Showing posts with label சங்கராச்சாரியார். Show all posts
Showing posts with label சங்கராச்சாரியார். Show all posts

Friday, September 25, 2015

பாலியல் குற்றவாளி சங்கராச்சாரிமீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மகளிர் ஆணையம் எச்சரிக்கை

பெங்களூரு, செப்.24_ கருநாடக மாநிலத்தில் ஹோசாநகர் ராமச்சந் திரபூர் மடாதிபதியாக உள்ள சங்கராச்சார்யா ராகவேஷ்வர பாரதி என்பவர்மீதான பாலியல் வழக்கு ஓராண்டாக கிடப் பில் போடப்பட்டுள்ளது.
மடாதிபதி ராகவேஷ் வர பாரதி, பிரேமலதா சாஸ்திரி என்பவரை அரித்துவார், ஜோத்பூர் போன்ற பகுதிகளுக்கு அழைத்துச் சென்று  பாலி யல் வன்முறை செய்தார் என்று கருநாடக காவல் துறையினரிடம் கடந்த ஜனவரியில் புகார் கொடுத் திருந்தார். கருநாடக காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்தனர். உளவுப்பிரிவினரின் விசா ரணையில் அலைபேசிகள் பதிவுகளைக் கொண்டு அவர் அளித்த புகார் உண்மை என்று கண்டு பிடிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். ரிஷிபாலுக்கு நெருக்கமானவர்
மடாதிபதிக்கு நெருக் கமாக இருந்து வருபவர் ஆர்.எஸ்.எஸ். அமைப் பைச் சேர்ந்த சேவா பாரதியின் தேசிய பொதுச் செயலாளரான ரிஷிபால் தாத்வால் என்பவர் ஆவார். அவரும் இவ்வழக் கில் முக்கிய சாட்சி ஆவார்.
ராகவேசுவர பாரதி என்கிற சாமியார்மீதான பாலியல் குற்ற வழக்கில் உரிய நடவடிக்கை எடுக் காத கருநாடக காவல் துறையின்மீது தேசிய மகளிர் ஆணையத் தலை வர் கண்டனத்தைத் தெரி வித்துள்ளார்.
தேசிய மகளிர் ஆணை யத் தலைவர் லலிதா குமாரமங்கலம் சாமியார் மீதான பாலியல் வழக்கில் கருநாடக காவல்துறை யினரின் மெத்தனப்போக் கைக் கடுமையாக கண்டித் துள்ளார். தேசிய மகளிர் ஆணை யத்தின் தலைவர் லலிதா குமாரமங்கம்  பெங்களூரு வந்திருந்தபோது, இவ் வழக்கில் சாமியார்மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்த கரு நாடக காவல்துறையினர் தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மெத் தனமாக இருந்து வந்துள் ளனர். இரண்டாம் முறை யாக பெங்களூரு வந்த மகளிர் ஆணையத் தலை வர், சாமியார்மீதான பாலியல் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய் யாத கருநாடகக் காவல் துறையினருக்கு கடும் கண் டனத்தைத் தெரிவித்துள் ளார்.
காவல்துறையினர், சாமியார்மீது உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறியதாலேயே மகளிர் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியுள்ளது. ஆனா லும், அதன்பின்னரும் குற்ற அறிக்கைகூட தாக் கல் செய்யாமல் இருந் துள்ளனர்.
மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமார மங்கலம் கூறுகையில், இப்போது வளர்ந்து வரும் சூழ்நிலைகள் பெண்களுக்கு மாநிலத் தில் பாதுகாப்பு இல்லாத நிலையையே உணர்த்து கின்றன. குற்ற அறிக்கை அளிப்பதற்கு ஓராண்டு காலத்தை எடுத்துக் கொண்டு, ரகசியமாக வழக்கை நடத்த வேண்டிய அவசியம் என்ன? அரசி யல் தலையீடுகள் காரண மாகவே காவல்துறையினர் இவ்வழக்கில் அலட்சியத் துடன் நடந்துகொண்டுள் ளார்கள். பாதிப்புக்கு உள்ளானவர்கள் முகத்தை மூடிக்கொண்டு  செல்லக் கூடிய நிலையில், குற்ற வாளி சுதந்திரமாக நட மாடுவதா? இந்த வழக் கின்மூலம் பெண்களுக்குப் பாதுகாப்பின்றி அச்சத் துடன் இருக்கின்ற நிலையே உள்ளது என்பது தெரிகிறது. இதில் அரசி யல் தலையீடுகள்  இருப் பது என்பது வேதனை யானதாகும்.
கடந்த முறை நான் காவல்துறை உயர் அலு வலர்களை சந்தித்தபோது, கூடிய விரைவில் குற்ற அறிக்கையை அளித்து விடுவதாக உறுதி கூறினர். ஆனால், இன்றுவரை எதுவுமே செய்யவில்லை. பிணையில் வெளியே வந்துள்ள சாமியார் தன் ஆட்கள்மூலமாக பாதிக் கப்பட்ட பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வரு கிறார். பாதிப்புக்கு உள் ளான பெண்கள் என்னி டம் தங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது   என்று குறிப்பிட்டுள்ளார்.

Monday, July 6, 2015

சங்கராச்சாரி முகமூடி கிழிகிறது!

சாட்சியைக் கொல்லப்போவதாக மிரட்டுகிறார்!
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- சமநீதி
அப்பட்டமான ஒரு கொலை! வலுவான சாட்சிகள்! அனைத்தும் இருந்தும் செல்வாக்கு, பணம், அந்தஸ்துக்கு முன் எதுவும் செல்லுபடியாகவில்லை!
துணிந்து நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் முயற்சிக்கு நீதிமன்றத் தீர்ப்பு சவாலாக அமைந்தது. ஆனால், நீதியை நிலைநாட்ட அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு பிறழ்சாட்சி ரவிசுப்பிரமணியத்தின் மனுமூலம் வந்துள்ளது.

பொய் சாட்சி கூறிய குற்றம் தன்னை உறுத்த உண்மையைச் சொல்ல முற்படும் ரவி சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நான் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில், அந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக போலீஸ் அதிகாரி பிரேம்குமார் இருந்தார். அப்பொழுது என்னிடம் பேச வழக்கறிஞர்கள், போலீசார் என அனைவரும் பிரேம்குமார் மீது இருந்த மரியாதையால் பயந்தனர். அதனால், நான் சங்கரராமன் கொலை வழக்கில் அப்ருவராக மாறி ஜெயேந்திரர்தான் சங்கரராமனை அப்பு மூலமாக தீர்த்துக் கட்டினார். அதற்காக அவர் ரவுடிகளுக்கு பணம் கொடுத்தார் என சாட்சியம் அளித்தேன். ஜெயேந்திரர் சார்பாக சுமார் 20 வழக்கறிஞர்கள் என்னை குறுக்கு விசாரணை செய்தார்கள். பிரேம்குமார் கொடுத்த தெம்பால் உண்மையை தைரியமாக கோர்ட்டில் எடுத்து சொன்னேன். துரதிர்ஷ்டவசமாக பிரேம்குமார் அவரது பணியில் நெருக்கடிக்குள்ளானதோடு, திடீரென இறந்தும் போய்விட்டார். அதன் பிறகு நிலைமை தலைகீழானது.
நான் சிறைக்குப் போய் சுமார் 7 வருடம் கழித்து மறுபடியும் என்னை சாட்சியம் அளிக்க அழைத்தார்கள். அப்பொழுது சிறைத்துறை டி.அய்.ஜி.யாக இருந்தவர் ராமச்சந்திரன். அவர் ஜெயேந்திரருக்கு மிகவும் நெருக்கமானவர். ராமச்சந்திரனும் போலீஸ் ஏட்டு கண்ணன், ரவுடி கதிரவன் ஆகியோர் என்னை ஜெயேந்திரருக்கு எதிராக சாட்சி சொல்லாதே என மிரட்டினார்கள். அதிலும் கதிரவன், ராமச்சந்திரன் ஆதரவுடன் சிறைக்கு உள்ளே வந்து, எனதுஅறையில் வைத்து மிரட்டினான். நான் வேறு வழியில்லாமல் பிறழ் சாட்சியானேன். அதேபோல் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் என்னை பிறழ் சாட்சியாக்கினார்கள்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உட்பட குற்றவாளிகள் அனைவரும் விடுதலையானார்கள். அதற்குப் பிறகு என்னை 2013ஆம் ஆண்டு ஜெயிலில் இருந்து விடுதலை செய்தார்கள். சங்கரராமன் கொலை வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த தேவதாஸ் உட்பட அனைவரும் நீதியை வளைத்து விலை பேச, அதன் மூலம் ஜெயேந்திரர் பெற்ற விடுதலை என் மனதை உறுத்தியது. மறுபடியும் நடந்த உண்மைகளை நான் சொன்னால் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலாவது ஜெயேந்திரருக்கு தண்டனை கிடைக்கும் என யோசித்தேன். ஜெயேந்திரரின் எடுபிடிகளாக இருந்த ரவுடிகள் அப்பு, கதிரவன் ஆகியோர்மரணம் அடைந்துவிட்டார்கள்.
சங்கரராமன் வழக்கில் சங்கரமடத்திற்கு சாதகமாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர் தேவதாஸை போல் இல்லாமல் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் விஜயராஜி மிகவும் நேர்மையாகவும், துணிவுடனும் ஜெயேந்திரரின் பணத்திற்கு விலைபோகாமலும் செயல்படுகிறார்.
முதல்வர் அம்மாவின் ஆட்சியில் உண்மையை சொல்ல நினைக்கும் எனக்கு விஜயராஜி பாதுகாப்பாக இருப்பார் என்பதால்நான் உண்மையைச் சொல்ல முயன்றேன். அதை தெரிந்துகொண்ட ஜெயேந்திரரும், மடத்தில் செல்வாக்காக உள்ள சுந்தரேச அய்யரும், போலீஸ் கண்ணனும் என்னை மிரட்டினார்கள். கடந்த 8ஆம் தேதி ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் அரசு வழக்கறிஞர் விஜயராஜிடம் நான் எனது சாட்சியத்தை மாற்றிக் கூற விரும்புகிறேன் என ஒரு மனு கொடுத்தேன். அதை கவனித்த சங்கர மட மேலாளர் சுந்தரரேச அய்யர், உன்னை பெரியவா பார்க்கணும்னு சொல்றா மடத்துக்கு சாயங்காலம் வந்துட்டு போ என்றார். போகாவிட்டால் ரவுடிகளை அனுப்புவார்கள் என்பதால் அன்று மாலை ஆறரை மணிக்கு சங்கர மடத்திற்குச் சென்று ஜெயேந்திரரை சந்தித்தேன்.
நீ என்ன ராதகிருஷ்ணன் கேஸில் எனக்கெதிரா சாட்சி சொல்லப்போறியா? அந்த கவர்மெண்ட் வக்கீலுக்கிட்ட பெட்டிசன் கொடுத்தியா? எனக் கேட்டார். நான் ஆம் என்று சொன்னேன். உனக்கு சங்கரராமன் கதிதான் ஏற்படும். உன்ன குடும்பத்துடன் சேர்த்து ஒழித்து விடுவேன் என ஜெயேந்திரர் மிரட்டினார். அப்போது அவருடன் இருந்த சுந்தரேச அய்யர், பெரியவா ஜெயேந்திரரை பகைத்துக்கொண்டு இந்தியாவில் எங்கும் நீ இருக்க முடியாது. சென்ட்ரல் கவர்மெண்டே பெரியவாளின் ஆசிர்வாதத்தில்தான் இயங்குது என மிரட்டினார். அந்தநேரம் அங்கே வந்த போலீஸ் கண்ணன், இப்பதான் நான் ஓய்வு பெற்ற சிறைத்துறை டி.அய்.ஜி.யான ராமச்சந்திரனை பார்த்துவிட்டு வருகிறேன். அவர், சங்கரமடத்திற்குச் சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். ராமச்சந்திரனுக்கு ரவுடிகளையும், போலீசாரையும் நன்கு தெரியும். பெரியவாளுக்கு எதிராக சாட்சி சொன்னா, நீ க்ளோஸ் என மிரட்டினார் என்றார்.
மத்தியில்ஆளும் பா.ஜ.க.வுடன் நெருக்கமாக உள்ள ஜெயேந்திரர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறீர்களா என்று கேட்டதற்கு, அம்மா நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என நான் நம்புகிறேன். அவ்வளவுதான் என்று அச்சத்துடன் தன் உள்ளக் குமுறலைக் கொட்டியுள்ளார் ரவி சுப்பிரமணியம். அவரது அச்சம் அர்த்தமுள்ளது. காரணம், ஒரு தடவை ஜெயேந்திரர், 20 வயது பெண்ணை வன்புணர்ச்சி செய்ய வற்புறுத்த, அப்பெண் தப்பித்து வெளியில் ஓட, தன்கதை நாறிவிடும் என்று அதை அப்படியே அமுக்க, தனக்கு வேண்டிய ஆஸ்பத்திரி உரிமையாளர் மூலம் அடியாட்களை அனுப்பி அப்பெண்ணை லாரியேற்றிக் கொன்றவர். (ஆதாரம்: நக்கீரன் வெளியிட்ட ஜெயேந்திரர் வாழ்வும் வழக்கும்) எனவே, தமிழக முதல்வர், ரவி சுப்பிரமணியத்திற்கு பாதுகாப்பு அளித்து, உண்மையை வெளிக்கொணர்ந்து, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா அழிந்துபோக வேண்டும் என்று யாகம் நடத்தியவர் அல்லவா ஜெயேந்திரர். அவருக்குப் பாடம் புகட்ட வேண்டிய கடமையும் முதல்வருக்கு உண்டு. மத்திய அரசின் நிர்பந்தத்திற்கு ஆட்படாமல், முன்னிலும் தீவிரமாய் வழக்கைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே தமிழக மக்கள் விருப்பம்.

Saturday, June 27, 2015

காஞ்சி சங்கராச்சாரியார்மீதான கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுமா?

- மின்சாரம்
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கராமன் ஒரு பட்டப் பகலிலே வரதராஜ பெருமாள் சன்னதியிலே படு கொலை செய்யப்பட்டார்.  அதற்குக் காரண மானவர் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்று ஒருமுகமாக பேசப்பட்டது அப்பொழுது தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தவர் செல்வி ஜெ. ஜெயலலிதா; ஒரு தீபாவளி நாளில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டார் (11.11.2004).
வேலூர் மத்திய சிறைச் சாலையில் இந்த லோகக்குரு 61 நாள்கள் கம்பி எண்ணியது. இவரது சிஷ்யக் கே()டி விஜயேந்திர சரஸ்வதி 31 நாள்கள் கம்பி எண்ணினார். நாள்தோறும் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வந்தார்.
இந்தக் கைது முதல் அமைச்சராக கலைஞர் அவர்கள் இருந்த கால கட்டத்தில் நடந்திருந்தால் அடேயப்பா என்ன களேபரம் செய்திருப்பார்கள்.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போது திருவாளர் சோ ராமசாமி துக்ளக்கில் என்ன எழுதினார்?
(1) வலுவான சாட்சியங்கள் அடிப் படையிலேயே கைது நடந்திருக்கிறது.
2) மைனாரிட்டிகளைத் திருப்திபடுத்த இந்தக் கைது என்பதும் சரியில்லை.
3) எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கை காரணமாக இந்தக் கைது என்பதும் சரியல்ல.
4) அரசியல் லாபக் கணக்கில் எடுக்கப் பட்ட நடவடிக்கையா என்றால் அதுவும் இல்லை.
5) நள்ளிரவில் அய்தராபாத் சென்று காவல்துறை எடுத்த நடவடிக்கையையும் குறை சொல்ல முடியாது.
ஆக, சோ வட்டாரத்தாலேயே குற்றம் சொல்லப்பட முடியவில்லை என்பது முக்கியமானது.
இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரர் விடுதலையானதானது - நீதி மீது நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நெருப்பு அலைகளை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.
மொத்தம் 177 சாட்சிகளில் 77 பேர் பிறழ் சாட்சிகள் என்பதை எந்த வழக்கிலாவது கேள்விப்பட்டதுண்டா? இந்த அதிசயம் இந்த வழக்கில் முக்கியமாக நடந்தது. பிறழ் சாட்சிகள் இந்த அளவு ஏன் ஏற்பட்டது என்று விசாரிக்கப்பட்டதா? இல்லையே! இந்த வழக்கில் புதுச்சேரி நீதிபதி இடையில் மாற்றப்பட்டுள்ளார். நீதிபதியின் உதவியாளரிடம் ஜெயேந்திர சரஸ்வதி பேரம் பேசினார். அதற்கான குறுந்தகடுகள் எல்லாம்கூட வெளியில் வந்தன. இவை எல்லாவற்றிற்குப் பிறகும்கூட ஜெயேந் திரரும் விஜயேந்திரரும் இவர்களின் கூட்டாளிகளும் விடுதலை செய்யப்பட் டனர் என்பது சகிக்கவே பட முடியாத ஒன்று.
இந்தத் தீர்ப்பின்மீது மேல் முறையீடு  செய்யவும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தவறி விட்டது.  இப்பொழுது இதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கில் முக்கிய சாட்சி யான ரவி சுப்பிரமணியம் தான் பிறழ் சாட்சியாக மாறியதற்கான சூழ்நிலையை யும் நிர்ப்பந்தத்தையும் கூறி அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னைப் பெரு நகரக் காவல்துறை ஆணையாளரிடம் மனு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜூனியர் விகடன் வார இதழில் (21.6.2015) பக்கம் 9,10) வெளி வந்துள்ள சேதிகள் முக்கியமானவை.
அரசு சாட்சியாக இருந்த நீங்கள் ஜெயேந்திரருக்கு ஆதரவாக பிறழ் சாட்சியாக மாறியது ஏன்? நான் பிறழ்சாட்சி ஆகிவிட்டேன் என்று ஒரு வரி தகவல் மட்டும்தான் வெளியே தெரியும். அதற்குப் பின்னால் என்னென்ன நடந்தது என்று உலகத்துக்குத் தெரியாது. சிறைத் துறையின் முன்னாள் டி.அய்.ஜி.யாக இருந்த ஒருவர்தான் இந்த விவகாரங்களுக்கு சூத்ரதாரி. அவர், இப்போது காஞ்சி மடம் நடத்தும் பல்கலைக் கழகத்தின் நிர்வாக அதிகாரியாக இருக் கிறார். அவர் மூலமாக அப்பு, கதிரவன் ஆகியோர் என்னை மிரட்டினர். புதுச் சேரிக்கு எவிடென்ஸ் கொடுக்க செல்வ தற்கு முதல் நாள் அன்று காஞ்சிபுரம் சப்-ஜெயிலுக்குள் இருந்த என்னை கதிரவன், தனி அறையில் என்னைச் சந்தித்தார். காஞ்சி பெரியவருக்கு எதிராக கோர்ட்டில் ஏதாவது சொன்னால் உன் கதையையே குளோஸ் பண்ணிடுவோம் என்று நேருக்கு நேர் மிரட்டும்போது நான் என்ன செய்ய முடியும்? அதுவும் அரசு சாட்சியாக ஜெயிலுக்குள் இருக்கும்போதே இந்த நிலை. தனி மனிதனாக நான் என்ன செய்ய முடியும்? உயிர் பயம்... அவர்கள் சொல்படி நடக்க வைத்தது. பண பலம், ரவுடிகள் பலம் மூலம் கொலை வழக்கில் இருந்து அனை வரும் விடுதலை ஆகி விட்டார்கள். அவர் களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றுதான் இப்போது முதல்வர் தனிப் பிரிவில் புகார் கொடுத்துள்ளேன்
சங்கரராமன் கொலை வழக்கில் தீர்ப்பு வந்து ஒன்றரை வருடத்துக்கு மேல் ஆகி விட்டது. இப்போது ஏன் புதி தாகப் புகார் சொல்கிறீர்கள்?
சங்கராச்சாரியார் உள்பட அனை வருமே குறுகிய கால சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை ஆகி விட்டனர். ஆனால், சுமார் 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த எனக்கு, ராதாகிருஷ்ணன் வழக்கில் 18.12.2013 அன்று உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி விடுவித்தது. நான் வெளியே வந்த பிறகும் ஜெயேந்திரரின் உத்தரவின் பேரில் அப்பு என்னை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தற்போது அப்புவும், கதிரவனும் இறந்து விட்டனர். எனவே, நான் சற்று சுதந்திரமாக இருக்கிறேன். பிறழ்சாட்சி சொல்லி உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்கவிட்ட எனது செயலை எனது மனசாட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. இரவும், பகலும் மனசாட்சி என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ராதா கிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்குக்கான சிறப்பு அரசு வக்கீலை 8.6.2015 அன்று நீதிமன்றத்தில் சந்தித்து, நடந்த உண்மைகளை எல்லாம் கூறுவதற்கான ஆலோசனையைக் கேட்டேன். அதற்கான மனுவையும் அவரிடம் சமர்ப்பித்தேன்.
புகார் கொடுத்த பிறகு உங்களுக்கு ஏதாவது மிரட்டல் வந்ததா?
ஆம். ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கின் அரசு வழக்கறிஞரை நான் அன்று சந்தித்தபோது ஜெயேந்திரர் வழக்கறிஞர்களும் அந்த வழக்கில் தொடர் புடைய சுந்தரரேசய்யரும் என்னைப் பார்த்தனர். சிறிது நேரத்தில் சுந்தரேசய்யர் என்னை தனியாக அழைத்தார். பெரியவா இன்றைக்கு வரச் சொன்னார். சாயங்காலம் வந்துவிட்டுப் போ என்றார். நானும் மாலையில் ஜெயேந்திரரை சந்தித்தேன். அப்போது ஜெயேந்திரர் என்னிடம், என்ன மறுபடியும் எனக்கெதிராக சாட்சி சொல்லப் போகிறாயா? உன்னையும் உன் குடும்பத் தையும் தொலைச்சிப்புடுவேன் என்று மிரட்டினார். அங்கிருந்த சுந்தரேசய்யர் என்னைப் பார்த்து, நீ பெரியவாளை பகைச்சிண்டேன்னா இந்தியாவின் எந்த மூலையிலும் உயிரோடு வாழ முடியாது. சென்ட்ரல் கவர்மென்ட்டுக்கே ஆலோசக ராக அவர் இருப்பது தெரியாதா? என எச்சரித்தார்.
சிறிது நேரத்தில், காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு எஸ்.அய்.-யாகப் பணியாற்றும் கண்ணன் என்ற மடத்துக் கண்ணன் வந்தார். அவர், நீ பெரியவாளுக்கு எதிராக ஏதாவது செய் தால் காணாமல் போயிடுவாய். பக்குவமா நடந்துக்கோ என்று எச்சரித்தார். இவர் களால் எனது உயிருக்கு ஆபத்து வரும் என்று பயமாக இருக்கிறது. அதனால்தான் முதல்வர் தனிப்பிரிவிலும் புகார் கொடுத்தேன்
காஞ்சி மடத்தில் நீங்கள் நடத்திய பேரம் படியாததால்தான் இப்போது புகார் கொடுத்ததாகச் சொல்கிறார்களே?
பணம் பொருளுக்கு ஆசைப்பட்டிருந் தால் நான் எப்போதோ செட்டில் ஆகி இருப்பேன். 9 வருடங்கள் ஜெயிலில் இருக் காமல் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தி ருப்பேன். பணத்தோடு பல நாடுகளைச் சுற்றி வந்திருப்பேன். 9 ஆண்டுகாலம் காத்திருந்து பணம்கேட்டு இப்போது மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. சட்டத்தின் ஆட்சி நடக்கும் அம்மா ஆட்சி யில் நீதி நிலைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் தைரியமாகப் புகார் கொடுத் துள்ளேன். முக்கிய சாட்சியான என்னை கலைத்ததோடு இல்லாமல், பல சாட்சிகளை இவர்கள் கலைத்துள்ளனர். ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில் உள்ள எஞ்சிய சாட்சிகளையும் கலைக்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ளனர். ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீனில் உள்ள ஜெயேந்திரர் உள்ளிட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு சொல்கிறார் ரவிசுப்பிரமணியம்.
ரவி சுப்பிரமணியத்தின் இந்தப் பேட்டி தன்னிலை விளக்கம் கொண்டதாகவே இருக்கிறது. கொலை செய்யப்பட்ட சங்கர ராமன் மனைவியிடமும் ஜெயேந்திரர் சார்பில் பேரம் பேசப்பட்டது (பெட்டிச் செய்தி காண்க).
இதன் அடிப்படையில் மேல் முறையீடு செய்யப்படுமா? நாடே எதிர்ப்பார்க்கிறது.
--------------
--------------
ஜெயேந்திரர் பேரம் பேசினார்
உங்கள் கணவரை ஜெயேந்திரர்தான் கொலை செய்திருப்பார் என்று நம்புகிறீர்களா?
என் ஆத்துக்காரர் இறந்தப்போ பலரும் அதுபற்றிப் பேசினா. வீட்ல அவர் எதையும் சொல்லாததால் எனக்கும் எதுவும் தெரியலை. பெரியவா, சகல அதிகாரமும் படைச்சவா. அவாளப்பத்தி எப்படிச் சொல்ல முடியும்? அந்தச் சமயத்துல போலீஸ் காட்டின கெடுபிடியைப் பார்த்து நாங்களே மிரண்டு போயிட் டோம். போலீஸெல்லாம் அவாளோட ஆளோன்னுகூட சந்தேகப்பட்டோம்.
அவரோட பதிமூனாவது நாள் விசேஷத்தப்போ, மகாப் பெரியவா அடக்கம் பண்ணின இடத்துக்குப் போனப்போ, என் மகனை பெரியவா கூப்பிட்டுப் பேசினா. நீங்க எல்லாரும் குடும்பத்தோட சென்னைக்குப் போயிடுங்க. இங்க இருந்தா போலீஸும், பத்திரிகைக்காரர்களும் தொல்லைப்படுத்துவா. உனக்கு மாதவப் பெருமாள் கோயில்ல வேலை போட்டு தர்றேன். மாசா மாசம் செலவுக்கு மடத்துலிருந்து பணம் தர்றேன்னு சொல்லியிருக்கார். ஆத்துல அம்மா ஒத்துக்க மாட்டான்னு மகன் சொன்னதும். சங்கர்ராமன் அவனை மாதிரியே புள்ளைய வளர்த்து வச்சிருக்கான்னு பக்கத்தில் நின்னவங்ககிட்ட சொல்லியிருக்கார்.
ஆரம்பத்துல வந்த கணபதியும் மடத்துல பணம் கொடுத்திருக்கா இத வாங்கிக்கோ, போலீஸோ, பத்திரிகைக்காரர்களோ வந்தா மடத்தைப் பத்தி எதுவும் சொல்ல வேணாம்னு சொன்னார். இதையெல்லாம் அவா ஏன் சொல்லணும்? அவர் தான் இதை செய்திருக்கணுமுன்னு போலீஸ் சொல்லுறத நம்பித்தானே ஆகணும்!
சங்கரராமனின் மனைவி பத்மா பேட்டியிலிருந்து (குமுதம் ரிப்போர்ட்டர் 16.12.2004)
--------------
குற்றப் பத்திரிகை
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் வியாழக்கிழமை இரவு (11.11.2004) கைது செய்யப்பட்ட ஜெயேந்திரர் வெள்ளிக்கிழமை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சின்ன காஞ்சிபுரம் தெற்கு மாட வீதியைச் சேர்ந்த ஆனந்த சர்மா மகன் சங்கரராமன். இவர் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். 2004 செப்டம்பர் 3ஆம் தேதி மாலை கோயில் அலுவலகத்தில் இருந்த சங்கரராமனை அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் சரமாரியாக  வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். கோயில் வளாகத்திலேயே நடைபெற்ற இக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை செய்யப்படுவதற்கு 2 நாள்களுக்கு முன்னர் ஜெயேந்திரருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து சங்கரராமன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். உங்களைப் பற்றிய எல்லா விஷயத்தையும் வெளியில் சொல்லி விடுவேன் என்று அவர் அக்கடிதத்தில் ஜெயேந்திரரை மிரட்டியுள்ளார். அதன் பிறகே அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். காலை 6.15 மணிக்கு போலீஸ் வாகனத்தில் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் மன்றத்திற்கு (எண்1) ஜெயேந்திரர் அழைத்து வரப்பட்டு நீதிபதி ஜி. உத்தமராஜ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார் - அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் காலை 7.35 மணிக்கு வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குற்றப்பிரிவு 302,120-பி, 34,201 ஆகிய பிரிவுகள்: கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் போலீசார் ஜெயேந்திரர்மீது பதிவு செய்துள்ளனர்.
(தினமணி 13 நவம்பர், 2004, சனிக்கிழமை சென்னை)

Tuesday, January 27, 2015

சங்கராச்சாரியாரும் - மதமாற்றமும்




இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய மதம் பவுத்த மதமாகும். எனவே புத்த மதத்தை இந்தியர்களின் தாய் மதம் என்று கருத வாய்ப்புள்ளது. புத்த மதத்தை ஒட்டி தோன்றிய மதம் சமண மதம். இந்த இரு மதங்களும் தற்போது நடக்கும் கலியுகத்தில் மனிதர்களால் தொடங்கப்பட்டவை யாகும். இந்த மதங்கள் தோன்றிய போது இந்துமதம் தோன்றவில்லை.

ஆனால்  அப்போது  ஆரியர்கள் சிந்து சமவெளியில் இருந்து கங்கைச் சமவெளிக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் செய்த யாகங்களில் ஆயிரக் கணக்கான கால்நடைகள் பலியிடப்பட் டன. இதனால் பாதிக்கபட்ட கங்கைச் சமவெளி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது ஆரியர் களின் யாகங்களை எதிர்த்தும் உயிர் களைக் கொல்வதை எதிர்த்தும் பவுத்த மதமும் சமண மதமும் தோன்றின. இந்த சூழ்நிலையில் இந்து மதத்தின் தோற்றம் பற்றியும்  மதமாற்றம் பற்றியும் மறைந்த  காஞ்சி மடாதிபதி அவர்கள் தனது நூலில் (தெய்வத்தின் குரல்) கூறியுள் ளதை தொகுத்து கீழே தரப்படுகின்றது

இந்து மதத் தோற்றம்

பவுத்த மதம் மற்றும் சமண மதம் போல அல்லாமல் இந்து மதம் எந்த ஒரு தனி மனிதனாலும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு இடத்தில் நிறுவப்பட வில்லை. இந்தக் கலியுகத்தில் இந்தி யாவில் வேத காலந்தொட்டு புத்தர் காலம் வரை பல மகான்கள் ரிஷிகள் தோன்றினார்கள்.

இவர்கள் மனித வாழ்க்கை பற்றியும் உலகத்தைப் பற்றியும் பல  தத்துவங்களை மக்களிடம் பரப்பினார்கள். ஆனால் இவர்கள் யாரும் எந்த ஒரு மதத்தையும் தோற்று விக்கவில்லை. ஆனால் ஆரியர்கள் வேதகாலத்தில் எந்த தர்மத்தைக் கடைப் பிடித்தார்கள்.

என்பது பற்றி  மறைந்த பெரிய சங்கராச்சாரியார் தனது தெய்வத்தின் குரல் என்ற நூலில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

1)   ---ஆனால் ஹிந்து என்பது  நமது பூர்வீகப் பெயர் அல்ல.வைதிக மதம் சனாதன தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே அவைதான் பெயரா என்றால் அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும்போது இந்து மதத்திற்கு எந்த பெயரும் குறிப்பிடவில்லை. ( பக் 126)

2)-----பல்வேறு மதங்கள் இருக்கிற போதுதான் ஒன்றிலிருந்து இன்னொன் றுக்கு வித்தியாசம் தெரிவதற்காகப் பெயர் கொடுக்க வேண்டும். ஒரே மதந்தான் இருந்தது  என்றால் அதற்குப் பெயர் எதற்கு?  (பக். 127)

3) ---புத்தமதம் என்றால் அது கவுதம புத்தரால் ஸ்தாபிக்கப்பட்டது. எனவே அவருக்கு  (புத்தருக்கு) முன் அந்த மதம் இல்லை என்றாகிறது. --- (பக். 127)

4)- --(பெயரில்லாமல் இருந்த தற்போதைய இந்து மதத்திற்கு) அப்படி ஒரு ஸ்தாபகரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

பிரம்ம சூத்திரம் செய்த வியாசரை சொல்லலாமா கீதை சொன்ன கிருஷ்ண பரமாத்மாவை சொல்லாமா என்றால் அவர்களும் தங்களுக்கு முன்னே இருக்கிற வேதங் களை சொல்லுகிறார்கள்.. ( கிருஷ்ண பரமாத்மா  மற்றும்  கவுதம புத்தர் துவாபரயுகத்தில் அவதரித்தவர்கள். (விக்கிபீடியா தகவல்) ஆனால் ரிக் வேதம் இந்த கலியுகத்தில் இந்தியாவில் நுழைந்த ஆரியர்கள் சிந்து சமவெளியில் தங்கிய போது சுமார் கிமு 1500-ல் இயற்றப்பட்டது. இது ஒரு பெரிய முரண்பாடு ஆகும் ) (பக் 128)

5)----- இந்த வேதங்களை) ரிஷிகள் தபோ மகிமையால் இந்த சிருஷ்டியிலிருந்து ஜீவர்களை கடைத்தேற்றுகிற சப்தங் களை (வேதங்களை) மந்திரங்களாகக் கண்டார்கள். ( பக் 129 )

இவ்வாறு பல ஆயிரம் ஆண்டு களாக தற்போதைய இந்து மதம் பெயர் இல்லாமலும் ஸ்தாபகர். (நிறுவியவர்) இல்லாமலும் இருந்து வந்தது.

இந்த நிலையில் இந்து என்ற பெயர் எப்படி வந்தது என்பதை சங்கராச்சாரியார் தனது நூலில் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்:-

1)-----இப்போது ஹிந்து மதம் என்று சொல்கிறோமே இதற்கு உண்மையில் இந்த பெயர் கிடையாது.---நம்முடைய பழைய (வேதம் முதலான) சாஸ்திரம் எதிலும்  ஹிந்து மதம் என்ற வார்த் தையே கிடையாது. (பக் 125)

2) -----ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர் தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியைக் கடந்தே பாரத நாட்டுக்கு வரவேண்டி யிருந்தது அல்லவா? ஆனபடியால் ஸிந்துவை ஹிந்து   என்றும் அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும் அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள். (பக் 125)

3) ---- நமக்குள் சைவர்கள் வைஷ்ணவர் கள்  என்று வேறாக சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தாம். அவன் வைத்த பெயர் நம்மை காப்பாற்றியது.-------------------- இப்போது ஹிந்து சமூகம் என்று பொதுப் பெயரில் சொல்லப் படும் சமுதாயத்தை  இப்படி ஏழெட்டு மதங்களாகப் (சைவம் வைணவம்  சாக்தர் முருக பக்தர் ஐயப்பன் பக்தர்) என்று பிரித்து விட்டால் அதற்கு அப்புறம் ஒவ்வொரு ஊரிலும் முஸ்லீம் கிறிஸ்தவர்கள் போன்ற மதஸ்தர்கள் தான்  அதிகம் இருப்பார்கள். (பக். 267)

4) ----ஹிந்து என்று சொல்லப்படும்  நமது மதம் ஒன்றே ஆதியில் லோகம் முழுவதும் பரவியிருந்தது. அந்த ஒரே மதம் இருந்ததால்தான் அதற்குத் தனியே பெயர் வைக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதனால் தான் நம் ஆதார நூல்களில் ஹிந்து மதத்திற்குப் பெயரே இல்லை.

மதமாற்றம்

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உலக நியதி. கடவுள் படைத்ததாக சொல்லப்படும் மனிதர்களில்  ஆண்கள் சிலர் அறுவை சிகிச்சை மூலம் பெண் ணாக மாறிய செய்திகள் உண்டு. இதே போல் அறுவை சிகிச்சைகள் மூலம் முகத் தோற்றத்தையே மாற்றுகிறார்கள்.

மேலும் .இதயம சிறுநீரகம கண்கள் போன்றவை மாற்றம் செய்யபடுகின்ற இந்த காலத்தில்  மதமாற்றம் நிகழ்வதில்  ஆச்சரியம் ஒனறும் இல்லை. எல்லா மதங்களும் பொதுவாக சொல்வது நல்ல செயல்களை செய்வதன் மூலம் ஒருவர் சொர்க்கத்தை அல்லது கடவுளை அடைய முடியும் என்பது ஆகும்.

இத்தகைய மதங்களுக்கு    (இந்து மதம் உள்பட)  முன் வாழ்ந்த மனிதர்கள் யாரும் சொர்க்கத்தை அடையவில் லையா? இந்த கேள்வியை கேட்பவர் சங்கராச்சாரியார்.

மதமாற்றம் பற்றி சங்கராச்சாரியார்

1)----- ஹிந்து மதத்தில் கடைப்பிடிக்கப் படும் மதச்சடங்குகள் ரிக் முதலான நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. வேதங்கள் உருவான காலத்தில் இந்து மதம் என்று ஒன்றும் இல்லை. அப்போது இருந்த மதத்தின் பெயர் வைதிக மதம் அல்லது சனாதன தர்மம் என்று அழைக்கப்பட் டது.

அந்த காலத்தில் மற்ற மதங்கள் --- புத்த சமண மதங்கள் சீக்கிய மதம் கிருத்துவ மதம் இஸ்லாமிய மதம் போன்றவை தோன்றவில்லை. எனவே மதம் மாற்றம் எதுவும் நடக்கவில்லை என சங்கராச்சாரியார் கூறுகிறார். மேலும் அவர் கூறுவது கீழே தரப்பட்டுள்ளது.-

2)  ஒரு தேசத்து மக்களே ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு. மாறவும் செய்கிறார்கள். புத்தர் காலத்தில் வேத மதத்திலிருந்து வேத மதஸ்தர்கள் பவுத்த மதத்திற்கு மாறினாரகள். பிற்காலத்தில் எத் தனையோ ஹிந்துக்கள் முகம்மதிய மதத்திலும் கிறித்துவமத்திலும் சேர்ந் திருக்கிறாரகள்.

ஜைனர்கள் வைஷ்ண வர்களாக மாறி புஷ்டி மார்க்கிகள் என்று பெயர் பெற்றிருக்கிறார்கள். (இதிலிருந்து வைணவ மதம் என்பது இந்து மதத்திலிருந்து வேறு பட்டது என்பதை அறியலாம். மேலும் ஜைன மதம் தோன்றியபின்புதான் வைணவ மதம் தோன்றியுள்ளது என்பதையும் அறியலாம்.) (பக் 117 )

3) ---யார் யார் எந்த மதத்திற்குப் போனாலும் கடைசியில் (அத்தனை மதத்தினரும்) ஒரே பரமாத்மாவிடத்தில் வந்து சேருவார்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகிற விசால மனப்பான்மை நம் சாஸ்திரங்களிலேயே காணப்படுகிறது. இதனால்தான் பிறரை ஹிந்துவாக மதமாற்ற நம் சாத்திரங்கள் இடம் கொடுக்கவில்லை. (பக் 148)

4) ----- -ஒருத்தனை புது மதத்திற்கு மாற்றுவது என்றால்  அதற்கென ஒரு சடங்கு இருக்க வேண்டும். இப்போது கன்வரட்செய்கிற மதங்களில் எல்லாம் அப்படி ஒன்று ஞானஸ்நானம் என்கிற மாதிரி---- ஏதாவது ஒன்று இருக்கிறது.

மற்ற எந்த மதங்களை விட மிக அதிகமாக சொல்கிற சடங்குகளை சொல்கிற இந்து மத சாஸ்திரங்களைப் பார்த்தால் இப்படி நம் மதத்திற்கு மற்ற மதஸ்தனை  மதமாற்ற ஒரு சடங்கும் இல்லை. இதுவே நாம் மத மாற்றத்தை விரும்புகிறவர்கள் அல்ல என்பதற்கு அத்தாட்சி.  ( பக் 114)

5).----தங்களிடையே கோட்பாடுகளிலும் அநுஷ்டானங்களிலும் சில வித்தி யாசங்கள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களும் ஒன்று போல் இருக்க வேண்டிய அவசியம் இல்-லை. ஒரே மாதிரி ஆக்காமலே எல்லா மதங்களும் (மதத்தினரும்) மனத்தில் ஒற்றுமையோடு இருப்பது தான் அவசியம். யுனிபார்மிட்டி அவசியம் இல்லை. யுனிட்டிதான் அவசியம்.  (பக் 115) எனவே இந்து மதத்தில் மத மாற்றம் அனுமதிக்கப் படவில்லை என கூறலாம்.

முடிவுரை:- இயற்கையில் நாள் தோறும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பல முன்னேற் றங்கள்   மற்றும் மாற்றங்கள் நிகழ்கின் றன. அதே போல் மனித குலம் இந்த பூமியில் நீடித்து வாழ மனிதனுக்கு தேவையான வளங்கள் மற்றும் வசதிகள் ஆகியவற்றில் எல்லாம் மாற்றங்கள் நிகழ்கின்றன.

இந்த மாற்றங்கள் எல்லாம் மனிதனின் நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மாற்றி அமைக் கின்றன. முற்றிலும் நம்பிக்கையின் அடிப் படையில் ஏற்பட்ட மத நம்பிக்கைகளை யும் மற்றும் சடங்குகளை மாற்றுவது தவிர்க்க முடியாது. இதனால் மதமாற் றங்கள் நிகழ்கின்றன என அறியலாம்.

- பொறியாளர் கோவிந்தராசன் BE, MBA, MA

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:



Monday, September 17, 2012

தினமலரின் குறும்பு


தி.க. தலைவர் வீரமணி: என்றைக்கு நரசிம்மராவ் பிரதமராகி, நிதியமைச்சர் மன்மோகன் சிங் ஆலோசனைப்படி, நிதித் துறை கொள்கை வகுக்கப்பட்டதோ, அன்றே உலக மயம், தாராள மயம், தனியார் மயம் என்ற ஒட்டகம், இந்திய கூடா ரத்தில் நுழைந்தது. அதன் மூலம், புறத்தோற்றத் துக்கு இந்தியா வளர்வதைப் போலத் தெரிந்தாலும், நேரு அமல்படுத்திய சமதர்மக் கொள்கைகள், மெல்ல மெல்ல விடை பெறத் துவங்கின.
டவுட் தனபாலு: உங்க அரசியல் குரு கருணா நிதி, 1996ல் இருந்து மத்திய அரசு, முக்கிய கூட்டாளியா இருக்காரு... இந்த, 16 வருஷ கால கட்டத்துல, சமதர்மக் கொள்கைகள் மெல்ல மெல்ல விடைபெற்றதைத் தடுக்க, அவர் என்ன நடவடிக்கை எடுத்தாருங்கிறது தான் என்னோட, டவுட்!'
- தினமலர், 16.9.2012
கொஞ்ச நாளாக நம் பக்கம் திரும்பாமல் இருந்த தினமலர் சாரை விறுவிறுத்து நம் பக்கம் திரும்பியிருக்கிறது.
உலக மயம், தாராளமயம், தனியார் மயம் திரிசூலங்களைத் தொடக்கம் முதலே எதிர்த்து வருவதுதான் திராவிடர் கழகம்; திராவிடர் கழகத்துக்கு அரசியல் குரு என்று யாரும் கிடையாது. திராவிடர் கழகத்துக்கு ஒரே குரு தந்தை பெரியார்தான்! திராவிடர் கழகம் அரசியல் கட்சியும் அல்ல. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அரசியல் அரிச்சுவடிகூடத் தெரியாமல் பத்திரிகை நடத்திக்கொண்டு இருக்கிறார்களே... ஹி.... ஹி....
ஆமாம் அவர்கள் குரு சங்கராச்சாரியார் கதை சந்தி சிரிக்கிறதே! இதைப்பற்றியும் கொஞ்சம் சிலாகிக்கலாமா?


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...