Showing posts with label கடலூர் கழகப் பொதுக்குழுவில். Show all posts
Showing posts with label கடலூர் கழகப் பொதுக்குழுவில். Show all posts

Monday, October 23, 2017

‘‘ஒன்றரை லட்சம் சந்தாக்கள் ‘விடுதலை’க்குக் கிடைத்தால் வேறு புரட்சியே தேவைப்படாது!’’

‘‘ஒன்றரை லட்சம் சந்தாக்கள் ‘விடுதலை’க்குக் கிடைத்தால் வேறு புரட்சியே தேவைப்படாது!’’





கடலூர், அக்.22- ‘விடுதலை’க்கு ஒன்றரை லட்சம் சந்தாக்கள் கிடைக்குமானால் வேறு புரட்சியே தேவைப்படாது என்று முத்திரைக் கருத்தைப் பதித்தார் திராவிடர் கழகத் தலைவர் ‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தமிழர் தலைவரின் நறுக்கான முத்துகள்

*கரை புரண்ட உற்சாகத்தைக் கடலூரில் காண்கிறேன்.
*பொதுக்குழுவை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்வதற்குக் காரணமாக இருந்த தோழர்கள் குறிப்பாக பொதுச்செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கடலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தென்.சிவக்குமார், மண்டலத் தலைவர் ஆர்.பி.எஸ்., மண்டல செயலாளர் தண்டபாணி, மாவட்டச் செயலாளர் வேகாக்கொல்லை தாமோதரன் ஆகியோரை வெகுவாகப் பாராட்டுகிறேன்.
*கழகப் பொறுப்பாளர்கள் பலரும் பேசவேண்டும் என்று எண்ணியிருந்தாலும், நேரம் கருதி அந்த வாய்ப்புக் கிட்டவில்லை - பொறுத்திடுக!
* இங்கே ஓர் அருமையான உறுதிமொழியை (‘விடுதலை’ சந்தா சேர்ப்பு) நமது துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் முன்மொழிய உணர்ச்சியோடு எதிரொலித்தீர்கள், மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! முதல் ‘விடுதலை’ சந்தாவை நானே துணைத் தலைவரிடம் தருகிறேன்.
*இவ்வாண்டு தந்தை பெரியார் பல வண்ண உருவம் பதித்த காலண்டர் ‘விடுதலை’ சந்தாதாரர்களுக்கு அளிக்கப்படும் (சந்தாக் காலண்டரை ஆசிரியர் அவர்கள் தூக்கிக் காட்டியபோது பலத்த உற்சாக மிக்க கைதட்டல்!).
*அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டத்தில் நாம் வெற்றி பெற்றுத் தீரவேண்டும் - 2018 இல் அந்த வெற்றி உறுதிபடுத்தப்படும் (பலத்த கரவொலி).
போராட்ட வீரர்களின் பட்டியல் குவியட்டும்! குவி யட்டும்!!
*கேரளாவில் வெற்றி கிடைத்திருக்கிறது. காரணம் அங்கு ஒரு நல்லரசு அமைந்ததே! அதுபோலவே, தமிழ்நாட்டில் நல்லரசை நிறுவி வெற்றி பெறுவோம்!
*சினிமா கவர்ச்சியை முதலாக்கி அதிகாரத்தைக் கைப் பற்ற முனைவோருக்கு காலத்தால் நாம் கொடுத்த அடி நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது.
*சென்னை பெரியார் திடலில் இயங்கும் நூலகம் மிகச் சிறந்த ஆவணக் காப்பகமாகும். அதன் வளர்ச்சிக்காக ஒரு குழு அமைக்கப்படும். நூலகப் புரவலர்கள் ரூ.1000 நன்கொடை அளிக்கவேண்டும். அவர்களுக்கு ஓர் அடை யாள அட்டை அளிக்கப்படும்.
*இந்த இயக்கம் ஓர் உலக இயக்கம் என்றார் தந்தை பெரியார். அவர்களின் பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் கொள்கை உணர்வுப்பூர்வமாக நடந்திருப்பதே இதற்குச் சான்றாகும்.
*ஒன்றரை லட்சம் ‘விடுதலை’ சந்தாக்கள் கிடைத்தால் வேறு புரட்சியே தேவைப்படாது - ‘விடுதலை’ ஓர் அறி வாயுதம்.
*பாதை இல்லாத ஊருக்கெல்லாம் பாதை போட்டுக் கொடுப்பது ஈரோட்டுப் பாதை!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...