Friday, April 27, 2018

பா.ஜ.க. என்றால் பச்சைப் பாசிசமே!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்முறை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. சிறுமி கொலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பா.ஜ.க. அமைச்சர்கள் மற்றும் நிர் வாகிகள் பங்கேற்றது - குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது பா.ஜ.க. ஆதரவு வழக்குரைஞர்கள் போராட்டம் மேற் கொண்டது - பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விசா ரணையில் ஈடுபட்ட அதிகாரிகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள்.
இவ்வழக்கில் மிகவும் தீவிரமாகவும், உன்னிப்பாகவும் செயல்பட்ட காவல்துறையின் பெண் அதிகாரி ஸ்வேதம் பரி சர்மா, குற்றவாளிகளை அடையாளம் காணுவதில் இருந்து, அவர்களை சிறையில் அடைப்பது வரையில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டவர் ஆவார். விசாரணையின் போது அவர் எதிர்கொண்ட பிரச் சினைகள் தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
செய்தியாளர்:- இந்த வழக்கை நீங்கள் வெளிக் கொண்டு வந்து உள்ளீர்கள், குற்றவாளிகள் சிறையில் உள்ளார்கள். ஆனால் நீங்கள் தொடர்ந்து இலக்காக் கப்பட்டு வருகிறீர்கள். இது உங்களை எப்படி பாதிக்கிறது?
ஸ்வேதாம்பரி:- 21-ஆம் நூற்றாண்டிலும் பாலியல் வன்முறை போன்ற சம்பவங்கள் நடைபெறுவது உண்மையில் மிகவும் வெட்கக்கேடானது. பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்பதுதான் பிரதமர் மோடியின் முழக்கமாக உள்ளது, ஆனால் படித்த பெண், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதிக்காகப் போராடும்போது அவமதிக்கிறார்கள். என்னுடைய தீர்மானத்தில் நான் உறுதியாக இருக்கிறேன், நீதித்துறையின்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
செய்தியாளர்: வழக்கில் உண்மையை வெளிக் கொண்டு வருவது எவ்வளவு கடினமானதாக இருந்தது?
ஸ்வேதாம்பரி:-இதுபோன்ற வழக்குகளில் ஒருநபரால் மட்டும் உண்மையை வெளிக்கொண்டு வருவது என்பது கிடையாது. எங்களுடைய டிஜிபி எஸ்.பி. வாயித்   முக்கிய மான பணியை மேற்கொண்டார். சிறப்புப் புலனாய்வுப் பிரிவின்மீது நம்பிக்கை கொண்டு இருந்தார். எங்களுடைய டிஎஸ்பியின் வழிகாட்டுதலின்படி செயல் பட்டோம். எங்களுடைய குழுவில் 6 பேர் இடம்பெற்று இருந்தோம். எஸ்எஸ்பி கண்காணித்தார். இந்த வழக்கைத் தீர்ப்பதில் ஜம்மு காஷ்மீர் குற்றப்பிரிவு இரவு, பகலாகப் பணியாற்றியது. நாங்கள் சம்பவம் தொடர்பாக ஆதாரங்களை சேகரிக்கச் சென்ற போது தாக்குதலுக்கு உள்ளானோம்.  நாங்கள் இந்த வழக்கில் 72 நாட்களில் குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்தோம். நாங்கள் ஒவ்வொரு நாளும் பிரச்சினையை எதிர்கொண்டோம். பாலியல் வன்முறை குற்றவாளிகளை காப்பாற்ற இந்திய தேசியக்கொடியை அசைத்தது என்னை ஓர் அதிகாரியாக மிகவும் வேதனையடையச் செய்தது. மக்கள் எங்களுடன் பேசுவதற்கு அச்சப் பட்டார்கள். அவர்களை தைரியப்படுத்த முயற்சி செய்தோம், குற்றம் செய்யாதவர்கள் பயப்பட தேவை யில்லை என அவர்களுக்கு ஊக்கமளித்தோம். செய்தியாளர்:- இந்த வழக்கு எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது? ஸ்வேதாம்பரி:- எங்களுடைய முதல்கட்ட குற்றப் பத்திரிக்கை தயாராகிவிட்டது, துணை குற்றப்பத்திரிக்கை ஒன்று நிலுவையில் உள்ளது. எங்களுடைய வழக்கு மிகவும் உறுதியாக உள்ளது. வாக்குமூலங்கள் அடிப் படையில் மட்டும் கிடையாது, அறிவியல் சான்றுகளால் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. செய்தியாளர்:-  இந்த வழக்கில் சிலர் மத சம்பந்தமான விஷயங்களையும் வெளியிடுகிறார்கள். இது உங்களை எப்படி உணரச்செய்கிறது?
ஸ்வேதாம்பரி:- நான் டோக்ரா வம்சத்தை சார்ந்தவள். எல்லா மகளும் எல்லோருக்கும் மகள்தான் என்று சொல்வோம். நாங்கள் எல்லா மதங்களையும் சார்ந்தவர்கள். சிறுமியின் மதநம்பிக்கை பற்றி நான் எதையும் கருத்தில் கொள்ளவில்லை. முதலில் மனிதராக இருப்போம், பின்னர் இந்துவா அல்லது இஸ்லாமியரா என்பது பற்றி யோசிப்போம் என்று கூறியுள்ளார். காவல்துறை அதிகாரியின் மேற்கண்ட கருத்துக்களும், தகவல்களும் பிஜேபி கூட்டணி ஆளும் ஜம்மு காஷ்மீரின் நிலையைப் பட்டவர்த்தனமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
பாலியல் வன்முறைக்  கும்பலுக்குத் தேசியக் கொடி அசைத்து மரியாதையாம்! இதைவிடத் தேசியக் கொடியை எப்படிதான் அவமதிக்க முடியும்?
பச்சைப் பாசிசத்தின் மறுபெயரே பா.ஜ.க. - இந்துத்துவா எச்சரிக்கை.
இந்தச் சூழலில் துணிவாகச் செயல்படும் காவல்துறை அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்களே

உலகப் புத்தக நாள்

உலக புத்தக தினம் உலகெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அய்ரோப்பாவில் வாழ்ந்த தலை சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதால் இந்த நாளை உலக, புத்தக தினமாகக் கொண்டாட தேர்ந்தெடுத்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி, வரலாறுகள் பற்றி அறிந்து விழிப்புணர்வு பெறுவதற்குப் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக விளங்குகிறது. இதனால், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளைப் போற்றும் வகையில் ஏப்ரல் 23ஆம் தேதியை உலக புத்தக தினமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூலக உரிமை, உலகில் உள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் அவரவர் தாய்மொழியில் பெறுதல், தத்தமது தாய் மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்துதல், புத்தகங் களுக்கும், வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட 10 கட்டளைகளை அனைத்து நாடுகளிலும் நிறைவேற்றுவதன் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்க முடியும். மேற்கூறிய 10 கட்டளைகளையும் நிறைவேற்ற உறுதி ஏற்கும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக நடப்புகளில் நூல்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது, எது தெரியுமா? ஒரு நூல் மனிதருக்கு நன்மை தருமாயின் அந்த நன்மையினால் பாதிக்கப்படும் கூட்டம் தனக்கென்று சில பொய்யான கருத்துக்களைப் பரப்பி அதையே மெய்யெனச் சொல்லிவரும்.    இன்றைய வேதம், புராணம் மற்றும் மேற்கத்திய மத நூல்கள் இதற்கு எடுத்துக்காட்டாகக் கிளம்பின.
இந்தியாவை எடுத்துக்கொண்டால் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பவுத்த எழுச்சியின் காரணமாக மக்கள் மூடநம்பிக்கை இருளிலிருந்து விலகிப் புத்துணர்ச்சி பெற்றனர்.
இதன் மூலம் மக்கள் அறிவுடைமை மற்றும் வாழ்வியல் விழிப்புணர்வைப் பெற்றனர். இதற்கு முக்கிய காரணம் பகுத்தறிவுக் கருத்துக்கள் அடங்கிய நூல்கள் எளிய மொழியில் மக்களிடையே அதிகம் பரவியதுதான்.  இன்று கூட மதுரை அருகே உள்ள அரிட்டாபட்டி என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் சடங்குகளால் எந்த ஒரு நன்மையுமில்லை என்ற சொல் உள்ளதை காண்கிறோம், அரிட்டாபட்டியில் பவுத்த துறவிகள் சங்கம் ஒன்று முன்பு இருந்ததை பல ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.  இதன்படி அப்போதைய அறிவார்ந்த நூல்கள் சமய சடங்குகளைக் கடுமையாக எதிர்த்து வந்தன. குறள் 2500 ஆண்டுகளுக்குமுன் இதற்காகக் குரல் கொடுத்தது. அறிவார்ந்த சமூகம் உருவாவதைத் தடுத்து நிறுத்த பொய்களைக் கூறும்  புனைச் சுருட்டுகள் மதத்தின் முகத் திரையோடு நூல்களாக வெளி வரத் தொடங்கின. இந்தியாவில் எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு அறிவார்ந்த நூல்கள் அழிக்கப்பட்டன.  ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களால் அந்த நூல்கள் அழித்தொழிக்கப்பட்டன. நூல்களை எழுதியவர்கள் சாகடிக்கப்பட்டனர். குறிப்பாக இந்தியாவில் பவுத்தம் அழிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் நாளாந்தா பல்கலைக் கழகம் எரியூட்டப்படவில்லையா?
இலங்கையில் புகழ் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் தீயூட்டப்பட்டது. மேற்கத்திய நாடுகளிலும் அறிவியல் நூல்களை எழுதியவர்கள்  தீக்கிரையாக்கப்பட்டுக் கொல்லப் பட்டனர் - தூக்கிலிடப்பட்டனர். ஆனால் மதநூல்களின் கருத்துக்களைப் பரப்பியவர்களுக்கு புதிதாக கண்டுபிடிக் கப்பட்ட தீவுகள் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டன. அவர்களின் நினைவாக பல நகரங்களுக்குப் பெயர் சூட்டப்பட்டதுமுண்டு. ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை மீண்டும் ஒரு கற்காலத்திற்கு நாடு சென்றுகொண்டு இருக்கிறது. பகுத்தறிவு கருத்துக்களை தொடர்ந்து எழுதிவரும் நரேந்திர தாபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி, கடந்த ஆண்டு அக்டோபரில் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் போன்றவர்கள் கொல்லப்படு கின்றனர். அறிவார்ந்த நூல்கள் தேடித்தேடி அழிக்கப் படுகின்றன. ஆளும் அரசியல்தலைவர்கள் மடமைக்குள் ளாக்கும் நூல்களை மக்களிடையே பரப்பும் செயல்களைச் செய்கின்றனர்.  இன்று உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாள் கொண்டாடும் நோக்கமே இந்தியாவில் சிதைந்து வருகிறது.
தந்தை பெரியாரோ பகுத்தறிவு நூற் பதிப்புக் கழகம் கண்டார். இலண்டன் ஆர்.பி.ஏ. வெளியிட்ட பகுத்தறிவு நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடச் செய்தார். இந்தியாவிலேயே முதன் முதலாக  மார்க்ஸ் - எங்கல்ஸ் அறிக்கையை மொழி பெயர்த்து குடிஅரசில் வெளியிட்டவர் தந்தை பெரியாரே!
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை நிறுவனம் இந்த நூல் வெளியீட்டில் மிகப் பெரும் சாதனையைப் படைத்து வருகிறது.
இந்த நிறுவனம்  வெளியிடும் நூல்கள் பொருளாதார லாப நோக்கம் கொண்டவையல்ல; இன்னும் சொல்லப் போனால் இந்தளவுக்கு மலிவாக யாரும் விற்பதில்லை.
தந்தை பெரியாரின் நூல்கள் பல மொழிகளிலும் கொண்டு வரப்பட்டுள்ளன. நூல்கள் பரப்புதலை ஓர் இயக்கமாகவே இது நடத்தி வருகிறது. மேலும் விரிவாக்கத் திட்டங்கள் தயாராகி வருகின்றன.
தமிழ்நாட்டில் நடக்கும் புத்தகக்கண்காட்சிகளில் எல்லாம் அரங்கங்களை வாடகைக்கு எடுத்து இந்நூல்கள் வெகு மக்களைச் சென்றடையச் செய்வதில் வேகம் காட்டி வருகிறது.
புத்தகச் சந்தைகளையும்  நடத்தி வருகிறது. நூல்கள் வாசிப்பைப் பெருக்கி - பகுத்தறிவுச் சிந்தனைகளைச் சுவாசிக்கச் செய்வோம்.


உலகப் புத்தக நாளில் இந்த உன்னத உறுதிமொழியை மேற்கொள்வோம்!

இந்துமதப் பிரசாரம்

இந்து மதம் என்பது ஒரு போலி மதம் என்றும், ஒரு கொள்கையும் அற்றதென்றும், பார்ப்பனர்களின் வாழ்வுக்கும் வயிற்றுப் பிழைப்புக்குமே கடவுளின் பெயராலும், முனிகள் பெயராலும், ரிஷிகள் பெயராலும் பல ஆபாசங்களையும் சுயநலக் கொள்கைக ளையும் கற்பனை செய்து அவற்றைப் பாமர மக்கள் நம்பும்படி பல மிரட்டுதலான நிபந் தனைகளை ஏற்பாடு செய்து அவைகள் நிலைப்பதற்குத் தகுந்த தந்திரங்களும் சூழ்ச்சிகளும் செய்து வருகிறார்கள் என்றும் அதை அறியாமல் பல தமிழ் மக்களும் சைவம் என்றும் வைணவ மென்றும் அர்த்தமற்ற சில கடவுள்களின் பேரால் சமயங்கள் என்பதாக வகுத்துக் கொண்டு சிவன், விஷ்ணு என்னும் பெயர்கள் உடைய பல கடவுள்கள் இருப்ப தாகவும் அவர்கள் பல ரூபங்களாகவும், பல அவதாரங்களாகவும் இருப்பதாகவும், அவற்றை வணங்குவதும், துதிபாடுவதுமே சைவ, வைணவ கொள்கையென்றும் வைத்துக் கொண்டு அதன் மூலம் பார்ப்பனர்கள் சூழ்ச் சிக்கு இடம் கொடுத்து வரப்படுகின்றது என்றும் நாம் பல தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கின்றோம். இதுவரையில் நம் நாட்டில் இதைப்பற்றித் தக்க காரணம் காட்டி மறுத்தோ அல்லது சமாதானமோ யோக்கியமான வழி யில் சொல்லவோ எழுதவோ இல்லை.
ஆனால் குருட்டு நம்பிக்கையிலும் மூட வழக்கங்களிலும் பலமாக கட்டுப் பட்ட சிலரும், மதத்தின் பேராலும் சமயத்தின் பேராலுமே தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொண்ட சிலரும் கொஞ்சமாவது தங்கள் பகுத் தறிவை உபயோ கிக்காமலும் பொது ஜனங்க ளுக்கு என்ன சமாதானம் சொல்லுவது, எப்படி மெய்ப்பிப்பது என்பதைப் பற்றி கவலைப்படா மலும் பார்ப்பனர்கள் தங்கள் கற்பனைப் புரட்டு களை நிலைநிறுத்த ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருப்பதான நாஸ்திக மாச்சுது மதம் போச்சுது கலிகாலத்தின் கொடுமை என்கின்ற யோக்கிய மற்றதும், வஞ்சகமும், கொடுமையும் நிறைந்ததுமான ஆயுதங்களை உபயோகித்து ஏமாற்றப் பார்க்கின்றார்களே ஒழிய ஒரு வழியி லாவது சரிப்பட்டு வருகின்றதில்லை. சமீபகால மாக சில சைவர்கள் என்போர்கள் நம்மைப் பற்றி காணாத இடங்களில் சைவத்திற்கு பெரிய ஆபத்து வந்துவிட்டது எல்லோரும் உஷார் உஷார் என்பதும் ஏதாவது அர்த்தமற்றதும் பாமரர்களுள் ஏமாறத்தக்கது மான வார்த்தை களை அடுக்கித் துண்டு விளம்பரங்கள் போடு வதும் அதை சில வயிற்றுப் பிழைப்பு பத்திரி கைகளும் தனக்கென யாதொரு கொள்கையு மற்ற சமயம் போல் நடந்து உயிர் வாழ்வையே முக்கியப் பிழைப்பாய்க் கொண்டிருக்கும் பத்திரிகைகளும் ஆசாமிகளும் நாயக்கர் பிரச் சாரம், என்று விஷமத் தலைப்பின்கீழ் எடுத்துப் போடுவதும் மற்றும் தாங்களே தங்கள் பேரால் எழுதுவதற்குத் தைரியமற்று ஏதோ பல அனாம தேயங்களின் பேரால் நாயக்கர் மதத்தை அழிக் கப் பார்க்கின்றார், நாஸ்திகத்தை பிரசாரம் செய்கின்றார் என்கின்ற மாதிரி எழு துவதுமான காரியங்கள் நடந்து வருகின்றது.
நிற்க, சிவனைப் பற்றியும் சிவனைக் கட வுளாகக் கொண்ட சைவ சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும் அதில் உள்ள புரட்டுகளைப் பற்றியும் அதுபோலவே விஷ் ணுவைப் பற்றியும் விஷ்ணுவைக் கடவுளாகக் கொண்ட வைணவ சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும் நாம் குறிப்பிடும் விஷயங்களைப் பற்றி மததூஷணை தெய்வ நிந்தனை என்று பேசிவிட்டு எழுதிவிட்டு தங்கள் தங்கள் சமயத்தைப் பற்றி பேசும்போதும் அதைப் பெருமைப்படுத்தி நினைக்கும் போதும் சைவன் வைஷ்ண வத்தையும் விஷ் ணுவையும், வைணவன் சைவத்தையும் சிவ னையும் எவ்வளவு தூரம் இகழ்ந்தும், இழி வாயும் ஆபாசமாயும் வேதத்தின் பேராலும் உபநிடதத்தின் பேராலும் புராணங்களின் பேராலும் எழுதியும் பேசியும் வருகின்றார்கள் என்பதைப் பார்ப்போமானால் இதுவரை நாம் பேசியும் எழுதியும் வந்தது அவற்றில் பதினாயி ரத்தில் ஒருபங்குகூட இருக்காது என்றே சொல்லுவோம். உதாரணமாக, சிவ பராக்கிரமம் என்னும் புத்தகமும், கூரேச விஜயம் என்னும் புத்தகமும், ராமாயணம், பாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், கந்த புராணம், பெரியபுரா ணம், திருவிளையாடல் புராணம், அருணாசல புராணம், விநாயக புராணம் என்னும் சமய புராணங்களும் ஆகியவைகளை நடுநிலையில் இருந்து படித்துப்பார்ப்பவர்களுக்கு இதன் உண்மைகள் விளங்காமல் போகாது. நாம் சொல்வதும் எழுதுவதும் ஒவ்வொன்றும் மேற் கண்ட சமய ஆதாரங்களாகி பல புத்தகத்தில் சிவன் சொன்னதாகவும், விஷ்ணு சொன்னதா கவும், பிரம்மா சொன்னதாகவும், முனி சொன்ன தாகவும் ரிஷி சொன்னதாகவும் உள்ள விஷ யங்களையே குறிப்பு காட்டி எழுதியும் சொல்லி யும் வருகின்றதோடல்லாமல் நம்மை எதிர்க்கும் சில புரட்டர்கள் சொல்வதுபோல் அதற்கு இதல்ல அருத்தம் இது சையன்சுக்குப் பொருத் தம் இது படியாத முட்டாளின் கருத்து இது குண்டர் களின் வேலை ஆராய்ச்சியில்லாத வர்களின் கூற்று என்பதான அயோக்கியத் தனமும், போக்கிரித்தனமும், பேடித்தனமும், இழிதகைமையும் பொருந்தியதான சமாதானங் களை ஒருபோதும் சொல்ல முன் வருவதே இல்லை.
அன்றியும் நாம் சொல்லும் விஷயங்களைச் சமயத்தைக் காக்க வந்ததாகச் சொல்லிக் கொள் ளும் வைணவ சைவ பக்தர்கள் சொல்லுவதை யும் எடுத்து இரண்டொரு உதாரணங்கள் காட்டுவோம்.
தற்சமயம் நமது பிரசாரத்தைப் பற்றி வைணவர்களைவிட சைவர்களுக்குத் தான் அதிக ஆத்திரமாக இருக்கின்றது. அவர்களுக் குத்தான் எங்கு அவர்கள் சைவசமயம் போய் விடுமோ என்கின்ற பயம் அதிகமாய்ப் பிடித்து ஆட்டி மதம் போச்சு மதம் போச்சு என்கின்ற பொய்யழுகை அழுகின்றார்கள். அவர்கள் தான் நாம் மிகுதியும் சமய நிந்தனை செய்வதாக கூப்பாடு போடுகின்றார்கள். வைணவர்களில் பெரும்பான்மையோர் இதைப் பற்றி அதிக கவலை எடுத்துக் கொண்டதாகத் தெரிய வில்லை. ஒரு சமயம் நம்மை எதிர்க்கத்தக்க ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் இப்போது வெளிப் படையாய் ஒன்றையும் காணோம்.. சமீபத்தில் வைணவன் என்கின்ற ஒரு பத்திரிகை நம்மைப் பற்றி குற்றம் சொல்லப் புறப்படுகையில் ராமா யணத்தைப் பற்றி நாம் எழுதியவைகளில் தனக் குச் சற்று மனத்தாங்கல் இருப்பதை மாத்திரம் காட்டிக் கொண்டதே ஒழிய அது சரியா தப்பா அல்லது பொய்யா என்பதைப்பற்றி ஒரு வார்த் தையும் சொல்ல முன்வர (இஷ்டமில்லையோ அல்லது தனக்குச் சக்தி இல்லையோ) வில்லை. ஆனால் கடைசியாக அப்பத்திரிகை சொன்ன சமாதானம் என்ன வென்றால் இராமாயணத் தைக் காட்டிலும், பன்மடங்கு ஆபாசமான நூல்கள் பல இருக்கின்றன என்றும், இராம னைக் காட்டிலும் ஆபாசமான நடை உடைய கடவுளர் பல இருக்கிறார்கள். அவ்வாபாசங் களைக் குறித்து இவ்வாராய்ச்சிக்காரர் ஒரு வார்த்தையேனும் கூற முன்வரவில்லை. இராமாயணம் மட்டும் இவர்கள் கண்களில் உறுத்திக் கொண்டிருக்க காரணம் என்ன என்று கேட்டு இருக்கிறாரே ஒழிய மற்றபடி ஒரு மறுப்பும் சமாதானமும் காணவில்லை. அதற்கு நாம் அவருக்குச் சொல்லும் பதில் மற்ற நூல் களுடையவும், கடவுள்களுடையவும் ஆபா சங்கள் அதனதன் முறையில் தானாக வெளி வரும்.  இதிகாசங்கள் என்கின்ற தலைப்பு இரா மாயணத்திற்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல. வரி சைக் கிரமமாய் எல்லா ஆபாசங்களுக்கும் ஏற் பட்டது என்பதும் இராமா யணத்தை முதலில் எடுத்துக் கொண்டதற்குக் காரணம் அதை பார்ப்பனர்கள் அதிகமாக நமது மக்களின் தலையில் சுமத்தி தினமும் அதற்காக அனேக நேரமும், பொருளும் செலவாவதும் அதனால் பார்ப்பனர்கள் கொள்ளையடிப்பதும் அதிகமா யிருப்பதினால் அதை முதலில் எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுந்தான்.
சைவர்களின் மதப்பிரசாரத்தைப் பற்றியும் சிலவார்த்தை சொல்லுவோம்.
நாம் நாட்டுக்கோட்டை நகரத்திற்குப் போய்வந்த பிறகு அங்குள்ள சில நேயர்கள் ஒன்றுகூடி அவர்களுடைய சைவசமயத்திற்கு நம்மால் பெரிய ஆபத்து வந்துவிட்டதாகவும் உடனே அதற்குத் தக்க முயற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால் சைவ சமயமே முழுகிப் போகும் என்றும் கருதி பல ஆயிர ரூபாய்கள் ஒதுக்கி வைத்து சிவநேசன் என்பதான ஒரு பத்திரிகை ஆரம்பித் தார்கள். அப்பத்திரி கையை இந்து மதத்தைக் காப்பாற்ற புறப்பட்ட தாகச் சொல்லி மக்களிடையே பரப்பினார்கள். அதன் முதலாவது ஆண்டு பதினாலா வது மலர் அனுபந்தத்தில் கோபிசந்தனம் என்னும் தலைப்பில் ஒரு சைவ சித்தாந்த செல்வர் எழுதுவதாவது:
தேவர்கள் முதலிய யாவரும் விபூதியை தரித்து மோட்சமடைய வேண்டும் என்னும் கருத்தினாலேயே கடவுள் மனிதனின் நெற் றியை குறுக்காகவே படைத்திருப்பதை யாவ ரும் காணலாம்.
இதற்கு ஆதாரம் கூர்ம புராணத்தில் சொல் லியிருப்பதானது ஸ்ருஷ்டா ஸ்ருஷ்டி சலே ராஹர்தி புண்டசஸ்ய ரசஸ்த தாம, ஸஸர் ஜசலலாடம் ஹித்ரியக் கோர்த்துவம், நகர்த் துலம் ததாபி மாவை மூர்க்கா நகுர்வந்தித்ரி புண்டாரகம்.
அதாவது பிரம்மா சிருஷ்டி தொடங்கும் போதே விபூதி மகிமை கூறி அதனை அணிந்து உய்வதற்காகவே சர்வசனங்களின் நெற்றி களையும் குறுக்கே ஆகிர்தியாகப் படைத்தனர். நெடுமையாகவேனும் வட்டமாக வேனும் படைத் திலர், அப்படியிருக்க சிலர் அவ்விபூதி திரிபுண்டா மணியாமல் தீவினை வயப்பட்டு உழலுகிறார்கள் என்று விளங்குதலால் அறிய லாம் என்கிறார்.
இனி கோபி சந்தனத்தைப்பற்றி வாசுதேவ உபநிஷத்தில் வாசுதேவன் மகன் அதாவது கிருஷ்ணன் கூறுவதாவது.
கிருஷ்ணன் கோபிகா ஸ்தீரிகளை தழுவிக் கலந்தபோது அப்பெண்களின் ஸ்தனங்களி லிருந்தும் கிருஷ்ணன் மேனியில் ஒட்டியபின் அவர்கள் கழுவுவதால் வழிந்தோடிய சந்த னமே கோபி சந்தனமென்று கூறப்படுகிறது. அப்பெயராலேயே அவ்வுண்மை விளங்கும் என எழுதியிருக்கிறார்.
எனவே சைவர்கள் பூசும் விபூதி யாக குண்டத்தில் இருந்து வந்ததென்றும், வைண வர்கள் பூசும் கோபிசந்தனம் என்னும் நாமம் கிருஷ்ணன் கோபிகளைப் புணர்ந்த பிற்பாடு கழுவிய தண்ணீரென்றும் கருத்தை வைத்துக் கூறப்பட்டிருக்கிறது. இது உண்மையோ பொய்யோ என்று நாம் விசாரிக்க நாம் நேரம் செலவழிக்கவில்லை. ஏனெனில் அவர் சொல் வது இன்ன இன்ன சாஸ்திரத்தில் இருக்கின்றது என்பதாக அவரே எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆதலால் அதைப்பற்றி அதிகமாய் சந்தேகிக்க வும் வேண்டியதில்லை. ஆனால் ஒன்று நமக் குத் தெரிய வேண்டும். அதாவது:- கிருஷ்ண னும் கோபிகளும் கலந்தபின் கழுவினது தான் வைணவர் நெற்றியில் வைக்கும் கோபி நாமம் என்று இந்து மத ஆதாரங்களில் இருந்து சைவர்கள் எடுத்துக் காட்டுவது, சைவர்களுக்கு இந்துமத தூஷணையும், வைணவ சமய தூஷ ணையும் அல்லவென்று தோன்றும்போதும் ஆண்குறியும், பெண்குறியும் சேர்ந்தபோது அறுந்து விழுந்ததின் தத்துவம் தான் லிங்கமும், ஆவுடையாரும் என்றும், அதைத்தான் சைவர் கள் கடவுளாக வணங்குகிறார்கள் என்றும், வைணவர்கள் சொல்லி இந்து மத ஆதாரங் களில் இருந்தே மேற்கோள்கள் எடுத்துக்காட்டு வது இந்து மத தூஷணையும், சைவசமய தூஷ ணையும் அல்லவென்று வைணவர்களுக்குத் தோன்றும்போது நாம் இவ்விரண்டையும் திரட்டி எடுத்துக் காட்டும்போது மாத்திரம் நம் மையேன் இவர்கள் இந்துமத தூஷணை, சமய தூஷணை நாஸ்திகம் என்று சொல்லுகின் றார்கள் என்பதுதான் நமக்கு விளங்கவில்லை.
தவிர மதப்பித்துக் கொண்ட பெயர்களைப் பற்றியோ வயிற்றுப் பிழைப்புக்கும் கூலிக்கும் பிரச்சாரம் செய்யக் கிளம்பும் மனிதாபிமானி களைப் பற்றியோ நாம் ஒரு சிறிதும் கவலைப் படவில்லை.
ஆனால், ஆராய்ச்சிக்காரர்கள் என்றும் பண்டிதர்களென்றும் வித்துவான்கள் என்றும் பெயர் வைத்துக் கொண்டு சமய வேஷமும் போட்டுக் கொண்டு சமய வரலாற்றுக்கும் சமய நூல்களுக்கும் தங்களையே நிபுணர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களை மாத்திரம் ஒன்று கேட்கிறோம். நாம் எழுதுவதும் பேசுவ தும் நம்முடைய கற்பனையா? அல்லது இந்து மத ஆதாரங்கள் என்பவை களில் உள்ளவை களா? உள்ளவைகளானால் அதற்கு என்ன சமாதானம் சொல்லுகிறீர்கள்? என்றுதான் கேட் கிறோம். தக்க சமாதானம் சொல்ல முன்வராமல் சூழ்ச்சிப் பிரச்சாரமும் பேடிப் பிரசாரமும் செய் யாதீர்கள். நபரைக் குறித்து ஆத்திரப்படாதீர்கள்.
உங்களைப் போல் பல கற்றறிந்த மூடர்கள் சேர்ந்துதான் பார்ப்பனர்களுக்கு உதவி செய்து நாட்டைப் பார்ப்பனர்களுக்கு அடிமையாக்கி, மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி அறி வற்ற மிருகங்களாக்கி விட்டார்கள். இதுவரை செய்ததே போதும். இனியாவது உங்கள் ஆராய்ச்சி என்பதையும், சமய நிபுணத்துவம் என்பதையும், புதிது புதிதாகக் கண்டுபிடித்தல் என்பதையும் மக்களின் மனிதத் தன்மைக்கும், தன்னம்பிக்கைக்கும், சுயரிமரியாதைக்கும். அறிவு வளர்ச்சிக்கும் பயன்படும்படி செய்யுங் கள். முடியாவிட்டால் சப்தத்திற்கும், எழுத்துக் கும், வார்த்தைக்கும் இலக்கணம் சொல்லும் வேலையில் உங்கள் வாழ்வை நடத்திக் கொள் ளுங்கள். சமயம் என்கிற வேலையில் புகுந்து மக்களைப் பாழ்படுத்தாதீர்கள். முட்டாள்கள் ஆக்காதீர்கள் என்றுதான் சொல்லுகிறோம்.
-  'குடிஅரசு' -  கட்டுரை - 15.04.1928

மடியில் கனமா?

தமிழகத்தில் லோக் ஆயுக்தா உடனடியாக அமைக்கப் படவேண்டும் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகம், புதுவை, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, தெலங்கானா, திரிபுரா, மற்றும் மேற்கு வங்கம் முதலிய 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை. இந்த மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை அமைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் லோக் ஆயுக்தா விசாரணை நீதிமன்றங்களை அமைக்காதது ஏன்? அவை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து 2 வாரத்துக்குள் எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரங்களை 12 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் 9 பக்கங்கள் கொண்ட பதிலை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.  அதில் லோக்பால் சட்டத்தில் மத்திய அரசு திருத்தங் களை செய்யவுள்ளது; திருத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படை யில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிறது அந்தப் பதில். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ரஞ்சன் கோகேய் நீதிபதிகள் அமர்வு, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த பதிலை ஏற்க மறுப்புத் தெரிவித்தனர். தற்போது வரை லோக் ஆயுக்தா அமைக்கப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு முன் வைத்த காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கை குறித்து ஜூலை 10ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டு உள்ளது. லோக்பால், லோக் ஆயுக்தா தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கவும் நீதிபதிகள் ஆணை யிட்டுள்ளனர். லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் ஊழலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவர ஏற்படுத்தப்பட்ட மசோதாவாகும். ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இம்மசோதா முன் மொழியப்பட்டதாகும்.
இம்மசோதா 22.12.2011இல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் மாநிலங்களவையில் இம்மசோதா 29.12.2011இல் நிராகரிக்கப்பட்டது. பின்பு 21.5.2012இல் மாநிலங்களவையின் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப் பட்டது. அக்குழு சில திருத்தங்களைச் செய்த பின் மாநிலங் களவையில் இம்மசோதா 17.12.2013இல் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 18.12.2013இல் மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
லோக்பால், லோக் ஆயுக்தா மசோதாவின் முக்கிய கூறுகள்  மத்தியில் லோக்பால், மாநிலங்கள் நிலையில் லோக் ஆயுக்தா அமைப்பு என்பதாகும், தலைவர் மற்றும் அதிக பட்சமாக 8 உறுப்பினர்களை கொண்டது லோக்பால் அமைப்பு. இதன் உறுப்பினர்களில் பாதிப்பேர் நீதித்துறை யைச் சார்ந்தவர்கள் ஆவர்.
லோக்பால் உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மகளிராக இருக்க வேண்டும்.
பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க் கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் செய்யும் உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் சட்ட வல்லுநர் ஆகியோர் இடம் பெற்ற தேர்வுக் குழு வாயிலாக லோக்பால் தலைவர், உறுப்பினர்கள் இருப்பர்.
லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர். உள்ளிட்ட கேபினெட் அமைச்சர்கள் வருவார்கள் விசாரணை வரம்புக்குள் அரசு ஊழியர்களில் அனைத்துப் பிரிவினரும் வருவார்கள்.
ஒரு ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கு மேல் அந்நிய நாட்டில் உள்ளவர்கள் மூலமாக நன்கொடை பெறும் எல்லோரும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரப்படுவர்.
நேர்மை, நாணயம் மிக்க ஊழியர்களுக்கு உரிய பாது காப்பு; லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை சிபிஅய், உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும்போது அதைக் கண்காணிக்க, மேற்பார்வையிட லோக்பாலுக்கு அதிகாரம்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரை பேரில் சிபிஅய் வழக்கு தொடுக்கும், லோக்பால் பரிந்து ரைக்கும் வழக்குகளை விசாரிக்கும் சிபிஅய் அதிகாரிகள் லோக்பால் ஒப்புதல் தந்தால் மட்டுமே பணியிடமாற்றம்.
ஆரம்ப நிலை விசாரணை, புலனாய்வு, வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம், அதற்காக சிறப்பு நீதி மன்றங்கள் அமைக்கவும் அதிகாரம்.
ஊழல் வழியில் சேர்த்த சொத்துகளை, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பறிமுதல் செய்ய அதிகாரம் தரும் விதிமுறைகள் ஆகியன உள்ளடங்கும்.
லோக்பால் சட்டமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து 365 தினங்களுக்குள் மாநில சட்டப் பேரவையில் சட்டம் இயற்றி லோக் ஆயுக்தாக்களை அமைப்பது கட்டாயமாகும். இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் லோக் ஆயுக்தாவை  உருவாக்கத் தயங்குவது ஏன்? மடியில் கனமா?

சங்பரிவார்களின் தொடர் விடுதலைகள்

ராஜஸ்தான் மாநிலம் பிரபல சுபி (இசுலாமியர்) வழிபாட்டுத்தலத்தில் அக்டோபர் 11, 2007 இல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகி 17 பேர் காயமடைந்தனர். நோன்பு திறக்கும் நிகழ்ச்சியின் போது சுமார் 5,000 பக்தர்கள் கூடியிருந்தபோது திட்டமிட்டு இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தினார்கள்.
டில்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றங்களில் நடந்த விசாரணையின் போது 2010ஆம் ஆண்டு சுவாமி அசீ மானந்தா, முசுலிம்களின் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக தானும், பிறரும் சிலபல வழிபாட்டு இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்யப்போவதாக வாக்குமூலம் அளித்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார். இந்த விவகாரத்தில் அரசு தரப்பு மற்றும் பிரதிவாதி தரப்பு வாதங்கள், சாட்சியங்கள் ஏகப்பட்டது இருப்பதால் நீதிபதிகள் இருமுறை தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில்  மார்ச், 8 2017 அன்று அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்தா உட்பட குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் மீதும் குற்றச்சாட்டுகள் மீதான போதிய சான்றுகள் இல்லாததால் அனைவரையும்  விடுவித்து ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  மகாராட்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் பிணை வழங்கி  சிறப்பு என்அய்ஏ (தேசிய புலனாய்வு அமைப்பு) நீதிமன்றம்  உத்தர விட்டது. 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி, மகாராட்டிர மாநிலம் மாலேகானில் உள்ள நூராஜி மசூதி அருகில் குண்டுவெடித்து 7 பேர் பலியாகினர். இந்த வழக்கில் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், ராணுவ அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் பிரசாத் சிறீகாந்த் புரோகித், சுவாமி தயானந்தா பாண்டே, ராகேஷ் தவாடே, ரமேஷ் உபாத்யாய், ஷியாம்லால் ஷாகு, சிவநாராயணன் கல்சங்கரா, சுதாகர் சதுர்வேதி, சுதாகர் திவிவேதி, ஜெகதீஷ் மாத்ரே மற்றும் சமீர் குல்கர்னி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர்.  இந்த வழக்கில் பிரக்யா சிங் தாக்கூர், ராணுவ அதிகாரி புரோகித் ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரு குற்றவாளிகளான சுதாகர் சதுர்வேதி மற்றும் சுதாகர் துவேதி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த மும்பை சிறப்பு என்.அய்.ஏ. நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அய்தராபாத் மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு பற்றிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் மொத்தம் 8 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. 2 பேர் இதில் தலைமறைவாகிவிட்டனர். ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டார்.
இந்த மோசமான குண்டுவெடிப்பிற்குப் பின் இந்தியாவில் பல இசுலாமிய மசூதிகள் தாக்கப்பட்டன. தொடர்ச்சியாக மோசமான சம்பவங்கள் நடந்தன. இதில் எல்லாவற்றிலும் இந்துத்துவா அமைப்புகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டன.
அய்தராபாத்தில் இருக்கும் மெக்கா மசூதியில்தான் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. மே மாதம் 18ஆம் தேதி 2007இல் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அது வெள்ளிக் கிழமை என்பதால் அதிக அளவில் மக்கள் உள்ளே இருந்தனர். இதில் 9 பேர் மரணம் அடைந்தனர். 58 பேர் காயம் அடைந் தனர். அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அய்ந்து பேர் மரணம் அடைந்தனர்
இதன் முதற்கட்ட விசாரணை அய்தராபாத் காவல்துறை யினரால் செய்யப்பட்டது. அதன்பின் இந்த விசாரணை சிபிஅய் வசம் மாற்றப்பட்டது. கடைசியாக 2011இல் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங் கியது. இந்துத்துவா அமைப்புகளில் தொடர்புடைய பத்து பேர் இந்த வழக்கில் சந்தேகிக்கப்பட்டார்கள்.
கடைசியில் அந்த பத்து பேரில் அய்ந்து பேர் மீது சந்தேகம் வலுத்தது. தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, சுவாமி அசீமானந்தா, பாரத் மோகன்லால், ராஜேந்திர சவுத்திரி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சந்தீப், ராசேந்திரா ஆகியோர் தலைமறைவாயினர். சுனில் ஜோஷி என்ற குற்றஞ்சாட்டப்பட்ட நபர் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே கொலை செய்யப்பட்டு மரணம் அடைந்தார். இந்த வழக்கில் 226 பேர் சாட்சியம் வழங்கினார்கள். 411 ஆவணங்கள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சுவாமி அசீமா னந்தா, பாரத் மோகன்லால் பிணையில் வெளியேறினார்கள். மற்ற நபர்கள் அய்தராபாத் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள். 2017 மார்ச்சில் ராஜஸ்தான் நீதிமன்றம் தேவேந்திர குப்தா உள்ளிட்ட சில பேருக்கு மட்டும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
என்அய்ஏ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் இப்பொழுது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. வழக்கில் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட 5 பேரும் நிரபராதிகள் என்று கூறியுள்ளது. இவர்கள்தான் குற்றம் செய்தது என்பதற்கான ஆதாரம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று அய்தராபாத் என்அய்ஏ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
தீர்ப்பை வாசித்த நீதிபதி ரவீந்திர ரெட்டி, உரிய ஆதாரங்கள் இல்லாததால் இவர்கள் 5 பேரும் விடுவிக்கப்படுவதாக கூறி 5 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து  அந்த நீதிபதி ரவீந்திர ரெட்டி திடீரென ராஜினாமா செய்துள்ளது பலவித அய்யப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியிலோ பிஜேபி காவி ஆட்சி; பெருங் குற்றங்களி லிருந்து சங்பரிவார்க் கும்பல் தொடர்ந்து விடுதலை பெற்று வருவது கவனிக்கத்தக்கதாகும்.

பா.ஜ.க.வின் மதவாதப் பார்வை

பா.ஜ.க. கருநாடக தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் பெயர் பட்டியலையும் இரண்டு கட்டங்களாக அறிவித்து விட்டது. இதில் மிகவும் அதிர்ச்சி கரமான தகவல் என்னவென்றால் இரண்டு பட்டியல் களிலும்  இசுலாமியர், கிறித்துவர், இதர சிறுபான்மை(பவுத்த, சீக்கிய மற்றும் ஜெயின்)பிரிவு வேட்பாளர் ஒருவர் கூட இல்லை. இதிலிருந்து இந்துக்களை மட்டும் நிறுத்தும் போது ஒட்டுமொத்த இந்துக்களும் தமக்கான கட்சி என்று கருதி வாக்களிப்பார்கள் என்ற ஒரு மனப்பாலை பாஜக குடித்துள்ளது. உத்தரப்பிரதேசம், குஜராத், அரியானா, போன்ற மாநிலத்தேர்தல்களிலும் இசுலாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் ஒருவரைக் கூட நிறுத்தவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.  கருநாடகாவில் 2016ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 87 விழுக்காடு இந்துக்கள், 14 விழுக்காடு முசுலீம்கள், 2 விழுக்காடு கிறித்துவர்கள், இதர சிறுபான்மையினர் ஒரு விழுக்காடு உள்ளனர்.  இதில் இந்துக்கள் என்று கூறப்படுபவர்களில் லிங்காயத்துக்கள் 20 விழுக்காடு மற்றும் தலித்துகள் 18 விழுக்காடு உள்ளனர். தென் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா, மற்றும் கேரளாவில் ஆட்சியைப்பிடிக்க இசுலாமியர்களின் வாக்குகள் காட்டாயம் தேவை என்ற நிலையில் அவர்களைத் தனிமைப்படுத்தி இந்துக்களுக்கான கட்சி பா.ஜ.க.வே என்று மதவாரியாகப் பிரித்து வாக்குகளைப் பெறலாம் என்ற தந்திரமும் இதில் அடக்கம்!
அதேவேளையில் காங்கிரசு கட்சி 15 இசுலாமி யர்களுக்கும், 4 இதர சிறுபான்மையினருக்கும் வாய்ப்பு அளித்துள்ளது. பா.ஜ.க.வினர் ரம்ஜான் பண்டிகையின் நோன்பு காலங்களில் கஜபோஜனம் என்ற பெயரில் கோவில்களிலும், பொது இடங்களிலும் இலவச உணவு வழங்கும் விழா நடத்தியபோது இசுலாமியர்களின் நோன்பு காலத்தை கேலி செய்தனர். இதன் மூலம் இசுலாமிய வெறுப்பு கொண்ட மக்கள் தங்கள் பக்கம் திரும்புவார்கள் என்று எண்ணியிருந்தார்கள். மேலும் கிறித்துவர்களின் கிறித்துமஸ் பண்டிகையின் போது போட்டியாக "நல்லாட்சி நாள்" என்ற பெயரில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளைக் கொண்டாடினர். இதன் மூலம் நாங்கள் இந்துக்களுக்கானவர்கள் மட்டுமே என்ற ஒரு செய்தியைக் தொடர்ந்து கூறிவந்த நிலையில் தற்போது இசுலாமியர்கள் உட்பட எந்த ஒரு சிறுபான்மையினருக்கும் பாஜக கட்சியில் இடம் தரவில்லை. இது கருநாடகாவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் ராஜ்நாத் சிங் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், வெற்றிபெறக் கூடிய ஆட்களை மட்டுமே வேட்பாளர்களாக அறிவித்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். என்னே சாமர்த்தியப் பேச்சு! இது தேர்தல் சமயத்தில் எல்லோருக்கும் புரியும் என்று கூறியுள்ளார். இசுலாமிய, கிறித்துவ மக்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
120 கோடி மக்கள் வாழும் இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும், சாராதவர்களும் வாழ்கிறார்கள். அரசு என்பது இந்த எல்லாப் பகுதிகளுக்குமான அரசாகும்.
ஆனால் தேசியக் கட்சி என்று பெருமையடித்துக் கொள்ளும் பிஜேபி - இந்தியாவின் ஆட்சியையும், பல மாநிலங்களில் ஆட்சிகளையும் கையகம் வைத்துள்ள பிஜேபி, மதவாதக் கண்ணோட்டத்தோடு "இந்துக்கள் மட்டுமேதான் எங்கள் வேட்பாளர்கள் - மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லை!" என்ற முறையில் நடந்து கொள்வது அதன் மதக் குரோத குரூரப் புத்தியைத் தானே வெளிப்படுத்துகிறது.
இத்தகையவர்கள் கைகளில் ஆட்சி அதிகாரம் என்பது, இந்துக்களைத் தவிர்த்த மற்ற சிறுபான்மை மக்களுக்கு எதிரானது - அவர்களுக்கு பாதுகாப்புக் கிடையாது என்கிற திட்டவட்டமான அறிவிப்பாகத் தானே இதனைக் கருத வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் இல்லையா? அவர்கள்மீது ஏன் வன்முறையை ஏவுகிறார்களாம்?
கடந்த காலங்களில் பிஜேபி ஆளும் இடங்களில் எல்லாம் சிறுபான்மை மக்கள் மீதான வன்முறைத் தலை விரித்தாடுவதை நாடு கண்டு கொண்டுதான் உள்ளது. இந்தச் சக்திகளை வளர விடலாமா? எச்சரிக்கை! எச்சரிக்கை!!

மேலிடத்து விவகாரமா?

அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலாதேவி (வயது46). இவர் அங்குள்ள அரசு உதவிபெறும் தனியார் கலைக் கல்லூரியில் 2008-ஆம் ஆண்டு முதல் கணிதத்துறை உதவிப் பேராசிரியராகப் பணி யாற்றி வருகிறார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
பேராசிரியை நிர்மலாதேவி தன்னிடம் படிக்கும் மாணவி களை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி பாலியல் ரீதியில் தவறான வழியில் ஈடுபடும் வகையில் வற் புறுத்தி பேசிய ஒலிப்பதிவு, அண்மையில் சமூக வலைதளங் களில் பரவியது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பேராசிரியைமீது நடவ டிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, நிர்மலாதேவியை கல்லூரி நிர்வாகம் தற்காலிகப் பணிநீக்கம் செய்தது. பேராசிரியை நிர்மலாதேவியை கைது செய்யக்கோரி கல்லூரி முன்பு பல அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.
நிர்மலாதேவி விவகாரத்தில் கல்வித்துறை அதிகாரிகள் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதைக் கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
இந்நிலையில் இந்த புகார் குறித்து தனியார் கல்லூரியின் நிர்வாகக் குழுச் செயலர் ராமசாமி,  பேராசிரியை நிர்மலாதேவி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில்  புகார் அளித்தார்.
புகாரைப் பெற்ற காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மதி கூறும்போது, கல்லூரி நிர்வாகத்திடமிருந்து முறையான புகார் பெறப்பட் டுள்ளது. இதன் அடிப்படையில் நிர்மலாதேவிமீது சட்டரீதி யான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இதற்கிடையே நிர்மலாதேவி மீது கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் அவரிடம் விசாரணை நடத்த அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி காவியன் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு காவல்துறையினர் வந்த போது, வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு நிர்மலாதேவி பல மணி நேரம் வெளியே வர மறுத்தார். அப்போது வீட்டுக்குள் இருந்த நிர்மலாதேவியிடம் பேசிய காவல்துறையினர், அவரை ரகசியமாக அழைத்துச் செல்வ தாகத் தெரிவித்தனர். அதையடுத்து, அப்பகுதியில் செய்தியா ளர்கள் மற்றும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. காவல்துறையினர் அவரை கைது செய்து அருப்புக் கோட்டை நகர காவல் நிலையத்துக்கும் அதைத்தொடர்ந்து, மகளிர் காவல் நிலையத்துக்கும் அழைத்துச் சென்று தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அருப்புக் கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் ஒழுங் கீனமான சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சம்பந்தப் பட்டிருப்ப தாகவும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தகவல்கள் பரவி வருகின்றன. எனவே, இந்த விஷயத்தில் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிவிடாமல் இருக்கும் வகையில் இதுகுறித்து உடனடி யாக விசாரிக்க வேண்டியது அவசியமா கிறது.
மதுரை காமராசர் பல்கலைக் கழகம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறை யில், ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலை மையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி இப்பொழுது இந்தியா முழுவதும் பரவி யுள்ளது. ஆளுநர் என்ற பெயர் மறைமுகமாக உச்சரிக்கப்பட் டுள்ளதால், தமிழக ஆளுநரே செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுக்கும் அளவுக்கு நிலைமை முற்றிப் போயிருக் கிறதே. மாநில அரசு என்று ஒன்று இருக்கும்போது ஆளுநர் எதற்குத் தேவையில்லாமல் இதில் மூக்கை நுழைத்திருக்கிறார் என்ற சர்ச்சை ஒரு பக்கத்தில் வெடித்துக் கிளம்பியுள்ளது.
அது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தப் பிரச்சினை நாகரிக உலகத்திற்கு மிகப்பெரிய இழுக்காகும் இது. கல்லூரியில் பேராசிரியராக இருக்கக்கூடிய ஒரு பெண்மணி இந்த வேலையில் ஈடுபடுவது தலைகுனியத் தக்கதாகும்.
அந்தப் பேராசிரியையின் கூற்றிலிருந்து பெரிய இடத்தில் இருப்பவர்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பது தெரிய வருகிறது.
கல்வியைக் குறை கூறுவதா? வளர்த்த முறை சரியில்லை என்பதா? சமூகத்தின் கேடு கெட்ட தாக்கம் எந்த அளவுக்குச் சென்று இருக்கிறது என்று நொந்து கொள்வதா?
இந்தத் துறையில் மட்டும்தானா இப்படி நடக்கிறது? எல்லா இடங்களிலும்தான் நடக்கிறது என்று கூறி பிரச்சினையைத் திசைதிருப்பப் போகிறார்களா? என்ற கேள்வி எல்லாம் செங்குத்தாக எழுந்து பல்லிளிக்கின்றன.
சரியாகப் புலன் விசாரணை நடத்தப்பட்டு உண்மைக் குற்ற வாளிகள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டே ஆகவேண்டும். அதன்மூலம் இதுபோன்ற சிந்தனை கூட யாருக்கும் வரக்கூடாது என்ற நிலைமையை அது உருவாக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினையில் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை அவசர அவசரமாக நியமித்து விசாரணை நடத்தச் சொல்லி ஆளுநர் ஆணை பிறப்பித்தது ஏன்? ஆளுநரே சம்பந்தப்பட்டதாக கருதப்படும் ஒன்றினை விசாரிக்க அந்த ஆளுநரே அதிகாரியை நியமித்தால் அங்கு உண்மையான விசாரணைக்கு இடம் இருக்குமா?
இதில் இன்னொரு வேடிக்கை. சிபிசிஅய்டி போலீஸ் இந்தப் பிரச்சினையை விசாரிக்கும் என்று மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பிரச்சினையை இரு மய்யங்கள் விசாரிக்கலாமா? ஒன்றுக்கொன்று முரண்பட்டால் எதை எடுத்துக் கொள்வது? மிகவும் வேதனையும் வெட்கமும் சூழ்ந்து சூழ்ந்து தாக்குகிறதே!
மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கக்கூடிய அரசுகள் மதிக்கத்தக்க வகையில் நடந்து கொள்ளவில்லை என்கிற போது இன்னும் என்னென்னதான் நடக்குமோ?

சிறுமி ஆசீபா சீரழிவு - கண்களைத் திறக்கச் செய்யுமா?

காஷ்மீரில் குஜர் இன நாடோடிகள் கோடைக் காலங்களில் மலைப்பகுதிகளிலும், குளிர்காலங்களில் சமவெளிகளிலும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் அனைவருமே இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கோடைக்காலத்தில் ஜம்மு சமவெளிப் பகுதியில் கூடாரம் அமைத்து வாழ்வார்கள்.  இவர்கள் இசுலாமியர்கள் என்பதால் இவர்களை விரட்ட இந்து அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., இந்து எக்தா சமாஜ் என்ற அமைப்புகள் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த நாடோடி இனத்தைச் சேர்ந்த 8 சிறுமிகளும், பெண்களும் காணாமல் போயுள்ளனர். இதுவரை அவர்கள் குறித்த எந்த தகவலும் இல்லை. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அந்த நாடோடி இனத்தின் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசீபா காணாமல் போயுள்ளார். இந்தச் சிறுமியை பல இடங்களில் அவரது குடும்பத்தாரும், உறவினர்களும் தேடியுள்ளனர்.  அவர் ஜனவரி 20ஆம் தேதி அன்று வனப்பகுதியில் மிகவும் மோசமான முறையில் உடலில் பலத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். விசாரணையில் சிறுமி 8 பேரால் கோவிலில் அடைத்து வைத்து வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டது தெரிய வந்தது.  இந்தக் கொலையில் கோவில் பூசாரி, அவரது மகன், 3 காவலர்கள், ஒரு காவல்துறை அதிகாரி, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர், இந்து அமைப்பின் இரண்டு பிரமுகர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கொலை வழக்கில் ஒரு குற்றவாளி சிறார் என்பதால் அவன் மட்டும் சிறார் சிறையில் அடைக்கப் பட்டுள்ளான். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மற்ற 7 குற்றவாளிகளிடம் குற்றப்பத்திரிக்கை நகலை அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவர்களிடம் குற்றப்பத்திரிக்கை அளிக்கப்பட்டது.
காவல்துறை குற்றப்பிரிவினர் பதிவு செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் இசுலாமியர்களை மிரட்டி அப்பகுதிக்கு இனிமேல் வராமலிருக்கச் செய்யவே  சிறுமியின் படுகொலை அரங்கேற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் கோவில் பூசாரி தான் இந்த கொலைக்குத் திட்டமிட்டார் என்பதும், இந்தக் கொலை தொடர்பாக பாஜகவின் பல பிரமுகர்கள் கொலையாளிக்கு ஆதரவாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. காஷ்மீரில் நடந்த சம்பவம் தாமதமாகவே  வெளியே தெரிந்தது. அதேபோல் உன்னாவ் விவகாரமும், பாதிக்கப்பட்ட குடும்பம் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் வீட்டிற்குச் சென்று தீக்குளிக்க முயன்ற பின்தான் வெளியே தெரிந்தது. இந்த நிலையில் பாஜக ஆளும் குஜராத்தின் சூரத்தில் 8 வயது சிறுமி கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்.
ஞாயிறு அன்று அரியானா மாநிலத்தின், ரோதாக் மாவட்டத்தில் சமர்கோபல்பூர் என்ற கிராமத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து காவல்துறையினர் 11 வயது சிறுமியின் உடலைக் கைப்பற்றியுள்ளனர். சிறுமியின் உடலை மருத்துவ ஆய்வுக்கு அனுப்பியுள்ள காவல் துறையினர் சிறுமி குறித்த விவரங்களை விசாரித்து வருகின்றனராம்.  இந்த நான்கு கொடூர நிகழ்வுகளும் பாஜக ஆளும் மாநிலங்களிலும் (குஜராத், அரியானா, உத்தரப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் - பாஜக கூட்டணி ஆளும் மாநிலத்திலும்) நடந்துள்ளன. அதே போல் இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் என்று பார்த்தால் சிறுமிகள், இசுலாமியர்கள், தலித்துகள் மட்டும்தான்! பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் சிறு பான்மையினப் பெண்கள் இவ்வளவு பாதிக்கப்படு கிறார்கள்?  காரணம் வெளிப்படை!
இந்த சம்பவங்களுக்கு எதிராக பாஜகவினர் பெரிதாகக் குரல் கொடுக்கவில்லை. முக்கியமாக பாஜகவில் இருக்கும் பெண் தலைவர்கள் கூட இந்த மோசமான சம்பவங்களுக்கு எதிராக துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. இதில் இன்னமும் மோசமான விடயம் என்னவென்றால், இதில் இரண்டு சம்பவங்களில் பாஜக கட்சியினருக்கே தொடர்புள்ளது. உத்தரப்பிரதேச சம்பவத்திற்குக் காரணம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார். அதேபோல் காஷ்மீரில் குழு வன்புணர்வை செய்தது பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கங் களைச் சேர்ந்த நபர்கள்தான். இதன் காரணமாகவே பாஜகவினர் இதுபற்றிப் பேசுவதில்லை. பாஜக கட்சியினர் அமைதியாககூட இல்லாமல் இதைப் பற்றி மோசமாகவும் பேசி இருக்கிறார்கள். டில்லியில் நடந்த நிர்பயா கொடூரத்தை மிகவும் சிறிய விஷயம் என்று அருண் ஜெட்லீ குறிப்பிடவில்லையா? கதவு இல்லாத கோவி லுக்குள் அந்த சிறுமி எப்படி இருந்தார் என்று காஷ்மீர் விவகாரத்தில் எச்.ராஜா வன்மமாகப் பேசியுள்ளார்.  பி.ஜே.பி.யின் விகாரமான கோரச் சிந்தனையின் அசிங்கமான வெளிப்பாடு இது!
சிறுமி ஆசீபா மீதான சீரழிவு மக்கள் கண்களைத் திறக்கச் செய்யட்டும்!

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கெட்டிப்படுத்தப்பட வேண்டும்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள் எனப்படும் பட்டியலினத்தவருக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத் தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.
இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த் தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடி யினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள்  தலைமையில் ஒரு கமிட்டியை நாடாளுமன்றம் அமைத்தது. அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989இல் தாழ்த் தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995இல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.
பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் இராணு வத்தினர் நடத்திய தாக்குதல், பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது. இந்தச் சட்டத்தைக் காவல்துறையினர் தங்களுக்கு எதிரானதாகவே நினைத்தனர். இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.
ஆனால் இந்தச் சட்டத்தை நீர்த்துப் போகும் வகையில் 29.3.2018அன்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பைக் கூறியது. அதில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் புகார்களில் அரசு அதிகாரிகளை உடனடியாக கைது செய்யக்கூடாது; அவர்களின் மேலதிகாரிகளின் அனுமதிபெற்று உரிய விசாரணைக்குப் பின்பே கைது செய்ய வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, வடமாநிலங்களில் முழு அடைப்புப் போராட்டம் மற்றும் வன்முறைகள் வெடித் தன. இதில் 15-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். குஜராத்தில் குதிரை சவாரி செய்ததற்காக  இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டத்திலுள்ள டிம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் ரத்தோட்  தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். இவர் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டுத் தன் தந்தைக்கு உதவியாக வயலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்குச் சொந்தமான வயலைப் பார்வை யிட குதிரையில் சென்றுவந்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்கள் குதிரையில் செல்வது பிடிக்காத அந்தப் பகுதியின் ஆதிக்கச் ஜாதி இளைஞர்கள், "இனிமேல் நீ குதிரையில் செல்லக் கூடாது; இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்" என்று மிரட்டியுள்ளனர்.
இதைப் பொருட்டாக எடுத்துக்கொள்ளாத பிரதீப் வழக்கம்போல் குதிரையில் சென்றுள்ளார். ஆனால் வயலுக்குச் சென்று வீடு திரும்பாத பிரதீப், கடந்த மார்ச் 31ஆம் தேதி பிணமாக மீட்கப்பட்டார். பிரதீப்பையும்,  குதிரையையும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு சிலர் கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து பிரதீப்பின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கொலைக்குக் காரணமானவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என பிரதீப்பின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வேறு ஜாதியைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் சொந்தமாகக் குதிரைகளை வாங்கவோ வளர்க்கவோ கூடாது என ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த மக்கள் தடை விதித்துள்ளதாகவும்,  பிரதீப் குதிரையில் சென்றதால் கொலை செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செத்துப் போன பசுவின் தோலை உரித்த தாழ்த்தப் பட்ட தோழர்கள் சங்பரிவார் கும்பலால் கொல்லப்பட்டனர் என்பதையும் மறந்து விடக் கூடாது.
இன்னும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை இருக்கிறது. தாழ்த்தப்பட்டவர் இறந்து போனால் பிணத்தைத் தூக்கிச் செல்லும்போதும், புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும் இடத்தில்கூட இன்னும் பிரச்சினை இருக்கிறது.
இந்த வெட்கம் கெட்ட நிலையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.
உச்சநீதிமன்றம் சொன்னாலும், தேவைப்பட்டால் சட்டத் திருத்தம் செய்தாவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நீர்த்துப் போகச் செய்யாமல் பார்த்துக் கொள்வது அவசியம். சுதந்திர நாடு என்று சொல்லிக் கொண்டு இன்னும் தீண்டாமைக்கு இடம் கொடுப்பது வெட்கக் கேடான தாகும்.

குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் - தந்தை பெரியார்

சகோதரிகளே! சகோதரர்களே!!
இங்கு இன்று நடைபெறப்போகும் திருமணமானது நமது நாட்டில் இப்போது புதியதாய் தோன்றியிருக்கும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளில் ஓர் அம்சமாகிய மூட பழக்க வழக்கங்களை ஒழிப்பதென்னும் திட்டத்தில் சேர்ந்ததாகுமே தவிர இதில் புதிதாய் புகுத்தும் கொள்கை ஒன்றுமே இல்லை. தீண்டாமை ஒழிப்பதென் பதற்கு முக்கியமாய் வேண்டியது எப்படி வெறும் மனம் மாற்றம் என்பதைத்தவிர அதில் வேறு தத்துவமோ, தப்பிதமோ, தியாகமோ இல்லையோ, அதுபோலவே தான் இந்த விதவா விவாகம் என்பதற்கும் எவ்வித தியாகமும் கஷ்டமும் யாரும் படவேண்டியதில்லை. ஒரு பெண் ணையோ, பல பெண்களையோ மனைவியாகக் கட்டி அனுபவித்தவனும் ஒரு பெண்ணையோ, பல பெண் களையோ வைப்பாட்டியாக வைத்தோ தற்காலிக விபசார சாதனமாக அனுபவித்தோ வந்துள்ள, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு புருஷனை ஒரு புதுப் பெண் மணப்பது  இன்று எப்படி வழக்கத்தில் தாராளமாய் இருந்து வருகின்றதோ அதுபோலத்தான் அப்படிப்பட்ட ஒரு பெண்ணையும் ஒரு புருஷன் மணப்பது முறையாக வேண்டும் என்று சொல்லுகின்றோமே தவிர மற்றபடி காரியத்திற்கு ஒவ்வாததும் யுக்திக்கு ஒவ்வாததும் உலகத்தில் பெரும்பான்மையான மக்களின் நடப்புக்கு விரோமான தத்துவங்கள் எதுவும் அதிலில்லை.
நமது நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களிலெல்லாம் இது மிகவும் முக்கியமான மூடப்பழக்கமாகும். மற்றொருவர் அனுபவித்த பெண்ணை அல்லது அனுபவித்துக் கொண்டிருக்கிற பெண்ணை ஒரு புருஷன் பார்த்தால் அவளை அனுபவிப்பதற்கு திடீர் என்று ஆசைப்படுகிறான். அவற்றில் சிலது அனுபவிக்க கிடைத்துவிட்டால் சிலசமயங்களில் தனது முழு வாழ்க்கையில் அடையாத ஒரு பெரும் பேற்றை அனுபவித்ததாக மகிழ்ச்சியடை வதோடு தனக்குள்ளாகவே ஒரு பெரும் பெருமையையும் உற்சாகத்தையும் அடைகின்றான். அதிலும் தாசிகள், வேசிகள், பிரபல குச்சிக்காரிகள் ஆகியவர்கள் விஷயத்தில் மனிதன் கொள்ளும் ஆசைக்கு அளவே இல்லை. ஆகவே இம்மாதிரி தற்கால அவசியமாக செய்துவரும் காரியங்களில் உள்ள மனப்பான்மையைவிட இந்த மாதிரி விதவா விவாகத்தில் ஒரு மனிதனிடம் அதிகமான மனப்பான் மையோ மனமாற்றமோ நாம் ஒன்றும் எதிர் பார்க்கவில்லை. ஆயிரம் பெண்களை அனுபவித்த புருஷனின் திருமண விஷயத்தில் இல்லாத குற்றம் ஒரு புருஷனை மாத்திரம் அனுபவித்த பெண்ணிடம் எப்படி வந்து விடும் என்று யோசித்துப் பார்த்தால், விதவா விவாகம் என்பது யாருக்கும் அதிசயமாய் தோன்றாது.
பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை என்பதும் பெண்கள் அடிமைப் பிறவி என்பதும் தான் விதவைத் தன்மையின் அஸ்திவாரமாகும். பெண்களுக்குச் சுதந்திரம் ஏற்பட்டு விட்டால் விதவைத் தன்மை தானாகவே பறந்துபோய் விடும். உதாரணமாக மனைவி இழந்த புருஷனைக் குறிப்பிட நமக்கு வார்த்தையே இல்லை. ஏன் இல்லை அவர்களுக்குள்ள சுதந்திரத்தினால் தங்களின் அப்படிப் பட்ட ஒரு நிலையைக் காட்ட ஒரு பெயரை பழக்கத்தில் கொண்டு வருவதற்கில்லாமல் செய்து விட்டார்கள்.
சாதாரணமாக, கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடுகின்றோமோ அதுபோலவே மனைவியை இழந்த புருஷனை விதவன் என்று கூப்பிட வேண்டும். ஆனால் நமது நாட்டில்தான் அப்படிக் கூப்பிடுவதில்லை. மேல் நாட்டில் விடோ, விடோயர் (கீவீபீஷீஷ், கீவீபீஷீஷ்மீக்ஷீ) என்கின்ற பதங்கள் இருக்கின்றன. இந்த விடோ என்பதும் விதவை என்பதும் ஒரு சொல் மூலத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இதுவும் வடமொழியாகவே இருப்பதால் வடமொழிக்கும், மேல் மொழிக்கும் மற்ற வார்த்தை களுக்குள்ள சம்பந்தம் போலவே இதற்கும் இருக்கின்றது. ஆனால் நமது புராணங்களில் கூட விதவன் என்கின்ற வார்த்தை இல்லாததால் புராணகாலம் முதலே ஆண்கள் செய்த சூழ்ச்சிதான் விதவைத் தன்மைக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆகவே இவ்விதத் திருமணம் பகுத்தறிவுக்கும் நடு நிலைக்கும் ஒத்ததே தவிர இதில் குருட்டு நம்பிக்கையோ, ஏமாற்றமோ, கொடுமையோ ஒன்றுமில்லை.
அன்றியும் இன்றைய மணமகனுக்கு முந்திய மனைவியால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருப்பது போலவே மணமகளுக்கும் முந்திய கணவனால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருக்கின்றது. இதிலும் நியாயத்திற்கும், யுக்திக்கும் ஒவ்வாத குற்றங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆணும் பெண்ணும் சம உரிமை உள்ளவர்கள் என்று உணர்ந்தால் இது சரி என்று தோன்றும். தவிரவும் பெண் ணுக்கு ஆணுக்குள்ளது போன்ற தனிச்சொத்துரிமை இருக்க வேண்டும் என்கின்ற கொள்கையை அனுசரித்து மணமகன் இந்த மணமகள் பேருக்கு சர்வ சுதந்திரமாய் 5000ரூ பெறுமான சொத்தை எழுதி வைத்ததானது மிகவும் பாராட்டத்தக்க காரியமாகும். தவிரவும் இம்மாதிரி பெண்களுக்கு மறுமணம் என்பது எங்கள் பக்கங்களில் அநேக வகுப்புகளுக்குள் இருக்கின்றது.
சாதாரணமாக விதவைமணம் என்பது மாத்திரமல்லாமல் நமது நாட்டில் விவாகரத்து செய்து கொண்டு மறுமணம் முடித்துக் கொள்வது என்கின்ற வழக்கம்கூட சில வகுப்புகளில் இருந்து வருகிறது. எங்கள் பக்கத்தில் வன்னியர்கள் அதாவது படையாச்சி வகுப்பார், தெலுங்கு செட்டியார்கள், அகம்படியர், சணப்பர்கள் என்று சொல்லும் செட்டிமார்கள் சில வகுப்புப் பண்டாரங்கள் என்பவர்கள் சில வகுப்பு ஆண்டிகள் என்பவர்கள், தேவாங்கர்கள், செங்குந்தர்கள், கற்பூரச் செட்டிமார்கள், போயர்கள், கொத் தர்கள், ஒக்கிலியர்கள் முதலிய வகுப்புகளில் சிலவற்றில் இரண்டும் சிலவற்றில் ஒன்று மாத்திரமும் இருந்து வருகின்றன. ஆனால் இப்போது மேற்கண்ட வகுப்பார்களில் கூட பலர் அவ்வழக்கங்கள் கூடாதென்று கருதுகின்றார்கள் என்று தெரிந்து விசனிக்கிறேன். சில இடங்களில் அனுப வத்தில் இல்லாமலும் இருக்கின்றது என்றாலும் எங்கள் வகுப்பு அதாவது பலுஜ நாயுடு என்பது போன்றவைகளில் முன்னால் வழக்கம் இருந்ததோ இல்லையோ என்பதை கவனியாமல் இப்போது செய்யப்பட வேண்டும் என்று எங்கள் மகாநாடுகளில் தீர்மானமாய் இருக்கிறது. எனது தங்கைப் பெண்ணுக்கு விதவை மணம் செய்யப்பட்டி ருக்கின்றது.
ஆகவே இம்மாதிரி மணம் புதியதென்று சொல்லு வதற்கோ, அல்லது இயற்கைக்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமானதென்றோ யாரும் சொல்லிவிட முடியாது. இதை ஆட்சேபிப்பவர்களை நான் மனிதர்கள் என்றே ஒப்புக் கொள்ளமாட்டேன். அவர்களுக்குச் சுயமரியாதை இருக்கும் என்றும் நான் கருதமாட்டேன்.
சாதாரணமாக, நமது நாட்டில் விதவைகள் உள்ள வீடுகளில் நடக்கும் காரியங்கள் எனக்கு நன்றாய்த் தெரியும். அநேகச் சிசு கொலைகளும் அநேக மன வருத்தங்களும் இயற்கைக்கு விரோதமான காரியங்களும் ஏதாவது ஒன்றும் நடந்த வண்ணமாகவே இருந்து வருகின்றது. இதனால் பல கொலைகளும் நடக்கின்றன. சில இடங்களில் பெண்கள் வெளியில் ஓட ஓட அழைத்து வந்து பந்தோபஸ்தில் வைக்கப்படுகின்றனர். சில இடங்களில் முறைகள் என்பது தவறியும் நடத்தப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால் இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி வைப்பதேயாகும். இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும்படியான எந்தக் கொள்கைகளும், சட்டங் களும் ஒரு நாளும் சரியாக நடைபெறவே நடைபெறாது. அப்படி எங்காவது நடை பெற்றாலும் அது நிலைத்திருக்கவே முடியாது. இந்தக் கொடுமைகள் இப்படி இருக்குமானால் 4 பெண்கள் 5 பெண்கள் கூடி ஒரு ஆணைத் தங்கள் இன்பத்திற்கென்று ஏற்படுத்தி அவனுக்கு நல்ல போஷணையும், அழகும் செய்து அடைத்து வைத்து அவனைத் தங்களது காம இச்சைத் தீர்க்கும் இன்பப் பொருளாய் அனுபவிக்கும் காலமும், வீட்டு அடிமையாய் நடத்தப்படும் காலமும் வந்து விடும் என்று நான் கருது கிறேன். அப்படி வந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆண்களினது கருமத்தின் பயன் என்றுதான் அதைக் கருதுவேன்.
தவிர சுயமரியாதைக் கலியாணம் என்பதில் புதிய முறையோ, புதிய சடங்கோ ஒன்றுமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அர்த்தமற்றதும், பொருத்த மற்றதுமான சடங்குகள் வேண்டாம் என்பதும் அனாவசிய மான அதிகச் செலவும், அதிகக் காலக் கேடும் இருக்கக் கூடாது என்பதும்தான் சுயமரியாதைக் கலியாணத்தின் முக்கியத் தத்துவமாகும். ஆதலால் உள்ள சடங்குகளையும், பணச்செலவையும், காலச் செலவையும் குறைத்து நடத் துவதே இத்திருமணத்தின் முக்கிய கொள்கை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
மற்றும் திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் ஏற்பட்டக் கூட்டு வாழ்க்கையின் ஒப்பந்தம் என்பதும், இத்திருமணம் இந்த மணமக்களின் இந்த உலக மானுஷிக வாழ்க்கைக்கேதான் என்பதும் உணர்ந்து மணமக்கள் மணம் செய்துகொள்ளவேண்டும் என்பது சுயமரியாதைத் திருமணத்தில் மிகவும் முக்கியமானதாகும். அதாவது கலியாணம் மனிதத்தன்மைக்கு மேற்பட்ட தென்றும் "ஆத்மார்த்தத்"திற்கு என்றும், அதில் ஏதோ "தெய்வீகம்" இருக்கிற தென்றும் கருதி வாழ்க்கையில் உள்ள சுதந்திரங்களையும், இயற்கை இன்பங்களையும் அடையமுடியாமல் செய்யும் ஜீவனற்ற உணர்ச்சியை ஒழிக்க வேண்டுமென்பதே முக்கியமானதாகும்.
தெய்வீகம் என்கின்ற பதமே சாதாரணமாக நமக்குத் தெரியாது என்பதற்குத்தான் பெரிதும் பயன் படுத்தப்பட்டு வருகின்றது. அதோடு ஆத்மார்த்தம் என்பதும் புலனறிவற்ற சூனியத்திற்குச் சமமானதற்கே பெரிதும் பயன்படுத்தப்படு கின்றது. ஆகவே மனித வாழ்க்கையின் முக்கியமான தத்துவமான இன்ப உணர்ச்சியின் இயற்கை அனுபவத்தை அடைய முடியாமல் தடைசெய்வதற்கு மாத்திரம் பயன் படும்படியாகத் தெரியாத, அர்த்தமற்ற தெய்வீகத்தையும் ஆத்மார்த்தத்தையும் இப்படிபட்ட விஷயத்தில் கொண்டு வந்து புகுத்தியதானது மனிதனை வெறும் பிணம் ஆக்குவதற்கும் அடிமையாக்குவதற்குமே பயன்படுத்தச் செய்த புரட்டே யொழிய வேறில்லை. தெய்வீகக் கலி யாணத்தில், ஆத்மார்த்த கலியாணத்தில் புருஷனுக்கும் பெண்ணுக்கும் வித்தியாச நிபந்தனைகளும் எஜமான் அடிமைத் தன்மைகளும் எதற்காக ஏற்படுத்த வேண்டும்? தெய்வீகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாச முண்டா? ஆத்மார்த்தத்தில் ஆண் ஆத்மா; பெண் ஆத்மாவென்கின்ற பிரிவுண்டா?
எவ்வளவு பெரிய புரட்டுகளை இந்த முக்கியமான காரியத்தில் கொண்டு வந்து போட்டு, இன்பமும், சுதந்திரமும் பாழக்கப்பட்டுவிட்டது என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகையால் புருஷனுக்காகப் பெண்ணும், பெண்ணுக் காக புருஷனும் இரண்டு பேரும் சேர்ந்து இன்பமடைவதற்கு என்பதைத் தவிரத் திருமணத்தில் வேறு தத்துவமொன்றும் இல்லவே இல்லை என்பது தான் திருமணத்தைப் பற்றிய நமது அபிப்பிராயம். இம்மாதிரி மணமக்கள் இருவரும் ஒரு பொது வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்டதற்கு அவர் களுக்குள் செய்துகொள்ளும் ஒப்பந்தத்திற்குச் சாட்சி யத்தைத் தவிர நமக்கு இதில் வேறு வேலை இல்லை. ஆகவே நாம் எல்லோரும் சாட்சியத்திற்காகவே அழைக் கப்பட்டிருக்கின்றோம், கூடி இருக்கின்றோமென்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாதிரியான சமுதாய உதவி கூட்டு வாழ்க்கையில் கலந்துள்ள ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் செய்து கொள்ள வேண்டியதேயாகும். இதில் மணமக்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் தங்களில் எவருக்கும் எந்த விதத்திலும் வாழ்க்கை நடத்துவதில் பொறுப்போ உரிமையோ ஜாஸ்த்தி கம்மியாய் இருக்கின்றது என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது என்பது தான். அதாவது பெண் தான் புருஷனுக்கு அடிமை யாயிருக்க கடவுளால் பிறப்பிக்கப்பட்ட ஒரு சுய உணர்ச்சியற்ற ஜீவனென்றோ "கல்லென்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன்", அவன் அடித்தாலும், உதைத்தாலும் அன் னியருக்கு கூட்டிவிட்டு ஜீவித்தாலும் புருஷனே தெய்வம் என்று கருதுகின்ற அடிமை உணர்ச்சிக் கண்டிப்பாய் பெண்ணுக்கிருக்கவே கூடாது. நமது கணவனும் நம்மை போன்ற மனித ஜீவனேயாகும். பெண்ணிடம் அவன் எப்படி நடந்து கொள்ளுகிறானோ அப்படி தான் அவள் தன்னிடமும் நம்மை நடந்து கொள்ள எதிர்பார்க்க முடியும். ஒழுக்கத்திலோ, சுதந்திரத்திலோ உணர்ச்சியிலோ நமக்கும் அவனுக்கும் வித்தியாசம் கிடையாதென்று எண்ண வேண்டியது மாத்திரமல் லாமல் ஒவ்வொருத் துறையிலும் அனுபவத்தில் கொண்டு வர வேண்டும். அப்படிப்பட்ட பெண்கள்தான்; பெண்கள் நாயகம் என்று அழைக்கப்படத் தக்கவர்கள் ஆவதோடு பெண்கள் உலகத்திற்கும் பெரிய உபகாரம் செய்த வர்களாவார்கள். முக்கியமாய் இதற்காக வேண்டியேதான் ஆத்மார்த்தம் தெய்வீகம் என்பவை களிலுள்ள புரட்டுகளை வெளியாக்கக் கட்டாயப்படுத்தப்படு கின்றோம். இது போலவே மணமகனும் தனக்குள்ள உணர்ச்சி, அவா, சுதந்திரம் ஆகிய காரியங்கள் எல்லாம் பெண்ணுக்கும் உண்டென்றும் தான் எவ்வளவு காரியம் பெண்ணிடம் எதிர்பார்க்கின்றோமோ அவ்வளவு காரியம் பெண்ணுக்கும் தன்னிடம் எதிர்பார்க்க முடியும் என்றும் கருதி அனுப வத்திலும் அதுபோலவே நடக்கவிட வேண்டும். தனக்கு அடிமைக்காக ஒரு பெண்ணை மணம் செய்து கொண் டோமென்கின்ற உணர்ச்சியை அடியோடு மறந்து விட வேண்டும்.
இந்த நாட்டில் பொதுவாக ஒழுக்கம் சீர்பட வேண்டு மானால், விபசாரம் என்னும் காரியத்தில் உள்ள கெடுதிகள் நீங்க வேண்டுமானால் விதவைத் தன்மையும், ஆண்களுக்கு விபசார தோஷமில்லை என்கின்ற நடப்பையும் ஒழித்தாக வேண்டும். இவை ஒழிந்தால் உண்மையான காதலின்பமும், வாழ்க்கையில் திருப்தியும், சாந்தியும், ஒழுக்கமும் கட்டாயம் ஏற்பட்டுவிடும்.
ஆகவே மேற்கண்ட இரண்டு காரியங்களே பெரிதும் மனிதத் தன்மைக்கும், இயற்கை இன்ப நுகர்ச்சிக்கும் இடையூறாய் இருந்து வருகின்றது. பெண்களைப் பெற் றோர்களும் ஒருவிஷயத்தை முக்கியமாய் கவனிக்க வேண்டும்.
அதாவது பெண்களுக்கும் 16 வயது வரை நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். மனித இயற்கைக்கு விரோதமாக ஆணுக்கு ஒருவிதமும், பெண்ணுக்கு ஒரு விதமுமாக அடக்கத்தையும் அடிமை உணர்ச்சியையும் கற்றுக் கொடுக்கக்கூடாது. பெண்ணின் தாய்மார்கள் பெண்களை அவர்களின் மாமியார்கள் வீட்டுக்கு அடிமைக்காக அனுப்புவதாய்க் கருதி, அதற்குத் தயார் செய்யும் வழக்கத்தைவிட்டுவிட வேண்டும். எந்தப் பெண்களையும் தான் ஆண்களுக்குக் கீழ்பட்ட ஒரு பெண் என்றும், தனக்கு ஆண்களைவிட சில அடிமை குணங்களோ, அடக்கக்  குணங்களோ வேண்டுமென்று கருதும்படி கற்றுக் கொடுக்கக் கூடாது.
அநேகமாய்த் தானே தனக்கு வேண்டிய காதலனைத் தெரிந்தெடுத்துக் கொள்ள பெண்களைப் பழக்கப்படுத்த வேண்டும். இம்மாதிரியாகப் பழக்கினோமானால் பெண்கள் உலகம் தலைசிறந்து சுதந்திரம் பெற்று உலகத்திற்குப் பெருத்த உதவியாக இருக்கும்.
இப்பொழுது பெரும்பான்மையான தெய்வீகத் திருமணங்கள் என்பது வெறும் அடிமைத் திருமணமாகவும் பிறர் இஷ்டத்திற்கே முழுபொறுப்பும் விடப்பட்டதாகவும், நிர்ப்பந்தத்திற்கும், ஒரு கட்டுப்பாட்டிற்கும் கட்டிக் கொண்டு எப்படி இருந்தாலும் சரிப்படுத்திக் கொள்ள வேண்டிய தாகவும் இருக்கின்றது. ஆகையால் அந்த முறைகளும் ஒழிய வேண்டும்.
இன்றையதினம் ஒரு குழந்தையுடனுள்ள ஒரு விதவைப் பெண்ணை மணம் செய்து கொள்ள ஏற்பட்டதால் பலர் விதவையானாலும் குழந்தை இல்லாத விதவை கிடைக்க வில்லையா என்று சொல்ல வந்து விட்டார்கள்.
இதற்கு முன் பக்குவமான "சாந்தி முகூர்த்தமான" விதவையைக் கலியாணம் செய்தபோது பக்குவமாகாத விதவை கிடைக்கவில்லையா என்றார்கள்.
வேறு ஜாதியில் ஒரு "விதவை"யைக் கல்யாணம் செய்து கொண்டபோது நமது ஜாதியிலேயே ஒரு விதவை இல்லையா என்றார்கள். ஆதலால் இவ்விஷயங்களில் நாம் பொது ஜன அபிப்பிராயத்தைக் கண்டு பயப்படக்கூடாது. நல்ல வார்த்தையில் மிதமான வழியில் செய்யப்படும் முயற்சி கைகூடவே கூடாது. ஏனென்றால் நமது மக்கள் பெரிதும் பாமர மக்களாகவே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அடிமைகளுக்கு லட்சணமே ஒரு சிறு மூட்டையைத் தூக்கச் சொன்னாலும் "முடியாது போ, உன் வேலையை பார்" என்றுதான்  சொல்வார்கள். ஆனால் டவாலியைக் கழற்றி இரண்டு கொடுத்தால் பெரிய மூட்டையாய் இருந் தாலுங் கூட "தூக்குவதற்குள் என்னய்யா அவசரம்" என் பார்கள். ஆகையால் நாட்டைப் புதுப்பிக்க வேண்டுமானால் அமிதமான கொள்கையில் போய்க் கொண்டே இருக்க வேண்டும். அப்போது ஒருபடி நமது பின்னாலேயே மக்கள் வந்து கொண்டிருப்பார்கள் என்று பேசியவுடன் மணமக்கள் தங்கள் ஒப்பந்தம் சொல்லி மாலை மாற்றிய பின் திருமணம் முடிந்தது.

இடஒதுக்கீட்டை எதிர்த்துப் பார்ப்பனர்கள் போர்க் கொடி!

உத்தரப்பிரதேசத்தின் கல்யாண் சிங் அமைச் சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவரும், "அகில பாரதீய பிராமண மகாசம்மேளன்" என்ற அமைப்பின் தேசியதலைவருமான கே.சி. பாண்டே உத்தரப்பிரதேசம் நொய்டாவில் நடந்த மாநாடு ஒன்றில் பேசியதாவது:
"அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதி அன்று இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து நாடு முழுவதும் முழு அடைப்பு நடத்தவிருக்கிறோம்" என்று கூறினார்.  "அகில பாரதீய பிராமண மகாசம்மேளன்" மற்றும் உயர்ஜாதி அமைப்பினரின் உள்ளரங்க மாநாடு உத்தரப்பிரதேசம் நொய்டாவில் நடைபெற்றது, இந்த மாநாட்டிற்கு தலைமை வகித்த முன்னாள் அமைச்சர் கே.சி. பாண்டே கூறியதாவது, "இட ஒதுக்கீட்டால் நாடு நாசமாகிக்கொண்டு இருக்கிறது, தேசத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு முறையை ஒழித்துக்கட்டவேண்டும், இதற்காக ஏப்ரல் 14 ஆம் தேதி நாடுமுழுவதும் முழு அடைப்பை அறிவித்துள்ளோம், இதற்கு இந்திய நாட்டின் வளர்ச்சியை ஆதரிக்கும் அனைவரும் ஆதரவு தரவேண்டும், இட ஒதுக்கீடு என்பதை தேசத் துரோகத்தை ஒட்டியே ஒன்றாகவே பலர் பார்க்கிறார்கள், அதில் நியாயமும் உள்ளதாகத் தெரிகிறது.
பிராமண  மகாசபா, பரசுராம் சேனா, விஷ்வ பாரதிசேனா, வஷிட்ட மகாசபா உள்ளிட்ட பல அமைப் புகள் எங்களுக்குத் தங்கள் ஆதரவைத் தந்துள்ளன. இந்த அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அதி காரமிக்க அரசியல் அமைப்பு ஒன்றைக் கொண்டுவர வலியுறுத்துகிறது.  அதே நேரத்தில் நீண்ட ஆண்டுகளாக பிராமணச் சமுதாயத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் முந்தைய காங்கிரசு, இன்றைய பாஜக அதற்கு செவிசாய்க்கவில்லை. இம்முறையும் பிராமணர்களுக்கான அதிகாரமிக்க அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்காவிட்டால் நாட்டிலுள்ள பிராமணர்கள் அனைவரும் நோட்டோவிற்கு வாக்களிப்பார்கள். நாடு முழுவதும் உள்ள தேசநலன் கொண்ட பல அமைப்புகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆகையால் ஏப்ரல் 14 ஆம் தேதியன்று வெற்றிகரமாக எங்கள் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்திக் காட்டுவோம்" என்று கூறினார்.
இடஒதுக்கீட்டைப் பார்ப்பனர்கள் எதிர்ப்பது ஒன்றும் புதிதல்ல. 1928இல் நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காலந் தொட்டு இந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டு தானிருக்கின்றனர். சென்னை மாநிலத்தில் 1928 முதல் செயல்பாட்டில் இருந்து வந்த இடஒதுக்கீட்டினை - சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்ததும் வராததுமாக நடந்த  முதல் காவு சென்னை மாநிலத்தில் இருந்து வந்த இடஒதுக்கீட்டுக்குத்தான்.
தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே பொங்கி எழுந்து, முதன் முதலாக இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துமாறு செய்யப்பட்டது.
பிற்படுத்தப்பட்டவர்களுக்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 340ஆம் பிரிவுப்படி கொண்டு வரப்பட்ட காகா கலேல்கர் ஆணையத்தின் பரிந்துரைகள் வெளிச்சத்துக்கு வராமலே இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டன.
பி.பி. மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இரண் டாவது ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெறுவதற்குப் பத்தாண்டுகள் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் திராவிடர் கழகம் நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஒவ்வொரு கட்டத்திலும் பார்ப்பனர்கள் முட்டுக் கட்டை போட்டனர் - ஏன் உண்ணாவிரதமே இருந்தனர். அதனை எதிர்த்து உண்ணும் விரதத்தை திராவிடர் கழகம் அறிவித்து அது முறியடிக்கப்பட்டது.
இப்பொழுது மீண்டும் இடஒதுக்கீட்டை ஒழிக்கப் பார்ப்பனர்கள் பூணூலை முறுக்கிக் கொண்டு புறப் பட்டுள்ளனர்.  ஆனால் இதே பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி தங்களுக்கும் இடஒதுக்கீட்டு தேவை என்று கோரிக்கை வைக்கிறார்களே அது எப்படி? ஏனிந்த முரண்பாடு?
9.3.1946இல் சேலத்தில் கூடிய பார்ப்பனர்கள் மாநாட் டில் பங்கேற்ற சர். சி.பி. இராமசாமி அய்யர் பார்ப் பனர்களுக்கு ஓர் அறிவுரை கூறினார்.
"வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால் அரசியல் நிர் வாகத்தில் தகுதியும், வினைத் திட்பமும் (விமீக்ஷீவீ ணீஸீபீ ணியீயீவீநீவீமீஸீநீஹ்) கெடலாயின" என்ற பல்லவியினை நீங்கள் பாடப்பாட பிராமணரல்லாதாரின் மனதைப் புண்படுத்து வதுமின்றி அவர்கள் பகைமையையும் கொள்கிறீர்கள்" என்று சொன்னதை நினைவூட்டுகிறோம் - எச்சரிக்கை!

தமிழ்நாட்டு மக்களின் உணர்வை பிரதமர் புரிந்து கொள்வாரா?

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிகளின் (9 கட்சிகள்) கூட்டத்தில் காவிரி நதி நீர் உரிமை குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிரி நீர் உரிமையில் தமிழ் நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்று அக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களுள் ஒன்றாகும்.
அந்த வகையில் நேற்று (12.4.2018) சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்குக் கருப்புக் கொடி காட்டுவதற்குத் தமிழ்நாட்டு மக்கள் கட்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு ஒரே குரலில் பொங்கு மாங்கடலென ஆர்ப்பரித்து எழுந்து நின்றது அசாதாரணமானதே!
மிகப் பெரிய அளவில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை அறிந்த நிலையில், பிரதமர் சாலை வழியாக சென்னையில் பயணிப்பதை அறவே தவிர்த்து ஹெலிகாப்டர் மூலமே தன் பயணத்தை அமைத்துக் கொண்டார்.
ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவிப்பதில் - கருப்புக் கொடி காட்டுவது என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றே.
அந்த வகையில் தமிழ்நாட்டில் பிரதமர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் கூடக் கருப்புக் கொடி காட்டப்பட்டதுண்டு. அவர்களும் அந்தக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை மதித்து அதனைப் பார்வையிட்ட வண்ணம் சென்ற வரலாறெல்லாம் தமிழ்நாட்டுக்கு உண்டு.
ஜனநாயக நெறிமுறைகளில் அறவே நம்பிக்கை இல்லாத இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 'எனக்குக் கருப்புக் கொடியா? அதனை ஏற்கப் போவதில்லை!' என்கிற முறையில் ஆகாயத்தில் பறந்து சென்றது - அவருக்குப் பெருமையைச் சேர்ப்பது ஆகாது.
56 அங்குல மார்பளவு கொண்டவன் நான் என்று மார்பு புடைத்துப் பேசிய வீராதி வீரராயிற்றே நரேந்திர மோடி. அந்த வீரம் இப்பொழுது எங்கே போயிற்று என்று சிறுவர்கள்கூட கெக்கலி கொட்டும் நிலைக்கு ஆளாகலாமா?
காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் சட்டப்படியும், நியாயப்படியும், நீதிப்படியும் மத்திய அரசு நடந்து கொண்டு இருந்திருக்குமானால் நெஞ்சை நிமிர்த்தி இந்தக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தைக்கூட சந்தித்து இருப்பார்.
குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுத்ததால் மக்களைச் சந்திக்கும் திராணியை அவருக்கு அளிக்கவில்லை என்பதுதான்  உளவியல் ரீதியான காரணமாகும்.
மக்களின் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை அவர் சந்திக்கத் தயாராக இல்லை என்றாலும் தமிழ்நாட்டு மக்கள் தலை நகரில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும், வீடுகளிலும் கருப்புக் கொடியை ஏற்றியும், கருப்புச் சட்டை அணிந்தும் தங்களின் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்களே; அரசின் உளவுத் துறை புள்ளி விவரத்துடன் இவற்றை எல்லாம் பிரதமரின் காதுக்கு எட்டச் செய்திருக்குமே! மாநில அரசு இந்தப் பிரச்சினையில் நடந்து கொண்ட விதம் வெட்கக் கேடானது. ஜனநாயக உணர்வை நாங்கள் மதிக்கிறோம் என்று கூறிக் கருப்புக் கொடி ஆர்ப் பாட்டத்தை அனுமதித்து இருக்க வேண்டாமா? மாறாக அவர்களையெல்லாம் கைது செய்ததானது - மோடியின் மீது விழுந்த வெகு மக்களின் வெறுப்பின் அளவில் இவர்களுக்கும் சேர்த்துப் பங்குக் கிடைத்து விட்டதே!
தமிழ்நாடு அரசுக்கு இது தேவைதானா? அதே நேரத்தில் ஒன்று மட்டும் வெளிப்படையாகி விட்டது. மத்திய அரசும், மாநில அரசும் வெகு மக்களின் உணர்வுக்கு எதிர்த் திசையில் பயணித்துக் கொண்டுள்ளன; மக்கள் சரியான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர் என்பது மட்டும் உண்மை.
"கோ பேக்ஃ மோடி" என்ற வாசகம் மிக அதிக அளவில் சமூக வலை தளங்களில் முதலிடத்தைப் பிடித்தது என்பது பிரதமர் மோடிக்குத் தேவை தானா? உலகைச் சுற்றும் வாலிபராகப் பறந்து பறந்து செல்லும் பிரதமர் மோடி. இந்த நிகழ்வுக்குப் பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்லுவார்?


ஓருண்மை மிகவும் பச்சையாகத் தெரிந்து விட்டது. கருநாடக மாநிலத்தில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலை மனதிற் கொண்டு, அப் பட்டமான அரசியல் இலாபத்துக்காக சட்டம், தீர்ப்பு, நியாயம் இவை அத்தனையையும் புறந்தள்ளி செயல் படுகிறார் பிரதமர் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தி யாவுக்கே தெரிந்து விட்டது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வை நேரில் நேற்றுத் தெரிந்து கொண்ட பிரதமர் நடுநிலையோடு நடந்து கொள்வாரா?

பாலியல் வன்கொடுமை பா.ஜ.க.வுக்குச் சர்க்கரைப் பொங்கல்!

சாமியார் முதல்வர் ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அங்கு பெண்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது, ரோமியா ஸ்குவாட்(ரோமியோ படை) என்ற பெயரில் காவல்துறை மற்றும் இந்துத்துவ அமைப்பினர்கள் கொண்ட ஒரு படையை நியமித்தார் முதல் அமைச்சர். இதன் பணி ஆண்களுடன் பெண்கள் சென்றால் அவர்களைப் பிடித்து அடிப்பதுதான்,    இந்தப் படையில் ஆதித்யநாத்தின் யுவவாகினி என்ற படையும் சேர்ந்து செய்த கொடுமைகள் ஏராளம், பள்ளித்தோழனுடன் சென்ற பெண்ணின் ஆடையைக் கிழித்து அவமானப்படுத்தியது, இஸ்லாமியர் ஒருவர் தனது வீட்டிற்கருகில் உள்ள இந்துப் பெண்ணுடன் கடைவீதிக்கு சென்றதால் சாலை நடுவில் வைத்து அந்த இஸ்லாமியருக்கு மொட்டை அடித்து அவமானப்படுத்தியது போன்றவை சாமியார் ஆட்சியில் நடந்தது.  அங்கு பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லை என்றாகி விட்டது.  இந்த நிலையில் 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டிருந்த தாயை சந்திக்கச் சென்று கொண்டு இருந்த 15 வயது சிறுமி பாஜகவின் உன்னாவ் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் குல்தீப் சிங் சென்கார் மற்றும் அவரது அடியாட்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இரண்டு நாட்கள் அந்தச் சிறுமியைத் தனது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து அவரை மிரட்டி சாலையில் விட்டு விட்டுச் சென்றுவிட்டார்.    இது தொடர்பாக அச்சிறுமி தனது தந்தையுடன் சென்று உன்னாவ் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அந்தப்புகாரை ஏற்காமல் அவர் மீது அரசுப் பணியாளரை பணிசெய்யவிடாமல் இடையூறு செய்தல் மற்றும் மிரட்டுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்து சிறையில் அடைத்தனர். பிறகு அவர் நீதிமன்றம் மூலம் பிணையில் விடுதலையானார்.   தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி நீதிபதிகளிடம் நேரிடையாகவே கூறினார். ஆனால் நீதிபதி புகாராக காவல்துறையினரிடம் கொடுக்கும்படிக் கூறிவிட்டார். மாவட்டக் காவல்துறை ஆணையர் உட்பட அனைவரிடம் புகார்கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் காவல்துறையின் மீது நம்பிக்கை இழந்து தலைநகர் லக்னோ வந்து முதல்வரைச் சந்திக்கத் திட்டமிட்டார். அவர் முதல்வரிடம் புகார் கொடுக்கச் சென்றுள்ளார் என்றதும், பாலியல் வன்கொடுமை செய்த சட்டப் பேரவை உறுப்பினர் குல்தீப் சிங்கின் சகோதரர், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் அடித்து உதைத்தார். இதில் படுகாயமடைந்த பெண்ணின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் சாமியார் முதல்வர் வீட்டின் முன்பு அவர் தற்கொலை செய்ய முயன்றார்.   அந்தப் பெண்ணின் தந்தை மருத்துவமனையில் மரணமடைந்தார் என்பதுதான் எத்தகைய கொடுமை!  விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வேறு வழியின்றி இதில் சம்பந்தப்பட்ட பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் சென்காரின் சகோதரர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.   உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஒராண்டில் மட்டும் 3000த் திற்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இதில் பெரும்பான்மை பதிவாகவில்லை என்றும் இப்பாதகச்செயலில் ஈடுபட்டவர்கள் பெரும் பாலானோர் பாஜக பிரமுகர்கள் என்று சமாஜிக் ஏக்தா மன்ச் என்ற அமைப்பு கூறியுள்ளது.   இந்த அமைப்பு அரசின் பெயரை மக்களிடையே கெடுக்க இது போன்ற போலியான புகார்களைக் கொடுத்து வருகிறது என்று உபி சாமியார் முதல்வர் ஆதித்யநாத்  நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் போது பேசினார். இவர் பேசி முடித்த ஒரு வாரத்திற்குள் சிறுமி பாஜக சட்டப் பேரவை உறுப்பினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் அவரின் தந்தை கொலையும்  நடந்துள்ளது.   இதே போல் ராஜஸ்தானிலும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பாஜக பிரமுகர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரமும் திசை திருப்பப்பட்டு அந்தப்பெண்ணின் உறவினர்கள் மீதே கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டது.   காஷ்மீர் மாநிலம், கட்டுவா பகுதியில் பல நாடோடிப் பிரிவு மக்கள் வசித்து வருகின்றனர். அந்த நாடோடி வகுப்பை சேர்ந்த எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக அக்கிராமத்தைச் சேர்ந்த இந்து அமைப்பினர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் கூறும் போது அந்த நாடோடிகள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை எங்கள் பகுதியில் இருந்து விரட்ட இதைச் செய்தோம் என்றும் ஒப்புக் கொண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கு கூடிய பாஜக வழக்குரைஞர்கள்  கொலைவழக்கில்  கைதானவர்கள் குற்ற மற்றவர்கள் என்று கூறி நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்திற்கு இந்து அமைப்பான இந்து ஏக்தா மன்ச் மற்றும் காஷ்மீர் அமைச்சரவையில் உள்ள சில பாஜக அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
இந்துத்துவாவில் பெண்கள் என்றால் படுக்கையறைப் பொருள் தானே! படுக்கை, ஆசனம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் என்கிறது மனுதர்மம் (அத்தியாயம் 9 சுலோகம் 17).

அம்பேத்கருக்கு காவி வண்ணமா?

உத்தரப்பிரதேசம், படான் என்ற ஊரில் உள்ள அம்பேத்கர் சிலை இந்துத்துவா கும்பலால் கடந்த வியாழன் இரவு சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக குற்றவாளிகளைக் கைதுசெய்யவேண்டும் என்று பொது மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் கடந்த திங்களன்று காலை அங்கு மீண்டும் புதிய அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது.
புதிய சிலை அம்பேத்கரின் அடையாளமான நீல நிற கோட் மற்றும் சூட்டுடன் இல்லாமல் வட இந்திய பார்ப்பனப் புரோகி தர்கள் அணியும் குர்தா பைஜாமாவுடன் (ஷெர்வானி) அந்தச்சிலை இருந்தது. அதுமட்டுமல்ல; அவரது சிலை முழுவதும் காவிவண்ணம் பூசப்பட்டு இருந்தது, அவரது கையில் இருந்த அரசியல் சாசன நூலும் காவிவண்ணத்தில் இருந்தது, இதனை அடுத்து அப்பகுதியில் சர்ச்சைகள் வெடித்தன.
அனைத்தையும் காவிமயமாக்கும் முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், அம்பேத்கர் சிலையிலும் அதனை வெளிக்காட்டியுள்ளனர். அண்மைக்காலமாக உத்தரப்பிரதேசத்தில் பூங்காக்கள், கட்டடங்கள் என அனைத்தும் காவி நிறம் பூசப்பட்டன.  இந்த காவி நிறம் தொடர்பாக மாவட்ட நிர்வாகமோ, உத்தரப் பிரதேச அரசோ எந்த ஒரு பதிலும் கூறவில்லை. இந்த நிலையில் அப்பகுதி பகுஜன் சமாஜ்கட்சியினரே முன் வந்து அம்பேத்கரின் சிலைக்கு நீலநிறம் அடித்து காவி வண் ணத்தை மறைத்தனர்.
சமூக புரட்சியாளர் பீம்ராவ் அம்பேத்கரின் பெயரை இனி பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றே குறிப்பிட வேண்டும் என்று 29.3.2018 அன்று உத்தரப் பிரதேச அரசு ஆணை ஒன்றை பிறப்பித்தது. இதன் மூலம் அரசு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளிலும், மாநில கல்வி தொடர்பான அனைத்து நூல்களிலும் இனி ராம்ஜி அம் பேத்கர் என்றே எழுதப்படுமாம்.  எப்போதும் காவி உடையில் இருக்கும் சாமியார் ஆதித்யநாத் மாநிலத்தையே காவி நிறத்தில் மாற்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இன்னும் அங்கு இருக்கும் தண்ணீர், வானம் மட்டுமே காவி வண்ணம் பூசப்படவில்லை. அந்த அளவுக்குக் காவி மீது வெறியுடன் இருக்கிறார் உபி முதல்வர். இன்னும் எந்தெந்த இடங் களுக்கு எல்லாம் காவி நிறத்தைப் பூசச் சொல்வார் என்று அதிகாரிகள் அங்கு குழம்பிப் போய் கிடக்கிறார்கள். சாமியார் முதல்வரின் அலுவலகம் காவி நிறத்தில் காட்சி யளிக்கிறது. அங்கு இருக்கும் எல்லா சுவர்களும் காவிமய மாக்கப்பட்டுள்ளன. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு புள்ளி கூட வேறு நிறத்தில் வைக்கப்படவில்லை. காவல் நிலையங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், பூங் காக்கள் என்று  எல்லாமே காவியில் நிரம்பி இருக்கின்றன. இதற்காக தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு இருக்கும் சாலை நடுவில் உள்ள தடுப்புக் கம்பிகளிலும் காவி நிறம் அடித்து இருக்கிறார்கள்.அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்பில் வழங்கும் பொருட் கள் என அனைத்தையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் முதல்வர் இல்லமான லால் பகதூர் சாஸ்திரி பவன் காவி நிறத்துக்கு மாறியது. இதே போல் தலைமை செயலகத்துக்கும் காவி வண்ணம் பூசப்பட்டது. முதல்வர் அலுவலகத்தில் உள்ள அவரது இருக்கையிலும் காவி நிறத் துண்டு  இடம்பெற்றது. மாநில அரசுப் பேருந்துகள் அனைத்தும் காவி நிறத்திற்கு மாற் றப்பட்டுவிட்டன.
லக்னோவில் உள்ள ஹஜ் இல்லமும் காவியாகியது. ஹஜ் இல்லத்தின் வெளிப்புற சுவரில் காவி வண்ணம் பூசப்பட்டது. நான் இந்துவாக பிறந்துவிட்டேன், ஆனால் இந்து வாக இறக்கமாட்டேன் என்று சொல்லி தனது இறுதிக் காலத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுடன் நாக்பூர் நகரில் பவுத்த மதம் தழுவிய அண்ணல் அம்பேத்கரை காவிகள் இந்துத்துவ வாதியாக காண்பிக்க பல முயற்சி களிலும் இறங்கி வருகின்றனர்.
2017ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் ஒன்றில் மேடையில் அம்பேத்கர் படமும் இருந்தது, ஆனால் அந்தப்படம் மற்ற தலைவர்களின் படத்துடன்  சேர்க்காமல் தனித்து வைக்கப்பட்டிருந்தது, அதுமட்டு மல்ல கூட்டம் முடிந்த பிறகு மற்ற படங்களை எடுத்துச் சென்று விட்ட நிலையில், அம்பேத்கர் படத்தை மட்டும் மேடையிலேயே விட்டுச் சென்றுவிட்டனர். இதைக் கண்ட அப் பகுதி மக்கள் அந்தப்படத்தை எடுத்துச்சென்று தங்கள் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் ஒன்றில் மாட்டினர்.
அம்பேத்கர் சிலைகளை உடைப்பது இந்துத்துவ அமைப்பினர் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒரு பக்கத்தில் அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண் டாடுவது, அவர் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவிப்பது - இன்னொரு பக்கத்தில் அண்ணல் அம்பேத் கருக்கு இந்துத்துவா வடிவம் கொடுப்பது எல்லாம் பச்சை அயோக்கியத்தனமும், பார்ப்பனீயத்துக்கே உரித் தான திரிபு வேலையுமாகும்.


சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்ட மக்களும் குறி வைத்துத் தாக்கப்படுகின்றனர். வெகுமக்கள் எழுச்சிப் புயல் வெடித்துக் கிளம்ப வேண்டும்; அதிகார பீடத்தி லிருந்து காவிகளை அகற்றிட சூளுரைப்போம்,  அதனை வெற்றியாக்கிக் காட்டுவோம்! இதுவே முழுமுதற் பணி யாக இருக்க முடியும்!!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...