Showing posts with label பிரச்சாரம். Show all posts
Showing posts with label பிரச்சாரம். Show all posts

Monday, January 26, 2015

பெரியார் பூமியில் மதவெறி அச்சுறுத்தலை தடுக்கவே திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்துகிறோம்

பெரியார் பூமியில் மதவெறி அச்சுறுத்தலை தடுக்கவே
திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்துகிறோம்

தமிழர் தலைவர் பேட்டி


தமிழர் தலைவர் பேட்டி

காஞ்சிபுரம், ஜன.25- தந்தை பெரியார் பூமியில் ஜாதி வெறி - மதவெறி என்கிற அச்சுறுத்தலை உருவாக்கலாம் என நினைப்பவர்களின் செயலைத் தடுக்கவே திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தி வருகிறோம் என தமிழர் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் நேற்று (24.1.2015 மாலை நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் பங்கேற்க சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் 2000 திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தப்படுவது குறித்து கூறியதாவது:

பெரியார் பூமியில் ஜாதி வெறி, மத வெறி என்கிற அச்சுறுத்தலை உருவாக் கலாம் என்று நினைக்கின்ற காலக் கட்டத்திலே கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னாலேயே திராவிடர்கழகம் இதை மக்களுக்கு எச்சரித்தது. வளர்ச்சி என்ற பெயராலும், இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் என்கிற மாயையைக் காட்டியும், ஏற்கெ னவே இருந்த ஆட்சியின்மீதிருந்த அதிருப்திகளையும் பயன்படுத்தி மோடி ஆட்சிக்கு வந்தார். மதவெறிகளை வெளிப்படையாக செய்கிறார்கள்

இப்போது வெளிப்படையாகவே கோட்சேவுக்கு சிலை வைக்கக்கூடிய அளவுக்கு, அறிவிக்கக்கூடிய அளவுக்கு மதவெறிகளை வெளிப்படையாக செய் கிறார்கள். 10 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும், எங்களுக்கு ஓட்டுப்போடாதவர்கள் எல்லாம் யாருக்கோ பிறந்தவர்கள் என்று அவதூறுகளைப் பேசி வருகிறார்கள். அதுமட்டுமல்ல அமைச்சர்களாக இருப்பவர்களே கண்டிக்கப்படக்கூடிய அளவிலே இருக்கிறார்கள். என்றாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், நாடாளுமன்றத்திலேகூட சரிவர சட்டங்கள் இயற்றாத அளவுக்கு, இன்றைக்கு வேலை வாய்ப்புகள் பறிபோய் இருக்கின்றன.

வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் இல்லை

ஏற்கெனவே இருந்த வேலை வாய்ப்புகள் இப்போது இளைஞர்களுக்கு கணினித்துறையில் இல்லை. இந்த ஊருக்கு அருகிலேயே இருக்கக்கூடிய இரண்டு மிகப் பெரிய தொழிற்சாலைகள் ஃபாக்ஸ்கான், நோக்கியா போன்றவையெல்லாம் மூடப்பட்டிருக்கின்றன. ஆலங் குளம் அரசு சிமெண்ட் தொழிற்சாலையும் மூடப்பட் டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகளிலே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், ஏற்கெனவே இருந்த வேலைவாய்ப்புகளுக்கு உத்தரவாதம் இருக்கிறதா என்றால் கிடையாது. இவையெல்லாம் ஏன் செய்யவில்லை என்று மக்கள் நினைப்பார்கள் அல்லது கேட்பார்கள் என்று திசைதிருப்புவதற்காக முழுக்க முழுக்க பல்வேறு பிரச் சினைகளை, கோட்சே பிரச்சினைகள் ஆகியவைகளை அவர்கள் சுலபமாக சொல்லுகிறார்கள்.  எனவே, மதவெறியை மாய்த்து, மனித நேயத்தை உருவாக்குவோம் என்று தெளிவான நிலையை உருவாக்க, திராவிடர் இயக்கம் அதனுடைய கொள்கைகள்தான் ஒரே விடியல் என்பதை விளக்குவதற்காக திராவிடர் விழிப்புணர்வு மாநாடு தமிழ்நாடு முழுக்க 2000 மாநாடுகளை திராவிடர் கழகம்  ஒத்த கருத்துள்ள நண்பர்களை எல்லாம் அழைத்து வெகு சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறது. இதுவரையிலே தென்கோடியிலிருந்து 20, 25 மாநாடுகளை நாங்கள் நடத்திக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு காஞ்சிபுரத்தில் மாநாடு நடைபெறுகிறது. ஆகவே, இந்தப்பணி தொடரும்.

அடுத்த தேர்தலைப்பற்றிக் கவலைப்படு வதைவிட, தலைமுறையைப்பற்றிக் கவலைப்படுவதுதான் திராவிடர் இயக்கத் தினுடைய குறிக்கோள். பதவிக்காக திராவிட இயக்கங்கள் இல்லை. மாறாக, உண்மையான திராவிடர் இயக்கம் தமி ழர்கள் மானத்தோடு, அறிவோடு, உரிமை யோடு வாழ வேண்டும். பகுத்தறிவோடும் வாழவேண்டும். மதவெறி மாய்த்து மனித நேயத்தைக் காக்க வேண்டும் என்பதுதான்.

சிறீரங்கத்தில் பொது வேட்பாளர்

செய்தியாளர் கேள்வி: சிறீரங்கத்தில் அமைச்சர்கள் அனைவருமே முகாமிட்டுள் ளனர். சட்டசபை வெறிச்சோடி எல்லோ ருமே அங்கேதான் இருக்கிறார்களே?

தமிழர் தலைவர் பதில்: தெரிந்த விஷயம்தானே. எல்லாருமே அங்கு இருந்தாலும், வாக்களிக்க வேண்டியவர்கள் மக்கள்தானே. அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. அதனாலே, மக்களுக்குத்  தெளி வாக தெரியக்கூடிய உணர்வுகள் அங்கே இருக்கிறது. ஏன் அந்தத் தேர்தல் வந்தது  என்ற கேள்வி கேட்டாலே அதற் குப் பதிலிலேயே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண் டுமோ அதைச் செய்வார்கள்.  அதுமட்டுமல்ல, இதற்கு இடையிலே எதிர்க்கட்சிகள் என்பவர்கள் கலைஞர் அவர்கள் கேட்டுக்கொண்டபடி ஒரு பொது வேட்பாளரை அவர்கள் நிறுத்தி இருந்தால், யார் உண்மையான எதிரி என்று அவர்களை வீழ்த்துவதற்கு வாய்ப்பு ஏற்படும். அதற்கு வாய்ப்பு இல்லாமல், மற்றவர்களை பிரித்தாளக்கூடிய அளவுக்கு, அதன்மூலமாக ஆட்சி அதிகாரம், பலவீனங் களைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால், பாஜக திராவிடர் இயக்கங்களையே வீழ்த்திவிடுவோம் என்று சொல்லி வந்திருக்கிற இயக் கத்தைப் பொறுத்தவரையிலே, ஏற்கெனவே,  பாராளு மன்றத் தேர்தலில் யார்யார் அவர்களோடு இருந்தார்களோ, அவர்கள் எல்லாம் காணாமற் போய் விட்டார்கள். அவர் களுடைய எண்ணிக்கை குறைந்திருக்கிறது. காணாமல் போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் நாங்கள் பலத்த கூட்டணி என்று சொல்கிறார்கள். கேள்வி: மதவெறி சக்தி என்று சொல்லியும் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள், அவர்களுக்கு இந்த இடைத் தேர்தல் மூலம் பாடம் புகட்டுவதற்கு இந்த இடைத் தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டது யாருடைய தவறு?

பதில்: மக்களுடையது. ஜனநாயகத்திலே மக்கள் தெளிவாக இருந்திருந்தால், நீங்கள் ஏற்கெனவே சொன்னதுபோல எச்சரித்தோம். அதையும் தாண்டி ஏமாந்தார்கள். ஒரு தடவை ஏமாறலாம். மறுபடியும் திரும்பத்திரும்ப ஏமாந்துகொண்டிருக்கலாமா? தவத்திரு குன்றக்குடி அடிகளார்தான் சொல்வார், விழுவது தப்பில்லை, நேற்று விழுந்த இடத்திலேயே இன்றைக்கும் விழுவது இருக்கிறதே அதைவிட வேறு என்ன கொடுமை? அதேமாதிரி தமிழர்களுடைய நிலை இருக்கிறது. அதை எடுத்துச்சொல்லி, விழிப்புணர்வு ஊட்டுவதற்குத்தான் நாங்கள் அந்தப்பணியைச் செய்து வருகிறோம்.

கேள்வி: பொது வேட்பாளர் நிறுத்துவதில் தவறு எங்கு நேர்ந்தது?

பதில்: தவறியதற்கு பல காரணங்கள் உண்டு. அதிலே குறிப்பாக என்னவென்றால், எல்லோருமே தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, உண்மை நிலையையோ, அல்லது பொதுக்கருத்தையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிற பொது எண்ணங்கள் இன்னும் தமிழ்நாட்டில் வரவில்லை. தீப்பிடித்து எரிகின்ற நேரத்தில் அணைப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து அணைக்க வேண்டுமே தவிர, எனக்கு முன்னால் வாய்ப்பு இருக்கிறதா? உனக்கு முன்னால் வாய்ப்பு இருக்கிறதா? என்று நினைத்தால், தீ முழுமையாக வெற்றி பெற்றுவிடும். அணைப்பவர்கள் தங்களை முன்னிலைப் படுத்துவதாலேயே பின்னாலே அவர்கள் பழியை ஏற்கவேண்டி வரும்.

கேள்வி: 2016ஆம் ஆண்டிலே இந்த நிலை மாறும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக மாறும். ஏனென்றால், அரசியல் என்பதே, நாளை காலை என்ன செய்தி என்பது தெரி யாமல் இருப்பதுதான் அரசியல். நேற்று இருந்த செய்தி வேறு, இன்று இருக்கிற செய்தி வேறு. ஆக்ராவுக்கு போகிறார்ஒபாமா என்று சொன்னார்கள். இன்றைக்கு ஆக்ராவுக்கு போகவில்லை என்று சொல்கிறார்கள். உடனே செய்தி மாறுகிறது. அதே போல்தான் எத் தனையோ செய்திகள் மாறும். கால நிலையே இவ்வளவு வேகமாக மாறும்போது, அரசியலில் மாறுவதற்கு என்ன? தாராளமாக மாறும். அவ்வளவுதான்

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, December 20, 2012

அஞ்சாதே மனமே!





அஞ்சாதே மனமே!

பூமி சுற்றும்; உலகம் வாழும்!

மூட நம்பிக்கை முறியடிக்கப்பட்ட நாள் விழிப்புணர்வு கொண்டாட்டம்!

நாள்: 22.12.2012, சனிக்கிழமை

நேரம்: காலை 7 மணிமுதல் 8 மணிவரை

இடம்: மெரீனா கடற்கரை, சென்னை

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று இனிப்புகள், துண்டறிக்கைகள் வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

பகுத்தறிவாளர் கழகம் - திராவிடர் மாணவர் கழகம் - திராவிடர் கழக இளைஞரணி

Tuesday, November 27, 2012

சென்னையில் சாதி மறுப்பு வாழ்க்கை துணைதேடும் நிகழ்ச்சி


சென்னையில் சாதி மறுப்பு வாழ்க்கை துணைதேடும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர் 2 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது
பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில் நடந்த சாதிமறுப்பு தேடல் பெருவிழாவில் இணைந்த ஜோடிகளுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திருமணம் நடத்தி வைத்தபோது எடுத்த படம். அருகில், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பாலாஜி உள்ளனர்.

சென்னை, நவ.26- சென்னை பெரியார் திடலில் நடந்த சாதிமறுப்பு இணை தேடல் பெருவிழாவில் சுயமரியாதை திருமணம் செய்து கொள்வதற்காக வாழ்க்கை துணையை தேடி மாற்றுத்திறனாளிகள், அரசு பள்ளி ஆசிரியை, ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 291 பேர் விண்ணப்பித்தனர். மாலையில் 2 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
சுயமரியாதை திருமணம்
பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில், முற்போக்கு சிந்தனையுள்ள குடும்பத் தினருக்கு பயன்படும் வகையில், தமிழகம் தழுவிய அளவில் சாதிமறுப்பு இணை தேடல் பெருவிழா மன்றல் 2012 என்ற பெயரில், சென்னை பெரியார் திடலில் நேற்று நடந்தது. இதற்காக சாதி மறுப்பு, மதமறுப்பு, மாற்றுத்திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தோர் என்று தனித்தனியாக 5 அரங்குகள் அமைக்கப்பட்டி ருந்தன. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வர்கள் இந்த அரங்குகளில் தங்கள் பெயர்களை நேற்று காலை பதிவு செய்தனர். பின்னர் ஆண், பெண் இருவரும் 21 வயது நிரம்பியதற்கான சான்றுகள், தனித்து வாழ்க்கை நடத்துவதற்கான பொருளாதார வாய்ப்புகள் குறித்த சான்றுகள் சரிபார்க்கப்பட்டது.
தொடர்ந்து திருமணத்திற்கு தயாராகுதல், மருத்துவம், மனநல ஆலோசனைகள் குறித்த மருத்துவ முகாமும் நடந்தது. திருமணம் செய்து கொள்ள விரும்புவோரிடம் மருத்துவம், மன வளர்ச்சி சோதனைகள், உயரம், எடை மற்றும் ரத்த சோதனையும் செய்யப்பட்டது. பின்னர் பெரியார் திடலில் உள்ள ஹாலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், திருமணம் செய்து கொள்பவர்களின் விருப்பங்களை கேள்வி பதில் மூலம் கேட்கப் பட்டது. இரட்டையர்களை
தேடிவந்த இரட்டையர்கள்
ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழாவில் கலந்துகொண்ட இரட்டையர்கள் கீதா, சீதா ஆகியோரை படத்தில் காணலாம்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்தவர் மருதகாசி. இவருடைய மகள்களான இரட்டையர் கள் எம்.கீதா, எம்.சீதா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இவர்கள் சென்னை காமராஜர் நகரில் தங்கியிருந்து இருதய நோயாளிகளுக்கு ஈ.சி.ஜி. எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் கூறியதாவது: ஒன்றாகவே பிறந்தோம், ஒன்றாக படித்தோம், ஒன்றாகவே வளர்ந்தோம், ஒன்றாகவே ஒரே நிறுவனத்தில் வேலையும் பார்க்கிறோம்.
நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்லவேலை பார்க்கும் இரட்டை சகோதரர்களை மண முடிப்பதற்காக தேடிவந்துள்ளோம். அவ்வாறு கிடைக்கவில்லை என்றால் அண்ணன், தம்பிகளாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரே வீட்டில் இரு வரும் மருமகள்களாக செல்ல ஆசைப்படுகிறோம். நன்றாக சம்பாதிப்பதால், மாப்பிள்ளையும் நன்றாக சம்பாதிப்பவராகவும், அழகாகவும் இருக்க வேண்டும். எந்த சாதியாக இருந்தாலும் பரவா யில்லை, மதம் இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பாகும்.-இவ்வாறு இரட்டை சகோதரிகள் கூறினர்.
புதுச்சேரி பெண்
புதுச்சேரியை சேர்ந்த சேகர் மகள் அமுதா. எம்.பார்ம். பட்டமேற்படிப்பு படித்து விட்டு தனியார் மருத்துவ நிறுவனத்தில் புதுச்சேரி அலுவலக மேலாளராக வேலைபார்த்து வருகிறார்.
இவர் கூறுகையில், என்னுடைய பெற்றோர்கள் சுயமரியாதை திருமணம் செய்தவர்கள். அவர் களைப்போல் சாதி, பார்க்காமல் சுயமரியாதை யுடன் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்.
என்னுடைய பெற்றோருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், வரவிருக்கும் மாப் பிள்ளை எங்கள் வீட்டு பிள்ளையாகவும், என் னுடைய பெற்றோருக்கு மகனாகவும் இருக்கும் மனநிலை படைத்தவரை தேடி வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர்
சென்னை தலைமைச்செயலகம் குடியிருப்பை சேர்ந்தவர் வி.கே.ராமச்சந்திரன். ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். தனக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருந்தும், சொந்தமாக வீடு இருந்தும், குழந்தைகள் என்னை கவனிக்காததால் சாப்பாட்டிற்காகவும், என்னை கவனித்துக் கொள்வதற்காகவும் 62 வயதில் திருமணம் செய்து கொள்வதற்காக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், சாதி, மதம் பார்க்காமல், விவாகரத்து பெற்றவர்கள், வாழ்க்கை துணையை இழந்தவராகவும் இருந்தாலும் திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரெயில் விபத்தில் கணவனை இழந்த பெண் தமிழரசி, திருமணமாகி 3 மாதம் மட்டுமே கணவருடன் வாழ்ந்துள்ளார். திருப்பத்தூரில் உள்ள பாலிடெக்னிக்கில் டைப்பிஸ்டாக வேலை பார்க்கும், இவர் சமுதாயத்தில் தனிபெண்ணாக வாழ முடியாது என்பதால், தன்னை கண் கலங் காமல் பார்த்து கொள்ளவும், மனதுக்கு பிடித்த மணமகனை தேடிவந்ததாக கூறினார்.
அரசுபள்ளி ஆசிரியை
நெற்குன்றம் மேட்டுக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஜெயந்தி. இரண்டு கால்களும் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட இவர், எம்.ஏ., எம்.பில். படித்தவர். தன்நிலையை உணர்ந்து வாழ்நாள் முழுவதும் தன்னை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள ஒரு துணையை தேடி வந்ததாக ஜெயந்தி கூறினார்.
சென்னையை சேர்ந்தவர் வெற்றிமணி. எம்.டெக். படித்த இவர், சென்னையில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலைபார்த்து வருகிறார். கல்வியில் சிறந்த பகுத்தறிவு சிந்தனை கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக தெரிவித்தார். இரண்டு கால்களையும் இழந்து தவழ்ந்து வந்தவர் தாம்பரத்தை சேர்ந்த மகேந்திரன். இவர் பழ வியாபாரம் மூலம் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக் கிறார். இவர் தன்னை கவனித்துக்கொள்ள பெண் தேவை. சாதி, மதம் பார்க்கமாட்டேன். வரதட் சணையும் தேவையில்லை என்றும் கூறினார்.
சென்னை அடையாறு தரமணி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 32). இவர் தன்னுடைய தாய் செண்பகத்துடன் வாழ்க்கை துணை தேடி வந்தார். இவர் கூறும் போது, காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட நாங்கள் பிராமணர் வகுப்பை சேர்ந்தவர்கள். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மண்பரிசோதனை ஆய்வு செய்யும் பணி செய்து வருகிறேன். வாழ்க்கை துணையை தேடுவதற்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன். துணையாக வரவிருக்கும் பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆனால் எந்த சாதியாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளேன் என்றார்
2 ஜோடிகளுக்கு திருமணம்
சாதிமறுப்பு தெரிவித்த காரைக்குடியை சேர்ந்த அறிவரசுக்கும், மதுரையை சேர்ந்த ஜான்சி ராணிக்கும் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன், தமிழ்செல்வி ஆகிய இரண்டு ஜோடியினரையும் உறுதிமொழி வாசிக்க வைத்து திருமணங்களை திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி  நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசிய தாவது: சாதி, மதம் மறுப்பு மற்றும் காதல் திருமணங் களை ஊக்குவிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் 291 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 25 திருமணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, ஒரு நல்லதொடக்கம் தான், முடிவு அல்ல. இன்று இரண்டு திருமணங்கள் நடந்துள்ளன. மணமக்கள் அன்போடும், பண் போடும், விட்டுக்கொடுத்து வாழ்ந்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும்.
-இவ்வாறு கி.வீரமணி பேசினார்.
விழாவில், திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றனார், செயலவைத் தலைவர் அறிவுக்கரசு, பொதுச்செயலாளர்கள் ஜெயக்குமார், டாக்டர் பிறைநுதல் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள் உட்பட நிர்வாகிகள் பலர் செய்திருந்தனர்.
-(நன்றி: தினத்தந்தி 26.11.2012)

Wednesday, July 25, 2012

குவளைத் தண்ணீரில் அம்மன் முகமா?


அறிவியல் பூர்வமாக நிருபித்தால் ரூ.ஒரு லட்சம் பரிசு!
திராவிடர் கழகம் நேரடி பதிலடி!

கடலூர், ஜூலை.24- குவளைத் தண்ணீரில் அம்மன் முகம் என்று புரளி கிளப்பி விடப்பட்டதற்கு திராவிடர் கழகத் தின் சார்பில் நேரடி பதிலடி கொடுக் கப்பட்டது.
கடலூரில் பரபரப்பான தெருமுனைக் கூட்டம் குவளைத் தண்ணீரில் பூஞ் சோலை அம்மன் முகமா! அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் ஒரு லட்சம் பரிசு என துண்டு அறிக்கை வெளியிட்டு கடலூர் திராவிடர் கழகம்  சார்பில் 22.7.2012 அன்று அய்ந்து இடங்களில் 4 மணி முதல் இரவு 9 மணி வரை. தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் அவர்கள் கடலூர் திருப் பாதிரிப்புலியூர் தேரடி தெருவிலும், புது பாளையத்திலும் தொடங்கி வைத்துப் உரையாற்றினார். இதில் கடவுளின் தன்மைகள் மனிதனுக்கு எந்த வகையிலும் உதவாத புராணம் இதிகாசத்தில் உள்ள ஆபாசங்களை விளக்கியும் சங்கராச்சாரி முதல் பிரேம நந்தா காஞ்சிபுரம் தேவநாதன் இன்று உள்ள நித்தியானந்தா வரை சாமியார்கள் செய்த லீலைகளை விளக்கியும் சில மாவட்டங்களில் இரத்தக் காட்டேரி மூடநம்பிக்கைகள் சில ஊர் களில் வேப்பிலை மோசடி சில ஊர்களில் இன்று போய் நாளை வா என்று எழுதுவது; கடலூரில் குப்பன்குளத்தில் குவளைத் தண்ணீரில் பூஞ்சோலை அம்மன் முகமா! கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவனுக்கு புத்தி வேண்டாமா? சிந்தியுங்கள் அறிவுக்கு வேலை கொடுப்போம் அறியாமைக்கு விடை கொடுப்போம் என்று பேசினார். கூத்தப்பாக்கத்தில் யாழ் திலீபன் உரை யாற்றினார். வண்ணாரப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் நா. தாமோதரன் உரையாற் றினார். பெரியார் நினைவு தூண் அருகே கூட்டம் நிறைவடைந்தது. இக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் சொ. தண்டபாணி மண்டல இளைஞரணி செயலாளர் சி. மணிவேல் கடலூர் நகர தலைவர் விஜயக்குமார், மாவட்ட ப.க. செயலாளர் எழிலேந்தி, நெய்வேலி நகர செயலாளர் ச. கண்ணன், கடலூர் சின்னதுரை, கடலூர் பெரியார் நூலகர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் உரையாற் றினார். முடிவில் கடலூர் நகர செயலாளர் தென் சிவக் குமார் நன்றி கூறினார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Sunday, July 22, 2012

இன்னும் எத்தனை நாள்?


கேள்வி: சேதுக்கால்வாய்த் திட்டம் மாற்றுப் பாதையில் சாத்தியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள் ளதே, அடுத்து என்ன நடக்கும்?
பதில்: ஒன்றும் நடக்காதிருந்தால் போதும். ஏற்கெனவே ஏராளமான மக்கள் பணம் செலவழிக்கப்பட்டு, திட்டமே நிறுத்தப்பட்டதால் கடலில் பாலம் கரைந்து போய்விட்டது.  இன் றைக்கு இந்தியா இருக்கும் பொரு ளாதார நிலையில், இத் திட்டத்தைக் கைவிடுவதே நல்லது. திட்டம் நிறை வேறினாலும் அதனால் கிடைக்கக் கூடிய வளம் பெரிதாக இருக்கப் போவதில்லை என்பதே உண்மை.
(கல்கி 22-.7.-2012 - பக்கம் 27)
கேள்வி: சேது சமுத்திரக் கால் வாய்த் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்சவ்ரி குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது பற்றி . . .
பதில்: இந்தக் கமிட்டி அமைக்கப் படுவதற்கு முன்பாகவும், அதற்குப் பின்பும் கூட பல நிபுணர்கள் மாற்று வழிகள் சாத்தியமே என்பது பற்றி விவரமாக ஆராய்ந்து கூறி இருக் கிறார்கள். அந்த அபிப்பிராயங்களி லிருந்து இந்தக் கமிட்டித் தலைவரின் அபிப்பிராயம் மாறுபட்டிருக்கிறது. இதில் எது சரி என்ற ஆராய்ச்சியில் இறங்குவதை விட, ராமர் பாலத்தைச் சேதப்படுத்துவது ஏற்க முடியாத விஷயம் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷ யம்.
(துக்ளக் 18.-7.-2012 பக்கம் 29)
இந்தியக் கிழக் குக் கடற்கரையிலி ருந்து சரக்குக் கப்பல்கள் இலங் கையைச் சுற்றி வருவது போல இந்தப் பார்ப் பனர்கள் அங்கு இங்கு சுற்றி கடை சியில் ராமர் பாலம்  - அது இடிக்கப்படக்கூடாது என்று மங்களம் பாடி முடிக்கிறார்கள் என் பதைக் கவனிக்க வேண்டும்.
இன்றைக்கு இந்தியா இருக்கும் பொருளாதார நிலையில் இந்தத் திட் டம் தேவையில்லையாம் - ரொம் பத்தான் கசிந்து உருகுகிறது கல்கி.
இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் பொருளாதார நிலையில் இடிந்து கிடக்கும் கோயில்களையெல்லாம் இடித்துக் கட்டலாம்.  பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமன் கோயிலைக் கட்டலாம். ஆனால் மக்கள் நலனுக்கு நாட்டு வளத்துக்கு பயன்படக்கூடிய சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மட்டும் செயல்படுத்தப்படக்கூடாது. அடேயப்பா! எவ்வளவு பெரிய இந்தியமாக் கடலைத் தாண்டிய விரிந்த உள்ளம். இந்தப் பார்ப்பனர் களுக்கு.
இந்தத் திட்டத்தினால் கிடைக்கக் கூடிய பொருளாதார வளம் பெரிதாக இருக்கப் போவதில்லை என்று பொருளாதாரப் புலி போல, திட்டத்தின் தீட்சண்யத்தில் அத்துப்படியான அறிஞர் போல கல்கி கனைக்கிறது.
இந்தத் திட்டத்தினால் ஏற்படும் பயன்கள் பற்றி வல்லுநர்கள் ஒன்றும் தெரிவிக்கவில்லையா? இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து பி.ஜே.பி. ஆட்சியில் முடி வெடுத்தபோது இந்தக் கல்கி,  துக்ளக் வகையறாக்கள் ஏன் எழுதுகோலைத் தூக்கிக் கொண்டு, விட்டேனா பார் என்று விடுபட்ட அம்பு போல கிளம்பவில்லை?
1860 இல் வெள்ளையன் ஆட்சிக் கால முதல் சாத்தியமான திட்டம்தான் என்று நிபுணர்கள் கூறிடவில்லையா?
டவுண்சென்டின் திட்டம் (1861), பிரிட்டீஷ் பாராளுமன்றக் குழுவின் திட்டம் (1862), ஸ்கோட்டர்ட்டின் திட்டம் (1871) இராபர்சனின் திட்டம் (1872) சர் ஜான் கோடின் திட்டம் (1884) தென்னிந்திய ரயில்வே பொறியாளரின் திட்டம் (1903), சர் ராபர்ட் பிரிஸ் டோவின் திட்டம் (1922) சர்.ஏ. இராமசாமி முதலியார் தலைமை யிலான குழுவின் அறிக்கை (1955) டாக்டர் நாகேந்திரசிங் தலைமை யிலான குழுவின் அறிக்கை (1964), ஏ.ஆர். இலட்சுமி நாராயணன் தலை மையிலான குழுவின் கருத்து - இத்தனை ஆண்டுகளாக எத்தனை எத்தனையோ நிபுணர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். ஒருவராவது இத்திட்டம் சாத்தியமற்றது - பயனற்றது என்று சொல்லவில்லையே!
ஆனால் இந்த அக்கிரகாரத்து அம்பிகள் மட்டும் இந்தத் திட்டத்தால் பயன் ஏதுமில்லை என்று சொல்லு கிறார்கள்.
இந்தத் திட்டத்தால் பயன் இல் லையாம். ஆனால் நிபுணர்கள் என்ன ;சொல்லுகிறாகள். இதோ அந்தப் பட்டியல்.
(அ) இந்திய கடல் எல்லைக்குள் ஒரு கடல்வழி நெடுஞ்சாலை அமை யும்.
(ஆ) இந்தியக் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி சரக்குகளின் போக்கு வரத்துச் செலவு குறையும். எனவே, உலகச் சந்தையில் நம் ஏற்றுமதிப் பொருள்கள் போட்டி போட முடியும். இறக்குமதியாகும் கச்சாப் ;பொருட் களின் விலை குறையும்.
(இ) இந்தியாவின் கடலோர வணிகம் மேம்பாடு அடையும். இதனால் எல்லாத் துறைமுகங்களிலும் வேலை வாய்ப்பும், அதைச் சார்ந்த பகுதிகளில் தொழில் உற்பத்தியும் பெருகும்.
(ஈ) தமிழகக் கடலோர வணிகமும், பன்னாட்டு வணிகமும் சிறக்கும்; இதனால் பாண்டிச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இப்போது இருக்கும் சிறு துறை முகங்கள் பெருமளவில் வளர்ச்சி அடையும். இராமநாதபுரம் மாவட் டத்தில் ஒரு புதிய சிறு துறைமுகம் அமையும்.
(உ) மீனவர்களுக்கு நேரடியாகப் பயன்படும் வகையில் தூத்துக்குடிக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் மீன்பிடி துறைமுகங்கள் தேவைக்கேற்ப உண்டாகும்.
(ஊ) தமிழகக் கடலோரப் பகுதி களில் தொழில் வளர்ச்சி பெருகும். இதனால் பொருளாதார வளர்ச்சி அடையும். புது மீன்பிடித்துறைமுகங் களால் மீனவர்கள் பிடிக்கும் மீன் களுக்கு நல்ல விலையும் கிடைக்கும்.
(எ) மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் கடல் சென்று வர மீனவர் களுக்கு இக்கால்வாய் வசதியளிக்கும்.
(ஏ) தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பெருகும்.
(அய்) இந்திய சரக்குகள் அந்நியத் துறைமுகங்களில் பரிமாற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்படும்.
(ஒ) பல்வேறு வகைகளிலும் அந் நியச் செலவாணி மீதமாகும்; அந்தியச் செலவாணி வருவாயும் அதிகரிக்கும்.
வேலை வாய்ப்பும் பெருகும்.
இவ்வளவு நலன்களும், வளங் களும் கைகோர்த்து வரும் போது இந்த அக்ரகாரவாசிகள் மட்டும் ஏன் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறார்கள்?
ஆர்.கே.பச்சவ்ரி நிபுணர் குழு - வேறு வழியில் திட்டத்தை நிறைவேற்ற சாத்தியமில்லை என்று சொல்லுகிறது என்று சொன்னால் வேறு நிபுணர்கள் வேறு வகையாகச் சொல்லி இருக் கிறார்களே என்று விதண்டாவாதம் செய்கிறார் திருவாளர் சோ,
ஆக, சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்ற தமிழர் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படக்கூடாது என்ற புழுக்கம் உள்ளத்தில். அதன் வெளிப்பாடுதான் இப்படிக் கோணல் சுழி வெட்டுவதாகும்.
தமிழர்களுக்கு நல்லது நடந்து விடக் கூடாது என்பதில் அவ்வளவு ஆர்வம்!
நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச் சார்பு பொறியியல் ஆய்வு மய்யம் (NEERI - The national Environment Engineering Research Institute) 
என்ற நிறுவனம்தான் இந்த ஆறாவது வழித் தடத்தை ஆய்வு செய்து தேர்வு செய்தது.
இதனை ஏற்றுக் கொண்டு இசைவு அளித்தது டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசல்ல, மாறாக வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான்.
பி.ஜே.பி.யின் டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, கப்பல் போக்கு வரத்துத் துறை இணை அமைச்சர் சு.திருநாவுக்கரசர், கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் - இத்தனை பி.ஜே.பி. அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டு கையொப்பமிட்ட திட்டம் இப்பொழுது ஆகாத திட்டமாக மாறியது எப்படி? அப்பொழுது வராத ராமன் பாலம் இப்பொழுது வந்து குதித்த மர்மம் என்ன?
அதுவும் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமன் பாலம் கட்டினானாம். கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிறார்கள். சொல்பவர்கள் சாதாரணமான ஆசாமிகளா? சாட்சாத் பிர்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணோத்தமர்களாயிற்றே! ஆமாம் ராமன்கட்டிய பாலம்தான் என்று கதைக்கிறார்கள்.
இவர்கள் சொல்லும் இத்தனை ஆண்டுகளுக்கு முன் மனிதன் இருந்தானா?
கடலில் இது போன்ற மணல் திட் டுகள் உலகின் பல்வேறு கடல் பகுதிகளில் இருக்கத்தான் செய்கின்றன என்று கடல்சார் பொறியாளர்கள் கூறுகிறார்கள்.
இவையெல்லாம் அவாள் காதில் விழவே விழாது.
ஆஸ்திரேலியா கண்டத்தில் நீண்ட நெடிய தூரம் இத்தகைய மணல் திட்டுகள் இருக்கின்றனவே - அவற்றை எந்த ராமன் கட்டினான் என்ற நிபுணர்களின் கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாத பார்ப்பனர்கள் வீண் அரட்டைக் கச்சேரி நடத்து கிறார்கள் _- விதண்டாவாதம் பேசுகிறார்கள்.
ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழ் செம்மொழியானால் கனல் கக்குகிறது. வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று கேலி செய்கிறார்கள்.
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றால் தணலாகக் கொதிக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்றால்  ஆவேசப்புயலாய் ஆடிக் குதிக்கிறது. கோயிலுக்குள் தமிழ் என்றால் குடுமிகள் எல்லாம் கொந் தளித்துக் கிளம்புகின்றன.
ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு என்றால் இரக்கமற்ற முறையில் ஈட்டியைப் பாய்ச்சுகிறது.
தமிழர்களின் நீண்ட நாள்கனவான தமிழன் கால்வாய்த் திட்டம் என்ற சேது சமுத்திரத் திட்டம் என்றால் சீறிப் பாய்கிறது. இந்தக் கூட்டத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு சகித்துக் கொள்ளப்போகிறோம் என்பதுதான் தமிழர்கள் முன் , திராவிடர்கள் முன் செங்குத்தாக நிற்கும் வினா எனும் எரிமலை!

இராமனே உடைத்த பாலம்

மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!
மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக்  கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.
கட்டியவனே உடைத்துவிட்டான், பாலம் எங்கே இருக்கிறது?
உ.வே. சுமிநாதய்யர் பதிப்பித்த சிறீமத் கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057க்கு உரை எழுதும் போது அய்யர் எழுதுகிறார்: வில்லின் குதை யால் (அம்பின் நுனி கீறித் தருக்கிய இடம் இன்னும் தனுக் கோடி என்றும், அவ்விடத்தில் உள்ள நீர்ப்பகுதி தனிக்கோடி தீர்த்தம் என்றும் வழங்குகிறது.
திரும்ப அழகிய தேசிகர் இயற்றிய சேது புராணத்திலும், பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய தேவை உலாவிலும் இதன் வரலாறு காண்க.
கப்பல்கள் ஓட்டுவதற்கு அப்பாலம் தடையாக இருந்தமையால், ராமனே தனது வில்லின் நுனி யால் பாலத்தைக் கீறி உடைத்து விட்டான் என்பதுதானே இதன் பொருள்.
இராமாயணத்தின் அடிப்படையில் தானே ராமன்பாலத்தை உடைக்கலாமா? என்று பிரச் சினையைக் கிளப்புகிறார்கள். அந்த இராமாயணம் தானே இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும். பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

JULY 16-31

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...