Showing posts with label உச்சநீதிமன்றம். Show all posts
Showing posts with label உச்சநீதிமன்றம். Show all posts

Wednesday, November 25, 2015

பெண்கள் தங்கள் சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் விட்டுச் செல்ல முடியும்! உச்சநீதிமன்றம்



புதுடில்லி, நவ.25_- ஒரு பெண் தன் னுடைய பராமரிப்பில் உள்ள சொத்துக்களை விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் விட்டுச் செல்ல முடியும் என்றும் அவள் இறந்த பிறகு அவளுடைய சொத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சொத்து இல்லையென்றாலும்கூட தன்னுடைய மனைவியை பராமரிக்க வேண்டியது ஒரு கணவனின் கடமை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால் மற்றும் சி.நாகப்பன் ஆகியோர் கொண்ட அமர்வு கூறி யுள்ளது. பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப் படும். சீதனமாக நகைகளோ, பாத் திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப் பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக் கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.
இருப்பினும் இந்து மதச்சட்டப்படி பெண்கள் இறந்த பிறகு அவளது சொத்துக்கு உரிமை கோருவதை தடுக்கவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் ஒரு பெண் தன்னுடைய பராமரிப்பில் உள்ள சொத்துக்களை விருப்பப்படி யாருக்கு வேண்டுமானா லும் விட்டுச் செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், மனைவியையோ, விதவை பெண்ணையோ கவனித்து கொள்வது வெறும் பெயருக்கு என்று அல்லாமல், ஒரு சலுகையாக செய்ய வேண்டும். இருப்பினும் இந்துமதச் சட்டப்படி அவளது உரிமைகள் மறுக்க முடியாது. என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...