Showing posts with label தமிழர் தலைவர் பேட்டி. Show all posts
Showing posts with label தமிழர் தலைவர் பேட்டி. Show all posts

Tuesday, November 7, 2017

'நீட்' தேர்வு: மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்காததற்குக் காரணம் - மடியில் கனமே!


நீட்' தேர்வு: மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்காததற்குக் காரணம் - மடியில் கனமே!

புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி

புதுச்சேரி, நவ.6 'நீட்' தொடர்பாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் குறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காதது ஏன் என்பது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டியளித்தார்.

புதுவைக்கு நேற்று (5.11.2017) நீட் எதிர்ப்பு விளக்கக் கருத்தரங்கத்தில் பங்கேற்க சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து கருத்தரங்கம், போராட்டங்கள் எல்லாம் நடத்தினீர்கள்; இதுவரையில் தமிழக அரசு எந்தவிதமான நடவடிக் கையையும் எடுக்கவில்லை. எந்த மாதிரியான அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: தமிழக அரசு எல்லாவற்றையும் மேலே இருக்கிறவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். ஒரு பக்கம் நீட்டை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்கிறார்கள். கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இரண்டு மசோதாக்கள் என்னாயிற்று? என்று மத்திய அரசிடம் கேட்பதற்குக்கூட இவர்கள் தயாராக இல்லை. நாளை தமிழகத்திற்குப் பிரதமர் வருகிறார்; அவரிடம் எத்தனையோ விஷயங்களை சொல்லலாம். ஆனால், அவர்கள் சொல்வதற்குத் தயாராக இல்லை. காரணம் என்னவென்றால், அவர் களுடைய கட்சிப் பிரச்சினையையே பெரிதாக நினைக்கிறார்களே தவிர, மக்கள் பிரச்சினைகளை அவர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள்.

எனவேதான், மீண்டும் மீண்டும் ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒன்றிணைத்து இந்தப் பணியை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். ஏற்கெனவே செய்ததுபோன்று. வீதிமன்றப் போராட்டம் மட்டுமல்ல; நீதிமன்றத் சட்டப் போராட்டம் - நீதித் துறையில் உள்ளவர்களுக்கு இதைப்பற்றி வலிமையாக சொல்லக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்.

செய்தியாளர்: தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காததற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: மடியில் கனம், வழியில் பயம்!

செய்தியாளர்: கந்து வட்டி தொடர்பாக கார்ட்டூன் வரைந்த பாலா கைது செய்யப்பட்டு இருக்கிறாரே?

தமிழர் தலைவர்: எல்லாவற்றிலும் மத்திய அரசைப் பின்பற்றுகிறவர்கள் இதிலும் பின்பற்றுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

பாலாமீது போடப்பட்டுள்ள வழக்கை விலக்கிக் கொண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும்.

Friday, August 11, 2017

கலைஞரின் மூத்த பிள்ளையான ‘முரசொலி'யின் பவள விழா காட்சியரங்கம் திறப்பு விழா ஓர் இனத்தின் எழுச்சி - பகுத்தறிவின் வெற்றி-கொள்கையின் மாட்சி!



சென்னை, ஆக.10
முரசொலி ஏடு என்பது வெறும் ஓர் ஏடல்ல; அது பவள விழா காண்கிறது என்றால், இதற்குள் ஓர் இனத்தின் எழுச்சி - பகுத்தறிவின் வெற்றி - கொள்கையின் மாட்சி! - இதனையொட்டி உருவாக்கப்பட்டுள்ள காட்சி அரங் கம் நிரந்தரமாக்கப்படவேண்டும் - இளைஞர்கள் பார்க்க வேண்டும் - மனதில் பதிக்கவேண்டும் என்றார் ‘விடுதலை' ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை முரசொலி அலுவ லகத்தில், முரசொலியின் பவள விழாவினையொட்டி, இன்று (10.8.2017) ‘முரசொலி' காட்சி அரங்கத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில், இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம் திறந்து வைத்தார்.
அந்நிகழ்வில், செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது:
நண்பர்களே, பெருமதிப்பிற்குரிய சிறப்புமிகுந்த கலைஞ ரின் மூத்த பிள்ளையான நம்முடைய பகுத்தறிவுச் செல்வம் திராவிடர் இன உணர்ச்சியினுடைய போர் முரசான முரசொலி யினுடைய  பவள விழா கண்காட்சி நிகழ்ச்சியை கருத்துக் காட்சியாக்கிய இந்நிகழ்ச்சியைத் திறந்து வைத்த இந்துக் குழுமத்தினுடைய தலைவர் பெருமதிப்பிற்குரிய இந்து என்.ராம் அவர்களே,
துண்டறிக்கையாகத் தொடங்கி...
ஒரு துண்டறிக்கையாக தொடங்கப் பெற்ற இந்த முரசொலி நாளேடு இன்றைக்கு வளர்ந்து எந்த அளவிற்கு அதனுடைய பவள விழாவில் ஓர் அற்புதமான வரலாற்று ஆவணத் தொகுப்பாக அதனை ஆக்கி, சுவைபட வருங் காலத் தலைமுறையினருக்கும், இன்றைய இளைய தலை முறையினருக்கும் தெரிவிக்கலாம் என்ற ஆற்றலோடு செய்திருக்கின்ற நம்முடைய அருமை திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் அன்பு சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே, ஊடக நண்பர்களே, இயக்கத் தோழர்களே, முரசொலியின் வாசகப் பெருமக்களே, வரலாற்றில் ஒரு பொன் னேடு! முரசொலியினுடைய பவள விழா கொண்டாடப்படும் இன்றைய நாள் திராவிடர் இயக்கத்தினுடைய எழுச்சி நாள்!
இது ஒரு நாளேட்டின் பவள விழா என்பதல்ல - ஓர் இனத்தினுடைய வீழ்ச்சியிலிருந்து எழுச்சி எப்படியெல்லாம் துவங்க முடியும் - அதற்கு எப்படிப்பட்ட போர்க் கருவிகள் தேவை என்பதில் - அது சந்தித்த வேதனைகள் - கலைஞர் மொழியில் சொல்லவேண்டுமானால் - அது சந்தித்த வேத னைகள் - அது சந்தித்த சோதனைகள் - பிறகு அது சாதித்த சாதனைகள் அத்தனையும், சுருக்கமாக, விளக்கமாக, மிக அருமையாக இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கண்காட்சி என்பதைவிட கருத்துக்காட்சி இது!
இதற்கு உழைத்த தோழர்கள் அத்துணைப் பேருக்கும் நம் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள் கிறோம். இந்த முரசொலிக்கு ஒரு மிகப்பெரிய பாரம்பரியம் உண்டு. அதனுடைய நிறுவன ஆசிரியராக நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர், அதற்குப் பிறகு பெருமதிப்பிற் குரிய முரசொலி மாறன், இன்றைக்கும் அதைத் தோளில் சுமந்து கொண்டு சிறப்பாக, சிறைச்சாலைக்கும் சென்று சட்டசபையில், கூண்டிலே ஏற்றப்பட்ட நம்முடைய முரசொலி செல்வம்,
இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து, மிகச் சிறப் பாக தமிழ் இனத்தினுடைய தோள்கள்மீது ஏறி நிற்கக்கூடிய ஆற்றலை வழங்கியிருக்கக்கூடிய நம்முடைய தளபதி ஸ்டா லின் அவர்கள்  - இவர்கள் அத்துணைப் பேரும் இணைந்து ஒரு பெரிய வரலாற்று ஆவணத்தைக் காட்டியிருக்கிறார்கள்.
எனவே, இது ஒரு நாளேட்டினுடைய வரலாறு மட்டுமல்ல - ஓர் இனத்தின் எழுச்சி - பகுத்தறிவின் வெற்றி - கொள் கையின் மாட்சி! எனவே, அத்துணைப் பேரும் காணுவதற்கு  இந்தக் கருத்துக்காட்சியை நிரந்தரமாக்க வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். ஒவ்வொருவரும் இந்த வரலாற்று நிகழ்வினைப் பார்க்கவேண்டும்.
எனவேதான், குறிப்பாக, நெருக்கடி காலத்தில், இந்தப் பத்திரிகை சந்தித்த எதிர்ப்புகள், வேதனைகள் - அதேபோல, பிற்காலத்தில் இது எத்தனையோ சங்கடங்களை சந்தித்திருக் கிறது. பதவி மட்டுமே அரசியல் அல்ல. அதேநேரத்தில், பல் வேறு தியாகங்களுடைய தொகுப்பும் - நடந்து வந்த பாதை கள் கரடு முரடான பாதைகளானாலும், லட்சியப் பாதைகள் என்றைக்கும் வெற்றிப் பாதையாக அமையும் என்ற நம்பிக் கையை ஊட்டக்கூடிய இந்தக் கருத்துக்காட்சி தொடர்ந்து பல லட்சக்கணக்கான மக்களால், குறிப்பாக இளைய தலைமுறையினரால் பாதுகாக்கப்பட்டு பரப்பப்பட வேண் டும் - பார்க்கப்படவேண்டும் - மனதிலே பதிக்கப்பட வேண்டும்.
நன்றி,வணக்கம்!
வாழ்க பெரியார்! வாழ்க கலைஞர்! வாழ்க முரசொலி! வளர்க திராவிடத்தின் எழுச்சி!
- இவ்வாறு திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tuesday, September 22, 2015

அரசு அதிகாரிகளின் தற்கொலைப் பட்டியல் நீண்டு கொண்டே இருப்பது தமிழக அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகாது!

அரசு அதிகாரிகளின் தற்கொலைப் பட்டியல்  நீண்டு கொண்டே இருப்பது தமிழக அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகாது!

தமிழர் தலைவர் பேட்டி
நாகுடி, செப்.21- தமிழக அரசு அதிகாரிகளின் தற்கொலைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்வது இந்த அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகாது என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
20.9.2015 அன்று புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
மத்திய அரசுக்கு வலியுறுத்தவேண்டும்!
நடுவர் மன்றத் தீர்ப்பின்படி நம்முடைய காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான நீர்வரத்து கருநாடக அரசு மறுத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், கருநாடக அரசைப் பார்த்து ஒவ்வொரு முறையும் நாம் மனு போட்டு கேட்டுக் கொண்டிருப்பதைவிட, அடிப்படையில் தெளிவாக செய்யவேண்டியது - தமிழகத்தில் உள்ள அத்துணை கட்சிகளும் சேர்ந்து தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு செய்தி, ஏன் இன்னமும் டில்லி மேல்முறையீட்டு மன்றத்தை - உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்து, பல ஆண்டுகள் ஆன பிறகும்கூட, அதனை இன்னமும் நடைமுறைக்குக் கொண்டு வராமல் மத்திய அரசு இருக்கவேண்டும்? இதனை வலியுறுத்த அத்துணை இயக்க நண்பர்களும், தலைவர்களும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
இதனை வலியுறுத்தினாலே, அதனுடைய கடமையை அது தாராளமாகச் செய்யும். அந்த வாய்ப்பை உரு வாக்கவேண்டும்.
அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் அழுத்தம் தரவேண்டும்!
அதுபோலவே, ஈழத்தில் நடந்த இனப்படு கொலையைப்பற்றி விசாரிக்க சர்வதேச விசாரணை  தேவை. தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர் களால் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மற்ற கட்சித் தலைவர்களால் வரவேற்கப்பட்ட சூழ்நிலையில், மத்திய அரசு அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் அழுத்தம் தரக்கூடிய அளவிற்கு, அய்.நா. சபையில், மனித உரிமை அமைப்பில் அதற்கு வேண்டிய உரிய முயற்சியை எடுக்கவேண்டும்.
ஏற்கெனவே முதலமைச்சர் அவர்கள் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய அந்தத் தீர்மானத்தில், அய்ந்து முறை பல்வேறு செய்திகளைச் சொல்லியிருக்கிறோம் என்று சொன்னார்கள். அய்ந்து முறை பல்வேறு செய்திகளைச் சொல்லியிருந்தாலும், எது செயல்படுத்தப் பட்டிருக்கிறது என்பது இன்னும் தெரியாத சூழ்நிலை இருக்கிறது. ஆகவே, அந்த சூழ்நிலைக்கு அழுத்தம் தரக்கூடிய கடமை நம் எல்லோருக்கும் உண்டு. ஆகவே, இந்தப் பிரச்சினையில் மீண்டும் மீண்டும் கடிதம், தீர்மானங்களோடு நிறுத்திவிடாமல், மத்திய அரசுக்கு அனைவரும் ஒத்த குரலில் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்பது மிகமிக முக்கியமாகும்.
பகுத்தறிவு பூமியில் நரபலியா...?
அதுபோன்று, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நரபலி என்கிற சொல்லைக் கேட்கும்போதே அருவருப்பாக இருக்கின்றது. இந்தப் பகுத்தறிவு பூமியில் இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பது மிகமிக வேதனைக்கும், வெட் கப்படக்கூடிய  சூழ்நிலையாகும். இதற்குரிய நடவடிக் கைகளை தெளிவாக எடுக்கவேண்டிய கடமை மாநில அரசுக்கு இருக்கிறது. அதற்காகப் பதில் சொல்லவேண்டிய கடமையும் இருக்கிறது. அதனை உறுதியாகச் செய்ய வேண்டும். நாடு போகின்ற போக்கில், மிகத் தெளிவாக இந்தச் செய்திகளை உருவாக்கிக் காட்டவேண்டியது மிகப்பெரிய பொறுப்பாகும்.
அரசு அதிகாரிகள் தற்கொலை
மாநில அரசு அதிகாரிகள் தற்கொலை பட்டியல் நீண்டு கொண்டே இருப்பது இந்த அரசுக்குப் பெருமை தருவ தல்ல. எனவே, அதற்குத் தகுந்த விளக்கமும், மாற்றமும் தேவை. அதுகுறித்து மக்களுக்கு ஒரு தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியமாகும்.
கட்சி மாறுதலைத் தடுக்காத சட்டம் இருக்கும்வரை...
செய்தியாளர்:தேர்தல் நெருங்கி விட்டாலே,  திராவிட கட்சியில் உள்ளவர்கள் கட்சி
மாறுகிறார்களே அதுபற்றி...?
தமிழர் தலைவர்: கட்சி மாறுதலைத் தடுக்காத சட்டம் இருக்கின்ற வரையில், கட்சிகள் மாறுகிறார்கள். கட்சி மாறுவது கூடாது என்று சொன்னால், கட்சிகளை உரு வாக்குவார்கள்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...