Friday, June 30, 2017

நல்லிணக்கத்தைப் பேணும் யோக்கியதை இதுதானா?

உடுப்பி கிருஷ்ணா மடத்தில் முதல் முறையாக இஸ்லாமியர்களுக்காக இப்தார் விருந்து  வைத்து கோவில் மாடத்தில் தொழுகையும் நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி - இப்தார் நிகழ்ச்சி சில ஆண்டுகளுக்கு முன்புவரை அனைத்து ஆளும் கட்சிகள் சார்பிலும், எதிர்க்கட்சிகள் சார்பிலும் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தலைநகர் டில்லியில் பிரதமர் அலுவலகத்தில் இப்தார் நோன்பு தருவதை நிறுத்தினார். அவரும் குடியரசுத் தலைவர் வழங்கும் இப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வந்தார்.
இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக உடுப்பியின் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் மடத்தில் அங்குள்ள அன்னபிரம்மா மண்டபத்தில் இப்தார் விருந்து நடைபெற்றது, இந்த விருந்தினை மடத் தலைவர் விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமி நடத்தியுள்ளார்.
மாலை 6.59 மணிக்கு விரதத்தை முடித்துக் கொண்ட இஸ்லாமியர்களுக்கு வாழை,  தர்ப் பூசணி,ஆப்பிள்,பேரீச்சைபோன்றபழவகை களுடன் முந்திரிப் பருப்பும், மிளகு கஷாயமும் வழங்கப்பட்டன.  விருந்துக்கு வந்த இஸ்லாமியர் களுக்கு மடத்தின் தலைவர் தானே பேரீச்சம் பழத்தைப் பரிமாறினார்.
பிறகு அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.
தம் உரையில், ‘‘கர்நாடகாவில் அமைதி நிலவ வேண்டும்,  நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளை கள்’’  என்று கூறிய அவர், ‘‘மங்களூர், காசரகோடு, பத்கால் ஆகிய இடங்களுக்கு நான் சென்ற போது அங்குள்ள இஸ்லாமியர்களும் எனக்கு நிறைய உதவினார்கள்.   அனைவருக்கு ஈத் வாழ்த்துக்கள்’’ எனக் கூறினார்.
அதன் பிறகு  அன்னபிரம்மா மண்டபத்தின் இரண்டாம் மாடியில் அனைத்து இஸ்லாமியர்களும், அஞ்சுமான் மசூதியின் தலைவரான மவுலானா இனயத்துல்லாவின் தலைமையில் தொழுகை நடத்தினர்.
கர்நாடகாவின் பல மதத் தலைவர்களும்,  அரசியல் பிரமுகர்களும் இந்நிகழ்வை வாழ்த்தி வரவேற்றுள்ளனர்.
மத நல்லிணக்கத்தைப் பேணிய இந்த நட வடிக்கையை எதிர்த்து சங் பரிவார்கள் தோள் தட்டி, தொடை தட்டிக் கிளம்பி விட்டனர். ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள், விசுவ இந்து பரிசத், சிவசேனா, சிறீராம் சேனா ஆகியோர் ஒன்று சேர்ந்து தங்களுடைய இந்து வெறியை வெளிப்படுத்தியுள்ளனர்.
வரும் ஜூலை 2 ஆம் தேதி கருநாடகம் முழு வதும் உடுப்பி பெஜாவர் மடத்தினைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமி என்பவர் தம் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
‘‘இப்தார் விருந்தினை பெஜாவர் மடத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் நடத்தியதில் ஒன்றும் தவறு இல்லை. குறுகிய நோக்கத்துடன் இதனை அணுகக்கூடாது. இப்தார் விருந்தைக் கோவிலுக்குள் நடத்திடவில்லை - கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில்தான் நடத்தினோம்.
இந்து மதத்திற்குள் இருப்பவர்களும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். எனவே, மாட்டிறைச்சி சாப்பிடு வதை வைத்து இஸ்லாமியர்களை ஒதுக்கிட முடியாது. காலங்காலமாக இந்து - முஸ்லிம்களிடையே ஒற்றுமை இருந்து வருகிறது. அதனைக் கெடுக்க நினைப்போரை கடவுளும், மக்களும் பார்த்துக் கொள்வர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தப்பித் தவறி இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு சிலர்,  ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்று விரும்பினால், வெறிகொண்ட காவிக் கூட்டம் கலவரத்தில் ஈடுபடுவது - அவர்களின் தகுதியையும், மதவெறியையும்தான் வெளிப்படுத்தும்.
பி.ஜே.பி. தலைவர்கள் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
எதிலும் இரட்டை வேடம்தான்! இதனை வெகுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கருநாடக மாநில அரசு  ஜூலை 2 ஆம் தேதி காவிகள் நடத்தும் காலித்தனத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

மாட்டிறைச்சி பரிமாறப்பட்ட இடம் கோமியத்தால் புனிதமாம்


மைசூரு, ஜூன் 29 மைசூருவில் உள்ள கலா மந்திர் அரங்கில் சமூக பண்பாட்டு அமைப் பின் சார்பில் ‘‘தனி நபரின் சுதந்திரமும், உணவு உரிமையும்’’ என்ற தலைப்பில் 3 நாள்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கன்னட எழுத்தாளர் கே.எஸ்.பகவான், பேரா சிரியர் மகேஷ் சந்திரகுரு, சமூக செயற்பாட் டாளர் சிவராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரங்கில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மதிய உணவின்போது பங்கேற்பாளர்களுக்கு ஆட் டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி பரிமாறப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்த பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பசுவின் கோமியத்தை மாவிலையால் தெளித்தனர்
இந்நிலையில் மைசூரு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் சம்பத் தலைமையிலான பலர்,  கலா மந்திருக்குள் நுழைந்து மாட்டிறைச்சி விருந்துக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேலும் மாட்டிறைச்சி பரிமாறப் பட்ட கலா மந்திர் அரங்கம் மற்றும் வளா கத்தில் பசுவின் கோமியத்தை மாவிலையால் தெளித்தனர். இதன்மூலம் கலா மந்திர் புனிதம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கருநாடக ஆளுநருக்கு கடிதம்
இதனிடையே கருநாடக ஆளுநர் வஜூ பாய் வாலாவுக்கு பாஜக எம்.பி. ஷோபா கரந்த லாஜே எழுதிய கடிதத்தில்,
மைசூரு பல்கலைக் கழகப் பேராசிரியரான மகேஷ் சந்திர குரு தொடர்ந்து இந்துக்களின் மனதை புண்படுத்தி வருகிறார். அரசுப் பணியில் இருக்கும் அவர், அரசு இடத்தில் சட்டத்தை மீறும் வகையில் மாட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார்.
எனவே, அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

இலாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்றுத் தீர்ப்பதுதான் மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் சாதனையா?

தனியார்த் துறைக்கு தாரை வார்ப்பதில் இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் சூழ்ச்சியும் இருக்கிறது
தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை
கி.வீரமணி veeramani
ஏர் இந்தியா, எண்ணூர் காமராசர் துறைமுகம் முதலியவற்றை தனியாருக்கு விற்றுத் தீர்ப்பதுதான் மூன்றாண்டு மத்திய பி.ஜே.பி. அரசின் சாதனையா? தனியார்த் துறைக்குத் தாரை வார்ப்பதில், இட ஒதுக்கீடு ஒழிப்பும் உள்ளே பதுங்கி இருக்கிறது என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை வருமாறு:
‘ஏர் இந்தியா’ என்ற விமானக் கம்பெனி போக்கு வரத்தில் இந்திய அரசின் முக்கியமான பொதுத் துறை நிறுவனமாகும். நீண்ட காலமாக பணியாற்றிவரும் அந்த நிறுவனத்தை அதில் நட்டம் வருகிறது என்று காரணங்காட்டி, தனியாருக்கு (அநேகமாக டாட்டா வுக்கு) விற்பதற்கு வேண்டிய பச்சைக் கொடியை மத்திய மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று (28.6.2017) முடிவு செய்துவிட்டார்கள்.
தனியாருக்கு விற்று, அரசை நடத்தும் அவலம்!
2014-2015 இல் ஏர் இந்தியாவின் நட்டம் (விமானத் துறை அமைச்சர் அலுவலகக் கணக்குப்படி)
5,859.91 கோடி ரூபாய்.
நிகர நட்டம் 2015-2016 இல், (நட்டம் குறையும் நிலையிலும் விற்பனையா!)
2,636 கோடி ரூபாய்.
இதன் கடன் 50,000 கோடி ரூபாய்.
எனவே, இதைத் தனியாருக்குத் தாரை வார்த்து அந்த முதலீட்டை வைத்து அரசு நடத்தவேண்டும் என்பது திட்டம். இதுபோல, விமான நிலையங்கள் பலவும், தொடர்வண்டி நிலையங்கள்பலவும் தனி யாருக்கு வாடகைக்கு விடப்படவும் உள்ளன!
கடந்த கால அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (யு.பி.ஏ.) காங்கிரசு தலைமையிலான ஆட்சி சரியாக நடைபெறவில்லை; நாங்கள் வந்தால் சிறப்பாக ஆட்சி புரிவோம் என்று வாக்குறுதி கொடுத்து, பதவிக்கு வந் தது மோடி தலைமையிலான (என்.டி.ஏ.) ஆர்.எஸ்.எஸ். ஆட்சி!
அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சோசலிசம் என்னாயிற்று?
இப்படி பொதுத் துறை நிறுவனங்களை - திட்ட மிட்டே தனியாருக்கு - பெருமுதலாளிகளுக்கு முழுமையாக விற்று விடுவதுதான் மூன்றாண்டுச் சாதனையா?
முந்தைய ஆட்சி திறமையற்றது என்று கூறி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. மோடி அரசு, இப்படிப்பட்ட நிறுவனங்களை நாங்கள் வந்த பிறகு நட்டத்தைப் போக்கி, கடனை அடைத்து, இலாபகரமாக நடத்து வோம் என்றது என்னாயிற்று? பாருங்கள், அரசியல் சட்ட பீடிகையில் உள்ள ‘‘சோசலிச’’ - ‘‘சமதர்மத்தை’’ நாங்கள் எப்படி ஒழித்து வருகிறோம் என்று காட்டுவ தாக இல்லையா இதுபோன்ற முயற்சிகள்?
நட்டம் வரும் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு - பெரும் முதலாளிகளுக்கு, கார்ப்பரேட் கனதனவான்களுக்கு விற்கிறோம்; வேறு வழியில்லை எங்களுக்கு என்றால், அவர்களுக்கு நியாயமாக மூன்று கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம்.
சிறிய நாடான சிங்கப்பூரைப் பாரீர்!
தகுதி, திறமை, ஊழலற்ற நிர்வாகம் என்று தம்பட் டம் அடித்து உலக நாடுகளுக்குச் சென்று திரும்பும் மோடி ஆட்சியின் திறமையின்மையைத் தானே இந்த தொடர் நட்டங்களும், கடனை அடைக்க முடி யாமையும் காட்டுகிறது?
1. வெகுசிறிய நாடான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA.) அதன் அரசால் ஆரம்பிக்கப்பட்டு, 70 ஆண்டுகளில் எவ்வளவு வளர்ச்சி; எவ்வளவு பயண நம்பகத்தன்மையில் தனித்த சாதனை (ரேட்டிங்) - அந்தத் திறமை நம் நாட்டில் பஞ்சமா? சிக்கல் எங்கே உள்ளது? திட்டமிட்டே இந்த விமானக் கம்பெனி நட்டத்தில் நனைகிறது!
2.இரண்டாவதுகேள்வி,தனியாருக்கு-கார்ப்பரேட் திமிங்கலங்களுக்கு பொதுத் துறையை விற்றாக வேகண்டும் என்ற முடிவுதான் இதற்கு அடிநீரோட்டமா?
மற்றொரு முக்கிய நோக்கம்
இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே!
3. மற்றொரு முக்கிய உள்நோக்கமும் உண்டு - பொதுத் துறை நிறுவனங்கள் இப்படி தனியாருக்கு விற்க இந்த மத்திய அரசு முன்வருவதில்...
அது என்ன தெரியுமா?
இட ஒதுக்கீடு, சமூகநீதியை ஒழித்துவிடலாம்.  இவற்றை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று அடித்து வீழ்த்திடவும் திட்டமாகும்!
தனியார் மயம் என்றால் இட ஒதுக்கீடு தற்போது இல்லையே!
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட எந்த சமூகத்தினைச் சார்ந்தவரும் இம்மாதிரி நிறு வனங்களில் நுழைய முடியாத நிலைதானே (தனியார் மயமாகும்போது) ஏற்படும்?
இலாபத்தில் நடக்கும் பொதுத் துறை நிறுவனங்களையும் விற்பது ஏன்?
நட்டத்தில் நடைபெறும் பொதுத் துறை நிறுவனங் களை மட்டுமா மத்திய அரசு விற்கிறது? லாபத்தில் நடக்கக்கூடிய நவரத்தினங்களைக்கூட அவற் றின் பங்குகளை விற்று வருகிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம், ‘பெல்’ - திருவெறும்பூர் கனரகத் தொழிற் சாலையின் பங்குகளையும் மெல்ல மெல்ல  விற்று வருகின்றனவே!
சென்னை அருகே - எண்ணூரில் காமராசர் பெயரில் உள்ள பிரபலமான பெரிய கப்பல் துறை முகத்தினையும் தனியாருக்கு விற்க பல்வேறு ஆயத்தங்களைச் செய்து வருகின்றனரே! சேலம் இரும்பாலை என்னாயிற்று?
அம்பானிகளும், அதானிகளும்தான் இவை போன்ற வற்றை வாங்கிடும் தனி நபர்களாக இருப்பார்கள்!
இலாபம் ஈட்டும் எண்ணூர் துறைமுகத்தையும் விற்பதா?
ஆண்டுக்கு 650 கோடி ரூபாய் லாபம் வரும் கல்வி வள்ளல் காமராசர் பெயரில் உள்ள எண்ணூர் கப்பல் துறைமுகத்தை ஏன் விற்கவேண்டும்? பொன் முட்டையிடும் வாத்தினை ஒரே தடவையில் கொன்றுவிட ஏன் துடியாய்த் துடிக்கிறார்கள்?
நட்டத்திற்காகவும் விற்பாளர்களாம் - லாபம் வந்தாலும் விற்பாளர்களாம் - இதன் நோக்கம்தான் என்ன?
சோசலிசம் என்று முகவுரையில் அரசியல் சட்டத் தில் குறிப்பிட்டிருப்பதை செயல்படுத்தும் முறையா இது?
ஏழை, எளிய மக்களின் வரிப் பணம் எப்படியெல் லாம் பெரு முதலாளிகளுக்குச் செல்லுகிறது என்பதும், சமூகநீதி, இட ஒதுக்கீடு இனி இந்த விற்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களில் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன.
பெருமுதலாளிகளின் மகிழ்ச்சிதான் மூன்றாண்டு சாதனையா?
இந்த ஆட்சியின் மூன்றாண்டு கால சாதனை பெருமுதலாளிகளுக்குத்தான் மகிழ்ச்சி; ஒடுக்கப்பட் டோர் தம் வேலை வாய்ப்பில் தொடர் துன்பம். விவ சாயிகள் வேதனையோ நாளும் பெருகும் அவலம்!
மூன்றாண்டு மோடி ஆட்சியின் மகத்தான சாதனைகள் இவைதான்!

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.

சென்னை
29.6.2017

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


Tuesday, June 27, 2017

அதிமுக ஆட்சியில் நூலகங்களில் ‘விடுதலை’, ‘உண்மை’ க்கு இடமில்லை; ‘விஜயபாரதம்‘, ‘துக்ளக்‘குக்கு இடமா?

ஆசிரியருக்குக் கடிதம்
அதிமுக ஆட்சியில் நூலகங்களில்
‘விடுதலை’, ‘உண்மை’ க்கு இடமில்லை; ‘விஜயபாரதம்‘, ‘துக்ளக்‘குக்கு இடமா?
திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேஷன்லிஸ்ட் ஆகிய நாளேடு மற்றும் மாத இதழ்களும் அரசு நூலகங்களுக்கு கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் நல் முறையில் சென்று கொண்டிருந்தது. ஆனால், அதன்பிறகு ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு மக்கள் பகுத்தறிவுடன் சிந்தித்து விடக்கூடாது என்று விடுதலை, உண்மை மற்றும் மாடர்ன் ரேஷன்லிஸ்ட் ஆகிய ஏடுகளை அரசு நூலகத்திற்கு அனுப்புவதை நிறுத்தியதை அறிவோம்.
இருந்தபோதிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி 50,000 விடுதலை சந்தாக்களை கழக தோழர்கள் விரைந்து வழங்கினர். எத்தனை இடர்ப்பாடுகள் வந்தாலும் விடுதலை தொடர்ந்து வீரநடை போட்டுக் கொண்டிருப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். ஆனால் தற்போதைய அரசியல் மாற்றம் ஏற்பட்டு பார்ப்பனியத்தின் நிழலாக இன்றைய ஆட்சி செயல்பட்டுக்கொண்டு வருகிறது என்பதையும் அறிவோம்.
அண்மையில் சென்னையிலுள்ள தேவநேய பாவணர் நூலகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு விடுதலை, உண்மை, ரேஷனலிஸ்ட் வருவதில்லை என்று அறிந்திருந்தாலும் மற்ற புத்தகங்களை படிப்போம் என எண்ணினால் அனைத் தும் பார்ப்பனீயம், இந்து தர்ம வேதங்களைத் தான் உள்ள டக்கியுள்ளது. குறிப்பாக துக்ளக் மற்றும் விஜயபாரதம் போன்ற ஏடுகளை நாம் அறிவோம். இருந்தபோதிலும் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. யினரின் மாத நூலான “மாணவர் சக்தி” நூலகங்களுக்கு வருகிறது. மற்றும் தமிழ்தேசியம் பேசும் அமைப்புகளின் நூல்களும் இடம் பெற்றிருக்கிறது. இதில் தந்தை பெரியாரைப் பற்றியும், திராவிடர் கொள்கைகள் பற்றியும் தவறான வரலாறுகள் இடம் பெறுகின்றன.
தொடர்ந்து நமது இயக்க ஏடுகள் அரசு நூலகத்திற்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களைப் போன்ற மாணவர்களின் அவா.
-யாழ்திலீபன்
சென்னை

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

சுயமரியாதைக்குச் சவால்!

பி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தானில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மாநில அரசு சார்பில் உணவு பொருள்கள் மானியமாக வழங் கப்படுகின்றன. இவ்வாறு உணவுப் பொருள்களை பெறுவோர் ‘‘நான் ஏழை’’ என்று அவரவர் வீட்டு வெளிப்புறச் சுவரில் பெயிண்ட் மூலம் எழுதி வைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மனிதாபிமானமற்ற இந்த உத்தரவை தொடர்ந்து சிக்ரை மற்றும் பந்திகுய் தாலுகாக்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் இது போன்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை வசதி படைத்தவர்கள் பெற்று விடக்கூடாது என்ற காரணத்தால் இது போன்று எழுத உத்தரவிட்டிருப்பதாக உள்ளூர் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி யின, சிறுபான்மை மக்கள் தான் பெரும்பாலும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளனர்.
இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘‘10 கிலோ கோதுமை வாங்குவதற்காக நாங்கள் தலை நிமிர்ந்து நடக்க முடியாத நிலையை இந்த புதிய உத்தரவு ஏற்படுத்தியுள்ளது. பலர் இந்த வாசகத்தை அழித்துவிட்டு தங்களுக்கு மானிய விலையில் கோதுமை வேண்டாம் என்று தெரிவித்துவிட்டனர்’’ என்றார். இது தவிர இவ்வாறு நான் ஏழை என்று பிரகடனப்படுத்திக் கொண்டால், ரூ.750 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் மாநில அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறுகையில், ‘‘இது ஒரு மோசமான செயலாகும். உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேசன் பொருள்கள் வழங்கப்பட்டால் அது மக்களின் சட்டப்பூர்வ உரிமையாகும். அது அரசின் சலுகை கிடையாது. இதன்மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அரசு ஏழைகள் விரோத போக்கைக் கடைப்பிடிக்கிறது’’ என்றார்.
இது முதல் முறையல்ல. ஏற்கெனவே கடந்த 2016 ஆம் ஆண்டு பில்வாரா நகரில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வரும் பயனாளிகளின் வீடுகளில் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசி பயனாளிகள் பெயர், அவரது அடையாள எண் ஆகியவற்றை எழுதி வைத்த சம்பவம் நடந்துள்ளது.
பாரதீய ஜனதா என்றாலும் சரி, அதன் ஆணி வேர்களான ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களானாலும் சரி - இவை எல்லாமே இந்து மதத்தின்படி சிந்திக்கக் கடமைப்பட்டவைகள். இந்து மதத்தில் மனிதாபிமானத்துக்கும், தன்மானத்துக்கும் இடம் இல்லை.
அப்படி இடம் இருந்தால், தாழ்ந்த ஜாதி என்ப தும், வறுமை என்பதும் கர்மப் பலனின் விளைவு என்று கூறுவார்களா? இந்த ஏற்பாடுகளைக் கடவுளே செய்து வைத்துள்ளார் என்றுதான் பசப்புவார்களா?
‘‘மாட்டுக்காகக் கசிந்துருகுபவர்கள், மனிதனின் பசியைப்பற்றி சிந்திக்க மறுக்கிறார்கள்’’ என்று விவேகானந்தரே கூட வெட்கப்படவில்லையா?
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் என்றான் திருவள்ளுவர். பிச்சை எடுத்துதான் உண்ணவேண்டும் என்று ஒரு கடவுள் ஏற்பாடு செய்திருப்பானேயானால், அந்தக் கடவுள் ஒழியட்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத்த சிந்தனையாளர் அவர்.
ஓர் அரசு என்றால் குடிமக்களின் சுயமரியா தையை மதிக்கவேண்டாமா? அரசே குடிமக்களின் சுவரில் ஏழை என்று எழுதி வைப்பது எவ்வளவுக் கேவலம் - மனிதாபிமானற்ற மானக்கேடு!
இன்னும் என்னென்ன கேவலங்களை எல் லாம் பி.ஜே.பி. ஆட்சியில் குடிமக்கள் சுமக்க வேண்டுமோ!
அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் படை - வள்ளுவன் வாக்குப் பொய்க்காது! மக்களின் சுயமரியாதை யைக் காலில் போட்டு மிதிக்கும் பி.ஜே.பி. அரசின் நாள்கள் எண்ணப்படும்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...