Showing posts with label உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம். Show all posts
Showing posts with label உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம். Show all posts

Wednesday, June 12, 2019

உ.பி பத்திரிகையாளர் கைதுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: உடனடியாக விடுவிக்க உத்தரவு

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கிளப்பும் வீடியோவை பதிவிட்டதாக புகார் கூறி பத்திரி கையாளர் கைது செய்யப் பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் அவரை உடனடியாக பிணையில் விடுவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித் துள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய பெண் ஒருவர், தான் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்துக் கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறினார்.
இந்த வீடியோ காட்சிகளை டில்லி நொய்டாவைச் சேர்ந்த செய் தியாளர் பிரசாந்த் கனோஜியா என் பவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இதையடுத்து கனோஜியாவிற்கு எதிராக லக்னோவில் உள்ள ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
டில்லியில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கனோஜின் மனைவி, கைதுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில்  வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற கோடை விடுமுறை கால நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாணைக்கு வந்தது.
விசாரணையின்போது, பிரசாந்த் கனோஜியாவை விடுவிக்க உ.பி அரசு தரப்பில் ஆஜரான வழக் குரைஞர் ஆட்சேபம் தெரிவித்தார். அவரை விடுவித்தால், அவர் செய்த செயல் நியாயம் என்றாகிவிடும் என கூறினார். ஆனால், அவரது வாதத் தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.
பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:
‘‘உ.பி முதல்வர் குறித்து சமுகவலைதளங்களில் கருத்து பதிவிட்டதற்காக பத்திரிகையாளரை கைது செய்ததை சரியானதாக கருது கிறீர்களா? ஒவ்வொரு தனி நபருக்கும் தனது கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க உரிமை உள்ளது. சில நேரங்களில் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவைதான், அதற்காக கைது செய்வீர்களா?
அதுமட்டுமின்றி பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பது எப்படி சரியாகும். கனோஜியாவை உடனடியாக பிணையில் விடுதலை செய்ய வேண் டும்’’ எனத் தெரிவித்தனர்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...