Showing posts with label விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். Show all posts
Showing posts with label விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். Show all posts

Monday, July 10, 2017

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தைக்காக்க அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்: திருமாவளவன்


சென்னை, ஜூலை 10- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைக் காக்க அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

சென்னையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறு வனத்தை திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்துடன் இணைக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இத்தகைய தமிழ் விரோத நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாகக் கைவிடவேண்டும்.

தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்பதற் காக, சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், தலைநகர்த் தமிழ்ச் சங்கம் முதலான அமைப்புகளும், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலான தமிழறிஞர்களும் தொடர்ந்து போராடி வந்தனர். திமுக, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தின.

அப்படி போராடிப் பெற்ற உரிமையைப் பறிக்கும் வகை யில், மத்திய அரசின் நடவடிக்கை உள்ளது. இதை தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைக் காக்க அனைத்துக் கட்சி களும் குரல் கொடுக்க வேண்டும் என எழுச்சித் தமிழர் திருமா வளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...