Showing posts with label அடக்குமுறை. Show all posts
Showing posts with label அடக்குமுறை. Show all posts

Wednesday, June 12, 2019

பாஜக ஆளும் உ.பி.யில் மூன்றாம் பாலினத்தவர்மீதான அடக்குமுறை

உத்தரப்பிரதேச மாநி லத்தில் காவல் நிலைய வளாகத்தி னுள்  மூன்றாம் பாலினத்தவர்மீது காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டுள்ளனர்.
அடி தாங்காமல் அவர்கள் அல றியபடியே காவல்நிலைய வளாகத் துக்குள் அங்கும் இங்கும் மறைவிடம் தேடி ஓடி ஒளிய முயற்சி செய்யும் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
தனியார் ஆங்கிலத் தொலைக் காட்சி செய்திகளின் படி, இந்தச் சம்பவம் மீரட்டின் லால் குர்தி காவல்நிலையத்தில் நடந்தது.  மூன் றாம் பாலினத்தவரிடையே கிடைத்த பரிசுகளை பகிர்ந்து கொள்வதில் தகராறு ஏற்பட்டது.
அதைக் கட்டுப்படுத்த தடியடி செய்ததாகப் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் நேரில் பார்த்த மற்ற சாட்சிகள் கூறுவதென்னவெனில் மீரட்டில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டபோது அங்கு உள்ள மக்கள் காவல்துறையினருக் குத் தகவல் அளித்துள்ளனர். அங்கு சென்ற காவல்துறையினர் ஒரு குழுவை அழைத்து புகார் அளிக்க வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் காவல்நிலையம் உள்ளேயே இரு குழுக்களிடையே தகராறு ஏற்பட் டதால் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.
இது குறித்து காவல்துறை உயர திகாரி நிதின் திவாரி கூறும்போது, மூன்றாம் பாலினத்தவர்களில்  இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு பெரும் இடையூறு விளை வித்தனர். அதனால் காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்ய நேர்ந் தது. ஆனால் அதீத பலப்பிரயோக மாக இருந்தால் நிச்சயம் விசாரணை வைக்கப்படும் என்றார்.
மூன்றாம் பாலினத்தவர் ஒருபுறம் சமுகத்தில் சில இடங்களில் மதிக்கப்பட்டு நல்ல முறையில் நடத்தப்பட்டாலும் பெரும்பாலும் அவர்கள் நாடு முழுதும் வன்முறை யைச் சந்தித்து வருவதாகவே சமுக ஆர்வலர்கள் கருதுகின்றனர் என் பது குறிப்பிடத்தக்கது..

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...