Showing posts with label பேச்சுக்கள். Show all posts
Showing posts with label பேச்சுக்கள். Show all posts

Friday, January 30, 2015

தமிழருடைய கலாச்சாரம் ஆரியத்தால் கெட்டது

தமிழருடைய கலாச்சாரம் ஆரியத்தால் கெட்டது
நான்கு வகை வருணத்தைத் திணித்தவர்களும் ஆரியர்களே!

ஆவடி வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் முழக்கம்!


ஆவடி, ஜன.29- தமிழர்களிடையே இல்லாதிருந்த ஜாதி யைத் திணித்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் - தமிழரு டைய கலாச்சாரம் கெட்டதும் அவர்களால்தான் என்றார் தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்.

சென்னையை அடுத்த ஆவடியில் 25.1.2015 அன்று மாலை நடைபெற்ற வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை வருமாறு:

இந்தி எதிர்ப்பு உணர்ச்சி இன்னும் கலைஞரிடத்தில் இருக்கிறது!

இந்தி மொழிக்கு தமிழ் நாட்டில் இடம் கிடையாது. தமிழ் நாட்டில்  வாய்ப்பைத் தேடி வந்த இந்திப் பெண்ணே, நீ இந்த நாட்டை நம்பாதே ஓடிப்போ! என்று பாடியவர் கலைஞர். அன்று தொடங்கிய அந்த உணர்ச்சி இன்றும், கலைஞரிடத்தில் அவருடைய பேச்சில், செயலில்,  எழுத்தில் நீடிக்கிறது. உண்மையாக இந்தி மொழி மட்டும் நம் எதிர்ப்பு அல்ல. இந்தி மொழிக்கு முன்னாலே ஏறத்தாழ 500 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் தமிழருடைய உரிமை யைப் பறிக்கக்கூடிய முறையில் சமஸ்கிருதம் திணிக்கப் பட்டது. திருக்கோவில்களில் எல்லாம் ஆண்டவனுக்கு சமஸ்கிருதத்தில் வழிபாடு. தமிழ் வீட்டுத் திருமணங்கள் எல்லாம் புரோகிதர்களைக் கொண்டு நடத்துகின்ற ஒரு நிலை. நான் சிறுவனாக, மாணவனாக இருந்த போது நாட் டில் பல இடங்களில் பிராமணர்களுக்கென்றே பாடசாலை கள். அந்தப் பாடசாலைகள் எல்லாம் வேத பாடசாலைகள். ஒவ்வொரு வேத பாடசாலைகளிலும் 30 பேர், 40 பேர் பிரா மணர்கள்தான் படிப்பார்கள். அவர்களுக்கு இலவசமாக சாப்பாடு, இலவசமாக குடியிருப்பு, இலவசமாக எண்ணெய், பால், இலவசமாக ஆடை எல்லாம் வழங்கப்பட்டன. பார்ப்பனரல்லாதவர்க்கு பள்ளிக்கூடமே இருக்காது.

 வெள்ளைக்காரன் வந்தான். ஏதோ அவர்களுக்கு ஆட்கள் தேவை என்பதற்காக பள்ளிக்கூடங்களை வளர்த்தார்கள் என்ற ஒரு கருத்து. அவர்கள் ஆட்கள் தேவை என்று வளர்த்தாலும்கூட அவன்தான் பள்ளிக் கூடத்தில் நம்மை எல்லாம் நுழைய விட்டான்.தாழ்த்தப்பட்ட தோழர் கிருஷ்ணசாமியோ, அவருடைய தந்தையோ, பாட்டனோ ஒரு அய்ம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக் கூடங்களுக்குள் நுழைய முடியாது. கிருஷ்ணசாமி படித்தது ஆச்சரியம்.  பள்ளிக்கூடத்தை திறந்துவிட்டது நீதிக் கட்சித் தலைவர்கள். நீங்கள் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள் சர்பிட்டி தியாகராயர் - தெலுங்கர். டாக்டர் டி.எம்.நாயர் - மலையாளி, டாக்டர் நடேசனார் - முதலியார்! -தமிழன். இந்த மூன்று பேரும் கலந்து பேசி தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கம் இருக்கிறது.
பிராமணீய ஆதிக்கம் இருக்கிறது. தமிழ் மக்களை தலை எடுக்கவிடாத அளவிற்கு அந்த ஆதிக்கம் இருக்கிறது. 

அரசாங்க உத்தியோகத்திலே எல்லாம்  நூற் றுக்கு மூன்று பேராக இருக்கிற பிராமணர்களுக்கு நூற்றுக்கு எழுபத்தைந்து இடம். தமிழர்களாகிய நாம் ஏறத்தாழ 90 பேர், நமக்கு சமுதாயத்தில் இருபது இடம். 90 பேருக்கு இருபது இடம். மூன்று பேருக்கு 75 இடம். இது என்ன நியாயம்?அப்படி இருந்ததைத்தான் தியாகராயரும், டாக்டர் நாயரும் எதிர்த்து கண்டித்தார்கள். வெள்ளைக்கார அரசு பார்ப்பனீயர்களின் கைப்பாவையாக இருக்கிறது. ஆங்கி லேயர்கள் தமிழ்நாட்டில், இந்தியாவில் பிராமணர் அல் லாதாரை ஒதுக்கிவிட்டு செல்வாக்குள்ள பிராமணர்களை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். இந்த முறை கேட்டை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்கள். எனக்குத் தெரிந்து, 1930 ஆவது  ஆண்டில் தமிழ்நாட்டில் பள்ளிக் கூடங்களில் பார்ப்பனரல்லாதாருக்கு இடம் கொடுத்தாலும் கூட ஆதிதிராவிடர்களுக்கு இடம் கிடையாது.  ஆரம்பப் பள்ளிக்கூடத்துக்குப் போய் கிருஷ்ணசாமியின் சொந்தக் காரர் தன்னுடைய பிள்ளையை சேர்க்கப் போனால் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். கிருஷ்ணசாமிக்கு மட்டுமல்ல; டாக்டர் அம்பேத்கருக்கே இந்த கதிதான்.

டாக்டர் அம்பேத்கரை ஒரு ஓரத்தில் உட்கார வைத்தார்கள்!

டாக்டர் அம்பேத்கர் படிக்கப் போனபோது மற்ற பிள்ளைகளை எல்லாம் உட்கார வைத்து  அம்பேத்கரை ஒரு ஓரத்தில் உட்கார வைத்தார்கள். ஒரு தட்டிக்குப் பக்கத் திலே உட்கார வைத்தார்கள். இந்தத் தட்டிக்கு அப்பால் ஆதிதிராவிடர்கள். இந்த தட்டிதான் ஆதிதிராவிடர்களைக் காப்பாற்றியது. தட்டிக்கு அப்பால் ஆதிதிராவிடர்கள், தட்டிக்கு இப்பால் ஆதி திராவிடர் அல்லாதவர்கள். அதற்கு மேலே ஆசிரியர்கள்! தண்ணீர் வேண்டுமானால் இந்த ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் இருந்து தான் வாங்கி குடிப்பார். அம்பேத்கர் தண்ணீர் குடிக்கவேண்டுமானால் அங்கே இருக்கும் பானையிலே தண்ணீர் எடுக்கக்கூடாது. அவர் வெளியிலே போய்தான் யார் வீட்டிலாவது தண்ணீர் வாங்கி குடிக்கவேண்டும். அது எவ்வளவுப் பெரிய வெட்கக் கேடு, நம்முடைய தமிழன் இந்த பார்ப்பனீயக் கொள் கைக்கு எப்படியோ அடிமைப்பட்டான். இன்றைக்கு  நான் உங்களிடத்தில்  பெருமையாகச் சொல்கிறேன். திருவள்ளு வர் பிறந்த தமிழகத்தில் திருவள்ளுவருக்கு சாதி கிடை யாது. திருவள்ளுவர் காலத்தில் இருந்து புரவலர்களுக்கு சாதி கிடையாது.வள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மன்னர்களுக்கு சாதி கிடையாது.

தமிழருடைய கலாச்சாரம்
ஆரியத்தால் கெட்டுவிட்டது!

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது அப்போது உயர்ந்த மொழி! அப்படி இருந்த காலத்தில் சமஸ் கிருதத்திற்கு இங்கே வேலையில்லை. யாரோ சில பேர் இங்கே சமஸ்கிருதம் படித்தார்கள். அவர்கள்தான் பிரா மணர்கள். நம்முடைய கோவில்களில் எல்லாம் சமஸ் கிருதம் ஆக்கிரமிக்கவில்லை. அப்போது நம்முடைய வீட்டுத் திருமணங்களை பிராமணர்கள் நடத்துகின்ற ஒரு நிலை கிடையாது. அது ஒரு காலம். அந்தக் காலம் மாறிப் போய் எவ்வளவோ ஆண்டுகள் ஆகி, ஆரிய ஆதிக்கம் மெல்ல மெல்ல வேரூன்றியது. தந்தை பெரியார் சொல்வார். ஆரிய ஆதிக்கம் என்பது பாம்புப் புற்றுக்கு பால் வார்ப் பதைப் போல. நாம் அதை ஆதரித்து விட்டோம். நம்மு டைய அறியாமை என்று. பாம்பு புற்றில் பால் வார்த்தால், பாம்பு நம்மை கடிக்காது என்று தாய்மார்கள் சொல்வார்கள். 

அது பால் இருக்கும் வரைக்கும் குடிக்கும். அது கிடைக் காதபோது கடிக்கும். ஆனால், இந்தப் பாம்பு பாலையும் குடித்து இரத்தத்தையும் குடிக்கும். அந்த ஆரிய கலாச் சாரத்தை எதிர்ப்பதுதான் தமிழருடைய பாதுகாப்பு என்று பிராமண அறிஞர்களே சொன்னார்கள். பி.டி.சீனிவாச அய்யங்கார் என்ற வரலாற்றுப் பேரறிஞர் எழுதினார். தமிழருடைய கலாச்சாரம் ஆரியத்தால் கெட்டுப் போய்விட்டது. நான்கு வகை சாதியை ஆரியர்கள் தமிழகத்தில் புகுத்தினார்கள். இந்த நால்வகை சாதி இல்லாவிட்டால் தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்ந்திருக்க முடியும். பிராமணன், சத்திரியன், வைஸ்யன், சூத்திரன் என்றெல்லாம் ஆண்டவன் படைப்பு என்று ஏமாற்றி விட்டார்கள்.

பிராமணன் என்றால் உயர்ந்த சாதி, கிருஷ்ண சாமி என்றால் தாழ்ந்த சாதி. அவர் எப்படித் தீண்டப் படாதவர், நீ எப்படி எல்லாருக்கும் மந்திரம் சொல்பவர்? கேட்டால் பிரா மணர் சொல்லக்கூடிய வார்த்தை என்ன தெரியுமா? 

ஆண்டவன் படைப்பு. ஆண் டவன் யார் என்று கேட்டால் பிரம்மா என்பார்கள். பிரம்மா எப்படி படைத்தார் என்றால், பிரம்மா முகத்தில் இருந்து பிரா மணரை படைத்தார், தோளில் இருந்து சத்திரியனை படைத்தார். தொடையில் இருந்து வைஸியனைப் படைத்தார், வைஸி என்றால் வியாபாரி. பாதத்தில் இருந்து சூத்திரனைப் படைத்தார். முகத் தில் இருந்து பிராமணர்களை படைத்த தால் அவர்களுக்கு அறிவு சாதியாம். தோளில் இருந்து படைத்த சாதி என்றால் அது வீர சாதியாம்.

தொடையில் இருந்து படைத்த சாதி ஊர் ஊராக சுற்றும் சாதியாம். காலில் இருந்து படைத்த சாதி என்றால் வேலை செய்கிற சாதியாம். அந்த சூத்திரனுக்குக் கீழே பஞ்சமன்.

வெளிநாடுகளில் நான்கு வகை சாதிகள் உண்டா?

பஞ்சமன் என்றால் பறையன், பள்ளன், தாழ்த்தப்பட்டவன். தீண்டாதவர்கள் யாரோ அவர்கள் எல்லாம் இதில் அடங் கும். இதையெல்லாம் சொன்னபோதுதான், பெரியார் சொன்னார் இப்படியெல்லாம் பிரித்து ஆண்டவன் படைப்பானா, ஆண் டவன் இப்படி நான்கு சாதியைப் படைத்து இருந்தால் மிச்ச சாதிக்கெல்லாம் யார் கணக்கு சொல்வது. இந்த நான்கு சாதியை இந்தியாவில்தான் படைத்தானா, அய் ரோப்பாவில் நான்கு சாதியைப் படைத் தானா? வெள்ளைக்காரன் இடத்தில் படைத்தானா, மற்ற நாட்டில் எல்லாம் படைக்காமல் இங்கே மட்டும் படைத்தான் என்றால் அவன் ஆண்டவனா? அப்படித் தான் படைத்தார்கள் என்றால் அவரவர் வேலையைச் செய்து இருக்கலாம் இல்லையா, ஆனால் பார்ப்பனர்களுக்கு சூத்திரர்கள் எத்தக் காலத்திலும் தொண்டு செய்வது அவர்களுடைய கடமை. அடி மையாக வேலை செய்யவேண்டி இருக்கே, எங்களுக்கு விடுதலை கிடை யாதா என்றால், விடுதலை என்று நீ கேட் டாலே மோட்சத்திற்குப் போக மாட்டாய். விடுதலை கேட்டால் நரகத்திற்குத்தான் போவாய். பிராமணர்களுக்கு தொண்டு செய்வதிலிருந்து விடுதலை சூத்திரர் களுக்குக் கிடையாது. எவ்வளவு காலமாக ஆனாலும் பிராமணருக்கு சூத்திரன் தொண்டு செய்துதான் மேல் நிலைக்கு வர வேண்டும். பிராமணர்கள் வேலை செய் வதற்கு கூலி கொடுக்காவிட்டால்கூட வேலை செய்யவேண்டும். சூத்திரர் களுக்கு சொத்து எது எது என்று கருது கிறார்களோ அந்தச் சொத்துக்கள் அத் தனையும் பிராமணர்களுக்குச் சொந்தம்.

ஏதோ சில காரணத்தால் சூத்திரனுக்கு சொத்துக்கள் கிடைத்தாலும்கூட அதை
பிராமணன் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வான். இப்படியெல் லாம் எதை எதையோ எழுதி வைத்திருக் கிறார்கள். அதையெல்லாம் பிராமணர் கள் சாஸ்திரம் என்கிறார்கள். முட்டாள் தனம் எல்லாம் சாஸ்திரமா? சாஸ்திரத் தில் சொல்லி இருந்தால் எதையும் நாம் அனுமதிக்கலாமா?

சாஸ்திரத்தில் நீங்கள் மேல் சாதி நாங் கள் கீழ் சாதி என்று சொல்லி இருந்தால் அதை ஒப்புக் கொள்ளவேண்டுமா? ஆண்டவன் படைத்தான் என்றால் அதற் காக நாங்கள் அடிமையாக இருக்கவேண் டுமா? அப்படியானால் ஆண்டவனே அடிமையாக இருக்கட்டும். என்னை ஏன் அடிமையாக இருக்கச்  சொல்கிறீர்கள்? எனவே சாஸ்திரத்தின் பெயரால், கட வுளின் பெயரால், தெய்வத்தின் பெயரால் கற்பனையாக நம்மையெல்லாம் முட்டா ளாக்கி நான் சொல்கிற வார்த்தைக்காக மன்னித்துக் கொள்ளுங்கள் நம்மை யெல்லாம் அடிமைகளாக்கினார்கள். தமிழ்நாட்டில் இப்போது நம் கண்ணுக்குத் தெரியவில்லை. நான் சின்ன பிள்ளையாக இருந்தபோது நான் படித்த, மயிலாடுதுறை யில் இரண்டு தெருக்கள். இந்த இரண்டு தெருவிலும் இருநூறு வீடுகள். இந்த இருநூறு வீடுகளில் 195 வீடுகளும் பிரா மணர்கள் வீடுகள்தான். ஒரு அய்ந்தாறு வீடுகளில்தான் முதலியார், செட்டியார் போன்றோர் இருந்திருப்பார்கள். வன்னி யரைக்கூட உள்ளே விடமாட்டார்கள். ஆதிதிராவிடர்கள் அந்தத் தெருவிலே நடக்கக் கூடாது. யாராவது இறந்து போனால் தூக்கிக் கொண்டு போகலாமே தவிர நடக்கக்கூடாது.

தீண்டாமையை ஒழிப்பதுதான் பெரியாரின் முதல் வேலையாக இருந்தது!

இந்தத் தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பதுதான் பெரியாரின் முதல் நோக் கம். தீண்டாமையை ஒழிக்க பள்ளியில் இடம் கொடுத்தது நீதிக்கட்சி. அரசாங்க நிலையிலே பங்கு கொடுத்தது நீதிக் கட்சி. நீதிமன்றத்தில் நீதிபதியாக ஒரு சூத்திரரை உட்கார வைத்தது கலைஞர். ஆதிதிரா விடர்களை உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆக்கியது கலைஞர். கிருஷ்ணசாமிதான் நீதிபதியாக ஆக வேண்டும் என்று கட் டாயமில்லை. ஒரு ஆதிதிராவிடர் ஆகி விட்டால் கிருஷ்ணசாமி ஆனது போலத் தான். நம்முடைய இனம் உள்ளே நுழை யக் கூடாது என்கிறார்கள். அந்த இடத் திற்கு நுழையக் கூடிய ஒரு உரிமையை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலை ஞர் அவர்கள் தேடிக் கொடுத்திருக்கிறார்.

சமஸ்கிருதத்தை பெண்கள் படிக்கக்கூடாது!

இப்படி நடைபெற்ற அநீதிகளுக் கெல்லாம் காரணம் சமஸ்கிருதம். சமஸ் கிருதம் தேவ மொழி, தமிழ் நீச மொழி என்று சொன்னார்கள். தமிழ் பிறந்த காலத்தில் சமஸ்கிருதம் பிறக்கவில்லை. தமிழ் இலக்கியங்கள் பிறந்த காலத்தில் சமஸ்கிருதம் பிறக்கவில்லை. தமிழில் உள்ள நீதி நூல்களுக்கு ஈடாக சமஸ் கிருதத்திலே கிடையாது. தமிழ் எல் லோரும் படிக்கலாம். ஆனால், சமஸ்கிரு தத்தை  பிராமணர்கள் மட்டும் தான் படிக் கலாம். அது  அவர்களுக்காகவே தயா ரிக்கப்பட்ட மொழி. தமிழ் மொழி எல் லோருக்கும் உரியது. சமஸ்கிருதத்தை பெண்கள் படிக்கக் கூடாது. மனைவி, தாய் படிக்கக் கூடாது. ஆனால், தமிழை எல் லோரும் படிக்கலாம், மனைவி படிக்கலாம், தாய் படிக்கலாம். தங்கை படிக்கலாம், முதலாளி, தொழிலாளிகள் என்று எல் லோரும் படிக்கலாம்.

தமிழ் நம்மை வாழவைத்த மொழி, சமஸ்கிருதம் நம்மை சாகடித்த மொழி. அந்த சமஸ்கிருதம் பிராமணர்களுக்கு பயன்படுகிறது.

 அந்த சமஸ்கிருதத்திலே தான் இந்தி வளர்க்கப்பட்டு புகுத்தப்படு கிறது என்ற காரணத்தால் ஏற்கெனவே நாங்கள் சமஸ்கிருதத்தால் பாதிக்கப்பட்ட வர்கள். மறுபடியும் நீங்கள் இந்தியைக் கொண்டு வருகிறீர்கள் அதை ஏற்க மாட்டோம் என்று பெரியார் சொன்னார், மறைமலை அடிகள் சொன்னார். மிகப் பெரிய தமிழறிஞர்கள் எல்லாம் சொன் னார்கள்.

பாரதியாரே தமிழ் மொழியைத் தான் போற்றிப் பாடினார். பாரதிதாசன் இந்தி மொழி நுழைவதைக் கண்டித்துப் பாடி னார். இந்தி எத்தனை பட்டாளம் கூட்டி வரும்! என்று கேட்டவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

தமிழனை சொரணை உள்ளவனாக ஆக்கியது இந்த இயக்கம்!

இந்த இயக்கம் தமிழனை சொரணை உள்ளவனாக ஆக்கி இருக்கிறது. எனக்கு தெம்பு இருந்தால், நான் கொள்கையோடு வாழ்ந்தால், ஒரு லட்சியம் எனக்கு இருந் தால், நான் பேசுகிற போது அந்தப் பேச்சில் நம்பிக்கை இருந்தால் அத்தனையும் கொடுத்தது திராவிட இயக்கம். தியாகராயர் இல்லாவிட்டால், டி.எம். நாயர் இல்லாவிட்டால் அந்த வழியிலே வந்த தலைவர்கள் இல்லாவிட்டால் இந்தி திணிப்பை எதிர்க்கின்ற ஒரு உணர்வு இல்லாவிட்டால், எங்களைப் பொறுத்த வரையில், எங்களைப் போன்றவர்களுக்கு இன்றைக்கு கலைஞருக்கோ, எனக்கோ இந்த இயக்கத்தில் முன்னோடிகளாக இருந்து பணியாற்றுகின்ற அந்த சூழ் நிலையே வந்திருக்காது.

இந்திமொழியைத் திணிக்க மாட்டோம் என நேரு கொடுத்த உறுதிமொழி!

அண்ணாவே உயர்ந்த நிலைக்கு வந்திருக்க மாட்டார். காமராஜருக்கே மரியாதை வந்திருக்காது. ராஜாஜியை எதிர்த்து காமராஜர் போராடியபோது கருப்பு காந்தி என்று காமராஜரை சொன் னார்கள். அப்படி இந்த நாட்டில் சாதி உணர்வு, வைதீக ஆதிக்கம், பிராமணிய மேலாண்மை, சூத்திரர்களை இழிவுபடுத் துவது இவையெல்லாம் எதிர்த்து நின்ற ஒரு வலுவான சக்தி திராவிட இயக்கம். அந்த வழியில் தான் இந்தி மொழியைத் திணிக்காதே., பள்ளிக் கூட மாணவர் களுக்கு அரசாங்கத்திலே கொண்டுவந்து எல்லா இடத்திலும் இந்தியைப் பரப்பாதே என்று அன்றைக்கு போராட ஆரம்பித்து, பண்டித ஜவஹர்லால் நேரு அதை ஒத்துக் கொண்டு, இந்தி மொழி பேசாத மக்கள் ஒப்புக்கொள்கிற வரையில் நாங்கள் இந்தியை அந்த மக்களுக்கு ஆட்சி மொழியாக ஆக்க மாட்டோம் என்று உறுதிமொழி கொடுத்தார். நீங்கள் ஒத்துக் கொண்டால்தான் ஆட்சி மொழி - இல்லா விட்டால் நாங்கள் திணிக்க மாட்டோம். இது லால்பகதூர் சாஸ்திரியும் சொன்னார்.

இவ்வாறு தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் உரையாற்றினார்.

Wednesday, December 26, 2012

பெரியாருக்கு நிகர் உலகில் எந்தத் தலைவரும் இல்லை தளபதி மு.க.ஸ்டாலின் முழக்கம்


சிலையை நன்கொடையாக வழங்கிய மாவட்ட தி.க. தலைவர் அ.கோ.கோபால் சாமி - கவுசல்யா இணையர்களைப் பாராட்டி தளபதி மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார்.
செங்கற்பட்டு, டிச. 25- உலகளவிலும் கூட தந்தை பெரியார் அவர்களுக்கு நிகரான தலைவர் வேறுயாருமில்லை என்றார் தி.மு.க. பொரு ளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்.
செங்கற்பட்டில் நேற்று மாலை தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைத்து உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
என் வாழ்நாளில் எனக்கு மகிழ்ச்சி அளிக் கக்கூடிய - எனக்குப் பெருமை சேர்க்கக் கூடிய நிகழ்ச்சி - தந்தை பெரியாரால் சுயமரி யாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாடு நடத்தப்பட்ட இந்த செங்கற்பட்டில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை யைத் திறக்கக் கூடிய பேறு எனக்குக் கிட்டிய தாகும்.
எனக்குக் கிடைத்த பேறு!
இதற்கு முன்பு தாரா புரத்தில் இந்தப் பெரு மையை ஆசிரியர் அவர் கள் எனக்குத் தந்தார்கள். பிற்காலத்தில் எனக் கென்று ஒரு வாழ்க்கை வரலாறு எழுதப்படுமானால், இந்த நிகழ்ச்சி தான் மிக முக்கியமான தாக, பெருமைக்குரிய தாக இடம் பெறும் (கைதட்டல்).

திராவிடர் கழக கொடியைப் போல அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடை (செங்கற்பட்டு, 24.12.2012)
வேறு எத்தனையோ எத்தனையோ நிகழ்ச்சி களில் நான் கலந்து கொண்டு இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு ஈடா காது.
34 தீர்மானங்கள்
1929இல் இங்கு நடைபெற்ற மாநாட் டில் 34 தீர்மானங்கள் முத்து முத்தானவை. தி.மு.க. ஆட்சிக் காலத் தில் தலைவர் கலைஞர் ஆட்சியில் ... சட்டங்களாக ஆக்கப் பட்டுள்ளன.
அண்ணா அவர்கள் குறுகிய காலமே ஆட் சியில் இருக்க முடிந்தது. அந்தக் குறுகிய காலத் தில்கூட அய்யாவின் மூன்று முக்கிய கொள் கைகளை சட்டமாக வடித்துத் தந்தார்கள்.
அண்ணாவின் மூன்று முத்தான சாதனைகள்
1. தந்தை பெரியார் உருவாக்கிய மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்யப்பட்ட சுயமரி யாதைத் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டம்.
2. சென்னை மாநி லத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் சட்டம்.
3. தமிழ்நாட்டில் என் றைக்கும் இந்திக்கு இடம் இல்லை - இரு மொழித் திட்டம் மட் டுமே என்ற சட்டமா கும்.
பெரியார் நினைவு சமத்துவபுரம்
அதுபோலவே பெரியார் அவர்களின் ஜாதி ஒழிப்புக் கொள் கையை உள்வாங்கி, தலைவர் கலைஞர் அவர் களால் உருவாக்கப் பட்ட பெரியார் நினைவு சமத்தவபுரமாகும்.
அய்ரோப்பில் பெரியார், மேல்நாட்டுச் சிந்தனையாளர்களும் பெரியாரும் - ஓர் ஒப்பியல் ஆய்வு, மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம் ஆகிய நூல்களை தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட, தி.இரா.இரத்தினசாமி, பு.எல்லப்பன், டி.ஏ.ஜி.அசோகன், அ.இராமச்சந்திரன், மதிவாணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் (செங்கற்பட்டு, 24.12.2012)
ஜாதி, மதங்களைக் கடந்து மனித சமத்து வம், மேலோங்கச் செய்ய ஏற்பாடு செய்யப் பட்ட தாகும். பிறகு ஒவ்வொரு பெரியார் நினைவு சமத் துவபுரத்திலும் தந்தை பெரியார் சிலை நிறுவிட ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சி களிலெல்லாம் நான் கலந்து கொண்டது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறு ஆகும்.
ஆட்சி மாற்றம் ஏற் பட்டவுடன் அந்தத் திட் டத்தைக் கைவிட்டுவிட் டார்கள் என்ற வேதனை யையும் தளபதி மு.க. ஸ்டாலின் வெளிப்படுத் தினார்.
தளபதி மு.க.ஸ்டா லின் அவர்கள் தம் உரை யில் மிக முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவூட்டினார்.
ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம்
ஆச்சாரியர் (ராஜாஜி) அவர்கள் முதல் அமைச் சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டம். அப்பன் தொழிலை பிள்ளை செய்யவேண் டும் என்ற பாரம்பரியமான குலத்தொழிலைப் புதுப்பிக்கும் திட்டமா கும்.
அந்தக்கால கட்டத் தில் தந்தை பெரியார் பொங்கி எழுந்து அந்தத் திட்டத்தை முறியடித் தார்கள். அந்தத் திட்டம் மட்டும் செயல்பட்டு இருக்குமானால் நம் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு களைப் பெற்றிருக்க முடியுமா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அறிஞர் அண்ணா முதல் அமைச்சர் ஆனார். அவருக்கு உடனடியாகத் தோன்றியது என்ன தெரியுமா?
திருச்சிக்கு சென்று தந்தை பெரியார் அவர் களைச் சந்திக்க வேண் டும் என்று நினைத்தார்.
சக அமைச்சர்களுக் குக் கூட அதனைத் தெரிவிக்கவில்லை. காரில் போகும்போது தான் அதனைக் குறிப் பிட்டார்.
தேர்தலில் திமுகவை பெரியார் எதிர்த்தாரே என்று அண்ணா நினைக்க வில்லை. அய்யா மீது அண்ணாவுக்கு இருந்த மதிப்பும், நன்றி உணர் ச்சியும் தான் முக்கியமா னவை. அதனால்தான் இந்த ஆட்சியே பெரி யாருக்குக் காணிக்கை என்று சட்டப்பேரவை யிலேயே முதல் அமைச் சர் அண்ணா அறிவித் தார்.
தந்தை பெரியார் 94 ஆண்டு 3 மாதம் 7 நாட்கள் உயிர் வாழ்ந் தார். அவர் ஆற்றிய உரையை டேப்ரிக்கார் டில் பதிவு செய்து ஒலி பரப்புச் செய்யப்பட் டால் அது 21 லட்சத்து 400 மணி நேரம் ஓடிக் கொண்டே இருக்கும்.
பெரியாருக்கு நிகர் பெரியாரே!
உலக அளவில் ஒப் பிட்டாலும் தந்தை பெரியாருக்கு இணை வேறு யாரும் இருக்க முடியாது.
தந்தை பெரியார் மறைந்தார். அவர் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று முதல் அமைச்சராக இருந்த தலைவர் கலை ஞர் விரும்பினார். அதி காரிகளை அழைத்து உத்தரவிட்டார். அதி காரிகள் தயங்கினார்கள்.
எந்த அரசு பொறுப் பிலும் பெரியார் இல் லையே - அப்படி இருந் தால்தான் அரசு மரி யாதை கொடுக்க முடி யும் - சட்டம் அப்படி தான் கூறுகிறது என்றனர்.
அப்பொழுது தலைவர் கலைஞர் ஒரு கேள்வியைக் கேட்டார். காந்தியார் எந்த அரசுப் பதவியில் இருந்தார் - அவருக்கு அரசு மரி யாதை கொடுக்கப்பட வில்லையா?
எங்களையெல்லாம் ஆளாக்கிய தந்தை பெரி யார் அவர்களுக்கு அரசு மரியாதை கொடுத்தால் என் ஆட்சி பறிபோகும் என்றால் அது எனக்கு மகிழ்ச்சியே என்று சொன்னவர் தலைவர் கலைஞர் என்று வர லாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்தார்.
மற்றும் இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கம் அளித் தார் (முழு உரை பின்னர்).
வெற்றிகரமாக விழா முடிந்தது
செங்கற்பட்டு நகர கழகத் தலைவர் பூ.சுந் தரம் நன்றி கூறிட இரவு 9.30 மணிக்கு விழா வெற் றிகரமாக முடிந்தது.

நூல்கள் வெளியீடு
விழாவின் சிறப்பு அம்சங்களுள் ஒன்று இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட மூன்று நூல்களின் வெளியீடாகும்.
1. அய்ரோப்பாவில் பெரியார் (தொகுப்பாசிரியர் கி. வீரமணி) பக்கங்கள் 384, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு.
2. உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் - தந்தை பெரியாரும் - ஓர் ஒப்பியல் ஆய்வு (பேராசிரி யர் ஆர். பெருமாள் - தமிழில் மொழிபெயர்ப்பு முனைவர் ப. காளிமுத்து, வெளியீடு: பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், பக்கம் 152.
3. மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம் (பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்) பக்கங்கள் 192 - வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.
நூல்களை - சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா. இரத்தினசாமி, காஞ்சி மண்டல திராவிடர் கழகத் தலைவர் பு. எல்லப்பன், காஞ்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் டி.ஏ.ஜி. அசோகன், செங்கற்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ. இராமச்சந்திரன் மற்றும் மதிவாணன் ஆகியோர் பணம் கொடுத்து நூல்களை தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்!

திருச்சி (திருவெறும்பூர்) பெரியார் மருத்துவ முகாமில் அதிர்ச்சி!
தந்தை பெரியார் நினைவு நாளில் திருவெறும்பூரில் பெரியார் பெருந்தொண்டர் சேகர், மற்றவர்கள் முயற்சியில் புற்று நோய் அறிதல் குறித்து மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
பெரியார் மருந்தியல் கல்லூரி, வளாகக் கல்வி நிறுவனங்கள் திருச்சியில் உள்ள ஹர்சமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில்  மருத்துவர்கள் கோவிந்தராஜன், மருத்துவர்கள் சீத்தாலட்சுமி, சோம.இளங்கோவன், சரோஜா இளங்கோவன் பங்கேற்றனர்.
இதில் 82 பெண்கள் சோதனைக்கு வந்தனர்!  அதிலே 20 பேருக்கு மார்பகப் புற்று நோய் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டு மேல் சோதனைகள் செய்யப்பட உள்ளனர்.
10 பேருக்குக் கருப்பை வாயில் புற்று நோய் கண்டறியப்பட்டது! இதில் 5 பேருக்கு இது முற்றிய நிலையில் உள்ளது என்று அதிர்ச்சி அறியப்பட்டது.
திருமதி.கோவிந்தராஜன் வேண்டிய உதவிகள் செய்வதாக உறுதியளித்தார். மிகவும் வெளிப்படை யாக, அனைவர்க்கும் புரியும் படியாக புற்று நோய் அறிகுறிகள், ரகசியமாக் வைத்துக் கொள்ளாமல் ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டிய அவசியம், தடுப்பதற்கான வழிகள், புதிதாக வந்துள்ள தடுப்பு ஊசி இவை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
புற்றுநோய் பற்றிய புரிந்துரைத்தல் இன்றி மிகவும் அவசியம். பெண்கள் ரகசியம் காக்காமல் நோய்த் தடுப்பதற்கும் ஆரம்ப அறிகுறிக்கும் அவசியம் மருத்துவம் வேண்டும்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, December 11, 2012

தருமபுரி மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் சங்கநாதம்


அம்பேத்கர் சிலை திறக்கும் இடங்களில் எல்லாம்
தந்தை பெரியார் சிலையையும் திறப்போம்!
தருமபுரி மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் சங்கநாதம்
விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணி வித்தார். (தருமபுரி - 9.12.2012)
தருமபுரி, டிச. 11- அம்பேத்கர் சிலை திறக் கப்படும் இடங்களில் தந்தை பெரியார் சிலை யையும் திறப்போம் என்றார் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்.
தருமபுரியில் திராவிடர் கழகத்தின் சார்பில் 9.12.2012 அன்று நடைபெற்ற ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
தமிழர் தலைவருக்கு நன்றி!
தந்தை பெரியார் உயிரோடு இருந்திருந்தால் எந்தப் பணியை, எந்தக் கடமையைச் செய்திருப் பார்களோ அதே கடமையை அதே பணியை நமது தமிழர் தலைவர் இன்று செய்திருக்கிறார். அதற்காகக் கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பெரியார் திடலில் வளர்ந்த பிள்ளை, அங்குதான் நான் சமுதாய இயலை அரசியலில் கற்றுக் கொண்டவன்.
இந்த நிலையில் இந்தத் திருமாவளவன் தடம் மாற மாட்டான் - தவறான வழியையும் காட்ட மாட்டான்.
அன்று பெரியார் போட்ட தீர்மானம்!
இதே நாளில் 1973இல் தந்தை பெரியார் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டை நடத்தியதாக இங்கே குறிப்பிட்டார்கள். தீண்டாமை ஒழிக்கப் படுகிறது என்தற்குப் பதிலாக ஜாதியையே சட்ட ரீதியாக ஒழிக்க வேண்டும் என்று அந்த மாநாட் டில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்கள் என்று அறியும்போது, எந்தளவு தொலைநோக்கோடு தந்தை பெரியார் சிந்தித்து இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.
எங்கெங்கெல்லாம் அம்பேத்கர் சிலையைத் திறக்கிறோமோ அங்கெல்லாம் தந்தை பெரியார் சிலையையும் திறப்போம். இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் மிக முக்கியமானவை. இவற்றை முழு மனதோடு விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது.
உணர்ச்சி வயப்படக் கூடாது!
இந்த நேரம் மிக முக்கியமான நேரம் அமைதி காக்க வேண்டிய நேரம். உணர்ச்சி வயப்பட்டு எந்த செயலிலும் இறங்கி விடக் கூடாது அதனைத்தான் சிலர் இங்கு எதிர் பார்க்கிறார்கள். அதற்கு நாம் பலியாகி விடக் கூடாது.
என்னை யாரோ தூண்டுவதாக பா.ம.க. தலைவர் கூறி இருக்கிறார். இதில் யாரும் தூண்ட வும் இல்லை; அப்படி யார் தூண்டினாலும் அதற்குப் பலியாகி விடும் பலகீனமானவனும் இந்தத் திருமா வளவன் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன். தலித் மக்கள் அரசியல் ரீதியாக பலம் பெறுவது சிலருக்குப் பிடிக்கவில்லை.
பெரியார் இயக்கம் போலவே...
திருமாவளவன் எந்த சமூகத்திற்கும், எந்த ஜாதிக்கும் எதிரியானவன் அல்ல. திராவிடர் கழகம் போல பெரியார் இயக்கம் போல ஒழுங்கு முறை யுடன் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு இயங்க வேண்டும் என்று கருதி செயல்பட்டு வருகிறோம். பெரியார் இறுதி மூச்சுக்குப் பிறகு நமது தமிழர் தலைவர் அவர்கள் செயல்படும் பாங்கினை உள் வாங்கிக் கொண்டு செயல்பட விரும்புகிறேன்.
தமிழர் தலைவர் சொன்னதுபோல இரட்டைக் குழல் துப்பாக்கியோடு மூன்றாவது குழலாக நாங் கள் செயல்படுவோம். காதல் கூடாது என்கிறார்கள். பெண்களே இல்லாத ஆண்கள் சங்கம் அமைத்தாலும் அமைப் பார்கள் பெண்களுக் குச் சொத்துரிமை கூடாது என்று கூற ஆரம்பித்து சொத்துரிமையும் கூடாது என்று தீர்மானம் போட்டாலும் போடுவார்களா என்று தெரியவில்லை.
நன்றி! நன்றி!!
இந்த மேடையில் உள்ளவர்கள் தலித் அல்லா தார்தான். ஆனாலும் தலித் மக்களுக்காகக் குரல் கொடுக்க முன் வந்துள்ளனர். அதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Monday, December 10, 2012

விடுதலைச் சிறுத்தைகள் வேறல்ல; கருஞ்சிறுத்தைகள் வேறல்ல


இரட்டைக் குழல் துப்பாக்கியோடு
இணைந்த மூன்றாவது குழலாக திருமாவளவன்
80ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
சென்னை, டிச.8-தி.க. -தி.மு.க. இரட்டைக் குழல் துப்பாக்கி என்றால், மூன்றாவது குழலாக இணைந்திருப்பது விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுடைய 80 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடல் எம்.ஆர். ராதா மன்றத்தில் 2.12.2012 அன்று மாலை நடைபெற்றது. அவ் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
இயக்க வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயம் என்ற இணைப்பை ஏற்படுத்தக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சாரத் திருவிழாவி னுடைய தலைவர் மானமிகு அருமைச் சகோதரர் கழகத்தின் பொருளாளர் வழக்குரைஞர் சாமிதுரை அவர்களே,
அசுர குலத்தினுடைய ஒப்பற்ற தலைவர்
அடுத்து நாமெல்லாம் ஆவலாக இருந்து தமிழ்நாட்டிலே அண்மைக்காலத்திலே தோன்றி யுள்ள நோய்களுக்கெல்லாம் உண்மை மருத்துவம் பார்த்தாகவேண்டும் என்று சொல்லக்கூடிய நிலையிலே, இந்த மேடையிலே வெறும் பாராட் டுரை வழங்குவதற்காக அல்ல, சமூக மருத்துவத் திற்கான வழிமுறைகளைச் சொல்லுவதற்காக வந்திருக்கிறோம் என்று சொல்லக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிற மானமிகு சுயமரியாதைக் காரரான அன்பிற்குரிய அசுர குலத்தினுடைய ஒப்பற்ற தலைவர் அய்யா டாக்டர் கலைஞர் அவர்களே,
இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு எனக்கு முன்னாலே மிகச் சிறப்பாக உரையாற்றி, அருமை யான கருத்துகளை எடுத்து வைத்த கவிப்பேரரசு அருமைச் சகோதரர் பகுத்தறிவுக் கவிஞர் வைரமுத்து அவர்களே,
கலைஞர் அவர்களுக்கு அரசுகள் வரும் போகும்; ஆனால், ஒரு அரசு கலைஞரோடே இருக்கும் எப் பொழுதும், அதுதான் கவிப்பேரரசு. இந்த அரசை கலைஞரிடம் இருந்து பறிக்க முடியாது யாராலும். அப்படிப்பட்ட பெருமை மிகுந்த சகோதரர் கவிப்பேரரசு அவர்களே,
ஒடுக்கப்பட்ட சமுதாயம் உயர்கிற நேரத்தில், அதனுடைய எழுச்சி பொங்குகிற காலகட்டத்திலே, நிச்சயமாக ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று நினைக்கக் கூடிய ஆதிக்கபுரியினர் மட்டுமல்ல, அந்த ஆதிக்க புரியினர் என்ற வில்லுக்கு அம்பாகி நிற்கக் கூடியவர்கள் உங்கள்மீது வசைமாரி பொழி வார்கள் என்பதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று சொல்வதற்காக இந்த மேடையை உங்களுக்குத் தந்திருக்கிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள்  வேறல்ல; கருஞ்சிறுத்தைகள் வேறல்ல!
அதேநேரத்திலே சிறுத்தைகள் யாருக்காகவும் பயப்படவேண்டிய அவசியமில்லை. அதுதான் மிக முக்கியம்; சிறுத்தைகள் என்று சொல்லும்போது விடுதலைச் சிறுத்தைகள்  வேறல்ல; கருஞ் சிறுத்தைகள் வேறல்ல. எல்லாம் சிறுத்தைகள்தான். சிறுத்தைகள் எப்போது கம்பீரமாக வர வேண்டுமோ, அப்போது வரும். இது சர்க்கஸ் கூடாரத்து சிறுத்தைகள் அல்ல; காட்டிலே சுதந் திரமாக உலவுவதுபோல, நாட்டிலே வலம்வரக் கூடிய சிறுத்தைகள். ஆகவே, அப்படிப்பட்ட சிறுத்தைகளாக இருந்து  நாம் இயக்கத்தை நடத்தக்கூடிய நேரத்திலே, அதற்கு இன்றைக்கு முத்திரைப் பதித்துக் கொண்டிருக்கக் கூடிய அருமைச் சகோதரர் என்றென்றைக்கும் இதுவரை இரட்டைக்குழல் துப்பாக்கிகள்; இனிமேல் தேவையானால், மூன்று குழல்கள் மட்டுமல்ல, முப் பரிமாணங்கள் என்று சொல்லக்கூடிய வகையிலே இந்த விழா   முத்திரை பதிக்கக்கூடிய ஒரு விழா. எனக்கு 80 என்பது  இருக்கின்றதே அது  ஒரு அடையாளப் பிரச்சாரம். இந்த விழாவிலே கலந்து கொள்ள வந்திருக்கின்ற எனது அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர், எழுச்சி திராவிடர், என்றென் றைக்கும் தலைவணங்காத நிலையிலே, அரசியல் நாடகங்கள் முக்கியமல்ல, இனத்தின் மீட்டுருவாக் கம்தான் மிக முக்கியம் என்ற உணர்வோடு, எங்களோடு இருக்கக் கூடிய, இரட்டைக் குழலோடு இணைக்கப்பட்ட இன்னொரு குழலாக இருக்கக் கூடிய அருமைச் சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களே,
எங்கள் குடும்பத்தின் நிரந்தர சுயமரியாதை பீரங்கி, சுயமரியாதை முழக்கச் செம்மல், எந்த நிலையிலும் இன்றைக்கு தலை தாழாத சிங்கமாக இருக்கக் கூடிய ஒருவர் - திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையினுடைய பொதுச்செயலாளராக இருக்கக் கூடிய - எங்கள் இயக்கத்தின் சுயமரியாதைக் குடும்பத்தின் தலைசிறந்த போர்வாளாக இருக்கக் கூடிய அருமைச் சகோதரர் சுப.வீரபாண்டியன் அவர்களே,
இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு உரை யாற்றிய கழகத்தின் பொறுப்பாளர்களாகிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களே, செயலவைத் தலைவர் மானமிகு அறிவுக்கரசு அவர்களே மற்றும் கழகப் பொறுப்பாளர்களே, வெள்ளம்போல் திரண் டிருக்கக் கூடிய கழக கொள்கை உறவுகளே, பெரி யோர்களே, சான்றோர்களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம்.
இந்த நிகழ்வைப் பொறுத்தவரையிலே, சிறப்பாக சொல்லவேண்டுமானால், மிகப்பெரிய அளவிலே ஒரு வாய்ப்பை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். என்னவென்று சொன்னால், சமுதாயத் திலே, ஒரு இழிவை நீக்குவதற்காக, இந்த நாட்டில் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது. இதுவரையிலே வேறு வகையான போராட்டங்கள்தான் நடந்திருக் கின்றன. ஆனால், மனிதனுக்கு இருக்கிற இழிவு இருக்கிறதே, வேறு எங்கும் இல்லாத, உலகத் திலுள்ள எந்த பாகத்திலும் இல்லாத ஒரு இழிவு நம்முடைய நாட்டில் உண்டு. பேதங்கள் பல வகைகளிலே உண்டு வெளிநாட்டிலே - அது ஆண்டான், அடிமை என்ற பேதம் இருக்கிறது.
untouchability என்பதைவிட Unseability
ஆனால், இந்த சமுதாயத்தில்தான், முப்பத்தி முக்கோடி தேவர்கள், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகள் என்பதிலிருந்து அஷ்ட திக்க பாலர்கள் இருந்து வரிசையாக கடவுளை அடுக்கிக் கொண்டி ருக்கின்ற இந்த நாட்டில்தான், பிறக்கும்போதே ஒரு மனிதன் கீழ்ஜாதியாக பிறக்கிறான்; இறந்த பிறகும் அவனுடைய கீழ்ஜாதி தன்மை மாறிவிடுவதில்லை. சுடுகாட்டிலே போய் அது முன்னாலே நிற்கிறது.   அவன் இறந்தான்; அவனை பிடித்த ஜாதிகள் இறப்பதில்லை என்று சொல்லக்கூடிய - தொட் டால் தீட்டு - பார்த்தால் தீட்டு  என்பதில் பார்க்கக் கூடாது அதுதான் மிக முக்கியம். untouchability என்பதைவிட Unseabilityஎன்று சொன் னால், பல வெளிநாட்டுக்காரர்களால்இன்னமும்கூட விளங்கிக்கொள்ளவே முடியவில்லை; அவர்களுக்கு நம்மால் விளக்கவே முடியவில்லை. எனவே, இவ்வளவு பெரிய காட்டுமிராண்டித்தனம் இந்த நாட்டுக்கே உரியது என்று சொல்லும்பொழுது, அதனுடைய தோலை உரித்தவர் யார் என்றால், அவர்தான் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.  அதற்காகப் பிறந்த இயக்கம்தான் சுய மரியாதை இயக்கம். அதனுடைய பணிகள் முடிந்து விட்டனவா என்றால், இல்லை - அதனுடைய பணிகளுடைய விளைவுகள் வெற்றியாக ஆகாமல், தோல்வியடைந்துவிட்டனவா என்றால், அதுவும் இல்லை.அது தொடர்கிறது என்பதற்கு அடையா ளம்தான் இந்த மேடை! ஒருவருக்கொருவரைப் பாராட்டிக் கொள்வதற்காக வரவில்லை
இங்கே நாங்கள் கூடியிருக்கிறோம்; அழைத்தி ருக்கிறோம் - நம்முடைய கலைஞர் அவர்கள் இங்கே வந்திருக்கிறார் என்றால், ஏதோ நாங்கள் ஒருவருக்கொருவரைப் பாராட்டிக் கொள்வதற்காக வரவில்லை - ஒரு பெரிய சமுதாயப் போர் நடந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் - ஒரு உரிமைப்போர் நடந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் - பல தளங்கள் உண்டு - பல களங்கள் உண்டு - அடுத்த களத்தை எப்படி அமைப்பது - அடுத்த தளத்தை நோக்கி எப்படி செல்வது என்கின்ற திட்டத்தை தீட்டுகின்ற மேடையாகத்தான் இந்த மேடையை நாங்கள் கருதுகிறோம். அய்யா அவர்கள் சொல் வார்கள்:
பிறக்காதவர்களுக்கும் நம் நாட்டில் பிறந்த நாள் விழா! பிறந்த நாள் விழா என்பதுபற்றி சொல்வார்கள், இந்தக் கொள்கையுடைய எல்லோரும் பிறந்த நாள் விழா கொண்டாடவேண்டும் என்று சொல்வார்கள். ஏன் தெரியுமா? நண்பர்களே, அய்யா அவர்கள் சொல்லும்பொழுது மிகவும் வேடிக்கையாகவும் சொல்வார்; வினயமாகவும் இருக்கும்.  தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவில் அய்யா அவர்கள் உரையாற்றும்போது,  அதாவது பிறந்த வர்களுக்குத்தான் பிறந்த நாள் விழா என்பது கிடையாது. பிறக்காதவர்களுக்கும் நம் நாட்டில் பிறந்த நாள் விழா கொண்டாடிக் கொண்டிருக் கிறார்கள். யாருக்கு என்று சொன்னால், கடவுள் களுக்கெல்லாம் பிறந்த நாள் கொண்டாடு கிறார்களே, அவர்கள் எல்லாம் பிறந்தவர்களா? என்று கேட்டார். அதுதான் பகுத்தறிவுச் சிந்தனை.
விநாயகருக்குச் சதுர்த்தி, சுப்பிரமணியனுக்கு சஷ்டி, ராமனுக்கு நவமி இவர்களெல்லாம் பிறந்தவர்களா? இதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ஏன் அதைக் கொண்டாடுகிறார்கள்; அதுவும் வருடாவருடம் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று சொன்னது மட்டுமல்ல, அய்யா அவர்கள் இந்தப் பகுத்தறிவு பிரச்சாரத்தின்போதும் மிக அழகாகச் சொல்வார்கள், மனிதன் கடவுளை மறந்துவிடுவான்
வருடா வருடம் திருமணம் செய்து வைக்கி றார்கள் கடவுளுக்கு; போன வருடம் செய்த திருமணம் என்ன ஆயிற்று என்று எவனாவது கேட்கிறானா?  என்று சொல்லிவிட்டு, இதெல்லாம் பிரச்சார யுக்தி - அவ்வளவுதான். ஏனென்றால், கடவுள் எங்கும் நிறைந்தவன்  என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், இதனை விட்டுவிட்டால், மனிதன் கடவுளை மறந்துவிடுவான். ஆகவே, அவனுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் இத்தனைக் கடவுள்களைப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை தெளிவாகச் சொன்னார் அய்யா.
கடினமான தண்டனை வேறு எதுவும் கிடையாது
அந்த அடிப்படையிலே நண்பர்களே, எங்களு டைய பிறந்தநாள் விழாக்கள் என்று கொண்டாடப் படுவதோ, இது வெளிச்சம் போட்டு எங்களைப் பாராட்டவேண்டும் அல்லது பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. பாராட்டைக் கேட்பதைவிட எங்களுக்குக் கடினமான தண்டனை வேறு எதுவும் கிடையாது.
சுயமரியாதைக்காரராக இருக்கக்கூடிய எங் களைப் போன்றவர்களுக்குப் இந்தப் பாராட்டு களைக் கேட்டுக் கொண்டிருப்பது இருக்கிறதே அது மிகக் கடினம். வழக்கமாக அதைக் கேட்டும் பழக்கப்பட்டவர்கள் அல்ல.
திருமா அவர்கள் சங்கடப்பட வேண்டாம்!
நாராசமாக இருக்கக் கூடிய பல்வேறு செய்தி களைக் கேட்டு அதையெல்லாம் கேட்டு - நம் முடைய திருமா அவர்கள் - அவரிடம் உரிமை எடுத்துக்கொண்டு சொல்லலாம் - அவருடைய சகோதரரைப் போல - அவர் ரொம்ப நேரம் சங்கடப்பட்டார் - தன்னைத் தாக்குகிறார்களே என்று - எங்களுக்கெல்லாம்  தாக்கத் தாக்கத்தான் அது மேலும் ஊக்க மாத்திரையாகும் அதுதான் மிக முக்கியம். அவ்வளவு தூரம் நாம் புகுந்து குடைந்திருக்கிறோம் அவர்கள் உள்ளத்திலே என்று அர்த்தம். ஆகவே அவர் சங்கடப்படவேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு நாங்கள் இரண்டு பேரும் சாட்சி; கலைஞரைவிடவா பெரிய சாட்சி வேண்டும்?
அவர்மீது தொடுக்கப்படாத தாக்குதலா? அன்றைக்கும்  தாக்கினார்கள்; இன்றைக்கும் தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். செய்தாலும் தாக்குகிறான்; செய்யாவிட்டாலும் தாக்குகிறான்; எழுந்தாலும் தாக்குகிறான்; உட்கார்ந்திருந்தாலும் தாக்குகிறான். இதெல்லாம் எங்களுக்குப் பழக்கப் பட்டது. பெரியார் அவர்களுடைய முறை இருக்கிறது அதைத்தான் நாங்கள் வரித்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே எதிர்ப்பில் எதிர்நீச்சல் அடிப்பதுதான் சிறப்பானது.
கலைஞர் அவர்கள் ஈரோட்டுக்குருகுலத்திலே கற்றுக்கொண்ட பாடமே அதுதானே. பெரியாரி டத்திலே கற்றுக்கொண்ட பாடமே அதுதானே. நெருக்கடி காலம், மிசா காலம், எழுத்துரிமை, பேச்சுரிமை வெளிப்படையாக பறிக்கப்பட்ட காலம். அந்தக் காலத்திலே கலைஞரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்கள் - சிலருக்கு அது ஞாபகம் இருக்கும் - பழைய தோழர்களுக்கு - ஆனால், இளைய தலைமுறையினருக்கு புதிய தலைமுறை யினருக்கு சொல்லியாகவேண்டும். ஒரு புகழ்வாய்ந்த காலகட்டம் முக்கியமல்ல; ஆட்சியில் அவர் இருக்கும்போது எத்தனையோ பேர் வருவார்கள் அதுவும் முக்கியமல்ல; அவர்களுக்கு சங்கடங்கள் வரும்போது, எங்களுக்கு எதிர்ப்புகள் வரும்போது இந்த இயக்கம் எப்படி நிமிர்ந்து நிற்கும்; எப்படி எதிர்கொள்ளும் என்பதற்கு அடையாளம் முக்கிய மானது. அந்த அடையாள நிகழ்ச்சிகளை சொல்ல வேண்டுமானால், பிடித்தவர்களுக்கும் தெரியாது - போனவர்களுக்கும் தெரியாது
கலைஞரிடம் போய் கேட்டார்கள், எங்களை யெல்லாம் மிசா கைதிகளாகக் கொண்டு போனார்கள். என்ன குற்றம் செய்தோம் என்று பிடித்தவர்களுக்கும் தெரியாது - போனவர்களுக்கும் தெரியாது. அதற்குப் பெயர்தான் மிசா.
அப்படியொரு காலகட்டத்திலே, கலைஞரைப் பார்த்து கேட்டார்கள் - இந்த ஈரோட்டுக் குருகுலம் எப்படி மனத்திண்மையை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது  - அவைகள் நாங்கள் பெற்ற பாடங்கள் - அதைத்தான் இன்றைக்கும் திரும்பப் படிக்கின் றோம் - இதைத்தான் இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். நம்முடைய சகோதரர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
கலைஞரைப் பார்த்து கேட்டபொழுது, உங்கள்மேல் பெரிய குற்றச்சாட்டு என்ன தெரியுமா?
தேசிய நீரோட்டத்தில் நீங்கள் கலக்கவில்லை. தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை என்றால், அந்தக் காலகட்டத்தில் என்ன சொல்லியிருப்பார்கள் - அய்யோ சிறைச்சாலையில் தோழர்கள் இருக்கிறார்கள்; பேச்சுரிமை இல்லை, எழுத்துரிமை இல்லை. அந்தக் காலகட்டத்தில் கலைஞர் அவர்கள் என்ன சபித்தாரா,  இல்லை வியாக்கியானம் சொன் னாரா - இல்லை நான் நெருக்கடி காலகட்டத்தை ஆதரிக்கிறேன் என்று சொன்னாரா - நெருக்கடி காலகட்டத்திலும், மிசா காலகட்டத்திலும் இருந்த தோழர்கள் இந்த அரங்கத்திலும் இருக்கிறார்கள் - இந்த மேடையிலும் இருக்கிறார்கள் - இன்னமும் உயிரோடுதான் பல தோழர்கள் இருக்கிறார்கள். கலைஞர் சொன்னார், ஈரோடு போனவர்கள், நீரோடு போக முடியாது
ஏனென்றால் ஈரோட்டுக் குருகுலம் எப்படிப் பட்டது - சுயமரியாதை இயக்கம் எப்படிப்பட்டது - ஏன் தன்னை ஒரு வரி விமர்சகராக சொல்லும் பொழுது, மானமிகு சுயமரியாதைக்காரன் என்று சொல்லுகிறார். கலைஞர் பளிச்சென்று சொன்னார் - தேசிய நீரோட்டத்திலே நாங்கள் கலக்கவில்லை என்பதுதானே உங்கள் குற்றச்சாட்டு. ஆமாம், எங்களால் அந்த நீரோட்டத்தில் கலக்க முடியாது; ஈரோடு போனவர்கள், நீரோடு போக முடியாது என்று சொன்னார்.
எதிர்நீச்சல் அடித்தால்தானே அவன் வீரன் என்று அர்த்தம். நீரோடு போனால் அவன் வெற்றி பெற்றுவிட்டான் என்று அர்த்தமா? தண்ணீரே கொண்டு போய் சேர்த்துவிடுமே! ரொம்ப பேரை தண்ணீர்தானே கொண்டு போய் சேர்த்திருக்கிறது.
ஆகவேதான், இந்த அமைப்பைப் பொறுத்த வரையிலே, இந்த இயக்கத்தைப் பொறுத்தவரையிலே - எங்களுக்கு எவ்வளவு தூரம் கொச்சைப்படுத் தினாலும், எவ்வளவு தூரம் எங்களை அசிங்கப் படுத்தினாலும், எவ்வளவு எங்களைக் கேவலப் படுத்தினாலும் - அதையெல்லாம் தாங்கக்கூடிய சக்தி உண்டு. இன்னும் ஒருபடி மேலே போய் சொல் கிறோம் அன்றைக்குக் கலைஞர் அவர்களுக்கு எவ்வளவு சங்கடங்கள் - அதைத் தாங்கி, அதனைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல் - அவருக்குப் பேனா இருக்கிறது - அவருக்கு எழுத்து இருக்கிறது - அவருக்கு துணிவு இருக்கிறது - இவையெல்லா வற்றையும் விட - அய்யாவிடம், அண்ணாவிடம் பெற்ற பாடம் தெளிவாக இருக்கின்றது என்கிற காரணத்தினால்தான், நாங்கள் இன்னும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக - எந்தக் காலகட்டத்தையும் சந்திக்கக்கூடிய தெம்போடும், திராணியோடும் எங்கள் பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...