Showing posts with label இந்தியச் செய்திகள். Show all posts
Showing posts with label இந்தியச் செய்திகள். Show all posts

Saturday, August 24, 2019

மாநிலங்களவை எம்பி.யாக மன்மோகன் பதவியேற்பு




புதுடில்லி,ஆக.24, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன் மோகன் சிங், அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை  உறுப்பி னராக இருந்து வந்தார். இவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 14ஆம் தேதி முடிந்தது.

இந்நிலையில், ராஜஸ்தானில் நடந்த மாநிலங் களவை உறுப்பினர் இடைத்தேர்தலில் மன்மோகன் சிங் போட்டியிட்டார். அவருக்கு எதிராக பாஜக வேட்பாளரை நிறுத்த வில்லை. இதனால், மன்மோகன் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டார்.

இதைத் தொடர்ந்து, மாநிலங் களவை உறுப்பின ராக மன்மோகன் சிங் நேற்று பதவியேற்றுக் கொண் டார். அவருக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்  பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமத் படேல் மற்றும் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சில பாஜக தலைவர்களும் உடனிருந்தனர்.

பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று கூறிய நிதி ஆயோக் தலைவருக்கு பாஜக மிரட்டல்



புதுடில்லி ஆக. 24 நாட்டின் பொருளாதாரம் கடும் தேக்க நிலை யைச் சந்தித்து வருகிறது. வாகனத் தொழில் நிறுவனங்களின் வீழ்ச்சி, பல்வேறு தொழில்களின் நசிவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு ஆகியவை பொரு ளாதார வீழ்ச்சியை மோசமாக்கியுள்ளது.

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், தலைமை பொருளா தார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், முன்னாள் பிரதமரும், பொருளாதார அறிஞருமான மன் மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார அறிஞர்களின் கருத்து களும் இந்தியாவில் அதிபயங்கரமான பொருளாதாரச் சீர்கேடு ஏற்பட்டி ருப்பதை எச்சரிக்கை செய்துள்ளனர்.

இருப்பினும்  பா... தலைவர் களும், அமைச்சர்களும் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பொய் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் நாட்டின் பொரு ளாதார வளர்ச்சிக்காக மோடியால் அமைக்கபப்ட்ட  நிதி ஆயோக் அமைப்பின்  தலைவர் ராஜிவ் குமார், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர் ஷமிகா உள்ளிட்டோரும் பொருளா தார வீழ்ச்சி குறித்து எச்சரித்தனர்.

நிதி ஆயோக் தலைவர் ராஜிவ் குமார் .என்.அய் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கடந்த 70 ஆண்டுகளில் நிதித்துறை இதுபோன்ற சறுக்கலைக் கண்டதில்லை.

ஒட்டு மொத்த நிதித்துறையும் நெருக்கடியில் உள்ளது. பொருளாதார நிலை இன்னும் மோசமடைய வாய்ப்புள் ளது. அரசு உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளாக பொருளா தார வளர்ச்சியில் நாடு எதிர் கொண் டிருக்கும் மோசமான நிலையைத் தடுத்து நிறுத்த வேண்டும். அரசுத் துறைகள் மட்டுமல்லாமல், தனியார் துறைகளும் கடுமையான நெருக்கடி களைச் சந்தித்து வருகின்றன. தனியார் துறையின் அச்சத்தை அகற்ற மத்திய அரசு தன்னால் முடிந்ததைச் செய்யவேண்டும். எனத் தெரிவித்தார்.

ராஜிவ் குமாரின் பேட்டி நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி யுள்ளது, மோடி பாரீஸ் நகருக்குச் சென்று இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறிவருகிறது என்று கூறிக் கொண்டு இருக்கும் நிலையில்  நிதி ஆயோக் தலைவரின் பேச்சு மோடியை மீண்டும் ஒரு பொய்யர் என்று உறுதிசெய்துள்ளது.

இந்த நிலையில் பாஜகவினர் நிதி ஆயோக் தலைவரை மிரட்டும் விதமாக பேசியுள்ளனர்.

இதனை அடுத்து அவர் தனது பேச்சை ஊட கங்கள் தவறாக மொழி பெயர்த்து விட்டது என்று கூறியுள் ளார்.

பா.. அரசு பொருளாதார நெருக்கடி நிலையை வெவ்வேறு பிரச்சி னைகளைப் பயன்படுத்தி திசை திருப்பி வந்த நிலையில், ராஜிவ் குமார் பொருளாதார தேக்க நிலையை வெளிப்படையாகத் தெரிவித்துள் ளார்.

முக்கியமாக தனது ஆட்சியின் தொடர் தோல்வியை மறைக்க மோடி மற்றும் அமித்ஷா போன்றோர் தொடர்ந்து முயற்சி செய்தும் உண் மைகள் வெளியே வருவதை தடுக்க முடியவில்லை. இதனால் மிரட்டல் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

Wednesday, July 17, 2019

உ.பி. பா.ஜ.க. அரசு மாடுகளுக்காக ரூ. 750 கோடி ஒதுக்கிடு செய்தும் உணவு தண்ணீர் இன்றி 35 மாடுகள் உயிரிழப்பு



லக்னோ, ஜூலை 17- உத்தரப்பிர தேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் தற்காலிக மாட்டுக்கொட் டகைகளில் அடைக்கப்பட்டி ருந்த 35 மாடுகள் உணவு, தண் ணீரின்றி உயிரிழந்துள்ளன.

மத்தியில் ஆட்சிக்கு வந்த மோடி அரசு, பசுக்களைப் பாது காப்பதற்காக ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் என்றஅமைப்பை உரு வாக்கி, ஆண்டுதோறும் பல நூறுகோடி ரூபாய்களை அள்ளி இறைத்து வருகிறது. 2017-18 இல் ரூ.301 கோடி ஒதுக் கப்பட்ட நிலையில், இது 2019-20ஆம் ஆண்டிற்கு ரூ. 750 கோடி ரூபாயாக உயர்த்தப்பட் டது.

உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசு மட்டுமே மாடு களுக்காக ரூ. 160கோடி நிதி ஒதுக்கீடு செய்து, மாநிலம் முழு வதும் 750 மாட்டுக் கொட்டங் கள்அமைத்தது. காவல் நிலை யம், காவலர் குடியிருப்பு, அரசு ஊழியர்கள் குடியிருப்புகள் மட்டுமன்றி, சிறைச் சாலையி லும் கூட, கொட்டம் அமைத்து மாடுகளைப் பராமரிக்க வேண் டும் என்று உத்தரவு போட் டது.இந்நிலையில்தான், பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகு தியில் உள்ள கந்தி கிராம் மாட் டுக் கொட்டத்தில் 35 மாடுகள் உயிரிழந்துள்ளன. மின்னல் தாக்கியதாலேயே மாடுகள் உயி ரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் அரசுக்கு அறிக்கை அனுப்பி யுள்ளார். ஆனால், ஆட்சியர் பொய் சொல்வதாகவும், மின் னல் எதுவும் வெட்டவில்லை என்றும் உள்ளூர் கிராமவாசிகள் கூறியுள்ளனர். மேலும், கொட் டத்தில் அடைக்கப்பட்டிருந்த மாடுகளுக்கு அண்மைக்கால மாக சரிவர உணவு, தண்ணீர் என்று எதுவும் வழங்கப்பட வில்லை; இதனாலேயே மாடு கள் இறந்துள்ளன என்றும் உள் ளூர் மக்கள் குற்றம் சாட்டி யுள்ளனர்.

இந்திய எல்லையில் கடத்தலை முழுமையாக தடுக்க இயலாது: வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை



டாக்கா, ஜூலை 17- இந்திய--வங்கதேச எல்லைப் பகுதியில்  கடத்தல்களை முழுமையாக தடுக்க இயலாது என்று வங்கதேச எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. மேலும், இந்த கடத்தலை தடுப்பதற்கு இந்திய எல் லைப் பாதுகாப்பு படை ஒத்துழைக்க வேண்டும் என்றும் அந்நாடு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு கால்நடைகள், போதைப் பொருள்கள், ஆயுதங்கள், தோல் பொருள்கள் ஆகியவை கடத்தப்படு கின்றன. அதேபோல் வங்கதேசத்தில் இருந்தும் இந்தியாவுக்கு சில பொருள் கள் கடத்தப்படுகின்றன. இந்த கடத் தல்களை கட்டுப்படுத்துவது, இந்திய மற்றும் வங்கதேச எல்லைப் பாது காப்பு படைகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

முன்னதாக, கடந்த 1-ஆம் தேதி, மேற்கு வங்கத்தில் உள்ள இந்திய-வங்கதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வங்கதேச கடத்தல் கும்பல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து வங்கதேச எல்லைப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வங்கதேசத்தில் கால்நடைகளுக்கு அதிக தேவை உள்ளது. அதனால் கடத்தல்காரர்கள் எந்தஒரு வாய்ப் பையும் தவற விடுவதில்லை. எல்லைத் தாண்டிய கடத்தல்கள் எளிமையாக நிகழ்ந்து விடுகின்றன. ஒரு கால் நடைக்கு ரூ. 400 செலுத்தினால் போதும். அதிகாரிகள், இந்திய கால் நடைகளை வங்கதேசத்தில் விற்பனை செய்வதற்கு அனுமதியளித்து விடு கின்றனர். எல்லைத் தாண்டியதும் அவர்கள் வர்த்தகக்காரர்களாக மாறிவிடுகின்றனர்.

இந்த கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மிகவும் ஏழ்மையா னவர்கள். தங்களது வாழ்க்கைக்காக இந்த தொழிலைச் செய்து வருகின்ற னர். அதனால் அவர்கள் மீது நாம் கடும் நடவடிக்கை மேற்கொள்ள இயலாது.

கடத்தலில் ஈடுபடுவர்களை எப் போதும் பிடித்து விசாரித்த பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுவோம். இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரும் இதையே செய்வர். ஆனால் சில நேரங்களில் கடத்தல்காரர்களை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொலை செய்கின்றனர். இத்தகைய கடத்தலில் ஈடுபடுவர்கள் அதிக அளவுக்கு துன்புறுத்தப்படு கின்றனர். இவையெல்லாம் நிறுத்தப் பட வேண்டும்.

வங்கதேசம் நட்புநாடாக திகழவே விரும்புகிறது. எங்கள் நாட்டுக்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் எல்லைத் தாண்டிய கடத்தல், ஊடு ருவல், கள்ள நோட்டு புழக்கம், கால் நடைகள் கடத்தல் ஆகியவைதான். இவற்றை தடுத்து நிறுத்துவதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஒத்துழைக்க வேண்டும். எல்லையில் வசிக்கும் மக்களைத் தொடர்பு கொண்டு அவர்களது பிரச்சினை களை தீர்த்து வைக்க மாற்று வழிகளை பரிந்துரைக்கலாம். இதன் மூலம் கடத்தல்களை தடுக்க முயற்சிக்கலாம். கடந்த மாதம் நடைபெற்ற இருநாட்டு எல்லை பாதுகாப்பு படை அதிகாரி கள் கூட்டத்தில், இரு நாடுகளும் இணைந்து இந்த கடத்தல் சம்பவங்க ளுக்கு எதிராக போராட முடிவெடுக் கப்பட்டது. இந்த கடத்தல் வர்த்த கத்தை முழுமையாக தடுக்க இந்திய எல்லைப் பாதுகாப்பு படையும் ஒத் துழைக்க வேண்டும் என்று கூறினார்.

Tuesday, July 16, 2019

மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் இந்தியா முழுவதும் கடந்த 2 மாதத்தில் 12க்கும் மேற்பட்ட ஆணவப் படுகொலைகள்


 
சென்னை, ஜூலை 15 கடந்த 2 மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 12க்கும் மேற்பட்ட ஆணவப் படு கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதில் பாதுகாப்புக்குச் சென்ற காவல்துறை முன்னிலையிலேயே குஜராத்தில் பட்டியல் இன மணமஇகனை உயர் ஜாதி மணப்பெண்ணின் பெற் றோர்கள் கொலை செய்துள்ள நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத் கிராமத்துக்கு அருகே உள்ள மண்டல் கிராமத்தில் ராஜ்புத் சமுகத்தை சேர்ந்த பெண்ணை  பட்டியல் இன வாலிபர் ஒருவர், திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அப்பெண் கர்ப்பமாக இருந்த நிலையில் பெண்ணின் பெற் றோர்கள் தாங்கள் தங்கள் மகளைக் கவனித்துக்கொள்கிறோம் என்று கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் வீட்டில் தனது மகளை பட்டியல் இன இளைஞரை திருமணம் செய்ததற்காக கட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதை அறிந்த அந்த இளைஞர் தனது மனைவியை அழைத்துச் செல்ல உதவி வேண்டி காவல்துறையினர் மற்றும் மாநில பெண்கள் ஆணைய அதிகாரிகளுடன் சென் றார். அப்போது காவலர்கள் முன்னி லையிலேயே மணப்பெண்ணின் உறவினர்கள் இளைஞரை வெட்டிக் கொலை செய்தனர்இது தொடர் பாக உடன் இருந்த பெண்கள் உதவி ஆலோசகர் பாவிகா நவ்ஜிபாய் பின்னர் இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்தார்.
இது குறித்து மாநில பெண்கள் ஆணையத்தின் ஆலோசகர் கூறிய தாவது, அவரது மனைவி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஹரேஷ் என்னிடம் கூறினார். அவரது மனைவியை பெண் வீட் டார் துன்புறுத்துகின்றன என்று கூறி அவரை மீண்டும் அழைத்து  வருவதற்கு  என்னிடம் உதவி கேட்டுக் கொண்டார்குஜராத் அரசாங்கம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் 24 மணி நேர உதவிக்காக அபயம் என்ற ஹெல்ப்லைன் ஒன்றை நடத்தி வருகிறது. இந்த மய்யம் காவல்துறையோடு இணைந்து செயல்படும். இந்த அமைப்பு அதி காரிகளுடன்  ஹரேஷ், வர்மொர் கிராமத்தில் உள்ள அவரது மாமனார் தஷ்ரத்சின் ஜாலாவின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என்று ஹரேஷை எச்சரித்தே, நவ்ஜிபாய் அவரை கூட்டிச் சென்றுள்ளார்.
"அதுமாதிரி எதுவும் நடக்காது என்று ஹரேஷ் என்னிடம் கூறினார். ஊர்மிளாவின் தந்தைக்கு தன்னை தெரியும் என்றும் தனது மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு போக வேண்டும் என்று விருப்பப்பட்ட தாகவும் சொன்னார். அவர்களின் வீட்டை தொலைவில் இருந்து காண்பிப்பதாகவும் ஹரேஷ் கூறினார்" என நவ்ஜிபாய் தெரிவித்தார். அபயம் உதவி மய்யத்தின் ஆலோசகர் பவிகா, பெண் காவலர் அர்பிதா லிலாபாய் மற்றும் ஓட்டுநர் சுனில் சோலங்கி ஆகியோரும் சென்றனர். அர்பிதா மற்றும் பவிகா இருவரும் தஷ்ரத்சின் வீட்டிற்குள் சென்றுள்ளனர். ஹரேஷ் வாகனத் தினுள்தான் அமர்ந்திருந்தார்.
ஹரேஷின் மனைவி ஊர்மிளா, அவரது தந்தை தஷ்ரத்சின், சகோதரர் இந்தரஜித்சின் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களோடு 15-20 நிமிடங்கள் பவிகா பேசினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊர் மிளாவின் குடும்பம் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டதையடுத்து அவர் அங்கிருந்து சென்றார். வாகனம் வரை பவிகாவுடன் வந்த தஷ்ரசின், காரில் அமர்ந்திருந்த ஹரேஷை பார்த்திருக்கிறார்.
முதல் தகவல் அறிக்கைப்படி, ஹரேஷை பார்த்த தஷ்ரத்சின், "இவன்தான் நம் பெண்னை கூட்டிச் சென்றவன். அவன் ஓட்டுநருக்கு அருகே அமர்ந்திருக்கிறான். அவனை காரில் இருந்து வெளியே இழுத்து கொலை செய்யுங்கள்" எனக் கூறியுள்ளார். ட்ராக்டர்கள் மற்றும் பைக்குகளுடன் வாகனத்தை சுற்றி வளைத்த எட்டு பேர், அங்கு இருந்த அதிகாரிகளை கத்தி மற்றும் வாள்கள் கொண்டு தாக்கத் தொடங் கினர். இதில் காயமடைந்த பெண் காவலர் அர்பிதா, காவல்துறை கட் டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், அதற்குள் ஹரேஷ் உயிரிழந்துவிட்டார். தகவல் கொடுத்த 15 நிமிடங்களுக்கு பிறகு மண்டல காவல்துறையினர் அங்கு வந்தனர். பின்னர் ஹரேஷின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல் லப்பட்டது. "ஹரேஷின் குடும்பம் அவரது வருமானத்தை நம்பிதான் இருக்கிறது. அவரை கொன்று விட்டனர்" என்று ஹரேஷின் மாமா ஷாந்திலால் தெரிவித்தார். பாது காவலராக பணியாற்றி வந்த ஹரேஷின் தந்தை, தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக ஹரேஷ் பணியாற்றி வந்தார்.
மராட்டியத்தில்
மகாராட்டிராவில் தானே மாவட் டத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் பெற் றோர்கள் காட்டிற்குள் அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்மே மாதம் மகாராட்டிரா அகமத் நகரில் காதல் திருமணம் செய்த இணையரை பெண்ணின் பெற்றோர்கள் தீவைத்துக் கொலை செய்த நிகழ்வு அம்மாநிலத்தை உலுக்கியது. இதே அகமத் நகரில் ஏப்ரல் மாதமும் ஜாதி மாறி திருமணம் செய்ததாக தனது மகளைப் பெற்றோர்களே வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில்...
மத்தியப்பிரதேசத்தில் 21 வயது கர்ப்பிணிப்பெண்னை அவரது குடும்பத்தினரே வேற்று ஜாதி இளைஞரை காதலித்து திருமணம் செய்ததாக கூறி கொலை செய்தனர்அதே மாநிலத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி 23 வயது பொறியியல்  பட்ட தாரி பெண் காதல் திருமணம் செய்ததால் பெற்றோர்களால் கொலை செய்யப்பட்டார்.
உத்தராகண்ட்டில்
உத்தராகண்ட் மாநிலத்தில் காதல் திருமணம் செய்த தனது மகளை பெற்றோர்கள் கோடாரியால் பிளந்து கொலை செய்துள்ளனர்.
தமிழகத்தில்...
தூத்துக்குடி மாவட்டம் குளத் தூர் பகுதியில் புதிதாக திருமணமான  இணையர்கள் ஜாதி ஆணவப்படு கொலை செய்யப்பட்டனர். அதே போல் கோவையில்  காதல் திருமணம் செய்துகொண்ட கனகன், வர்ஷினி ப்ரியா என்ற இணையர்கள் படுகொலை செய் யப்பட்டனர்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...