Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

Thursday, December 8, 2016

அ.இ.அ.தி.மு.க.வுக்குள் பிளவை உண்டாக்கிட முயற்சிக்கும் ‘‘ஆரிய சக்திகளிடம்'' எச்சரிக்கையுடன் இருப்பீர்!

அ.இ.அ.தி.மு.க. சகோதரர்களே!

அ.இ.அ.தி.மு.க.வுக்குள் பிளவை உண்டாக்கிட முயற்சிக்கும் ‘‘ஆரிய சக்திகளிடம்'' எச்சரிக்கையுடன் இருப்பீர்!




 அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலா ளரும்,முதலமைச்சருமானசெல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்து மூன்று நாள்களே ஆன நிலையில், அக்கட்சிக்குள்ளும், ஆட்சி அமைப்புக்குள் ளும் பிளவுகளை ஏற்படுத்திட, குழம் பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற திட்டத்துடன் ‘‘ஆரிய சக்திகள்’’ தூண்டிலைத் தூக்கிக்கொண்டு திரியும் நிலையில், இந்தக் கட்டுரை - அறிக்கை மிகவும் முக்கியமானது - ஊன்றிப் படியுங்கள் - படியுங்கள்!)

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள்  உடல் அடக்கம் நிகழ்ந்து இன்னும் அந்த ஈரம் கூட காயவில்லை; அதற்குள் ஆரிய விஷப் பாம்புகளின் சீற்றம் ஆரம்பமாகிவிட்டது - ஆங்கில ஏடுகளின் வாயிலாக!

‘‘சிண்டு முடிந்திடுவோய் போற்றி!’’

அறிஞர் அண்ணா கூறிய,  ‘‘சிண்டு முடிந்திடுவோய் போற்றி’’ என்ற அனுபவ மொழிப்படி, அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பொறுப்பாளர்களிடையே பிளவை வலிந்து உண்டாக்கி, இடையே புகுந்து,   நூல் பிளந்து  பார்க்கும் முயற்சியில் ஈடுபடத் துவங்கிவிட்டனர்.

சுமூகமாகவே புதிய அமைச்சரவை - அரசியல் சட்டக் கடமைப்படி பதவியேற்று விட்டது - திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை முதலமைச்சராகக் கொண்டு; பழைய அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர்களாகி விட்டனர்.

கலகம் உண்டாக்கிட முயற்சி!

அவர்கள்மூலமோ அல்லது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க் கள் மூலமோ எந்த அதிருப்திக் குரலும் கிளம்பாத நிலையில்,  அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி இன்னமும் நிரப்பப்படாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, பல்வேறு கலகங்களை உருவாக்கிட, கட்டுக் கோப்பான அக்கட்சியினை  ஜாதி அடிப்படையில் பிரித்தாள தங்களது பேனாக்கள்மூலம் ‘துவஜா ரோகணம்‘ செய்யத் தொடங்கிவிட்டனர்!

‘பார்ப்பனத் தலைமை ஆட்சி பறிபோய்விட்டதே!’

பார்ப்பனத் தலைமையிலான ஆட்சி வரும் வாய்ப்பு இப்படிப் பறிபோய்விட்டதே என்பதால், ஜெயலலிதாவின் நிழலாக இறுதிவரை இருந்து, மெய்க்காப்பாளராக, சேவகியாக, சிறந்த பாசம் காட்டிய தங்கையாகவே வாழ்ந்து, அந்த அம்மையாரின் கஷ்டங்கள், சிறைவாசங்களில் பங்கேற்ற திருமதி சசிகலாவைப்பற்றி தேவையில்லாமல் பெரும் ஆய்வே நடத்தி,  அரசியல் ஆவர்த்தனம் செய்கிறார்கள்!

தூண்டிலைத் தூக்கித் திரிகிறார்கள் - கவனம்!

முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து துக்கம் 7 நாள் என்பதுகூட தீராத நிலையில், துயரத்தில் உழலும் அவர்களிடையே குட்டையைக் குழப்ப தூண்டிலைத் தூக்கிப் புறப்பட்டு விட்டார்கள்!

அக்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களுக்கு இல்லாத கவலையும், அக்கறையும் இந்த அக்கிரகார அறிவுஜீவிகளுக்கு ஏன்? விஷயம் புரிந்தவர்களுக்குக் கண்டிப்பாகவே விளங்கும்.

அடேயப்பா, பா.ஜ.க.வின் கரிசனம்!

இன்னொரு பக்கம் தங்கள் பக்கம் சாய்த்துக்கொள்ள - திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பா.ஜ.க.வினரின் ‘கரிசனம்‘ - அ.தி.மு.க.வின்மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது!

இரண்டு கட்சிகளின் லட்சியங்களும் ஒன்றுதானாம்; வெங்கய்யா நாயுடுகார் கண்டுபிடித்து, கசிந்துருகி கண்ணீர் மல்கக் கூறுகின்றார்!

காவிரி நதி நீர் ஆணையத்தை சட்டப்படி அமைக்க கடைசி நேரத்தில் மறுத்த பிரதமர் மோடி, அ.தி.மு.க.  எம்.பி.,க்களைக்கூட சந்திக்க மறுத்த பிரதமர் மோடி ‘‘நான் தொலைப்பேசியில் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறேன்’’ என்று முதலமைச்சர் ஓ.பி.எஸ். அவர்களிடம் கூறுகிறாரே, எப்படி?

சசிகலாவின் தலையில் கைவைத்து ‘ஆறுதல் கூறும்‘ மோடியின் நோக்கம் என்ன?’

இப்படி அரசியல் களத்தில் ‘என்னா வினோதம் பாரு; எவ்வளவு ஜோக் பாரு, பாரு, பாரு’ என்று பாடும் பரவசக் காட்சிகள் மறுபுறம்! இவைகளையெல்லாம் பார்க்கும்போது, அந்தக் காலத்தில் திராவிடர் கழக கூட்டங்களில் கூறப்பட்ட ஒரு துக்க வீட்டு ஒப்பாரிக் கதைதான் நம் நினைவிற்கு வருகிறது!

‘பந்தலிலே பாவக்காய்!’

முக்கியமான ஒருவர் மறைந்துவிட்டார். துக்க வீட் டிற்குப் பலரும் சென்று அவருடைய உறவுகளிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

இரண்டு சகோதரிகள் வந்தார்கள். மறைந்தவரின் உடலுக்கு அருகில் மறைந்தவரின் உறவுக்காரரைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி சொல்லி அழத் தொடங்கி - மூக்கைச் சிந்திக்கொண்டே,
அதில் தங்கை ஒருவர் ஒப்பாரியில்,
‘பந்தலிலே பாவக்காய்,
பந்தலிலே பாவக்காய்
தொங்குதடி எக்காடி
தொங்குதடி எக்காடி!’
என்று ஜாடை காட்டிப் பாடினாள்.
அதைப்  புரிந்த மூத்த அக்காள், ஒப்பாரியிலேயே குறிப்புக் காட்டினாள்.
‘போகும் போது பாத்துக்கலாம்,
போகும்போது பறித்துக்கலாம்!’ என்று.
இவ்வளவு துக்கத்திலும் வீட்டுக்கார அம்மா அதைக் கண்காணித்து,  அவ்விருவருக்கும் ஒப்பாரியிலேயே பதில் சொல்லும் வகையில் பாடினார்.
‘அய்யோ, அது விதைக்கல்லோ விட்டிருக்கு,
விதைக்கல்லோ விட்டிருக்கு!’ என்று.

அக்கதைதான் இப்போது நம் நினைவிற்கு வருகிறது!
அ.தி.மு.க. சகோதரர்களே எச்சரிக்கை!
எனவே, அ.தி.மு.க.வின் சகோதரர்களே,

சிண்டு முடிந்திடுவோரை,  உங்கள்மீது திடீர் அனுதாபம், அளவற்ற ஆதரவு தருவது போல்  நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள்!
அக்கட்சியின் கட்டுக்கோப்பை - கட்டுப்பாட்டை மறவாதீர்!

சிறுசிறு ஓட்டைகளைத் தேடி அலைந்து அவற்றைப் பெரிதாக்குகின்றனர்!

அம்மையாரை எரிக்காமல் புதைத்துவிட்டனராம்; இப்படி ‘ஹிந்துத்துவா’ உணர்வுகளால் இவர்கள்மீது அம்பு எய்தும் அற்பத்தன முயற்சிகளில் ஆங்கில ஏடுகளில் அறிவு ஜீவிகள் அஸ்திரங்களை ஏவுகின்றனர் - இனியும் அதிகம் ஏவ ஆரம்பித்துவிடுவர்! அவர்களின் மூக்குடைவது உறுதி!

எதற்கும் அ.இ.அ.தி.மு.க.வினர் மட்டத்தில் தேவை தேவை - எச்சரிக்கை தேவை!

- சர்ச்லைட்

Thursday, March 27, 2014

சொத்துக் குவிப்பு

ஊழலை ஒழிப்பேன் என புறப் பட்டுள்ள ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு பற்றி, பெங்களூரு நீதிமன் றத்தில் அரசு வழக்குரைஞர் பவானி சிங் ஆதாரப்பூர்வ வாதம்.

ஜெயலலிதா சுமார் ரூ.4000 கோடி அளவிற்கு சொத்து வைத்துள்ளார்.

1. அதிகாரிகளைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த விலையில்  நிலங் களை வாங்கியுள்ளார்.

2. அவருடைய பொருளாதார நிலைக்கும், வாங்கிய    நிலங்களுக் கும் சம்பந்தம் இல்லை.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப் புப்பற்றி, அரசு வழக்குரைஞர் பவானி சிங் வெளியிட்ட பட்டியல் வருமாறு:

1. வாலாஜாபாத் அருகே 600 ஏக்கர் நிலம்.

2. கொட நாடு - 800 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா

3. சிறுதாவூர் 25 ஏக்கர் அளவில் பங்களா

4. நீலாங்கரையில் 2 ஏக்கர் நிலம்

5. கன்னியாகுமரி அருகே, மீனங் குளம், சிவரங்குளம்,    வெள்ளங் குளம், அருகே 1190 ஏக்கர் நிலம்

6. காஞ்சிபுரம் அருகே  200 ஏக்கர் நிலம்

7. தூத்துக்குடி அருகே வைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர் நிலம்

8. ரெவரோ அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர் நிலம்.

9. ஜெயலலிதாவுக்கு 30 கார்கள், டிரக்கர்கள் உள்ளன.

10. அய்தராபாத்தில் திராட்சைத் தோட்டம்.

25.3.2014 அன்று அரசு வழக்கு ரைஞர் பவானி சிங் வெளியிட்ட இந்த ஆதாரங்களை, இன்றைக்கு எந்த செய்தித்தாளும் வெளியிட வில்லையே.

அரசுக்கு நட்டம் என தணிக்கையாளர் சொன்னதை வைத்து, ரூ. 1,7,6000 கோடி ஊழல் என நாள் தோறும் ஊளையிடும் ஊடகங்கள், ரூ.4000 கோடி அளவில் சொத்துக் குவிப்பை ஜெயலலிதா சேர்த்துள்ளார் என ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்ததை ஏன் ஊடகங்கள் மறைக் கின்றன?

சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்பனனுக்கு ஒரு நீதி. இதுதான் ஊடக தர்மமா?

- - குடந்தை கருணா

Monday, December 23, 2013

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சிந்தனைக்கு...

இறை நம்பிக்கை உள்ளவர் களுக்கு அதிசயம் ஏற்படும். நம்பிக்கையை இழப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியாது. இறைவனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை உங்களிடம்  இருந்தால் உங்கள் வாழ்வின் வெற்றி நிச்சயம்!

இவ்வாறு பேசியிருப்பவர் வேறு யாராகத் தான் இருக்க முடியும் -  அம்மையார் ஜெயலலிதாவைத் தவிர?

இந்தக் கருத்தைக் கூறுமுன் ஒரே ஒரு நொடி, தந்தை பெரியாரை நினைத்துப் பார்த்திருக்க வேண் டாமா? அப்படி நினைத்துப் பார்க்கும் நிலை இல்லாவிட்டால் உங்கள் சுவரொட்டிகளில் தந்தை பெரியார் படம் எதற்கு? பெரியார் உருவாக்கிய திராவிட எதற்கு? என்ற கேள்வி எழாதா?

அனைத்திந்திய அண்ணா தி.மு.க. என்பதற்குப் பதிலாக அக்கிரகார முன்னேற்றக் கழகம் என்று வைத்துக் கொள்ளலாமே!

அண்ணாவின் பெயரைக்கூட கட்சியில் வைத்துக் கொள்ளும் அருகதை கூடக் கிடையாதே!

அண்ணா எந்தக் கோயிலுக்குச் சென்றார்? அண்ணா யாகம் நடத்தினார், மண் சோறு சாப்பிடச் சொன்னார் என்று சொல்ல முடியுமா?

இறை நம்பிக்கை இல்லாதவர்கள் வெற்றி பெற முடியாதாமே!

அடேயப்பா - எப்படிப்பட்ட கண்டு பிடிப்பு!

சமுதாயப் புரட்சி இயக்கம் நடத்தி மக்களிடம் மண்டிக் கிடந்த மூடநம்பிக் கைகளை, ஆரியச் சழக்குகளை, ஆண்டவன்களின் ஆபாசச் சேற்றை யெல்லாம் அணு அணுவாகச் சிதைத்து விழிப்புணர்வு எரிமலையை ஏற்படுத்தி, மாபெரும் வெற்றி பெற்ற உண்மையான புரட்சித் தலைவர் தந்தை பெரியார் அல்லவா!

அதனால்தானே அறிஞர் அண்ணா அவர்கள் பெரியார் ஒரு தனி மனிதரல்லர்; ஒரு சகாப்தம், கால கட்டம், திருப்பம்! என்று  ஆணி அடித்தது போல கணித்தார்.

பெரியார் கடவுள் மறுப்பாளர்தான்!

கடவுள் இல்லை; இல்லவே இல்லை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

பரப்பியவன் அயோக்கியன்

வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர்தான்.

அந்த பெரியார் அவர்களுக்குத் தான் இந்த அமைச்சரவையே காணிக்கை என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் அண்ணா பிரகடனப்படுத்தினார்.

இந்த வரலாறெல்லாம் அம்மையா ருக்குத் தெரியாது என்றால் யாருக் காவது அ.இ.அ.தி.மு.க.வில் திராவிடர் இயக்க வரலாறு தெரியும் என்றால்(?!) அவர்களிடம் பாடம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்! அல்லது விடுதலை ஏட்டை நாளும் படிக்கட்டும்; அல்லது திராவிடர் கழக வெளியீடுகளைப் படித்துப் பார்க் கட்டும்!

அ.இ.அ.தி.மு.க. என்பதில் அண்ணா இருக்கிறார் - திராவிடமும் இருக்கிறது. இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டு கருத்துச் சொல்ல அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாள ருக்கு அதிகாரம் கிடையாது. அவர் கருத்தை பாரம்பரியமிக்க  கருத்தாக் கமுடைய சொல்லாடல்களைக் கொண்ட கட்சியின் மீது திணிக்க முடியாது - திணிக்கவும் கூடாது.

ஒன்றை வேண்டுமானால் வெளிப் படையாகக் கூறட்டுமே பார்க்கலாம்; அ.இ.அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நெற்றியிலே பட்டையும், குங்குமமும் அணிந் திருக்க வேண்டும்,

கழுத்திலே உருத்திராட்சக் கொட்டை தொங்க வேண்டும். கையிலே மந்திரக் கயிறு கட்டி இருக்க வேண்டும் - இவை இருந்தால்தான் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் என்று அதிகார பூர்வமான சட்ட விதிகளிலே திருத்தம் கொண்டு வரலாமே!

ரிலேட்டி விட்டி விதியைக் கண்டு பிடித்த அய்ன்ஸ்டின் நாத்திகர்தான் - அந்தத் தத்துவத்தை மட்டும் அவர்  கண்டு பிடிக்கவில்லையென்றால் இன் றைக்கு ஏற்பட்டுள்ள விஞ்ஞான சாதனைகளில் மஞ்சள் குளிக்க முடியுமா?

நோபல் பரிசு பெற்ற பெரும் பாலான விஞ்ஞானிகள் எல்லாம் நாத்திகர்கள்தான். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென்கூட கடவுள் மறுப்பாளர் தான்.

கடவுள்தான் மனிதனைப் படைக் கிறார் - மனிதன் ஆயுளை நிர்ணக் கிறான் என்பது இப்பொழுது தவிடு பொடியாகவில்லையா?

கடவுள் துகள் கண்டுபிடிக்கப் பட்டு விட்டதே!

காலரா நோய்க்கு காரணம் காளியாத்தா - அம்மை நோய்க்குக் காரணம் மாரியாத்தா என்று நம்பி கோயில்களில் கூழ்  காய்ச்சி ஊற்றிக் கொண்டு கிடந்தார்களே அவற்றாலா காலராவும், அம்மையும் ஒழிந்தன?

தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த தால் அல்லவா - பெரியம்மை இருப்ப தாகக் கண்டுபிடித்துச் சொன்னால் ஆயிரம் ரூபாய் பரிசு என்று அரசு விளம்பரம் செய்ததே!

அம்மைத் தடுப்பு நோயைக் கண்டுபிடித்த ஜென்னரையும்,  உலகம் உருண்டை என்ற கலிலியோவையும்,  பரிணாமத் தத்துவத்தைக் கண்டு பிடித்த டார்வினையும் எதிர்த்ததும் அவர்களைத் தண்டித்ததும்கூட மதம் தானே!

டார்வின்மீதும், கலிலியோ மீதும் கிறித்துவ மதம் தண்டனையை ஏவிய தற்காக போப் - இப்பொழுது வருத்தம் தெரிவித்துள்ளாரே. இந்த வரலாறு எல்லாம் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்குத் தெரியுமா?

Religious People are less intelligent than atheists - Study finds என்ற சிறப்பு மிக்க கட்டுரையை முதல் அமைச்சர் படித்துப் பார்த்ததுண்டா?

அமெரிக்காவின் ராச் செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வு பற்றி அறி வாரா?

மிரான் ஜீக்கர் மேன் என்ற ராச் செஸ்டர் பல்கலைக் கழகப் பேராசிரி யரின் தலைமையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், அறிவாற்றலுக்கும், மதப் பழக்கத்திற்கும் ஏற்பட்டுள்ள வேலைப் பாடுகளைப் பற்றிய 63 ஆய்வுகளில் 53 ஆய்வுகள் மத நம் பிக்கை உடையவர்கள் குறைந்தளவு அறிவாற்றல் உடையவர்கள் என்பதை ஆய்வுகள்மூலம் நிரூபித்துள்ளனரே!

அரசியலில் அடாவடித்தனமாகப் பேசுவதுபோல பகுத்தறிவாளர்கள் மீதும், அறிவியல்வாதிகள்மீதும் கல்லெறியலாம் என்று அம்மையார் ஆசைப்பட வேண்டாம்.

- மின்சாரம்



தோழர் தா.பா.வும் தோழர் ஜி.ஆரும் என்ன செய்தார்களாம்?


தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா பேசிய இந்தக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில  செயலாளர் தோழர் தா.பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்ட்டு) தமிழ் மாநில  செயலாளர் தோழர் ஜி. இராமகிருட்டிணன் ஆகியோரும் அந்தக் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்களே - முதல் அமைச்சர் ஜெயலலிதா சொன்ன கருத்து அவர்களையும் சேர்த்துத்தானே?

மார்க்சும் - ஏங்கல்சும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்ததால் அவர்கள் வெற்றி பெறவில்லையா? அந்த இடத்தில் முதல் அமைச்சருக்குப் பதில் கூற வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் போயிருக்கலாம். அவர்கள் கட்சியின் அதிகாரபூர்வ ஏடு களானஜனசக்தி தீக்கதிரில் முதல் அமைச்சர் கருத்துக்கு மறுப்புக் கூறுவார்களா? எங்கே பார்ப்போம்!

Read more: http://www.viduthalai.in/2011-07-25-07-58-59/72465-2013-12-22-10-09-36.html#ixzz2oGn8SJK8

Wednesday, October 16, 2013

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ஜெ. அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்காதது ஏன்?

திராவிடர் கழகத் தலைவரும் விடுதலை ஆசிரியருமான கி.வீரமணி அவர்களின் மீது இப்போது நான்காவது முறையாகத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. திருவில்லிப்புத்தூர் மம்சா புரத்திலே தாக்கினார்கள். சென்னை வண்ணாரப் பேட்டையிலே கொல்ல முயன்றார்கள். சேலம் ஆத்தூர் தம்மம்பட்டியிலே தீர்த்துக் கட்டிவிடலாம் என்று எண்ணி செயல்பட்டார்கள். இவை பழைய செய்திகள். இப்போது செப். 28ஆம் தேதி இரவு விருத்தாசலத் திலே அவர்களின் திருப்பணியை மேற்கொண்டு இருக்கிறார்கள் - கோழைகள்!
கருத்துக்கு கருத்து, எழுத்துக்கு எழுத்து, பேச்சுக்குப் பேச்சு என்று நாட்டு மக்களிடத்திலே அறிவைக் கூர்மைப் படுத்த தெரியாதவர்கள்
ஆயுதம் கொண்டு தாக்க வரு கிறார்கள் - அற்பர்கள்!
தினத்தந்தி, இண்டியன் எக்ஸ்பிரஸ், தினமலர் போன்ற ஏடுகள் வீரமணி தாக்குதலுக்கு உள்ளான அச்செய்தி யினை வெளியிட்டு இருக்கின்றன. காவலரின் அசட்டையை, மெத் தனத்தை எடுத்துக் காட்டி இருக் கின்றன.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தமது கண்டனத்தை உடனே வெளிப் படுத்தி இருக்கிறார்கள். கண்டனம் செய்து இருக்கிறார்கள்.
சுயமரியாதைஇயக்கத்தின் மறு வடிவமாக இயங்கும்  திராவிடர் கழகம் நாளும் மக்களைச் சந்திக்கிறது. கூட்டங்களை நடத்துகிறது. கருத்தரங் குகளை நிகழ்த்துகிறது. மாநாடுகளைக் கூட்டி முழக்கமிடுகிறது. சுயமரியாதைப் போராட்டத்தை நடத்தி வருகிறது. அதில் தான் சுகவாழ்வே  அடங்கி இருக்கிறது என்று பிரச்சாரம் செய்கிறது.
திராவிடர் கழகம் தேர்தலுக்கு நிற்கிற கட்சி அல்ல. கொள்கைப்  போரை நடத்தி வருகிற கட்சி; அந்த ஜூவாலையை அணையாமல் காக்கிற இயக்கம். ஆனால்அதற்கெனஅரசியல்உண்டு. நாம் பெருமிதம் கொள்கிறதனிச்சிறப்பு - அது தி.மு.க.வின் தாய்க் கழகம் என்பதே!
அத் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் கி.வீரமணிஅவர்களின் மீது தான் தாக்குதல்தொடுக்கப்பட்டு இருக்கிறது.போலீசார் வேடிக் கைப் பார்க்கிறார்கள். சம்பவம் நடந்த இடத்தில் ஒரு போலீஸ்காரர்கூட இல்லை என்கிறது தினத்தந்தி.
உள்ளூர் அதிகாரி ஒரு மதவாத அமைப்பின் நிர்வாகியைப் போல் நடந்து கொண்டு இருக்கிறார்.  திராவிடர் கழக நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு சட்டப்படி தரப்பட வேண்டிய அனுமதியை அந்த அதிகாரி எப்படி மறுத்தார்? ஏன் மறுத்தார்? எந்த தைரியத்தில் மறுத்தார்?
எப்போதும் இல்லாத திருநாளாக இந்த ஆண்டு ஜன விநோதினி ஆரியமாலா ஜெயலலிதா பெரியார், அண்ணா சிலைகளுக்கு மரியாதை செய்து இருக் கிறார். தலைவர்களுக்கு அஞ்சலி செய்வதை எப் போதாவது வேடிக்கைகள் மாதிரி செய்வது அவருக்கு வாடிக்கை. இதையெல்லாம் செய்வதால் அவர் இயக்க உணர்வாளர் ஆகிவிட மாட்டார் என்பதுநமக்குத் தெரியும். இவையெல்லாம் நாடாளுமன்றத் தேர்தல் முன்னோட்டமா? அல்லது பெங்களூர் காய்ச்சலால் ஏற்பட்ட மாறுதலா? - என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் ஓர் அரசு அதிகாரி கருத்துத் சுதந்திரத்திற்கு எதிராக நடந்து கொள்ள எப்படி முடிந்தது? அவர் பின்னே இருப்பது யார்?  தலைவர் களைத் தாக்குகிற வன்முறைகளுக்கு காவல் துறையே துணைபோகும் அளவுக்கு அவர்களின் ஆதிக்கம் இருப்பதற்குக் காரணம் என்ன? இதற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் சொல்லியாக  வேண்டும்.
ஒருவர் இயக்ககொள்கை சார்ந்து தாமே தம்மை உருவாக்கிக் கொள்ளுவதும் இறுதி வரை கொள்கையை பேசுவதும், எழுதுவதும், நடப்பித்துக் காட்டுவதும் எவ்வளவுஉயர்ந்த விஷயமோ, அந்த அளவுக்கு அவை கடின சித்தம் உடையவையும் ஆகும். இலட்சியப் பயணத்தில் பாதி வழியிலேயே காணாமல் போனோர் உண்டு. பயணத்திலிருந்து விலகியோர் உண்டு.
பயணத்தில் ஏற்பட்ட அடிகளை தாங்கிக் கொள்ளமுடியாமல் இலட்சிய வாழ்க்கையை மாற்றிக் கொண்டோர் உண்டு. சிக்கலுக்கு உடனடியாக விடை காண முடியாமல் சோர்ந்து போய் விட்டவர்கள் இயக்கத்தின் மீது சாடியவர்கள் உண்டு. இயக்க வாழ்வு என்பது மலர் படுக்கை அல்ல என்பதைஉணர்ந்து பொதுவாழ்க் கையை ஏற்றுக் கொண்டவர் ஆசிரியர் வீரமணி! உண்மையானதிராவிடஇயக்கத் தலைவர்கள் மயிர்ப்பாலங் கட்டி நெருப் பாற்றைக் கடந்து கொண்டு இருப்பவர்கள் என்பதை நாம் அறிவோம்.
வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பார்க்கின்றோம். 1944ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதிவந்து நிற்கிறது. தென் ஆர்க்காடு மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் - கடலூரில் திராவிடர் கழகமாவட்டமாநாடு, மாநாட்டை திறந்து வைக்க பெரியார் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆசிரி யரின் ஆசிரியர் அவரின் வழிகாட்டி ஆ.திராவி டமணி பி.ஏ., அவர்களின் பெரு முயற்சியால் அம்மாநாடு அங்கே கூட்டப் பட்டு இருக்கிறது.
மாநாட்டின் தலைவர் விருதுநகர் வி.வி.இராமசாமி. திராவிட நாடு படத்தினை அறிஞர் அண்ணா திறந்து வைக்க இருக் கிறார்கள். இரவேபெரியார் வந்து விட்டார். திருப்பாதிரிப் புலியூரில் ஒரு சத்திரத்தில் தங்க வைக் கப்பட்டு இருக்கிறார்கள். உடன் மணியம்மையாரும் இருக்கிறார். மறுநாள் காலைபெரியார் தங்கியுள்ள சத்திரத்திற்கு ஒரு பையனை அழைத்துப் போகிறார் டார்பிடோ ஏ.பி.ஜனார்த் தனம் - இவர் நமது திராவிட இயக்கத் தலைவர்களுள் ஒருவர். சிறந்த மேடைப் பேச்சாளர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆற்றொழுக் காய்ப் பேசக் கூடியவர். அந்தக் காலத்துஎம்.ஏ.!
அத்தகைய சிறப்புக்குரியவர் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு போய் பெரியார் முன் நிறுத்துகிறார். சிறுவன் முகத்தில் அச்சமும் ஆசையும் குடிகொண்டு இருக்கிறது. இருப்பினும் பையன் பெரியாருக்கு வணக்கம் தெரிவிக்கிறான். இந்தப் பையன் நம் திராவிடமணி தயாரிப்பு. மேடையில் நன்றாகப் பேசுவான் என்கிறார் ஏ.பி.ஜே! பெரியார் பார்த்தார். ஒன்றும் பேசவில்லை. பெரியாரைப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு மீண்டும் வணக்கம் சொல்லுகிறான் அந்தச் சிறு வன்! பிறகு சத்திரத்திற்கு வெளியே வந்து விட்டான்.
அன்று மாநாட்டைத் திறந்து வைத்து விட்டு சிங்கம் கர்ஜிப்பதைப் போல் பேசுகிறார் பெரியார். அடுத்து அறிஞர் அண்ணா திராவிட நாடு படத்தினைத் திறந்து வைத்து விட்டுப் பேசவேண்டும். ஆனால்பெரியாரைச் சந்தித்த அந்தச் சிறுவனைப் பேசுவதற்கு மாநாட்டு ஏற் பாட்டாளர்கள்விட்டார்கள். பத்துநிமிடப் பேச்சு. எழுதித் தயாரித்த, மனப்பாடம் செய்தபேச்சு. (நம் பாரம்பரியம் விட்டுப் போகாமல் முரசொலி அறக்கட்டளை யினர் பாரதிதாசன் கவிதைகளை சிறுவர்களைக் கொண்டு மனப்பாடம் செய்வித்து அவர்களை மேடையேற்றி பேசச் செய்ததைப் போல)  அந்தச் சிறுவனை ஒரு மேஜை மேல் நிற்க வைத்தார்கள். கூச்சம் சிறுதுமின்றி பயமற்று மிக அருமையாகப் பேசினான்.
அடுத்து அறிஞர் அண்ணா பேசினார். அச்சிறுவன் பேசியதிலிருந்தே அண்ணா தமதுபேச்சைத் தொடங்கினார்.
இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசி யிருந்தால், இவரை இந்தக் காலஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கி இருப்பார்கள். இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல. பெரியாரின் பகுத்தறிவுபால்தான்
இப்படிஅறிஞர் அண்ணா அவர்கள் பேசியதைக் கேட்டுப் பெரியார் பலமாகப் சிரித்தார். மாநாட்டில் மாபெரும் கரவொலி எழுந்தது. மாநாட்டு இடைவேளையின் போது மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது அந்தச் சிறுவனை அழைத்து, என்ன படிக்கிறாய்? என்று கேட்டார் - பெரியார். அச்சிறுவன், அய்ந்தாம் வகுப்புப் படிக்கிறேன் என்றான்.
அந்தச் சிறுவன்தான் இன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்கள்! அவர்தான் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார். மாநாடு நடத்துவதற்கு இந்தஅரசின் அதிகாரியால் அனுமதிமறுக்கப்பட்டு இருக்கிறார். பிறகு அனுமதிக்கப்பட்டு நிகழ்வுகள்நடைபெற்ற இடத்தில் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட வில்லையே, அது ஏன்?
ஜெயலலிதா அரசின் மீது நமக்கு அய்யம் உண்டாகிறது. அரசே முன்னின்றுகலவரம் நடக்கட்டும்; தாக்குதல் நடைபெறட்டும் என்று ஊக்குவிக்கிறது என்றே நமக்குத் தோன்றுகிறது. ஆசிரியர் பல முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அவருக்கு ஏதாவது ஒன்று ஆகியி ருந்தால் யார் பொறுப்பு? - என்றே நாம் அச்சத்தோடு கேட்கின்றோம்.
பிள்ளைப் பிராயம் முதல் கொள்கை மேடையேறி இன்னமும் முழக்கமிட்டு வரும் அவரைதாக்கமுனைந்தால் அதற்கு என்னபொருள்?முதல்வர் ஜெய லலிதாவை ஒன்றுகேட்கின்றோம். அவரைப் போல்அறிவாண் மையில் ஆளுமையுள்ள ஒருவரை - பொதுப் பணியில் அக்கறையுள்ள ஒருவரை - கணக்கற்ற முறைசிறை சென்ற ஒருவரை - பத்திரிகை ஆசிரியரை - பன் நூல்களை யாத்த படைப்பாளியை - திராவிடர் இயக்க கொள்கைகளை இருமொழியில் எடுத்துரைக்கும் பேச் சாளியை உங்கள் கட்சியிலிருந்து ஒருவரை எங்களுக்கு அடையாளம் காட்ட உங்களால் முடியுமா? முடியாது. அப்படிப்பட்ட எவரும் உங்களிடம் இல்லை. நாங்கள்அறிவோம்.
ஜெயலலிதாவும்  அவர்  கட்சியும் ஆசிரியர் செய்யும் பணிகளுக்காக வந்தவர்கள் அல்லவே. அவர்களுக்கு ஆசிரியர் பற்றிய கவலை இருப்பதற்கு எந்தவித நியாயமுமில்லை. ஆனால் ஜெயலலிதா இந்நாட்டின் முதல்வராக இருக்கிறார். அரசாட்சியில் அதிகார முடையவராக இருக்கிறார். அதனாலே கேட்கின்றோம். காவல்துறை பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டு இருந்தால் தாக்குதல் நடந்து இருக்காது அல்லவா? பயங்கர வாதத்திற்கு அரசே துணை இருப்பதைப் போல ஆட்சி நடத்துவது சரியா?
திராவிடர் கழகத் தலைவர் - விடுதலை நாளேட்டின் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு ஜெயலலிதாவின் அரசு பாதுகாப்புவழங்காதது ஏன்? அதற்குப் பின்னே ஒளிந்திருப்பதுஎது? -  என்றே நாம் கேட்க விரும்புகின்றோம்.
நன்றி: முரசொலி (5.10.2013)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, September 27, 2013

அ.தி.மு.க. ஆட்சியில் சமூக (அ)நீதி!

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் சலுகை வழங்க முடியாதாம்
சென்னை, செப்.26- ஆசிரியர் தகுதித் தேர் வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம் செய்வதில் இடஒதுக்கீடு முறையில் சலுகை காட்ட முடியாது என்று சென்னை உயர்நீதிமன் றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்குரை ஞர் பழனிமுத்து, கருப் பையா உட்பட பலர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுக்களில் கூறியிருப்பதாவது:-
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பிறப்பித் துள்ள உத்தரவின் அடிப் படையில், தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர் வினை நடத்துகிறது. இதில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்தினாளிகளுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மதிப் பெண் வழங்கப்படாமல் தேர்வுகள் நடத்தப் படுகிறது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பிறப்பித்த உத்தரவில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் மாநில அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றலாம் என்று கூறியுள்ளது.
இதனடிப்படையில் ஆந்திரா, ஒரிசா உள் ளிட்ட பிற மாநிலங் களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படு கிறது. எனவே தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில், இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றும்படி உத்தர விட வேண்டும் இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அக்ரவால், நீதிபதி எம். சத்தியநாராயணன் ஆகி யோர் முன்பு விசார ணைக்கு வந்தது.  அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப் பினர் செயலாளர் டி.வசுந்தரா தாக்கல் செய்துள்ள பதில் மனு வில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஆசிரி யர் தேர்வு வாரியம் என்பது ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்தும் முக்கிய அமைப்பாகும். இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் களை தமிழக அரசுதான் நிர்ணயம் செய்ய முடியும்.
மேலும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளி களில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு ஆசிரியர் கள் தகுதி தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எனவே இந்த தகுதித் தேர்வில் பங்கேற்பவர் களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பல் வேறு மதிப்பெண்கள் வழங்க முடியாது. இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய இந்த உயர்நீதி மன்றம் ஒரு கமிட்டி நியமித்தது. அந்த கமிட்டி அளித்த அறிக்கையில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணில் சலு கைகள் வழங்கக்கூடாது என்று கூறியுள்ளது.
தமிழகத்தில் ஆசிரி யர் தகுதித் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. மாணவர் களுக்கு தரமான கல் வியை வழங்குவதற்காக இந்த குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
இந்த முடிவில் சமர சம் செய்து, தேர்ச்சி மதிப்பெண் வழங்குவ தில் யாருக்கும் சலுகை வழங்க முடியாது என் றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதுமுள்ள மாணவர்களுக்கு தர மான கல்வி வழங்க ஆசிரியர் தகுதித் தேர் வில் தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. எனவே தரமான ஆசிரியர்களை தேர்வு செய்வதில் எந்த சமரச மும் செய்ய முடியாது. இந்த தேர்வில் சலுகை கள் வழங்க தேவை யில்லை. இந்த வழக்கு களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, September 11, 2013

இந்து அறநிலையத்துறை இந்து முன்னணியின் வேலையைச் செய்யலாமா?

  • கோயில் மண்டபங்களை நாத்திகர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பது சட்ட விரோதம்!
  • இந்து மதத்தில் நாத்திகத்துக்கும் இடம் உண்டு என்பதை மறுக்க முடியுமா?
  • இந்து அறநிலையத்துறை இந்து முன்னணியின் வேலையைச் செய்யலாமா?

ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் - நீதிமன்றம் சென்றால் சட்டத்தின்முன் இந்த சுற்றறிக்கை நிற்காது!  தமிழர் தலைவர் விடுத்த முக்கிய அறிவிப்பு

இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மண்டபங்களில் நாத்திகர்களுக்கு, மதச் சார்பற்றவர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்திட அனுமதியில்லை என்ற தமிழ்நாடு அரசின் - இந்து அற நிலையத்துறையின் ஆணை சட்ட விரோதமானது. அதனைத் திரும்பப் பெற வேண்டும்; இல்லையெனில் நீதிமன்றம் செல்ல நேரிடும் - அங்கு சட்டத்தின்முன் இந்தச் சுற்றறிக்கை நிற்காது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினரின் மேற்பார்வையில், அல்லது கண்காணிப்பில் உள்ள பல திருமண மண்டபங்களை நாத்திகர்களுக்கு நிகழ்ச்சி நடத்த வாடகைக்குத் தரக் கூடாது என்பதாக இந்து அறநிலையத் துறையினர் ஒரு சுற்றறிக்கை அனுப்பி யுள்ளதாக ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன!
கண்டனத்துக்குரியது
இது மிகவும் கண்டனத்திற்குரியது, குடிமக்களின் அடிப்படை உரிமையான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரைப்படி அரசியல் சட்ட விரோதமான நடவடிக்கை ஆகும்!
கொராடச்சேரி அருகில் உள்ள கண் கொடுத்த வனிதம் என்ற  ஊரில் உள்ள ஒரு மண்டபத்தில் எனது நிகழ்ச்சி, அவ்வட்டார திராவிடர் விவசாயிகளின் - சுயமரியாதைக் குடும்பங்களின் சந்திப்பு நிகழ்ந்தது; அதை மனதில் வைத்துச் சிலர் அனுப்பிய தகவலின் அடிப்படையில் இதுபோன்ற சுற்றறிக்கையைத் தமிழக அரசு அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது.
இந்தியா இந்து நாடல்ல
மதச் சார்பற்ற நாடு (Secular State) என்று அரசியல் சட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, இது ஒன்றும் இந்து நாடு அல்ல; (நேப்பாளத்தில் மட்டும்தான் உலகின் ஒரே இந்து நாடு இருந்தது; அதுவும் காலாவதி ஆகி, அங்கே மாவோயிஸ்டுகள் கூட்டணி அரசு - ஆட்சி நடைபெற்று வரும் நிலை!)
எந்த அடிப்படையில் நாத்திகர்களான திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக நிகழ்ச்சிகளுக்கு இந்து அறநிலையத் துறைக்குச்  சொந்தமான  மண்டபம் தரக் கூடாது என்று தமிழக அரசால் கூறப்படுகிறது என்பது நம்மால் புரிந்து கொள்ளப்பட முடியவில்லை.
இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை என்பதோ, இந்த ஆட்சியோ, இந்து முன்னணியின் கிளை ஸ்தாபனம் அல்ல; ஜனநாயகப்படி, அனைத்து மக்களாலும் வாக் களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி.
இந்து அறநிலையத் துறையின் வேலை என்ன?
இந்து அறநிலையத்துறையின் வேலையும்கூட, பக்தியைப் பரப்புவதோ, இந்து மதப் பிரச்சாரம் செய்வதோ அல்ல.
தணிக்கைத்துறை, கோயில் சொத்துக்களை தனியார் கொள்ளையிலிருந்து பாதுகாத்து, வரவு - செலவுகளைத் தணிக்கை செய்யும் வேலையே தவிர, இந்து மதப் பிரச்சாரம் செய்வதோ, அதைக் காப்பாற்றும் வேலையோ அல்ல. 1923 முதல் பனகல் அரசர் பிரதமராகவிருந்த நீதிக் கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம்  பற்றிய விவாதத்தைப் பார்த்து தெளிவடையட்டும்!
இந்து மதத்தில் நாத்திகத்துக்கு இடம் உண்டே!
மேலும் இந்து மதத்திலேயே நாத்திகம் என்பது ஒரு பிரிவு என்பது தத்துவ ரீதியாக ஒப்புக் கொள்ளப் பட்டதேயாகும்.
சார்வாகர்கள் - பிரகஸ்பதிகள் இராமனுக்கு மந்திரியாக இருந்ததாக இராமாயணத்தில் கூறப்பட்ட ஜாபாலி போன்றவர்கள் நாத்திகர்கள் ஆவர்!
கடவுள் உண்டு என்பவரும் ஹிந்து மதத்தில் இருக்கலாம்; கடவுள் இல்லை என்று கூறும் கடவுள் மறுப்பாளரும்கூட இந்து மதத்தில் இருக்கலாம்.
இது சட்டப்படி - ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை யாகும்.
சுயமரியாதைத் திருமணம் நடைபெறக் கூடாதா?
அறிஞர் அண்ணா முதல் அமைச்சராகி சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றினார்களே, அதுவே இந்து திருமணச் சட்டத்தின் ஒரு திருத்தச் சட்டமேயாகும்.
இந்த திருமணங்களில், கடவுளுக்கோ, இந்துமத சாங்கிய, சம்பிரதாயங்களுக்கோ, சடங்குகளுக்கோ இடமே இல்லை; என்றாலும் இந்தச் சட்டப்படியான சுயமரியாதைத் திருமணங்கள் - ஹிந்து கோயில்களின் திருமண மண்டபங்களில் நடைபெற்று வருகின்றன என்பது இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்குத் தெரியாமற் போனதேன்?
திருமண மண்டபங்கள் சமூகக் கூடங்கள் (Community Halls) என்பதால் அனைவரும் அதைப் பயன்படுத்தும் உரிமை உடையவர் ஆவர்.
சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயிலுக்குரிய (இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள)  கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் எத்தனையோ  - சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளனவே.
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், ஆத்தி கர்கள் - நாத்திகர்கள் உட்பட கலந்து கொண்டுள் ளனரே!
இந்தச் சுற்றறிக்கை கோயில் நிருவாக அதிகாரிகள் - பொது மக்கள் இடையிலே வீணான சர்ச்சையை தகராறை உருவாக்கக் கூடியதாகும்.
நீதிமன்றம் சென்றால் அரசுக்குத் தோல்விதான்!
இந்த சுற்றறிக்கையை அறநிலையத்துறை திரும்பப் பெறுவதே புத்திசாலித்தனமான நடவடிக்கை
இல்லையேல் நீதிமன்றத்தில் சட்டப்படி பகுத்தறி வாளர்கள் இந்தச் சுற்றறிக்கையை ரத்துச் செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தால் சட்டத்தின்முன் இந்த ஆணை நிற்காது.
எனவே அரசும், இந்து அறநிலையத்துறையும் கோயில் உண்டியல் காணாமற் போவதையும் திருட்டுப் போகும் கடவுளர் - கடவுளச்சிகளை பாதுகாப்பதையும் கவனத் தில் கொண்டு போதிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். காஞ்சிபுரம் தேவநாதன் குருக்கள் ஈடுபட்ட கர்ப்பகிரக லீலைகள் நடைபெறா வண்ணம் தடுக்கவும் ஆன முயற்சிகளில் இறங்குவது நல்லது; தேவையும்கூட!
நியாயத்துக்கும், சட்டத்துக்கும் விரோதமான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்பதே முதற்கட்டமாக நமது வேண்டுகோள்!

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


சென்னை 
10.9.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...