Tuesday, November 28, 2017

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை செயல்படுத்த வலியுறுத்தி எழுச்சிக்கோலம் பூண்ட மாநாடு!



சென்னை, நவ.27 தந்தை பெரியாரால் அறிவிக்கப்பட்டு நடைபெற்ற ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் 60 ஆம் ஆண்டு விழா, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று (26.11.2017) மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.

`திராவிட வீரன்' நாடக அரங்கேற்றம்

மாநாட்டின் முதல் நிகழ்வாக உரத்தநாடு கருங்குயில் கணேசன் கலைக் குழுவினரின்  பகுத்தறிவுப் பாடல்கள்,   கலைநிகழ்ச்சியைத் தொடர்ந்து தெற்கு நத்தம் சித்தார்த்தன், பெரியார்நேசன் குழுவினர் வழங்கும் ‘திராவிட வீரன்’ வீதி நாடகம் நடைபெற்றது. தமிழர் தலை வர் ஆசிரியர் பங்கேற்கும் திருக்காட்டுப் பள்ளி நிகழ்வில் அரங்கேற்றம் செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்ட `திராவிட வீரன்' நாடகம் இம்மாநாட்டில் அரங் கேற்றம் செய்யப்பட்டு, பார்வையாளர் களின் பாராட்டினையும் பெரும் வரவேற் பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தந்தை பெரியார் கண்ட கனவான தமிழர்களின் இழிவை ஒழிக்கும், ஜாதியை ஒழிக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை செயல்படுத்த வலியுறுத்தும்   மாநாட்டில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகள்,, திராவிட இயக்க தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அறிஞர் பெருமக்கள் இரண்டாம் நாள் மாநாட்டில் கலந்துகொண்டார்கள்.
கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் வரவேற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுகவுரையாற்றினார்.

நூல் வெளியீடு

கோ.கருணாநிதி எழுதிய 69% இட ஒதுக்கீடு சட்டம் ஏன்? எப்படி? எவரால்? புத்தகத்தை நீதியரசர் ஏ.கே.ராஜன் வெளியிட்டார். மதிமுக பொருளாளர் ஈரோடு அ.கணேசமூர்த்தி பெற்றுக்கொண்டார். மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகங்கள் அளிக்கப்பட்டன. ஒரு நூலின் விலை 60. இரு புத்தகங்கள் ரூ.100க்கு அளிக்கப்பட்டன. ஏராளமானவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிட மிருந்து புத்தகங்களை பெருமகிழ்வுடன் பெற்றுக்கொண்டார்கள்.

நவம்பர் 25, 26 ஆகிய இரண்டு நாள் மாநாட்டில் இயக்க வெளியீடுகள் ரூ.34,439 மதிப்பில் விற்பனை ஆனது.

தீர்மானங்கள்


மாநாட்டின் தீர்மானங்களை மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்  முன் மொழிந்தார். மாநாட்டில் 4 முக்கிய தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.

அனைத்து தீர்மானங்களையும் கருத்துரையாற்றிய அனைத்துக் கட்சித் தலைவர்கள், அறிஞர் பெருமக்கள் வழிமொழிந்து தீர்மானங்களை செயல் படுத்துவதில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதி கூறினார்கள். மேலும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வெற்றி விழாவிலும் பங்கேற்போம் என்று குறிப்பிட்டார்கள்.

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின்படி தமிழக அரசின் ஆகமப் பயிற்சி பெற்றவர்களில் மாநாட்டுக்கு வருகை தந்தவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி பாராட் டினார்.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் திருவண்ணாமலை அரங்க நாதன், மதுரை சிவஞான பிரகாஷ், திருச்சி சிவ சங்கர், சிவகங்கை அருண், திருச் செங்கோடு இரமேஷ், திருச்செந்தூர் பாலகுரு உள் ளிட்டவர்கள் பாராட்டப்பெற்றனர்.

தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தாக்கள்

திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் பி.பட்டாபிராமன், கொரட்டூர் பன்னீர்செல்வம்,  செங்கை சுந்தரம், நாகை மாவட்டம் நெப்போலியன், பூபேஷ்குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந் திரையன் ஆகியோர் விடுதலை சந்தாக்களை வழங்கினர்.

தமிழர் தலைவர் தலைமையில் அறிஞர்பெருமக்கள் கருத்து மழை

மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார். நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் மாநாட்டின் தொடக்கவுரையாற்றினார்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாட்டில் திமுக அமைப்புச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப் பினர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அ.பாலகிருஷ்ணன், மதிமுக பொருளாளர் ஈரோடு அ.கணேசமூர்த்தி, திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், செந்தமிழ வேள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஆகியோர் கருத்துரை வழங் கினர்.

கலந்துகொண்டவர்கள்

மாநாட்டில் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி, கழகப் பொதுச்செய லாளர்கள் துரை.சந்திரசேகரன், இரா.செயக் குமார்,  தலைமைசெயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சாமி.திராவிடமணி, அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், காங்கிரசு கட்சி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன், திமுக விஜயா தாயன்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செல்வம், கவிஞர் முத்துலிங்கம், காசி முத்து மாணிக்கம், திராவிட இயக்க தமிழர் பேரவை மாறன், கவிஞர் கண்மதியன், வா.மு.சே.திருவள்ளுவர், த.கு.திவாகர், விழிகள் வேணுகோபால், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செயலாளர்  கி.சத்தியநாராயணன், திராவிடர் இயக்க வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், பேரா சிரியர் திருக்குறள் பாசுகரன், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், பகுத்தறிவாளர் கழக செயலவைத் தலைவர் தகடூர் தமிழ் செல்வி, பகுத்தறிவாளர்கழக அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்செல்வன், பொரு ளாளர் சி.தமிழ்செல்வன், பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி, புதுவை நடராசன் மற்றும் குடியாத்தம் சடகோபன், கரு.பாலன், தருமபுரி தமிழ்செல்வன், திண்டிவனம் க.மு.தாஸ், ஆர்.டி.வீரபத் திரன்,  திருச்சி ஆல்பர்ட், தாம்பரம் ப.முத் தையன், வடசென்னை வழக்குரைஞர் சு.குமாரதேவன், ஆவடி பா.தென்னரசு, தென்சென்னை இரா.வில்வநாதன், செ.ர. பார்த்தசாரதி, மயிலாடுதுறை கி.தளபதிராஜ், பெல் ஆறுமுகம், சி.வெற்றிச்செல்வி, ச.இன்பக்கனி,  இறைவி, பசும்பொன் செந்தில்குமாரி, ஓசூர் செல்வி,  பா.மணி யம்மை, பொன்னேரி கு.செல்வி, பெரியார் மாணாக்கன், பூவைசெல்வி, சுமதி,   மரக தமணி, பொறியாளர் சீர்த்தி,  நெல்லுப்பட்டு அ.ராமலிங்கம், இ.ப.இனநலம், தொண் டறம்  உள்ளிட்ட தமிழகம் முழுவதுமிருந்து பல்வேறு கழக மாவட்டங்களின் பொறுப்பா ளர்கள்,  இளைஞரணி, மாணவரணி, தொழி லாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், திமுக, விடுதலைசிறுத்தைகள் கட்சி, சிபிஅய், சிபிஎம், திராவிட இயக்க தமிழர் பேரவை பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஏராள மானவர்களும், முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் மாண வர்களும் கலந்துகொண்டனர்.

திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த மாநாட்டில் பட்டை போட்டவர்கள், நாமம் தரித்தவர்கள், ருத்திராட்ச கொட்டைகள் அணிந்தவர்கள் திரண்டிருந்தார்கள்.

கடவுள் நம்பிக்கை, கடவுள் மறுப்பு கொள்கை மாறுபாடுகளைக் கடந்து, தமிழர்களின் மானமீட்புக்கான, உரிமை மீட்புக்கான மாநாடு, ஜாதி ஒழிப்புக்கான மாநாடு என்று ஏராளமானவர்கள் மாநாட்டில் பெரிதும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மாநாடு முடியும்வரை அனை வரின் உரைகளையும் செவிமடுத்தனர். தீர்மானங்களை பலத்த கரவொலிகளுக் கிடையே நிறைவேற்றிக் கொடுத்தார்கள்.



மாநாட்டின்  நிறைவாக மாநில மாண வரணி துணைச் செயலாளர் நா.பார்த்திபன் நன்றி கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...