத்தில் கணிதம் ஏதாவது சொல்லிக் கொடுப்பதோ, கற்கப்படுவதாகவோ இருப்பின், அது வேதக் கணிதமாம்! (Vedic Mathematics).

மேற்கண்ட சமஸ்கிருதக் கல்வி பயிற்சி பெற்றிட குருகுலக் கல்விக் கூடங்களில் மட்டும்தான் சாத்தியப் படும்.

சமஸ்கிருத பாரதி

கல்வியை சமஸ்கிருத மயம், வேத மயம் ஆக்கிவரும், பெரிதும் சமஸ்கிருதத்தைப் பரப்பிடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் இயக்கப்படும் சமஸ்கிருத பாரதி பள்ளிக் கூடங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் மானிய உதவி (Grant) மக்கள் வரிப் பணத்தில் திருப்பி விட்டுப் பயன் பெறச் செய்யவும், பார்ப்பன சமஸ்கிருத பண்டிதர்களுக்கு ஆசிரியர் வேலை வாய்ப்பைப் பெருக்கும் மிகப்பெரிய சூழ்ச்சித் திட்டமே இது!

சமஸ்கிருதப் பல்கலைக் கழகத்தை

உருவாக்கவேண்டும் என்ற திட்டத்தை,

ரகசியமாக வைத்திருக்கிறார்கள்!


முன்பு இந்தியைத் திணித்து, இந்திப் பண்டிதர்கள் வேண்டும் என்று சொன்னார்கள். அதேபோன்று பார்ப்பனர்கள்தான் சமஸ்கிருத பண்டிதர்கள். புதிதாக இப்பொழுது சமஸ்கிருத கல்லூரியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில், தமிழ்ப் பல்கலைக் கழகத்தை வைப்பதைவிட, சமஸ் கிருதப் பல்கலைக் கழகத்தை உருவாக்கவேண்டும் என்ற திட்டத்தை, ரகசியமாக வைத்திருக்கிறார்கள். உயர்கல்வித் துறையிலிருந்து எனக்கு இந்தச் செய்தி இன்றைக்குக் கிடைத்திருக்கிறது. மீண்டும் மனுதர்மம் வருகிறது.

சமஸ்கிருதம்தான் எல்லாமும் என்று சொல்லக் கூடிய, அந்தக் கலாச்சாரத்தைப் பேணக்கூடியவர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு நாங்கள் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

ராஜாராம் மோகன்ராய்!

இந்தியாவில் முதன்முதலில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை உண்டாக்குவதற்கு, பெண்களை உயிரோடு எரிப்பதைத் தடுப்பதற்கு முதல் முயற்சி எடுத்த மாமனிதர் அவரே ஒரு பார்ப்பனர்தான் - அவர்தான் வங்காளத்தைச் சேர்ந்த ராஜாராம் மோகன்ராய் அவர்கள்.

அவருடைய காலத்தில் வெள்ளைக்காரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்களுடைய ஆதிக்கத்தைப் பலப்படுத்தவேண்டும் என்பதற்காக மிகச் சாமர்த்தியமாக சமஸ்கிருதத்தை சொல்லிக் கொடுத்தால், பார்ப்பனர்கள் எதிர்ப்புக் காட்ட மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு, அவர்களைத் தன்வயப்படுத்துவதற்காக இதனை செய்தபொழுது, முதல் எதிர்ப்புக் குரல், சமஸ்கிருதத்தைப் படிக்க வைக்காதே! புராணங்களில் ஒன்றும் கிடையாது என்று எதிர்ப்புக் கொடுத்தவர், ராஜாராம் மோகன்ராய் அவர்கள்தான். இவர் வைஸ்ராய்க்கு எழுதிய கடிதம் இன்னமும் இருக்கிறது.

அறிவியல் மனப்பான்மையை அது கொன்றுவிடும் - அது வெறும் நம்பிக்கைதான் என்றார்.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இதுதான் திருவள்ளுவருடைய முறையாகும்.

புத்தருடைய முறை என்னவென்று தெரியுமா?

முன்னோர்கள் நடந்தார்கள் என்பதற்காக அதேபோன்று நீ நடக்கவேண்டும் என்று நடக்காதே!

முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக, நீ சிந்திக்காமல் அதனை ஏற்காதே!

முன்னோர்கள் எழுதினார்கள் என்பதற்காக அதை அப்படியே ஏற்காதே நீ!

உன்னுடைய அறிவு என்ன சொல்கிறது என்பதைப் பார்! என்றார்.

அதை அப்படியே 20 ஆம் நூற்றாண்டில் சொன்னவர் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

யார் சொல்வதையும் கேட்காதீர்கள்; நம்பாதீர்கள். உன்னுடைய அறிவு என்ன சொல்கிறதோ அதைப் பாருங்கள் என்றார்.

நான் சொல்வதையும் நம்பாதே! உன்னுடைய

அறிவு என்ன சொல்கிறதோ, அதனை நம்பு!

குடியாத்தம் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்களுக்கு வரவேற்புரை அளித்தபொழுது, அங்கே அய்யா உரையாற்றினார்.

நீங்கள் உங்கள் அறிவைப் பயன்படுத்த வேண்டும். யார் சொல்வதையும் நம்பவேண்டும் என்பதில்லை. நாடு நாசமாகப் போனதற்கே  அதுதான் காரணம் என்று அய்யா ஆரம்பித்து, இளைஞர்களே நம்புங்கள்! என்று தொடங்கி, பரமாத்மா சொன்னார், ஜீவாத்மா சொன்னார், பகவான் சொன்னார், இறைவன் சொன்னார் என்று யார் சொன்னாலும் நம்பாதீர்கள் என்று சொன்னார்.

கூட்டத்திலிருந்து எழுந்த ஒரு இளைஞர், யார் சொல்வதையும் நம்பவேண்டாம் என்று சொல்கிறீர்களே அய்யா, நீங்கள் சொல்வதை நம்புவதா? வேண்டாமா? என்று கேட்டார்.

உடனே அய்யா அவர்கள் ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல், நான் சொல்வதையும் நம்பாதே! உன்னுடைய அறிவு என்ன சொல்கிறதோ, அதனை நம்பு! என்றார்.

இப்படி அறிவுக்கு சுதந்திரம் கொடுத்த நாட்டில், அதற்கு நேர் எதிராக அறிவுக்குச் சுதந்திரம் கொடுக்காதே, நம்பு! நம்பு!! ஏனென்று கேட்டால், உனக்கு நரகத்தில் தண்டனை கிடைக்கும். ஆகவே, நம்பு! நம்பு!! என்கிறார்கள்.

எது ஆரியம்? எது திராவிடம்?


திராவிடம் என்றால் என்ன? என்று நிறைய பேர் இப்பொழுது ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். திராவிடமா? தமிழா? தமிழ்த் தேசியமா?திராவிடமா? என்று.

பார்ப்பானா? தமிழனா? என்று ரத்தப் பரி சோதனை வைத்துப் பார்க்கவில்லை. கலந்து போய் நீண்ட நாள்களாகின்றன என்பது உங்களுக்கும் தெரியும், எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதே நேரத்தில் இரண்டு பண்பாடுகள், அடிப்படையிலே இரண்டு பண்பாடுகள். எது ஆரியம்? எது திராவிடம்? என்றால், இதற்காகப் பெரிய ஆராய்ச்சி செய்து, விவாதம் செய்யவேண்டிய அவசியம் இல்லை.

ஆரியம் என்றால் என்ன?

கண்ணை மூடிக்கொண்டு நம்பு என்று சொல்வது ஆரியம்.

திராவிடம் என்றால் என்ன?

நம்பாதே, உன்னுடைய அறிவு என்ன சொல்கிறது என்பதைக் கேள் என்று சொல்வது திராவிடம்.

திருவள்ளுவர் இதைத்தானே சொன்னார்; புத்தர் இதைத்தானே சொன்னார்; பெரியாரும் இதைத்தானே சொன்னார்.

திராவிடம் என்பதற்கு ஒரு எல்லைக்கோடு கிடையாது!

எனவே, திராவிடம் என்பது இந்தியா முழுவதும் இருந்திருக்கிறது. திராவிடம் என்பதற்கு ஒரு எல்லைக்கோடு கிடையாது. திராவிடம் என்பது ஒரு தத்துவம். திராவிடம் என்பது ஒரு ஆய்வு செய்து கண்டுபிடிக்கின்ற விஷயம் அல்ல.

எல்லோரும் சமம் என்றால், அது திராவிடம்!

தொடக்கூடாதவன், உயர்ந்தவன் - தாழ்ந்தவன், எட்டி நில் என்றால், அது ஆரியம்!

வேதம் என்றால், அறிவு என்று அந்தக் காலத்தில் வைத்திருந்தார்கள்.

அந்தக் காலத்தில் புத்தகங்கள் கிடையாது. நல்ல வாய்ப்பாக வெள்ளைக்காரர்கள்தான் பிரிண்டிங்கைக் கண்டுபிடித்தார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களால் ஒரு பயலுக்காவது அச்சாபீஸ் தெரியுமா? எழுத்து தெரியுமா? எழுத்துத் தெரியாததினால்தானே, அவர்கள் வாயால் சொன்னார்கள். அப்படி சொல்லும்பொழுது, அவர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லலாமே! அந்த முறையில் இருந்ததுதான் அத்தியாயனம். அத்தியாயனம் என்றால் வரைப்படுத்துவது.

சமஸ்கிருதம் நமக்குப் புரிவதில்லை. இன்னமும் நம்முடைய ஆட்கள், அவருடைய இல்லங்களில் பார்ப்பனரைக் கொண்டு வந்து திருமணங்களை நடத்துகிறார்கள்.

அவர்கள் புரியாத மொழியில் மந்திரங்களை சொல்லுகிறான். புதுப்பணக்காரனான நம்மாள், சாமி, மந்திரங்களை நன்றாகச் சொல்லுங்கள் என்று.

மந்திரத்திற்கு என்ன பொருள் தெரியுமா?

பெரியார்தான் கேட்டார், திருமண விழாக்களில் பார்ப்பனர்கள் சொல்லுகின்ற மந்திரத்திற்கு என்ன பொருள் தெரியுமா? என்று.

சோமஹ ப்ரதமோ

விவேத கந்தர்வ

விவிதே உத்ரஹ

த்ருதியோ அக்னிஸடே

பதிஸ துரியஸதே

மனுஷ்ய ஜாஹ

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.

நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகள் ஏற்கெனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.

இந்த மந்திரத்தைத் தமிழில் சொன்னால், மந்திரம் சொன்னவர் வெளியில் போக முடியுமா? சமஸ்கிருதம் புரியாததினால், அதனை இப்பொழுது திணிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இங்கே உரையாற்றிய குமாரதேவன் ஒரு கேள்வியை கேட்டாரே, அது நியாயமான கேள்வி!

இப்பொழுது சமஸ்கிருதத்தைத் திணிக்கிறார்களே, எந்தப் பார்ப்பானாவது வீட்டில் சமஸ்கிருத மொழியில் பேசுகிறார்களா? என்று.

சங்கராச்சாரி வேண்டுமானால், சமஸ்கிருத மொழியில் பேசுவார். அவருக்கும், அவருடைய சீடருக்கும் தெரியும். சமஸ்கிருத மொழியில் மந்திரத்தை தவறாக சொன்னால்கூட யாருக்காவது புரியுமா?

நாவலர் சோமசுந்தர பாரதியார்

ஒருமுறை நாவலர் சோமசுந்தர பாரதியார் வைதீகத் திருமணத்தில் கலந்துகொண்டார்.

அந்த திருமணத்தை நடத்தி வைப்பதற்கு, ஒரு குட்டிப் புரோகிதர் வந்திருந்தார். சடங்கு சம்பிரதாயத்தை செய்துவிட்டு, தீ வளர்த்து, சுற்றி வாருங்கள், சப்தி என்றான், மந்திரத்தை சொல்லிக்கொண்டே!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சோமசுந்தர பாரதியார், ஏ, நிறுத்து! என்று சொன்னார்.

ஆனால், அந்த குட்டிப்  புரோகிதன், மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருந்தான்.

உடனே எழுந்து போய், அந்தக் குட்டிப் புரோகிதன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.

இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், அண்ணா எழுதிய ஆரிய மாயை புத்தகத்தில் கடைசியாக இந்த நிகழ்வை பதிவு செய்திருப்பதைப் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

உடனே அங்கே கூடியிருந்தவர்கள் சோமசுந்தர பாரதியாரைப் பார்த்து, ஏங்க, உங்களுக்கு அவர் சொல்கிற மந்திரம் பிடிக்கவில்லை என்றால், இப்படி நடந்துகொள்ளலாமா? இது நாகரிகமானதா? என்றெல்லாம் சொன்னார்கள்.

பொறுங்கள், பொறுங்கள்! நீங்கள் எல்லோரும் என்மேல் கோபமாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. நடந்தது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? நான் இப்பொழுது சொல்கிறேன். இங்கே இருக்கிற உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியாது. எனக்கு சமஸ்கிருதம் தெரியும். அவன் மந்திரம் சொன்னானே, அது என்ன மந்திரம் என்று உங்களுக்குத் தெரியுமா? அந்த மந்திரம் கருமாதி மந்திரமாகும் என்றார்.

அப்படியா என்று சொன்ன சிலர், அந்தக் குட்டிப் பார்ப்பானுக்கு இரண்டு அறை விட்டார்கள்.

உடனே அந்தக் குட்டிப் பார்ப்பான், அய்யா நிறுத்துங்கள்! என்னை அடிக்காதீர்கள். உண்மை என்னவென்றால், எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. என்னுடைய தகப்பனார், இரண்டு மந்திரங்களை சின்ன வயதில் சொல்லிக் கொடுத்தார். அதை நான் மாற்றி மாற்றி சொல்கிறேன்.  இதுவரையில் யாரும் நானும் அப்படியே செய்கிறேன். இனிமேல் நான் இப்படி செய்யமாட்டேன் என்றான்.

சமஸ்கிருதம் புரியாத மொழி என்கிற காரணத்தினால் நம்பு என்கிறார்கள். இதனால்தான் அவர்கள் வேத வாக்கு என்கிறார்கள்.

இங்கே ஆட்சி செய்பவர்களோ, எதற்கெடுத் தாலும் தலையாட்டுகிறார்கள் - பூம் பூம் மாடு போன்று. நான் அவர்களை மாடு என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். ஏனென்றால், எங்கள் சகோதரர்கள் அவர்கள். அந்த மாட்டிற்குக்கூட சில நேரங்களில் சுயமரியாதை வந்து முட்ட ஆரம்பிக்கிறது. எப்படியென்றால், மாட்டிடம் சென்று ஏதாவது வம்பு செய்தால், அந்த மாட்டிற்குக் கொம்பு இருக்கிறதோ, இல்லையோ அது முட்டுவதற்கு வரும்- அதைப் பார்த்து பயந்துவிடுவார்கள்.

நீங்கள் எல்லாம் கைதட்டுகிறீர்கள்; எங்களுக்கு ரத்தக் கண்ணீர் வடிகிறது!
 

ஆனால், இங்கே நடைபெறுகின்ற ஆட்சி இருக்கிறதே, எதுவுமே செய்யாது. அதற்குமுன் மாடுகள் எல்லாம் கருப்பைக் கண்டுதான் பயப்படும். ஆனால், இந்த மாடுகள் இருக்கிறதே, காவியை கண்டால், அணைத்துப் பிடிக்கிறார்கள். இது எவ்வளவு கேவலமானது, வேதனையானது. நீங்கள் எல்லாம் கைதட்டுகிறீர்கள்; எங்களுக்கு ரத்தக் கண்ணீர் வடிகிறது.

எங்களை விட்டால் இதை யார் சொல்வார்கள் - எத்தனை பேருக்கு இந்தத் துணிச்சல் வரும்?

தி.மு.க. ஆட்சிக்கு வராமல் தடுக்கவேண்டும் என்று பல சூழ்ச்சிகளை செய்கிறார்கள். எனவேதான், ஒரு பெரிய ஆபத்து வரவிருக்கிறது.

தி இந்து ஆங்கில நாளிதழில் (18.5.2018) ஒரு செய்தி வெளிவந்தது. அந்த செய்தியை நாங்கள் எடுத்து நாடு முழுவதும் பரப்புகின்றோம். நாங்கள் தவறாகப் பரப்பினால் எங்கள்மீது வழக்குப் போடு. அதனை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் என்ன முன் ஜாமீன் கேட்கிறவர்களா?

சகோதரர் வைகோமீது கோபப்பட்டு, அவரிடம் சொன்னேன், எங்கோ ஒருவர் தேவையில்லாமல் ஒரு வழக்கைப் போட்டார். அவர் சந்திக்காத வழக்கே கிடையாது; அவர் போகாத சிறைச்சாலையே கிடையாது. நிறைய அவர் அனுபவித்திருக்கிறார். அதைக் கண்டு கலைஞர் கலங்கியிருக்கிறார்; நாங்களும் கலங்கியிருக்கிறோம். எல்லோருமே கலங்கியிருக்கிறோம்.

திடீரென்று எங்கோ ஒரு நீதிமன்றத்தில் வைகோ, வைகோ என்று மூன்று தடவை அழைத்திருக்கிறார்கள். இவருக்கே தெரியாது அது. அதை செய்தியில் பார்த்தவுடன், நான் இருக்கிறேன் என்று சிறைச்சாலைக்குள் போய் உட்கார்ந்துவிட்டார்.

நாங்கள் முன்ஜாமீன்

கேட்பவர்கள் அல்ல!


நான் கேட்டேன், நாமெல்லாம் வழக்குரை ஞர்களாக இருக்கிறோம். ஏன் தேவையில்லாமல் சிறைச்சாலைக்குள் போய் உட்காரவேண்டும், நேரத்தை வீணாக்கவேண்டும் என்றேன். தேவை என்றால், சிறைச்சாலைக்குப் போவோம். அதிலொன்றும் சந்தேகம் இல்லை. நாங்கள் ஒன்றும் முன்ஜாமீன் கேட்பவர்கள் அல்ல; காவல்துறையினரின் தயவால் இருக்கக்கூடியவர்கள் அல்ல.

சிறைச்சாலை எங்களை என்ன செய்யும்?

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை

எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை

இந்தப் பாடம் பெரியாருடைய பள்ளிக்கூடத்தில் படித்த பாடமாகும்.

ஆகவேதான், இந்த அளவிற்கு இன்றைக்கு இந்தக் கொடுமைகள் நடந்திருக்கின்றன. நீட் தேர்வில் நாளுக்கு நாள் பலி. நேற்று ஒரு இளந்தளிர் பிரதீபா தற்கொலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.

நீட்டை ஒழிப்பது முக்கியமா? அதைவிட ஆபத்தான குருகுலக் கல்வியை தடுப்பது முக்கியமா? என்றால், எத்தனை களங்கள்? எத்தனை போராட்டங்கள்? காவிரி பிரச்சினையா? அதற்காகப் போராடவேண்டும்.

நம் தலைவர்கள் சந்தித்த எதிரிகள்

நாணயமான எதிரிகள்!


இன்னுங்கேட்டால், எங்களுக்கு முன் இருந்த தலைவர்கள் பெரியார், காமராசர், அண்ணா போன்ற தலைவர்கள் காலத்திற்கும், இன்றைக்கும் என்ன வேறுபாடு என்றால், அவர்கள் சந்தித்த எதிரிகள் நாணயமான எதிரிகள். அதனால், அதை ஒரு முறையாக அவர்கள் சந்தித்தார்கள்.

ஆனால், இன்றைக்கு நாம் சந்திக்கின்ற எதிரிகள் இருக்கிறார்களே, கொஞ்சம்கூட நாணயம் இல்லாதவர்கள்.

ஆனால், நீங்கள் எத்தனை வித்தைகள் செய் தாலும், அத்தனை வித்தைகளையும் கருவறுக்கக்கூடிய அந்த உணர்வினை, எங்கள் தலைவர்கள், எங்கள் ரத்த நாளங்களிலே வைத்திருக்கிறார்கள்.

எனவே நண்பர்களே! இந்தத் தகவல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.

இன்றைய விடுதலையில் நீட்டைப்பற்றி எழுதிய அறிக்கையை ஒரு துண்டறிக்கையாகப் போட்டு மக்களிடம் பரப்பவேண்டும் என்று நண்பர் வைகோ அவர்கள் சொன்னார்.

நாங்கள் எல்லாம் சமுதாயத்திற்காக

வாதாடக் கூடியவர்கள்

இது எங்களுக்காக அல்ல நண்பர்களே! உங்களுக்காகத்தான்! வைகோ அவர்கள் வழக்குரைஞ ராக பிராக்டீஸ் செய்தால், நன்றாக சம்பாதித்திருப்பார். அவர் செலவில் அல்லவா நீதிமன்றங்களுக்குச் சென்று வாதாடுகிறார். நாங்கள் எல்லாம் சமுதாயத்திற்காக வாதாடக் கூடியவர்கள்.

எனவேதான், எங்களுக்கு வருமானம் முக்கிய மல்ல நண்பர்களே! தன்மானம்தான் முக்கியம்.

வருமானமா? தன்மானமா? என்று பார்க்கும் பொழுது, தன்மானம் முக்கியம்.

தன்மானமா? இனமானமா? என்று பார்க்கும் பொழுது இனமானம்தான் முக்கியம்.

எனவே, தோழர்களே, நீங்கள்  எந்தக் கட்சியினராக வேண்டுமானாலும் இருங்கள்; அரசியலுக்காக அல்ல நண்பர்களே, தயவு செய்து அடுத்த தேர்தலைப்பற்றி நினைப்பதைவிட, அடுத்தத் தலைமுறையைப்பற்றி நினையுங்கள்! ஆனால், அடுத்த தலைமுறையினர் சரியாக வரவேண்டுமானால், அடுத்த தேர்தலும் சரியாக அமையவேண்டும், இன்றைய காலகட்டத்தில். இதைத் தான் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டிய ஒரு செய்தி.

நிச்சயமாக கூட்டத்தில் பங்கேற்பேன்

என்றார் சகோதரர் வைகோ!


எனவேதான், இந்த அறிவுறுத்துகிற கூட்டம், தாணா தெருவில் இன்றைக்குத் தொடங்கியிருக்கிறது. வழக்கம்போல இடையூறு இருக்கும்; அந்த இடையூறுகள் வந்தது. மதியம் கடுமையான மழை பெய்தது. நம்முடைய தோழர்களான பொறுப் பாளர்கள்கூட என்னிடம் கேட்டார்கள், மழை வருகிறதே என்று. சகோதரர் வைகோ அவர்களிடம் நான் கேட்டேன், நிச்சயமாக கூட்டத்தில் பங்கேற்பேன் என்று அவர் சொன்னது எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது.

ஆகவே, தாணா தெரு என்பது வரலாறு படைக் கின்ற இடமாகும். அதற்காகத்தான் இங்கே தொடங்கியிருக்கிறோம். இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய மிகப்பெரிய அளவிற்கு உணர்வுகள் இங்கே இருக்கின்றன. கூட்டம் முடிந்து திரும்பும்பொழுது ஒவ்வொருவரும் இந்த உணர்வோடு திரும்புங்கள்.

என்னுடைய உடலில் கத்தி படாத இடமே கிடையாது!

எனக்கு அய்ந்து முறை இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று இருக்கிறது. என்னுடைய உடலில் கத்தி படாத இடமே கிடையாது. யாரும் குத்தவில்லை, அந்தக் கத்தித்தான் என் உடலில் படவில்லை. அது எப்பொழுது படும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

ஒரு மனிதன் நோயினால் சாகக்கூடாது; விபத்தினால் எத்தனை பேர் இறந்து போகிறார்கள். கோவிலுக்குச் சென்றுவிட்டு வருபவர்கள், திடீரென்று வாகனம் பாலத்தின்மீது மோதி இறந்து போகிறார்கள். பகவான் கைவிட்டுவிட்டான். ஆனால், மீண்டும் அதை மறந்து பலர் கோவிலுக்குப் போகிறார்கள்.

திருப்பதி வெங்கடாசலபதியினை நினைப்பதற்குப் பதில்...

கோவிலுக்குப் போய் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறீர்களே, அந்தக் கடவுளை - விசா வாங்காமல், பாஸ்போர்ட் வாங்காமல் சென்ற கடவுள்களை எல்லாம் வெளிநாட்டிலிருந்து கொண்டு வருவதே நம்மாள்தான். அய்.ஜி. பொன்மாணிக்கவேல் அவருடைய கைகளில்தான் இருக்கிறது.

கடவுளை மற - மனிதனை நினை!

திருப்பதி வெங்கடாசலபதியினை நினைப்பதற்குப் பதில்,  அய்.ஜி. பொன்மாணிக்கவேலை நினை!

ஏனென்றால், சிலை தடுப்புப் பிரிவு என்று ஒரு பிரிவையே காவல்துறையில் வைத்திருக்கிறார்கள். அவர்கள்தான் வெளிநாடுகளுக்குக் கடத்திச் சென்ற கடவுள் சிலைகளை மீட்டு வந்து கோவிலுக்குள்ளேயே வைக்கிறார்கள்.

பக்திக்காக அல்ல நண்பர்களே, புத்திக்காக தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார்.

இந்த சமுதாயத்திலுள்ள மக்கள் கல்வியைப் பெறவேண்டும். நம் தமிழ்நாட்டில் நிறைய மருத்துவக் கல்லூரிகள், நிறைய பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இன்றைக்கு முத்தன் மகன் முனியன், சுப்பன் மகன் குப்பன் எல்லாம் அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்கிறார்கள்; சுவிட்சர்லாந்தில் இருக்கிறார்கள் என்கிறார்கள். அதற்குமுன் அமெரிக்கா எங்கே இருக்கிறது என்றே தெரியாது. ஆனால், இன்றைக்கு அவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

முதல் போர்ச்சங்கு ஊதுகின்ற

கூட்டம்தான் இந்தக் கூட்டம்!


இதெல்லாம் எப்படி முடிந்தது? படிப்பு பெருகியதினால்தானே! குலக்கல்வித் திட்டம் ஒழிந்ததினால்தானே - எங்கே பார்த்தாலும் கல்லூரிகள் - எங்கே பார்த்தாலும் மருத்துவக் கல்லூரிகள் - காமராசர் ஆட்சிக் காலத்தில், கலைஞர் ஆட்சிக்காலத்தில்.

இவை அத்தனையையும் தலைகீழாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நண்பர்களே, குருகுலக் கல்வித் திட்டம். இதனைத் தடுக்கவேண்டும். அதற்கு முதல் போர்ச்சங்கு ஊதுகின்ற கூட்டம்தான் இந்தக் கூட்டம் என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கிறேன்.

அடுத்து நம்முடைய சகோதரர் வைகோ அவர்கள் மிகத்தெளிவாக இதைப்பற்றி உரையாற்றுவார்.

நீங்கள் கவனத்துடன் இதைப் பயன்படுத்த வேண்டும். இது முக்கியம் என்று கூறி, உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இது முடிவல்ல - தொடக்கம்!

நீங்கள் ஒவ்வொருவரும், பத்து பேரிடம் இந்த ஆபத்தைப்பற்றி சொல்லுங்கள். இது முடிவல்ல - தொடக்கம்! என்று சொல்லி என்னுரையை முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

கும்பகோணம் ஜூலை 8

 திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர்

திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டுக்கான கூடுதல் குழுக்கள் சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

ஊர்வல முழக்கம்

கோவை சிற்றரசு, வன்னிப்பட்டு தமிழ்ச்செல்வம், ஓசூர் வனவேந்தன், தருமபுரி கிருட்டிணமூர்த்தி, வழக்குரைஞர் சிங்காரவேலு, நீடாமங்கலம் வீரத்தமிழன், மாங்காடு மணியரசன், வடலூர் திராவிடன்.

ஊர்வல முறைபடுத்துதல் குழு

தன்மானி (நாகூர்), பெரியார் செல்வன் (தஞ்சை), பொய்யாமொழி (தஞ்சை), சகாதேவன் (மத்தூர்), வீரமணி (ஊற்றங்கரை), பரசுராமன் (குன்றத்தூர்).

மேடை நிருவாகக்குழு

மோகன் (கபிஸ்தலம்), நெல்லுப்பட்டு இராமலிங்கம், இந்திரா (தஞ்சை), இ.பொ.பகுத்தறிவு (தஞ்சை).

நிதிக்குழு

தஞ்சை சவுந்தரராஜன், புலவர் மோகன்தாஸ், லெனின் பாஸ்கர், ஏ.மனோகரன் (குடந்தை), வே.இளங் கோவன் (பாபநாசம்).


Thursday, June 7, 2018

தோழர்களே நீங்கள் அத்துணை பேரும் ஒவ்வொருவரும் களம் காணுகின்ற வீரர்களாக மாறுங்கள்!

உதயசூரியன் ஆட்சி மீண்டும் உதிக்கின்ற வரையில் உறங்கமாட்டோம் - பணியாற்றுவோம் என்று உறுதிகொள்ளுங்கள்!

அயன்புரத்தில்  நடைபெற்ற கலைஞர் 95 பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர்  சங்கநாதம்



சென்னை, ஜூன் 7- நீங்கள் அத்துணை பேரும் செயல் வீரர்களாக மாறுங்கள். ஒவ்வொருவரும் களம் காணுகின்ற வீரர்களாக மாறுங்கள். களத்தில் காணுவோம் -  உதயசூரியன் ஆட்சி மீண்டும் உதிக்கின்ற வரையில் உறங்கமாட்டோம் - பணியாற்றுவோம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம் என்ற உணர்வை நீங்கள் பெறுங்கள்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

உடன்பிறப்பு-7 கலைஞர் 95 கருத்தரங்கம்!

5.6.2018 அன்று சென்னை அயன்புரம் போர்ச்சியஸ் சாலை, ஜாயின்ட் ஆபீஸ் அருகில் நடைபெற்ற சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. வில்லிவாக்கம் கிழக்குப் பகுதி சார்பில் உடன்பிறப்பு-7 கலைஞர் 95 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்

அவரது உரை வருமாறு:

95 ஆண்டு அகவை காணுகின்ற

ஒப்பற்ற தலைவர் கலைஞர்

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களால், மாணவப் பருவத்திலேயே பயிற்சி கொடுக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணா அவர்களால் அரசியல் துறையில் செதுக்கப்பட்டு, இன்றைக்கு 95 ஆவது அகவையில், தன்னுடைய தலைவர், தனக்கு வழிகாட்டியாக இருந்த அறிவாசான் எந்த 95 வயதை எட்டிப் பிடித்தாரோ, அதையே அவருடைய தொண்டன், தோழன் உழைப்பின் மூலமாக நான் எட்டிப் பிடித்திருக்கிறேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு 95 ஆண்டு அகவை காணுகின்ற ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களுடைய இந்தப் பிறந்த நாள் பெருவிழா - திருவிழாவை முன்னிட்டு நடைபெறக்கூடிய இந்தக் கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உதயசூரியன் உதிக்கவேண்டும்; இருட்டை

அகற்றவேண்டும்; விடியல் வரவேண்டும்

இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி என்று சொன்னாலும், இன்றைய ஆட்சியாளருடைய செயலற்ற தன்மையினால், பல உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கக்கூடிய நிலை இருக்கிறது. ஒரு பக்கம் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகிறார்கள்; இன்னொரு பக்கம் நீட்டிற்குப் பலியாகிறார்கள். இந்தக் கொடுமைகள் சொல்லொணாக் கொடுமை என்றால், இந்த இருட்டிலிருந்து மக்களை வெளியே கொண்டுவரவேண்டுமானால், இந்தத் துயரம், துன்பத்திலிருந்து வெளியே வரவேண்டுமானால், ஒரே வழி, உதயசூரியன் உதிக்கவேண்டும்; இருட்டை அகற்ற வேண்டும்; விடியல் வரவேண்டும் என்பதைத் தவிர வேறு கிடையாது.

இன்றைக்கு மாலையில் இந்தக் கூட்டத்திற்கு வரும் பொழுது உற்சாகத்தோடு கிளம்பினாலும்கூட, வந்த செய்தி நம்மையெல்லாம், நம் நெஞ்சங்களையெல்லாம் கனத்த அளவிற்கு, வேதனையாலும், துயரத்தாலும் இருக்கக் கூடிய அளவிற்கு, ஒரு அனிதாவினுடைய மறைவு என்பது எப்படி யெல்லாம் நம் உள்ளத்தை உலுக்கி இருக்கிறது- ஒரு மாணவி, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி, கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய ஒரு மாணவி, தன்னுடைய நெஞ்சில், மருத்துவக் கனவை சுமந்து கொண்டிருக்கக் கூடிய அந்த நிலையில், ஒரு ஏழை பாட்டாளி, கூலித் தொழிலாளியின் ஒருவருடைய பிள்ளை, அந்த மாணவி, தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்வித் திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றாலும், இப்போது வைக்கப்பட்டிருக்கின்ற சூழ்ச்சிப் பொறி இருக்கிறதே - நீட் என்ற அந்த சூழ்ச்சிப் பொறியின் காரணமாக, மிகப்பெரிய அளவிற்கு தற்கொலை செய்துகொண்ட செய்தி நம் எல்லோருக்கும் தெரியும்.

நாம் அப்பொழுதே சொன்னோம், ஒரு அனிதாவோடு இது முடிந்துவிடவேண்டும், ஆட்சியாளர்களே கொஞ்சம் கண் திறங்கள். உங்களுடைய செயலற்றத் தன்மையிலிருந்து, உங்களுடைய உறக்கத்திலிருந்து நீங்கள் கொஞ்சம் விழித் தெழுங்கள். உரிமையை வலியுறுத்தவேண்டி டில்லிக்கு வலி யுறுத்துங்கள். இதன்மூலம் பல அனிதாக்களை உருவாக்காமல் தடுக்கலாம் என்று சொன்னோம்.

ஆனால், கேளாக் காதுகள், பார்க்காத கண்கள், செயலற்ற கைகள் இவைகள்தான் இந்த ஆட்சியினுடைய அங்கங்கள் என்று சொல்லக்கூடிய அந்த நிலை இருக்கின்ற காரணத்தால், இன்றைக்கு மாலையில் வந்திருக்கின்ற இன்னொரு தொடர் பலி எண்ணிப்பாருங்கள்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவின் தந்தை ஒரு சாதாரண தொழிலாளி- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள பெருவளூரைச் சேர்ந்தவர் சண்முகம். கட்டடத் தொழிலாளியாவார்.

ஏற்கெனவே தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் தந்தை மூட்டை தூக்குகிற ஒரு தொழிலாளி.

மீண்டும் போர்க்களத்திலே

வரவேண்டிய காலகட்டம்

தோழர்களே, எவ்வளவு வேதனையோடு நாம் கூடியி ருக்கிறோம். இந்த நிலையில், கலைஞர் அவர்களுடைய அந்த நினைவு என்பது இருக்கிறதே, அதைப் பார்க்கும்பொழுது, நாமெல்லாம் செயல் வீரர்களாக மாறித்தான் தீரவேண்டும் - அவருடைய உழைப்பை நாம் பகிர்ந்துகொண்டால்தான், இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு அப்போதுதான் முற்றுப் புள்ளி வைக்க முடியும். திராவிடர் இயக்கம் மீண்டும் போர்க்களத்திலே வரவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது என்று சொல்லக்கூடிய ஒன்றை இந்த நிகழ்ச்சி மேலும் மேலும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

போராட்டங்கள் தேவையா? என்று சில புத்திசாலிகள் எல்லாம் இப்பொழுது கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பக்கத்தில் இருக்கட்டும். அவர்களைப்பற்றி நாம் அதிகமாகப் பேசி விளம்பரப்படுத்தி விடக்கூடாது - அதைத் தான் அவர்கள் விரும்புகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு நிலையில், இன்று வந்த செய்தியைப் படிக்கிறேன்.

நீட் தேர்வு என் மகளைக் கொன்றுவிட்டதே!

பிரதீபாவின் தந்தை கதறல்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள பெருவளூரைச் சேர்ந்தவர் சண்முகம். கட்டடத் தொழிலாளி.  மனைவி அமுதாவும் கூலித் தொழிலாளி. இவர்களுக்குப் பிரியா (வயது 24), பிரதீபா (வயது 18) என்ற இரண்டு மகள்களும், பிரவீன்ராஜ் (வயது 21) என்ற மகனும் உள்ளனர்.

வேகாத வெயிலில் கல் உடைத்தும், மண் சுமந்தும் நாம் படும் வேதனைபோல் நம் பிள்ளைகளும் வேதனைப் படக்கூடாது. அவர்களைப் படிக்க வைத்து, பெரிய ஆளாக்கவேண்டும் என்கிற ஆசைக் கனவு அந்த ஏழைத் தம்பதிகளுக்கு.

குடும்ப சூழ்நிலையை அறிந்து பிள்ளைகளும் வைராக்கியதோடு படித்தார்கள். பிரியா வேலூரில் எம்.சி.ஏ. படிக்கிறார். பிரவீன் ராஜ் மயிலத்தில் இன்ஜி னியரிங் படிக்கிறார்.

அப்பா.... அண்ணனும், அக்காவும் பொறியியல் துறையில் படிக்கிறார்கள். நான் டாக்டருக்கு படிக்கி றேனப்பா என்று பிரதீபா கூறி இருக்கிறார்.

நீட் டாக்டர் ஆகணும்னு எனக்கும் ஆசைதாண்டா செல்லம். ஆனால், இந்த அப்பாவால் அவ்வளவு பணம் செலவழிக்க முடியுமான்னு தான் தயக்கமா இருக்குடா... என்று தந்தை சொன்னதும், பிரதீபா ஆறுதல் சொல்லி தேற்றி இருக்கிறார். நீங்க கவலைப்படாதீங்கப்பா. நான் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி சல்லி காசு செலவில்லாமல் அரசு கல்லூரியில் படித்து டாக்டராகி காட்டுகிறேன் என்று மகள் தைரியமாக சொன்னதைக் கேட்டு, அந்த ஏழைத் தந்தையும் பூரித்துப் போனார். உன்னால் முடியும்டா கண்ணு, படி என்று உற்சாகப்படுத்தினார்.

கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பும், வெள்ளை கோட்டும் அணிந்தபடி மகள் பல மருத்துவர்கள் மத்தியில் நடமாடுவது போல் தந்தை கனவு கண்டார்.

பிரதீபாவின் கனவு அதற்கும் ஒருபடி மேலாக இருந்தது. தான் வாழும் கிராமத்தில் ஏழைகளாய் வாழும் மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்வதுபோலவும், அந்தக் கிராமத்துப் பெண் களெல்லாம், மவராசி நீ நல்லா இருப்பாய் என்று வாயார வாழ்த்தியதையும் கேட்டு ஆனந்தப்படுவது போன்ற கனவு.

நீட்டை ஒழிக்கின்றவரை நாம் ஓயமாட்டோம்!

ஆனால், என்ன நடந்தது நண்பர்களே! அந்தக் கொடு மையைப் பாருங்கள். திராவிடர் இயக்கம் ஏன் போராட்டக் களத்தில் நின்றது. இங்கே இருக்கின்ற அத்தணை தலை வர்களும், தோழர்களும் நீட்டை எதிர்த்து போராட்டக் களத்தில் நேற்றுவரை நின்று கொண்டிருக்கிறோம். நாளைக்கும் நிற்போம். நீட்டை ஒழிக்கின்றவரை நாம் ஓயமாட்டோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைய நிலை இருக்கிறது.

ஆனால், மறுகணமே அதுவும் நடக்கத்தான் போகிறது. நிச்சயம் நம்மால் முடியும் என்கிற நம்பிக்கைப் பிறந்தது.

10 ஆம் வகுப்புத் தேர்வில், தற்கொலை செய்துகொண்ட பிரதீபா என்ற பெண் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த, ஒரு கூலித் தொழிலாளியினுடைய மகள். அந்த நிலையில், அந்த மாணவி பிரதீபா 500-க்கு 490 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்.

இத்தனைக்கும் அவர் மேட்டுக்குடியல்ல; உயர்ந்த ஜாதி யல்ல - மனுதர்மப் பரம்பரையில் பாரம்பரியமாக அய்.ஏ.எஸ். பிள்ளைகள் - அப்பன், தாய், தாத்தா இவர்கள் எல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள் என்பதல்ல - ஒரு பக்கம் மாட்டுத் தொழுவம் - இன்னொரு பக்கம் குடிசை - மற்றொரு பக்கம் கல் உடைக்கும் தொழிலாளியின் கருவிகளைத் தவிர வேறு கிடையாது. இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த பிரதீபாவிற்கு மகிழ்ச்சி. பிளஸ் டூ தேர்விலும் இதுபோன்றே மதிப்பெண் எடுக்கவேண்டும் என்று.

நீட் தேர்வின் குறைபாடுதான் காரணம்

பிளஸ் டூ தேர்விலும் 1200-க்கு 1125 மதிப்பெண்களைப் பெற்றார். தைரியமாக நீட் தேர்வை எழுதுகிறேன் என்று எழுதி னார். ஆனால், அதில் வெற்றி பெறவில்லை. அந்தத் தோல்வி அவரை மிகப்பெரிய அளவிற்கு துவளச் செய்திருக்கிறது. ஆனால், அந்தத் தோல்விக்கு அவருடைய அறிவு குறைவா காரணம்? நீட் தேர்வின் குறைபாடுதான் காரணம்.

நீட் தேர்வு என்பது தமிழகத்தை வஞ்சிப்பதற்காக. ஒடுக்கப் பட்ட மக்களை, தாழ்த்தப்பட்ட மக்களை, பிற்படுத்தப்பட்ட மக்களை, கூலித் தொழிலாளியாக, ஏழைத் தொழிலாளியாக, பாட்டாளிகளாக இருக்கின்ற மக்களை வஞ்சிப்பதற்காக வந்த ஒன்று என்பதற்கு அடையாளமாக இதோ பாருங்கள் இந்த செய்தியை!

பிரதீபா எழுதிய கடிம்!

நீட் தேர்வை பிரதீபா எழுதுகிறார்; அதில் தோல்வி அடைகிறார். அந்தத் தோல்வியை இளந்தளிரான பிரதீபாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதனுடைய விளைவாக ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, விஷத்தைக் குடித்து, தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறார்.

மருத்துவராக ஆகவேண்டும் என்று கனவு கண்ட அந்தப் பிள்ளை - தந்தைக்கு உறுதி சொன்ன அந்தப் பிள்ளை - தாய்க்கு உறுதி சொன்ன அந்தப் பிள்ளை!

அந்தக் கடிதத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறார் என்பதை எங்களுடைய ஏடுகள்கூட அல்ல - அந்தக் கடிதத்தை அப்படியே வெளியிட்டுள்ள மாலைமலர் பத்திரிகையில் இருப்பதை படிக்கிறேன். இந்தப் பத்திரிகை அரசாங்கத்திற்கு ஆதரவான பத்திரிகையாகும்.

அந்தக் கடிதத்தை அப்படியே படிக்கிறேன்.

மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் கூறி இருப்பதாவது:

கேளுங்கள் தாய்மார்களே, தோழர்களே! நீட்டை ஆதரிக் கின்ற நெஞ்சமற்ற தோழர்களே, நீங்களும் கேளுங்கள்! இதுவரையில் செவிடாக இருந்த உங்கள் காதுகள் இனிமேலாவது கொஞ்சம் வேலை செய்யட்டும்.

நான் 2018 மே மாதம் 6 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை தமிழ் மொழியில் எழுதினேன். தமிழ் மொழியில் உள்ள வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு கேட்கப்பட்டு இருந்தது. எனவே, அந்த வினாக்களுக்கு அதற்குரிய மதிப்பெண்களை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இந்தக் கடிதத்தை அவர் சென்னையில் உள்ள நீட் சம் பந்தப்பட்ட அலுவலகத்தை அனுப்பி வைக்க எழுதி உள்ளார். இதுதான் பிரதீபாவின் கடைசி மொழி. இதற்கு உறுதிமொழி தரப்போவது யார்?

டி.கே.ரெங்கராஜன் எம்.பி. தொடர்ந்த வழக்கு!

இதற்கிடையில், இன்னொன்றையும் இணைத்துச் சொல்ல வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவையில் தோழர் டி.கே.ரெங்கராஜன் அவர்கள்,

நீட் தேர்வில் பெரிய குளறுபடிகள் நடைபெற்று இருக்கின்றன. கேள்விகள் எல்லாம் தப்பும் தவறுதலாக இருக்கின்றன. பாடத் திட்டங்களில் இல்லாத கேள்விகள் - மொழி பெயர்ப்பு தவறு - பொருளில் தவறு என்றெல்லாம் சுட்டிக்காட்டி பல புகார்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, நீட் தேர்வு முடிவினை வெளியிடக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.

தடை வந்துவிடுமோ என்று முன்கூட்டியே நீட் தேர்வு முடிவினை வெளியிட்டனர்!

ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தால், நீட் தேர்வு முடிவுக்கு தடை கொடுத்துவிடுவார்களோ என்று அறிந்து, 2 மணிக்கு வெளிவரவிருந்த நீட் தேர்வு முடிவுகள் - 11.30 மணிக்கே வெளியிடப்பட்டது.

ஏன்? நீதிமன்றத்தையும் சேர்த்து ஏமாற்றுவதற்காக. எவ்வ ளவு வஞ்சகம் -எவ்வளவு பெரிய கொடுமை. தவறு அங்கே இருக்கிறது - அதற்கு உயிர்ப் பலி இங்கே!

பாவம் புரியாத இளந்தளிர்கள், விரக்தி, தோல்வி மனப்பான் மையால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

கலைஞர் வாழ்க! சொல்வதற்குப் பொருள்!

எனவே தோழர்களே, இப்படிப்பட்ட ஒரு ஆட்சி தேவையா? என்பதை முடிவு கட்டுவதுதான் கலைஞர் வாழ்க! சொல்வதற்குப் பொருள்.

கலைஞர் வாழ்க! கலைஞருடைய ஆயுள் நீளுக என்று சொல்லிவிட்டுப் போவது நமது பணியல்ல! கலைஞர் அவர்கள் களத்தில் எதைச் செய்வாரோ அதை செய்தாக வேண்டும் நாம். கலைஞருடைய உணர்வுகள் நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றன. காரணம், அவர் பெரியாரிடம் இருக்கும் துணிவைப் பற்றியவர். அண்ணாவிடம் இருக்கின்ற கனிவைக் கொண்டவர். அ06ட்ட கலைஞர் அவர்களுடைய இந்தப் பிறந்த நாள் விழாவில், என்னுடைய உரையைத் தொடங்குவதற்குமுன் இந்தத் துயரச் சம்பவத்தை உங்களுக்குச் சொன்னேன். எல்லோரும் எழுந்து நின்று, ஒரு நிமிடம் மறைந்த அந்த இளந்தளிருக்கு நம்முடைய இரங்கலைத் தெரிவிக்கவேண்டும் என்று அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.

(அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் அமைதி காத்தனர்).

தோழர்களே! கலைஞர் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப்பற்றி இங்கே ஏராளம் சொன்னார்கள். அடுத்ததாக தோழர் திருநாவுக்கரசர் அவர்கள் தெளிவாக சொல்லுவார்கள்.

கலைஞர் அவர்களுடைய சிறப்புகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படி சொல்லுவதின்மூலம் நமக்கு சிறப்பு - கலைஞருக்கு அல்ல! கலைஞருடைய உணர் வுகளை நாம் இப்போது களத்தில் அதை செயலாக்கிக் காட்டுவதுதான் கலைஞர் அவர்கள் 95 ஆண்டு காலம் வாழ்ந்திருப்பதற்கு மிகப்பெரிய பொருளாகும். அவர் அடை யாளம் காட்டிய செயல் தலைவர் நம்மிடையே இருக்கிறார். ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். ஜனநாயகத்தில் எந்த உணர்வுகளை மற்றவர்கள் பிரதிபலிக்கிறார்களோ, அதை ஏற்று செயல்படக் கூடிய மாமனிதராக அவர் இன்றைக்கு செயல் வீரராக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு சொக்கத் தங்கங்கள் போன்று தோழர்கள், உடன்பிறப்புகளாகிய நீங்கள் எல்லாம் உற்சாகத்தோடு களம் காணுவதற்குத் தயாராக இருக்கிறீர்கள்.

கலைஞருக்கு ஈடு கலைஞர்தான்;

உழைப்பின் உருவம் அவர்!

இப்படிப்பட்ட  இந்தக் காலகட்டத்தில், பொதுமக்களுடைய உணர்வுகள் என்பது இருக்கிறதே, நமக்கு மட்டுமல்ல; ஏதோ நாம் கட்சி உணர்ச்சியினால் சொல்லுகிறோம்; கலைஞரோடு பழகியவர் என்பதற்காக சொல்கிறேன் என்பது அல்ல. இந்த நாட்டில் எத்தனையோ செய்திகளில், கலைஞருக்கு ஈடு கலைஞர்தான்; உழைப்பின் உருவம் என்று சொன்னால், அதற்கு ஈடு யாராவது உறுதியாக சொல்ல முடியுமா? என்பதை எண்ணிப்பாருங்கள்.

அதுமட்டுமல்ல, 95 ஆண்டுகால வாழ்க்கையில், 82 ஆண்டுகால பொதுவாழ்க்கையைக் கொண்ட ஒரு மாமனிதர் - இந்தியாவின் வரலாற்றில் அல்ல - உலக வரலாற்றிலேயே வேறு யாராவது இருக்கிறார்களா? விரலை மடக்க முடியுமா? என்று எண்ணிப் பாருங்கள்.

சிலர் உளறுகிறார்கள், திராவிடத்தால் வீழ்ந்தோம் - திராவிடத்தை வீழ்த்துவோம் - கழகங்களே இல்லாத தமிழகம் என்று - எத்தனையோ கொம்பன்கள் சொல்லி, இருக்கின்ற இடம் தெரியாமல் போயிருக்கிறார்கள். அதிலே இவர்கள் சேருவதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, வேறொன்றுமில்லை. மலையோடு மோதினால், உடைவது மலையாக இருக்காது - மண்டையாகத்தான் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டிய காலகட்டம். ஆகவே, அதனைப் புரிந்தாகவேண்டும். பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம்

ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்! என்று தன்னுடைய பொதுவாழ்க்கையைத் தொடங்கியவர், இறுதிவரையில் பகுத் தறிவாளர்.

கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்

கலைஞர் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்கி றார்கள், எத்தனையோ செய்திகள், எத்தனையோ பெருமைகள், எத்தனையோ சாதனைகள் அவருடைய வாழ்நாளில். எழுத்தில், பேச்சில், திரைத்துறையில். அவர் ஒரு பல்கலைக் கொள்கலன். அவர் போல் அத்துணை அம்சங்களிலும் முன்னாலே நிற்கக்கூடியவர்கள் யாரும் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும். எதிரிகள்கூட மறுக்கமாட்டார்கள்.

அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இன்றைக்கு மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய செய்தி என்ன? கலைஞ ருடைய பெருமைகளை அடுத்து திருநாவுக்கரசர் அவர்கள் சொல்வார். அன்றைக்கும் சொன்னார்.

போராட்ட உணர்வை நம்முடைய தோழர்கள்

கொஞ்சம்கூட தள்ளி வைக்கக்கூடாது!

நண்பர்களே! அந்தப் பெருமைகளைவிட, நாங்கள் இப் பொழுது உங்களுக்கு நினைவூட்டவேண்டியது - இப்போது நமக்கு ஒரு போராட்டக் குணம் வேண்டும். அந்த போராட்ட உணர்வை நம்முடைய தோழர்கள் கொஞ்சம்கூட தள்ளி வைக்கக்கூடாது. இந்தக் காலகட்டம், அதற்கு மிக முக்கியமான காலகட்டம். அதை சொல்லுவதற்குத்தான் நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன்.

அருமைத் தோழர்களே, எண்ணிப்பாருங்கள்! எதிர்க்கட்சி என்று சொல்லுகின்ற நேரத்தில் - எதிர்நீச்சல் என்பது இருக்கிறதே, அது அவருக்குக் கைவந்த கலை. ஆட்சியில் இருக்கும்பொழுது மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால், எதிர்நீச்சல் என்று வந்துவிட்டால், கலைஞருக்கு நிகர் கலைஞர்தான்.

நெருக்கடி காலம் - இந்த இயக்கத்தையே அழித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். 42 ஆண்டுகளுக்கு முன்பு - வயதானவர்களுக்கு இந்த வரலாறு தெரியும் - இன்றைய இளைஞர்களுக்கு அந்த வரலாறு தெரியாது.

நெருக்கடி காலத்தில் சிறையில் அடிபட்டோம்!

அன்றைக்கு இந்த இயக்கமே இருக்காது என்று சொன்னார்கள். ஆனால், கலைஞர் அவர்கள் அதை அணுகிய முறை இருக்கிறதே, அது எளிதானதா? எத்தனை முறை சிறைச்சாலைகள். சிறையில் அடிபட்டோம்; தளபதி ஸ்டாலின் அடிபட்டார்; ஆற்காடு வீராசாமி அடிபட்டார்; திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் - திராவிடர் கழகத் தோழர்கள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் இதுபோன்ற பல இயக்கத் தோழர்கள் சிறைச்சாலையில் அடிபட்டார்கள் என்பதெல்லாம் ஒரு பக்கத்தில் இருந்தாலும்,

வெளியில் இருந்தவர்களின் நிலை என்ன? என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். கலைஞருக்கு கார் ஓட்டுவார் ஒருவர். அடுத்த நாள் காலையில் நாங்கள் எல்லாம் அவரை வரவேற்போம் - எங்கே தெரியுமா? சிறைச்சாலைக்குள்ளே! கலைஞருக்குக் கார் ஓட்டினால், அடுத்தது சிறைச்சாலைதான் அவருக்கு. ஏனென்றால், கலைஞரை தனிமைப்படுத்தவேண்டும் என்று மற்றவர்கள் நினைத்தார்கள். ஆனால், அப்படி நினைத்தவர்கள் தோற்றார்கள் - கலைஞர் வென்றார்! அதுதான் மிக முக்கியம்.

அவருடைய வெற்றி என்பதை தேர்தல் வெற்றியை வைத்துக் கணக்குப் போடாதீர்கள். அதிலே அவரை வீழ்த்து வதற்கு யாராலும் முடியவில்லை.

கொஞ்சம் சூடு இருந்தால், சுரணை இருந்தால்,

சுயமரியாதை இருந்தால்...

ஆனால், அதைவிட மிக முக்கியம் - அந்தக் காலகட்டத்தில் முரசொலியை அவர் நடத்திய விதம் - திராவிட முன்னேற்றக் கழகத்தை நடத்திய விதம். அதுதான் இந்த அஸ்திவாரம் என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். எதிரிகளுக்கு நினைவூட்ட நான் கடமைப்பட்டு இருக்கிறேன். கழகங்களையெல்லாம் அழித்துவிடுவோம் என்று டில்லியை வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறீர்களே! டில்லிக்குத் தலையாட்டுகிறீர்களே! கொஞ்சம் சூடு இருந்தால், சுரணை இருந்தால், சுயமரியாதை இருந்தால், நீட் தேர்வுக்கு இப்படிப்பட்ட ஒரு கொடுமை - இப்படிப்பட்ட பலிகள் வந்திருக்குமா?

நீங்கள் வேறொன்றும் செய்யவேண்டாம் - விளக்கெண் ணெய் குடிக்கவேண்டியதில்லை - வேப்பெண்ணெய் குடிக்க வேண்டியதில்லை - நீங்கள் ஒன்றும் தண்டால் எடுக்க வேண்டியதில்லை.

இந்த மண்ணுக்கு சமூகநீதி மண் என்ற வரலாறு உண்டு!

ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் சட்டபூர்வமாக - நமக்கு இருக்கிற உரிமை - சட்டமன்றத்தில் மிகத் தெளிவாக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, காங்கிரசு பேரியக்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எல்லோரும் ஒருமித்த குரலில், அரசியல் பார்க்காமல், தமிழ்நாட்டின் நலன் முக்கியம் என்று நினைத்து, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுடைய சமூகநீதிக் கொடி தாழ்ந்து பறக்கக்கூடாது - கீழே இறக்க அனுமதிக்கக் கூடாது - ஆகவே, அந்த நிலை உயர்ந்த நிலையில் இருக்கவேண்டும் என்று பெரியார் மண் - இந்த மண்ணுக்கு சமூகநீதி மண் என்ற வரலாறு உண்டு என்ற அடிப்படையை அவர்கள் தெளிவாகக் காட்டியதன் காரணமாகத்தான், அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள - ஏற்கெனவே காங்கிரசு கொண்டு வந்த தீர்மானமாக - உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையாகக் கொண்டு வந்திருந்தாலும்கூட, அவர்கள் ஜனநாயக உரிமைப்படி, அரசியல் சட்டத்தினுடைய கடமையை அவர்கள் பறிக்கவில்லை - அதிகாரத்தைப் பறிக்கவில்லை.

அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது!

ஒன்றை அவர்கள் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டினார்கள். அது என்னவென்றால், எந்த மாநிலம் நீட் தேர்வை விரும்ப வில்லையோ - அந்த மாநிலத்திற்கு விதிவிலக்கு அளிக்க உரிமை உண்டு. இது அரசமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடியது.

காரணம், ஏற்கெனவே, கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. கல்வி என்பது முழுக்க முழுக்க நாம் முடிவெடுக்கவேண்டிய செய்தி. இதற்கும், டில்லிக்கும் சம்பந்தம் இல்லை. மத்திய அரசுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை.

பிறகு அது நெருக்கடி காலத்தில், ஒத்திசைவுப் பட்டியலுக்கு (கன்கரண்ட் லிஸ்ட்) பொதுப் பட்டியல் என்று தமிழில் மொழிப் பெயர்ப்பார்கள் - அது சரியானது அல்ல. ஒத்திசைவுப் பட்டியல் என்றால், மாநில அரசினுடைய ஒப்புதல் பெற்ற பிறகுதான், இந்தத் துறையில் சட்டம் இயற்ற முடியும். ஆனால், அதை அவர்கள் செய்தார்களா? என்றால், கிடையாது.

நாடாளுமன்ற நிலைக்குழுவில், தெளிவாக சொல்லியிருக் கிறார்கள். எந்த மாநிலம் நீட் தேர்வை விரும்பவில்லையோ அந்த மாநிலத்திற்கு விலக்குக் கொடுங்கள். விலக்குக் கோருவதற்கு மாநிலங்களுக்கு உரிமை உண்டு.

மாநிலங்களுக்கு உள்ள உரிமை!

இது பிச்சையல்ல - சலுகையல்ல - அல்லது மோடியிடமோ, உள்துறையிடமோ கெஞ்சி கேட்கவேண்டியதும் கிடையாது. மாநிலங்களுக்கு உள்ள உரிமை அது.

அந்த உரிமையைப் பயன்படுத்தித்தான், ஒன்றரை ஆண்டுகளுக்குமுன், இதே ஆட்சி இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியது.

இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், திராவிட முன்னேற்ற கழக செயல் தலைவர் அவர்கள் தெளிவாக, தீர்மானம் கொடுத்துப் பேசியிருக்கிறார்கள்.

என்ன பதில் சொன்னார்கள் ஆளுங்கட்சியினர்?

ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் அந்த இரு மசோதாக்களை நாம் நிறைவேற்றினோமே, அது இப்பொழுது எங்கே இருக்கிறது?

தெரியாது என்கிறார்கள்.

குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருக்கிறது என்றால், ஒன்றரை ஆண்டுகாலத்திற்கு அதற்கு என்ன வேலை?

நீங்கள் கடிதம் எழுதுங்கள் குடியரசுத் தலைவருக்கு - ஏற்கெனவே அவர் மிகவும் சங்கடத்தோடு அமர்ந்திருக்கிறார் - அதற்கும், அவருக்கும் சம்பந்தம் கிடையாது என்பதுபோல. ஏற்கெனவே அவர் கோவிலுக்குள் கூட அவரால் உள்ளே செல்ல முடியவில்லை.

கோவிலுக்கு வெளியே படிக்கட்டுகளில் அமர்ந்து வழி பாட்டினை செய்து வரக்கூடிய ஒரு நிலை இருக்கிறது இன்றைய காலகட்டம்.

ஆகவே, நண்பர்களே! நீங்கள் சிந்திக்கவேண்டும்.இங்கே நடைபெறுகிற ஆட்சி ஒன்றரை ஆண்டுகாலம் நடை பெறுகிற ஆட்சி ஒரு பொம்மலாட்ட ஆட்சி - டில்லிக்குத் தலையாட்டுகிற ஆட்சி. எந்த நேரம் டில்லி கயிறை இழுத்தால், நாம் போய்விடுவோம் என்று நினைத்து, அதுவரையில் நாம் ஆட்சியில் இருப்போம் என்று டில்லிக்கு சலாம் போடுகிற ஓர் ஆட்சி என்று சொன்னால், இந்த ஆட்சிக்கு கலைஞருடைய ஆட்சியை எண்ணிப்பாருங்கள்.

கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருக்கும்பொழுது என்ன செய்தார் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும் தோழர்களே!

ஒரே வார்த்தையில் கலைஞர் சொன்னார்,

உறவுக்குக் கைகொடுப்போம்

உரிமைக்குக் குரல் கொடுப்போம்!

என்றார்.

இன்றைக்கு உரிமைக்குக் குரல் கொடுக்காத ஊமையர்களின் ஆட்சி எதற்காகத் தேவை இந்த நாட்டில்? இதைத்தான் நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.

எதைச் செய்தால் கலைஞர் வாழ்வார்? எதைச்

செய்தால் கலைஞர் அவர்களுடைய ஆயுள் நீளும்?

எனவே, கலைஞர் வாழ்க! கலைஞருடைய ஆயுள் வளர்க! என்று நாம் வாழ்த்துவதற்கு இந்தக் கூட்டத்தை நாம் போட்டிருக்கிறோம் என்றால், அதன்மூலமாக, எதைச் செய்தால் கலைஞர் வாழ்வார்? எதைச் செய்தால் கலைஞர் அவர்களுடைய ஆயுள் நீளும்? எதைச் செய்தால் அவருடைய மகிழ்ச்சி, உற்சாகம் ஊற்றெடுத்துப் பெருக்கும்.

மீண்டும் ஒரு மாற்றம் தேவை! அந்த மாற்றம் டில்லியில் மாற்றம்! தமிழகத்தில் மாற்றம். டில்லியில் ஒரு மோடி வித்தை -

இங்கே அந்த மோடி வித்தையைக் கைக்கொண்டி ருக்கக்கூடிய ஒரு ஆட்சி.

மத்தியில் காவி ஆட்சி

இங்கே ஆவி ஆட்சி

என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

எனவே, காவிக்கும் வேலையில்லை - ஆவிக்கும் வேலை யில்லை என்று முடிவெடுக்க - களம் காணுங்கள்! களம் காணுங்கள் என்று சொல்லி என்னுரையை முடிக்கிறேன்.

ஒவ்வொருவரும் களம் காணுகின்ற

வீரர்களாக மாறுங்கள்

இது அறிவார்ந்த அரங்கம் - நீங்கள் அத்துணை பேரும் செயல் வீரர்களாக மாறுங்கள். ஒவ்வொருவரும் களம் காணு கின்ற வீரர்களாக மாறுங்கள். களத்தில் காணுவோம் -  உதயசூரியன் ஆட்சி மீண்டும் உதிக்கின்ற வரையில் நாங்கள் உறங்கமாட்டோம் - பணியாற்றுவோம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம் என்ற உணர்வை நீங்கள் பெறுங்கள்!

அதுதான் கலைஞர் வாழ்க! கலைஞர் வாழ்க! கலைஞர் வாழ்க! என்பதற்கு அடையாளமாகும்

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வாழ்க கலைஞர்!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...