Monday, December 23, 2019

நான் பாகிஸ்தானில் பிறந்தேன், என்ன அடையாள ஆதாரத்தை நான் காண்பிப்பேன்? - மணி சங்கர் அய்யர் கேள்வி


டில்லியில் 19ஆம் தேதியன்று ஜந்தர் மந்தரில் குடியுரிமைச் சட் டத்திற்கு எதிராக ஆர்ப்பாட் டக்காரர்கள் நடத்திய ‘ஆசாதி‘ (சுதந்திரம்) என்ற ஒத்திசை வான முழக்கங்களின் பின்ன ணியில், காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர், பாகிஸ் தானில் பிறந்ததால் தனது எதிர்காலம் குறித்து தனக்குத் தெரியாது என்றார். “நான் தங்குமிடம் தேடி இந்தியா வந்தேன். நான் என்ன ஆதா ரம் காண்பிப்பேன்? மிக முக்கியமாக, நான் ஏன் எனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டும்,”என்று மணிசங் கர்அய்யர் கூறினார்.
முஸ்லிம் சமூகத்தை தொந் தரவு செய்வதற்காக குடியுரிமை சட்டம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது என்று, அய்யர் கூறினார், “இந்த மாணவர்கள் இந்த சட்டத்தின் பின்னால் உள்ள நோக்கத்தை புரிந்து கொள்கிறார்கள், அதனால் தான் அவர்களிடையே பெரும் கோபம் இருக்கிறது. அவர்க ளின் குரல் நாடாளுமன்றத் திலும் தேர்தல்களிலும் எதி ரொலிக்கும்.”
ஜந்தர் மந்தரில் நடந்த “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த“ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக அய்யர் கூறினார், “ஜந்தர் மந்தரில் நடந்த, மோடி-ஷா கொடுங் கோன்மையின் வீழ்ச்சியைக் குறிக்கின்ற, இந்த வரலாற்று ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொண்டேன் என்று எனது பேரனிடம் கூற முடியும் என்பதில் மகிழ்ச்சி அடை கிறேன்.
ஜந்தர் மந்தரில் எதிர்ப்பா ளர்கள் ஒன்றுகூடத் தொடங் கிய நிலையில், அதிக அளவில் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்ட னர். மேலும் அவர்கள் முன் னேறுவதைத் தடுக்க போராட் டத் தளத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இரண்டு ஆர்ப்பாட்டங் கள் நடத்த திட்டமிடப்பட் டிருந்த செங்கோட்டை மற் றும் மண்டி மாளிகை அருகே தடுத்துக் காவலில் வைக்கப் பட்டிருந்தவர்களில் டி ராஜா, சீதாராம் யெச்சூரி, நிலோட்பால் பாசு, பிருந்தா காரத் ஆகிய இடதுசாரி தலைவர்களும், காங்கிரஸின் அஜய் மேக்கன், சந்தீப் தீட் சித், மற்றும் ஆர்வலர்கள் யோகேந்திர யாதவ், உமர் காலித் உள்ளிட்டோரும் அடங்குவர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...