Showing posts with label மகளிரணி பாசறை. Show all posts
Showing posts with label மகளிரணி பாசறை. Show all posts

Monday, July 10, 2017

திராவிடர் கழக மகளிரணி , மகளிரணி பாசறை நடத்திய கலைநிகழ்ச்சி, படத்திறப்பு, விளையாட்டுப் போட்டிகள்




காமலாபுரம், ஜூலை 10 திராவிடர் கழக மகளிரணி, மகளிரணி பாசறை நடத்திய கலை நிகழ்ச்சி, படத் திறப்பு, விளையாட்டுப் போட்டிகள் 9.7.2017 அன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை காமலாபுரம் அரு ணாசலம் இல்லத்தில் நடைபெற் றது.

காமலாபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு செல்வி சர வணன் மாலை அணிவிக்க, கழக கொடியை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.சாந்தி ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
இந்நிகழ்விற்கு மகளிர் அணி தோழியர் தேவிகா தலைமை வகிக்க,  உமா மாணிக்கம் அனை வரையும் வரவேற்க இனிதே துவங்கியது ‘பெரியார்புரம்’ நிகழ்வுகள்.

 (தமிழர் தலைவர் அவர் களால் அன்போடு அழைக்கப் படும் கிராமம் என்பது சிறப்பு)

நிகழ்ச்சியின் துவக்கமாக பொற்செழியன் அவர்களின் ‘ஈரோட்டு பூகம்பம்’ பகுத்தறிவு கலைநிகழ்ச்சி ஊர் மக்களை வெகுவாகக் கவர்ந்தது. தொடர்ந்து மாணவ, மாணவியர்களோடு கழகத் தோழர், தோழியர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத் தப்பட்டன இத்தோடு முற்பகல் நிகழ்வு முடிந்தது பகல் உணவாக எப்போதும் போல் புலால் விருந்து வழங்கப் பட்டது. கழக குடும்பங்கள் ஒன் றிணைத்து உணவு சமைத்து பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு உருவாக்கபட்டது
உணவு இடைவேளைக்குப் பிறகு மாணவ, மாணவியர்களுக்கு அண்ணா சரவணன் மற்றும் பழ. வெங்கடாசலம் சாந்தி ஆகி யோரின் கருத்துரை நிகழ்த்தப்பட் டது.

பட்டிமன்றம்
அதை தொடர்ந்து பட்டிமன் றம் எழுச்சியோடு துவங்கியது

மணியம்மையார்  படம் திறப்பு

இதன் தொடக்கமாக மணி யம்மையர் படம் உமா அவர் களால் திறந்து வைக்கப்பட்டது.
பட்டிமன்றத்தின் தலைப்பு தந்தை பெரியார் தொண்டில் விஞ்சி நிற்பது பெண் உரிமையா? பகுத்தறிவா? என்ற தலைப்புக்கு தகடூர் தமிழ்செல்வி மாநில ப.க.  செயல் தலைவர் அவர்கள் நடுவர் பொறுப்பை வகிக்க,

‘பெண் உரிமையே’ என்ற தலைப்பில் மு இந்திராகாந்தி  (மாவட்ட ப.க. தலைவர்), கதிர் செந்தில் மற்றும் மாவட்ட இளையராணி துணை செயலாளர் பெ.கோவிந்தராஜ் தங்கள் விவாதத்தை வைக்க,

அதற்குப் பதில் கொடுக்க ‘பகுத்தறிவே’ என்ற அணியில் திராவிடர் கழக மாவட்ட தலை வர் வீ சிவாஜி, செ.அனந்தசைனி (கிருஷ்ணகிரி) மற்றும் மகளிரணி பாசறை அமைப்பாளர் பெ. கோகிலா ஆகியோரின் எதிர் விவாதம் மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
இறுதியில் பட்டிமன்ற நடு வர் இறுதியில்  ‘பெண் உரி மையே’ என்ற தீர்ப்போடு நிகழ்ச்சி முடிந்தது.

இறுதியாக காசியம்மாள் நன்றி கூறினார்.


பரிசுகளை வழங்கி சிறப்புரை

திராவிடர் கழகம்  மாநில அமைப்பு செயலாளர் தருமபுரி ஊமை.ஜெயராமன்  அவர்கள் பரிசுகளை வழங்கி சிறப்புரை யாற்றினார்

 நிகழ்ச்சியில் பங்கேற்றோர்

ராஜா, மாணிக்கம், கோவிந்த சாமி அருணாசலம், சரவணன், முருகன்,  மு.சி.அறிவழகன், சின்னசாமி, மு சிசுபாலன், கரு பாலன், கிருஷ்ணன், ம.சுதா, ச.செல்வி, மென்மை, அரங்க. கோவிந்தராஜ், நளினி, அ தமிழ்ச் செல்வன் , மத்தூர் முருகேசன், விமல் சோபியா, அரசு, பழனி , எஸ்.எஸ்.மணியம்மை, சங்கரி, செல்வி சிவாஜி, கவிதா, தமிழரசு, செல்லதுரை, மாரவடி முனி யப்பன், வைரவேல், ராமசாமி, ம.சுந்தரம், சத்தியமூர்த்தி
பெரியார் பிஞ்சுகள் கனி மொழி, அன்பு, உதயா மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...