Tuesday, November 28, 2017

கேரள மாநில அரசின் செயல்பாட்டைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குக!


தமிழ்நாடு அரசு தவறுமேயானால் தொடர் பிரச்சாரம்

சிறை நிரப்பும் போராட்டம், நீதிமன்ற நடவடிக்கை தொடரும்!

ஜாதி - தீண்டாமையை ஒழிக்க 10 அம்ச திட்டங்கள்
சென்னை மாநாட்டில் அரிய தீர்மானங்கள்



சென்னை, நவ.27 கேரள மாநிலத்தில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அதனைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்ற தீர்மானத் தோடு ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கான 10 அம்ச திட்டங்களையும் சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் வெளியிடப் பட்டது.



25, 26.11.2017 ஆகிய இரு நாள்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற, முறையே தீண்டாமை - ஜாதி ஓழிப்பு மாநாட்டுக் கருத்தரங்கம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடு ஆகிய இரு நிகழ்விலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மாநாட்டுத் தலைவர்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

முன்மொழிந்தவர்: பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவரணி செயலாளர்)

தீர்மானம் - 1

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்

ஜாதி ஒழிப்புக்காகத் தன் வாழ்நாளை முழுவதும் அர்ப்பணித்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், தம் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த போராட்டம் - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதாகும்.

இது தொடர்பாக 1970 ஜனவரி 26 அன்று தமிழ்நாடெங்கும் கோயில்களின் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிப் புப் கொடுத்தார்.

தந்தை பெரியார் அவர்களின் போராட்ட அறிவிப்பின் விளைவாக தமிழ் நாடு சட்டப் பேரவையில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியின்போது அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது (2.12.1970).

அதனை எதிர்த்து ஆதிக்க ஜாதியினர் உச்சநீதிமன்றம் சென்றனர். பரம்பரை அர்ச்சகர் முறை செல்லாது என்றும், ஆகம விதிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றம் வரலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது (1972).

இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகம் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது.

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை யொட்டி, தந்தை பெரியார் அவர்களின் இறுதிப் போராட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே முதல் அமைச் சர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்களால் நீதிபதி எஸ்.மகாராசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப் பட்டது (24.9.1979).

உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகத் தடை ஏதும் இல்லை என்று வல்லுநர் குழு திட்டவட்டமாகத் தெரிவிக்கும் பரிந்துரை களை அரசிடம் அளித்தது.

அதன் தொடர்ச்சியாக ஆலயங்களில் ஜாதி வேறுபாடின்றி அர்ச்ககர் நியமனம் செய்யப்படுவதற்குப் பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசனை வழங்கிட நீதிபதி என்.கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமை யில் 12 பேர் கொண்ட குழு ஒன்று மாண்புமிகு எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசால் அமைக்கப்பட்டது (8.6.1984).

தேவையான பரிந்துரைகளை அவர்கள் வழங்கிய நிலையில், பழனி கோயிலில் அதற்கான பயிற்சிப் பள்ளி அமைக்கப்படும் என்று அஇ.அ.தி.மு.க. அரசு சார்பில் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது (1984).

தமிழக அரசு சார்பில் பயிற்சிப் பள் ளிகள் தொடங்கப்பட்டு, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு, தந்தை பெரியார், அண்ணாவின் கனவுகள் நனவாக்கப்படும் என்று அ.இ.அ.தி.மு.க. வின் 20ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சென்னை ஹேமமாலினி திருமண மண் டபத்தில் முதலமைச்சர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார். (7.10.1991)

இப்படிப் பல கட்டங்கள் தாண்டி வந்த நிலையிலும் சட்டம் நடைமுறைக்கு வர வில்லை என்பதுதான் கசப்பான உண்மை யாகும்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மீண்டும் ஒரு தனிச் சட்டம் (கிநீt 15 ஷீயீ 2006) நிறை வேற்றப்பட்டு, அதனைச் செயல்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் அவர் களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டு அக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் திருவண்ணாமலை, சிறீ ரங்கம் உள்ளிட்ட இடங்களில் சைவ - வைணவ ஆகமப் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு இடஒதுக்கீட்டின் அடிப் படையில் 207 பேர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டது.

பணி நியமனம் செய்யப்பட இருந்த நிலையில் இதனையும் பொறுக்கமாட்டாத உயர்ஜாதி ஆதிக்கப்புரியினர் உச்சநீதி மன்றம் சென்றனர். ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு (6.12.2015 அன்று) நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு ஒரு தீர்ப்பை அளித்தது. தமிழ்நாடு அரசின் சட்டம்  செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்து 21.12.2015 நாளிட்ட கடிதம் ஒன்று மாண்புமிகு தமிழக முதல் அமைச் சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு, திராவிடர் கழகத் தலைவரால் எழுதப்பட்டது (21.12.2015).

இதற்கிடையில் கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவசம் வாரியம் மொத்தம் 62 பேர்களை இந்துக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்துள்ளது.

தாழ்த்தப்பட்டவர்கள் 6 பேர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் 30 பேர் அர்ச்ச கர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் தந்தை பெரியார் அவர்களின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், கடந்த திராவிட இயக்க ஆட்சிகளில் (தி.மு.க., அ.இ. அ.தி.மு.க.) ஒப்புக்கொண்டு அறிவிக்கப் பட்ட நிலையில் நீதிமன்ற தீர்ப்புகளும் சாதகமாக இருக்கும் வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டும், தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும், கட்சியினரும் ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கும் சூழலைக் கவனத்தில் கொண்டும், கேரள மாநில அரசும் அனைத்து ஜாதியிலிருந்தும் அர்ச்சகர் நியமனம் செய்துள்ளதை முன் மாதிரியாகக் கொண்டும் ஏற்கெனவே தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று, நியமனங் களுக்குத் தயாராக உள்ளவர்களுக்கு அர்ச் சகர் நியமன ஆணையை உடனடியாக வழங்குமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 2

தமிழ்நாடு அரசு செயல்படுத்தாத பட்சத்தில்...

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு தழுவிய தீவிரப் பிரச்சாரத்தை கழகத் தலைவர் தலைமையில் ஒத்த கருத்து உடையோரையும் இணைத்து மக்கள் பெருந்திரள் போராட்டத்தை நடத்துவது, பல்லாயிரக்கணக்கில் சிறைச் செல்வது என்பது உட்பட பல்முனைகளிலும் போராட்டம் நடத்துவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் - 3

நீதிமன்றம் மூலம் தீர்வு

ஏற்கெனவே கலைஞர் தலைமையில் அமைந்த தி.மு.க. ஆட்சியில் அர்ச்சகருக் கான ஆகமப் பயிற்சி பெற்று பட்டயமும் பெற்ற 206 பேர் அர்ச்சகர் பணியின் ஆணைக்காக காத்திருக்கின்றனர் - பாதிக் கப்பட்டவர்கள் என்ற முறையில் அவர்கள் சார்பாக, சென்னை உயர்நீதிமன்றம், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் வரை வழக்குகளைத் தொடுத்து - சமூக நீதிக்குப் பரிகாரம் தேடும் முயற்சியையும் ஏககாலத் தில் இரு முனைகளில்  வழிவகைகளை  மேற்கொள்வது என்றும் இம்மாநாடு முடிவு செய்கிறது.

தீர்மானம் - 4

ஜாதி ஒழிப்பிற்கான

பத்து அம்ச திட்டங்கள்

1. அரசியல் சட்டத்தின் பதினேழாவது பிரிவில் உள்ள Untouchability is abolished and its practice in any form is forbidden by law  என்று இருப்பதில் Untouchability
என்பதற்குப் பதிலாக Caste including untouchability எனச் சட்டத் திருத்தம் செய்து, மத்திய அரசு ஜாதியையும், அதன் வழி தீண்டாமையையும் ஒழிக்க வழி செய்ய வேண்டும். அந்த வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

2. (அ) ஜாதிக்கு ஒரு சுடுகாடு என்று இருக்கும் அனைத்து ஊர்களிலும் அனை வருக்கும் பொதுவான ஒரே சுடுகாட்டை நவீன முறையில் அரசு ஏற்படுத்த வேண் டும். ஊராட்சி மன்றத்தின் பொறுப்பில் பிண ஊர்தி செய்து பராமரிக்க வேண்டும். எந்த ஒரு பிணத்தையும் எந்த ஒரு சாலை வழியாகவும் எடுத்துச் செல்லும் அவசியம் ஏற்படும்போது, யாரும் எதன் பெயராலும் தடுக்கக் கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும்.

(ஆ) மனிதர் மலத்தை மனிதர் சுமக்கும் அகற்றும் அவல நிலையை அடியோடு போக்க அனைத்து ஊர்களிலும் நவீனக் கழிப்பிட முறையைக் கொண்டு வரவேண் டும். துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத் திறனைக் கற்றுத்தர வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குத் தரமான தொழில் கல்வி, பொறியியல், மருத்துவக் கல்வி பயின்றிட நாட்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஆங்காங்கு இடமளித்து இலவசக் கல்விக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

(இ) கிராமங்களில் எங்கெங்கு தேநீர்க் கடைகளில் இரு குவளை முறை உள்ளதோ அதனை கிராம நிருவாக அதிகாரி மூலமும், காவல்துறை மூலமும் கண்டறிந்து, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் ஆகி யோர் சென்று பேசி அதனை நீக்க வேண் டும். இதில் சமூகச் சீர்திருத்தத் துறை பெரும் கவனம் செலுத்த வேண்டும்.

3. அனைத்து ஜாதியினரும் அனைத்து கோயில்களுக்கும் அர்ச்சகராவதற்கு உள்ள தடைகளை நீக்கி முறைப்படி அமல் படுத்த வேண்டும். இது ஜாதி தீண்டாமை ஒழிப்புத் திட்டத்தில் ஒரு முக்கிய வேலை யாகும்)

4. ஜாதியின் பெயரால் மறுக்கப்பட்ட கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களில் அமல்படுத்தப்படும் இடஒதுக்கீடு, சமத்துவ மடைய சிறந்த வழியாகும். இதற்காக அளிக்கப்படும் ஜாதிச் சான்று போன்ற வற்றில் Group-1 (ST), Group-2 (SC), Group-3 (MBC), Group-4 (BC), Group-5 (IC), Group-6 (FC) என்றும் குறிக்கப்பட வேண்டும். ஜாதியின் பெயர் இடம் பெறக் கூடாது. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோரின் பிள்ளைகளை  Group-5 (IC) என்று குறிப்பிட்டு, தனி இட ஒதுக்கீடும் முன்னுரிமையும் அளிக்கப்படவேண்டும். இந்தக் கருத்தினை தமிழ்நாடு அரசு 22.10.1998 அன்று கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே திராவிடர் கழகத் தின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்பது நினைவூட்டத் தக்கதாகும்.

5. (அ) ஜாதிப் பெயரைத் திரைப்படங் களுக்குச் சூட்டுவதையும், திரைப்படங் களில் ஜாதி உணர்வைத் தூண்டுவதையும் தடை செய்ய வேண்டும். ஜாதி ஒழிப்புக் கருத்துக்களை வலியுறுத்தும் திரைப்படங் களுக்கு வரிச் சலுகையை அளித்து உற்சாகப்படுத்த வேண்டும். அரசு திரைச் செய்திப்படப் பிரிவு ஜாதி ஒழிப்பை மய்யமாகக் கொண்ட செய்திப் படங்களை வெளியிட வேண்டும். வானொலி, தொலைக் காட்சி மற்றும் நாடகங்களில் ஜாதி ஒழிப்பை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளுக்கு அரசு பரிசு தந்து உற்சாகப்படுத்த வேண்டும்.

(ஆ) பள்ளிகளில் ஜாதி உணர்வுகளைத் தடுக்கும் வகையிலும், சமத்துவத்தை உரு வாக்கும் வகையிலும் பாடத் திட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

6 (அ)ஜாதிச் சங்கங்களின் உறுப்பினராக உள்ளோரும், ஜாதிச் சங்கங்களின் ஆதரவு பெற்றோரும் தேர்தலில் பங்கேற்க தேர்தல் கமிஷன் தடை விதித்து அதை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தது அய்ந்து ஆண்டுகளுக்காவது ஜாதிச் சங்கத்தில் இடம் பெறாதவராக வேட்பாளர் இருந்திருக்க வேண்டும். மாறாக நிரூபிக்கப் பட்டால் பதவியை ரத்துச் செய்ய வகை செய்ய வேண்டும்.

(ஆ) தேர்தலில் கட்சிகள் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பொழுது பெண்களுக்கு 33 விழுக்காடு கடைப்பிடிக்கப்பட வேண்டும். அந்த ஒதுக்கீட்டிலும் மீதி உள்ள இடங்களிலும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறையில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முயற்சிக்க வேண்டும். இது தொடர்பாக கருத்தரங்குகளை நடத்தி குறைகளை அகற்றித் திட்டமான முறையை அனைத்துக் கட்சிகளும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். இதன்மூலம் எல்லோரும் வாய்ப்புப் பெற ஏதுவாகும்.

(இ) ஊராட்சி மன்றங்களை ஆதிதிரா விடர்களுக்காக ஒதுக்கீடு செய்யும்போது அரசு சட்டப்படி மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி ஒதுக்கப்படும் ஊராட்சிகளில் சமூகச் சீர்திருத்தத் துறை மூலம் நல்லிணக்கத்தையும், உடன்பாட் டையும் முன்கூட்டியே ஏற்படுத்த வேண்டும்.தாழ்த்தப்பட்டோர் என்பதால் ஏற்படுத்தப் படும் இடையூறுகள் தடுக்கப்பட வேண்டும்.

(ஈ) அனைத்து அரசு ஊழியர்களும் ஜாதிச் சங்கங்களில் உறுப்பினராவதைத் தடை செய்ய வேண்டும். மேலும், ஜாதிச் சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் தடை விதிக்க வேண்டும். ஜாதி உணர் வுடன் நடந்து கொள்ளும் அரசு அதிகாரி கள்மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண் டும்.

7. அனைத்து இளைஞர்களும் ஜாதிப் பெயர்களைப் பயன்படுத்துவதை பெரும் இழிவாகக் கருதி அனைத்து நடவடிக்கை களிலும் மனத்தாலும், நடவடிக்கைகளாலும் . ஒதுக்க வேண்டும்.

8. (அ) பத்திரப் பதிவுகளிலும் மற்றும் ஆவணங்களிலும் சம்பந்தப்பட்டோரின் பெயர் மட்டுமே இடம் பெற வேண்டும். ஜாதிப் பெயர் குறிப்பிடுவதைத் தடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியல்களில் ஜாதிப் பெயர்கள் இடம் பெறக் கூடாது.

(ஆ) சமூகச் சீர்திருத்தத் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், இயக்கம், அனைத்து அரசியல் கட்சிகளில் உள்ளோர் ஜாதிச் சங்கங்களில் உறுப்பினராவதோ, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோ கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

9. (அ) ஜாதிக் கலவரங்கள் அடிக்கடி நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கு புறக்காவல் நிலையம் அமைத்து எச்சரிக்கையாக அரசு செயல்பட வேண்டும். அப்பகுதிகளில் காவல் துறை ஊழியர்களின் எண்ணிக்கையும் அதி கரிக்க வேண்டும்.

ஜாதி ஆணவக் கொலை, ஜாதி கலவரங்களைத் தடுக்கக் காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும். குற்ற வாளிகளுக்குக் காலதாமதம் செய்யாமல் தண்டனையும் பெற்றுத்தர ஆவன செய் யப்பட வேண்டும்.

(ஆ) பல ஊர்களில் கோயில் திருவிழா நடத்துவதில் ஜாதிச் சண்டை வருவதால் அவ்வூர்களில் கிராம நிர்வாக அலுவலர் மூலம் திருவிழாவை அறிவிக்க வேண்டும். காவல் துறையும், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நீதிபதியும் தலையிட்டு கலவரச் சூழல் இல்லாமல் இருந்தால் அனுமதிக்க வேண்டும். இல்லாவிடில் தடை விதிக்க வேண்டும். தேவையானால் கோயில் களைக் குறிப்பிட்ட ஆண்டுக்கு மூடவும் தயங்கக் கூடாது.

10. அரசு சமூகச் சீர்திருத்தத் துறையை உடனடியாக தொடங்குவதோடு அமைச் சகப் பொறுப்பிலிருந்து அலுவலர்கள்  வரை முற்போக்கு எண்ணமுள்ள பார்ப் பனரல்லாதார்களையே நியமிக்க வேண் டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள் கிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...