Showing posts with label மத்திய பிஜே.பி. அரசு. Show all posts
Showing posts with label மத்திய பிஜே.பி. அரசு. Show all posts

Saturday, April 13, 2019

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு தொங்கு சதை அ.தி.மு.க. அரசு நீடிக்கலாமா?

* 2015 டிசம்பரில் சென்னை வெள்ள பாதிப்புக்கு ஆளானபோது (18 பேர் உயி ரிழப்பு) நிவாரணத் தொகையாகத் தமிழ்நாடு அரசு கேட்ட தொகை ரூ.13,731 கோடி; மத்திய பிஜே.பி. அரசு கொடுத்ததோ வெறும் 1940 கோடி ரூபாயே!
* 2011 டிசம்பரில் வர்தா புயலின்போது (38 பேர் உயிரிழப்பு) அ.தி.மு.க. அரசால் மத்திய அரசிடம் கேட்கப்பட்ட நிவாரண நிதி ரூ.22,537 கோடி. மத்திய பி.ஜே.பி. அரசு கொடுத்ததோ ரூ.266.17 கோடி மட்டும்தான்.
* 2017 நவம்பர் ஒக்கிப் புயலின்போது- (600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போயினர்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 238) இந்த இழப்பிலிருந்து மீள அ.தி.மு.க. அரசு கேட்ட தொகை ரூ.13,520 கோடி. ஆனால், மோடி அரசு தூக்கிப் போட்ட தொகையோ வெறும் 280 கோடி ரூபாய்.
* 2018 நவம்பரில் ஏற்பட்ட கஜா புயலால் (உயிரிழப்பு 63 பேர் - விவசாய நிலங்கள் அழிவு 88 ஆயிரம் ஹெக்டர் பரப்பு) பாதிக்கப்பட்டதற்காக மத்திய அரசிடம் அ.தி.மு.க. அரசு கோரிய தொகை ரூ.15 ஆயிரம் கோடி. மத்திய பி.ஜே.பி. அரசு பிச்சைக் காசாக எறிந்த தொகையோ ரூ.1,146 கோடி.
* 2017 இல் ஏற்பட்ட வறட்சிக்காக தமிழ்நாடு அரசு கேட்ட நிதியோ ரூ.39,655 கோடி. மத்திய மோடி அரசு கிள்ளிக் கொடுத்தது எவ்வளவு தெரியுமா? ரூ.1748 கோடியே!
தமிழ்நாட்டு வாக்காளர்களே, தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கும் மோடியின் பி.ஜே.பி. அரசு மீண்டும் வரலாமா?
முதுகெலும்பு இல்லாமல் பி.ஜே.பி.யின் தொங்கு சதையாக இருக்கும் அ.இ.அ.தி.மு.க. அரசுதான் நீடிக்கலாமா?

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...