Showing posts with label டெக்கான் கிரானிகிள். Show all posts
Showing posts with label டெக்கான் கிரானிகிள். Show all posts

Wednesday, March 27, 2019

அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புக் கொள்கைகளை பா.ஜ.க. அரசு மீறி விட்டது

தேர்தல் பரப்புரை தொடங்குவதற்கு முன்பாக 'டெக்கான் கிரானிகிள்' ஆங்கில இதழுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  அளித்த பேட்டி


திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை தொடங்குவதற்கு முன்னதாக ஆசிரியர் கி. வீரமணி "டெக்கான் கிரானிகிள்" இதழுக்குப் பேட்டி யளித்தார். அப்போது அவர் அரசியலமைப்புச் சட்ட முகப் புரையில்  வலியுறுத்தப்படும் கோட்பாடுகளைப் பா.ஜ.க. புறக்கணித்து விட்டது என்று குற்றம் சாட்டினார். பா.ஜ.க.வுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ள அஇஅதிமுக வைக் கண்டித்தார்.

ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற பா.ஜ.க. 2014இல் மத்திய அரசில் அதிகாரம் பெற்றதிலிருந்து முந்தைய அரசுகளின் பாதையிலிருந்து திட்டமிட்டு விலகிச் செல்கிறது. அரசியலமைப்பிலும் அதன் முகப்புரை யிலும் கண்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகளையும் மதிப்பதில்லை என்றார்.

கடந்த பல ஆண்டுகளில் எல்லாத் துறைகளிலும் மத்திய அரசு கண்டது தோல்வியே. மோடியின் அரசு அதிகபட்ச அழிவுக்குக் காரணமாயிருந்திருக்கிறது. நாடு மாற்றத்தையும் நல்லாட்சியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்றார் அவர். நாணய மதிப்புக் குறைப்பு அனைவரையும் பாதித்திருக்கிறது. தொழில் துறை, உற்பத்தித் தொழிற்சாலைகள், மரபு சாராத தொழில்கள் அனைத்தையுமே. பெருமளவு கருப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. அந்தத் திட்டத்தின் நோக்கமே தோல்வியடைந்துவிட்டது. அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்தால் சாதாரண மக்கள் அவதிப்படுகிறார்கள்.

கடந்த பதினாறு நாடாளுமன்றத் தேர்தல்களைக் காட்டிலும் இந்தத் தேர்தல் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் இது நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது. அரசியல் கட்சிகளின் எதிர் காலத்தை மட்டுமின்றி இனி வர இருக்கும் தலை முறையின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது.

இந்தத் தேர்தல் எதிர்காலத்தில் இருக்கப் போவது  இந்தியாவா, ஹிந்து நாடா என்று தீர்மானிக்கப் போகிறது. திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக் குக் கூட்டணி மக்களின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் பாடுபடுவதற்கான கொள்கை அடிப்படைக் கூட்டணி என்றார் அவர். அஇஅதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத மானது.  வாக்குகளை அள்ளி வெற்றி பெறுவதே நோக்கம் என்று அந்தக் கட்சிகளே குறிப்பிட்டுள்ளன. கொள்கை அத்தனையையும் காற்றில் பறக்கவிட்டு விட்டன.

பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாசு தன் நிலைப்பாட்டை மாற்றிய வண்ணம் இருக்கிறார். திராவிடக் கட்சிகளோடு சேரும்போது கொள்கையை  மாற்றுவது என்பதே அவரது கொள்கை.

மத்திய அரசு அஇஅதிமுகவை அச்சுறுத்தி வைத்திருக்கிறது. அமைச்சர்களை வருமான வரிச் சோதனையையும், சி.பி.அய்.யையும் காட்டிப் பயமுறுத் துகிறது. அவர்கள் அடிமைகள். அமைச்சர் ஒருவர் 'மோடி எங்கள் டாடி' என்று சொல்கிறார்.

அவர்களின் தேர்தல் அறிக்கை கட்சிக் கூட்டத்தில் போட்ட தீர்மானங்கள் போல இருக்கிறது என்றார். வீரமணி. 'நீட்' தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்குக் கேட்கிறது. ஆனால் 'நீட்' உட்பட மாநிலத்தின் பல்வேறு குறைகளைத் தீர்ப்பதற்காக மத்திய அரசின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான எத்தனையோ வாய்ப்புகளை  அஇஅதிமுக அரசு நழுவ விட்டி ருக்கிறது.

கடந்த ஆண்டு பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக் கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். அது போலவே குடியரசுத் தலைவர் தேர்தலிலும் எதிர்த்து வாக்களித்தார்கள். ஆனால், மற்றபடி தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை அந்தக் கட்சி பயன்படுத்திக் கொள்ளவில்லை. 'நீட்' தேர்வு தொடர்பான இரண்டு சட்ட வரைவுகளை மாநில அரசு நிறைவேற்றியது. இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகியும் அவற்றின் கதி என்ன என்று தெரியாத நிலை. மத்திய அரசு அவற்றை அங்கீகரிக்கவில்லை. அதன் விளைவாக கார்ப்ப ரேட்டுகள் 'நீட்' தேர்வுகளில் லாபமடைந்து கொண்டி ருக்கிறார்கள். - இவ்வாறு 'டெக்கான் கிரானிக்கிள்' ஆங்கில  இதழுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆதாரம்: 'டெக்கான் கிரானிக்கிள்' மார்ச் 26, 2019

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...