Thursday, April 25, 2019

பகுதிநேரமாக எம்.பில் படித்த ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திருப்பித்தர உத்தரவு 800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்பு

சேலம்,ஏப்.25, தமிழக பள்ளிக் கல்வித்துறையின்கீழ் 6 ஆயிரம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல் பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளில் 30 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள், முதுகலைப் பட்டம் படித்தால் ஒரு ஊக்க ஊதியமும், எம்பில் அல்லது எம்எட் படித்தால் மற்றொரு ஊக்க ஊதியமும் வழங்கப்படுகிறது.
இதனிடையே கோவை மண் டலத்திற்குட்பட்ட ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட் டங்களில் உள்ள அரசு பள்ளி களில், கடந்த இரு மாதங்களாக ஆண்டு தணிக்கை நடந்தது.
அப்போது, 2008ஆம் ஆண்டுக்கு பிறகு பகுதி நேரமாக எம்பில் ஆய்வு படிப்பில் சேர்ந்து, அதற்கான ஊக்க ஊதியம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், அதனை திரும்ப செலுத்தும்படி உத்தர விட்டு சென்றனர்.
இந்த விவகாரம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்ட தாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த 2008ஆம் ஆண்டுக்கு பிறகு, தொலைதூர கல்வி மூலமாக எம்பில் முடித்தவர் களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டாம் என கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், பகுதிநேரமாக படித்தவர்களை, ரெகுலர் போலவே கணக்கில் கொள்ள லாம் என யூஜிசி வழிகாட்டுதலில் உள்ளது. மேலும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு தெரிவித்த பதிலில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில், துறை முன்அனுமதியோடு படித்திருந் தால் ஏற்றுக்கொள்ளப் படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், கோவை மண்டலத் தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட வருடாந்திர தணிக்கையின்போது, பகுதி நேர மாக எம்பில் முடித்த பலருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை திரும்ப பெற உத்தரவிடப் பட்டுள்ளது. இதனால், சுமார் 800க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், 50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை திரும்ப செலுத்த அறிவுறுத்தப்பட்டுள் ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, எந்தவொரு தெளிவான முடிவு கிடைக்கவில்லை.
குறிப்பாக, ஆர்டிஅய் தகவ லுக்கும், முதல்வரின் தனிப்பிரிவு அளித்த பதிலுக்கும் முரண் பாடுகள் உள்ளன.
அதேபோல், யூஜிசி வழி காட்டுதல்களையும் கண்டுகொள் ளாதது வெளிப்படையாக தெரி கிறது. எனவே, இந்த விவ காரத்தில், யூஜிசி வழிகாட்டுதல் களை தெளிவுபடுத்தி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையை நீக்க வேண்டும்.


இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இலங்கை பயங்கரவாதத் தாக்குதல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359ஆக அதிகரிப்பு


கொழும்பு, ஏப். 25- இலங்கையில் தேவா லயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359-ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 7 இடங் களில் தற்கொலைத் தாக்குதல்கள் நிகழ்த் தப்பட்டன. இந்த தாக்குதலில் 10 இந்தி யர்கள் உள்பட 359 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர்ருவான் விஜவர்தன புதன் கிழமை கூறியதாவது:
பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரி ழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கை களை முறையாக மேற்கொள்ள அரசு தவறிவிட்டது என்பதை ஒப்புக் கொள்கி றோம். வேறு சில பாதுகாப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு அதிபர் மைத்ரிபால சிறீசேனா அறிவுறுத்தியுள்ளார். இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் களில் 32 பேர் குற்றப்பிரிவு விசாரணை துறையின் காவலில் உள்ளனர். நியூஸிலாந் தின் கிறைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கு பழிவாங்குவதற்காக தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு அய்.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனினும், அவர்கள்தான் இதை செய்தார்கள் என்ப தற்கு எந்த ஆதாரமும் இல்லை. இலங்கை பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்கீத் ஜமாத் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதல் களை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக் கப்படுகிறது.
வெளிநாட்டவர்கள்
34 பேர் உயிரிழப்பு
இந்த தாக்குதலில், 10 இந்தியர்கள், பிரிட்டனைச் சேர்ந்த 6 பேர், சீனா, அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர் உள்பட வெளிநாட்டவர்கள் 34 பேர் உயிரிழந்தனர் என்று கூறினார்.
இலங்கையில் 7 இடங்களில் நிகழ்த்தப் பட்ட தற்கொலைத் தாக்குதல்களில், ஒரு பெண் உள்பட 9 பேர் தங்களது உடம்பில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பெண் தற்கொ லைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கர வாதிகளில் ஒருவரின் மனைவி என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கள் அனைவருமே பட்டப்படிப்பு படித்த வர்கள் என்றும், சமூகத்தில் நல்ல அந்தஸ் தில் வாழ்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சின்னமோன் கிராண்ட் மற்றும் ஷாங்க்ரி லா நட்சத்திர விடுதிகளில்  தாக்கு தல் நடத்திய இருவரும் சகோதரர்கள் என்று தெரிய வந்ததையடுத்து, அவர்களது வீட்டை சோதனையிட்டதில் பயங்கரவா தம் குறித்த புத்தகங்கள், செல்லிடப்பேசி சிம்கார்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப் பட்டன. அவர்களது இளைய சகோதரர், விடுதியில் விட்ட ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரையும் விசாரணைக்காக காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, இலங்கையில் தேசிய தவ்கீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பை தோற்றுவித்தவர் என்று கூறப்படும் ஜக்ரான் காசிம் என்பவருக்கு இந்த தாக்கு தல்களில்  தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ப தாக அய்.எஸ். பயங்கரவாத அமைப்பு செவ்வாய்க்கிழமை ஒரு காணொலியை வெளியிட்டது.
இந்நிலையில், இலங்கையில் பயங்கர வாதச் செயல்களில் ஈடுபட்டவரான ஜக்ரான் காசிம் முகம் அந்த காணொலியில் தெரிந்ததாக காவல் துறையினர் கூறினர். எனினும், காணொலியில் இருந்த பயங்கர வாதிகள் தங்களது முகத்தை பாதி மறைத் திருந்ததால், காசிமின் அடையாளம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களுக்கு பிறகு இலங்கையில் அவசர நிலை அமல் படுத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்புவின் தெற்கு பகுதியில் உள்ள நகரில் தனியாக நின்றிருந்த இரு சக்கர வாகனத்தை கண்ட காவல் துறை யினர் அதில் வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனையிட்டனர். நல்வாய்ப்பாக அதில் எந்த வெடிபொருள்களும் இல்லை. அதையடுத்து, பொது இடங்களில் வாக னங்களை நிறுத்திச் செல்வோர், வாகனத் தின் பின்புறம் தனது பெயரையும், செல்லி டப்பேசி எண்ணையும் எழுதி வைக்க வேண்டும் என்று மக்களுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்கூட்டியே எச்சரிக்கை
இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக, இந்தியாவும் அமெரிக்காவும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தன என்று அந்நாட்டு அமைச்சர் கூறியதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் கூறுகையில், "இலங்கை அரசுக்கு வேறு என்னென்ன தகவல்கள் கிடைத்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. உளவுத் துறை தகவல்களை சேகரிப்பதிலும், தகவல் பரிமாற்றத்திலும் பின்னடைவு ஏற்பட்ட தாக இலங்கை அரசே ஒப்புக் கொண்டுள் ளது. இலங்கையில் நடைபெற்ற தற் கொலைத் தாக்குதல்கள் குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது. அதனால் நாங் கள் எந்த தகவலையும் அவர்களுக்கு அளிக்கவில்லை ' என்றார்.
இந்த நிலையில், இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, இலங்கையில் அதிபர் சிறிசேனா தலை மையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடை பெறுகிறது. குண்டு வெடிப்பு குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள், மற்றும் தலைவர்களுடன் சிறிசேன ஆலோசனை நடத்த உள்ளார்.  அதனை தொடர்ந்து  இலங் கையில் அதிபர் சிறிசேன தலைமையில் அனைத்து மத கூட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கையில் இன்றிரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவங்களால் நிலவும் பதற்றத்தை குறைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மண்ணெலாம் பண்பாடும் மகத்தான சாதனை!

மறக்க முடியாத ஏப்ரல் 21 (2019) என்று சொல்லும் பொழுது - அது ஏதோ பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்திற்கானது மட்டுமல்ல!
தமிழ்நாடே, ஏன் இந்தியத் துணைக் கண்டமே, ஏன் ஆசியாக் கண்டமே மறக்க முடியாத மகத்தான நாள் அந்நாள்.
ஆம். அந்த நாளில்தான் பெரியார், மணியம்மை ஆகிய தலைவர்களின் பெயரைத் தாங்கிய - வல்லம் - அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், விண்ணில் செயற்கைக்கோளை ஏவி - எதிர்பார்த்ததைவிட பெரிய வெற்றி என்னும்  சிகரத்தைத் தொட்டது.
இனிவரும் உலகைப் பற்றி இன்றைக்கு 81 ஆண்டுகளுக்கு முன்பாகவே பேசிய பேரறிவாளர் தந்தை பெரியார்! சோதனைக் குழாய்க் குழந்தையைப் பற்றி அவர் உலகுக்கு அறிவித்தது 1938ஆம் ஆண்டில்!
அதனைத் தொடர்ந்து இனிவரும் உலகத்தைப் பற்றி அந்த சமுதாய விஞ்ஞானி பல்வேறு தகவல்களைத் தெரிவித்த ஆண்டு (1943).
போக்குவரத்து எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமாகவே இருக்கும். கம்பியில்லா தந்தி ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும். ரேடியோ ஒவ்வொரு தொப்பியிலும் அடைக்கப்பட்டிருக்கும். உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுரியம் ஏற்படும். மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்தில் இருந்து கொண்டே  - பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க சாத்தியப்படும் என்பது போன்ற தகவல்களை தொலைநோக்கோடு சொன்னவர் - அய்.நா.வின் யுனெஸ்கோ சார்பில் அளிக்கப்பட்ட விருதில் குறிப்பிடப்பட்ட "தொலைநோக்காளர்" பெரியார்!
உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் அவர்கள் எடுத்துக் கூறும் கருத்துக்கள் தொடக்கத்தில் கடும் எதிர்ப்பையும், கசப்பையும், ஏளனத்தையும்தான் சந்தித்தன.
ஆனால் காலவோட்டத்தில் அவை செயலுக்கு வரும் பொழுது மூக்கின்மேல் விரலை வைத்து வியப்பின் விளிம்புக்கே செல்லுவர்.
அதுதான் இப்பொழுதும் நடத்திருக்கிறது. அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி அவர்களின் பெயரில் அந்த செயற்கைக்கோள் (பலூன்) சிறீப் பாய்ந்த அந்தத் தருணத்தை இப்பொழுது எண்ணிப் பார்த்தாலும் உடல் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கின்றன. 70 ஆயிரம் அடிவரை மேலே செல்லும் என்ற எதிர்ப்பார்ப்பையும் விஞ்சி 103851 (32 கி.மீ.) அடிவரை உயரே பறந்து பாதுகாப்பாக தரையிறங்கியது. பலே! பலே!!
'தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை!' என்றார் புரட்சிக் கவிஞர்; பெண்கள் என்றால் குழந்தையைப் பெறுவது - அந்தக் குழந்தையைத் தாலாட்டுச் சொல்லி ஆட்டித் தூங்கி வைப்பது மட்டும்தான் என்று நினைக்காதீர்கள் - அந்தக் கை தொல்லுலகையே ஆளும் என்று தந்தை பெரியார் அவர்களின் சிந்தனையைச் சுவாசித்த புரட்சிக் கவிஞர் பாடினாரே!
பெரியார் கல்வி நிறுவனத்தில் இந்தசாதனை நிகழ்த்தப் பட்டதில் இரு பெரும் சிறப்புகள் பூத்துக் குலுங்குகின்றன!
ஒன்று பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனம் - இரண்டாவது பெண்கள் அதனைச் சாதித்தனர் என்பதாகும். பெண்ணுரிமைக்காக தந்தை பெரியார் குரல் கொடுத்ததுபோல, பெண்ணியம் பற்றி தந்தை பெரியார் விரித்துக் கூறிய செழுமை மேலிடும் சீரிய கருத்துக்கள் போல, உலகில் எந்த அறிஞரும் எண்ணிப் பார்த்ததில்லை - அதுவும் அந்தக் கால கட்டத்திலேயே!
அந்தத் தலைவரின் எண்ணங்களை ஈடேற்றும் வகையில்  பெண்கள் நிகழ்த்திக் காட்டினர் என்பது சாதாரணமா! தந்தை பெரியாரும் - அன்னை மணியம்மையாரும் உயிரோடு இருந்து அந்தக் காட்சியைக் கண்டிருந்தால் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கும், பூரிப்புக்கும் எல்லைதான் ஏது? இந்தச்சாதனையில் இன்னொரு முக்கிய கூறும் குறிப்பிடத் தகுந்தது. முதல் தலைமுறையாகக் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த - அதுவும் கிராமப்புறங்களைச் சார்ந்த பெண்கள் இந்தச் சாதனையைச் சாதித்துக் காட்டியுள்ளனர் என்பது தான் அந்தக் கூறாகும். மதிப்பெண்கள்தான் தகுதி - திறமையை அளக்கும் அளவுகோல் என்ற பத்தாம் பசலித்தனத்தின் மூக்கை உடைத்து, மூடி சூட்டியுள்ளனர் நமது மாணவியாராம் மாண்புமிகு 'கண்மணி'கள்!
பாராட்டுகிறோம் - பாராட்டுகிறோம் - பலபடப் பாராட்டு கிறோம். இந்த மாணவிகளுக்கு ஊக்கமும், ஆக்கமும் தந்து சிறப்பான முறையில் வழிகாட்டிய பேரசிரியர் பெரு மக்களும், துணைவேந்தர், பதிவாளர் உட்பட நிருவாகத்தினர் அத்தனைப் பேரும் பெரும் பாராட்டுக்குத் தகுதி உடையோர் ஆவர்.
மேடும் பள்ளமுமாக வெறிச்சோடிக் கிடந்த அந்தப் பகுதியில் இப்படியொரு கல்வி உலகத்தை உருவாக்கிய பல்கலைக் கழகத்தின் வேந்தர் - நமது மதிப்பிற்குரிய ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்தச் சாதனைகளின் அடித்தளமாக, ஆதார சுருதியாக இருப்பவர் என்பதை யார்தான் மறுக்க முடியும்? உலகிலேயே முதல் பெண்கள் பொறியியல் கல்லூரி என்ற பெருமையுடன் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம்  (1988) இன்றைக்கு உலகின் கவனத்தை ஈர்த்து விட்டது. சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று ஆக்கப்பட்ட ஒரு சமுதாயத்திற்குக்  (அதுவும் பெண்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்!)கல்வி உரிமையைப் பெற்றுத் தந்ததோடு அல்லாமல், பெரியார் அறக்கட்டளைகள் மூலம் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கி, தமிழ்நாட்டில் ஒளி விடும் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களாக ஜொலிக்கும் பேரும் புகழும் பெற்றுத் திகழ்கின்றன.
தந்தை பெரியார் காலத்தில் ஒரு தொடக்கப்பள்ளி, மாணவர் - மாணவிகளுக்குத் தனித்தனி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என்கிற அளவோடு இருந்த கல்வி நிறுவனங்கள் தந்தை பெரியார் மறைவிற்குப்பிறகு,  அன்னை மணியம்மையார் அவர்களுக்கு பிறகு, நமது தலைவர் ஆசிரியர் காலத்தில் உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள், மருந்தியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம் என்று கிளை பரப்பி நிற்கிறது. இந்தக் கல்வி நிறுவனங்களில் பயின்றோர் உலகெங்கும் பரவி மிகப் பெரிய பொறுப்புகளில் செம்மாந்து நிற்பதையும் எண்ணி எண்ணி மகிழத்தக்கவையே! வாழ்க பெரியார்! மேலும் வளர்க அவர்களின் காண விரும்பிய சாதனைகள்!

Friday, April 19, 2019

பிலிப்பைன்ஸ் அகழ்வாராய்ச்சியில் 50,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய மனித குலப் படிமங்கள் கண்டெடுப்பு

பிலிப்பைன்ஸ் குகையொன்றில் பண்டைய மனித குடும்பத்தின் புதிய கிளையொன்று கண்டுபிடிக்கப் பட்டதாக தகவல் தெரிய வந்துள்ளது. அவை கிடைத்த இடமான லஸோன் தீவை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதிய கண்டு பிடிப்புக்கு ஹோமோ லஸோனென்சிஸ் என்று பெயரிடப்பட்டிருக் கிறது. இவர்கள் இன்றைய இன்றைய மனித குலத்தின் நேரடி மூதாதையர்களாக இருக்க வாய்ப்பில்லை எனினும் தூரத்துச் சொந்தங்களாக இருக்க 99 சதவிகித வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இவர்கள் வாழ்ந்திருந்த காலம் இன்றைக்கு 50,000 ஆண்டு களுக்கு முற்பட்டதாக இருக்கலாம். அன்று இந்த மனிதர்களின் உயரம் வெறும் 3 அடிகளே என புதன் அன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பானது மனித பரிணாம வளர்ச்சி குறித்த அறிவியல் கண்டுபிடிப்புக் கதைக்கு மேலும் சர்ச்சையைக் கூட்டியுள்ளது. குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் எனும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை சிதைப்பதாக இருக்கிறது இந்தப் புதிய கண்டுபிடிப்பு. ஏனெனில் மனித குலம் தோன்றிய காலங்களில் இருந்து பல விசித்திரமான வடிவங்களில் எல்லாம் எண்ணற்ற மனித குலங்கள் வாழ்ந்து மடிந்திருக்கக் கூடும் எனும் அய்யப்பாட்டுக்கு இந்தக் கண்டுபிடிப்பு வழிவகுத்திருக்கிறது.
நமது மூதாதையர்களாகக் கருதப்படும் ஹோமோசேபியன்கள் இப்போது ஒப்பீட்டளவில் தனியாக இந்த உலகில் வாழ்கின்றனர்.
தற்போது கிடைத்து வரும் புதிய மனித இனங்களைக் காண்கையில் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் நாம் எதிர்பார்த்த மாற்றங்களைக் காட்டிலும் மேலும் அதிகமான மாறுதல்களைத் தருவனவாக உள்ளன என்கிறார் கனடா, லேக்ஹெட் பல்கலைக் கழகத்தின் மானுடவியல் துறை வல்லுனரான மேத்யூ டோச்செரி. இவர் மேற்கண்ட அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர் இல்லையென்ற போதும் ஒரு மானுடவியலாளர் எனும் அடிப்படையில் மேற்கண்ட கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

2000 ல் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அர்மண்ட் சால்வடர் மிஜரிஸ் எனும் மாணவர் லஸோன் தீவிலிருக்கும் கல்லாவோ குகைப்பகுதிகளை பிலிப்பைன்ஸில் முதலில் விவசாயம் செய்த மனித இனம் எது எனும் ஆராய்ச்சிக்காக தோண்ட முற்படுகையில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் அவர் மேலும் ஆழமாக அந்தப் பகுதி நிலத்தைத் தோண்டுவது என முடிவெடுத்தார்.
இந்தோனேசியத் தீவுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் வாயிலாக கண்டறியப்பட்ட 60,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரம்மாண்டமான மனித உயிரினங்களுக்கு அன்றைய விஞ்ஞானிகள் ஹோமோ ஃப்ளோரெசியன்சிஸ் என்று பெயர் சூட்டியிருந்தனர். அவை சில அம்சங்களில் இன்றைய மனிதர்களின் இயல்புகளுடன் ஒத்துப் போவதாயிருந்தன. அத்துடன் அவர்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தில் கற்கருவிகளை கையாளத் தெரிந்தவர் களாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இவ்வகை மனித உயிரினங்களில் வயது வந்தவை அனைத்தும் சுமார் 3 அடி மட்டுமே வளர்ச்சி கொண்டவையாகவும் மிகச்சிறிய மூளை கொண்டவையாகவும் இருந்தவை சந்தேகத்திற் கிடமானவையாக இருந்தன. அதன் காரணமாகவே இவர்களின் நிஜமான மூதாதையர்கள் யார் எனும் ஆராய்ச்சி இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை இவர்களின் மூதாதையர்கள் ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஹோமினைன்களாக இருக்கலாம். அவர்கள் தான் உயரம் குறைந்த வர்களாகவும் சிறிய மூளை கொண்டவர்களாகவும் இருந்தனர்.


ஆனால் தற்போது பிலிப்பைன்ஸ் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கும் படிமங்களில் பற்களும், கால் சிற்றெலும்புகளும் கிட்டத்தட்ட இன்றைய மனித குலத்தை ஒத்தவையாகவே இருக் கின்றன. அளவு தான் இடிக்கிறது. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்ட எந்த ஒரு மனித குலத்தையும் விட இவை மிகச்சிறியவையாக இருக்கின்றன.

கருந்துளை: கண்டுபிடிப்பும், படிப்பினைகளும்...!

பூமி, செவ்வாய், புதன், வியாழன் உள்பட கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருவது நாம் தெரிந்ததே.
சூரியனின் ஈர்ப்பு விசை. தற்போது ஒரு நிமிடம் கண்களை மூடி மேலே உயரே சென்று சூரிய மண்ட லத்தையும், அதன் கிரகங்களையும் மனதில் நினை யுங்கள். பூமி, செவ்வாய், புதன் சுற்றும்போது சூரியனை உங்களால் பார்க்க முடியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் சூரியனின் விசை இல்லாமல் அவை சுற்ற முடியாது. அதாவது நாம் சூரியனைப் பார்க்க முடியாவிட்டாலும் பூமி, செவ்வாய் எல்லாம் சுற்றும். இதற்கு சுற்று வட்டத்தின் மய்யம் கொடுக்கும் ஈர்ப்பு விசை இருக்கும் இடத்தில் இருப்பது ஆகும்.
சூரியன்தான் மற்ற கிரகங்கள் பயணத்தின் காரணி. ஆயினும் நம்மால் சூரியனை பார்க்க முடிவதன் காரணம் அதன் ஒளி நம் பூமிக்கு வருவதால்தான்.
ஆனால் அண்டத்தில் பல இடங்களில் பூமி, செவ்வாய் போன்றவை சுற்றி வரும்போது அவற்றின் மய்யத்தில் சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை மனிதனால் காண முடியாத நிலை இருந்தது. அதற்கு காரணம் மிக அதிகமான விசை உள்ள ஒரு பெரிய நட்சத்திரம் அதன் ஒளியைக் கூட வெளிவிடாதது காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்து அவற்றின் இருப்பை உணர்ந்து, அதை பார்க்க முடியாததால் அதற்கு கருந்துளை என்று பெயரிட்டனர். அதை இன்று வரை யாரும் காணவில்லை. தனது ஈர்ப்பு எல்லைக்குள் வரும் ஒளியைக் கூட வெளியேற விடாமல் தன்னகத்தே வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட இந்த கருந்துளைகள் அதன் அருகில் இருக்கும் நட்சத்திரங்களை கூட ஈர்த்து விழுங்கக்கூடியவை.
பெரிய நட்சத்திரங்களில் அதிகமான ஈர்ப்பு சக்தி இருக்கும்போது அதன் எடை அப்படியே இருக்கும். ஆனால் அதன் அளவு சுருங்கி கொண்டே போகும். அதனால் அதன் அடர்த்தி மிக, மிக அதிகமாகி கொண்டே போகும்.
பூமியில் நாம் ஒரு பொருளை சூரிய ஒளியின் பிரதிபலிப்பை வைத்துதான் பார்க்கிறோம். இரவில் நிலவு, மின்சார ஒளியின் உதவியால் அந்த பொருள் என்னவென்று பார்க்கிறோம். அதைப் போல தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களை சூரிய ஒளி இல்லாத இரவுகளில் அவை அனுப்பும் ஒளிக்கற்றைகளை வைத்து பார்க்க முடிகிறது.
அண்ட வெளியில் நட்சத்திர மண்டலத்தில் சூரிய ஒளிபோல் நட்சத்திர ஒளி இருந்தாலும் அவற்றையும் கருந்துளைகள் ஈர்த்துக்கொள்கின்றன. கருந்துளையில் அது உற்பத்தி செய்யக்கூடிய ஒளியைப் பார்க்க முடியாது. அதன் ஒளியை அதே ஈர்த்துக்கொள்கிறது.
வெளியில் இருந்து எந்த ஒளி வந்தாலும் அதை ஈர்த்துக்கொள்கிறது. நட்சத்திரங்கள் போல் எந்த பொருள் வந்தாலும் ஈர்த்துக்கொள்கிறது மற்றும் அதை நாம் பார்க்க முடியாது. எல்லாவற்றையும் ஈர்த்துக் கொள் வதால் அதை கருந்துளை என்கிறோம்.
அண்டத்தில் இருக்கும் பூமி, நிலவு உள்பட எல்லா நட்சத்திரங்களுக்கும் அதற்கான சுழற்சி இருந்து கொண்டு இருக்கிறது. சுழற்சி மற்றும் ஈர்ப்பு விசையில் இருக்கும் அண்டவெளியில் அதிகமான கதிர் வீச்சுகளும் உள்ளன. அது கருந்துளைக்கு அருகில் செல்லும்போது அவை ஈர்க்கப்படுகிறது.
இரவு நேரத்தில் விண்கற்கள் கீழே எரிந்து விழுவதை பார்த்து இருக்கிறோம். அவை பூமியால் ஈர்க்கப்பட்டு வரும்போது பூமியில் ஏற்படும் உராய்வினால் ஏற்படும் வெப்பமே இதற்கு காரணம்.
இதேபோன்று கருந்துளையை சுற்றியுள்ள இடங் களில் இருந்து கருந்துளையை நோக்கி ஈர்க்கப்படும் பல கதிர் இயக்க ஒளிக்கற்றைகள் மிகவும் லேசாக இருந் தாலும் கூட அதிகபட்சமான ஈர்ப்பு விசை இருப்பதால் கருந்துளைக்கு அருகில் செல்லும் போது வளிமண்டலத் தில் உராய்வு ஏற்படுகிற மாதிரி ஈர்ப்பு விசைக்குள் அவை உராய்ந்து உள்ளே சென்று விடுகிறது.
இத்தகைய கருந்துளைகளின் இருப்பு பற்றிய தகவல் களை பல ஆண்டுகளுக்கு முன்னே விஞ்ஞானிகள் கணித்து வந்தாலும் அதை படம் பிடிக்க முடியவில்லை. இப்போதுதான் முதல் முறையாக கருந்துளையை பார்க்க முடியாவிட்டாலும் அதை சுற்றி நிகழும் மேற்கண்ட நிகழ்வுகளை பார்க்க முடிகிறது. இந்த நிகழ்வுகளை பற்றிய அடுத்தகட்ட புரிதல்களும், கருந்துளையில் நடக் கக்கூடிய நிகழ்வுகளையும் நாம் புரிந்து கொள்ளும் போது இந்த பேரண்டத்தின் ஆதியை புரிந்துகொள் வதற்கான வழிமுறை ஏற்படும்.
நாம் வாழும் பால் வெளியில் இன்னொரு கருந்துளை இருந்தாலும் அதை இதுவரை நம்மால் பார்க்க முடிய வில்லை. அது நாம் தற்போது பார்க்கக்கூடிய கருந் துளையை விட அளவில் சிறியதாக இருப்பதால் அதை சுற்றியுள்ள இயற்கை நிகழ்வுகளின் வீரியம் குறைவாக இருக்கும்.
கருந்துளையை படம் எடுப்பது எளிதான காரியம் அல்ல. பல சவால்களை சந்திக்க வேண்டும். கருந் துளையை படம் பிடிக்க வேண்டும் என்றால் அந்த பொருளில் இருந்து காட்சி படும் அளவு கணிசமான ஒளி இருக்க வேண்டும். அடுத்ததாக அந்த பொருள் வெளிப்படுத்தும் மங்கலான ஒளியை கண்டு காட்சி பிம்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நவீன திறன் கொண்ட தொலைநோக்கி வேண்டும். கருந்துளை ஒளியை உமிழாது அதுமட்டுமின்றி அதன் மீது ஒளியை பாய்ச்சினாலும் பிரதிபலிக்காது. உறிஞ்சி கொண்டு விடும்.
தற்போது விஞ்ஞானிகள் படம் எடுத்துள்ள எம்:87 என்ற கருந்துளையை படம் பிடிக்க சற்றேறக்குறைய பூமியின் விட்டத்தில் ஒரு பெரிய தொலைநோக்கி இருந்தால் மட்டுமே முடியும். ஆனால் அப்படி ஒன்று தற்போது சாத்தியமில்லை.
இந்த குறையை நிவர்த்தி செய்ய கடந்த பத்து ஆண்டுகளாக விஞ்ஞானிகள் பேசி வந்த இரு வழி முறைகளை ஒருங்கே சேர்த்து பன்னாட்டு விஞ்ஞானிகள் கண்ட ஒரு தொலைநோக்கி தான் ஈவன்ட் தொலைநோக்கி என்ற அமைப்பு. இதில் பூமியில் அமெரிக்கா, அய்ரோப்பா, அண்டார்டிகா, ஆசியா ஆகிய கண்டங்களில் உள்ள எட்டு தொலைநோக்கிகள், ஒவ்வொன்றும் 10 மீட்டருக்கும் மேல் விட்டமுள்ளவை. அவை அனைத்தையும் ஒன்றாக இணைந்து ஒரே நேரத்தில் படம் எடுத்து பின் சேர்ப்பது என்பது ஒருமுறை. மற்றொன்று இதே முறையில் கிட்டத்தட்ட 10 நாட்கள் எடுக்கும்போது அண்டத்தில் இருந்து பார்க் கும்போது பூமியின் சுழற்சியில் ஒவ்வொரு தொலை நோக்கியும் வேறு, வேறு இடம் நோக்கி நகர்கிறது.
இந்த நகர்வுகள் எல்லாமே சேர்ந்து பூமியின் விட் டத்தை ஒத்த ஒரு தொலைநோக்கி போன்ற ஒரு செயல் முறை நிகழ்கிறது. அதனால் சிறிய எட்டு தொலை நோக்கிகளை வைத்து ஒரு பெரிய தொலைநோக்கி ஒத்த செயல்திறனை விஞ்ஞானிகள் உருவாக்கினர். ஆனால் இதற்கு பெரிய கணினிகளின் துறையும் 200 பன்னாட்டு விஞ்ஞானிகளின் உழைப்பும், கிட்டத்தட்ட ரூ.300 கோடியும் செலவாகி உள்ளது. இதன் மூலம் கிடைத்த படம்தான் நாம் இங்கே பார்ப்பது.
இருந்தாலும் இன்னும் செயல்திறன் அதிகமாக இருக்கக்கூடிய தொலைநோக்கிகளையும், செயற்கை கோள்களையும் வைத்து பிற்காலத்தில் இதை விரிவாக ஆராயக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
நமக்கு அருகில் உள்ள கருந்துளையை பார்க்க இன்னும் அதிகம் செலவாகும். அதற்கு செலவு செய்ய லாமா? வேண்டாமா? என்பதற்கும் நமது பால்வழியில் இருக்கக்கூடிய கருந்துளை பற்றி ஆராய்வதற்கும் அதனால் நமக்கும், நமது சூரிய மண்டலத்துக்கும் பாதிப்பு எதுவும் இருக்கிறதா? என்பதை பார்ப்பதற்கும் இந்த ஆராய்ச்சி முடிவு முன்னோடியாக இருக்கும்.
நமது செயற்கை கோள்களை விண்ணில் ஏவும்போது பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் கிரகங்களில் ஈர்ப்பு விசையை சரியாக புரிந்து, கணித்து, வடிவமைத்து அனுப்புகிறோம். சந்திரயான், மங்கல்யான் போன்ற செயற்கை கோள்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்.
இப்படிப்பட்ட கருந்துளைகளால் அதற்கு அருகில் உள்ள நட்சத்திர கூட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்பு களையும் ஆராய்வதற்கு இந்த கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் முன்னோடியாக அமையும். இந்த கண்டுபிடிப்பால் தற்போதைக்கு பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
நன்றி: தினத்தந்தி, 15.4.2019



சீனாவை விட 2 மடங்கு இந்தியாவின் மக்கள் தொகை

சீனாவை விட 2 மடங்கு வேகத்தில் இந்தியா வின் மக்கள்தொகை பெருகி வருவதாக யுஎன்எப்பிஏ அறிக்கை தெரிவித்துள்ளது.
உலக மக்கள்தொகை குறித்த ஆய்வுகளை யுஎன்எப்பிஏ அமைப்பு செய்து வருகிறது. அந்த அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக எடுத்த கணக் கெடுப்பில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
2018இ-ல் உலக மக்கள் தொகையானது 760 கோடியாக இருந்தது. இது 2019இ-ல் 770 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை 2010 முதல் 2019 வரை யிலான காலக்கட்டத்தில் 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உலக அளவிலான சராசரி மக் கள் தொகை அதிகரிப்பு விகித மான 1.1 சதவீதத்தை விட அதிகமாகும். ஆனால் சீனாவில் மக்கள் தொகை அதிகரிப்பு 0.5 சதவீதமாகும். எனவே சீனாவை விட 2 மடங்கு வேகத்தில் இந்தியாவின் மக்கள்தொகை பெருகி வருகிறது.
இதுகுறித்து யுஎன்எப்பிஏ இந்தியாவுக்கான அதிகாரி கிளாஸ் பெக் கூறும்போது, இந்தியாவில் அதிக குழந் தைகள் பிறக்கும் அதேநேரத்தில் வயதானவர்களின் எண்ணிக் கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள இளைஞர் கள் படிப்பாளிகளாகவும் உடல் நலமிக்கவர்களாகவும் நாட்டின் பொருளாதாரம் வளர சமுகத் துக்கு நல்ல பங்களிப்பு தருப வர்களாகவும் முதியவர்களின் நலனில் ஈடுபாடு கொண்டவர் களாகவும் இருப்பதை அரசு உறுதிசெய்யவேண்டும். அதற் காக முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும். இதுபோன்ற பிரச்சி னைகளை மற்ற நாடுகள் எப் படி சமாளித்தன என்பதை இந் தியா கற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

மசூதியில் முசுலிம் பெண்களை அனுமதிக்ககோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

மசூதியில் தொழுகை நடத்த முசுலிம் பெண்களை அனுமதிக்க உத் தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு  உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை யில் உள்ள அய்யப்பன் கோயி லில் அனைத்து வயது ஆண்க ளும், குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் மட்டுமே அனுமதிக் கப்படுவது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்தாண்டு செப் டம்பரில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப் பில், சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களை யும் வழிபாட்டுக்கு அனுமதிக் கலாம் என்று கூறியது. இந்நிலையில், மகாராட்டிரா மாநிலம், புனேவை சேர்ந்த முசுலிம் தம்பதியர் மசூதிகளில் தொழுகை நடத்துவதற்கு முசு லிம் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில், மசூதிக்குள் முசுலிம் பெண் களை தொழுகைக்கு அனுமதிக்க மறுப்பது சட்ட விரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது. எனவே, பெண்களை மசூதிக் குள் அனுமதிப்பதற்கு உத்தர விட வேண்டும் என்று குறிப் பிடப்பட்டுள்ளது.  இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலை மையிலான அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந் தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, வெளிநாடுகளில் உள்ள மசூதிகளில் பெண்கள் தொழு கைக்கு அனுமதிக்கப்படுகிறார்களா? என கேள்வி எழுப்பி னார்கள். இதற்கு பதில் அளித்த மனுதாரரின் வழக்குரைஞர், "இசுலாமியர்களின் புனிதத்தல மான மெக்கா, மற்றும் கனடாவில் பெண்கள் மசூதிக்குள் அனுமதிக் கப்படுகின்றனர்" என்றார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி கள் அமர்வு, இந்த வழக்கை நாங்கள் விசாரணைக்கு ஏற்ப தற்கான காரணம், சபரிமலை கோயில் விவகாரத்தில் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு தான். மசூதிக்குள் முசுலிம் பெண் களை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட் டனர்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்த 73 லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பு

             மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு
மாநிலம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 73 லட்சத்து 12 ஆயிரத்து 390 பேர் பதிவு செய்து  வேலைக்காக காத்திருக்கின்றனர். தமிழகத் தில் ஒவ்வொரு மாவட்டத் திலும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் செயல் பட்டு வருகிறது. சென்னை, மதுரையில் மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலு வலகங்களும் உள்ளன. சென் னையில் மட்டும்  கூடுதலாக தொழில்நுட்பப்பிரிவு, மாற் றுத் திறனாளிகள் பிரிவு உட் பட 3 சிறப்பு அலுவலகங்கள் இயங்குகின்றன.
வேலைக்காக பதிவுதாரர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் புதுப் பித்து வர வேண்டும். ஆனால் 57 ஆண்டுகளை கடந்தும் இன்னும் பலர் மூன்றாண்டு களுக்கு ஒருமுறை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அப்படியும் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. காரணம் மத்திய, மாநில  அரசு களின் கொள்கைகளில் தெளி வில்லாத நிலை, அரசியல் தலையீடு போன்றவையும் அடங்கும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு ஆணையம் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியிட்ட தகவலின்படி  தமிழகத்தில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாண வர்கள், 17 லட்சத்து 41 ஆயி ரத்து 402 பேரும்;  19 முதல் 23 வயது வரை உள்ள பலதரப் பட்ட கல்லூரி மாணவர்கள் 16 லட்சத்து 93 ஆயிரத்து 351 பேரும் வேலைவாய்ப்பு அலு வலகத்தில் வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.  அதே போல் 24 முதல் 35வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருப்பவர்களின் எண் ணிக்கை 27 லட்சத்து 41 ஆயிரத்து 521 பேர்; 36 வயது முதல் 57 வயதுவரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 11 லட்சத்து 29  ஆயிரத்து 429 பேர் பதிவு செய்து காத்திருக் கிறார்கள்.
அதேபோல் 57 வய துக்கு மேல் ஆகியும் வேலை கிடைக்காமல் 6 ஆயிரத்து 687 பேர் என மொத்தமாக 73 லட்சத்து 12 ஆயரத்து 390 பேர் பதிவு செய்துள்ளனர். இப்படி யிருக்கும் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான ரயில்வே, பிஎச்இஎல், ராணு வத் தொழிற்சாலை, வருமான வரி அலுவலகம், துறை முகங்கள், விமான நிலை யங்கள், பெட்ரோலிய தொழி லகங்கள்  ஆகியவற்றில் தமி ழர்கள் தொடர்ந்து புறக் கணிக்கப்பட்டு வருவதாக வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மாறாக, வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களே அதிகமாக பணியமர்த்தப்படுகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளால் தமிழகத்தில் பட்டம், முது கலை பட்டம் என பல்வேறு விதமான படிப்புகளை முடித்த மாணவர்களுக்கு  வேலை வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசு வேலை என்பது கானல் நீராக மாறி வருகிறது.
கருநாடகாவில் வெளி மாநிலத்தவர்கள் அதிக எண் ணிக்கையில் வேலை பெறு வதை தடுக்கும் வகையில் சரோஜினி மகிசி ஆணையம் அமைத்து அதை செயல்படுத் துகிறார்கள். அதேபோல் நாகா லாந்து, அருணாச்சலபிரதேசம்  ஆகிய மாநிலங்களிலும் பிற மாநிலத்தவர் வேலைக்கு சேரு வதில் ஏராளமான நடைமுறை சிக்கல் இருப்பதாக கூறப் படுகிறது. எனவே அதுபோல் தமிழகத்திலும் புதிய சட்டம் கொண்டுவந்து தமிழக இளை ஞர்களுக்கு அதிகமாக  வேலை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

7.8 கோடி பேரின் ஆதார் தகவல் திருட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மீது புகார்

அய்தராபாத்தில் உள்ள தகவல் தொழில் நுட்ப (அய்.டி.) நிறுவனம் 7.8 கோடி நபர்களின் ஆதார் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் அய்தராபாதில் அய்.டி.கிரிட்ஸ் இந்தியா என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனம் ஆந்திரா, தெலங்கானாவைச் சேர்ந்த 7.8 கோடி நபர்களின் ஆதார் எண் விவரங்கள் அடங்கியுள்ள தகவல் பெட்டகத்தை சட்டவிரோதமாக பெற்றுள்ளது என புகார் எழுந்தது.
ஆந்திரா, தெலங்கானாவில் 8.4 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தொடர்பான செல்போன் செயலியைத் தயாரிக்க இந்த நிறுவனம் ஆதார் தகவல்களை சட்ட விரோத மாக எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தெலுங்கு தேசம் கட்சிக்காக சேவா மித்ரா ஆப் என்ற பெயரில் செல்போன் செயலியை உருவாக்கும் முயற்சியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
ஆதார் சட்டப்படி ஆதார் தகவல்களை எடுப்பது சட்ட விதிமீறல் ஆகும். ஆதார் தகவல்கள் வைத்துள்ள மத்திய ஆதார் தகவல் மய்யத்திலிருந்தோ அல்லது மாநில ஆதார் தகவல் மய்யத்திலிருந்தோ இந்தத் தகவல்கள் சம்பந்தப்பட்ட அய்.டி. கிரிட்ஸ் இந்தியா நிறுவனத்தால் திருடப்பட்டிருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஅய்டிஏஅய்) சார்பில் மாதாப்பூர் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அய்.டி.கிரிட்ஸ் இந்தியா நிறுவனம் மீது முதல் தகவல் அறிக்கை (எப்அய்ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
அநேகமாக இந்த வழக்கு சிறப்பு விசாரணைக்குழுவிடம் (எஸ்அய்டி) ஒப்படைக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மேலும் அய்.டி.கிரிட்ஸ் நிறுவனத்திலிருந்து கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்குகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த ஹார்ட் டிஸ்குகளில் மொத்தம் 7,82,21,397 பேரின் ஆதார் தகவல்கள் உள்ளன. இதில் உள்ள தரவுகளின் (டேட்டா) அளவுடன் ஒப்பிடும்போது, அது ஆதார் மய்யத்திலிருக்கும் தரவுகளின் அளவுடன் ஒத்துப் போகிறது.


இதுகுறித்து யுஅய்டிஏஅய் துணை இயக்குநர் டி.பவானி பிரசாத் கொடுத்துள்ள புகாரில் கூறும்போது, வாக்காளர் மனோநிலை பற்றி பகுப்பாய்வு செய்து அதற் கேற்ப பிரச்சாரத்தை திட்டமிட வாக்காளர்களின் விவரங்கள் மற்றும் ஆதார் தகவல்களை மித்ரா ஆப் பயன்படுத்தி வந்துள்ளனர். வாக்காளர்களின் விவரங்களும் திருட்டு வழியில் திரட்டப்பட்டுள்ளன என்பது விசாரணையில் தெரியவந்துள் ளது என்று கூறியுள்ளார்.

Monday, April 15, 2019

பா.ஜ.க. ஆட்சியில் சின்னஞ்சிறு ஊழல் கூட நடைபெறுவதில்லை: பிரதமர் மோடி பேச்சு


எட்டு வழிச்சாலை - 'நீட்', இரண்டிலும் தமிழகத்துக்கு எதிரான பி.ஜே.பி. - அ.தி.மு.க. அணியைத் தோற்கடிப்பீர்! திண்டிவனத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்


‘நீட்', எட்டுவழிச் சாலை என்ற தமிழ்நாட்டின் இரு முக்கிய பிரச்சினைகளிலும் தமிழர்களுக்கு எதிரான கருத்தைக் கொண்ட பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணியைத் தோற்கடிப்பீர் என்று கேட்டுக்கொண்டார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (15.4.2019) திண்டிவனத்திற்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  செய்தியா ளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று

தி.மு.க. - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
தெளிவாக இரண்டு அணிகளும் இரண்டு கொள்கைத் திட்டங்களை அறிவித்திருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், நம்முடைய பிள்ளைகள், கிராமத்துப் பிள்ளைகள் மருத்துவக் கல்லூரிக்கே போக முடியாத அளவிற்கு மிகப்பெரிய அளவிற்குத் தடையாக நீட் தேர்வு இருக்கிறது. அனிதாக்கள், சுபசிறீக்கள் போன்ற வர்களின் தற்கொலைகள் நடந்திருக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில், நீட் தேர்வை அறவே ரத்து செய்வோம் என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கை. அதையே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் மிகத் தெளிவாகவே பிரகடனப்படுத்தி விட்டார். ஆட்சியை அமைக்கக்கூடிய சூழ்நிலையில் இருக்கக்கூடியவர்களுக்கு இது தெளிவான திட்டம்.
தமிழக ஆட்சியாளர்களின்

முகமூடியைக் கிழித்த பியூஸ் கோயல்!
அதேநேரத்தில், இப்பிரச்சினை குறித்து மோடியிடம் கேட்டதற்கு, அவர் தெளிவாக, நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்.
பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக தமிழ்நாட்டுத் தேர்தல் பொறுப்பாளராக இருக்கக்கூடிய பியூஸ் கோயல் அவர்களும் மிகத் தெளிவாகவே, நீட் தேர்வை ரத்து செய்ய முடியாதது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அ.தி.மு.க.காரர்கள் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று எங்களிடம் கேட்கவேயில்லை; தமிழில் நீட் தேர்வை நடத்தவேண்டும் என்றுதான் கேட்டார்கள் என்று சொல்லி, இவர்களுடைய முகமூடியை கழற்றிக் காட்டிவிட்டார்.
அதோடு, தமிழகத்தில் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதைப்பற்றி அவர் சொல்லாதது, அவர்கள் எவ்வளவு பொறுப்பற்றவர்கள் என்பதைத் தெளிவாகக் காட்டக்கூடிய நிலை இருக்கிறது.
தமிழகத்தில் ஆளும் தரப்பினரை வைத்துக்கொண்டே இந்தத் தகவலை பியூஸ் கோயல் வெட்ட வெளிச்சமாக்கினார்.
எட்டுவழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுமாம் - மத்திய அமைச்சரின் உறுதிமொழி!
மேலும், அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க. நிறுவனர் இராமதாசு அவர்களை வைத்துக்கொண்டே எட்டுவழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி  சொல்லியிருக்கிறார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி அவர் இப்படி சொல்லியிருக்கிறார் என்றால், வாக்காளர்களே இவர்களின் இரட்டை வேடத்தைப் புரிந்துகொள்வீர்!
எனவே, வாக்காளர்கள் இப்பொழுது சிந்திக்கவேண் டியது என்னவென்றால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற அத்துணை வாக்காளர்களும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டுமா? வேண்டாமா? என்பதைத்தான்.
நீட் தேர்வு நம்முடைய மாணவர்களை எந்த அளவிற்கு உயிரைப் பலிவாங்கியிருக்கிறது!
எந்த அளவிற்கு அது மருத்துவக் கல்லூரிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழைகள் உள்ளே நுழைய முடியாத - கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கக்கூடிய பயிற்சி நிலையங்கள் பெயராலே இருக்கிறது என்பது எல்லோருக்கும் மிகத் தெளிவாகத் தெரியும்.
மத்திய - மாநில அரசுகளை

மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்!
இப்பொழுது தமிழ்நாட்டில் உள்ள பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து, கடைசியாக தஞ்சையில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கவிருக்கின்றோம். ஒன்றைச் சொல்லுகிறோம், எல்லா இடங்களிலும் மத்திய - மாநில அரசுகளையும் மே 23 ஆம் தேதிக்குப் பிறகு, மக்கள் - வாக்காளர்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள்.
இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் மட்டுமல்ல, வடபுலத்திலும் காஷ்மீர்முதல் இதே அலை அடித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான்.
தேர்தல் ஆணையம் மோடி அரசினுடைய ஓர் அங்கம்போல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது!
பணத்தால் வாக்காளர்களை விலைக்கு வாங்கலாம் என்று நினைத்துக்கொண்டு, பண விநியோகம் செய்கிறார்கள். அதை கண்டும், காணாததுபோல தேர்தல் ஆணையமே, ஏதோ அ.தி.மு.க. - மோடி அரசினுடைய ஓர் அங்கம்போல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. அது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
என்னதான் இவர்கள் பணம் கொடுத்தாலும், மக்களுடைய வெறுப்புணர்ச்சி அதையும் தாண்டி, உதயசூரியன் சின்னத்திலும், கை சின்னத்திலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சின்னத்திலும் வாக்களிப்பது உறுதி.
மக்கள் இந்த முறை ஏமாறுவதாக இல்லை
18 ஆம் தேதி தீர்ப்பு நாள் - அது தெளிவாக இருக்கும். மக்கள் இந்த முறை ஏமாறுவதாக இல்லை. எதைக் கண்டும் அவர்கள் ஏமாற மாட்டார்கள்.
வெற்றி, மாற்றம் என்பது அடுத்தபடியாக மத்தியில் ராகுல் காந்தி அவர்களுடைய தலைமையில் ஓர் ஆட்சி. மாநிலத்தில், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் ஆட்சி.
22 இடங்களில் நடைபெறவிருக்கக்கூடிய சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் உதயசூரியன் வெற்றி பெறும்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறினார்.

ரஃபேல்: தனி ஒருவராக பேரத்தில் ஈடுபட்ட மோடி


ஆங்கில நாளிதழில் வெளிவந்த ஆவணங்களின் படி தொடர்ந்து மத்திய பாதுகாப்புச் செயலகமும், இதர பாதுகாப்பு ஆலோசகர்களும் ரபேல் விமானம் வாங்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தனி ஒருவராக மோடியே இந்த ஒப்பந்தத்தை போட்டுள்ளது அம்பல மாகியுள்ளது.
உச்ச நீதிமன்றம் 2018 டிசம்பர் மாதம் ரஃபேல் பேர ஒப்பந்தம் தொடர்பாக வெளியிட்ட தீர்ப்பின் மறுபரி சீலனை மனுக்களை தற்போது மனுதாரர்கள் தாக்கல் செய்யலாம், அதன் படி விசாரணை நடைபெறும் என்று தீர்ப்பு கூறியிருந்தது.  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நடைபெற்ற ரஃபேல் பேர ஒப்பந்த விசாரணையில், சட்டத்திற்கு புறம்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும் உச்ச நீதி மன்றம் தீவிரமாக விசாரணை செய்யும் என்று தீர்ப் பளித்தது. பின்னர் மறு பரிசீலனை மனுக்களை ஏற்பது தொடர்பாகவும் தகவல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
ரஃபேல் ஆவணங்கள் தொடர்பான விசாரணை யில், இந்து நாளிதழ் வெளியிட்ட ஆவணங்களை பரி சீலனை செய்யக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக் கையை நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் மத்தியில் வரக்கூடாது என்று மத்திய அரசு விரும்பிய அந்த மூன்று ஆவணங்கள் என்னென்ன?
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி, 2015ஆம் ஆண்டு எழுதிய முக்கிய குறிப்பு. அதில் பிரதமர் அலுவலகம் சார்பில், பாது காப்புத்துறை அமைச்சராக இருந்த மறைந்த மனோகர் பரிக்கருக்கு எழுதப்பட்டதாகும். பாதுகாப்புத் துறை செயலாளர் ஜி.மோகன் குமார் பாதுகாப்பு அமைச்சரின் பார்வைக்கு, இது போன்ற ஆலோ சனையை தவிர்ப்பதின் மூலம் நம்முடைய பேரம் பேசும் சுதந்திர தன்மையை முற்றிலும் பாதிப்பிற்குள் ளாக்கிவிட்டது பிரதமர் அலுவலகம் என்று எழுதி யுள்ளார்.
துணைச் செயலாளார் எஸ்.கே.சர்மா செயலாளர் மோகன் குமாருக்கு எழுதிய கடிதத்தில் இந்திய பேரம் பேசும் குழுவில் இல்லாதவர்கள் நேரடியாக, ஒரே நேரத்தில், பிரான்ஸ் அதிகாரிகளுடன் பேசுவதை தடுத்து நிறுத்துமாறு நாம் பிரதமர் அலுவலகத்தில் முறையிடுவோம் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் நம்முடைய பேரக்குழுவில், எதிர்பார்ப்புகள் எட்டப்படாத பட்சத்தில் வேண்டுமானால் பிரதமர் அலுவலகம் இதில் தலையிட்டுக் கொள்ளட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த இரண்டு விண்ணப்பங்களுக்கும் பதில் கூறும் வகையில் அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், பிரதமர் அலுவலகமும், பிரான்ஸ் அதிகாரிகளும், நடைபெறும் பேரம் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தையும் மேற்பார்வையிட்டு வருவ தாக தெரிகிறது. அய்ந்தாவது பத்தி அளவுக்கதிகமான அர்த்தத்தை சுமந்து வருவது போல் இருக்கிறது. பாதுகாப்புத் துறை செயலாளர் இந்த பிரச்சினையை, பிரதமரின் உதவியாளரிடம்  பேசி சரி செய்வார். 5ஆவது பத்தி சர்மாவின் பார்வைக்கு என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய பேரம் பேசும் குழுவில் இடம் பெற்றிருந்த மூவர் தங்களின் மறுப்பு கடிதத்தை எழுதியுள்ளனர். ஜூன் 1, 2016 அன்று நடந்த நிகழ்வில் இந்த மறுப்பு அறிவிக்கப்பட்டது உறுதியானது. ஒரு குறிப்பிட்ட பேரத்தில் உள்ள 10 அம்சங்களை மறுத்துள்ளது இந்த மூவர் குழு என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புத் துறை அமைச்சகத்திற்கு இணையாக, மோடியே நேரடியாக விலை மற்றும் ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்தினார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அன்று செயல்பட்டது மற்றும் பேரக் குழுவில் தொடர்ந்தாற் போல் 10 அம்சங்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது போன்றவை தற்போது அம்பலமாகியுள்ளது.

ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு உச்சநீதிமன்றத்தை நாட எதிர்க்கட்சிகள் முடிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை 50 சதவீத ஒப்புகை சீட்டுகளுடன் (விவிபேட்) சரிபார்க்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
5 மாநில சட்டசபை தேர்த லில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகளவில் பழுதாகின. மேலும், மத்தியப் பிரதேசம், தெலங்கானாவில் பதிவானவாக்குகள்,எண்ணப் பட்ட வாக்குகளின் எண்ணிக் கையுடன் பொருந்தவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மக்களவைக்கு கடந்த வியாழக்கிழமை முதல்கட்ட தேர்தல் நடந்தது. அப்போது, ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. இதில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுநடந்ததாகஇம் மாநில முதல்வரும்,தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி னார். இது தொடர்பாக டில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை சந்தித்து முறையிட்டார். மேலும், ஆந் திராவில் பல தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.இந்நிலையில்,டில் லியில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உட்பட 21 கட்சிகளை சேர்ந்த தலைவர் களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பதி வாகும் வாக்குகளில் 50 சத வீதத்தை ஒப்புகை சீட்டுகளு டன் சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் வலியுறுத்தினர்.

கலைஞர் ஆட்சியில் தி.மு.க. சாதித்தது என்ன?

1.  போக்குவரத்துத் துறை என்ற துறையை உருவாக் கியது - கலைஞர்
2. போக்குவரத்தை தேசியமயமாக்கியது - கலைஞர்
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது - கலைஞர்
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது - கலைஞர்
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது - கலைஞர்
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது - கலைஞர்
7. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது - கலைஞர்
8.  பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மய்யம் அமைத்தது -கலைஞர்
9.  கையில் இழுக்கும் ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது - கலைஞர்
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோ ருக்குக் கொடுக்கும் திட்டம் வகுத்தது - கலைஞர்
11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன் றவை) கொண்டுவந்தது - கலைஞர்
12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது - கலைஞர்
13.  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக் கென துறை அமைத்தது - கலைஞர்
14. அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பை அமைத்தது - கலைஞர்
15.  அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடு - தாழ்த்தப்பட்டோருக்கு 18 விழுக்காடு ஆக உயர்த்தியது - கலைஞர்
16.  பி.யு.சி. வரை இலவசக்கல்வி உருவாக்கியது - கலைஞர்
17.  மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது - கலைஞர்
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது - கலைஞர்
19.  முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது - கலைஞர்
20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது - கலைஞர்
21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது - கலைஞர்
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது - கலைஞர்
23.  கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம் தந்தது - கலைஞர்
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது - கலைஞர்
25.  நில விற்பனை வரையறை சட்டம் அமைத்தது - கலைஞர்
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின் உற்பத்தி நெய் வேலி கொண்டுவந்தது - கலைஞர்
27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துக்குடி கொண்டுவந்தது - கலைஞர்
28. சிட்கோ உருவாக்கியது - கலைஞர்
29. சிப்காட் உருவாக்கியது - கலைஞர்
30. உருது பேசும் இசுலாமியர்களை பிற்படுத்தப்பட் டோரில் தமிழ் இசுலாமியர்கள் போல் சேர்த்தது - கலைஞர்
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டு வந்தது  - கலைஞர்
32. மனு நீதி திட்டம் தந்தது - கலைஞர்
33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது - கலைஞர்
34. பசுமை புரட்சி திட்டம் தந்தது - கலைஞர்
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட் டோரில் இணைத்தது - கலைஞர்
36. மிக பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது - கலைஞர்
37. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு தந்தது - கலைஞர்
38. தாழ்த்தப்பட்டோருக்கு 18 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு தந்தது - கலைஞர்
39. பழங்குடியினருக்கு 1 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு தந்தது - கலைஞர்
40. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது - கலைஞர்
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இலவச கல்வி இளங்கலை பட்டப்படிப்பு வரை தந்தது - கலைஞர்
42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது - கலைஞர்
43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தது - கலைஞர்
44.  சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது - கலைஞர்
45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு தந்தது - கலைஞர்
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம் அமைத்தது  -கலைஞர்
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது - கலைஞர்
48.  வா:ழ்க்கைத் துணை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது  - கலைஞர்
49. நேரடி நெல் கொள்முதல் மய்யம் தந்தது - கலைஞர்
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது - கலைஞர்
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது - கலைஞர்
52.  கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது  - கலைஞர்
53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது - கலைஞர்
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நிறுவியது - கலைஞர்
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுவியது  - கலைஞர்
56. டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி நிறுவியது  - கலைஞர்
57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் - கலைஞர்
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டு வந்தது - கலைஞர்
59. உள்ளாட்சி பதவிகளில் 33 விழுக்காடு பெண் களுக்கு இட ஒதுக்கீடு -  கலைஞர்
60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வரச் செய்தது - கலைஞர்
61. மெட்ராசை, சென்னையாக்கியது - கலைஞர்
62.  முதல் தடவை வாழ்க்கைத் துணை இழந்த பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் இடம் அளித்தது - கலைஞர்
63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது - கலைஞர்
64. முதல் தடவை வாழ்க்கைத் துணை இழந்த பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் - கலைஞர்
65. கான்கிரீட் சாலை அமைத்தது - கலைஞர்
66. தொழில்முறை கல்வியில் கிராமப்புற மாணவர் களுக்கு 15 விழுக்காடு இடஒதுக்கீடு செய்தது - கலைஞர்
67.  அய்யன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது - கலைஞர்
68. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது - கலைஞர்
69. செம்மொழி மாநாடு நடத்தியது - கலைஞர்
70.  சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது - கலைஞர்
71. பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்ட ணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர் - கலைஞர்
72. விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர் - கலைஞர். (2006-2011 வரை அய்ந்து ஆண்டுகளில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)
73. நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள் (வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற் கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தவர்  -கலைஞர்.
74. விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது அன்று (இன்றைக்கு எத்தனை பெயருக்கு பருப்பு, சர்க்கரை முழுமையாக கிடைக்கிறது????)
75. ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர்  - கலைஞர்.

6 மாதங்களில் பல வருமானவரி சோதனைகள் - பின்னணி என்ன?

6 மாதத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நடந்த 15 அய்டி சோதனைகள்.. அரசின் நடுநிலை தன்மை என்ன?
வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் நடுநிலையாக செயல்படவேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவு ரைக்குக் காரணம் கடந்த 6 மாதங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீடுகள் அவர் களுக்கு சொந்தமான இடங்கள் என 15 இடங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனை தான்.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகின்றன. அதற்காக, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடை யில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எதிர்கட்சித் தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
கருநாடகாவில் 5, தமிழ்நாட்டில் 3, ஆந்தி ராவில் 2, டெல்லியில் 2 , மத்திய பிரதேசம் 1, ஜம்மு காஷ்மீர் 1, உத்தரப்பிரதேசம் 1, இத் துடன் உத்தரகண்ட் மாநிலத்தில் இருக்கும் பிஜேபி தலைவர் வீட்டிலும் அய்டி சோதனை நடப்பதாக தகவல்கள் வெளி யாகின. பின்பு அதுக் குறித்து விசாரித்ததில் அவர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி காங்கிரசில் சேரப்போகிறார் என்ற தகவலும் கிடைத்தது. மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின், இந்தூரிலிலுள்ள முன்னாள் உதவியாளர் பிரவீன் காக்கர் டில்லியிலுள்ள கமல்நாத்தின் முன்னாள் ஆலோசகர் ராஜேந்திர குமார், கமல்நாத் உதவியாளர் வீடுகளிலும் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனைகள் தொடர்ந்தன.
அதனைத்தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் மற்றும் மிட்குர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சுதாகர் யாதவ் மற்றும் தெலுங்குதேசத் தலை வரும் தொழிலதிபருமான சி.எம்.ரமேஷ் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
கடந்த மார்ச் 29 ஆம் தேதி வேலூர் காட்பாடியில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரை முருகன் இல்லம் மற்றும் கல்லூரி, அவரது மகனின் பள்ளி மற்றும் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதே நேரத்தில் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் கருநாடக மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் போட்டியிடும் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியின் உதவியாளர் வீடு, பொதுப் பணித்துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் நண் பர்கள், நீர்ப்பாசன துறை அமைச்சர் சி.எஸ்.புட்டராஜூ வீடு, ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
அதே போல் கடந்த 6 மாதத்திற்கு முன்பு டில்லி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த கைலாஷ் காக்லோட் மற்றும் நரேஷ் பாலன் ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல் வரும் மாயாவதியின் முன்னாள் செயலாளரு மான நெட் ராம் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத் தியது. வருமான வரித்துறையினரின் இந்த சோதனையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. வருமான வரித்துறையின் சோதனை குறித்து கருநாடக முதல்வர் குமார சாமி கடந்த 28 ஆம் தேதி தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில்  வருமான வரிச்சோதனையின் மூலம் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மோடி திறந்துவிட்டுள்ளார். மோடியின் பழி வாங்கும் நடவடிக்கையை செயல்படுத்துவ தற்கு கருநாடக வருமானத் துறைத் தலைவர் பாலகிருஷ்ணாவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளது. தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளை சங்கடப்படுத்த ஊழல் அதிகாரிகள் பயன்படுகின்றனர் என்றார்.
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்திருந்தார். அதுமட்டுமில்லை தெலுங்கு தேச கட்சித் தலைவர்கள் வீட்டில் நடத்தப்பட்ட அய்டி சோதனைகளை எதிர்த்து தர்ணாவிலும் ஈடுபட்டார்.
தொடர்ந்து வருமான வரித்துறையினரின் அதிக அழுத்தம் மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத் பக்கம் திரும்பியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க. அரசின் இது போன்ற நட வடிக்கைகளை கண்டு நாங்கள் பயப்பட வில்லை. இவர்கள் என்னவெல்லாம் செய் வார்கள் என்பது எங்களுக்கு தெரிகிறது. எதையும் சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இதன் மூலம் எங்களை வெளியேற்றி விடலாம் என்று நினைக்க வேண்டாம். என் அரசியல் பணியை நான் மேலும் தொடர்வேன் என்றார்.
கடந்த சில ஆண்டுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் 2016 - 17 ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் 2,126 வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு அதில் 89 பேருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மொத் தமாக பிப்ரவரி 2018ஆம் ஆண்டு வரை கணக்கிட்டு பார்த்தால் 2016ஆம் ஆண்டில் 447 சோதனைகள், 2017ஆம் ஆண்டில் 1,152 ரெய்டுகள், 2018 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை 527 சோதனைகள். இதில் நடவடிக்கை எடுக்கப்பட்டது
'த இந்தியன் எக்ஸ்பிரஸ்' 10.4.2019

சமஸ்கிருதக் கல்வித் திணிப்பு

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் கல்விகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்த மத்திய மனிதவளத்துறை முடிவுசெய்துள்ளது. தற்போது சமஸ்கிருதத்திற்கென சிறப்பு வகுப்புகள் நடத்த அந்தந்த மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கத் திட்டம் உருவாகியுள்ளது.  இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்து அது செயல்வடிவம் பெற்றுக்கொண்டு இருக்கிறது.
2013ஆம் ஆண்டு மத்திய அரசு இதே போன்ற ஒரு முடிவை எடுத்த போது மருத்துவக் கவுன்சிலுக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த நிலையில் பாஜக ஆட்சிப் பதவிக்கு வந்த உடன் மருத்துவக் கவுன்சிலுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தும் அதிகாரம் வழங்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, பின்னர் 'நீட்' தேர்வு முறை வலுக்கட்டாயமாக அனைத்து மாநிலங்களிலும் திணிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 27 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதில் தமிழகத்தில் அரியலூர் அனிதா உட்பட 4 பேர் மரணமும் அடங்கும்.
இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் வித்யாபாரதி என்ற ஆர்.எஸ்.எஸ். கல்வி அமைப்பு மத்திய மனிதவளத்துறைக்கு 21 கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் ஒன்றைக் கொடுத்தது. இதில் மாநிலங்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் சமஸ்கிருத வகுப்புகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒன்று!
தற்போது அரியானா, குஜராத், மகாராட்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சமஸ்கிருதக் கல்வி வலுக் கட்டாயமாக போதிக்கப்பட்டு வருகிறது. (மகாராட் டிராவில் இந்தி மீடியம் அல்லாதவர்கள் சமஸ் கிருதத்தைக் கட்டாயம் படிக்கவேண்டும் என்ற விதிமுறை உள்ளது) அதாவது மராட்டி மற்றும் ஆங்கில முறையில் படிப்பவர்கள் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக எடுக்கவேண்டும் என்று உள்ளது.
குஜராத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் அனைத் திலும் முதலாம் வகுப்பிலிருந்து சமஸ்கிருதப் பாடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று அரசு சுற்ற றிக்கை விட்டுள்ளதாக செய்தி வெளியிடப் பட்டிருந்தது.   பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களிலும் இது விரிவு படுத்தப்படுவதாகவும், முக்கியமாக சமஸ்கிருத வகுப்புகள் சுமையாக இல்லாமல் மாலை நேர சிறப்பு வகுப்பாக நடத்தலாம் என்றும், மாநில அரசுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய மனிதவளத்துறை உடனடியாக செய்து தருமென்றும் தேர்தல் முடிந்த பிறகு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப் படவுள்ளது.  (தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்போம்!)
முன்பு மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 3 ஆவது பாடமாக சமஸ்கிருதம் கற்பிக்கப்பட இருப்பதாக வந்த செய்தியை மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் மறுக்கவில்லை, மாறாக முன் னாள் தேர்தல் ஆணையரும், இன்றைய மத்திய அரசின் சமஸ்கிருத மேம்பாட்டுக் கழகத்தின் தலை வருமான என்.கோபால்சாமி அய்யங்கார் "சமஸ் கிருதம் மூன்றாவது மொழிப்பாடமாகக் கொண்டு வந்தால் நல்லது என்றுதான்  கோரிக்கை விடுத் திருந்தேன்" என்று எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்பதை ஒப்புக்கொண்டார்.
இவர் பிடிஅய் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த போது "சமஸ்கிருதம் -  அறிவியல், பொருளாதாரம், மருத்துவம் போன்ற துறைகளில் ஆய்வு செய்ய பொருத்தமான மொழி, இம் மொழியைக் கற்பவர்கள் தொழிற்கல்வியில் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது. ஆகவே மத்திய அரசு சமஸ்கிருத மொழியை அனைத்து மாணவர்களிடமும் கொண்டு சேர்க்க முயற்சி செய்யவேண்டும்"  என்று கூறியுள்ளார்.
நாட்டை இந்து மயமாக்க வேண்டும், இந்தியா இந்துக்களின் நாடு என்று கூறி வருபவர்கள் அதற்கான முதற்கட்ட நடவடிக்கையை எடுக்கும் விதமாக முதலில் சமஸ்கிருதக் கல்வியைத் திணிக் கிறார்கள் என்பது நினைவில் இருக்கட்டும்!
மீண்டும் மனுதர்மம், மீண்டும் பூணூல் ஆதிக்கம் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

இன்று அண்ணல் அம்பேத்கர் 128ஆம் ஆண்டு பிறந்த நாள்

பெரியார்- அம்பேத்கர் ஒத்த கருத்து!
பார்ப்பனர்களைப் பொறுத்த அளவில் இந்த நாட்டில் அன்னியர்களைப் போல்தான் நடந்து கொள்கிறார்கள். பார்ப்பனர் அல்லாத மக்களின் முட்டாள்தனமும் அறியாமையுமே பார்ப்பனர்களுக்கு தங்களின் மேலாண்மையை நிலை நிறுத்திக் கொள்ள போதுமானதாகி விட்டது. கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் அந்த மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தி பயமுறுத்தி தங்கள் அடிமைகளாகவே பார்ப்பனர்கள் வைத்திருக்கிறார்கள்.
இந்நிலை கண்டு கொதித்தெழுந்தவர்கள் தந்தை பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்கரும், அதனால்தான் இவர்கள் பார்ப்பனர் அல்லாதவர்களின் மூடநம்பிக்கை களைக் களையப் பாடுபட்டதோடு பார்ப்பனர்கள் அன்னியர்களே என்றும் நமக்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தவறாமல் வலியுறுத்தி வந்தார்கள்.
பெரியார் அவர்கள், “ஆங்கிலோ இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டு பார்ப்பனர்களும், ஆங்கிலோ - இந்தியர்கள் நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்தானே, ஆனால் அவர்களுக்கே சற்றாவது நம் நாட்டு உணர்ச்சி இருக்கிறதா? நமது மக்களைப் பார்த்து, “டேய், டமில் மனுஷா’’ என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வரலாற்றை அறியாமல் தாம் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு வந்து குடியேறியது போல ஜாதி ஆணவத்துடன் அல்லவா நடக்கிறார்கள்?
அதைப் போலவே இந்நாட்டுப் பார்ப்பனர்களும் மேல் நாட்டில் இருந்து வந்து குடியேறிய ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும் கூட ஆரிய ஜாதி முறைகளையும், அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம் மைக் கீழ் ஜாதிகளாக அடிமைகளாக மதித்து நடத்துகிறார்கள்.
(‘குடிஅரசு’ 29.5.1949)
பாபாசாகேப் அவர்களும் தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களையும் அவமானங்களையும் ஏன் இப்படி என்று ஆராய்ச்சி செய்து இதற்கெல்லாம் அடித்தளம் பார்ப்பனர்களே என்றும் நமக்கு சம்பந்தமில்லாத அன்னியர்கள் என்றும் கண்டறிந்தார்.
அவர், “இந்தியாவில் பார்ப்பனர்கள் தம்முடைய படிப்பறிவில்லாத நாட்டு மக்களை நிரந்தர அறியாமையிலும் வறுமையிலும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு தத்துவத்தைக் கண்டுபிடிக்க தங்கள் அறிவை ஒழுக்கக் கேடான செயலுக்கு பயன்படுத்தியது போல் உலகில் எந்தவொரு அறிவார்ந்த வகுப்பினரும் செய்யவில்லை. ஒவ்வொரு பார்ப்-பனரும் அவர்களின் மூதாதையர் கண்டுபிடித்த தத்துவத்தை இன்றளவும் நம்புகின்றனர்.
இந்து சமூகத்தால் பார்ப்பனர்கள் அன்னியர்களாகக் கருதப்படுகின்றனர். பார்ப்பனர்களை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள் மற்றும் தீண்டப்படாத மக்களை நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் - இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல்-நாட்டினர் போல்தான் தோன்றுவர்.
ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அது போலவே பார்ப்பான் அடிமை வகுப்பினர்களான சூத்திரர்களுக்கும் தீண்டத் தகாதவர் களுக்கும் அன்னியனாவான். இவர்களுக்கு அன்னியன் மட்டும் அல்ல. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான்’’
(காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதவர்-களுக்கு செய்ததென்ன? நூலிலிருந்து)
ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளைக்காரன் என்னோடு கை குலுக்குகிறான். தொட்டுப் பேசுகிறான். ஆனால், அடுத்த தெருவில் உள்ள பார்ப்பான் என்னைப் பார்த்தால், தொட்டால் தீட்டு என்கிறான். என்னைத் தொட்டுப் பேசுகிற வெள்ளைக்-காரன் அன்னியனா, பார்த்தால் தீட்டு என்கின்ற பார்ப்பான் அன்னியனா என்று பெரியார் கேட்டதும் பார்ப்பான் ஓர் அன்னியனே என்பது விளங்கும்.

மோடி ஆட்சியின் சாதனையோ சாதனை!

871 உயிர் காக்கும் மருந்துகளின் விலை உயர்வு! - அமலுக்கு வந்தது
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வலி நிவாரண மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளிட்ட அத்தியா வசிய மருந்துகளின் விலை அதிகரித்துள்ளது.
மருந்து விலை கட்டுப் பாட்டுச் சட்டம் 2013-இன் படி, ஆண்டுக்கு ஒருமுறை அத்யாவ சிய மருந்துகளுக்கான அதிக பட்ச சில்லறை விலையை ((MRP)) மருந்து உற்பத்தியா ளர்கள் மாற்றி அமைத்துக் கொள்ளமுடியும். மருந்துகளின் மொத்த விற்பனை அடிப்படை யில், மருந்துகளின் விலையை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியும். இதற்கு அரசின் அனுமதி தேவையில்லை.
அந்த வகையில், 2019-&2020ஆ-ம் நிதியாண்டுக்கான மருந்துகளின் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அத்தி யாவசிய மருந்துகளுக்கு 4 சதவிகிதமும், இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட் டவர்களுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளுக்கான விலை 4.26 சதவிகிதமும் அதிகரிக்கப் பட்டுள்ளது.  அதன்படி, இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்கும் பகுதியில் பொருத் தப்படும் மருந்து சேர்க்கப்பட்ட ஸ்டென்டின் விலை 30,080 ரூபாயும், மருந்து சேர்க்கப் படாத உலோக ஸ்டென்ட்டின் விலை 8,261 ரூபாயும் அதிகரிக் கப்பட்டுள்ளது.


இது தவிர, 871-க்கும் அதிக மான அத்தியாவசிய மருந்து களின் விலை உயர்த்தப்பட் டுள்ளது. மருந்துகள், ஸ்டென்ட் டுக்கான புதிய விலை, ஏப்ரல் 1ஆ-ம் தேதியன்று அமலுக்கு வந்தது.

Saturday, April 13, 2019

பெண்களே, என்ன செய்ய உத்தேசம்?



பிஜேபி ஆட்சியில் 2016ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எகிறிக் குதித்து இருக்கின்றன.


சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திலும் நான்கு பெண்கள் வன்புணர்வு கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அரசின் தேசியக் குற்றப் பதிவேடு நிறுவனம் அதற்குப்பிறகு புள்ளி விவரங்கள் வெளியிடுவது நிறுத்தப்பட்டுவிட்டது.


'பாரத மாதாக்கி ஜே!' போடும் இந்த பா.ஜ.க. ஆட்சியில் பாரத மாதா புத்திரிகளுக்குத்தான் இந்த வன்கொடுமை!


பெண்களே  உங்கள் வாக்கு யாருக்கு? சிந்திப்பீர்! செயல்படுவீர்!

கு.மூர்த்திகளை அணுகலாம்

தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் திமுக அணியே  வெற்றி பெறும் என்று 'துக்ளக்'கே கருத்துக் கணிப்பை வெளியிட்டுவிட்டது.

இதை மாற்றிட ஏதாவது குறுக்குவழி தேட வேண்டாமா? கு. மூர்த்திகளின் மூளை வேலை செய்யாதா?


யார் யாரையோ பிடித்து பத்திரிகையாளர் சந்திப்பு - கோயில்களில் கூட்டம் என்ற பூணூல் வேலையில்  'பாவம்' ஈடுபட்டுக் கொண்டுள்ளார். இன்றுகூட ஆதின கர்த்தர் களின் - செய்தியாளர்களின் சந்திப்பாம். எல்லாம் இந்த கணக்குப் பிள்ளையின் 'திருவிளையாடல்'தான். வேறு யாருக்காவது குறுக்கு வழியில் விளம்பரம் வேண்டுமா? இந்தத் திருவாளரை அணுகலாம் - பசைக்கும் பஞ்சமில்லை. என்னதான் செய்தாலும் விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை மட்டும் பிழைக்கவே பிழைக்காது. 'துக்ளக்' கருத்துக் கணிப்பே சாட்சி!

'நீட்'டை எதிர்ப்பது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி, 'நீட்'டை ஆதரிப்பது பிஜேபியின் கூட்டணி

வாக்காளர்களே உங்கள் வாக்கு யாருக்கு? 



திமுக - காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிஜேபி தேர்தல் அறிக்கையில் 'நீட்' கண்டு கொள்ளப்படாதது ஏன்? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 'நீட்' நடந்தே தீரும் என்று தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசியிருக்கிறார். 'நீட்'டை ரத்து செய்வோம் என்று ஒப்புக்குக் கூறும் அஇஅதிமுக., பா.ம.க. உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் வாய்த் திறக்காதது ஏன்? வாக்காளர்களே, சமுகநீதி காக்க திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கே வாக்களிப்பீர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காங்கிரஸ் கட்சி, திமுக அமைத்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி.

மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இந்தியா வின் அனைத்து மாநிலங்களிலும் தேர்தலில் போட் டியிடும் உண்மையான அகில இந்திய கட்சி காங்கிரசே!

தற்போது அதனிடம் 6 மாநிலங்களில் மாநில ஆட்சிகள் உள்ளன. பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் கர்நாடகா, புதுச்சேரி ஆகியன.

பிரதமர் மோடி ஆட்சியினால் பாதிக்கப்படாத மக்களே நம் நாட்டில் இல்லை என்பதே யதார்த்தமான நிலை! விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள்,  அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள்,  மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினரின் ஒட்டு மொத்த வேதனையால் வெறுப்பிற்கு ஆளாகியுள்ள நிலையில், இந்த அரசை, மே 23ஆம் தேதிக்கு மேல் விடைகொடுத்து அனுப்ப காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாக்காளர்கள் தயாராகிவிட்டார்கள்.

மோடி வித்தை எடுபடாது!

'மோடி வித்தைகள்' இனி எடுபடாது. ஒப்பனைகள் கலைந்து உண்மைகள் உலா வரத் தொடங்கிவிட்டன.

சமூகநீதியில் அறவே நம்பிக்கையற்ற அமைப்புதான் ஆர்எஸ்எஸ். முன்பு பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத் 'இட ஒதுக்கீட்டை ஒழிப்போம்' என்று பேசி, அதனால் தோல்வி விஸ்வரூபம் எடுப்பதைக் கண்டு பின் வாங்கி, தலைகீழ் பல்டி அடித்து, இட ஒதுக்கீடு தேவைதான் என்று வெற்றிகரமான வாபஸ் என்ற நாடகத்தை நடத்திக் காட்டினார்.

அதுபோலவே பற்பல விஷயங்களில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது தான் அவர்களது வாடிக்கை.

சமுகநீதியை ஒழிக்கவே 'நீட்' தேர்வு

ஆனால் அவர்கள் 'நீட்' தேர்வைத் திணிப்பது சமுக நீதியை ஒழிப்பதற்கே!

குறிப்பாக தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள், சிறு பான்மையினருக்குத் தாராளமாக, ஏராளமாகக் கிடைக் கும் வகையில் மானமிகு தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, 30 மாவட்டங்களில், 29 அரசு மருத்துவக் கல்லூரிகளை (சகல வசதிகளுடன்) மாவட்டந்தோறும் ஏற்படுத்தி, கிராமத்து ஆண், பெண் பிள்ளைகள் படிக்க வாய்ப்பை ஏற்படுத்தினார்.

நுழைவுத் தேர்வை ரத்து செய்த போது,  முறைப்படி நிபுணர்கள் குழுவினை நியமித்து, பரிந்துரை பெற்று, தனிச் சட்டத்தை நிறைவேற்றி, நீதிமன்றங்கள் ஏற்கும் வகையில் சிறப்பாகச் செய்தார்.

அதனைக் கண்ட பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தின் மூலமும், ஏனைய ஆதிக்க வர்க்கத்தினரும், ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளும், மருத்துவக் கவுன்சிலில் ஊழல் செய்த கேத்தன் தேசாய் என்பவரும் (அவர் வீட்டில் கட்டிகட்டியாய் தங்கத்தை புலனாய்வுத்துறை எடுத்தது எல்லாம் 'அம்போ'வானது - இப்போது அவரே நீட் தேர்வுக்குத் தந்தை ஆகிவிட்டார்) சேர்ந்து நீட் தேர்வைத் திணித்துவிட்டனர்.

'நீட்'டும் கொள்ளையும்!

'நீட்' தேர்வுக்கு ஆயத்தம் என்ற பெயரால் பல கோடி வருமானம் ஈட்டும் கார்ப்பரேட் கம்பெனிகளின் சுரண்டல் ஒரு புறம் அமோகமாக நடைபெறுகிறது.

'தகுதி', 'திறமை' என்ற கொடுவாளால் நமது ஒடுக்கப் பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிக மதிப்பெண் வாங்கியும், மருத்துவக் கல்லூரியில் இடம்பெறாது உயிர்ப் பலி வாங்கப்பட்டுள்ளனர்.

செல்வி அனிதா, பிரதீபா, சுபசிறீ மற்றும் பெற் றோர்கள் எல்லாம் உயிரிழந்த கொடுமை மறக்க முடியாதது!

நீட் தேர்வினால் இந்த மண்ணின் பிள்ளைகளுக்கு இடமில்லை. தேர்வு எழுதக் கூட வெளி மாநிலத்திற்கு விரட்டியதெல்லாம் வெந்த புண்ணில் வேலைச் சொருகும் கொடுமை!

இதனை எதிர்த்து திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும், ஆதரவாளர்களும்தான் கடந்த மூன்று ஆண்டுகளாகப் போராடுகின்றனர்.

சமுகநீதியில் உண்மையான அக்கறையுள்ள கட்சிகளை திராவிடர் கழகம் ஒன்று திரட்டியது!

'நீட்'  ஒழிப்பில் திமுக - காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளின் ஒற்றுமை
மாநிலத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஒரு முக்கிய வாக்குறுதியாகத் தரப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இது உறுதி கூறப்பட்டுள்ளது.

12.04.2019 அன்று தேனியில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழ்நாடு, மற்ற மாநிலங்களில் நீட்டை விரும்பாதவர்கள் மீது திணிக்க மாட்டோம்; ரத்து செய்வோம் என்று தெரிவித்து விட்டார்.
ஆனால் ஒப்புக்காக அ.தி.மு.க.வும், அதனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள பா.ம.க போன்ற 'நீட் தேர்வு கூடாது என்று கூறும் கட்சிகளின் நிலைப்பாடு இப்போது அம்பலமாகி விட்டது. பா.ஜ.க.வின் தலைவர்கள், பிரதமர் மோடி, தமிழ்நாட்டுப் பொறுப்பாளர் பியுஷ் கோயல் என்ற மத்திய அமைச்சர் ஆகியோர் நேற்று (12.4.2019) நீட் தேர்வு பற்றி கூறியுள்ளது, அதிமுகவின் இரட்டை வேடத்தைக் கலைத்து, முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டது.

அவர்களது நிலைப்பாடு, மீண்டும் ஆட்சிக்கு மோடி - பாஜக, ஆர்எஸ்எஸ் வந்தால் நீட் தேர்வு தொடரவே செய்யும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்களே!

இதற்கு இந்த கல்லுளிமங்கன்கள் -  "அதிமுக இடம் பெற்றுள்ள பாஜக கூட்டணியின் கொத்தடிமைகள்" என்ன பதில் கூறப் போகிறார்கள்?

இரட்டை வேடம் அம்பலம்!

பிரதமரைப் பார்த்து 'தினத்தந்தி' செய்தியாளர் எடுத்த பேட்டியில், "எனக்குத் தமிழ்நாட்டின் பிரச்சினை தெரியும். பாஜக தேர்தல் அறிக்கையில் பதில் கூறியுள்ளோம்" என்று மற்ற ஏதேதோ கூறி, பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை கூறியதைப் போல மழுப்பினாலும், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றே கூறி விட்டார். (நீட் தேர்வு விலக்கு பற்றி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவேயில்லை என்பதைத் தான் அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார்)

அதைவிட, பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுத் தேர்தல் பொறுப்பாளரும், அமைச்சருமான பியுஷ் கோயல், நீட் பற்றி கூறிய பதில் அதிமுகவை சரியாக அடையாளம் காட்டிக் கொடுத்து விட்டது.

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.

"அதிமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய கேட்க வில்லையே, தமிழில் எழுத வேண்டும் என்று தான் கேட்டார்கள்" என்று கூறி, "இவர்களை ஒப்புக்கொள்ளச் செய்வோம்" என்றும் கூறியுள்ளார்.

இதில் யார் அண்டப்புளுகர்? யார் ஆகாசப்புளுகர்?

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களின் கதி என்னவாயிற்று?

நிர்மலா சீதாராமன் முதல் பொன்.ராதாகிருஷ்ணன் வரை தந்த ஏமாற்று வாக்குறுதிகள் மறந்துவிட்டனவா?

தமிழ்நாட்டு வாக்காளர்களே, வாக்களிக்கும் முன் புரிந்து கொள்வீர்!
மோடியும், பா.ஜ.க, ஆர்எஸ்எஸ்சும், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று கூறியுள்ளனர். ராகுல்காந்தி மற்றும்திமுக கூட்டணி நீட் தேர்வை ரத்து செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர்.

இரண்டு அணியின் நிலைப்பாடுகளும் தெரிந்து விட்ட நிலையில் - வேஷம் போட்ட அதிமுக பாமக நரிகளின் நிலைப்பாடு என்ன?
எனவே வாக்காளப் பெருமக்களே!

தி.மு.க. கூட்டணிக்கே வாக்களிப்பீர்!

இந்த கொத்தடிமை அணியை படுதோல்வி அடையச் செய்து, இனி தமிழ்நாட்டில் அனிதாக்களின், பிரதிபாக்களின் சுபசிறீக்களின் தற்கொலை மீண்டும் தொடராமல் இருக்க, திமுக கூட்டணிக்கே வாக்களிப்பீர்!

கி. வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...