Showing posts with label பாலியல். Show all posts
Showing posts with label பாலியல். Show all posts

Wednesday, March 2, 2016

அன்று ஒரு நிர்பயா இன்று 30 நிர்பயாக்கள்

அரியானா, மாநிலம்  மிருதால் என்ற இடத்தில்
22-ஆம் தேதி நள்ளிரவு 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.  இக்கொடூர நிகழ்வினால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கலாம் என்று உதவி எண்கள் தரப்பட்டதும் டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தானே முன்வந்து விசாரணைக்குழுவின் முன்பு புகார் அளித்துள்ளார். இதன் படி அடையாளம் தெரியாத சிலர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அரியானாவில்  நடைபெறும் வன்முறையின் போது மாநிலம் முழுவதும் பல இடங்களில் பெண்கள் மீது பாலியல்வன்கொடுமைகள் நடத்தப்பட்டன.  இக்கொடூர நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மாநில அரசின் அடியாட்கள், மற்றும் காவல்துறையினரின் மிரட்டல் காரணமாக வெளியே சொல்லப் பயந்து முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் டில்லி-பானிபட் நெடுஞ்சாலையில் நடந்த   கூட்டுப்பாலியல் வன்கொடுமை ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் மூலம் வெளிவந்தது, ஆனால் பாஜக முதல்வர் மனோகர்லால் கட்டாரும் மாநில காவல்துறையும் இப்படி ஒருசம்பவம் நடக்கவே இல்லை என்றும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில் உள்ளது என்று அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் அரியானா-பஞ்சாப் உயர்நீதி மன்ற தலையீட்டின் காரணமாக மாநில அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது, இந்த விசாரணைக்குழு முன்பு முதல்முதலாக சம்பவம் நடந்த அன்று நானும் என்னைப்போன்ற பல பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினோம். மேலும் பாலியல்வன்கொடுமைக்கு ஆளக்கியவர்களை நான் அடையாளம் காண்பிப்பேன் என்றும் ஒருவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விசாரணைக் குழுவின் தலைவர் ராஜசிறி ஞாயிறுன்று பத்திரிகையாளர் சந்திப்பில்  ‘கூட்டுப் பாலியல் நடந்ததாக கூறப்படும் நிகழ்வு குறித்தும், அது தொடர்பான விபரங்கள் குறித்தும் தெரிவிக்க சில எண்களைக் கொடுத்திருந்தோம்; சனிக்கிழமை இரவு டில்லியில் உள்ள நிராளா என்ற பகுதியில் இருந்து ஒருபெண் தான் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாக கூறினார். உடனேஅவரிடம் ரகசிய இடத்தில் வைத்து வாக்குமூலம் பெற்றோம்; அதில் அவர் கூறியதாவது, அரித்துவாரில் புனித நீராடிவிட்டு நானும் எனது 14 வயது மகளும் டில்லி திரும்பிக்கொண்டு இருந்தோம்; பானிப்பட் நகரில் நாங்கள் வந்த பேருந்து வன்முறைக் கும்பாலால் தாக்கப்பட்டது, இதனை அடுத்து எங்களை நகரத்தின் புறநகரில் இறங்கச்சொல்லிவிட்டு நாங்கள் வந்த பேருந்தின் ஓட்டுனர் ஒடிவிட்டார். நானும் எங்களுடன் வந்த சில பெண்களும் டில்லி செல்ல ஒரு காரை ஏற்பாடு செய்ய முயற்சித்தோம். அப்போது வேன் ஓட்டுனர் ஒருவர் எங்களை டில்லி கொண்டுசென்று விடுவதாகக்கூறி பணமும் பெற்றுக்கொண்டார். அவர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற பிறகு வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடி விட்டார்.
ஏற்கனவே வயல்வெளிகளில் சில பெண்கள் ஓடுவது அவர்களை சிலர் துரத்திச் செல்வது கண்டு நாங்கள் அனைவரும் அச்சத்துடன் இருந்த போது எங்களையும் ஒரு கும்பல் வாகனத்தில் இருந்து பலவந்தமாக இழுத்துச் சென்றது; எனது கண் முன்னால் எனது 15 வயது மகளின் ஆடைகளை கிழித்து எறிந்தனர். நான் அவளை விட்டுவிடும்படி கெஞ்சினேன், என்னை கும்பல் வயல்வெளியில் அப்பால் தூக்கிச்சென்றனர். என்னை பாலியல் வன்கொடுமைச் செய்தவர்களை நான் நேரில் கண்டால் அடையாளம் காட்டுவேன் என்று கூறினார்.
அவரது மகளுக்கு என்ன ஆனது என்பதைக் கூற மறுத்துவிட்டார். இந்த நிலையில் இவ்விவகாரம் கூறித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது இவரது புகாரின் பேரில் அடையாளம் தெரியாத 7 பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளோம். என்று கூறினார்.
மேலும், இக்கொடூர நிகழ்வு தொடர்பாக இதுவரை 70க்கும் மேற்பட்ட பெண்கள், புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் நேரில் வரப் பயப்படுகின்றனர். எழுத்து மூலமாக புகார் கொடுத்தால் மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுக்கமுடியும், புகார் தெரிவிப்பவர்களுக்கு நாங்கள் அனைத்துவித பாதுகாப்பும் அளிக்கத்தயாராக உள்ளோம் என்று கூறினார் - விசாரணை குழுவின் தலைவர்.
ஞாயிறன்று மாலை இவ்விவகாரம் குறித்து தலைநகர் டில்லியில்  பாஜக பெண் தலைவர்களிடம் கேள்வி கேட்க முயன்றபோது யாரும் எந்த ஒரு பதிலும் கூறவில்லை, அதே நேரத்தில் மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் இந்த விவகாரத்தை ஊடகங்கள் பெரிதாக்கி தனது ஆட்சிக்குக் களங்கம் விளைவிக்கப் பார்க்கிறது, இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் வந்து புகார் கொடுத்தால் தக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.
இப்படியொரு காட்டுவிலங்காண்டித்தனம் வேறு எங்கு நடந்திருக்கிறது? பிஜேபி ஆட்சியில் தான் நடந்திருக்கிறது. இந்திய தலைநகரமான டில்லியில் நிருபயா என்ற ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கடைசியில் மரணத்தைத் தழுவினார்.
இந்தியாவே கொந்தளித்து எழுந்தது. இப்பொழுது டில்லிக்கு அருகில் உள்ள அரியானாவில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் காட்டு விலங்காண்டித்தனமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரே - ஊடகங்கள் ஏன் குறட்டை விடுகின்றன? அரசியல் விமர்சக வித்தகர்கள் என்று தங்கள் முதுகை தாங்களே தட்டிக் கொள்வோர் ஏன் உறக்க நிலையில் உறைந்து கிடக் கின்றனர். மகளிர் ஆணையம் வாய் மூடிக் கிடப்பது ஏன்?
பாரதீய ஜனதா ஆட்சியாயிற்றே - பார்ப்பன ஜனதாவாயிற்றே பாதுகாக்க வேண்டுமே என்ற சுய ஜாதி வெறிதானே  இதற்குக் காரணம்?

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


Wednesday, December 18, 2013

நீதிபதி கங்குலியின் கீழ்தரச் செயல்கள்


பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞரின் பரபரப்புத் தகவல்கள்



புதுடில்லி, டிச.17- நீதிபதி ஏ.கே.கங்குலி மீது பெண் வழக்குரைஞர் கூறிய பாலியல் குற்றச்சாட்டு விவரத்தை மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் வெளி யிட்டார்.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய பெண் வழக்குரைஞர் பாலியல் புகார் அளித்தார். அந்த புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக கூறிய உச்சநீதி மன்றம், ஏ.கே.கங்குலி நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், புகார் குறித்து விசாரணை நடத்த முடியாது என்று அறிவித்தது.ஆனால் பாலியல் புகா ரை திட்டவட்டமாக மறுத்த, முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி, மேற்கு வங்காள மாநில மனித உரிமைகள் குழு தலைவர் பதவியில் இருந்தும் விலக மறுத்தார். ஏ.கே.கங்குலி மீது சட்டப்படி விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் வலி யுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் நேற்று டில்லியில் கூறுகையில், முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி, மேற்கு வங்காள மாநில மனித உரிமைகள் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அப்படி விலக மறுத்தால் அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.

பெண் வழக்குரைஞர் அளித்த புகார்

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பிய கடிதத்தில், பெண் வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாண வாக்குமூலத்தையும் இந்திரா ஜெய்சிங் வெளியிட்டார். அதில் நீதிபதி கங்குலி மீது பெண் வழக்குரைஞர் அளித்த புகார் விவரம் வருமாறு:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி இரவில் (கிறிஸ்துமஸ் விழாவிற்கு முந்தையதினம்), நீதிபதி கங்குலி தன்னை தொலைபேசி மூலம் அழைத்தார். நான் ஓட்டல் அறைக்கு சென்றதும் அங்கு மேலும் ஒரு பெண் உதவியாளரும், அகில இந்திய கால்பந்து சங்கம் தொடர்பாக ஒரு ஆணும் இருந்தனர்.அவர்களை நீதிபதி எனக்கு அறிமுகம் செய்துவைத்து, அகில இந்திய கால்பந்து சங்கம் வழக்கு தொடர்பான அறிக்கையை மறுநாள் காலை தாக்கல் செய்ய வேண்டும். எனவே இரவு முழுவதும் வேலை இருப்பதால், அங்கு தங்க வேண்டியது இருக்கும் என்று நீதிபதி கூறினார். சிறிது நேரத்தில் அந்த பெண்ணும் அவருடன் இருந்த ஆணும் அங்கிருந்து சென்று விட்டனர்.

நான் நீதிபதியிடம், வேலையை விரைந்து முடித்துவிட்டு திரும்பி விடுவதாக தெரிவித் தேன். அப்போது வலைத்தளம் வேலை செய்யாததை நீதிபதியிடம் தெரிவித்தேன். ஒரு கட்டத்தில் நீதிபதி கங்குலி, மது பாட்டிலை வெளியில் எடுத்து கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஓட்டல் நிர்வாகத்தினர் கொடுத்த அன்பளிப்பு என்றும் நான் மது சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது என்றும் கூறினார். மது அருந்திய அவர் என்னையும் அருந்துமாறு கட்டாயப்படுத் தினார். வேறு வழி இல்லாமல் நானும் சிறிது அளவு சாப்பிட்டேன்.

பின்னர் சாப்பிட வருமாறு அழைத்தார். அங்கு இருக்கையில் அமரமுயன்றபோது எனது பின்பகுதியை நீதிபதி தொட்டு, எனக்கு உதவி செய்ய வந்ததற்கு நன்றி என்று கூறினார். நீதிபதியின் விபரீத போக்கை உணர்ந்து கொண்ட நான் அவரிடமிருந்து விலக முயன்றேன். அப்போதும் நீதிபதி என் அருகில் வந்து என் தலை மீது கை வைத்து நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று கூறி என்னை படுக்கை அறைக்குள் அழைத்து, வா... இருவரும் சற்று ஓய்வாக இருப்போம் என்று அழைத்தார். அது எனக்கு அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. பதற்றமாகவும் மன நிலையை குலைப்பதாகவும் இருந்தது.

தொடர்ந்து அவர் எனது கையை பிடித்து, உன்னால் நான் மிகவும் ஈர்க்கப் பட்டுள்ளேன். உண்மையில் நான் உன்னை விரும்புகிறேன். நான் உன்னை நேசிக்கிறேன் என்று கூறியபடி நீதிபதி என்னை நெருங் கினார். நான் அவரது பிடியில் இருந்து விலகி வெளியேற முயன்றபோது, நீதிபதி எனது கை மணிக்கட்டில் முத்தமிட்டார். என்னை மிகவும் நேசிப்பதாக மறுபடி மறுபடி கூறினார்.

நான் அவரை தள்ளிவிட்டு, எனது கணினியையும், பையையும் எடுத்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து வெளி யேறினேன். அவர் என்னை தொடர்ந்து வந்து, போகாதே போகாதே, நான் உனக்கு தொல்லை தருகிறேனா? என்னை விட்டு போகாதே, இப்போது எனக்கு உன்னுடைய உதவி வேண்டும். அகில இந்திய கால்பந்து வழக்கு அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்றார். நான் பதில் ஏதும் சொல்லாமல் வெளியேறினேன்.

ஓட்டல் வரவேற்பு அறை வரை நீதிபதி எனது பின்னால் வந்தார். அங்கு நான் செல்வதற்கு கார் இல்லாததால், நீதிபதி தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு யாரிடமோ பேசினார். அப்போது அங்கு ஒருவர் வந்தார். அவர் கால்பந்து சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்று நீதிபதி என்னிடம் அறிமுகம் செய்தார்.தொடர்ந்து தனியாக நின்ற நீதிபதி, வேலையை முடித்துத் தருமாறு என்னிடம் வேண்டி னார். நான் பதில் ஏதும் கூறவில்லை. பின்னர் இரவு 10.30 மணிக்கு கார் வந்ததும் நான் அங்கிருந்து திரும்பிவிட்டேன். நான் எனது விடுதிக்கு திரும்பியதும், நீதிபதி எனக்கு போன் செய்து, போய் சேர்ந்து விட்டாயா? என்று கேட்டார். அதற்கு நான் ஆம் என்று பதில் அளித்ததும் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

மறுநாள் காலையில் இருந்து அடிக்கடி எனக்கு நீதிபதி போன் செய்தார். ஆனால் நான் அந்த போன்களை எடுக்கவில்லை. அன்று இரவு 9 மணிக்கு நான், நீதிபதிக்கு போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினேன். அதில் முதல் நாள் இரவு நடந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்ததாகவும், மேலும் எனது பணியை தொடர விரும்பவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவித்து இருந்தேன். பதிலுக்கு நீதிபதி வருத்தம் தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பினார். அதற்கு நான் பதில் அனுப்பவில்லை. பின் னரும் அடிக்கடி போன் செய்தார். அவரு டன் பேசுவதை, நான் தவிர்த்துவிட்டேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெண் வழக்குரைஞர் கொடுத்த புகார் அறிக்கை வெளியானதற்கு, முன்னாள் நீதிபதி கங்குலி கண்டனம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் அமர்வு முன்பு அளிக்கப் பட்ட ரகசிய அறிக்கையை எப்படி வெளி யிடலாம் என்றும் அவர் கேள்வி விடுத்தார்.

போராட்டம்

இதற்கிடையில் மேற்கு வங்காள மாநில மனித உரிமைகள் குழு தலைவர் பதவியில் இருந்து ஏ.கே.கங்குலி உடனடியாக விலகக் கோரி, கொல்கத்தா அலிபூரில் உள்ள அந்த அலுவலகம் முன்பு எதிர்ப்பாளர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.கறுப்பு பட்டை அணிந்திருந்த அவர்கள் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர். கோரிக்கை வாசகங்கள் எழுதிய அட்டைகளையும் ஏந்தி இருந் தனர். நீதிபதி கங்குலியின் உருவபொம்மை யையும் அவர்கள் கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...