Showing posts with label புரிந்துகொள்வோம். Show all posts
Showing posts with label புரிந்துகொள்வோம். Show all posts

Tuesday, June 13, 2017

எல்லாமே எல்லார்க்கும் - புரிந்துகொள்வோம்!



தமிழ் மொழி, இலக்கியம் - இவைகளுக்கு மிகப் பெரிய தொண்டாற்றி, மறைந்தும் மறையாதவர்களாக, தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்துவரும் ‘சாவா மாமனிதர்கள்’ - மேதைகளாக, மூதறிஞர்களாக முதிர்ந்து ஒளிவிளக்குகளாக வழிகாட்டிக் கொண் டுள்ள எண்ணற்ற நம் இனப் பெரியோர்களை - தமிழ்த் தொண்டர்களை - நாம் நம் இளைய தலை முறையினருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.
புதுப்புது ஆரவாரங்களில் திளைக்கும் நம் இளையர்களுக்கு, வேர்களின் பெருமையை விளக்கி னால்தான் - அவ்விழுதுகள்கூட நாளை அந்த வேர் களைப்போல் உறுதியாக நின்று, மரத்தைக் காக்கும் மகத்தான கடமையாற்றிட முடியும்.
வட அமெரிக்காவில் சிகாகோ தமிழ்ச்சங்கம் தொடர்ந்து சிறப்பான மொழி, இனம், கலை, பண்பாடு, நமது தனித்த நாகரிகச் சிறப்பு - மானுட நேயம் - எல்லாவற்றையும் முன்னிறுத்தி நல்ல பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.
தோழர் சாக்ரட்டீஸ் அவர்களும், அவரது செயற் குழு நண்பர்களும் தொடர்ந்து செய்யும் இவ்வறப் பணிகளில் ஒன்று, நம் கவனத்திற்கு வந்தது - மகிழ்ச்சி அடைந்தோம்.
டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களுக்கு நூற் றாண்டு விழாவை அங்கே நடத்தி, தமது நன்றி உணர்வைக் காட்டினர். டாக்டர் வ.சுப.மாணிக்கம் நமது தலைமுறையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர். ‘வள்ளுவம்‘ என்ற அவரது நூல் ஒரு சிறந்த ‘நவில் தொறும் நயம்‘ தரும் நூல். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவராக விளங்கிய பிறகு, மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்தவர்!
‘பொய் சொல்லா மாணிக்கனார்’ என்று அவருக்கு ஒரு பெயரே உண்டு; அவ்வளவு தூரம் உண்மை விளம்பி அவர்!
அவரது நூற்றாண்டு விழாவை நடத்தியவர்கள், அருமையான அழைப்பிதழை அச்சிட்டிருந்தனர். அவரது மொழியில், அவர் எழுதிய கவிதை வடிவில் செய்தியையே அச்சிட்டிருந்த முறை முற்றிலும் புதிது! அறிவு விருந்தும்கூட!
‘நல்லாவின் பால் முழுவதும் கன்றுக்கில்லை’ என்று தொடங்கும் அவரது வாழ்வின் குறிக்கோள் பற்றிய கவிதை வரிகளில்...
‘நல்லாவின் பால் முழுவதும் கன்றுக்கில்லை
நறும்பூவின் மணமுழுதும் சோலைக்கில்லை
நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை
நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை
பல்லாரும் கனி முழுதும் மரத்துக்கில்லை
பண்ணரம்பின் இசை முழுதும் யாழுக்கில்லை
எல்லாமே பிறர்க்குழைக்கக் காணுகின்றேன்
என் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும் வேண்டும்'
என்பதுதான் முக்கியம்.
தன் பெண்டு, தன் பிள்ளை என்ற சின்னதோர் கடுகு உள்ளம் தவிர்க்கப்பட்டு, தொல்லுலக மக்கள் நம் மக்கள் என்ற பரந்த, விரிந்த, மனப்பான்மை நமக்குத் தேவை! சமூக வாழ்வும், அக்கறையும் பளிச் சிடுகின்றன.
டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் எழுதிய வள்ளுவத்தில், பண்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டு தந்தை பெரியார் என்று எழுதுகிறார். அதற்கு அவர் சுட்டும் எடுத்துக்காட்டு,
‘‘கடவுள் நம்பிக்கை இல்லாத தந்தை பெரியார் அவர்கள் மேடையில் - அவர் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளில்  கடவுள் வாழ்த்து பாடப் படும்பொழுது எழுந்து நிற்பார் - தள்ளாடிய, முடியாத நிலையில்கூட (மற்றவர் துணையுடன்).
என்னே நயத்தக்க நாகரிகம்! தன்னிய உயர்ந்த பண்பு’’ என்று பாராட்டுவார்!
பல நூற்றாண்டு விழாக்களை நாம் நடத்துவது அவர்களுக்குப் பெருமை சேர்க்க அல்ல; நம் தரத்தை உயர்த்திட; நமது மனிதத்தைப் பெருக்கிட, நமது பட் டறிவை, பகுத்தறிவை, பொது அறிவை விளக்கிடவே!
எளிமை, நிறைகுடம் தளும்பாத அடக்கம் இவைகளை நாம் கண்டறிந்து வியந்தோம்.
வாழ்க வ.சுப.மாணிக்கனார்!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...