Showing posts with label - நமது சிறப்புச் செய்தியாளர். Show all posts
Showing posts with label - நமது சிறப்புச் செய்தியாளர். Show all posts

Monday, October 23, 2017

போராட்ட வீரர் பட்டியலும், ‘விடுதலை’ சந்தாக்களும் போட்டிப் போட்டுக் கொண்டு குவிந்த கடலூர் பொதுக்குழு





கடலூர், அக்.22- திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு கடலூர் முதுநகர் நகர அரங்கத்தில் 21.10.2017 சனியன்று காலை சரியாகக் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கப்பட்டது. பொதுக்குழு - மாலைப் பொதுக்கூட்டத்தையொட்டி நகரமெங்கும் கழகக் கொடிகள் சாலையின் இருமருங்கிலும் அசைந்தாடி கருஞ்சட்டைக் கடலே வா என்று அன்பழைப்பை விடுத்த வண்ணம் இருந்தன!
கடலூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி தலை வர் முனியம்மாள் கடவுள் மறுப்புக் கூறக் கூட்டம் தொடங்கப் பட்டது.
கடலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தென்.சிவக்குமார் தன் வரவேற்புரையில், தந்தை பெரியார் பிறந்தது ஈரோடு என்றால், தந்தை பெரியாருக்குப் பின் அவர்தந்த இயக்கத்தையும், கொள்கையையும் கட்டிக் காக்கும் தலைவர் ஆசிரியர் பிறந்தது இந்தக் கடலூர் என்ற பெருமையோடு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த திராவி டர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள், யார்நன்றிதெரிவித்தாலும்தெரிவிக்காவிட்டாலும்அரசுப் பணியாளர்கள் தந்தை பெரியாருக்கும், திராவிடர் கழகத் துக்கும், ‘விடுதலை’க்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளனர்.
அரசுப் பணியாளர்களுக்கு இருந்த இரகசிய குறிப் பேட்டை ஒழித்தது இந்த இயக்கம்தானே என்று குறிப்பிட்டார். (மாவட்ட வருவாய்த் துறை அதிகாரியாகவும், மாநில என்.ஜி.ஓ. சங்கத் தலைவராகவும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
பொதுச்செயலாளர் அன்புராஜ்
மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவுக்கும், இப்பொதுக் குழுவுக்கும் இந்த எட்டு மாத இடைவெளியில் கழகத்தின் செயல்பாடுகள், போராட்டங்கள், மாநாடுகள் பற்றியும், கழகத் தலை வரின் சுற்றுப் பயண விவரம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங் களையும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன் முன்மொழிந்தார்.
கருஞ்சட்டைஎப்படிதிராவிடர்கழகத்துக்குஅடை யாளமோ அதைப் போன்றதுதான் ‘விடுதலை’ சந்தாதா ரராக இருப்பதும் என்று கூறி அனைவரும் ஓர் உறுதிமொழியை எடுப்போம் என்று கூறினார்.
தோழர்கள் எடுத்த உறுதிமொழி
திராவிடர் கழகத் தொண்டனாகிய உறுப் பினராகிய நான் கருஞ்சட்டை அணிவதை எப்படி என் கடமையாகவும், கழக உறுப்பினர் என்பதற்குச் சான்றாகவும் கருதுகிறேனோ, அதைப் போன்றதே ‘விடுதலை’ சந்தாதாரர் என்பதும் கழகத்தின் அடையாளமாகவும், அங்கீகாரமாகவும் கருதுகிறேன். ‘விடுதலை’ சந்தாதாரராக ஆகியே தீருவேன் என்று 55 ஆண்டுகாலம் ‘விடுதலை’ ஆசிரியராக இருக்கும் நமது தலைவர் அவர்களின் பிறந்த ஊராகிய கடலூரில் கூடியிருக்கும் இந்தப் பொதுக்குழுவில் உறுதிமொழி எடுக்கிறேன், உறுதிமொழி எடுக்கிறேன் -  என்று துணைத் தலைவர் சொல்லச் சொல்ல, அனைத்துத் தோழர்களும் எழுந்து நின்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
உறுதிமொழி எடுத்தவுடன், கழகத் தலைவர் ‘விடுதலை’ ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தனக்குரிய ஓராண்டு ‘விடுதலை’ சந்தாவை கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் அளித்தார் (பலத்த கரவொலி). கழகத் துணைத் தலைவரும் ஓராண்டு சந்தா தொகையினை ஆசிரியரிடம் அளித்தார். தொடர்ந்து கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் ‘விடுதலை’ சந்தாவுக்கான தொகையை அளித்த வண்ணம் இருந்தனர்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களைக் கழகத் தலைவர் சந்தித்தார். (அதன் விவரம் நேற்றைய ‘விடுதலை’யில் காண்க).
பொதுக்குழு தொடர்ந்து கொண்டு இருந்தது. கழக மகளிர்ப் பாசறை மாநில செயலாளர் செந்தமிழ்ச் செல்வி கழக மகளிர்ப் பாசறையின் செயல்பாட்டை அறிக்கைமூலம் தாக்கல் செய்தார். (மற்ற மற்ற அணியினரும் இம்முறையைப் பின்பற்றுவதுநலம்).
‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ என்னும் தந்தை பெரியார் அவர்களின் புரட்சிகர அறிவுக்கருவூலமான நூலினை நாடெங்கும் கொண்டு செல்லும் பொறுப்பினை நிறைவேற்றுவதில் மகளிர்ப் பாசறையினர் பெரும் பேறாகக் கருதுகிறோம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வெளியுறவுத் துறை செயலாளர் வீ.குமரேசன்
உலகம் முழுவதும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா இவ்வாண்டு கொண்டாடப்பட்ட நேர்த்தியினை விவரித்தார். ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டின் சிறப்பினையும் சிறப்பாக எடுத்துக் கூறினார்.
மாநில கழக அமைப்பாளர் இரா.குணசேகரன்
மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் தன் உரையில், திராவிடர் மாணவர் கழகத்தின் அமைப்புப் பணிகளை விரிவாகக் கூறினார். மாணவர்கள் கழகத்தை நோக்கி ஆர்வமாக வரும் தருணம் இது. இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கோ.கருணாநிதி கருத்துரை
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள்பால் நாட்டம் மிகுந்து காணப்படும் இந்தக் காலகட்டத்தில், கிராம அளவில் இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்க்கப்படவேண்டும். சமூக வலைதளங்களை நாம் கண்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய பருவம் இது. இதற்கென்று ஓர் அமைப்பை ஏற்படுத்தி செயல்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டார்.
டாக்டர் பிறைநுதல் செல்வி
‘விடுதலை’தான் நமது போர் ஆயுதம். அது எந்த அளவுக்குப் பரவுகிறதோ, அந்த அளவுக்கு நற்பயன் ஏற்படும். ஒவ்வொரு கழகத் தோழரும் 5 சந்தாக்களுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்
இவர் தனது உரையில், ஆசிரியர் அவர்கள் கடலூருக்குக் கிடைத்த பெரும் பேறு! இனி ‘விடுதலை’ சந்தாக்களை நாம் கேட்டுப் பெறும் நிலை இருக்கக்கூடாது. தாங்களாகவே சந்தாக்களை செலுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு,
எங்கள் மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில், வருகை தந்த கழகத் தலைவருக்கும், தோழர்களுக்கும் அன்பு கனிந்த வரவேற்பினை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இன்று நாம் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்றியே தீருவோம் என்றார்.

உறுதிமொழி எடுத்தவுடன், கழகத் தலைவர் ‘விடுதலை’ ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தனக்குரிய ஓராண்டு ‘விடுதலை’ சந்தாவை கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் அளித்தார் (பலத்த கரவொலி). கழகத் துணைத் தலை வரும் ஓராண்டு சந்தா தொகையினை ஆசிரியரிடம் அளித்தார். தொடர்ந்து கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் ‘விடுதலை’ சந்தாவுக்கான தொகையை அளித்த வண்ணம் இருந்தனர்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களைக் கழகத் தலைவர் சந்தித்தார். (அதன் விவரம் நேற்றைய ‘விடுதலை’யில் காண்க).

பொதுக்குழு தொடர்ந்து கொண்டு இருந்தது. கழக மகளிர்ப் பாசறை மாநில செயலாளர் செந்தமிழ்ச் செல்வி கழக மகளிர்ப் பாசறையின் செயல்பாட்டை அறிக்கைமூலம் தாக்கல் செய்தார். (மற்ற மற்ற அணியினரும் இம்முறையைப் பின்பற்றுவதுநலம்).

‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ என்னும் தந்தை பெரியார் அவர்களின் புரட்சிகர அறிவுக்கருவூலமான நூலினை நாடெங்கும் கொண்டு செல்லும் பொறுப் பினை நிறைவேற்றுவதில் மகளிர்ப் பாசறையினர் பெரும் பேறாகக் கருதுகிறோம் என்று பெருமிதத் துடன் குறிப்பிட்டார்.

வெளியுறவுத் துறை செயலாளர் வீ.குமரேசன்

உலகம் முழுவதும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா இவ்வாண்டு கொண்டாடப்பட்ட நேர்த்தியினை விவரித்தார். ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத் தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டின் சிறப்பினையும் சிறப்பாக எடுத்துக் கூறினார்.

மாநில கழக அமைப்பாளர் இரா.குணசேகரன்

மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் அவர்கள் தன் உரையில், திராவிடர் மாணவர் கழகத்தின் அமைப்புப் பணிகளை விரிவாகக் கூறினார். மாணவர்கள் கழகத்தை நோக்கி ஆர்வமாக வரும் தருணம் இது. இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கோ.கருணாநிதி கருத்துரை

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி அவர்கள், தந்தை பெரியார் அவர் களின் கருத்துகள்பால் நாட்டம் மிகுந்து காணப்படும் இந்தக் காலகட்டத்தில், கிராம அளவில் இளைஞர் களிடம் கொண்டு போய் சேர்க்கப்படவேண்டும். சமூக வலைதளங்களை நாம் கண்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய பருவம் இது. இதற்கென்று ஓர் அமைப்பை ஏற்படுத்தி செயல்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டார்.

டாக்டர் பிறைநுதல் செல்வி

‘விடுதலை’தான் நமது போர் ஆயுதம். அது எந்த அளவுக்குப் பரவுகிறதோ, அந்த அளவுக்கு நற்பயன் ஏற்படும். ஒவ்வொரு கழகத் தோழரும் 5 சந்தாக் களுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்

இவர் தனது உரையில், ஆசிரியர் அவர்கள் கடலூருக்குக் கிடைத்த பெரும் பேறு! இனி ‘விடுதலை’ சந்தாக்களை நாம் கேட்டுப் பெறும் நிலை இருக்கக் கூடாது. தாங்களாகவே சந்தாக்களை செலுத்த முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு,

எங்கள் மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில், வருகை தந்த கழகத் தலைவருக்கும், தோழர்களுக்கும் அன்பு கனிந்த வரவேற்பினை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இன்று நாம் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்றியே தீருவோம் என்றார்.


போராட்ட வீரர் பட்டியல் குவிந்தது

ஜாதி ஒழிப்புப் போராட்டமான இந்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது (1957, நவம்பர் 26). 60 ஆண்டு நிறைவு பெறும் நாளில் - வரும் நவம்பர் 26 ஆம் தேதியன்று ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரும் மாபெரும் மாநாடு வரும் நவம்பர் 26 ஆம் தேதியன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது.

மாநாட்டில் பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகள், இதில் நம்பிக்கையுள்ள சமயம் சார்ந்த பெருமக்கள் எல்லாம் பங்குகொள்ள இருக்கின்றனர்.

அந்த மாநாட்டில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்படும். அதற்கான போராட்ட வீரர் பட்டியலோடு வருக என்று கழகத் தலைவர் ஏற்கெனவே ‘விடுதலை’யில் அறிவித்ததற்கிணங்க ஒவ்வொரு மாவட்டமாக மேடைக்கு வந்து கழகத் தலைவரிடம் மாவட்டப் பொறுப்பாளர்கள் அளித்த வண்ணமேயிருந்தனர். அப்பணி முடிய வெகுநேரமாயிற்று. அந்தத் தருணம் வெகு உணர்ச்சிகரமாகவே இருந்தது.

ஆண்களைவிட பெண்கள் அதிகம் பங்குகொள்ள வேண்டும் என்று கழகத் தலைவர் சொன்னபோது, ஒரே ஆரவாரம்!

முக்கிய அறிவிப்புகள்

15 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்கள் - டிசம்பர் 2 இல், ஈரோட்டில்.

15 ஆயிரம் ‘உண்மை’ சந்தாக்கள் - இளைஞரணி - மாணவரணி - ஏப்ரல் - மே மாதங்களில் அளிக்கப்படும் - இடம்: வேலூர்.

15 ஆயிரம் ‘பெரியார் பிஞ்சுகள்’ - மகளிரணி - மகளிர்ப் பாசறை - அம்மா பிறந்த நாளாகிய மார்ச் 10 இல் அளிக்கப்படும் இடம்: கோவை.

15 ஆயிரம் ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ சந்தாக்கள் - பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அளிக்கப்படும் இடம்: மதுரை.

- கடலூர் பொதுக்குழுவில் கழகத் தலைவர் அறிவிப்பு



பொதுக்குழுவின் தேன் துளிகள்...



நமது கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் படித்த செயின்ட் டேவிட் மேனிலைப் பள்ளியின் தாளாளர் ஞானக்கண் செல்லப்பா எம்.ஏ., அவர்கள், பலத்த கரவொலிக் கிடையே ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

வேலூர் மாவட்ட மகளிரணி தோழர் தேன்மொழி அவர்களின் 50 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கழகத் தலைவருக்குச் சால்வை அணிவிக்கப்பட்டது. கழகத் தலை வர் தேன்மொழிக்குச் சால்வை அணிவித்தார்.

திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகம் பற்றி வீடியோ காட்சிகள் திரையிடப்பட்டன.

40 அடி பீடத்தில் 95 அடி உயரமுள்ள தந்தை பெரியார் முழு உருவச் சிலை நிறுவப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது; அதில் ஒரு திருத்தம். 40 அடி உயரப் பீடத்தில் 148 அடி உயரத்தில் தந்தை பெரியார் சிலை (188 அடி) நிறுவப்படும் என்பதுதான் அந்தத் திருத்தம். இந்தக் காட்சி கழகத் தோழர்களைச் சிலிர்க்க வைத்தது.

அமெரிக்கா, கானா, மலேசியா முதலிய நாடுகளில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்கள் இவ்வாண்டு வெகுசிறப் பாகப் போட்டிப் போட்டுக்கொண்டு நடந்தவை படக் காட்சிகளாகக் காட்டப்பட்டன.

ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டின் மூன்று நாள் நிகழ்ச்சிகளின் சுருக்கம் திரையிடப்பட்டது. மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பின் குரல் கொடுத்திருந்தார்.

ழு கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் ‘விடுதலை’ சந்தா தாரராக ஆகவேண்டும் என்று கட்டளைத் தீர்மானம் நிறை வேற்றப்பட்ட நிலையில், முதல் சந்தாவை கழகத் தலைவர் அளிக்க, தோழர்கள் ஒவ்வொருவராக போட்டிப் போட்டுக் கொண்டு ‘விடுதலை’ சந்தாக்களை அளித்த வண்ணம் இருந்தனர்.

ஆசிரியர் கி.வீரமணி, கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு, முனைவர் துரை.சந்திரசேகரன், மதுரை எடிசன் ராஜா, மதுரை வே.செல்வம், திருவாரூர் எஸ்.எஸ்.எம்.காந்தி, தஞ்சை ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், காரைக் குடி சாமி.திராவிடமணி, ரெங்கநாதன், ராசகிரி கோ.தங்கராசு, திருப்பத்தூர் விஜி இளங்கோவன், திருப்பத்தூர் சிற்றரசு, விழுப்புரம் சுப்பராயன், சி.கிருஷ்ணவேணி, வெற்றிவேந்தன், அண்ணா சரவணன், வடலூர் கருணாமூர்த்தி, வடலூர் ரமா பிரபா, தாராசுரம் வை.இளங்கோவன், திட்டக்குடி பன்னீர் செல்வம், வடக்குத்து இரா.கண்ணன், தஞ்சை வழக்குரைஞர் அமர்சிங், புதுச்சேரி முகேஷ், மதிமணியன், தகடூர் தமிழ்ச் செல்வி, ஊமை.செயராமன், தஞ்சை அய்யனார், புதுச்சேரி கோ.கிருஷ்ணராஜ், மும்பை இரவிச்சந்திரன், கிருட்டிண கிரி துக்காராம், தாம்பரம் ப.முத்தையன், கருப்புச்சட்டை ஆறுமுகம், புதுவை துளசி ராமன், காஞ்சி டி.ஏ.ஜி.அசோகன், திருத்தணி வழக்குரைஞர் மாமணி, சென்னை வீ.குமரேசன், ஜி.கே.கிருஷ்ணமூர்த்தி (ரூ.5000) மேலும் தோழர்கள் வந்தனர் - நேர நெருக்கடியால் நிறுத்தப்பட்டது.

ழு திருச்சியில் ஜனவரி 2018 இல் நடக்கவிருக்கும் உலக நாத்திகர் மாநாட்டிற்குத் திராவிடர் கழக செயலவைத் தலை வர் சு.அறிவுக்கரசு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்தார்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...