Thursday, February 25, 2016
கிறித்தவர்களைச் சீண்டும் இந்துத்துவாவாதிகள்
Saturday, January 24, 2015
நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா?....
உலகத்தின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருக்கிறேன்,,, என்று உறுதிமொழி கொடுத்தார் இயேசுநாதர். யாரிடம் எப்போது இப்படிப்பட்டதொரு வாக்குறுதியை வழங்கினார்? யோவான் என்பவர் பத்மு என்கின்ற தீவில், தனிமையிலே இருந்தபோது, கனவிலே காட்சியளித்த இயேசு சொன்ன இந்த வார்த்தை களின்பேரில் நூற்றுக்குநூறு நம்பிக்கை வைத்து, அவரது அடியவர்கள் இன்றும் இயேசுவுடன் ஜெபம் என்ற பேரில் உரையாடுகின்றனர். இயேசு அப்பா என பாசம் கலந்த உரிமையுடன் உறவாடி வருகின்றார்கள்.
- ஜோதிடப் புரட்டை புரிந்து கொள்வீர்!
- பனை ஓலைகளின் பின்புறத்தில் பார்ப்பனர்களின் சித்து விளையாட்டு
- பிரதமர் மனைவியின் பரிதாப நிலை
- பரிணாமத்தைத் தவிர எதுவுமே அர்த்தமுள்ளதாக இருக்க முடியாது!
- முப்பெரும்கேடுகள்
- எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தின் இட மதிப்பு ரூ. ஒரு லட்சம் உண்மைதான்
- நவம்பர் 21 சர்வதேச மீன்வள நாள்
- பி.ஜே.பி. காலூன்ற சூழ்ச்சிகள்-திட்டங்கள்! அம்பலப்படுத்துகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா
- இந்தியாவின் மனச்சாட்சிக்கு விடுக்கப்பட்ட உருக்கமான வேண்டுகோள்
- தேவன் சொல்வதெல்லாம் சரியா?
Tuesday, July 8, 2014
சுருக்கேள்விகள்..... மனிதன் கேட்கிறான்
அனைவரும் கடவுளின் குழந்தைகள் எனில், சோமாலியா மக்கள் யாருடைய குழந்தைகள்?
ஈரேழு உலகிற்கும் படைப்பின் கடவுள் பிரமன் எனில் - வேறு மதம் சார்ந்தவர்கள் யாரால் படைக்கப்பட்டார்கள்?
முற்றும் துறந்தவன் முனிவன், முனிவர்க் கெல்லாம் முனிவன் கடவுள் எனில் - பல கோடீஸ்வரக் கடவுள்கள் இருப்பது எப்படி?
தூணிலும் இருப்பான், துரும்பிலும், இருப்பான் கடவுள் எனில், தனிப்பட்ட முறையில் கோடீஸ்வரர்கள் எதற்கு?
பால் அபிஷேகம், தேன் அபிஷேகம் செய்வதன் மூலம் கடவுளின் ஆசி கிடைக்கும் எனில், வழி அற்ற வறியவனுக்கு கடவுளின் ஆசி எப்படிக் கிடைக்கும்?
கோயில் திருவிழாக்கள், ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் கலவரங்களை ஏற்படுத்துமாயின் கலவரங்களை ஏற்படுத்தும் கடவுளும், மதங்களும் தேவையா?
எல்லாம் விதியின் செயல் எனில், தண்டனை ஏன் நமக்கு?
ஒழுக்கத்தில் பிறந்த கடவுளைக் கவர, திருவிழாக்களில் அரைகுறை ஆடைகளுடன் ஆட்டங்களை ஆடச் சொன்னது யார்?
எல்லாம் அவன் செயல் எனில், குற்றங்களுக்குப் பின்னாலும் கடவுள் நிற்கிறாரா?
எல்லாவற்றையும் காக்கும் கடவுளைக் காக்க, கதவும் பூட்டும் எதற்கு?
நல்லவர் மனதெங்கும் கடவுள் உள்ளார் எனில், கடவுளை மலையேறித் தரிசிக்க வேண்டிய அவசியம் என்ன?
கடவுள் முன் அனைவரும் சமம் எனில், சிறப்புக் கட்டண நுழைவுவாயில் எதற்கு?
பாவத்தின் சம்பளம் மரணம் எனில், பிறந்த குழந்தைகளும் இறப்பது ஏன்?
சமஸ்கிருதம் கடவுளின் மொழி எனில், சமஸ்கிருதம் தெரியாதவர்கள் கடவுளை எவ்வாறு தொடர்பு கொள்வது? கற்களில் செய்யப்பட்டு, கதவுகளில் அடைக்கப் பட்டவர் கடவுள் எனில், கதவுகளுக்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களுக்கு கடவுள் எப்படி உதவுவார்?
புதுக்கோட்டை
சந்தா செலுத்த
| உள்நாடு
| வெளிநாடு
|
ஜூலை 16-31 - 2014
-
ஆசிரியர் பதில்கள்
-
ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் இந்தியக் குழந்தைகள்
-
இந்தியப் பொருளாதாரம்
-
ஈராக் : செவிலியர்கள் மீண்டு வநதது எப்படி?
-
உங்களுக்குத் தெரியுமா?
-
உடம்புக்கு நல்லது : மாற்று வழிகளல்ல மனவலிமையே முக்கியம்
-
எரியும் எண்ணெய் பூமி
-
கங்கை சுத்திகரிப்பா? இந்துத்துவப் புனரமைப்பா?
-
கமுக்கமா வச்சிருககாங்க்....
-
கருத்து
-
கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் - ஜூலை 15
-
குவியல்
-
தமிழால் முடியும்! சாதித்துக் காட்டிய ஜெயசீலன் இ.ஆ.ப.
-
திரைப்பார்வை : சைவம்
-
நினைவிருக்கிறதா?
-
நூலகத்திலிருந்து ....
-
பக்கவாதத்தை வென்ற மருத்துவப் புரட்சி
-
புதுமை இலக்கிய பூங்கா
-
புற்றுநோயை உண்டாக்கும் கங்கை நீர்
-
மடமைக் கருத்துக்கு மறுப்பு - 3
-
மடல் ஓசை
-
மோடி அரசின் ரயில்வே நிதிநிலை அறிக்கை: ஒரு கானல்நீர்தான்!
-
வாஸ்து : இடிந்து விழுந்த நம்பிக்கை
-
வியாபாரியும் பிக்காரியும் -2
-
விளையாட்டிலும் விபரீத மூடநம்பிக்கை விளையாட்டுகள்
Thursday, November 24, 2011
கிறிஸ்து மதமும்-பணச் செலவும்
அமெரிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ் பிராட்டஸ்டான்ட் சர்ச்சானது வெளிநாடுகளில் தன் மதத்தை பரப்பு வதற்காக மதப் பாதிரிகளை அனுப்பி வைக்கின்ற செலவு 4 கோடி டாலர்கள் ஆகின்றது. அதாவது சுமார் 12 கோடி ரூபாய்களாகும்.
ரிபப்ளிக் நாடான சைனாவில் பிராட்டஸ்டான்ட் மதத்தைச் சார்ந்தவர்களில் 120 பிரிவுகளுக்கு மேல் இருக்கின்றார்கள். இதுவரையில் அந்த நாட்டில் மாத்திரம் அரை லட்சம் கோடி டாலர்கள் செலவு செய்திருக்கின்றார்கள். சில வருஷங்களுக்கு முன்பு வரையிலும் சைனா நாட்டில் உள்ள 700 நகரங்களில் 8000 பிராட்டஸ் டான்ட் மிஷினரிகள் இருந்து வந்தார்கள்.
ஆனால் இன்றைய தினமோ 5,000 மிஷினரிகள்தான் 400 நகரங்களில் மாத்திரம் வசித்து வருகிறார்கள். கத்தோலிக் கிறிஸ்துவ பாதிரி மிஷினரிகளோ, சில வருஷங்களுக்கு முன்பு 4000 பேர்கள் இருந்தவர்கள் இன்றைய தினம் 200, 300 மிஷினரிகளுக்கும் குறைவாகவே இருந்து வருகிறார்கள்.
அய்க்கிய அமெரிக்க நாட்டில் லுதர்ன் சர்ச் பொருளாளரான டாக்டர் கிளாரன்ஸ் இ.மில்லர் சமீபத்தில் தெரிவிக்கிறதாவது:- ஒரு சைனாக்காரரை கிறிஸ்துவர் என்ற மதமாற்றத்திற்கு கொண்டு வருவதற்கு ரூ.1300 வீதம் செலவாகி வருகிறது. இந்த கணக்குப்படி இயேசுநாதரின் பெயரை சைனா நாட்டில் நிலை நிறுத்த வேண்டுமானால் 175 லட்சம் கோடி டாலர்கள் ரிசர்வ் ஆக்க வேண்டும்.
இதிலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை மதத்தின் பேரால் செலவு செய்யும் கிறிஸ்துவ மதமாகட்டும் அன்றி வேறு எந்த மதமாகட்டும் முன்னேறுவதற்கு வழியின்றி சிதைந்து வருவது ஏன் என்று மக்கள் ஆலோசித்துப் பார்ப்பார்களாக.
Friday, August 26, 2011
கிறிஸ்தவ சோதிடர்
ஏசு கிறிஸ்து பல நோ யாளிகளைச் சுகமாக்கிய தாக, ஏன் இறந்தவர்களை உயிரோடெழுப்பிய தாகக் கூட பைபிள் கூறுகிறது. அவர் சுகப்படுத்தினார் என்பது உண்மையாகக் கூட இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால், இவர்கள் தங்களையே ஏசு போல் எண்ணிக் கொண்டு நடக்கத் தொடங்கி விடுகிறார்கள். நான் நிலத்தடி நீர் பார்த்தது போன்றுதான் பலருக்குச் சுகம் கிடைக்கலாம். சிலருக்குத் தோல்வியாகலாம். பிரசங்கிகளுக்குக் காணிக்கை ரூபாய் கிடைத்து விடுகிறது.
நான் ஒரு வீட்டுக்கு விருந்தாளியாக மும்பை நகரத்திற்குச் சென்றிருந்தேன். வெளியே கடைத் தெருவுக்கு போய் விட்டுத் திரும்பினேன். அந்த வீட்டில் ஜெபம் நடந்தது. இறுதியில் தனி நபர்களுக் காக ஜெபிக்கத் தொடங்கினார். ஒவ்வொருவர் தலையிலும் கையை வைத்து சொல்லிக் கொண்டு வந்த அவர், ஒருவருக்குப் பக்கத்து வீட்டுக்காரர் பொறாமை இருக்கிறது. ஒருவருக்கு வேலை செய்யும் அலுவலகத் தில் போட்டியிருக்கிறது. வேறு ஒருவருக்கு வீட்டுக் காரர் வாகனத்தில் வேலைக்குச் செல்லும் வழியில் கடவுள் விபரத்தை காட்டுகிறார், என்று சோதிடர் கூறுவதுபோல் கூறிக் கொண்டிருந்தார். ஜெபம் பண்ணின அனைவரும் பெண்கள். ஜெபம் பண்ணி னவர் ஆண்.
நான் வேண்டுமென்று முட்டுப்போட்டு அவரிடம் என் தலையைக் கொடுத்தேன். அவர் என்ன பிரச் சினை? என்றார். அய்யா, ஊரில் விட்டு வந்திருக் கிற நோயுள்ள என் மனைவிக்காக ஜெபம் பண் ணுங்கள் என்றேன்.
அவர், அய்யா உங்கள் மனைவிக்கு ஆபத்தைக் கடவுள் காட்டுகிறார் என்றார். நான் ஆச்சரியப் படுவது போல என்ன அய்யா? என்றேன்.
அய்யா, உடன் மரணம் இருக்காது, கவலைப்பட வேண்டாம், கொஞ்சம் நாளாகும் என்றார். நான் அந்தப் பிரசங்கி யாரிடம் தலையை நீட்டி ஜெபம் பண்ணும்போது, என் மனைவி இறந்து ஒரு ஆண்டு ஆகியிருந் தது. இது அங்கே ஜெபத்தில் குழு மியிருந்த ஒரு சில பெண்களுக்கு தெரியும்.
எல்லோரிடமும் உபவாசித்து ஜெபம் பண்ணுங்கள், உங்களுக் காக நானும் என் தனி ஜெபத்தில் வேண்டுகிறேன். எல்லாம் நன்றாக நடக்க, கடவுள் உதவுவார் என்று கூறிவிட்டு, கொடுத்த காணிக்கைகளை வாங்கிக் கொண்டு வேறு வீடுகளுக்கு அந்தப் பிரசங்கியார் சென்றார்.
அவர் ஜெபம் பண்ணும்போது ஏற்கெனவே என் மனைவி இறந்ததை கூறவில்லை. ஆனால், அவர் எப்படி பித்தலாட்டம் செய்கிறார் என்று அங்குக் கூடியிருந்த பெண்களுக்கு தெரியவேண்டுமென்று தான் நான் அவ்வாறு செய்தேன். ஏனென்றால் அவர்கள் திருந்தமாட்டார்களா? அவர்களிடம் உள்ள மூட நம்பிக்கைகள் மாறாதா என்று நல்ல எண்ணம் தான் எனக்கு.
இதைப்போல்தான் சோதிடங்களைப் பார்ப்பதும், பரிகாரங்கள் செய்வதும், பலியிடுவதும் நடைபெறு கிறது. ஏன், சில சாமியார்கள் நரபலி கூட நடக்கக் காரணமாகி விடுகிறார்கள்.
மக்களுக்கு சோதிடம் கூறுவதில் நாள், நட்சத்திரங் கள் தவறாக ஜாதகத்தில் குறிப்பிட்டிருந் தால் தவறுகள் ஏற்படலாம். சோதிடர்கள் வீடுகளில் கூட அவர்கள் வீட்டில் நடந்தவற்றை முன்னரே கூற முடிவதில்லை. பிரபல ஜோதிட மாத இதழ் நடத்தும் பெங்களூர்காரர் ஒருவர் அவர் சொந்த மகனின் அகால மரணத்தையே முன் கூட்டிக் கூறமுடியவில்லை. இதையெல்லாம் அறிந்தும் மூட நம்பிக்கைகள் மக்களிடமிருந்து நிரந்தரமா மாறுமா என்றால்... மாறாது.
Tuesday, March 4, 2008
சூரியனில் கன்னிமேரியைத் தேடிய 48 பேருக்கு கண் பார்வை பறிபோனது
சூரியனில் கன்னி மேரியின் உருவம் தெரிகிறது என்ற வதந்தியை நம்பி, அதைப் பல மணி நேரம் உற் றுப் பார்த்த 48 பேருக்கு கண் பார்வை பறிபோய் விட்டது.சூரியனில் கன்னி மேரியின் உருவம் தெரிகிறது என்ற வதந்தீ கேரள மாநிலம் கோட்டம் மாவட்டத்தில் எரி மேலிக்கு அருகே அண்மையில் வேகமாகப் பரவியது. இதை நம்பிய ஏராளமானோர் ஓரி டத்தில் கூடி சூரியனைப் பல மணிநேரம் உற்றுப் பார்த்தனர்.அதனால் கண்ணில் கோளாறு ஏற்பட்டு மருத்துவ மனைக்குச் சென்றனர். கான் ஜிராப்பள்ளி என்ற ஊரில் உள்ள ஜோசப் காது, மூக்கு, தொண்டை மற்றும் கண் மருத்துவமனைக்கு வந்த 48 பேருக்கு கண்பார்வை பறி போனது தெரிய வந்தது. கண் ணின் விழித்திரையில் காயம் ஏற்பட்டதே இதன் காரணம்.இது குறித்து அம்மருத்துவ மனையில் கண் மருத்துவர் ஜேம்ஸ் அய்சக் கூறுகையில், அண்மையில் கண்கோளாறு ஏற்பட்டு மருத்துவ மனைக்கு வந்தவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பிரச்சினையே காணப்பட்டது. அவர்களின் விழித்திரையில மிக முக்கிய பாகத்தில் சேதம் ஏற்பட்டிருந் தது. சூரியனைப் பலமணி நேரம் உற்றுப் பார்த்ததே இப்பிரச்சினைக்குக் காரணம் என்று கூறினார்.இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள், வதந்தி பரப்பப் பட்ட பகுதியில் இது போன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்று அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர்.
இதைப் படிக்கவும் அவர்களுக்குப் பார்வை இல்லையே!
சென்னையில் ஏசு! மூடப் பிரச்சாரம் பிசுபிசுத்தது!
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணையினை கல்விக் கூடங்களுக்கு அனுப்பி உள்ளார். (தனியே காண்க) இப்படி ஓ...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
- கி.வீரமணி தோழர் பொன்னீலன் என் பாசத்திற்குரிய இனிய நண்பர். 1985 எனது நினைவு. உலக சமாதான காங் கிரசு டென்மார்க் தலைநகரில் கோபன்ஹேகனில் நடந...