Tuesday, December 31, 2019

மனிதாபிமானத்தை முற்றிலும் இழந்த எடியூரப்பா துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உதவித்தொகை ரத்து

குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின்போது, மங்க ளூரு நகரில் கருநாடக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோ ருக்கு அறிவித்த உதவித்தொகையை அம் மா நில முதல்வர் எடியூரப்பா ரத்து செய்துள்ளார்
மங்களூரு போராட்டத்தின் போது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இறந்த வர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார் அம்மாநில முதல்வர் எடியூரப்பா.
பெங்களூருவின் பல பகுதிகளிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேராட் டங்கள் வெடித்து தடையுத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நிலைமை சென்றது.
இந்நிலையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத் தினார். எடியூரப்பா.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, மங்களூரு சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இருவருக்கும் அதில் தொடர்புள்ளதா? என்பது குறித்து விசாரிக்கப்படும். அப்படி தொடர்பிருப்பது உறுதியானால், அவர்களின் குடும்பங்களுக் கான உதவித்தொகை வழங்குவது குறித்து ஆலோசித்தே முடிவு செய்யப்படும் என்றார். கருநாடக முதல்வரின் இத்தகைய முடிவு சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற் படுத்தியுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...