Showing posts with label நாடாளுமன்ற நிதித் துறை நிலைக் குழு சரணா கதி அறிவிப்பு!. Show all posts
Showing posts with label நாடாளுமன்ற நிதித் துறை நிலைக் குழு சரணா கதி அறிவிப்பு!. Show all posts

Friday, June 28, 2019

கறுப்புப் பணம் கணக்கிடும் முயற்சி கைவிடப்பட்டது!

மூன்று தேசிய அமைப்பு களும் மிகவும் வேறுபட்ட வெவ்வேறு மதிப்பீடுகளை அளித் திருப்பதால் இந்தியாவுக்கு உள் ளேயும், வெளியேயும் இருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணம் மொத்தம் எவ்வளவு என்பதைக் கணக்கிடுவதை கைவிட்டு விட்ட தாக நாடாளுமன்றத்தின் நிதித் துறை நிலைக்குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து 'தி இந்து" ஆங்கில நாளேட்டின் 25.6.2019 இதழில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டி ருப்பதாவது:
பல்வேறு அரசு அமைப்புகளும் வெவ்வேறு முறைகளைப் பின்பற் றுவதால், அவற்றிடையே வேறு பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு, வேறு பட்ட புள்ளி விவரங்கள் கொடுக்கப் பட்டு இருப்பதால், இந்தியாவிற்கு உள்ளேயும், வெளியேயும் உலவும் கறுப்புப் பணத்தின் மொத்த அள வைக் கணக்கிடுவதைக் கைவிட்டு விட்டதாக நாடாளுமன்ற நிதித் துறை நிலைக்குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழு குறிப்பிட்டுள்ள மூன்று அமைப் புகள் பொது நிதி மற்றும் கொள் கைக்கான தேசியக் கல்வி நிலையம், நிதி மேலாண்மைக்கான தேசியக் கல்வி நிலையம் மற்றும் மேம்படுத் தப்பட்ட பொருளாதார ஆராய்ச் சிக்கான தேசிய கவுன்சில் ஆகியவை நாட்டில் உள்ள கணக்கில் வராத வருமானம் ஆகிய கறுப்புப் பணம் பற்றிய மதிப்பீடுகளைத் தெரிவித் துள்ளன. அவற்றின் மதிப்பீடுகள் கடுமையாக வேறுபட்டுள்ளன. அவற்றின் இடையேயான வேறு பாடு மொத்த உள்நாட்டு உற் பத்தியில் 7 சதவிகிதத்திலிருந்து 120 சதவிகிதம் வரை உள்ளது.
இதன் மூலம் நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள கறுப்புப் பணம் பற்றிய நம்பகமான மதிப்பீட்டை பெறுவது இயலாத தாகத் தோன்றுகிறது. இதற்கு காரணம் இந்த அமைப்புகள் பின் பற்றிய நடைமுறைகள் வேறுபட்டு இருப்பதேயாகும். மூன்று அமைப்பு களும் முடிவுக்கு வந்துள்ள கணக் கில் வராத வருவாயின் அளவு வேறுபட்டு உள்ளதால் அதைக் கணக்கிடுவது கடினமாக உள்ளது.
அறிக்கையில் வருவாய்த் துறைச் செயலாளர் அஜய் பூஷண் பாண்டே, "இந்தியாவில் அவற்றைக் கணக்கிடுவதற்கான பொருத்தமான முறையைக் கண்டுபிடிப்பதில் ஒத்தக் கருத்து ஏற்படவில்லை" என்று கூறியதாகக் குறிப்பிடப்பட் டுள்ளது. எனவே, நாடாளுமன்ற நிதித் துறை நிலைக்குழு கறுப்புப் பணத்தைத் தடுப்பதற்கான பல் வேறு நடவடிக்கைகளை விவரித் துள்ளது. நேரம் குறைவாக இருப்ப தாலும், செயல்படுவதற்கான வல்லு நர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், இந்த மதிப்பீடுகள் முதற்கட்டமானவையாக மட்டுமே கருதப்படக் கூடியவையாகும்.
இதற்கிடையில், நிதி அமைச்சகம் (வருவாய்த் துறை) கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதில் மிக வும் தீவிரமாகச் செயல்பட்டு, குற்றம் செய்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டுக்கு உள் ளேயும், வெளியேயும் இந்த நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும். இவற்றுடன் கறுப்புப் பணம் தொடர்பாக அமைக்கப் பட்ட 7 சிறப்புப் புலனாய்வுக் குழுக் களின் அறிக்கைகளின்மீது தொடர் நட வடிக்கைகள் மேற்கொள்ளவும் வே ண்டும் என்று அந்த நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இவ்வாறு "தி இந்து ஆங்கில நாளேட்டின் சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...