Wednesday, November 29, 2017

அரசுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக சதி! மாயாவதி குற்றச்சாட்டு


பெங்களூரு, நவ. 28 -தாழ்த் தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் உள்ளிட்ட வெகுஜன மக்களுக்கு பாபா சாகேப் அம்பேத்கர் உறுதிப்படுத்திய இடஒதுக்கீட்டு முறையை மத்தியில் ஆளும் பாஜக ஒழித் துக்கட்ட முயற்சிப்பதாக பகு ஜன் சமாஜ் கட்சியின் தலை வரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள்முதல்வருமான மாயாவதி குற்றம் சாட்டினார். இதற்காகவே, மத்திய பாஜக அரசானது, அரசுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்த்து வரு வதாகவும் மாயாவதி கூறினார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தென்னிந்திய மாநிலங்களுக் கான மாநாடு பெங்களூருவில் மாயாவதி தலைமையில் நடை பெற்றது. இந்த மாநாட்டில் மாயாவதி பேசியிருப்பதாவது: நாட்டில் முன்பை விட ஜாதி, மத மோதலை தூண்டிவிட்டு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் அடங்கிய வெகுஜன மக்களை பிரிக்கும் வேலை, வேகமாக நடந்து வருகிறது. அமைதியான மாநிலமாக இருந்த உத்தரப் பிரதேசத்தில் ஜாதி- மதக் கல வரத்தை தூண்டும் வேலையை பாஜக செய்து வருகிறது. பாஜக -வின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நான் பேச முயற்சித்தபோது, பாஜக-வினர் தடுத்து நிறுத்தினர்.

ஜனநாயக நாட்டின் முக்கிய மான அவையில், தாழ்த்தப் பட்ட மக்களின் அவல நிலையை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்குக்கூட உரிமை இல்லை. பாபாசாகேப் அம்பேத்கர் 60 ஆண்டுகளுக்கு முன், நாட்டு மக்களின் நல னுக்காக பேசமுயற்சித்தபோது, அவரைப் பேச அனுமதிக்க வில்லை. அதனாலேயே அவர் தனது அமைச்சர் பதவியிலி ருந்து விலகினார். அம்பேத் கரின் வழியில் நானும் எனது எம்.பி. பதவியை விட்டு வில கினேன். பாபாசாகேப் அம்பேத் கரும், பகுஜன் சமாஜ்கட்சியும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ருக்காக மட்டுமே போராட வில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காகவும், சிறு பான்மையினருக்காகவும் போராடி வருகிறது. ஆனால் பாஜகவும், காங்கிரசும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினரை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து பிரிக்க முயற்சித்து வருகின்றன.

பாபாசாகேப் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட் டோர் உள்ளிட்ட வெகுஜன மக்களுக்கு பெற்றுதந்த இட ஒதுக்கீடுமுறையை ஒழித்துக் கட்ட பாஜக முயற்சித்து வரு கிறது. அதற்காகத்தான் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத் துத் துறைகளையும் தனியாருக் குதாரை வார்த்து வருகிறது. இந்த போக்கினால் தாழ்த்தப் பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் வெகு வாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த போக்கை வெகுஜன மக்கள் அனைவரும் இணைந்து தடுக்க வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர் பெற் றுதந்த அரசியல் உரிமையை நிலைநாட்டப் பாடுபட வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...