Wednesday, November 29, 2017

சமூகநீதிக்கான பாதையை அமைத்தவர்களுள் முதன்மையரான ஷோதிபாபூலே (1827-1890) 127ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

 
ஜாதியக்கொடுமைகள் தலைவிரித்தாடிக்கொண்டு இருந்த சூழலில் மகராஷ்டிராவின் புனே நகரில் ஜோதி பாபூலே பிறந்தார்.  ஓரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிபாபூலே, நண்பர் ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரை சூத்திரன் என்று கூறி திருமணத்தில் அனைவரின் முன்பும் அவரை அவமானப்படுத்தினர். இதனால் தலை குனிந்துவெளியேறிய ஜோதிபாபூலே இந்து மதசாஸ்திர நூல்களை படிக்க ஆரம்பித்தார். அதே போல் ஆங்கிலம் மற்றும் பிரான்சு நாட்டு மொழியைக் கற்று அந்த நூல்களையும் படிக்க ஆரம்பித்தார்.

இதன் மூலம் பொதுஇடங்களில் பகிரங்கமாக விவாதம் நடத்தத் துவங்கினார். உடலுழைப்பை கொட்டித் தரும் மக்களை, சூத்திரர் என இழிவுபடுத்தி சோம்பிக் கிடக்கிற வேலையைத் தான் பார்ப்பனர்கள் செய்கிறார்கள் என்றார்.  மராட்டியப் பார்ப்பனர்கள் அதிகம் பேர் வணங்கும் தத்தார்ரேயர் (சிவன், பிரம்மன் விஷ்ணு ஒன்றாக இணைந்த ஓருருவம்) என்ற தெய்வத்திற்கு கிண்டல் செய்யும் பாணியில் கடிதம் ஒன்றை எழுதினார்.


பெறுநர் : சிரஞ்சீவி தத்தாத்ரேயா

தந்தை பெயர் : ஆதி நாராயணன்

இடம் : எங்கும் பார்க்கலாம்

அன்புள்ள தத்தாத்ரேயர் அவர்களுக்கு,

பார்ப்பனர்கள் மூலமாக உலகுக்குச் சொல்லப்படும் உங்கள் மந்திரங்களின் அற்புதங்களை நீங்கள் நேரடியாகவே செய்து காட்டி இந்த ஆங்கிலேயரையும், பிரஞ்சுக்காரரையும் வாயடைக்கச் செய்ய வேண்டும். என்னைத் தவிர்க்கவோ, என்னிடம் இருந்து தப்பிக்கவோ முயல வேண்டாம். இந்த அறிவிப்பு கண்ட நாளிலிருந்து ஆறு காலத்திற்குள் தாங்கள் நேரில் ஆஜராக வேண்டும். அப்போது நான் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களும் உங்களை எங்கும் நிறைந்த ஆதி நாராயணனின் அதிகாரபூர்வ அவதாரம் என மதிப்போம். அப்படிக் காட்சியளிக்க, தாங்கள் தவறினால் இந்த நாட்டின் மகர்களும், மாங்குகளும், சகலகலாவல்லவர்கள் என அழைத்துக் கொள்ளும் உங்கள் பார்ப்பனர்களின் உண்மையான யோக்கியதையை அம் பலப்படுத்தத் தயங்கமாட்டார்கள் என்பதை அன்புடன் அறியவும்.

இப்படிக்கு,

தங்களைப் பற்றிய பிரச்சாரப் பெருமையின்

நிஜத்தை சோதிக்க விரும்பும்

ஜோதிராவ் கோவிந்தராவ் பூலே

 கல்வி அறிவைத் தராமல் மக்களை ஒடுக்கும் வேலையைச் செய்த பார்ப்பனர்களை கடுமையாகச் சாடினார். சத்திய சோதக் சமாஜ் எனும் அமைப்பை உருவாக்கி செயல்பட ஆரம்பித்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் இழிநிலை போக கல்வியறிவே சிறந்த கருவி என உணர்ந்தார். தன்னுடைய மனைவி சாவித்திரிபாய்பூலேவுடன் இணைந்து தாழ்த்தப்பட்ட, ஏன் இந்தியாவிலேயே பெண்களுக்கான முதல் பள்ளியை தொடங்கினார். உயர் ஜாதி மக்கள் கலவரம் செய்தார்கள்; அவர் போகிற பொழுது கல்லெறிந்தார்கள். என்றாலும், தனது கொள்கையில் இருந்து விலகாமல் உறுதியாக நின்றார்.

பெண்கள் கல்வியறிவு பெறுவது சாத்தியமாக ஆரம்பித்தது.  1851ஆம் ஆண்டு ஜூலையில் புனே புறநகரான நல்புதாவர் பேட், 1851ஆம் ஆண்டு செப்டம்பரில் ராஸ்தா பேட், 1852ஆம் ஆண்டு மார்ச்சில் விட்டல் பேட் போன்ற இடங்களில் பெண்கள் பயிலும் கல்விக் கூடங்களை நிறுவினார் ஜோதிராவ்பூலே.

சாவித்திரிபாய் அக்கல்விக்கூடங்களில் முதல் பெண்ணாசிரியராக பணியாற்றினார். நடந்து போகிற பொழுது ஆதிக்க ஜாதியினர் கற்களையும், சாணத்தையும் வீசினர், ஜோதிபா பூலேயிடம் புலம்பியதும் "அழுக்கான ஆடைகளை அணிந்து கொண்டு போ, பின் அங்கே போய் நல்ல ஆடைகளை அணிந்து கொள்!" என்றார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொதுக் கிணறுகளில் தண்ணீர் தரமறுத்த போது தனது வீட்டிற்கு உள்ளேயே கிணறு வெட்டி அதிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள வழிவகை செய்தார்

இளம் வயதில் விதவையான பெண்களின் தலையை மொட்டையடித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது; அந்த மொட்டையடிக்கும் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்ய மாட்டோம் என அறிவிக்கச் செய்தார்.

மூடநம்பிக்கை, கல்வியறிவின்மை, சுயமரியாதை இன்றி இருத்தல், போன்றவைதான் நமக்கு எதிரிகளாக இருக்கின்றன என்று கூறி, அதனை ஒழிக்க தனது வாழ் நாள் முழுவதும் பிரச்சாரம் செய்து மகாராஷ்டிரத்தில் சமூகநீதிக்கு வித்திட்டவர்களின் ஜோதிபா பூலேவும் ஒருவராவார்.

அரசுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக சதி! மாயாவதி குற்றச்சாட்டு


பெங்களூரு, நவ. 28 -தாழ்த் தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் உள்ளிட்ட வெகுஜன மக்களுக்கு பாபா சாகேப் அம்பேத்கர் உறுதிப்படுத்திய இடஒதுக்கீட்டு முறையை மத்தியில் ஆளும் பாஜக ஒழித் துக்கட்ட முயற்சிப்பதாக பகு ஜன் சமாஜ் கட்சியின் தலை வரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள்முதல்வருமான மாயாவதி குற்றம் சாட்டினார். இதற்காகவே, மத்திய பாஜக அரசானது, அரசுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்த்து வரு வதாகவும் மாயாவதி கூறினார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தென்னிந்திய மாநிலங்களுக் கான மாநாடு பெங்களூருவில் மாயாவதி தலைமையில் நடை பெற்றது. இந்த மாநாட்டில் மாயாவதி பேசியிருப்பதாவது: நாட்டில் முன்பை விட ஜாதி, மத மோதலை தூண்டிவிட்டு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் அடங்கிய வெகுஜன மக்களை பிரிக்கும் வேலை, வேகமாக நடந்து வருகிறது. அமைதியான மாநிலமாக இருந்த உத்தரப் பிரதேசத்தில் ஜாதி- மதக் கல வரத்தை தூண்டும் வேலையை பாஜக செய்து வருகிறது. பாஜக -வின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நான் பேச முயற்சித்தபோது, பாஜக-வினர் தடுத்து நிறுத்தினர்.

ஜனநாயக நாட்டின் முக்கிய மான அவையில், தாழ்த்தப் பட்ட மக்களின் அவல நிலையை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்குக்கூட உரிமை இல்லை. பாபாசாகேப் அம்பேத்கர் 60 ஆண்டுகளுக்கு முன், நாட்டு மக்களின் நல னுக்காக பேசமுயற்சித்தபோது, அவரைப் பேச அனுமதிக்க வில்லை. அதனாலேயே அவர் தனது அமைச்சர் பதவியிலி ருந்து விலகினார். அம்பேத் கரின் வழியில் நானும் எனது எம்.பி. பதவியை விட்டு வில கினேன். பாபாசாகேப் அம்பேத் கரும், பகுஜன் சமாஜ்கட்சியும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ருக்காக மட்டுமே போராட வில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காகவும், சிறு பான்மையினருக்காகவும் போராடி வருகிறது. ஆனால் பாஜகவும், காங்கிரசும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினரை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து பிரிக்க முயற்சித்து வருகின்றன.

பாபாசாகேப் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட் டோர் உள்ளிட்ட வெகுஜன மக்களுக்கு பெற்றுதந்த இட ஒதுக்கீடுமுறையை ஒழித்துக் கட்ட பாஜக முயற்சித்து வரு கிறது. அதற்காகத்தான் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத் துத் துறைகளையும் தனியாருக் குதாரை வார்த்து வருகிறது. இந்த போக்கினால் தாழ்த்தப் பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் வெகு வாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த போக்கை வெகுஜன மக்கள் அனைவரும் இணைந்து தடுக்க வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர் பெற் றுதந்த அரசியல் உரிமையை நிலைநாட்டப் பாடுபட வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tuesday, November 28, 2017

திராவிடர் கழகம் - திமுக உண்டானதற்கு முன்னோடி நீதிக்கட்சியே!

நீதிக்கட்சி 101ஆம்ஆண்டு விழாவில் இனமான பேராசிரியர் க.அன்பழகன் உரை



சென்னை, நவ. 27  திராவிடர் கழகம், திமுக உண்டானதற்குக் முன்னோடி நீதிக்கட்சியே  என்றார் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்.

18.11.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நடைபெற்ற நீதிக்கட்சி 101 ஆம் ஆண்டு விழாவில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.

நீதிக்கட்சி முன்னோடியான வெள்ளுடை வேந்தர் டாக்டர் பிட்டி தியாகராயர், சி.நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்  உருவப்படங்களை திறந்து வைத்து உரையாற்றுகையில் கூறியதாவது:

நீதிக்கட்சியின் 101 ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு ரையாற்றவிருக்கின்ற தமிழர் தலைவர் வீரமணி அவர்களே, இந்த இயக்கத்தில் ஈடுபட்டு நம்முடைய அருமையான கொள்கைகளை விளக்கித் தந்திருக்கின்ற பி.டி.ஆர்.பி. தியாகராசன் எம்.எல்.ஏ., அவர்களே,

தலைமையுரையாற்றிய முனைவர் இராமசாமி அவர்களே, வரவேற்புரையாற்றிய முனைவர் மங்கள முருகேசன் அவர்களே,
நன்றியுரையாற்றவிருக்கின்ற முனைவர் தானப்பன் அவர்களே, குமரேசன் அவர்களே,

இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கின்ற பெரி யோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, அருமைத் தோழர்களே!

இந்நிகழ்வு நான் எதிர்பாராத ஒரு சிறப்பான நிகழ்ச்சி யாக அமைந்திருக்கிறது. மறைமலையடிகள், திரு.வி.க. போன்ற பெருமக்களின் பெயரைச் சொல்லி பழக்கப் பட்டிருக்கிற நான், நம்முடைய இயக்கத் தலைவர்களின் பெயரை அடிக்கடி சொல்லக்கூடிய ஒரு நல்ல நிலையை இந்த விழாவில் நான் பார்க்கிறேன்.

நீதிக்கட்சித் தலைவரின் படங்களைத் திறந்து வைத்தது எனக்குக் கிடைத்த பெருமை!

நம்முடைய தலைவர்கள், நீதிக்கட்சித் தலைவர்கள் என்று சொல்லக்கூடிய தியாகராயர், நடேசனார், டி.எம்.நாயர், பெரியார், அண்ணா ஆகியோரின் படங்களைத் திறக்கின்ற வாய்ப்பு எனக்குத் தரப்பட்டது. அவர் களுடைய படங்களை நான் திறந்து வைத்தேனே தவிர, உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அவர்களைப் போல இந்த இயக் கத்திற்கு ஆக்கம் கொடுத்தவர்கள், துணை நின்றவர்கள், வழிகாட்டியவர்கள் வேறு யாரும் இல்லை. அந்தத் தலைவர்கள்தான் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னால், நீதிக்கட்சியைத் தொடங்கி வைத்த தலை வர்கள், நீதிக்கட்சியினுடைய கொள்கை விளக்கத்தை செய்த தலைவர்கள், திராவிட இயக்கம் என்றால், என்ன என்று விளக்கியவர்கள். எனவே, அப்படிப்பட்ட தலைவர்களின் படங்களை நான் இன்றைக்குத் திறந்து வைத்திருப்பது எனக்குக் கிடைத்த பெருமை.

நீதிக்கட்சித் தலைவர்கள் இல்லையென்றால்....

அந்தத் தலைவர்கள் இல்லை என்று சொன்னால், இன்றைக்கு நம்முடைய இயக்கம் இல்லை. நம்முடைய இயக்கம், இந்தக் கொள்கையில் உள்ள இயக்கம் -  திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகள் இந்த நாட்டில் தலையெடுத்திருக்க முடியாது. அவர்கள் இருந்தார்கள், வாழ்ந்தார்கள், வழிகாட்டினார்கள், விளக்கம் சொன்னார்கள் - அதனுடைய விளைவு - இன்றைக்கு நாமெல்லாம் அந்த இயக்கத்தினுடைய கொள்கையைப் பின்பற்றி, அதனை உள்ளத்தில் ஏற்றிக்கொண்டு, மக்களிடையே எடுத்துச் சொல்கிறோம்.

உளமார்ந்த நன்றி

எனவே அப்படிப்பட்ட பெருமக்கள் நம்முடைய வழிகாட்டிகளான அவர்களுடைய படங்களைத் திறந்து வைத்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்காக நான் என்னுடைய உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் அதிகம் பேச முடியாத ஓர் இக்கட்டான நிலையில், இங்கே வந்து அமர்ந்திருக்கிறேன். எனவே, இக்கட்டான அந்த நிலை எப்படி ஏற்பட்டது என்பது எனக்கே தெரியவில்லை. எனவே, அப்படிப்பட்ட நிலைகாரணமாக, நான் அதிகமாகப் பேச முடியா விட்டாலும் கூட, என்னுடைய உளமார்ந்த உள்ளத்தை உணர்ந்த நீங்கள், அதனை உணர்ந்துகொண்டு ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்பி, என்னுடைய உரையை நான் முடித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை செயல்படுத்த வலியுறுத்தி எழுச்சிக்கோலம் பூண்ட மாநாடு!



சென்னை, நவ.27 தந்தை பெரியாரால் அறிவிக்கப்பட்டு நடைபெற்ற ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் 60 ஆம் ஆண்டு விழா, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று (26.11.2017) மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.

`திராவிட வீரன்' நாடக அரங்கேற்றம்

மாநாட்டின் முதல் நிகழ்வாக உரத்தநாடு கருங்குயில் கணேசன் கலைக் குழுவினரின்  பகுத்தறிவுப் பாடல்கள்,   கலைநிகழ்ச்சியைத் தொடர்ந்து தெற்கு நத்தம் சித்தார்த்தன், பெரியார்நேசன் குழுவினர் வழங்கும் ‘திராவிட வீரன்’ வீதி நாடகம் நடைபெற்றது. தமிழர் தலை வர் ஆசிரியர் பங்கேற்கும் திருக்காட்டுப் பள்ளி நிகழ்வில் அரங்கேற்றம் செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்ட `திராவிட வீரன்' நாடகம் இம்மாநாட்டில் அரங் கேற்றம் செய்யப்பட்டு, பார்வையாளர் களின் பாராட்டினையும் பெரும் வரவேற் பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தந்தை பெரியார் கண்ட கனவான தமிழர்களின் இழிவை ஒழிக்கும், ஜாதியை ஒழிக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை செயல்படுத்த வலியுறுத்தும்   மாநாட்டில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகள்,, திராவிட இயக்க தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அறிஞர் பெருமக்கள் இரண்டாம் நாள் மாநாட்டில் கலந்துகொண்டார்கள்.
கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் வரவேற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுகவுரையாற்றினார்.

நூல் வெளியீடு

கோ.கருணாநிதி எழுதிய 69% இட ஒதுக்கீடு சட்டம் ஏன்? எப்படி? எவரால்? புத்தகத்தை நீதியரசர் ஏ.கே.ராஜன் வெளியிட்டார். மதிமுக பொருளாளர் ஈரோடு அ.கணேசமூர்த்தி பெற்றுக்கொண்டார். மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகங்கள் அளிக்கப்பட்டன. ஒரு நூலின் விலை 60. இரு புத்தகங்கள் ரூ.100க்கு அளிக்கப்பட்டன. ஏராளமானவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிட மிருந்து புத்தகங்களை பெருமகிழ்வுடன் பெற்றுக்கொண்டார்கள்.

நவம்பர் 25, 26 ஆகிய இரண்டு நாள் மாநாட்டில் இயக்க வெளியீடுகள் ரூ.34,439 மதிப்பில் விற்பனை ஆனது.

தீர்மானங்கள்


மாநாட்டின் தீர்மானங்களை மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்  முன் மொழிந்தார். மாநாட்டில் 4 முக்கிய தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.

அனைத்து தீர்மானங்களையும் கருத்துரையாற்றிய அனைத்துக் கட்சித் தலைவர்கள், அறிஞர் பெருமக்கள் வழிமொழிந்து தீர்மானங்களை செயல் படுத்துவதில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதி கூறினார்கள். மேலும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வெற்றி விழாவிலும் பங்கேற்போம் என்று குறிப்பிட்டார்கள்.

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின்படி தமிழக அரசின் ஆகமப் பயிற்சி பெற்றவர்களில் மாநாட்டுக்கு வருகை தந்தவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி பாராட் டினார்.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் திருவண்ணாமலை அரங்க நாதன், மதுரை சிவஞான பிரகாஷ், திருச்சி சிவ சங்கர், சிவகங்கை அருண், திருச் செங்கோடு இரமேஷ், திருச்செந்தூர் பாலகுரு உள் ளிட்டவர்கள் பாராட்டப்பெற்றனர்.

தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தாக்கள்

திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் பி.பட்டாபிராமன், கொரட்டூர் பன்னீர்செல்வம்,  செங்கை சுந்தரம், நாகை மாவட்டம் நெப்போலியன், பூபேஷ்குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந் திரையன் ஆகியோர் விடுதலை சந்தாக்களை வழங்கினர்.

தமிழர் தலைவர் தலைமையில் அறிஞர்பெருமக்கள் கருத்து மழை

மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார். நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் மாநாட்டின் தொடக்கவுரையாற்றினார்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாட்டில் திமுக அமைப்புச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப் பினர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அ.பாலகிருஷ்ணன், மதிமுக பொருளாளர் ஈரோடு அ.கணேசமூர்த்தி, திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், செந்தமிழ வேள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஆகியோர் கருத்துரை வழங் கினர்.

கலந்துகொண்டவர்கள்

மாநாட்டில் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி, கழகப் பொதுச்செய லாளர்கள் துரை.சந்திரசேகரன், இரா.செயக் குமார்,  தலைமைசெயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சாமி.திராவிடமணி, அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், காங்கிரசு கட்சி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன், திமுக விஜயா தாயன்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செல்வம், கவிஞர் முத்துலிங்கம், காசி முத்து மாணிக்கம், திராவிட இயக்க தமிழர் பேரவை மாறன், கவிஞர் கண்மதியன், வா.மு.சே.திருவள்ளுவர், த.கு.திவாகர், விழிகள் வேணுகோபால், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செயலாளர்  கி.சத்தியநாராயணன், திராவிடர் இயக்க வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், பேரா சிரியர் திருக்குறள் பாசுகரன், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், பகுத்தறிவாளர் கழக செயலவைத் தலைவர் தகடூர் தமிழ் செல்வி, பகுத்தறிவாளர்கழக அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்செல்வன், பொரு ளாளர் சி.தமிழ்செல்வன், பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி, புதுவை நடராசன் மற்றும் குடியாத்தம் சடகோபன், கரு.பாலன், தருமபுரி தமிழ்செல்வன், திண்டிவனம் க.மு.தாஸ், ஆர்.டி.வீரபத் திரன்,  திருச்சி ஆல்பர்ட், தாம்பரம் ப.முத் தையன், வடசென்னை வழக்குரைஞர் சு.குமாரதேவன், ஆவடி பா.தென்னரசு, தென்சென்னை இரா.வில்வநாதன், செ.ர. பார்த்தசாரதி, மயிலாடுதுறை கி.தளபதிராஜ், பெல் ஆறுமுகம், சி.வெற்றிச்செல்வி, ச.இன்பக்கனி,  இறைவி, பசும்பொன் செந்தில்குமாரி, ஓசூர் செல்வி,  பா.மணி யம்மை, பொன்னேரி கு.செல்வி, பெரியார் மாணாக்கன், பூவைசெல்வி, சுமதி,   மரக தமணி, பொறியாளர் சீர்த்தி,  நெல்லுப்பட்டு அ.ராமலிங்கம், இ.ப.இனநலம், தொண் டறம்  உள்ளிட்ட தமிழகம் முழுவதுமிருந்து பல்வேறு கழக மாவட்டங்களின் பொறுப்பா ளர்கள்,  இளைஞரணி, மாணவரணி, தொழி லாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், திமுக, விடுதலைசிறுத்தைகள் கட்சி, சிபிஅய், சிபிஎம், திராவிட இயக்க தமிழர் பேரவை பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஏராள மானவர்களும், முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் மாண வர்களும் கலந்துகொண்டனர்.

திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த மாநாட்டில் பட்டை போட்டவர்கள், நாமம் தரித்தவர்கள், ருத்திராட்ச கொட்டைகள் அணிந்தவர்கள் திரண்டிருந்தார்கள்.

கடவுள் நம்பிக்கை, கடவுள் மறுப்பு கொள்கை மாறுபாடுகளைக் கடந்து, தமிழர்களின் மானமீட்புக்கான, உரிமை மீட்புக்கான மாநாடு, ஜாதி ஒழிப்புக்கான மாநாடு என்று ஏராளமானவர்கள் மாநாட்டில் பெரிதும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மாநாடு முடியும்வரை அனை வரின் உரைகளையும் செவிமடுத்தனர். தீர்மானங்களை பலத்த கரவொலிகளுக் கிடையே நிறைவேற்றிக் கொடுத்தார்கள்.



மாநாட்டின்  நிறைவாக மாநில மாண வரணி துணைச் செயலாளர் நா.பார்த்திபன் நன்றி கூறினார்.

கேரள மாநில அரசின் செயல்பாட்டைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குக!


தமிழ்நாடு அரசு தவறுமேயானால் தொடர் பிரச்சாரம்

சிறை நிரப்பும் போராட்டம், நீதிமன்ற நடவடிக்கை தொடரும்!

ஜாதி - தீண்டாமையை ஒழிக்க 10 அம்ச திட்டங்கள்
சென்னை மாநாட்டில் அரிய தீர்மானங்கள்



சென்னை, நவ.27 கேரள மாநிலத்தில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அதனைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்ற தீர்மானத் தோடு ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கான 10 அம்ச திட்டங்களையும் சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் வெளியிடப் பட்டது.



25, 26.11.2017 ஆகிய இரு நாள்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற, முறையே தீண்டாமை - ஜாதி ஓழிப்பு மாநாட்டுக் கருத்தரங்கம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடு ஆகிய இரு நிகழ்விலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மாநாட்டுத் தலைவர்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

முன்மொழிந்தவர்: பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவரணி செயலாளர்)

தீர்மானம் - 1

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்

ஜாதி ஒழிப்புக்காகத் தன் வாழ்நாளை முழுவதும் அர்ப்பணித்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், தம் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த போராட்டம் - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதாகும்.

இது தொடர்பாக 1970 ஜனவரி 26 அன்று தமிழ்நாடெங்கும் கோயில்களின் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிப் புப் கொடுத்தார்.

தந்தை பெரியார் அவர்களின் போராட்ட அறிவிப்பின் விளைவாக தமிழ் நாடு சட்டப் பேரவையில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியின்போது அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது (2.12.1970).

அதனை எதிர்த்து ஆதிக்க ஜாதியினர் உச்சநீதிமன்றம் சென்றனர். பரம்பரை அர்ச்சகர் முறை செல்லாது என்றும், ஆகம விதிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றம் வரலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது (1972).

இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகம் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது.

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை யொட்டி, தந்தை பெரியார் அவர்களின் இறுதிப் போராட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே முதல் அமைச் சர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்களால் நீதிபதி எஸ்.மகாராசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப் பட்டது (24.9.1979).

உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகத் தடை ஏதும் இல்லை என்று வல்லுநர் குழு திட்டவட்டமாகத் தெரிவிக்கும் பரிந்துரை களை அரசிடம் அளித்தது.

அதன் தொடர்ச்சியாக ஆலயங்களில் ஜாதி வேறுபாடின்றி அர்ச்ககர் நியமனம் செய்யப்படுவதற்குப் பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசனை வழங்கிட நீதிபதி என்.கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமை யில் 12 பேர் கொண்ட குழு ஒன்று மாண்புமிகு எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசால் அமைக்கப்பட்டது (8.6.1984).

தேவையான பரிந்துரைகளை அவர்கள் வழங்கிய நிலையில், பழனி கோயிலில் அதற்கான பயிற்சிப் பள்ளி அமைக்கப்படும் என்று அஇ.அ.தி.மு.க. அரசு சார்பில் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது (1984).

தமிழக அரசு சார்பில் பயிற்சிப் பள் ளிகள் தொடங்கப்பட்டு, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு, தந்தை பெரியார், அண்ணாவின் கனவுகள் நனவாக்கப்படும் என்று அ.இ.அ.தி.மு.க. வின் 20ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சென்னை ஹேமமாலினி திருமண மண் டபத்தில் முதலமைச்சர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார். (7.10.1991)

இப்படிப் பல கட்டங்கள் தாண்டி வந்த நிலையிலும் சட்டம் நடைமுறைக்கு வர வில்லை என்பதுதான் கசப்பான உண்மை யாகும்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மீண்டும் ஒரு தனிச் சட்டம் (கிநீt 15 ஷீயீ 2006) நிறை வேற்றப்பட்டு, அதனைச் செயல்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் அவர் களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டு அக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் திருவண்ணாமலை, சிறீ ரங்கம் உள்ளிட்ட இடங்களில் சைவ - வைணவ ஆகமப் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு இடஒதுக்கீட்டின் அடிப் படையில் 207 பேர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டது.

பணி நியமனம் செய்யப்பட இருந்த நிலையில் இதனையும் பொறுக்கமாட்டாத உயர்ஜாதி ஆதிக்கப்புரியினர் உச்சநீதி மன்றம் சென்றனர். ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு (6.12.2015 அன்று) நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு ஒரு தீர்ப்பை அளித்தது. தமிழ்நாடு அரசின் சட்டம்  செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்து 21.12.2015 நாளிட்ட கடிதம் ஒன்று மாண்புமிகு தமிழக முதல் அமைச் சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு, திராவிடர் கழகத் தலைவரால் எழுதப்பட்டது (21.12.2015).

இதற்கிடையில் கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவசம் வாரியம் மொத்தம் 62 பேர்களை இந்துக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்துள்ளது.

தாழ்த்தப்பட்டவர்கள் 6 பேர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் 30 பேர் அர்ச்ச கர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் தந்தை பெரியார் அவர்களின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், கடந்த திராவிட இயக்க ஆட்சிகளில் (தி.மு.க., அ.இ. அ.தி.மு.க.) ஒப்புக்கொண்டு அறிவிக்கப் பட்ட நிலையில் நீதிமன்ற தீர்ப்புகளும் சாதகமாக இருக்கும் வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டும், தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும், கட்சியினரும் ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கும் சூழலைக் கவனத்தில் கொண்டும், கேரள மாநில அரசும் அனைத்து ஜாதியிலிருந்தும் அர்ச்சகர் நியமனம் செய்துள்ளதை முன் மாதிரியாகக் கொண்டும் ஏற்கெனவே தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று, நியமனங் களுக்குத் தயாராக உள்ளவர்களுக்கு அர்ச் சகர் நியமன ஆணையை உடனடியாக வழங்குமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 2

தமிழ்நாடு அரசு செயல்படுத்தாத பட்சத்தில்...

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு தழுவிய தீவிரப் பிரச்சாரத்தை கழகத் தலைவர் தலைமையில் ஒத்த கருத்து உடையோரையும் இணைத்து மக்கள் பெருந்திரள் போராட்டத்தை நடத்துவது, பல்லாயிரக்கணக்கில் சிறைச் செல்வது என்பது உட்பட பல்முனைகளிலும் போராட்டம் நடத்துவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் - 3

நீதிமன்றம் மூலம் தீர்வு

ஏற்கெனவே கலைஞர் தலைமையில் அமைந்த தி.மு.க. ஆட்சியில் அர்ச்சகருக் கான ஆகமப் பயிற்சி பெற்று பட்டயமும் பெற்ற 206 பேர் அர்ச்சகர் பணியின் ஆணைக்காக காத்திருக்கின்றனர் - பாதிக் கப்பட்டவர்கள் என்ற முறையில் அவர்கள் சார்பாக, சென்னை உயர்நீதிமன்றம், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் வரை வழக்குகளைத் தொடுத்து - சமூக நீதிக்குப் பரிகாரம் தேடும் முயற்சியையும் ஏககாலத் தில் இரு முனைகளில்  வழிவகைகளை  மேற்கொள்வது என்றும் இம்மாநாடு முடிவு செய்கிறது.

தீர்மானம் - 4

ஜாதி ஒழிப்பிற்கான

பத்து அம்ச திட்டங்கள்

1. அரசியல் சட்டத்தின் பதினேழாவது பிரிவில் உள்ள Untouchability is abolished and its practice in any form is forbidden by law  என்று இருப்பதில் Untouchability
என்பதற்குப் பதிலாக Caste including untouchability எனச் சட்டத் திருத்தம் செய்து, மத்திய அரசு ஜாதியையும், அதன் வழி தீண்டாமையையும் ஒழிக்க வழி செய்ய வேண்டும். அந்த வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

2. (அ) ஜாதிக்கு ஒரு சுடுகாடு என்று இருக்கும் அனைத்து ஊர்களிலும் அனை வருக்கும் பொதுவான ஒரே சுடுகாட்டை நவீன முறையில் அரசு ஏற்படுத்த வேண் டும். ஊராட்சி மன்றத்தின் பொறுப்பில் பிண ஊர்தி செய்து பராமரிக்க வேண்டும். எந்த ஒரு பிணத்தையும் எந்த ஒரு சாலை வழியாகவும் எடுத்துச் செல்லும் அவசியம் ஏற்படும்போது, யாரும் எதன் பெயராலும் தடுக்கக் கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும்.

(ஆ) மனிதர் மலத்தை மனிதர் சுமக்கும் அகற்றும் அவல நிலையை அடியோடு போக்க அனைத்து ஊர்களிலும் நவீனக் கழிப்பிட முறையைக் கொண்டு வரவேண் டும். துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத் திறனைக் கற்றுத்தர வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குத் தரமான தொழில் கல்வி, பொறியியல், மருத்துவக் கல்வி பயின்றிட நாட்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஆங்காங்கு இடமளித்து இலவசக் கல்விக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

(இ) கிராமங்களில் எங்கெங்கு தேநீர்க் கடைகளில் இரு குவளை முறை உள்ளதோ அதனை கிராம நிருவாக அதிகாரி மூலமும், காவல்துறை மூலமும் கண்டறிந்து, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் ஆகி யோர் சென்று பேசி அதனை நீக்க வேண் டும். இதில் சமூகச் சீர்திருத்தத் துறை பெரும் கவனம் செலுத்த வேண்டும்.

3. அனைத்து ஜாதியினரும் அனைத்து கோயில்களுக்கும் அர்ச்சகராவதற்கு உள்ள தடைகளை நீக்கி முறைப்படி அமல் படுத்த வேண்டும். இது ஜாதி தீண்டாமை ஒழிப்புத் திட்டத்தில் ஒரு முக்கிய வேலை யாகும்)

4. ஜாதியின் பெயரால் மறுக்கப்பட்ட கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களில் அமல்படுத்தப்படும் இடஒதுக்கீடு, சமத்துவ மடைய சிறந்த வழியாகும். இதற்காக அளிக்கப்படும் ஜாதிச் சான்று போன்ற வற்றில் Group-1 (ST), Group-2 (SC), Group-3 (MBC), Group-4 (BC), Group-5 (IC), Group-6 (FC) என்றும் குறிக்கப்பட வேண்டும். ஜாதியின் பெயர் இடம் பெறக் கூடாது. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோரின் பிள்ளைகளை  Group-5 (IC) என்று குறிப்பிட்டு, தனி இட ஒதுக்கீடும் முன்னுரிமையும் அளிக்கப்படவேண்டும். இந்தக் கருத்தினை தமிழ்நாடு அரசு 22.10.1998 அன்று கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே திராவிடர் கழகத் தின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்பது நினைவூட்டத் தக்கதாகும்.

5. (அ) ஜாதிப் பெயரைத் திரைப்படங் களுக்குச் சூட்டுவதையும், திரைப்படங் களில் ஜாதி உணர்வைத் தூண்டுவதையும் தடை செய்ய வேண்டும். ஜாதி ஒழிப்புக் கருத்துக்களை வலியுறுத்தும் திரைப்படங் களுக்கு வரிச் சலுகையை அளித்து உற்சாகப்படுத்த வேண்டும். அரசு திரைச் செய்திப்படப் பிரிவு ஜாதி ஒழிப்பை மய்யமாகக் கொண்ட செய்திப் படங்களை வெளியிட வேண்டும். வானொலி, தொலைக் காட்சி மற்றும் நாடகங்களில் ஜாதி ஒழிப்பை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளுக்கு அரசு பரிசு தந்து உற்சாகப்படுத்த வேண்டும்.

(ஆ) பள்ளிகளில் ஜாதி உணர்வுகளைத் தடுக்கும் வகையிலும், சமத்துவத்தை உரு வாக்கும் வகையிலும் பாடத் திட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

6 (அ)ஜாதிச் சங்கங்களின் உறுப்பினராக உள்ளோரும், ஜாதிச் சங்கங்களின் ஆதரவு பெற்றோரும் தேர்தலில் பங்கேற்க தேர்தல் கமிஷன் தடை விதித்து அதை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தது அய்ந்து ஆண்டுகளுக்காவது ஜாதிச் சங்கத்தில் இடம் பெறாதவராக வேட்பாளர் இருந்திருக்க வேண்டும். மாறாக நிரூபிக்கப் பட்டால் பதவியை ரத்துச் செய்ய வகை செய்ய வேண்டும்.

(ஆ) தேர்தலில் கட்சிகள் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பொழுது பெண்களுக்கு 33 விழுக்காடு கடைப்பிடிக்கப்பட வேண்டும். அந்த ஒதுக்கீட்டிலும் மீதி உள்ள இடங்களிலும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறையில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முயற்சிக்க வேண்டும். இது தொடர்பாக கருத்தரங்குகளை நடத்தி குறைகளை அகற்றித் திட்டமான முறையை அனைத்துக் கட்சிகளும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். இதன்மூலம் எல்லோரும் வாய்ப்புப் பெற ஏதுவாகும்.

(இ) ஊராட்சி மன்றங்களை ஆதிதிரா விடர்களுக்காக ஒதுக்கீடு செய்யும்போது அரசு சட்டப்படி மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி ஒதுக்கப்படும் ஊராட்சிகளில் சமூகச் சீர்திருத்தத் துறை மூலம் நல்லிணக்கத்தையும், உடன்பாட் டையும் முன்கூட்டியே ஏற்படுத்த வேண்டும்.தாழ்த்தப்பட்டோர் என்பதால் ஏற்படுத்தப் படும் இடையூறுகள் தடுக்கப்பட வேண்டும்.

(ஈ) அனைத்து அரசு ஊழியர்களும் ஜாதிச் சங்கங்களில் உறுப்பினராவதைத் தடை செய்ய வேண்டும். மேலும், ஜாதிச் சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் தடை விதிக்க வேண்டும். ஜாதி உணர் வுடன் நடந்து கொள்ளும் அரசு அதிகாரி கள்மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண் டும்.

7. அனைத்து இளைஞர்களும் ஜாதிப் பெயர்களைப் பயன்படுத்துவதை பெரும் இழிவாகக் கருதி அனைத்து நடவடிக்கை களிலும் மனத்தாலும், நடவடிக்கைகளாலும் . ஒதுக்க வேண்டும்.

8. (அ) பத்திரப் பதிவுகளிலும் மற்றும் ஆவணங்களிலும் சம்பந்தப்பட்டோரின் பெயர் மட்டுமே இடம் பெற வேண்டும். ஜாதிப் பெயர் குறிப்பிடுவதைத் தடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியல்களில் ஜாதிப் பெயர்கள் இடம் பெறக் கூடாது.

(ஆ) சமூகச் சீர்திருத்தத் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், இயக்கம், அனைத்து அரசியல் கட்சிகளில் உள்ளோர் ஜாதிச் சங்கங்களில் உறுப்பினராவதோ, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோ கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

9. (அ) ஜாதிக் கலவரங்கள் அடிக்கடி நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கு புறக்காவல் நிலையம் அமைத்து எச்சரிக்கையாக அரசு செயல்பட வேண்டும். அப்பகுதிகளில் காவல் துறை ஊழியர்களின் எண்ணிக்கையும் அதி கரிக்க வேண்டும்.

ஜாதி ஆணவக் கொலை, ஜாதி கலவரங்களைத் தடுக்கக் காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும். குற்ற வாளிகளுக்குக் காலதாமதம் செய்யாமல் தண்டனையும் பெற்றுத்தர ஆவன செய் யப்பட வேண்டும்.

(ஆ) பல ஊர்களில் கோயில் திருவிழா நடத்துவதில் ஜாதிச் சண்டை வருவதால் அவ்வூர்களில் கிராம நிர்வாக அலுவலர் மூலம் திருவிழாவை அறிவிக்க வேண்டும். காவல் துறையும், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நீதிபதியும் தலையிட்டு கலவரச் சூழல் இல்லாமல் இருந்தால் அனுமதிக்க வேண்டும். இல்லாவிடில் தடை விதிக்க வேண்டும். தேவையானால் கோயில் களைக் குறிப்பிட்ட ஆண்டுக்கு மூடவும் தயங்கக் கூடாது.

10. அரசு சமூகச் சீர்திருத்தத் துறையை உடனடியாக தொடங்குவதோடு அமைச் சகப் பொறுப்பிலிருந்து அலுவலர்கள்  வரை முற்போக்கு எண்ணமுள்ள பார்ப் பனரல்லாதார்களையே நியமிக்க வேண் டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள் கிறது.

நல்ல சமயம் இது - நழுவ விடாதீர் தமிழர்களே! ஆர்.கே. நகரில் திமுகவே வெல்ல வேண்டும்!

நல்ல சமயம் இது - நழுவ விடாதீர் தமிழர்களே!

ஆர்.கே. நகரில் திமுகவே வெல்ல வேண்டும்!

அதிமுகவுக்கும் - பிஜேபிக்கும் சேர்த்துத் தோல்வியைத் தாரீர்!

http://viduthalai.in/images/stories/dailymagazine/2017/nov/6/s8.jpg

சென்னை - ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தி.மு.க.வே வெல்ல வேண்டும் என்பதற்கான காரணங்களை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை - இராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே. நகர்) சட்டமன்ற தொகுதி  இடைத் தேர்தல்  வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதி  12.4.2017 என்று அறிவிக்கப்பட்டது. அதிமுக அணியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றனர் என்பது அதிகாரிகள் திட்டவட்டமாக அறிந்த நிலையில், அத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது. தேர்தலில் 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தமிழக அமைச்சர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதும் வெளியானது.

வரும் டிசம்பர் 21ஆம் தேதி மீண்டும் அத்தொகுதியில் தேர்தலை நடத்திட ஆணையிட்டுள்ள தேர்தல் ஆணையம் கடந்த முறை எந்தக் காரணத்துக்காகத் இடைத் தேர்தலைத் தள்ளி வைத்ததோ, அந்தக் காரணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? 'சிதம்பர ரகசியமோ!'

குற்றவாளிகள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

சம்பந்தப்பட்டவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைத் தெரிவித்திருந்தால்தானே வரும் டிசம்பர் 21இல் மீண்டும் நடக்க இருக்கும் இடைத் தேர்தல் கையூட்டியின்றி நடைபெறும் என்ற நம்பிக்கையை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தும்.

அவ்வாறு எந்த அறிவிப்பும், எடுக்கப்பட்ட நடவடிக்கையும் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், நடக்க இருக்கும் இடைத் தேர்தலின் மீதான அவநம்பிக்கை நிழல் படிவதைத் தவிர்க்க முடியாது.

ஜெயலலிதா அவர்கள் முதல் அமைச்சராகவிருந்த  கால கட்டத்தில் 144 தடை உத்தரவு போட்டு பணப்பட்டுவாடா செய்ய வழி வகை செய்து கொடுத்தது தேர்தல் ஆணையம் என்பதை  தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்களே.

அது எப்படியோ போகட்டும்;  நடக்கவிருக்கும் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளார். இந்தத் தேர்தலில் ஆளும் அ.இ.அ.தி.மு.க.வின் சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அந்த வேட்பாளர் கண்டிப்பாகத் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கு கொள்கை பூர்வ, நியாயமான காரணங்கள் ஏராளம் உண்டு.

அ.தி.மு.க. தோற்கடிக்கப்பட வேண்டும் - ஏன்?

குறிப்பாக ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது மத்திய அரசால் கொண்டு வரப்படவிருந்த பல திட்டங்களை, அவர் எவ்வித சந்தேகங்களுக்கும் இடமின்றித் திட்டவட்டமாக எதிர்த்தார். அவ்வாறு எதிர்க்கப்பட்ட திட்டங்களுள் ஒன்று -

தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் (அந்தியோதயா அன்னயோஜனா). ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நவம்பர் (2016) முதல் தேதி முதல் தமிழ்நாட்டில் அது அமலுக்கு வந்து விட்டது.

அதேபோல தமிழகத்தின் எல்லையில்கூட உள்ளே நுழைய விட மாட்டேன் என்று முதல் அமைச்சர் ஜெயலலி தாவால் உறுதியுடன் நிராகரிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. திட்டம் ராஜநடை போட்டுத் தமிழகத்திலே வலம் வரும் நிலையை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சமூகநீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டும் மண் - தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் வீறுநடை போட்ட பூமி தமிழ்நாடு.

நுழைவுத் தேர்வு என்பது சட்டப்படியாகவே கிடையாது என்று அறுதியிட்டு உறுதியாகத் தடுக்கப்பட்ட மாநிலமும் தமிழ்நாடே! இதன் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள், கிராமப்புற மக்கள் மருத்துவர்களாக ஏராளம் வர முடிந்தது.

'நீட்' மேல் தட்டு மக்களின் சதி

அதனைத் தடுக்க மேல் ஜாதி ஆதிக்க சதியால் திணிக் கப்படும் 'நீட்' தேர்வை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் 'நீட்' தேர்வு கூடாது என்று இரு சட்டங்கள் இயற்றப்பட்டும், அதற்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்குப் போதுமான முயற்சிகளை அளிக்க மாநிலத்தை ஆளும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி தவறிவிட்டது.

குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கே அந்தக் கோப்பு செல்லவில்லை என்பதைத் தெரிந்த பிறகும்கூட, அதில் அக்கறை காட்டாதது உயிர் நாடிப் போன்ற இந்த சமூகநீதிப் பிரச்சினையில் இந்த அரசின் அக்கறையின்மையைத் தெளிவுபடுத்தி விட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தலில், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில், இந்தப் பிரச்சினையை நிபந்தனையாக வைத்திருந்தால், மத்திய அரசு நிச்சயம் பணிந்து வந்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பை  வேண்டுமென்றே தமிழக அரசு தவிர்த்து விட்டதானது - எவ்வளவுப் பெரிய துரோகம்!

மடியில் கனம் - வழியில் பயம் என்ற நிலையில் மத்திய பிஜேபி அரசின் தொங்கு சதையாக, தலையாட்டிப் பொம்மையாகிவிட்டது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. மத்தியில் பிஜேபி  ஆட்சி இருக்கும் வரை எங்களை அசைக்க முடி யாது என்று  கொஞ்சம்கூட முகம் சுழிக்காமல் ஒரு மாநில அமைச்சரால் சொல்ல முடிகிறது என்றால் இந்த ஆட்சி யார் மடியில் பத்திரமாகத் தூங்குகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆளுநர் பிரச்சினையில்

ஜெயலலிதா எப்படி நடந்து கொண்டார்?

வேறு எந்தக் கால கட்டத்திலும் நடந்திராத வகையில் ஆளுநர் அன்றாட அரசு நடவடிக்கையில் தலையிடுவதைக் கூடத் தலை வணங்கி ஏற்றுக் கொள்ளும் பலகீனத்தை என்ன சொல்ல? மாநில உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த அண்ணாவின் பெயர் இந்தக் கட்சியில் ஒட்டிக் கொண்டு இருப்பது எத்தகைய அவலம்?

1995இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்ற அன்றைய ஆளுநர் சென்னாரெட்டி அவர்கள் மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டு சில விவரங்களைக் கேட்டார் என்பதற்காக முதல் அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்ததோடு ஆளுநருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியதை இன்றைய அதிமுக அரசு வசதியாக மறந்தது ஏனோ? இதில் மட்டும்  ஆளும் மந்திரிகள் அடிக் கொரு தரம் கூறும் அம்மாவின் 'ஆன்மா' மன்னித்து விடுமோ!

இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.விற்கு சரியான பாடம் கற்பிக்கத் தவறி விட்டால் அதைவிட தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக் கொள்வது - வேறு ஒன்றும் இருக்க முடியாது - இருக்கவே முடியாது.

தி.மு.க. வெல்ல வேண்டும் - ஏன்?

தி.மு.க.வின் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க.வில் அடி மட்டத் தொண்டராக இருந்து அந்தப் பகுதியில் தன் தொடர் பணிகளால் அறிமுகமான தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்வது தி.மு.க.வுக்காக அல்ல - நாட்டு மக்களுக்காக.

மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருக்கக் கூடியவர்களுக்கு நல்லதோர் பாடத்தைக் கற்பிப்பதற்காகவே!

இந்தக் கால கட்டத்தில் 'உழைப்புத் தேனீ'யானதிமுகவின் செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் அயராப் பணி இல்லாவிட்டால், இன்னும் பல கடுமையான, கொடுமையான இழப்புகளைத் தமிழ்நாடு சுமக்க வேண்டியிருந்திருக்கும்.

இது ஓர் இடைத் தேர்தலாக இருந்தாலும், இதில் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தி.மு.க.வுக்குக் கொடுக்கும் வெற்றி அகில  இந்திய அளவில் பெரிய அலையை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

அ.இ.அ.தி.மு.க.வின் பின்புலத்தில் மதவாத - காவி இந்துத்துவ சக்தி இருக்கிறது என்று தெரிந்தபின்பும், (தேர்தல் அறிவிப்பும், இரட்டை இலை சின்னமும் ஒரே நேரத்தில் கைகோத்து வருவதைக் கவனித்தீர்களா?) இதில் நாம் அலட்சியமாக இருக்க முடியாது. தமிழ் மண்ணின் தன்மானம், பகுத்தறிவு, சமூகநீதி, மதச் சார்பின்மை உணர்வைப் பிரதிபலிக்கும் இடைத் தேர்தலாக ஆர்.கே.நகர் அமையட்டும் - அமையட்டும்!

ஒரே கல்லால் இரு காய்களை வீழ்த்தக் கிடைத்த சரியான, அருமையான சந்தர்ப்பம் இது - நழுவ விடலாமா வாக்காளர்களே!

தி.மு.க. வெல்லட்டும்! வெல்லட்டும்!!

தமிழ்நாடு விழித்திருக்கிறது என்பது புரிய வேண்டியவர் களுக்குப் புரியட்டும்!

திராவிடர் கழகத்தின் ஆதரவு எல்லா வகைகளிலும் உண்டு. கழகத் தோழர்கள் முழு வீச்சில் செயல்படுவார்கள்!



கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
27-11-2017

Monday, November 27, 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றி பெறும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி





சென்னை, நவ.26 திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரு மான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று (25.-11.-2017) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

தளபதி: கழக பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் அறிவிப்பின் படி, வரும் 21-.12-.2017 அன்று நடைபெற இருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், தோழமைக் கட்சிகளின் ஆதரவு பெற்ற திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக என்.மருதுகணேஷ் என்கிற என்.எம்.கணேஷ் பி.காம்., பி.எல்., அவர்கள் போட்டியிடுவார் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப் படுகிறது.

செய்தியாளர்: இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவு கேட்டு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறதா?

தளபதி: திமுக தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் எங்களு டைய வேட்பாளர் இடைத்தேர் தலில் போட்டியிடுகிறார். மேலும் பல கட்சிகள் திமுக வேட்பாளருக்கு தங்கள் ஆதரவை யும், ஒத்துழைப்பையும் தர வேண்டுமென்ற கோரிக்கையை திமுக சார்பில் எடுத்து வைப் போம்.

செய்தியாளர்: ஏற்கனவே தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லாம் பண விநியோகம் செய்த புகார் நிலுவையில் உள்ள நிலையில், இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுமா?

தளபதி: தேர்தல் நியாயமாக நடைபெறாது என்ற காரணத்தால் தான் நாங்கள் ஏற்கனவே நீதி மன்றத்தை நாடியிருக்கிறோம். இந்த நிலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக் கிறது. ஜனநாயக முறைப்படி இந்த இடைத்தேர்தலை நாங்கள் எதிர்கொள்வோம். நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம், தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு மிகப்பெரிய வெற்றி யை பெறும்.

செய்தியாளர்: இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட அடுத்த நாளே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறதே?

தளபதி: இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது குறித்து எங்களுடைய கழக முதன்மைச் செயலாளர் அவர்கள் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார். இதே இரட்டை இலை சின்னத்தை எம்.ஜி.ஆர். இருந்தபோதும் நாங்கள் தோற்கடித்து இருக் கிறோம், அதேபோல, அம்மை யார் ஜெயலலிதா இருந்தபோதும் தோற்கடித்து இருக்கிறோம். பலமுறை இரட்டை இலை சின்னத்தை தோற்கடித்து திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. எனவே, சின்னம் பற்றி துளியளவு கவலையும் இல்லை.

இவ்வாறு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...