ஜாதி கலவரம் நடைபெற்ற கச்சநத்தம் கிராமத்தில் பாதிக் கப்பட்ட தோழர்களை 11.6.2018 காலை 10 மணியளவிலும், 'ஸ்டெர் லைட்'போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிக் குண்டுக்கு ஆளாகி தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தோழர்களை பிற்பகல் 1 மணிக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேரில் சென்று சந்திக்கின்றார்.
Monday, June 11, 2018
இனமானத்தோடு ஒன்றிணைந்து முறியடிப்போம் வாரீர்! வாரீர்!!
குருகுலக் கல்வி என்னும் பெயரில் குலக்கல்வி திட்டமா?
தமிழ்நாட்டில் சமஸ்கிருதப் பல்கலைக் கழகம் துவக்க ஏற்பாடா?
தமிழ்நாட்டில் சமஸ்கிருதப் பல்கலைக் கழகம் துவக்க ஏற்பாடா?
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்
சென்னை, ஜூன் 10- குருகுலக்கல்வி என்ற பெயரால் மீண்டும் குலக்கல்வியைக் கொண்டு வரத் திட்டம் தீட்டி விட்டார்கள். தமிழ்நாட்டில் சமஸ்கிருதப் பல்கலைக் கழகம் கொண்டு வரவும் ஏற்பாடாகி இருக்கிறது. மனுதர்ம ஆதிக்கத்தை முறியடிப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
"குருகுலக் கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா?"
6.6.2018 அன்று மாலை வடசென்னை மாவட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில், சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் குருகுலக்கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா? எனும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்
அவரது உரை வருமாறு:
கல்விக் கண்ணைக் குத்தக்கூடிய ஒரு திட்டம்
குருகுலக் கல்வி என்ற பெயராலே மீண்டும் சமஸ்கிருத படையெடுப்பு, மனுதர்ம ஆட்சி இவைகளுக்கு அடிகோலக்கூடிய மிக ஆபத்தான போக்கை, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள், பெண்கள், கிராமப்புறத்து இளைஞர்கள் ஆகியோரின் கல்விக் கண்ணைக் குத்தக்கூடிய ஒரு ஆழ்ந்த திட்டத்தை, ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பால், ஆரிய அமைப்பால் திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கக் கூடிய இன்றைய மோடி அரசு, பா.ஜ.க.வினுடைய அரசு எவ்வளவு பெரிய கொடுமையை திட்டமிட்டு நடத்தியிருக்கிறது என்பது இன்னும் நாட்டுக்குத் தெரியவில்லை.
முதல் எச்சரிக்கை மணி
இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதனை திராவிடர் கழகம் அம்பலப்படுத்தவேண்டும் - பாதிக்கப்பட்ட மக்கள் அத்துணை பேருக்கும் எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்று முதல் எச்சரிக்கை மணி அடித்து, எல்லோருக்கும் விழிப்புணர்வை உருவாக்குகின்ற அதற்காகக் கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனக்குப் பணிகள் இருந்து, இந்தப் பொது க்கூட்டத்திற்கு வேறொருவரை அனுப்பலாம் என்று சொன்ன நேரத்தில், இது மிக முக்கியமான பணி என்று சொன்னபொழுது, அன்பு சகோதரர், நாங்கள் உரிமை எடுத்துக்கொண்டு, இன்றைக்கு திராவிடர் இயக்கத்தைக் காப்பாற்றுவதற்கு ஒரு பெரிய போர் வாளாக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன பொதுச்செயலாளர் பாராட்டுதலுக்கும், பெருமிதத்திற்கும் உரிய சகோதரர் வைகோ அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொள்கிற, கலந்துகொள்ள வரவிருக்கின்ற அருமை ஏனைய தோழமைக் கட்சித் தலைவர்களே,
இந்த மழையில் கூட்டம் நடக்குமா? என்று பல பேருக்கு அய்யம். தோழர் பாண்டியன் அவர்களுக்கு உடல்நலக் குறைவின் காரணமாக, பெரியார் திடலுக்கு வந்து என்னிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றார்கள்.
கொட்டும் மழை - கொளுத்தும் வெயில் எதுவாக இருந்தாலும்...
அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இன்றைக்கு இது மிக முக்கியமான ஒரு பணி. கொட்டும் மழை - கொளுத்தும் வெயில் எதுவாக இருந்தாலும், சமுதாய பணி செய்யக்கூடிய நாங்கள், அந்தப் பணியில் எங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கிற அத்துணை இயக்க நண்பர்களும், இதில் அரசியல் இல்லை - இது நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பொறுத்தது - வாழ்வைப் பொறுத்தது - பெற்றோர்களுடைய நலனைப் பொறுத்தது. எனவேதான், இந்த இயக்கமே அதற்காகத்தான் தொடங்கப்பட்டது.
திராவிடர் இயக்கம் என்பது அரசியலுக்குச் சென்றிருக்கிறது என்று சொன்னால், அரசியலுக்காக அல்ல - இதுபோன்ற சூழ்நிலைகளை மாற்றி அமைக்கவேண்டும் என்பதற்காகத்தான் - இந்தப் பணியை செய்வதற்காக சென்றிருக்கிறது.
நோய்நாடி நோய் முதல் நாடக்கூடிய அளவிற்கு...
இன்றைக்கு சுதந்திரம் வந்து 72 ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கு சொல்கிறார்கள். இந்த 72 ஆண்டுகள் சுதந்திரத்தில், ஜாதி, தீண்டாமை எந்த அளவிற்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை நீங்கள் நினைத்துப் பார்த்தால், அதனைப் போக்கவேண்டும் என்ற முயற்சி எடுக்கக்கூடிய தலைவர்கள் ஓரணியில் நின்று, அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் வாழ்நாள் போராட்டமாக நடத்தி அதில் பெரிய அளவிற்கு அவர் வெற்றி கண்டார். ஜாதியினுடைய அஸ்திவாரத்தை மிகப்பெரிய அளவிற்கு கலகலக்கச் செய்திருக்கிறார்.
மேலே இருக்கிற இடிபாடுகள், அர்ச்சகர் போன்ற அந்தப் பிரச்சினைகள் இருக்கின்ற காரணத்தினால்தான், நோய்நாடி நோய் முதல் நாடக்கூடிய அளவிற்கு அவர்கள் அந்தப் பணியை எடுத்துச் செய்தார்கள்.
இட ஒதுக்கீட்டினால் இந்த வாய்ப்புகள் எல்லாம் வந்திருக்கிறது!
அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், எளிமையாக மக்கள் மத்தியில் கேட்டார், தாழ்த்தப்பட்டவரை, என்னுடைய சகோதரரை, எங்கள் இனத்து உழைப்பாளியை நீங்கள் கேவலமாக நடத்தியது மட்டுமல்ல, படிக்கின்ற உரிமையை மறுத்தீர்கள்; படிக்க வைத்தோம். பதவியில் அமரக் கூடாது என்று சொன்னீர்கள்; பதவியில் அமர வைத்தோம். அய்க்கோர்ட் ஜட்ஜாக முடியவில்லையே என்கிற குறை இருந்தது - அதை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், கலைஞர் அவர்களுடைய ஆட்சி என்னுடைய அறிவுரைகேற்ப செய்தது என்றார்.
அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக இன்றைக்கு ஏராளமான ஆதிதிராவிட சமுதாயத் தோழர்கள் இருக்கிறார்கள். நமக்கு ஜாதி முக்கியமல்ல; பங்கேற்பு இருக்கிறது - சமத்துவம் இருக்கிறது- சம வாய்ப்பு இருக்கிறது - இட ஒதுக்கீட்டினால் இந்த வாய்ப்புகள் எல்லாம் வந்திருக்கிறது!
அய்க்கோர்ட் ஜட்ஜாக முடிகிறது;
அர்ச்சகராக முடியவில்லையே, ஏன்?
அப்படிப்பட்ட தந்தை பெரியார் கேட்டார், ஒரு ஆதிதிராவிட சகோதரனால், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். ஆக முடிகிறது; அய்க்கோர்ட் ஜட்ஜாக முடிகிறது; ஆனால், அர்ச்சகராக முடியவில்லையே, ஏன்? ஜாதியினுடைய பிடிப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்; எனவே, அதனைத் தகர்த்து எறியவேண்டாமா? என்றார்.
இன்னுங்கேட்டால், திருப்பதி வெங்கடாசலதி பதியையே அர்ச்சகர்தான் கண்ட்ரோல் செய்கிறார். மோடி அதையும் விட்டு வைக்க விரும்பவில்லை. திருப்பதியையும் தன்வசம் எடுக்கவேண்டும் என்று மோடி முயற்சிக்கிறார் என்று சந்திரபாபு நாயுடு அவர்களின் குற்றச்சாட்டு மிகப்பெரிய அளவில் சமீபத்தில் இருக்கிறது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக
சட்டம் கொண்டு வரவேண்டும்
எனவேதான், இந்த மண்தான் இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய மண். அந்த வகையில், தந்தை பெரியார் சொன்னார், நான் வைக்கத்தில் தொடங்கிய ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் இன்றைக்கு எங்கே வந்திருக்கிறதென்றால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது. காரணம், கோவில் கருவறைக்குள் நுழைய முடியாது என்று சொல்கிறார்கள். இது மனித உரிமை - இது ஆணுக்கும் இருக்கவேண்டும்; பெண்ணுக்கும் இருக்கவேண்டும். அந்த உரிமைகள் வரவேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச்சொல்லி, அந்த உரிமைகளை நிலைநாட்டுவதற்கு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சொன்ன நேரத்தில்தான்,
கலைஞர் சொன்னார், இதற்காக நீங்கள் போராட வேண்டிய அவசியமில்லை. இது உங்கள் ஆட்சி - உங்களுக்காக இந்த சட்டத்தை நான் கொண்டு வருகிறேன் என்று சொல்லி, சட்டத்தைக் கொண்டு வந்தார்.
உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் தோற்றார்கள்;
நாம் வென்றோம்!
வழக்கம்போல பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத் திற்கு ஓடினார்கள். உச்சநீதிமன்றத்தில் அவர்கள் தோற்றார்கள்; நாம் வென்றோம்; திராவிட முன்னேற்றக் கழகம் வென்றது; பெரியார் வென்றார்; கலைஞர் வென்றார்; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகக்கூடிய சட்டம் செல்லும் என்று.
பார்ப்பனர்கள் அதற்கடுத்தபடி என்ன செய்தார்கள் என்றால், நாத்திகர்கள் எல்லாம் அர்ச்சகர் ஆகிவிடுவார்கள்; எனவே, அதற்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று சொன்னார்கள்.
அப்படியா? என்ன செய்யவேண்டும் என்று கேட்டார் கலைஞர்.
ஆகமங்கள் தனித்தனியே இருக்கின்றன; சடங்கு, சம்பிரதாயம் கெட்டுப் போகும் என்றனர் பார்ப்பனர்.
அப்படியா, சரி! ஆகம விதிகளின்படி சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்கட்டும் என்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு இன்னொரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார் கலைஞர் அவர்கள்.
பார்ப்பனர் முதல் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர்
சகோதரர்கள் வரையில்...
ஆகம விதிகள்படி இரண்டு பள்ளிக்கூடங்கள். ஒன்று வைணவ முறைப்படி; இன்னொன்று சைவ முறைப்படி பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி, பார்ப்பனர் முதல் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் சகோதரர்கள் வரையில் 210 பேர் பயிற்சி முடித்து இருக்கிறார்கள்.
ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, பத்தாண்டுகளாக அந்த வழக்கு நடைபெற்று, தி.மு.க. கொண்டுவந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வந்தது.
ஒரு ஆட்சி, அதை செய்யவில்லை. எம்.ஜி.ஆர். உறுதிமொழி கொடுத்து, அதற்குப் பிறகு ஜெயலலிதா சட்டமன்றத்தில் உறுதிமொழி கொடுத்த பிறகும் அதை நிறைவேற்றவில்லை. காரணம் என்ன? அந்த ஜாதியினுடைய பிடிப்பு.
அறிவியல் வளர்ந்திருக்கின்ற காலகட்டத்தில், செவ்வாய்க்கிரகத்திற்குப் போய் மனிதன் இறங்கிவிட்டான். ஆனால், இங்கே இருக்கிற கர்ப்பக் கிரகத்திற்குள் போக முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அதனை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். இதை நாங்கள் சொல்லும் பொழுது, என்ன இந்தப் பிரச்சினையைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று சிலர் நினைக்கலாம்.
அருமை நண்பர்களே, அதற்கு ஒரு சிறிய உதாரணத்தை சொல்லிவிட்டு, அடுத்த செய்திக்கு நான் செல்ல விருக்கிறேன்.
மோடி பல வித்தைகளைக் காட்டுவார்!
நாளைக்கு ஒரு போராட்டம்! என்ன போராட்டம்? மோடி பல வித்தைகளைக் காட்டுவார்; மோடி வித்தை என்ன என்பது ஏற்கெனவே நமக்குத் தெரியும். மற்ற வித்தைகள் எல்லாம் பிரதமர் மோடி வித்தைக்குமுன் நிற்க முடியாது. ஆகவே, அவர் என்ன செய்தார் என்றால், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நாட்டின் குடியரசுத் தலைவராகக் கொண்டு வந்திருக்கிறோம் பாருங்கள் என்று. அதற்காக பொம்மை ஆட்களைப் பிடிப்பார்கள். அதற்குமுன் அவர் யார் என்று யாருக்குமே தெரியாது. ராம்நாத் கோவிந்த் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவரானார்.
அர்த்தமுள்ள இந்து மதத்தின் யோக்கியதை!
இவர், பா.ஜ.க. ஆளுகின்ற ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் மாவட்டத்திலுள்ள புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கே இவரை அனுமதிக்கவில்லை. என்ன காரணம் என்றால், தாழ்த்தப்பட்டவரை இந்தக் கோவிலுக்குள் அனுமதிக்கமாட்டோம் என்றார்கள். இவர் குடியரசுத் தலைவர் என்றார்கள்; எந்தத் தலைவராக இருந்தால் எங்களுக்கு என்ன? இந்து மதம், அர்த்தமுள்ள இந்து மதத்தினுடைய ஆதிக்கம் இதுதான். ஆகவே, அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று சொன்னார்கள்.
வேறு வழியில்லாமல் குடியரசுத் தலைவர் என்ன செய்தார் தெரியுமா? சரி பரவாயில்லை, படிக்கட்டுகளில் அமர்ந்து நான் கடவுளை வணங்கிவிட்டுப் போகிறேன் என்று, படிக்கட்டில் அமர்ந்துவிட்டு வந்தார்.
முப்படைக்கும் தலைவரான குடியரசுத்
தலைவருக்கு நேர்ந்த அவமானம்!
2018 ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசுத் தலைவராக உள்ள ஒருவர் - இவருடைய பதவிக்கு மேல், உயர் பதவியே கிடையாது என்ற நிலை. இவர்தான் முப்படைக்கும் (தரைப்படை - வான்படை - கப்பற்படை) சுப்ரீம் கமாண்டர் குடியரசுத் தலைவர்தான் - அரசியல் சட்டப்படி. இந்த மூன்று படைகளும் இவருடைய உத்தரவுப்படிதான் நடக்கவேண்டும். எந்த நாட்டின்மீது வேண்டுமானாலும் படையெடுக்கச் சொல்லும் அதிகாரம் படைத்தவர். ஆனால், இவ்வளவு படைகள் இருந்தாலும், பூணூல் படைக்கு முன் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்பொழுது புரிகிறதா நண்பர்களே, ஜாதி - தீண்டாமை - வருணாசிரம தர்மம் - மனுதர்மம் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அதற்காகத்தான் நாளைக்கு தமிழகமெங்கும் போராட்டம் நடைபெறவிருக்கிறது.
இந்த செய்தியையே மறைத்துவிட்டார்கள். அதையும் மீறி இந்த செய்தி வெளியில் வந்தவுடன், மிக சாமர்த்தியமாக அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கிறார்கள். குடியரசுத் தலைவர் மனைவிக்கு மூட்டு வலி. அதனால் படிக்கட்டுகளிலேயே அமர்ந்து பூஜை செய்துவிட்டு வந்தார்கள் என்று ஒரு சமாதானத்தை சொல்கிறார்கள். கோவிலுக்குள் விடாமல் அவமானப்படுத்தினார்களே, அதைவிட கொடுமையானது இவர்கள் சொல்கின்ற விளக்கம்.
சரி, அந்தம்மா மூட்டு வலி காரணமாக கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நன்றாகத்தானே நடக்கிறார், இவர் ஏன் படிக்கட்டுகளில் அமர்ந்து பூஜை செய்தார்.
ஆர்ப்பாட்டம் ஏன்?
ஆகவேதான், நாம் ஒருபக்கம் படி, படி என்று சொல்கிறோம். இன்னொரு பக்கம் அவர் எனக்கு இருப்பது படி, படிதான் அதற்குமேல் ஏறி வர முடியாது என்கிற நிலைக்கு ஆக்கி விட்டார். இதையெல்லாம் எதிர்த்துத்தான் நாளைக்கு (7.6.2018) ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
இப்பொழுது குருகுலக் கல்வியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இங்கே வெளியிடப்பட்ட புத்தகத்தினுடைய அட்டையைப் பார்த்தாலே உங்களுக்குத் தெளிவாக விளங்கும்படியான விளக்கங்கள் இருக்கின்றன.
குருகுலக் கல்வி என்றால் என்ன? வீட்டுத் தொழுவத்தில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அமர்ந்திருக்கவேண்டும். ஞானாசிரியராக இருக்கின்ற பார்ப்பனர் வேதத்தை சொல்லிக்கொடுக்க அவருக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது அவர் அழைப்பார். இதுதான் குருகுலக் கல்வி. இதுதான் வேதக் கல்வி.
அவர் வாயால் சொல்வார்; அதனை இவர்கள் திருப்பிச் சொல்லவேண்டும். உபாத்தியாயர் என்கிற வார்த்தைக்குப் பொருள் என்னவென்றால், அத்தியாயனம் என்றால் சொல்வது; உபாத்தியாயர் என்றால், அவர் சொல்வதை திரும்பச் சொல்வது. இதிலிருந்துதான் வாத்தியார் என்ற சொல் வந்தது.
அரசர்களாக இருந்தாலும்,
படிப்பதற்குத் தகுதி கிடையாது
குருகுலக் கல்வியைத்தான் அறிவு என்று சொல்லி வைத்திருந்தான். அதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. மற்றவர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கக் கூடாது; கல்வியைக் கொடுக்கக் கூடாது. மனுதர்மம் நடைமுறையில் இருந்ததினால்தான், ராஜாக்கள்கூட படிக்காதவர்களாக இருந்தார்கள். அவர்கள் அரசர்களாக இருந்தாலும், படிப்பதற்குத் தகுதி கிடையாது அவர்களுக்கு.
அப்படிப்பட்ட ஒரு கல்வி முறையை மீண்டும் மோடி அரசு இங்கே கல்வித் திட்டமாகக் கொண்டுவருவதற்கு ஏற்பாடு செய்து - வேகமாக அவர்கள் வேலை செய்கிறார்கள்.
இதோ என்னுடைய கைகளில் இருப்பது பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான ஆர்கனைசர் ஆகும். மே மாதம் வெளிவந்த இந்தப் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.. என்று சொன்னால், அது ரகசிய இயக்கம். அவர்கள் கூட்டம் போடுவது ரகசியமாக இருக்கும். ஊர்வலம் ஒன்றைத்தான் வெளியில் காட்டுவார்கள்.
உஜ்ஜயினியில் ஒரு மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள். இந்தத் தகவல்கள் எல்லாம் பத்திரிகைகளில் முதலில் வெளிவரவில்லை. நாம்தான் அதனை வெளியிட்டோம்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான மோகன் பகவத் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் மடாதிபதிகள், மற்றவர்களும் கலந்துகொண்டனர்.
அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன தெரியுமா?
நாம் மீண்டும் பழைய குருகுலக் கல்வியை உருவாக்கி, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அத்தீர்மானம்.
ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறதோ,
அதைத்தான் மோடி செய்வார்
இந்த மாநாடு முடிந்து ஊருக்குச் சென்றதும், அந்தத் திட்டத்தை விரைவாக மேற்கொள்ள வேண்டும். என்று தொண்டர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறதோ, அதைத்தான் மோடி செய்வார். ஆர்.எஸ்.எஸ். கல்வித் திட்டம் என்னவென்று சொன்னால், முழுவதும் வேத கணித பாடம், சமஸ்கிருதம்தான். நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் என்னாவது? என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள்.
இந்தச் செய்தியை நாங்கள் வெளிக் கொணர்ந்து, அது மக்களிடம் போய்ச் சேருவதற்குள், அவர்கள் வேக வேகமாக திட்டத்தைப் போட்டு, ஒரு சுற்றறிக்கையை அனுப்பி விட்டார்கள். இந்தத் தகவல் பலருக்குத் தெரியாது. ஏற்கெனவே கல்வித் திட்டத்தை சமஸ்கிருதத்தைத் திணிக்கிறார்கள் என்றவுடன், நம்முடைய எதிர்ப்பைக் காட்டினோம்.
உஜ்ஜயினியில் பார்ப்பனர்கள்
நடத்திய மாநாடு
குருகுலம் என்ற பெயரில் வீட்டிலோ, வேறு தனி இடத்திலோ சிறுவயதிலேயே,
1. வேத அத்யாயனம் (வேதம் கற்றல்)
2. பாரதீய தரிசனம் (இந்தியச் சிந்தனை)
3. சமஸ்கிருத வியாகரணம் (சமஸ்கிருத இலக்கணம்)
4. சமஸ்கிருத சாகித்திய (சமஸ்கிருத பாடப் புலமை)
5. சமஸ்கிருத மொழி (புலமை) கற்றல்
இந்த 5 பாடங்களில் கற்று தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று அந்த மாணவரே தானே சான்றிதழ் எழுத்துமூலம் கொடுப்பதை வைத்துக்கொண்டு, உடனடியாக நேரே 10 ஆம் (X Standard) வகுப்பில் சேரலாம் (பழைய கால Private Study என்பது போன்றது) பிறகு 11, 12 வகுப்பினை முடித்துவிடலாம்.
மேலே காட்டிய 5 பாடங்களில் வெற்றி பெறுவதற்கு வெறும் 33 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றாலே போதுமானது.
10 ஆம் வகுப்பிற்கு முன்னர் முறையாக பல வகுப்புகளில் 6, 7, 8, 9 வகுப்புகளில் - மாணவர்கள் படிக்கும் பல்வேறு பாடங்களான அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல் போன்றவைகள் ஏதும் படிக்கத் தேவையில்லை. குருகுலத்தில் கணிதம் ஏதாவது சொல்லிக் கொடுப்பதோ, கற்கப்படுவதாகவோ இருப்பின், அது வேதக் கணிதமாம்! (Vedic Mathematics).
மேற்கண்ட சமஸ்கிருதக் கல்வி பயிற்சி பெற்றிட குருகுலக் கல்விக் கூடங்களில் மட்டும்தான் சாத்தியப் படும்.
சமஸ்கிருத பாரதி
கல்வியை சமஸ்கிருத மயம், வேத மயம் ஆக்கிவரும், பெரிதும் சமஸ்கிருதத்தைப் பரப்பிடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் இயக்கப்படும் சமஸ்கிருத பாரதி பள்ளிக் கூடங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் மானிய உதவி (Grant) மக்கள் வரிப் பணத்தில் திருப்பி விட்டுப் பயன் பெறச் செய்யவும், பார்ப்பன சமஸ்கிருத பண்டிதர்களுக்கு ஆசிரியர் வேலை வாய்ப்பைப் பெருக்கும் மிகப்பெரிய சூழ்ச்சித் திட்டமே இது!
சமஸ்கிருதப் பல்கலைக் கழகத்தை
உருவாக்கவேண்டும் என்ற திட்டத்தை,
ரகசியமாக வைத்திருக்கிறார்கள்!
முன்பு இந்தியைத் திணித்து, இந்திப் பண்டிதர்கள் வேண்டும் என்று சொன்னார்கள். அதேபோன்று பார்ப்பனர்கள்தான் சமஸ்கிருத பண்டிதர்கள். புதிதாக இப்பொழுது சமஸ்கிருத கல்லூரியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில், தமிழ்ப் பல்கலைக் கழகத்தை வைப்பதைவிட, சமஸ் கிருதப் பல்கலைக் கழகத்தை உருவாக்கவேண்டும் என்ற திட்டத்தை, ரகசியமாக வைத்திருக்கிறார்கள். உயர்கல்வித் துறையிலிருந்து எனக்கு இந்தச் செய்தி இன்றைக்குக் கிடைத்திருக்கிறது. மீண்டும் மனுதர்மம் வருகிறது.
சமஸ்கிருதம்தான் எல்லாமும் என்று சொல்லக் கூடிய, அந்தக் கலாச்சாரத்தைப் பேணக்கூடியவர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு நாங்கள் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
ராஜாராம் மோகன்ராய்!
இந்தியாவில் முதன்முதலில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை உண்டாக்குவதற்கு, பெண்களை உயிரோடு எரிப்பதைத் தடுப்பதற்கு முதல் முயற்சி எடுத்த மாமனிதர் அவரே ஒரு பார்ப்பனர்தான் - அவர்தான் வங்காளத்தைச் சேர்ந்த ராஜாராம் மோகன்ராய் அவர்கள்.
அவருடைய காலத்தில் வெள்ளைக்காரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்களுடைய ஆதிக்கத்தைப் பலப்படுத்தவேண்டும் என்பதற்காக மிகச் சாமர்த்தியமாக சமஸ்கிருதத்தை சொல்லிக் கொடுத்தால், பார்ப்பனர்கள் எதிர்ப்புக் காட்ட மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு, அவர்களைத் தன்வயப்படுத்துவதற்காக இதனை செய்தபொழுது, முதல் எதிர்ப்புக் குரல், சமஸ்கிருதத்தைப் படிக்க வைக்காதே! புராணங்களில் ஒன்றும் கிடையாது என்று எதிர்ப்புக் கொடுத்தவர், ராஜாராம் மோகன்ராய் அவர்கள்தான். இவர் வைஸ்ராய்க்கு எழுதிய கடிதம் இன்னமும் இருக்கிறது.
அறிவியல் மனப்பான்மையை அது கொன்றுவிடும் - அது வெறும் நம்பிக்கைதான் என்றார்.
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
இதுதான் திருவள்ளுவருடைய முறையாகும்.
புத்தருடைய முறை என்னவென்று தெரியுமா?
முன்னோர்கள் நடந்தார்கள் என்பதற்காக அதேபோன்று நீ நடக்கவேண்டும் என்று நடக்காதே!
முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக, நீ சிந்திக்காமல் அதனை ஏற்காதே!
முன்னோர்கள் எழுதினார்கள் என்பதற்காக அதை அப்படியே ஏற்காதே நீ!
உன்னுடைய அறிவு என்ன சொல்கிறது என்பதைப் பார்! என்றார்.
அதை அப்படியே 20 ஆம் நூற்றாண்டில் சொன்னவர் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
யார் சொல்வதையும் கேட்காதீர்கள்; நம்பாதீர்கள். உன்னுடைய அறிவு என்ன சொல்கிறதோ அதைப் பாருங்கள் என்றார்.
நான் சொல்வதையும் நம்பாதே! உன்னுடைய
அறிவு என்ன சொல்கிறதோ, அதனை நம்பு!
குடியாத்தம் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்களுக்கு வரவேற்புரை அளித்தபொழுது, அங்கே அய்யா உரையாற்றினார்.
நீங்கள் உங்கள் அறிவைப் பயன்படுத்த வேண்டும். யார் சொல்வதையும் நம்பவேண்டும் என்பதில்லை. நாடு நாசமாகப் போனதற்கே அதுதான் காரணம் என்று அய்யா ஆரம்பித்து, இளைஞர்களே நம்புங்கள்! என்று தொடங்கி, பரமாத்மா சொன்னார், ஜீவாத்மா சொன்னார், பகவான் சொன்னார், இறைவன் சொன்னார் என்று யார் சொன்னாலும் நம்பாதீர்கள் என்று சொன்னார்.
கூட்டத்திலிருந்து எழுந்த ஒரு இளைஞர், யார் சொல்வதையும் நம்பவேண்டாம் என்று சொல்கிறீர்களே அய்யா, நீங்கள் சொல்வதை நம்புவதா? வேண்டாமா? என்று கேட்டார்.
உடனே அய்யா அவர்கள் ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல், நான் சொல்வதையும் நம்பாதே! உன்னுடைய அறிவு என்ன சொல்கிறதோ, அதனை நம்பு! என்றார்.
இப்படி அறிவுக்கு சுதந்திரம் கொடுத்த நாட்டில், அதற்கு நேர் எதிராக அறிவுக்குச் சுதந்திரம் கொடுக்காதே, நம்பு! நம்பு!! ஏனென்று கேட்டால், உனக்கு நரகத்தில் தண்டனை கிடைக்கும். ஆகவே, நம்பு! நம்பு!! என்கிறார்கள்.
எது ஆரியம்? எது திராவிடம்?
திராவிடம் என்றால் என்ன? என்று நிறைய பேர் இப்பொழுது ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். திராவிடமா? தமிழா? தமிழ்த் தேசியமா?திராவிடமா? என்று.
பார்ப்பானா? தமிழனா? என்று ரத்தப் பரி சோதனை வைத்துப் பார்க்கவில்லை. கலந்து போய் நீண்ட நாள்களாகின்றன என்பது உங்களுக்கும் தெரியும், எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதே நேரத்தில் இரண்டு பண்பாடுகள், அடிப்படையிலே இரண்டு பண்பாடுகள். எது ஆரியம்? எது திராவிடம்? என்றால், இதற்காகப் பெரிய ஆராய்ச்சி செய்து, விவாதம் செய்யவேண்டிய அவசியம் இல்லை.
ஆரியம் என்றால் என்ன?
கண்ணை மூடிக்கொண்டு நம்பு என்று சொல்வது ஆரியம்.
திராவிடம் என்றால் என்ன?
நம்பாதே, உன்னுடைய அறிவு என்ன சொல்கிறது என்பதைக் கேள் என்று சொல்வது திராவிடம்.
திருவள்ளுவர் இதைத்தானே சொன்னார்; புத்தர் இதைத்தானே சொன்னார்; பெரியாரும் இதைத்தானே சொன்னார்.
திராவிடம் என்பதற்கு ஒரு எல்லைக்கோடு கிடையாது!
எனவே, திராவிடம் என்பது இந்தியா முழுவதும் இருந்திருக்கிறது. திராவிடம் என்பதற்கு ஒரு எல்லைக்கோடு கிடையாது. திராவிடம் என்பது ஒரு தத்துவம். திராவிடம் என்பது ஒரு ஆய்வு செய்து கண்டுபிடிக்கின்ற விஷயம் அல்ல.
எல்லோரும் சமம் என்றால், அது திராவிடம்!
தொடக்கூடாதவன், உயர்ந்தவன் - தாழ்ந்தவன், எட்டி நில் என்றால், அது ஆரியம்!
வேதம் என்றால், அறிவு என்று அந்தக் காலத்தில் வைத்திருந்தார்கள்.
அந்தக் காலத்தில் புத்தகங்கள் கிடையாது. நல்ல வாய்ப்பாக வெள்ளைக்காரர்கள்தான் பிரிண்டிங்கைக் கண்டுபிடித்தார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களால் ஒரு பயலுக்காவது அச்சாபீஸ் தெரியுமா? எழுத்து தெரியுமா? எழுத்துத் தெரியாததினால்தானே, அவர்கள் வாயால் சொன்னார்கள். அப்படி சொல்லும்பொழுது, அவர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லலாமே! அந்த முறையில் இருந்ததுதான் அத்தியாயனம். அத்தியாயனம் என்றால் வரைப்படுத்துவது.
சமஸ்கிருதம் நமக்குப் புரிவதில்லை. இன்னமும் நம்முடைய ஆட்கள், அவருடைய இல்லங்களில் பார்ப்பனரைக் கொண்டு வந்து திருமணங்களை நடத்துகிறார்கள்.
அவர்கள் புரியாத மொழியில் மந்திரங்களை சொல்லுகிறான். புதுப்பணக்காரனான நம்மாள், சாமி, மந்திரங்களை நன்றாகச் சொல்லுங்கள் என்று.
மந்திரத்திற்கு என்ன பொருள் தெரியுமா?
பெரியார்தான் கேட்டார், திருமண விழாக்களில் பார்ப்பனர்கள் சொல்லுகின்ற மந்திரத்திற்கு என்ன பொருள் தெரியுமா? என்று.
சோமஹ ப்ரதமோ
விவேத கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.
நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.
அதவாது மணமகள் ஏற்கெனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.
இந்த மந்திரத்தைத் தமிழில் சொன்னால், மந்திரம் சொன்னவர் வெளியில் போக முடியுமா? சமஸ்கிருதம் புரியாததினால், அதனை இப்பொழுது திணிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இங்கே உரையாற்றிய குமாரதேவன் ஒரு கேள்வியை கேட்டாரே, அது நியாயமான கேள்வி!
இப்பொழுது சமஸ்கிருதத்தைத் திணிக்கிறார்களே, எந்தப் பார்ப்பானாவது வீட்டில் சமஸ்கிருத மொழியில் பேசுகிறார்களா? என்று.
சங்கராச்சாரி வேண்டுமானால், சமஸ்கிருத மொழியில் பேசுவார். அவருக்கும், அவருடைய சீடருக்கும் தெரியும். சமஸ்கிருத மொழியில் மந்திரத்தை தவறாக சொன்னால்கூட யாருக்காவது புரியுமா?
நாவலர் சோமசுந்தர பாரதியார்
ஒருமுறை நாவலர் சோமசுந்தர பாரதியார் வைதீகத் திருமணத்தில் கலந்துகொண்டார்.
அந்த திருமணத்தை நடத்தி வைப்பதற்கு, ஒரு குட்டிப் புரோகிதர் வந்திருந்தார். சடங்கு சம்பிரதாயத்தை செய்துவிட்டு, தீ வளர்த்து, சுற்றி வாருங்கள், சப்தி என்றான், மந்திரத்தை சொல்லிக்கொண்டே!
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சோமசுந்தர பாரதியார், ஏ, நிறுத்து! என்று சொன்னார்.
ஆனால், அந்த குட்டிப் புரோகிதன், மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருந்தான்.
உடனே எழுந்து போய், அந்தக் குட்டிப் புரோகிதன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.
இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், அண்ணா எழுதிய ஆரிய மாயை புத்தகத்தில் கடைசியாக இந்த நிகழ்வை பதிவு செய்திருப்பதைப் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
உடனே அங்கே கூடியிருந்தவர்கள் சோமசுந்தர பாரதியாரைப் பார்த்து, ஏங்க, உங்களுக்கு அவர் சொல்கிற மந்திரம் பிடிக்கவில்லை என்றால், இப்படி நடந்துகொள்ளலாமா? இது நாகரிகமானதா? என்றெல்லாம் சொன்னார்கள்.
பொறுங்கள், பொறுங்கள்! நீங்கள் எல்லோரும் என்மேல் கோபமாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. நடந்தது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? நான் இப்பொழுது சொல்கிறேன். இங்கே இருக்கிற உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியாது. எனக்கு சமஸ்கிருதம் தெரியும். அவன் மந்திரம் சொன்னானே, அது என்ன மந்திரம் என்று உங்களுக்குத் தெரியுமா? அந்த மந்திரம் கருமாதி மந்திரமாகும் என்றார்.
அப்படியா என்று சொன்ன சிலர், அந்தக் குட்டிப் பார்ப்பானுக்கு இரண்டு அறை விட்டார்கள்.
உடனே அந்தக் குட்டிப் பார்ப்பான், அய்யா நிறுத்துங்கள்! என்னை அடிக்காதீர்கள். உண்மை என்னவென்றால், எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. என்னுடைய தகப்பனார், இரண்டு மந்திரங்களை சின்ன வயதில் சொல்லிக் கொடுத்தார். அதை நான் மாற்றி மாற்றி சொல்கிறேன். இதுவரையில் யாரும் நானும் அப்படியே செய்கிறேன். இனிமேல் நான் இப்படி செய்யமாட்டேன் என்றான்.
சமஸ்கிருதம் புரியாத மொழி என்கிற காரணத்தினால் நம்பு என்கிறார்கள். இதனால்தான் அவர்கள் வேத வாக்கு என்கிறார்கள்.
இங்கே ஆட்சி செய்பவர்களோ, எதற்கெடுத் தாலும் தலையாட்டுகிறார்கள் - பூம் பூம் மாடு போன்று. நான் அவர்களை மாடு என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். ஏனென்றால், எங்கள் சகோதரர்கள் அவர்கள். அந்த மாட்டிற்குக்கூட சில நேரங்களில் சுயமரியாதை வந்து முட்ட ஆரம்பிக்கிறது. எப்படியென்றால், மாட்டிடம் சென்று ஏதாவது வம்பு செய்தால், அந்த மாட்டிற்குக் கொம்பு இருக்கிறதோ, இல்லையோ அது முட்டுவதற்கு வரும்- அதைப் பார்த்து பயந்துவிடுவார்கள்.
நீங்கள் எல்லாம் கைதட்டுகிறீர்கள்; எங்களுக்கு ரத்தக் கண்ணீர் வடிகிறது!
"குருகுலக் கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா?"
6.6.2018 அன்று மாலை வடசென்னை மாவட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில், சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் குருகுலக்கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா? எனும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்
அவரது உரை வருமாறு:
கல்விக் கண்ணைக் குத்தக்கூடிய ஒரு திட்டம்
குருகுலக் கல்வி என்ற பெயராலே மீண்டும் சமஸ்கிருத படையெடுப்பு, மனுதர்ம ஆட்சி இவைகளுக்கு அடிகோலக்கூடிய மிக ஆபத்தான போக்கை, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள், பெண்கள், கிராமப்புறத்து இளைஞர்கள் ஆகியோரின் கல்விக் கண்ணைக் குத்தக்கூடிய ஒரு ஆழ்ந்த திட்டத்தை, ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பால், ஆரிய அமைப்பால் திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கக் கூடிய இன்றைய மோடி அரசு, பா.ஜ.க.வினுடைய அரசு எவ்வளவு பெரிய கொடுமையை திட்டமிட்டு நடத்தியிருக்கிறது என்பது இன்னும் நாட்டுக்குத் தெரியவில்லை.
முதல் எச்சரிக்கை மணி
இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதனை திராவிடர் கழகம் அம்பலப்படுத்தவேண்டும் - பாதிக்கப்பட்ட மக்கள் அத்துணை பேருக்கும் எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்று முதல் எச்சரிக்கை மணி அடித்து, எல்லோருக்கும் விழிப்புணர்வை உருவாக்குகின்ற அதற்காகக் கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனக்குப் பணிகள் இருந்து, இந்தப் பொது க்கூட்டத்திற்கு வேறொருவரை அனுப்பலாம் என்று சொன்ன நேரத்தில், இது மிக முக்கியமான பணி என்று சொன்னபொழுது, அன்பு சகோதரர், நாங்கள் உரிமை எடுத்துக்கொண்டு, இன்றைக்கு திராவிடர் இயக்கத்தைக் காப்பாற்றுவதற்கு ஒரு பெரிய போர் வாளாக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன பொதுச்செயலாளர் பாராட்டுதலுக்கும், பெருமிதத்திற்கும் உரிய சகோதரர் வைகோ அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொள்கிற, கலந்துகொள்ள வரவிருக்கின்ற அருமை ஏனைய தோழமைக் கட்சித் தலைவர்களே,
இந்த மழையில் கூட்டம் நடக்குமா? என்று பல பேருக்கு அய்யம். தோழர் பாண்டியன் அவர்களுக்கு உடல்நலக் குறைவின் காரணமாக, பெரியார் திடலுக்கு வந்து என்னிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றார்கள்.
கொட்டும் மழை - கொளுத்தும் வெயில் எதுவாக இருந்தாலும்...
அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இன்றைக்கு இது மிக முக்கியமான ஒரு பணி. கொட்டும் மழை - கொளுத்தும் வெயில் எதுவாக இருந்தாலும், சமுதாய பணி செய்யக்கூடிய நாங்கள், அந்தப் பணியில் எங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கிற அத்துணை இயக்க நண்பர்களும், இதில் அரசியல் இல்லை - இது நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பொறுத்தது - வாழ்வைப் பொறுத்தது - பெற்றோர்களுடைய நலனைப் பொறுத்தது. எனவேதான், இந்த இயக்கமே அதற்காகத்தான் தொடங்கப்பட்டது.
திராவிடர் இயக்கம் என்பது அரசியலுக்குச் சென்றிருக்கிறது என்று சொன்னால், அரசியலுக்காக அல்ல - இதுபோன்ற சூழ்நிலைகளை மாற்றி அமைக்கவேண்டும் என்பதற்காகத்தான் - இந்தப் பணியை செய்வதற்காக சென்றிருக்கிறது.
நோய்நாடி நோய் முதல் நாடக்கூடிய அளவிற்கு...
இன்றைக்கு சுதந்திரம் வந்து 72 ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கு சொல்கிறார்கள். இந்த 72 ஆண்டுகள் சுதந்திரத்தில், ஜாதி, தீண்டாமை எந்த அளவிற்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை நீங்கள் நினைத்துப் பார்த்தால், அதனைப் போக்கவேண்டும் என்ற முயற்சி எடுக்கக்கூடிய தலைவர்கள் ஓரணியில் நின்று, அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் வாழ்நாள் போராட்டமாக நடத்தி அதில் பெரிய அளவிற்கு அவர் வெற்றி கண்டார். ஜாதியினுடைய அஸ்திவாரத்தை மிகப்பெரிய அளவிற்கு கலகலக்கச் செய்திருக்கிறார்.
மேலே இருக்கிற இடிபாடுகள், அர்ச்சகர் போன்ற அந்தப் பிரச்சினைகள் இருக்கின்ற காரணத்தினால்தான், நோய்நாடி நோய் முதல் நாடக்கூடிய அளவிற்கு அவர்கள் அந்தப் பணியை எடுத்துச் செய்தார்கள்.
இட ஒதுக்கீட்டினால் இந்த வாய்ப்புகள் எல்லாம் வந்திருக்கிறது!
அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், எளிமையாக மக்கள் மத்தியில் கேட்டார், தாழ்த்தப்பட்டவரை, என்னுடைய சகோதரரை, எங்கள் இனத்து உழைப்பாளியை நீங்கள் கேவலமாக நடத்தியது மட்டுமல்ல, படிக்கின்ற உரிமையை மறுத்தீர்கள்; படிக்க வைத்தோம். பதவியில் அமரக் கூடாது என்று சொன்னீர்கள்; பதவியில் அமர வைத்தோம். அய்க்கோர்ட் ஜட்ஜாக முடியவில்லையே என்கிற குறை இருந்தது - அதை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், கலைஞர் அவர்களுடைய ஆட்சி என்னுடைய அறிவுரைகேற்ப செய்தது என்றார்.
அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக இன்றைக்கு ஏராளமான ஆதிதிராவிட சமுதாயத் தோழர்கள் இருக்கிறார்கள். நமக்கு ஜாதி முக்கியமல்ல; பங்கேற்பு இருக்கிறது - சமத்துவம் இருக்கிறது- சம வாய்ப்பு இருக்கிறது - இட ஒதுக்கீட்டினால் இந்த வாய்ப்புகள் எல்லாம் வந்திருக்கிறது!
அய்க்கோர்ட் ஜட்ஜாக முடிகிறது;
அர்ச்சகராக முடியவில்லையே, ஏன்?
அப்படிப்பட்ட தந்தை பெரியார் கேட்டார், ஒரு ஆதிதிராவிட சகோதரனால், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். ஆக முடிகிறது; அய்க்கோர்ட் ஜட்ஜாக முடிகிறது; ஆனால், அர்ச்சகராக முடியவில்லையே, ஏன்? ஜாதியினுடைய பிடிப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்; எனவே, அதனைத் தகர்த்து எறியவேண்டாமா? என்றார்.
இன்னுங்கேட்டால், திருப்பதி வெங்கடாசலதி பதியையே அர்ச்சகர்தான் கண்ட்ரோல் செய்கிறார். மோடி அதையும் விட்டு வைக்க விரும்பவில்லை. திருப்பதியையும் தன்வசம் எடுக்கவேண்டும் என்று மோடி முயற்சிக்கிறார் என்று சந்திரபாபு நாயுடு அவர்களின் குற்றச்சாட்டு மிகப்பெரிய அளவில் சமீபத்தில் இருக்கிறது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக
சட்டம் கொண்டு வரவேண்டும்
எனவேதான், இந்த மண்தான் இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய மண். அந்த வகையில், தந்தை பெரியார் சொன்னார், நான் வைக்கத்தில் தொடங்கிய ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் இன்றைக்கு எங்கே வந்திருக்கிறதென்றால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது. காரணம், கோவில் கருவறைக்குள் நுழைய முடியாது என்று சொல்கிறார்கள். இது மனித உரிமை - இது ஆணுக்கும் இருக்கவேண்டும்; பெண்ணுக்கும் இருக்கவேண்டும். அந்த உரிமைகள் வரவேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச்சொல்லி, அந்த உரிமைகளை நிலைநாட்டுவதற்கு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சொன்ன நேரத்தில்தான்,
கலைஞர் சொன்னார், இதற்காக நீங்கள் போராட வேண்டிய அவசியமில்லை. இது உங்கள் ஆட்சி - உங்களுக்காக இந்த சட்டத்தை நான் கொண்டு வருகிறேன் என்று சொல்லி, சட்டத்தைக் கொண்டு வந்தார்.
உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் தோற்றார்கள்;
நாம் வென்றோம்!
வழக்கம்போல பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத் திற்கு ஓடினார்கள். உச்சநீதிமன்றத்தில் அவர்கள் தோற்றார்கள்; நாம் வென்றோம்; திராவிட முன்னேற்றக் கழகம் வென்றது; பெரியார் வென்றார்; கலைஞர் வென்றார்; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகக்கூடிய சட்டம் செல்லும் என்று.
பார்ப்பனர்கள் அதற்கடுத்தபடி என்ன செய்தார்கள் என்றால், நாத்திகர்கள் எல்லாம் அர்ச்சகர் ஆகிவிடுவார்கள்; எனவே, அதற்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று சொன்னார்கள்.
அப்படியா? என்ன செய்யவேண்டும் என்று கேட்டார் கலைஞர்.
ஆகமங்கள் தனித்தனியே இருக்கின்றன; சடங்கு, சம்பிரதாயம் கெட்டுப் போகும் என்றனர் பார்ப்பனர்.
அப்படியா, சரி! ஆகம விதிகளின்படி சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்கட்டும் என்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு இன்னொரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார் கலைஞர் அவர்கள்.
பார்ப்பனர் முதல் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர்
சகோதரர்கள் வரையில்...
ஆகம விதிகள்படி இரண்டு பள்ளிக்கூடங்கள். ஒன்று வைணவ முறைப்படி; இன்னொன்று சைவ முறைப்படி பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி, பார்ப்பனர் முதல் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் சகோதரர்கள் வரையில் 210 பேர் பயிற்சி முடித்து இருக்கிறார்கள்.
ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, பத்தாண்டுகளாக அந்த வழக்கு நடைபெற்று, தி.மு.க. கொண்டுவந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வந்தது.
ஒரு ஆட்சி, அதை செய்யவில்லை. எம்.ஜி.ஆர். உறுதிமொழி கொடுத்து, அதற்குப் பிறகு ஜெயலலிதா சட்டமன்றத்தில் உறுதிமொழி கொடுத்த பிறகும் அதை நிறைவேற்றவில்லை. காரணம் என்ன? அந்த ஜாதியினுடைய பிடிப்பு.
அறிவியல் வளர்ந்திருக்கின்ற காலகட்டத்தில், செவ்வாய்க்கிரகத்திற்குப் போய் மனிதன் இறங்கிவிட்டான். ஆனால், இங்கே இருக்கிற கர்ப்பக் கிரகத்திற்குள் போக முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அதனை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். இதை நாங்கள் சொல்லும் பொழுது, என்ன இந்தப் பிரச்சினையைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று சிலர் நினைக்கலாம்.
அருமை நண்பர்களே, அதற்கு ஒரு சிறிய உதாரணத்தை சொல்லிவிட்டு, அடுத்த செய்திக்கு நான் செல்ல விருக்கிறேன்.
மோடி பல வித்தைகளைக் காட்டுவார்!
நாளைக்கு ஒரு போராட்டம்! என்ன போராட்டம்? மோடி பல வித்தைகளைக் காட்டுவார்; மோடி வித்தை என்ன என்பது ஏற்கெனவே நமக்குத் தெரியும். மற்ற வித்தைகள் எல்லாம் பிரதமர் மோடி வித்தைக்குமுன் நிற்க முடியாது. ஆகவே, அவர் என்ன செய்தார் என்றால், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நாட்டின் குடியரசுத் தலைவராகக் கொண்டு வந்திருக்கிறோம் பாருங்கள் என்று. அதற்காக பொம்மை ஆட்களைப் பிடிப்பார்கள். அதற்குமுன் அவர் யார் என்று யாருக்குமே தெரியாது. ராம்நாத் கோவிந்த் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவரானார்.
அர்த்தமுள்ள இந்து மதத்தின் யோக்கியதை!
இவர், பா.ஜ.க. ஆளுகின்ற ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் மாவட்டத்திலுள்ள புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கே இவரை அனுமதிக்கவில்லை. என்ன காரணம் என்றால், தாழ்த்தப்பட்டவரை இந்தக் கோவிலுக்குள் அனுமதிக்கமாட்டோம் என்றார்கள். இவர் குடியரசுத் தலைவர் என்றார்கள்; எந்தத் தலைவராக இருந்தால் எங்களுக்கு என்ன? இந்து மதம், அர்த்தமுள்ள இந்து மதத்தினுடைய ஆதிக்கம் இதுதான். ஆகவே, அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று சொன்னார்கள்.
வேறு வழியில்லாமல் குடியரசுத் தலைவர் என்ன செய்தார் தெரியுமா? சரி பரவாயில்லை, படிக்கட்டுகளில் அமர்ந்து நான் கடவுளை வணங்கிவிட்டுப் போகிறேன் என்று, படிக்கட்டில் அமர்ந்துவிட்டு வந்தார்.
முப்படைக்கும் தலைவரான குடியரசுத்
தலைவருக்கு நேர்ந்த அவமானம்!
2018 ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசுத் தலைவராக உள்ள ஒருவர் - இவருடைய பதவிக்கு மேல், உயர் பதவியே கிடையாது என்ற நிலை. இவர்தான் முப்படைக்கும் (தரைப்படை - வான்படை - கப்பற்படை) சுப்ரீம் கமாண்டர் குடியரசுத் தலைவர்தான் - அரசியல் சட்டப்படி. இந்த மூன்று படைகளும் இவருடைய உத்தரவுப்படிதான் நடக்கவேண்டும். எந்த நாட்டின்மீது வேண்டுமானாலும் படையெடுக்கச் சொல்லும் அதிகாரம் படைத்தவர். ஆனால், இவ்வளவு படைகள் இருந்தாலும், பூணூல் படைக்கு முன் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்பொழுது புரிகிறதா நண்பர்களே, ஜாதி - தீண்டாமை - வருணாசிரம தர்மம் - மனுதர்மம் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அதற்காகத்தான் நாளைக்கு தமிழகமெங்கும் போராட்டம் நடைபெறவிருக்கிறது.
இந்த செய்தியையே மறைத்துவிட்டார்கள். அதையும் மீறி இந்த செய்தி வெளியில் வந்தவுடன், மிக சாமர்த்தியமாக அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கிறார்கள். குடியரசுத் தலைவர் மனைவிக்கு மூட்டு வலி. அதனால் படிக்கட்டுகளிலேயே அமர்ந்து பூஜை செய்துவிட்டு வந்தார்கள் என்று ஒரு சமாதானத்தை சொல்கிறார்கள். கோவிலுக்குள் விடாமல் அவமானப்படுத்தினார்களே, அதைவிட கொடுமையானது இவர்கள் சொல்கின்ற விளக்கம்.
சரி, அந்தம்மா மூட்டு வலி காரணமாக கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நன்றாகத்தானே நடக்கிறார், இவர் ஏன் படிக்கட்டுகளில் அமர்ந்து பூஜை செய்தார்.
ஆர்ப்பாட்டம் ஏன்?
ஆகவேதான், நாம் ஒருபக்கம் படி, படி என்று சொல்கிறோம். இன்னொரு பக்கம் அவர் எனக்கு இருப்பது படி, படிதான் அதற்குமேல் ஏறி வர முடியாது என்கிற நிலைக்கு ஆக்கி விட்டார். இதையெல்லாம் எதிர்த்துத்தான் நாளைக்கு (7.6.2018) ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
இப்பொழுது குருகுலக் கல்வியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இங்கே வெளியிடப்பட்ட புத்தகத்தினுடைய அட்டையைப் பார்த்தாலே உங்களுக்குத் தெளிவாக விளங்கும்படியான விளக்கங்கள் இருக்கின்றன.
குருகுலக் கல்வி என்றால் என்ன? வீட்டுத் தொழுவத்தில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அமர்ந்திருக்கவேண்டும். ஞானாசிரியராக இருக்கின்ற பார்ப்பனர் வேதத்தை சொல்லிக்கொடுக்க அவருக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது அவர் அழைப்பார். இதுதான் குருகுலக் கல்வி. இதுதான் வேதக் கல்வி.
அவர் வாயால் சொல்வார்; அதனை இவர்கள் திருப்பிச் சொல்லவேண்டும். உபாத்தியாயர் என்கிற வார்த்தைக்குப் பொருள் என்னவென்றால், அத்தியாயனம் என்றால் சொல்வது; உபாத்தியாயர் என்றால், அவர் சொல்வதை திரும்பச் சொல்வது. இதிலிருந்துதான் வாத்தியார் என்ற சொல் வந்தது.
அரசர்களாக இருந்தாலும்,
படிப்பதற்குத் தகுதி கிடையாது
குருகுலக் கல்வியைத்தான் அறிவு என்று சொல்லி வைத்திருந்தான். அதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. மற்றவர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கக் கூடாது; கல்வியைக் கொடுக்கக் கூடாது. மனுதர்மம் நடைமுறையில் இருந்ததினால்தான், ராஜாக்கள்கூட படிக்காதவர்களாக இருந்தார்கள். அவர்கள் அரசர்களாக இருந்தாலும், படிப்பதற்குத் தகுதி கிடையாது அவர்களுக்கு.
அப்படிப்பட்ட ஒரு கல்வி முறையை மீண்டும் மோடி அரசு இங்கே கல்வித் திட்டமாகக் கொண்டுவருவதற்கு ஏற்பாடு செய்து - வேகமாக அவர்கள் வேலை செய்கிறார்கள்.
இதோ என்னுடைய கைகளில் இருப்பது பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான ஆர்கனைசர் ஆகும். மே மாதம் வெளிவந்த இந்தப் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.. என்று சொன்னால், அது ரகசிய இயக்கம். அவர்கள் கூட்டம் போடுவது ரகசியமாக இருக்கும். ஊர்வலம் ஒன்றைத்தான் வெளியில் காட்டுவார்கள்.
உஜ்ஜயினியில் ஒரு மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள். இந்தத் தகவல்கள் எல்லாம் பத்திரிகைகளில் முதலில் வெளிவரவில்லை. நாம்தான் அதனை வெளியிட்டோம்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான மோகன் பகவத் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் மடாதிபதிகள், மற்றவர்களும் கலந்துகொண்டனர்.
அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன தெரியுமா?
நாம் மீண்டும் பழைய குருகுலக் கல்வியை உருவாக்கி, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அத்தீர்மானம்.
ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறதோ,
அதைத்தான் மோடி செய்வார்
இந்த மாநாடு முடிந்து ஊருக்குச் சென்றதும், அந்தத் திட்டத்தை விரைவாக மேற்கொள்ள வேண்டும். என்று தொண்டர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறதோ, அதைத்தான் மோடி செய்வார். ஆர்.எஸ்.எஸ். கல்வித் திட்டம் என்னவென்று சொன்னால், முழுவதும் வேத கணித பாடம், சமஸ்கிருதம்தான். நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் என்னாவது? என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள்.
இந்தச் செய்தியை நாங்கள் வெளிக் கொணர்ந்து, அது மக்களிடம் போய்ச் சேருவதற்குள், அவர்கள் வேக வேகமாக திட்டத்தைப் போட்டு, ஒரு சுற்றறிக்கையை அனுப்பி விட்டார்கள். இந்தத் தகவல் பலருக்குத் தெரியாது. ஏற்கெனவே கல்வித் திட்டத்தை சமஸ்கிருதத்தைத் திணிக்கிறார்கள் என்றவுடன், நம்முடைய எதிர்ப்பைக் காட்டினோம்.
உஜ்ஜயினியில் பார்ப்பனர்கள்
நடத்திய மாநாடு
குருகுலம் என்ற பெயரில் வீட்டிலோ, வேறு தனி இடத்திலோ சிறுவயதிலேயே,
1. வேத அத்யாயனம் (வேதம் கற்றல்)
2. பாரதீய தரிசனம் (இந்தியச் சிந்தனை)
3. சமஸ்கிருத வியாகரணம் (சமஸ்கிருத இலக்கணம்)
4. சமஸ்கிருத சாகித்திய (சமஸ்கிருத பாடப் புலமை)
5. சமஸ்கிருத மொழி (புலமை) கற்றல்
இந்த 5 பாடங்களில் கற்று தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று அந்த மாணவரே தானே சான்றிதழ் எழுத்துமூலம் கொடுப்பதை வைத்துக்கொண்டு, உடனடியாக நேரே 10 ஆம் (X Standard) வகுப்பில் சேரலாம் (பழைய கால Private Study என்பது போன்றது) பிறகு 11, 12 வகுப்பினை முடித்துவிடலாம்.
மேலே காட்டிய 5 பாடங்களில் வெற்றி பெறுவதற்கு வெறும் 33 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றாலே போதுமானது.
10 ஆம் வகுப்பிற்கு முன்னர் முறையாக பல வகுப்புகளில் 6, 7, 8, 9 வகுப்புகளில் - மாணவர்கள் படிக்கும் பல்வேறு பாடங்களான அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல் போன்றவைகள் ஏதும் படிக்கத் தேவையில்லை. குருகுலத்தில் கணிதம் ஏதாவது சொல்லிக் கொடுப்பதோ, கற்கப்படுவதாகவோ இருப்பின், அது வேதக் கணிதமாம்! (Vedic Mathematics).
மேற்கண்ட சமஸ்கிருதக் கல்வி பயிற்சி பெற்றிட குருகுலக் கல்விக் கூடங்களில் மட்டும்தான் சாத்தியப் படும்.
சமஸ்கிருத பாரதி
கல்வியை சமஸ்கிருத மயம், வேத மயம் ஆக்கிவரும், பெரிதும் சமஸ்கிருதத்தைப் பரப்பிடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் இயக்கப்படும் சமஸ்கிருத பாரதி பள்ளிக் கூடங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் மானிய உதவி (Grant) மக்கள் வரிப் பணத்தில் திருப்பி விட்டுப் பயன் பெறச் செய்யவும், பார்ப்பன சமஸ்கிருத பண்டிதர்களுக்கு ஆசிரியர் வேலை வாய்ப்பைப் பெருக்கும் மிகப்பெரிய சூழ்ச்சித் திட்டமே இது!
சமஸ்கிருதப் பல்கலைக் கழகத்தை
உருவாக்கவேண்டும் என்ற திட்டத்தை,
ரகசியமாக வைத்திருக்கிறார்கள்!
முன்பு இந்தியைத் திணித்து, இந்திப் பண்டிதர்கள் வேண்டும் என்று சொன்னார்கள். அதேபோன்று பார்ப்பனர்கள்தான் சமஸ்கிருத பண்டிதர்கள். புதிதாக இப்பொழுது சமஸ்கிருத கல்லூரியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில், தமிழ்ப் பல்கலைக் கழகத்தை வைப்பதைவிட, சமஸ் கிருதப் பல்கலைக் கழகத்தை உருவாக்கவேண்டும் என்ற திட்டத்தை, ரகசியமாக வைத்திருக்கிறார்கள். உயர்கல்வித் துறையிலிருந்து எனக்கு இந்தச் செய்தி இன்றைக்குக் கிடைத்திருக்கிறது. மீண்டும் மனுதர்மம் வருகிறது.
சமஸ்கிருதம்தான் எல்லாமும் என்று சொல்லக் கூடிய, அந்தக் கலாச்சாரத்தைப் பேணக்கூடியவர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு நாங்கள் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
ராஜாராம் மோகன்ராய்!
இந்தியாவில் முதன்முதலில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை உண்டாக்குவதற்கு, பெண்களை உயிரோடு எரிப்பதைத் தடுப்பதற்கு முதல் முயற்சி எடுத்த மாமனிதர் அவரே ஒரு பார்ப்பனர்தான் - அவர்தான் வங்காளத்தைச் சேர்ந்த ராஜாராம் மோகன்ராய் அவர்கள்.
அவருடைய காலத்தில் வெள்ளைக்காரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்களுடைய ஆதிக்கத்தைப் பலப்படுத்தவேண்டும் என்பதற்காக மிகச் சாமர்த்தியமாக சமஸ்கிருதத்தை சொல்லிக் கொடுத்தால், பார்ப்பனர்கள் எதிர்ப்புக் காட்ட மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு, அவர்களைத் தன்வயப்படுத்துவதற்காக இதனை செய்தபொழுது, முதல் எதிர்ப்புக் குரல், சமஸ்கிருதத்தைப் படிக்க வைக்காதே! புராணங்களில் ஒன்றும் கிடையாது என்று எதிர்ப்புக் கொடுத்தவர், ராஜாராம் மோகன்ராய் அவர்கள்தான். இவர் வைஸ்ராய்க்கு எழுதிய கடிதம் இன்னமும் இருக்கிறது.
அறிவியல் மனப்பான்மையை அது கொன்றுவிடும் - அது வெறும் நம்பிக்கைதான் என்றார்.
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
இதுதான் திருவள்ளுவருடைய முறையாகும்.
புத்தருடைய முறை என்னவென்று தெரியுமா?
முன்னோர்கள் நடந்தார்கள் என்பதற்காக அதேபோன்று நீ நடக்கவேண்டும் என்று நடக்காதே!
முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக, நீ சிந்திக்காமல் அதனை ஏற்காதே!
முன்னோர்கள் எழுதினார்கள் என்பதற்காக அதை அப்படியே ஏற்காதே நீ!
உன்னுடைய அறிவு என்ன சொல்கிறது என்பதைப் பார்! என்றார்.
அதை அப்படியே 20 ஆம் நூற்றாண்டில் சொன்னவர் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
யார் சொல்வதையும் கேட்காதீர்கள்; நம்பாதீர்கள். உன்னுடைய அறிவு என்ன சொல்கிறதோ அதைப் பாருங்கள் என்றார்.
நான் சொல்வதையும் நம்பாதே! உன்னுடைய
அறிவு என்ன சொல்கிறதோ, அதனை நம்பு!
குடியாத்தம் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்களுக்கு வரவேற்புரை அளித்தபொழுது, அங்கே அய்யா உரையாற்றினார்.
நீங்கள் உங்கள் அறிவைப் பயன்படுத்த வேண்டும். யார் சொல்வதையும் நம்பவேண்டும் என்பதில்லை. நாடு நாசமாகப் போனதற்கே அதுதான் காரணம் என்று அய்யா ஆரம்பித்து, இளைஞர்களே நம்புங்கள்! என்று தொடங்கி, பரமாத்மா சொன்னார், ஜீவாத்மா சொன்னார், பகவான் சொன்னார், இறைவன் சொன்னார் என்று யார் சொன்னாலும் நம்பாதீர்கள் என்று சொன்னார்.
கூட்டத்திலிருந்து எழுந்த ஒரு இளைஞர், யார் சொல்வதையும் நம்பவேண்டாம் என்று சொல்கிறீர்களே அய்யா, நீங்கள் சொல்வதை நம்புவதா? வேண்டாமா? என்று கேட்டார்.
உடனே அய்யா அவர்கள் ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல், நான் சொல்வதையும் நம்பாதே! உன்னுடைய அறிவு என்ன சொல்கிறதோ, அதனை நம்பு! என்றார்.
இப்படி அறிவுக்கு சுதந்திரம் கொடுத்த நாட்டில், அதற்கு நேர் எதிராக அறிவுக்குச் சுதந்திரம் கொடுக்காதே, நம்பு! நம்பு!! ஏனென்று கேட்டால், உனக்கு நரகத்தில் தண்டனை கிடைக்கும். ஆகவே, நம்பு! நம்பு!! என்கிறார்கள்.
எது ஆரியம்? எது திராவிடம்?
திராவிடம் என்றால் என்ன? என்று நிறைய பேர் இப்பொழுது ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். திராவிடமா? தமிழா? தமிழ்த் தேசியமா?திராவிடமா? என்று.
பார்ப்பானா? தமிழனா? என்று ரத்தப் பரி சோதனை வைத்துப் பார்க்கவில்லை. கலந்து போய் நீண்ட நாள்களாகின்றன என்பது உங்களுக்கும் தெரியும், எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதே நேரத்தில் இரண்டு பண்பாடுகள், அடிப்படையிலே இரண்டு பண்பாடுகள். எது ஆரியம்? எது திராவிடம்? என்றால், இதற்காகப் பெரிய ஆராய்ச்சி செய்து, விவாதம் செய்யவேண்டிய அவசியம் இல்லை.
ஆரியம் என்றால் என்ன?
கண்ணை மூடிக்கொண்டு நம்பு என்று சொல்வது ஆரியம்.
திராவிடம் என்றால் என்ன?
நம்பாதே, உன்னுடைய அறிவு என்ன சொல்கிறது என்பதைக் கேள் என்று சொல்வது திராவிடம்.
திருவள்ளுவர் இதைத்தானே சொன்னார்; புத்தர் இதைத்தானே சொன்னார்; பெரியாரும் இதைத்தானே சொன்னார்.
திராவிடம் என்பதற்கு ஒரு எல்லைக்கோடு கிடையாது!
எனவே, திராவிடம் என்பது இந்தியா முழுவதும் இருந்திருக்கிறது. திராவிடம் என்பதற்கு ஒரு எல்லைக்கோடு கிடையாது. திராவிடம் என்பது ஒரு தத்துவம். திராவிடம் என்பது ஒரு ஆய்வு செய்து கண்டுபிடிக்கின்ற விஷயம் அல்ல.
எல்லோரும் சமம் என்றால், அது திராவிடம்!
தொடக்கூடாதவன், உயர்ந்தவன் - தாழ்ந்தவன், எட்டி நில் என்றால், அது ஆரியம்!
வேதம் என்றால், அறிவு என்று அந்தக் காலத்தில் வைத்திருந்தார்கள்.
அந்தக் காலத்தில் புத்தகங்கள் கிடையாது. நல்ல வாய்ப்பாக வெள்ளைக்காரர்கள்தான் பிரிண்டிங்கைக் கண்டுபிடித்தார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களால் ஒரு பயலுக்காவது அச்சாபீஸ் தெரியுமா? எழுத்து தெரியுமா? எழுத்துத் தெரியாததினால்தானே, அவர்கள் வாயால் சொன்னார்கள். அப்படி சொல்லும்பொழுது, அவர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லலாமே! அந்த முறையில் இருந்ததுதான் அத்தியாயனம். அத்தியாயனம் என்றால் வரைப்படுத்துவது.
சமஸ்கிருதம் நமக்குப் புரிவதில்லை. இன்னமும் நம்முடைய ஆட்கள், அவருடைய இல்லங்களில் பார்ப்பனரைக் கொண்டு வந்து திருமணங்களை நடத்துகிறார்கள்.
அவர்கள் புரியாத மொழியில் மந்திரங்களை சொல்லுகிறான். புதுப்பணக்காரனான நம்மாள், சாமி, மந்திரங்களை நன்றாகச் சொல்லுங்கள் என்று.
மந்திரத்திற்கு என்ன பொருள் தெரியுமா?
பெரியார்தான் கேட்டார், திருமண விழாக்களில் பார்ப்பனர்கள் சொல்லுகின்ற மந்திரத்திற்கு என்ன பொருள் தெரியுமா? என்று.
சோமஹ ப்ரதமோ
விவேத கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.
நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.
அதவாது மணமகள் ஏற்கெனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.
இந்த மந்திரத்தைத் தமிழில் சொன்னால், மந்திரம் சொன்னவர் வெளியில் போக முடியுமா? சமஸ்கிருதம் புரியாததினால், அதனை இப்பொழுது திணிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இங்கே உரையாற்றிய குமாரதேவன் ஒரு கேள்வியை கேட்டாரே, அது நியாயமான கேள்வி!
இப்பொழுது சமஸ்கிருதத்தைத் திணிக்கிறார்களே, எந்தப் பார்ப்பானாவது வீட்டில் சமஸ்கிருத மொழியில் பேசுகிறார்களா? என்று.
சங்கராச்சாரி வேண்டுமானால், சமஸ்கிருத மொழியில் பேசுவார். அவருக்கும், அவருடைய சீடருக்கும் தெரியும். சமஸ்கிருத மொழியில் மந்திரத்தை தவறாக சொன்னால்கூட யாருக்காவது புரியுமா?
நாவலர் சோமசுந்தர பாரதியார்
ஒருமுறை நாவலர் சோமசுந்தர பாரதியார் வைதீகத் திருமணத்தில் கலந்துகொண்டார்.
அந்த திருமணத்தை நடத்தி வைப்பதற்கு, ஒரு குட்டிப் புரோகிதர் வந்திருந்தார். சடங்கு சம்பிரதாயத்தை செய்துவிட்டு, தீ வளர்த்து, சுற்றி வாருங்கள், சப்தி என்றான், மந்திரத்தை சொல்லிக்கொண்டே!
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சோமசுந்தர பாரதியார், ஏ, நிறுத்து! என்று சொன்னார்.
ஆனால், அந்த குட்டிப் புரோகிதன், மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருந்தான்.
உடனே எழுந்து போய், அந்தக் குட்டிப் புரோகிதன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.
இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், அண்ணா எழுதிய ஆரிய மாயை புத்தகத்தில் கடைசியாக இந்த நிகழ்வை பதிவு செய்திருப்பதைப் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
உடனே அங்கே கூடியிருந்தவர்கள் சோமசுந்தர பாரதியாரைப் பார்த்து, ஏங்க, உங்களுக்கு அவர் சொல்கிற மந்திரம் பிடிக்கவில்லை என்றால், இப்படி நடந்துகொள்ளலாமா? இது நாகரிகமானதா? என்றெல்லாம் சொன்னார்கள்.
பொறுங்கள், பொறுங்கள்! நீங்கள் எல்லோரும் என்மேல் கோபமாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. நடந்தது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? நான் இப்பொழுது சொல்கிறேன். இங்கே இருக்கிற உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியாது. எனக்கு சமஸ்கிருதம் தெரியும். அவன் மந்திரம் சொன்னானே, அது என்ன மந்திரம் என்று உங்களுக்குத் தெரியுமா? அந்த மந்திரம் கருமாதி மந்திரமாகும் என்றார்.
அப்படியா என்று சொன்ன சிலர், அந்தக் குட்டிப் பார்ப்பானுக்கு இரண்டு அறை விட்டார்கள்.
உடனே அந்தக் குட்டிப் பார்ப்பான், அய்யா நிறுத்துங்கள்! என்னை அடிக்காதீர்கள். உண்மை என்னவென்றால், எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. என்னுடைய தகப்பனார், இரண்டு மந்திரங்களை சின்ன வயதில் சொல்லிக் கொடுத்தார். அதை நான் மாற்றி மாற்றி சொல்கிறேன். இதுவரையில் யாரும் நானும் அப்படியே செய்கிறேன். இனிமேல் நான் இப்படி செய்யமாட்டேன் என்றான்.
சமஸ்கிருதம் புரியாத மொழி என்கிற காரணத்தினால் நம்பு என்கிறார்கள். இதனால்தான் அவர்கள் வேத வாக்கு என்கிறார்கள்.
இங்கே ஆட்சி செய்பவர்களோ, எதற்கெடுத் தாலும் தலையாட்டுகிறார்கள் - பூம் பூம் மாடு போன்று. நான் அவர்களை மாடு என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். ஏனென்றால், எங்கள் சகோதரர்கள் அவர்கள். அந்த மாட்டிற்குக்கூட சில நேரங்களில் சுயமரியாதை வந்து முட்ட ஆரம்பிக்கிறது. எப்படியென்றால், மாட்டிடம் சென்று ஏதாவது வம்பு செய்தால், அந்த மாட்டிற்குக் கொம்பு இருக்கிறதோ, இல்லையோ அது முட்டுவதற்கு வரும்- அதைப் பார்த்து பயந்துவிடுவார்கள்.
நீங்கள் எல்லாம் கைதட்டுகிறீர்கள்; எங்களுக்கு ரத்தக் கண்ணீர் வடிகிறது!
ஆனால், இங்கே நடைபெறுகின்ற ஆட்சி இருக்கிறதே, எதுவுமே செய்யாது. அதற்குமுன் மாடுகள் எல்லாம் கருப்பைக் கண்டுதான் பயப்படும். ஆனால், இந்த மாடுகள் இருக்கிறதே, காவியை கண்டால், அணைத்துப் பிடிக்கிறார்கள். இது எவ்வளவு கேவலமானது, வேதனையானது. நீங்கள் எல்லாம் கைதட்டுகிறீர்கள்; எங்களுக்கு ரத்தக் கண்ணீர் வடிகிறது.
எங்களை விட்டால் இதை யார் சொல்வார்கள் - எத்தனை பேருக்கு இந்தத் துணிச்சல் வரும்?
தி.மு.க. ஆட்சிக்கு வராமல் தடுக்கவேண்டும் என்று பல சூழ்ச்சிகளை செய்கிறார்கள். எனவேதான், ஒரு பெரிய ஆபத்து வரவிருக்கிறது.
தி இந்து ஆங்கில நாளிதழில் (18.5.2018) ஒரு செய்தி வெளிவந்தது. அந்த செய்தியை நாங்கள் எடுத்து நாடு முழுவதும் பரப்புகின்றோம். நாங்கள் தவறாகப் பரப்பினால் எங்கள்மீது வழக்குப் போடு. அதனை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் என்ன முன் ஜாமீன் கேட்கிறவர்களா?
சகோதரர் வைகோமீது கோபப்பட்டு, அவரிடம் சொன்னேன், எங்கோ ஒருவர் தேவையில்லாமல் ஒரு வழக்கைப் போட்டார். அவர் சந்திக்காத வழக்கே கிடையாது; அவர் போகாத சிறைச்சாலையே கிடையாது. நிறைய அவர் அனுபவித்திருக்கிறார். அதைக் கண்டு கலைஞர் கலங்கியிருக்கிறார்; நாங்களும் கலங்கியிருக்கிறோம். எல்லோருமே கலங்கியிருக்கிறோம்.
திடீரென்று எங்கோ ஒரு நீதிமன்றத்தில் வைகோ, வைகோ என்று மூன்று தடவை அழைத்திருக்கிறார்கள். இவருக்கே தெரியாது அது. அதை செய்தியில் பார்த்தவுடன், நான் இருக்கிறேன் என்று சிறைச்சாலைக்குள் போய் உட்கார்ந்துவிட்டார்.
நாங்கள் முன்ஜாமீன்
கேட்பவர்கள் அல்ல!
நான் கேட்டேன், நாமெல்லாம் வழக்குரை ஞர்களாக இருக்கிறோம். ஏன் தேவையில்லாமல் சிறைச்சாலைக்குள் போய் உட்காரவேண்டும், நேரத்தை வீணாக்கவேண்டும் என்றேன். தேவை என்றால், சிறைச்சாலைக்குப் போவோம். அதிலொன்றும் சந்தேகம் இல்லை. நாங்கள் ஒன்றும் முன்ஜாமீன் கேட்பவர்கள் அல்ல; காவல்துறையினரின் தயவால் இருக்கக்கூடியவர்கள் அல்ல.
சிறைச்சாலை எங்களை என்ன செய்யும்?
மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை
எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை
இந்தப் பாடம் பெரியாருடைய பள்ளிக்கூடத்தில் படித்த பாடமாகும்.
ஆகவேதான், இந்த அளவிற்கு இன்றைக்கு இந்தக் கொடுமைகள் நடந்திருக்கின்றன. நீட் தேர்வில் நாளுக்கு நாள் பலி. நேற்று ஒரு இளந்தளிர் பிரதீபா தற்கொலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.
நீட்டை ஒழிப்பது முக்கியமா? அதைவிட ஆபத்தான குருகுலக் கல்வியை தடுப்பது முக்கியமா? என்றால், எத்தனை களங்கள்? எத்தனை போராட்டங்கள்? காவிரி பிரச்சினையா? அதற்காகப் போராடவேண்டும்.
நம் தலைவர்கள் சந்தித்த எதிரிகள்
நாணயமான எதிரிகள்!
இன்னுங்கேட்டால், எங்களுக்கு முன் இருந்த தலைவர்கள் பெரியார், காமராசர், அண்ணா போன்ற தலைவர்கள் காலத்திற்கும், இன்றைக்கும் என்ன வேறுபாடு என்றால், அவர்கள் சந்தித்த எதிரிகள் நாணயமான எதிரிகள். அதனால், அதை ஒரு முறையாக அவர்கள் சந்தித்தார்கள்.
ஆனால், இன்றைக்கு நாம் சந்திக்கின்ற எதிரிகள் இருக்கிறார்களே, கொஞ்சம்கூட நாணயம் இல்லாதவர்கள்.
ஆனால், நீங்கள் எத்தனை வித்தைகள் செய் தாலும், அத்தனை வித்தைகளையும் கருவறுக்கக்கூடிய அந்த உணர்வினை, எங்கள் தலைவர்கள், எங்கள் ரத்த நாளங்களிலே வைத்திருக்கிறார்கள்.
எனவே நண்பர்களே! இந்தத் தகவல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
இன்றைய விடுதலையில் நீட்டைப்பற்றி எழுதிய அறிக்கையை ஒரு துண்டறிக்கையாகப் போட்டு மக்களிடம் பரப்பவேண்டும் என்று நண்பர் வைகோ அவர்கள் சொன்னார்.
நாங்கள் எல்லாம் சமுதாயத்திற்காக
வாதாடக் கூடியவர்கள்
இது எங்களுக்காக அல்ல நண்பர்களே! உங்களுக்காகத்தான்! வைகோ அவர்கள் வழக்குரைஞ ராக பிராக்டீஸ் செய்தால், நன்றாக சம்பாதித்திருப்பார். அவர் செலவில் அல்லவா நீதிமன்றங்களுக்குச் சென்று வாதாடுகிறார். நாங்கள் எல்லாம் சமுதாயத்திற்காக வாதாடக் கூடியவர்கள்.
எனவேதான், எங்களுக்கு வருமானம் முக்கிய மல்ல நண்பர்களே! தன்மானம்தான் முக்கியம்.
வருமானமா? தன்மானமா? என்று பார்க்கும் பொழுது, தன்மானம் முக்கியம்.
தன்மானமா? இனமானமா? என்று பார்க்கும் பொழுது இனமானம்தான் முக்கியம்.
எனவே, தோழர்களே, நீங்கள் எந்தக் கட்சியினராக வேண்டுமானாலும் இருங்கள்; அரசியலுக்காக அல்ல நண்பர்களே, தயவு செய்து அடுத்த தேர்தலைப்பற்றி நினைப்பதைவிட, அடுத்தத் தலைமுறையைப்பற்றி நினையுங்கள்! ஆனால், அடுத்த தலைமுறையினர் சரியாக வரவேண்டுமானால், அடுத்த தேர்தலும் சரியாக அமையவேண்டும், இன்றைய காலகட்டத்தில். இதைத் தான் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டிய ஒரு செய்தி.
நிச்சயமாக கூட்டத்தில் பங்கேற்பேன்
என்றார் சகோதரர் வைகோ!
எனவேதான், இந்த அறிவுறுத்துகிற கூட்டம், தாணா தெருவில் இன்றைக்குத் தொடங்கியிருக்கிறது. வழக்கம்போல இடையூறு இருக்கும்; அந்த இடையூறுகள் வந்தது. மதியம் கடுமையான மழை பெய்தது. நம்முடைய தோழர்களான பொறுப் பாளர்கள்கூட என்னிடம் கேட்டார்கள், மழை வருகிறதே என்று. சகோதரர் வைகோ அவர்களிடம் நான் கேட்டேன், நிச்சயமாக கூட்டத்தில் பங்கேற்பேன் என்று அவர் சொன்னது எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது.
ஆகவே, தாணா தெரு என்பது வரலாறு படைக் கின்ற இடமாகும். அதற்காகத்தான் இங்கே தொடங்கியிருக்கிறோம். இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய மிகப்பெரிய அளவிற்கு உணர்வுகள் இங்கே இருக்கின்றன. கூட்டம் முடிந்து திரும்பும்பொழுது ஒவ்வொருவரும் இந்த உணர்வோடு திரும்புங்கள்.
என்னுடைய உடலில் கத்தி படாத இடமே கிடையாது!
எனக்கு அய்ந்து முறை இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று இருக்கிறது. என்னுடைய உடலில் கத்தி படாத இடமே கிடையாது. யாரும் குத்தவில்லை, அந்தக் கத்தித்தான் என் உடலில் படவில்லை. அது எப்பொழுது படும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.
ஒரு மனிதன் நோயினால் சாகக்கூடாது; விபத்தினால் எத்தனை பேர் இறந்து போகிறார்கள். கோவிலுக்குச் சென்றுவிட்டு வருபவர்கள், திடீரென்று வாகனம் பாலத்தின்மீது மோதி இறந்து போகிறார்கள். பகவான் கைவிட்டுவிட்டான். ஆனால், மீண்டும் அதை மறந்து பலர் கோவிலுக்குப் போகிறார்கள்.
திருப்பதி வெங்கடாசலபதியினை நினைப்பதற்குப் பதில்...
கோவிலுக்குப் போய் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறீர்களே, அந்தக் கடவுளை - விசா வாங்காமல், பாஸ்போர்ட் வாங்காமல் சென்ற கடவுள்களை எல்லாம் வெளிநாட்டிலிருந்து கொண்டு வருவதே நம்மாள்தான். அய்.ஜி. பொன்மாணிக்கவேல் அவருடைய கைகளில்தான் இருக்கிறது.
கடவுளை மற - மனிதனை நினை!
திருப்பதி வெங்கடாசலபதியினை நினைப்பதற்குப் பதில், அய்.ஜி. பொன்மாணிக்கவேலை நினை!
ஏனென்றால், சிலை தடுப்புப் பிரிவு என்று ஒரு பிரிவையே காவல்துறையில் வைத்திருக்கிறார்கள். அவர்கள்தான் வெளிநாடுகளுக்குக் கடத்திச் சென்ற கடவுள் சிலைகளை மீட்டு வந்து கோவிலுக்குள்ளேயே வைக்கிறார்கள்.
பக்திக்காக அல்ல நண்பர்களே, புத்திக்காக தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார்.
இந்த சமுதாயத்திலுள்ள மக்கள் கல்வியைப் பெறவேண்டும். நம் தமிழ்நாட்டில் நிறைய மருத்துவக் கல்லூரிகள், நிறைய பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இன்றைக்கு முத்தன் மகன் முனியன், சுப்பன் மகன் குப்பன் எல்லாம் அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்கிறார்கள்; சுவிட்சர்லாந்தில் இருக்கிறார்கள் என்கிறார்கள். அதற்குமுன் அமெரிக்கா எங்கே இருக்கிறது என்றே தெரியாது. ஆனால், இன்றைக்கு அவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
முதல் போர்ச்சங்கு ஊதுகின்ற
கூட்டம்தான் இந்தக் கூட்டம்!
இதெல்லாம் எப்படி முடிந்தது? படிப்பு பெருகியதினால்தானே! குலக்கல்வித் திட்டம் ஒழிந்ததினால்தானே - எங்கே பார்த்தாலும் கல்லூரிகள் - எங்கே பார்த்தாலும் மருத்துவக் கல்லூரிகள் - காமராசர் ஆட்சிக் காலத்தில், கலைஞர் ஆட்சிக்காலத்தில்.
இவை அத்தனையையும் தலைகீழாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நண்பர்களே, குருகுலக் கல்வித் திட்டம். இதனைத் தடுக்கவேண்டும். அதற்கு முதல் போர்ச்சங்கு ஊதுகின்ற கூட்டம்தான் இந்தக் கூட்டம் என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கிறேன்.
அடுத்து நம்முடைய சகோதரர் வைகோ அவர்கள் மிகத்தெளிவாக இதைப்பற்றி உரையாற்றுவார்.
நீங்கள் கவனத்துடன் இதைப் பயன்படுத்த வேண்டும். இது முக்கியம் என்று கூறி, உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
இது முடிவல்ல - தொடக்கம்!
நீங்கள் ஒவ்வொருவரும், பத்து பேரிடம் இந்த ஆபத்தைப்பற்றி சொல்லுங்கள். இது முடிவல்ல - தொடக்கம்! என்று சொல்லி என்னுரையை முடிக்கிறேன்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
கும்பகோணம் ஜூலை 8
திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர்
திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டுக்கான கூடுதல் குழுக்கள் சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:
ஊர்வல முழக்கம்
கோவை சிற்றரசு, வன்னிப்பட்டு தமிழ்ச்செல்வம், ஓசூர் வனவேந்தன், தருமபுரி கிருட்டிணமூர்த்தி, வழக்குரைஞர் சிங்காரவேலு, நீடாமங்கலம் வீரத்தமிழன், மாங்காடு மணியரசன், வடலூர் திராவிடன்.
ஊர்வல முறைபடுத்துதல் குழு
தன்மானி (நாகூர்), பெரியார் செல்வன் (தஞ்சை), பொய்யாமொழி (தஞ்சை), சகாதேவன் (மத்தூர்), வீரமணி (ஊற்றங்கரை), பரசுராமன் (குன்றத்தூர்).
மேடை நிருவாகக்குழு
மோகன் (கபிஸ்தலம்), நெல்லுப்பட்டு இராமலிங்கம், இந்திரா (தஞ்சை), இ.பொ.பகுத்தறிவு (தஞ்சை).
நிதிக்குழு
தஞ்சை சவுந்தரராஜன், புலவர் மோகன்தாஸ், லெனின் பாஸ்கர், ஏ.மனோகரன் (குடந்தை), வே.இளங் கோவன் (பாபநாசம்).
Thursday, June 7, 2018
தோழர்களே நீங்கள் அத்துணை பேரும் ஒவ்வொருவரும் களம் காணுகின்ற வீரர்களாக மாறுங்கள்!
உதயசூரியன் ஆட்சி மீண்டும் உதிக்கின்ற வரையில் உறங்கமாட்டோம் - பணியாற்றுவோம் என்று உறுதிகொள்ளுங்கள்!
அயன்புரத்தில் நடைபெற்ற கலைஞர் 95 பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் சங்கநாதம்
சென்னை, ஜூன் 7- நீங்கள் அத்துணை பேரும் செயல் வீரர்களாக மாறுங்கள். ஒவ்வொருவரும் களம் காணுகின்ற வீரர்களாக மாறுங்கள். களத்தில் காணுவோம் - உதயசூரியன் ஆட்சி மீண்டும் உதிக்கின்ற வரையில் உறங்கமாட்டோம் - பணியாற்றுவோம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம் என்ற உணர்வை நீங்கள் பெறுங்கள்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
உடன்பிறப்பு-7 கலைஞர் 95 கருத்தரங்கம்!
5.6.2018 அன்று சென்னை அயன்புரம் போர்ச்சியஸ் சாலை, ஜாயின்ட் ஆபீஸ் அருகில் நடைபெற்ற சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. வில்லிவாக்கம் கிழக்குப் பகுதி சார்பில் உடன்பிறப்பு-7 கலைஞர் 95 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்
அவரது உரை வருமாறு:
95 ஆண்டு அகவை காணுகின்ற
ஒப்பற்ற தலைவர் கலைஞர்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களால், மாணவப் பருவத்திலேயே பயிற்சி கொடுக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணா அவர்களால் அரசியல் துறையில் செதுக்கப்பட்டு, இன்றைக்கு 95 ஆவது அகவையில், தன்னுடைய தலைவர், தனக்கு வழிகாட்டியாக இருந்த அறிவாசான் எந்த 95 வயதை எட்டிப் பிடித்தாரோ, அதையே அவருடைய தொண்டன், தோழன் உழைப்பின் மூலமாக நான் எட்டிப் பிடித்திருக்கிறேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு 95 ஆண்டு அகவை காணுகின்ற ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களுடைய இந்தப் பிறந்த நாள் பெருவிழா - திருவிழாவை முன்னிட்டு நடைபெறக்கூடிய இந்தக் கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உதயசூரியன் உதிக்கவேண்டும்; இருட்டை
அகற்றவேண்டும்; விடியல் வரவேண்டும்
இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி என்று சொன்னாலும், இன்றைய ஆட்சியாளருடைய செயலற்ற தன்மையினால், பல உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கக்கூடிய நிலை இருக்கிறது. ஒரு பக்கம் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகிறார்கள்; இன்னொரு பக்கம் நீட்டிற்குப் பலியாகிறார்கள். இந்தக் கொடுமைகள் சொல்லொணாக் கொடுமை என்றால், இந்த இருட்டிலிருந்து மக்களை வெளியே கொண்டுவரவேண்டுமானால், இந்தத் துயரம், துன்பத்திலிருந்து வெளியே வரவேண்டுமானால், ஒரே வழி, உதயசூரியன் உதிக்கவேண்டும்; இருட்டை அகற்ற வேண்டும்; விடியல் வரவேண்டும் என்பதைத் தவிர வேறு கிடையாது.
இன்றைக்கு மாலையில் இந்தக் கூட்டத்திற்கு வரும் பொழுது உற்சாகத்தோடு கிளம்பினாலும்கூட, வந்த செய்தி நம்மையெல்லாம், நம் நெஞ்சங்களையெல்லாம் கனத்த அளவிற்கு, வேதனையாலும், துயரத்தாலும் இருக்கக் கூடிய அளவிற்கு, ஒரு அனிதாவினுடைய மறைவு என்பது எப்படி யெல்லாம் நம் உள்ளத்தை உலுக்கி இருக்கிறது- ஒரு மாணவி, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி, கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய ஒரு மாணவி, தன்னுடைய நெஞ்சில், மருத்துவக் கனவை சுமந்து கொண்டிருக்கக் கூடிய அந்த நிலையில், ஒரு ஏழை பாட்டாளி, கூலித் தொழிலாளியின் ஒருவருடைய பிள்ளை, அந்த மாணவி, தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்வித் திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றாலும், இப்போது வைக்கப்பட்டிருக்கின்ற சூழ்ச்சிப் பொறி இருக்கிறதே - நீட் என்ற அந்த சூழ்ச்சிப் பொறியின் காரணமாக, மிகப்பெரிய அளவிற்கு தற்கொலை செய்துகொண்ட செய்தி நம் எல்லோருக்கும் தெரியும்.
நாம் அப்பொழுதே சொன்னோம், ஒரு அனிதாவோடு இது முடிந்துவிடவேண்டும், ஆட்சியாளர்களே கொஞ்சம் கண் திறங்கள். உங்களுடைய செயலற்றத் தன்மையிலிருந்து, உங்களுடைய உறக்கத்திலிருந்து நீங்கள் கொஞ்சம் விழித் தெழுங்கள். உரிமையை வலியுறுத்தவேண்டி டில்லிக்கு வலி யுறுத்துங்கள். இதன்மூலம் பல அனிதாக்களை உருவாக்காமல் தடுக்கலாம் என்று சொன்னோம்.
ஆனால், கேளாக் காதுகள், பார்க்காத கண்கள், செயலற்ற கைகள் இவைகள்தான் இந்த ஆட்சியினுடைய அங்கங்கள் என்று சொல்லக்கூடிய அந்த நிலை இருக்கின்ற காரணத்தால், இன்றைக்கு மாலையில் வந்திருக்கின்ற இன்னொரு தொடர் பலி எண்ணிப்பாருங்கள்.
தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவின் தந்தை ஒரு சாதாரண தொழிலாளி- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள பெருவளூரைச் சேர்ந்தவர் சண்முகம். கட்டடத் தொழிலாளியாவார்.
ஏற்கெனவே தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் தந்தை மூட்டை தூக்குகிற ஒரு தொழிலாளி.
மீண்டும் போர்க்களத்திலே
வரவேண்டிய காலகட்டம்
தோழர்களே, எவ்வளவு வேதனையோடு நாம் கூடியி ருக்கிறோம். இந்த நிலையில், கலைஞர் அவர்களுடைய அந்த நினைவு என்பது இருக்கிறதே, அதைப் பார்க்கும்பொழுது, நாமெல்லாம் செயல் வீரர்களாக மாறித்தான் தீரவேண்டும் - அவருடைய உழைப்பை நாம் பகிர்ந்துகொண்டால்தான், இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு அப்போதுதான் முற்றுப் புள்ளி வைக்க முடியும். திராவிடர் இயக்கம் மீண்டும் போர்க்களத்திலே வரவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது என்று சொல்லக்கூடிய ஒன்றை இந்த நிகழ்ச்சி மேலும் மேலும் சொல்லிக் கொண்டிருக்கிறது.
போராட்டங்கள் தேவையா? என்று சில புத்திசாலிகள் எல்லாம் இப்பொழுது கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பக்கத்தில் இருக்கட்டும். அவர்களைப்பற்றி நாம் அதிகமாகப் பேசி விளம்பரப்படுத்தி விடக்கூடாது - அதைத் தான் அவர்கள் விரும்புகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நிலையில், இன்று வந்த செய்தியைப் படிக்கிறேன்.
நீட் தேர்வு என் மகளைக் கொன்றுவிட்டதே!
பிரதீபாவின் தந்தை கதறல்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள பெருவளூரைச் சேர்ந்தவர் சண்முகம். கட்டடத் தொழிலாளி. மனைவி அமுதாவும் கூலித் தொழிலாளி. இவர்களுக்குப் பிரியா (வயது 24), பிரதீபா (வயது 18) என்ற இரண்டு மகள்களும், பிரவீன்ராஜ் (வயது 21) என்ற மகனும் உள்ளனர்.
வேகாத வெயிலில் கல் உடைத்தும், மண் சுமந்தும் நாம் படும் வேதனைபோல் நம் பிள்ளைகளும் வேதனைப் படக்கூடாது. அவர்களைப் படிக்க வைத்து, பெரிய ஆளாக்கவேண்டும் என்கிற ஆசைக் கனவு அந்த ஏழைத் தம்பதிகளுக்கு.
குடும்ப சூழ்நிலையை அறிந்து பிள்ளைகளும் வைராக்கியதோடு படித்தார்கள். பிரியா வேலூரில் எம்.சி.ஏ. படிக்கிறார். பிரவீன் ராஜ் மயிலத்தில் இன்ஜி னியரிங் படிக்கிறார்.
அப்பா.... அண்ணனும், அக்காவும் பொறியியல் துறையில் படிக்கிறார்கள். நான் டாக்டருக்கு படிக்கி றேனப்பா என்று பிரதீபா கூறி இருக்கிறார்.
நீட் டாக்டர் ஆகணும்னு எனக்கும் ஆசைதாண்டா செல்லம். ஆனால், இந்த அப்பாவால் அவ்வளவு பணம் செலவழிக்க முடியுமான்னு தான் தயக்கமா இருக்குடா... என்று தந்தை சொன்னதும், பிரதீபா ஆறுதல் சொல்லி தேற்றி இருக்கிறார். நீங்க கவலைப்படாதீங்கப்பா. நான் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி சல்லி காசு செலவில்லாமல் அரசு கல்லூரியில் படித்து டாக்டராகி காட்டுகிறேன் என்று மகள் தைரியமாக சொன்னதைக் கேட்டு, அந்த ஏழைத் தந்தையும் பூரித்துப் போனார். உன்னால் முடியும்டா கண்ணு, படி என்று உற்சாகப்படுத்தினார்.
கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பும், வெள்ளை கோட்டும் அணிந்தபடி மகள் பல மருத்துவர்கள் மத்தியில் நடமாடுவது போல் தந்தை கனவு கண்டார்.
பிரதீபாவின் கனவு அதற்கும் ஒருபடி மேலாக இருந்தது. தான் வாழும் கிராமத்தில் ஏழைகளாய் வாழும் மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்வதுபோலவும், அந்தக் கிராமத்துப் பெண் களெல்லாம், மவராசி நீ நல்லா இருப்பாய் என்று வாயார வாழ்த்தியதையும் கேட்டு ஆனந்தப்படுவது போன்ற கனவு.
நீட்டை ஒழிக்கின்றவரை நாம் ஓயமாட்டோம்!
ஆனால், என்ன நடந்தது நண்பர்களே! அந்தக் கொடு மையைப் பாருங்கள். திராவிடர் இயக்கம் ஏன் போராட்டக் களத்தில் நின்றது. இங்கே இருக்கின்ற அத்தணை தலை வர்களும், தோழர்களும் நீட்டை எதிர்த்து போராட்டக் களத்தில் நேற்றுவரை நின்று கொண்டிருக்கிறோம். நாளைக்கும் நிற்போம். நீட்டை ஒழிக்கின்றவரை நாம் ஓயமாட்டோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைய நிலை இருக்கிறது.
ஆனால், மறுகணமே அதுவும் நடக்கத்தான் போகிறது. நிச்சயம் நம்மால் முடியும் என்கிற நம்பிக்கைப் பிறந்தது.
10 ஆம் வகுப்புத் தேர்வில், தற்கொலை செய்துகொண்ட பிரதீபா என்ற பெண் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த, ஒரு கூலித் தொழிலாளியினுடைய மகள். அந்த நிலையில், அந்த மாணவி பிரதீபா 500-க்கு 490 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்.
இத்தனைக்கும் அவர் மேட்டுக்குடியல்ல; உயர்ந்த ஜாதி யல்ல - மனுதர்மப் பரம்பரையில் பாரம்பரியமாக அய்.ஏ.எஸ். பிள்ளைகள் - அப்பன், தாய், தாத்தா இவர்கள் எல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள் என்பதல்ல - ஒரு பக்கம் மாட்டுத் தொழுவம் - இன்னொரு பக்கம் குடிசை - மற்றொரு பக்கம் கல் உடைக்கும் தொழிலாளியின் கருவிகளைத் தவிர வேறு கிடையாது. இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த பிரதீபாவிற்கு மகிழ்ச்சி. பிளஸ் டூ தேர்விலும் இதுபோன்றே மதிப்பெண் எடுக்கவேண்டும் என்று.
நீட் தேர்வின் குறைபாடுதான் காரணம்
பிளஸ் டூ தேர்விலும் 1200-க்கு 1125 மதிப்பெண்களைப் பெற்றார். தைரியமாக நீட் தேர்வை எழுதுகிறேன் என்று எழுதி னார். ஆனால், அதில் வெற்றி பெறவில்லை. அந்தத் தோல்வி அவரை மிகப்பெரிய அளவிற்கு துவளச் செய்திருக்கிறது. ஆனால், அந்தத் தோல்விக்கு அவருடைய அறிவு குறைவா காரணம்? நீட் தேர்வின் குறைபாடுதான் காரணம்.
நீட் தேர்வு என்பது தமிழகத்தை வஞ்சிப்பதற்காக. ஒடுக்கப் பட்ட மக்களை, தாழ்த்தப்பட்ட மக்களை, பிற்படுத்தப்பட்ட மக்களை, கூலித் தொழிலாளியாக, ஏழைத் தொழிலாளியாக, பாட்டாளிகளாக இருக்கின்ற மக்களை வஞ்சிப்பதற்காக வந்த ஒன்று என்பதற்கு அடையாளமாக இதோ பாருங்கள் இந்த செய்தியை!
பிரதீபா எழுதிய கடிம்!
நீட் தேர்வை பிரதீபா எழுதுகிறார்; அதில் தோல்வி அடைகிறார். அந்தத் தோல்வியை இளந்தளிரான பிரதீபாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதனுடைய விளைவாக ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, விஷத்தைக் குடித்து, தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறார்.
மருத்துவராக ஆகவேண்டும் என்று கனவு கண்ட அந்தப் பிள்ளை - தந்தைக்கு உறுதி சொன்ன அந்தப் பிள்ளை - தாய்க்கு உறுதி சொன்ன அந்தப் பிள்ளை!
அந்தக் கடிதத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறார் என்பதை எங்களுடைய ஏடுகள்கூட அல்ல - அந்தக் கடிதத்தை அப்படியே வெளியிட்டுள்ள மாலைமலர் பத்திரிகையில் இருப்பதை படிக்கிறேன். இந்தப் பத்திரிகை அரசாங்கத்திற்கு ஆதரவான பத்திரிகையாகும்.
அந்தக் கடிதத்தை அப்படியே படிக்கிறேன்.
மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் கூறி இருப்பதாவது:
கேளுங்கள் தாய்மார்களே, தோழர்களே! நீட்டை ஆதரிக் கின்ற நெஞ்சமற்ற தோழர்களே, நீங்களும் கேளுங்கள்! இதுவரையில் செவிடாக இருந்த உங்கள் காதுகள் இனிமேலாவது கொஞ்சம் வேலை செய்யட்டும்.
நான் 2018 மே மாதம் 6 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை தமிழ் மொழியில் எழுதினேன். தமிழ் மொழியில் உள்ள வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு கேட்கப்பட்டு இருந்தது. எனவே, அந்த வினாக்களுக்கு அதற்குரிய மதிப்பெண்களை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இந்தக் கடிதத்தை அவர் சென்னையில் உள்ள நீட் சம் பந்தப்பட்ட அலுவலகத்தை அனுப்பி வைக்க எழுதி உள்ளார். இதுதான் பிரதீபாவின் கடைசி மொழி. இதற்கு உறுதிமொழி தரப்போவது யார்?
டி.கே.ரெங்கராஜன் எம்.பி. தொடர்ந்த வழக்கு!
இதற்கிடையில், இன்னொன்றையும் இணைத்துச் சொல்ல வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவையில் தோழர் டி.கே.ரெங்கராஜன் அவர்கள்,
நீட் தேர்வில் பெரிய குளறுபடிகள் நடைபெற்று இருக்கின்றன. கேள்விகள் எல்லாம் தப்பும் தவறுதலாக இருக்கின்றன. பாடத் திட்டங்களில் இல்லாத கேள்விகள் - மொழி பெயர்ப்பு தவறு - பொருளில் தவறு என்றெல்லாம் சுட்டிக்காட்டி பல புகார்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, நீட் தேர்வு முடிவினை வெளியிடக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
தடை வந்துவிடுமோ என்று முன்கூட்டியே நீட் தேர்வு முடிவினை வெளியிட்டனர்!
ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தால், நீட் தேர்வு முடிவுக்கு தடை கொடுத்துவிடுவார்களோ என்று அறிந்து, 2 மணிக்கு வெளிவரவிருந்த நீட் தேர்வு முடிவுகள் - 11.30 மணிக்கே வெளியிடப்பட்டது.
ஏன்? நீதிமன்றத்தையும் சேர்த்து ஏமாற்றுவதற்காக. எவ்வ ளவு வஞ்சகம் -எவ்வளவு பெரிய கொடுமை. தவறு அங்கே இருக்கிறது - அதற்கு உயிர்ப் பலி இங்கே!
பாவம் புரியாத இளந்தளிர்கள், விரக்தி, தோல்வி மனப்பான் மையால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
கலைஞர் வாழ்க! சொல்வதற்குப் பொருள்!
எனவே தோழர்களே, இப்படிப்பட்ட ஒரு ஆட்சி தேவையா? என்பதை முடிவு கட்டுவதுதான் கலைஞர் வாழ்க! சொல்வதற்குப் பொருள்.
கலைஞர் வாழ்க! கலைஞருடைய ஆயுள் நீளுக என்று சொல்லிவிட்டுப் போவது நமது பணியல்ல! கலைஞர் அவர்கள் களத்தில் எதைச் செய்வாரோ அதை செய்தாக வேண்டும் நாம். கலைஞருடைய உணர்வுகள் நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றன. காரணம், அவர் பெரியாரிடம் இருக்கும் துணிவைப் பற்றியவர். அண்ணாவிடம் இருக்கின்ற கனிவைக் கொண்டவர். அ06ட்ட கலைஞர் அவர்களுடைய இந்தப் பிறந்த நாள் விழாவில், என்னுடைய உரையைத் தொடங்குவதற்குமுன் இந்தத் துயரச் சம்பவத்தை உங்களுக்குச் சொன்னேன். எல்லோரும் எழுந்து நின்று, ஒரு நிமிடம் மறைந்த அந்த இளந்தளிருக்கு நம்முடைய இரங்கலைத் தெரிவிக்கவேண்டும் என்று அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.
(அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் அமைதி காத்தனர்).
தோழர்களே! கலைஞர் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப்பற்றி இங்கே ஏராளம் சொன்னார்கள். அடுத்ததாக தோழர் திருநாவுக்கரசர் அவர்கள் தெளிவாக சொல்லுவார்கள்.
கலைஞர் அவர்களுடைய சிறப்புகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படி சொல்லுவதின்மூலம் நமக்கு சிறப்பு - கலைஞருக்கு அல்ல! கலைஞருடைய உணர் வுகளை நாம் இப்போது களத்தில் அதை செயலாக்கிக் காட்டுவதுதான் கலைஞர் அவர்கள் 95 ஆண்டு காலம் வாழ்ந்திருப்பதற்கு மிகப்பெரிய பொருளாகும். அவர் அடை யாளம் காட்டிய செயல் தலைவர் நம்மிடையே இருக்கிறார். ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். ஜனநாயகத்தில் எந்த உணர்வுகளை மற்றவர்கள் பிரதிபலிக்கிறார்களோ, அதை ஏற்று செயல்படக் கூடிய மாமனிதராக அவர் இன்றைக்கு செயல் வீரராக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு சொக்கத் தங்கங்கள் போன்று தோழர்கள், உடன்பிறப்புகளாகிய நீங்கள் எல்லாம் உற்சாகத்தோடு களம் காணுவதற்குத் தயாராக இருக்கிறீர்கள்.
கலைஞருக்கு ஈடு கலைஞர்தான்;
உழைப்பின் உருவம் அவர்!
இப்படிப்பட்ட இந்தக் காலகட்டத்தில், பொதுமக்களுடைய உணர்வுகள் என்பது இருக்கிறதே, நமக்கு மட்டுமல்ல; ஏதோ நாம் கட்சி உணர்ச்சியினால் சொல்லுகிறோம்; கலைஞரோடு பழகியவர் என்பதற்காக சொல்கிறேன் என்பது அல்ல. இந்த நாட்டில் எத்தனையோ செய்திகளில், கலைஞருக்கு ஈடு கலைஞர்தான்; உழைப்பின் உருவம் என்று சொன்னால், அதற்கு ஈடு யாராவது உறுதியாக சொல்ல முடியுமா? என்பதை எண்ணிப்பாருங்கள்.
அதுமட்டுமல்ல, 95 ஆண்டுகால வாழ்க்கையில், 82 ஆண்டுகால பொதுவாழ்க்கையைக் கொண்ட ஒரு மாமனிதர் - இந்தியாவின் வரலாற்றில் அல்ல - உலக வரலாற்றிலேயே வேறு யாராவது இருக்கிறார்களா? விரலை மடக்க முடியுமா? என்று எண்ணிப் பாருங்கள்.
சிலர் உளறுகிறார்கள், திராவிடத்தால் வீழ்ந்தோம் - திராவிடத்தை வீழ்த்துவோம் - கழகங்களே இல்லாத தமிழகம் என்று - எத்தனையோ கொம்பன்கள் சொல்லி, இருக்கின்ற இடம் தெரியாமல் போயிருக்கிறார்கள். அதிலே இவர்கள் சேருவதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, வேறொன்றுமில்லை. மலையோடு மோதினால், உடைவது மலையாக இருக்காது - மண்டையாகத்தான் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டிய காலகட்டம். ஆகவே, அதனைப் புரிந்தாகவேண்டும். பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம்
ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்! என்று தன்னுடைய பொதுவாழ்க்கையைத் தொடங்கியவர், இறுதிவரையில் பகுத் தறிவாளர்.
கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்
கலைஞர் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்கி றார்கள், எத்தனையோ செய்திகள், எத்தனையோ பெருமைகள், எத்தனையோ சாதனைகள் அவருடைய வாழ்நாளில். எழுத்தில், பேச்சில், திரைத்துறையில். அவர் ஒரு பல்கலைக் கொள்கலன். அவர் போல் அத்துணை அம்சங்களிலும் முன்னாலே நிற்கக்கூடியவர்கள் யாரும் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும். எதிரிகள்கூட மறுக்கமாட்டார்கள்.
அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இன்றைக்கு மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய செய்தி என்ன? கலைஞ ருடைய பெருமைகளை அடுத்து திருநாவுக்கரசர் அவர்கள் சொல்வார். அன்றைக்கும் சொன்னார்.
போராட்ட உணர்வை நம்முடைய தோழர்கள்
கொஞ்சம்கூட தள்ளி வைக்கக்கூடாது!
நண்பர்களே! அந்தப் பெருமைகளைவிட, நாங்கள் இப் பொழுது உங்களுக்கு நினைவூட்டவேண்டியது - இப்போது நமக்கு ஒரு போராட்டக் குணம் வேண்டும். அந்த போராட்ட உணர்வை நம்முடைய தோழர்கள் கொஞ்சம்கூட தள்ளி வைக்கக்கூடாது. இந்தக் காலகட்டம், அதற்கு மிக முக்கியமான காலகட்டம். அதை சொல்லுவதற்குத்தான் நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன்.
அருமைத் தோழர்களே, எண்ணிப்பாருங்கள்! எதிர்க்கட்சி என்று சொல்லுகின்ற நேரத்தில் - எதிர்நீச்சல் என்பது இருக்கிறதே, அது அவருக்குக் கைவந்த கலை. ஆட்சியில் இருக்கும்பொழுது மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால், எதிர்நீச்சல் என்று வந்துவிட்டால், கலைஞருக்கு நிகர் கலைஞர்தான்.
நெருக்கடி காலம் - இந்த இயக்கத்தையே அழித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். 42 ஆண்டுகளுக்கு முன்பு - வயதானவர்களுக்கு இந்த வரலாறு தெரியும் - இன்றைய இளைஞர்களுக்கு அந்த வரலாறு தெரியாது.
நெருக்கடி காலத்தில் சிறையில் அடிபட்டோம்!
அன்றைக்கு இந்த இயக்கமே இருக்காது என்று சொன்னார்கள். ஆனால், கலைஞர் அவர்கள் அதை அணுகிய முறை இருக்கிறதே, அது எளிதானதா? எத்தனை முறை சிறைச்சாலைகள். சிறையில் அடிபட்டோம்; தளபதி ஸ்டாலின் அடிபட்டார்; ஆற்காடு வீராசாமி அடிபட்டார்; திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் - திராவிடர் கழகத் தோழர்கள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் இதுபோன்ற பல இயக்கத் தோழர்கள் சிறைச்சாலையில் அடிபட்டார்கள் என்பதெல்லாம் ஒரு பக்கத்தில் இருந்தாலும்,
வெளியில் இருந்தவர்களின் நிலை என்ன? என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். கலைஞருக்கு கார் ஓட்டுவார் ஒருவர். அடுத்த நாள் காலையில் நாங்கள் எல்லாம் அவரை வரவேற்போம் - எங்கே தெரியுமா? சிறைச்சாலைக்குள்ளே! கலைஞருக்குக் கார் ஓட்டினால், அடுத்தது சிறைச்சாலைதான் அவருக்கு. ஏனென்றால், கலைஞரை தனிமைப்படுத்தவேண்டும் என்று மற்றவர்கள் நினைத்தார்கள். ஆனால், அப்படி நினைத்தவர்கள் தோற்றார்கள் - கலைஞர் வென்றார்! அதுதான் மிக முக்கியம்.
அவருடைய வெற்றி என்பதை தேர்தல் வெற்றியை வைத்துக் கணக்குப் போடாதீர்கள். அதிலே அவரை வீழ்த்து வதற்கு யாராலும் முடியவில்லை.
கொஞ்சம் சூடு இருந்தால், சுரணை இருந்தால்,
சுயமரியாதை இருந்தால்...
ஆனால், அதைவிட மிக முக்கியம் - அந்தக் காலகட்டத்தில் முரசொலியை அவர் நடத்திய விதம் - திராவிட முன்னேற்றக் கழகத்தை நடத்திய விதம். அதுதான் இந்த அஸ்திவாரம் என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். எதிரிகளுக்கு நினைவூட்ட நான் கடமைப்பட்டு இருக்கிறேன். கழகங்களையெல்லாம் அழித்துவிடுவோம் என்று டில்லியை வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறீர்களே! டில்லிக்குத் தலையாட்டுகிறீர்களே! கொஞ்சம் சூடு இருந்தால், சுரணை இருந்தால், சுயமரியாதை இருந்தால், நீட் தேர்வுக்கு இப்படிப்பட்ட ஒரு கொடுமை - இப்படிப்பட்ட பலிகள் வந்திருக்குமா?
நீங்கள் வேறொன்றும் செய்யவேண்டாம் - விளக்கெண் ணெய் குடிக்கவேண்டியதில்லை - வேப்பெண்ணெய் குடிக்க வேண்டியதில்லை - நீங்கள் ஒன்றும் தண்டால் எடுக்க வேண்டியதில்லை.
இந்த மண்ணுக்கு சமூகநீதி மண் என்ற வரலாறு உண்டு!
ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் சட்டபூர்வமாக - நமக்கு இருக்கிற உரிமை - சட்டமன்றத்தில் மிகத் தெளிவாக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, காங்கிரசு பேரியக்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எல்லோரும் ஒருமித்த குரலில், அரசியல் பார்க்காமல், தமிழ்நாட்டின் நலன் முக்கியம் என்று நினைத்து, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுடைய சமூகநீதிக் கொடி தாழ்ந்து பறக்கக்கூடாது - கீழே இறக்க அனுமதிக்கக் கூடாது - ஆகவே, அந்த நிலை உயர்ந்த நிலையில் இருக்கவேண்டும் என்று பெரியார் மண் - இந்த மண்ணுக்கு சமூகநீதி மண் என்ற வரலாறு உண்டு என்ற அடிப்படையை அவர்கள் தெளிவாகக் காட்டியதன் காரணமாகத்தான், அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள - ஏற்கெனவே காங்கிரசு கொண்டு வந்த தீர்மானமாக - உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையாகக் கொண்டு வந்திருந்தாலும்கூட, அவர்கள் ஜனநாயக உரிமைப்படி, அரசியல் சட்டத்தினுடைய கடமையை அவர்கள் பறிக்கவில்லை - அதிகாரத்தைப் பறிக்கவில்லை.
அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது!
ஒன்றை அவர்கள் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டினார்கள். அது என்னவென்றால், எந்த மாநிலம் நீட் தேர்வை விரும்ப வில்லையோ - அந்த மாநிலத்திற்கு விதிவிலக்கு அளிக்க உரிமை உண்டு. இது அரசமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடியது.
காரணம், ஏற்கெனவே, கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. கல்வி என்பது முழுக்க முழுக்க நாம் முடிவெடுக்கவேண்டிய செய்தி. இதற்கும், டில்லிக்கும் சம்பந்தம் இல்லை. மத்திய அரசுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை.
பிறகு அது நெருக்கடி காலத்தில், ஒத்திசைவுப் பட்டியலுக்கு (கன்கரண்ட் லிஸ்ட்) பொதுப் பட்டியல் என்று தமிழில் மொழிப் பெயர்ப்பார்கள் - அது சரியானது அல்ல. ஒத்திசைவுப் பட்டியல் என்றால், மாநில அரசினுடைய ஒப்புதல் பெற்ற பிறகுதான், இந்தத் துறையில் சட்டம் இயற்ற முடியும். ஆனால், அதை அவர்கள் செய்தார்களா? என்றால், கிடையாது.
நாடாளுமன்ற நிலைக்குழுவில், தெளிவாக சொல்லியிருக் கிறார்கள். எந்த மாநிலம் நீட் தேர்வை விரும்பவில்லையோ அந்த மாநிலத்திற்கு விலக்குக் கொடுங்கள். விலக்குக் கோருவதற்கு மாநிலங்களுக்கு உரிமை உண்டு.
மாநிலங்களுக்கு உள்ள உரிமை!
இது பிச்சையல்ல - சலுகையல்ல - அல்லது மோடியிடமோ, உள்துறையிடமோ கெஞ்சி கேட்கவேண்டியதும் கிடையாது. மாநிலங்களுக்கு உள்ள உரிமை அது.
அந்த உரிமையைப் பயன்படுத்தித்தான், ஒன்றரை ஆண்டுகளுக்குமுன், இதே ஆட்சி இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியது.
இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், திராவிட முன்னேற்ற கழக செயல் தலைவர் அவர்கள் தெளிவாக, தீர்மானம் கொடுத்துப் பேசியிருக்கிறார்கள்.
என்ன பதில் சொன்னார்கள் ஆளுங்கட்சியினர்?
ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் அந்த இரு மசோதாக்களை நாம் நிறைவேற்றினோமே, அது இப்பொழுது எங்கே இருக்கிறது?
தெரியாது என்கிறார்கள்.
குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருக்கிறது என்றால், ஒன்றரை ஆண்டுகாலத்திற்கு அதற்கு என்ன வேலை?
நீங்கள் கடிதம் எழுதுங்கள் குடியரசுத் தலைவருக்கு - ஏற்கெனவே அவர் மிகவும் சங்கடத்தோடு அமர்ந்திருக்கிறார் - அதற்கும், அவருக்கும் சம்பந்தம் கிடையாது என்பதுபோல. ஏற்கெனவே அவர் கோவிலுக்குள் கூட அவரால் உள்ளே செல்ல முடியவில்லை.
கோவிலுக்கு வெளியே படிக்கட்டுகளில் அமர்ந்து வழி பாட்டினை செய்து வரக்கூடிய ஒரு நிலை இருக்கிறது இன்றைய காலகட்டம்.
ஆகவே, நண்பர்களே! நீங்கள் சிந்திக்கவேண்டும்.இங்கே நடைபெறுகிற ஆட்சி ஒன்றரை ஆண்டுகாலம் நடை பெறுகிற ஆட்சி ஒரு பொம்மலாட்ட ஆட்சி - டில்லிக்குத் தலையாட்டுகிற ஆட்சி. எந்த நேரம் டில்லி கயிறை இழுத்தால், நாம் போய்விடுவோம் என்று நினைத்து, அதுவரையில் நாம் ஆட்சியில் இருப்போம் என்று டில்லிக்கு சலாம் போடுகிற ஓர் ஆட்சி என்று சொன்னால், இந்த ஆட்சிக்கு கலைஞருடைய ஆட்சியை எண்ணிப்பாருங்கள்.
கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருக்கும்பொழுது என்ன செய்தார் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும் தோழர்களே!
ஒரே வார்த்தையில் கலைஞர் சொன்னார்,
உறவுக்குக் கைகொடுப்போம்
உரிமைக்குக் குரல் கொடுப்போம்!
என்றார்.
இன்றைக்கு உரிமைக்குக் குரல் கொடுக்காத ஊமையர்களின் ஆட்சி எதற்காகத் தேவை இந்த நாட்டில்? இதைத்தான் நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.
எதைச் செய்தால் கலைஞர் வாழ்வார்? எதைச்
செய்தால் கலைஞர் அவர்களுடைய ஆயுள் நீளும்?
எனவே, கலைஞர் வாழ்க! கலைஞருடைய ஆயுள் வளர்க! என்று நாம் வாழ்த்துவதற்கு இந்தக் கூட்டத்தை நாம் போட்டிருக்கிறோம் என்றால், அதன்மூலமாக, எதைச் செய்தால் கலைஞர் வாழ்வார்? எதைச் செய்தால் கலைஞர் அவர்களுடைய ஆயுள் நீளும்? எதைச் செய்தால் அவருடைய மகிழ்ச்சி, உற்சாகம் ஊற்றெடுத்துப் பெருக்கும்.
மீண்டும் ஒரு மாற்றம் தேவை! அந்த மாற்றம் டில்லியில் மாற்றம்! தமிழகத்தில் மாற்றம். டில்லியில் ஒரு மோடி வித்தை -
இங்கே அந்த மோடி வித்தையைக் கைக்கொண்டி ருக்கக்கூடிய ஒரு ஆட்சி.
மத்தியில் காவி ஆட்சி
இங்கே ஆவி ஆட்சி
என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
எனவே, காவிக்கும் வேலையில்லை - ஆவிக்கும் வேலை யில்லை என்று முடிவெடுக்க - களம் காணுங்கள்! களம் காணுங்கள் என்று சொல்லி என்னுரையை முடிக்கிறேன்.
ஒவ்வொருவரும் களம் காணுகின்ற
வீரர்களாக மாறுங்கள்
இது அறிவார்ந்த அரங்கம் - நீங்கள் அத்துணை பேரும் செயல் வீரர்களாக மாறுங்கள். ஒவ்வொருவரும் களம் காணு கின்ற வீரர்களாக மாறுங்கள். களத்தில் காணுவோம் - உதயசூரியன் ஆட்சி மீண்டும் உதிக்கின்ற வரையில் நாங்கள் உறங்கமாட்டோம் - பணியாற்றுவோம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம் என்ற உணர்வை நீங்கள் பெறுங்கள்!
அதுதான் கலைஞர் வாழ்க! கலைஞர் வாழ்க! கலைஞர் வாழ்க! என்பதற்கு அடையாளமாகும்
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வாழ்க கலைஞர்!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அயன்புரத்தில் நடைபெற்ற கலைஞர் 95 பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் சங்கநாதம்
சென்னை, ஜூன் 7- நீங்கள் அத்துணை பேரும் செயல் வீரர்களாக மாறுங்கள். ஒவ்வொருவரும் களம் காணுகின்ற வீரர்களாக மாறுங்கள். களத்தில் காணுவோம் - உதயசூரியன் ஆட்சி மீண்டும் உதிக்கின்ற வரையில் உறங்கமாட்டோம் - பணியாற்றுவோம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம் என்ற உணர்வை நீங்கள் பெறுங்கள்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
உடன்பிறப்பு-7 கலைஞர் 95 கருத்தரங்கம்!
5.6.2018 அன்று சென்னை அயன்புரம் போர்ச்சியஸ் சாலை, ஜாயின்ட் ஆபீஸ் அருகில் நடைபெற்ற சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. வில்லிவாக்கம் கிழக்குப் பகுதி சார்பில் உடன்பிறப்பு-7 கலைஞர் 95 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்
அவரது உரை வருமாறு:
95 ஆண்டு அகவை காணுகின்ற
ஒப்பற்ற தலைவர் கலைஞர்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களால், மாணவப் பருவத்திலேயே பயிற்சி கொடுக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணா அவர்களால் அரசியல் துறையில் செதுக்கப்பட்டு, இன்றைக்கு 95 ஆவது அகவையில், தன்னுடைய தலைவர், தனக்கு வழிகாட்டியாக இருந்த அறிவாசான் எந்த 95 வயதை எட்டிப் பிடித்தாரோ, அதையே அவருடைய தொண்டன், தோழன் உழைப்பின் மூலமாக நான் எட்டிப் பிடித்திருக்கிறேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு 95 ஆண்டு அகவை காணுகின்ற ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களுடைய இந்தப் பிறந்த நாள் பெருவிழா - திருவிழாவை முன்னிட்டு நடைபெறக்கூடிய இந்தக் கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உதயசூரியன் உதிக்கவேண்டும்; இருட்டை
அகற்றவேண்டும்; விடியல் வரவேண்டும்
இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி என்று சொன்னாலும், இன்றைய ஆட்சியாளருடைய செயலற்ற தன்மையினால், பல உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கக்கூடிய நிலை இருக்கிறது. ஒரு பக்கம் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகிறார்கள்; இன்னொரு பக்கம் நீட்டிற்குப் பலியாகிறார்கள். இந்தக் கொடுமைகள் சொல்லொணாக் கொடுமை என்றால், இந்த இருட்டிலிருந்து மக்களை வெளியே கொண்டுவரவேண்டுமானால், இந்தத் துயரம், துன்பத்திலிருந்து வெளியே வரவேண்டுமானால், ஒரே வழி, உதயசூரியன் உதிக்கவேண்டும்; இருட்டை அகற்ற வேண்டும்; விடியல் வரவேண்டும் என்பதைத் தவிர வேறு கிடையாது.
இன்றைக்கு மாலையில் இந்தக் கூட்டத்திற்கு வரும் பொழுது உற்சாகத்தோடு கிளம்பினாலும்கூட, வந்த செய்தி நம்மையெல்லாம், நம் நெஞ்சங்களையெல்லாம் கனத்த அளவிற்கு, வேதனையாலும், துயரத்தாலும் இருக்கக் கூடிய அளவிற்கு, ஒரு அனிதாவினுடைய மறைவு என்பது எப்படி யெல்லாம் நம் உள்ளத்தை உலுக்கி இருக்கிறது- ஒரு மாணவி, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி, கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய ஒரு மாணவி, தன்னுடைய நெஞ்சில், மருத்துவக் கனவை சுமந்து கொண்டிருக்கக் கூடிய அந்த நிலையில், ஒரு ஏழை பாட்டாளி, கூலித் தொழிலாளியின் ஒருவருடைய பிள்ளை, அந்த மாணவி, தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்வித் திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றாலும், இப்போது வைக்கப்பட்டிருக்கின்ற சூழ்ச்சிப் பொறி இருக்கிறதே - நீட் என்ற அந்த சூழ்ச்சிப் பொறியின் காரணமாக, மிகப்பெரிய அளவிற்கு தற்கொலை செய்துகொண்ட செய்தி நம் எல்லோருக்கும் தெரியும்.
நாம் அப்பொழுதே சொன்னோம், ஒரு அனிதாவோடு இது முடிந்துவிடவேண்டும், ஆட்சியாளர்களே கொஞ்சம் கண் திறங்கள். உங்களுடைய செயலற்றத் தன்மையிலிருந்து, உங்களுடைய உறக்கத்திலிருந்து நீங்கள் கொஞ்சம் விழித் தெழுங்கள். உரிமையை வலியுறுத்தவேண்டி டில்லிக்கு வலி யுறுத்துங்கள். இதன்மூலம் பல அனிதாக்களை உருவாக்காமல் தடுக்கலாம் என்று சொன்னோம்.
ஆனால், கேளாக் காதுகள், பார்க்காத கண்கள், செயலற்ற கைகள் இவைகள்தான் இந்த ஆட்சியினுடைய அங்கங்கள் என்று சொல்லக்கூடிய அந்த நிலை இருக்கின்ற காரணத்தால், இன்றைக்கு மாலையில் வந்திருக்கின்ற இன்னொரு தொடர் பலி எண்ணிப்பாருங்கள்.
தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவின் தந்தை ஒரு சாதாரண தொழிலாளி- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள பெருவளூரைச் சேர்ந்தவர் சண்முகம். கட்டடத் தொழிலாளியாவார்.
ஏற்கெனவே தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் தந்தை மூட்டை தூக்குகிற ஒரு தொழிலாளி.
மீண்டும் போர்க்களத்திலே
வரவேண்டிய காலகட்டம்
தோழர்களே, எவ்வளவு வேதனையோடு நாம் கூடியி ருக்கிறோம். இந்த நிலையில், கலைஞர் அவர்களுடைய அந்த நினைவு என்பது இருக்கிறதே, அதைப் பார்க்கும்பொழுது, நாமெல்லாம் செயல் வீரர்களாக மாறித்தான் தீரவேண்டும் - அவருடைய உழைப்பை நாம் பகிர்ந்துகொண்டால்தான், இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு அப்போதுதான் முற்றுப் புள்ளி வைக்க முடியும். திராவிடர் இயக்கம் மீண்டும் போர்க்களத்திலே வரவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது என்று சொல்லக்கூடிய ஒன்றை இந்த நிகழ்ச்சி மேலும் மேலும் சொல்லிக் கொண்டிருக்கிறது.
போராட்டங்கள் தேவையா? என்று சில புத்திசாலிகள் எல்லாம் இப்பொழுது கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பக்கத்தில் இருக்கட்டும். அவர்களைப்பற்றி நாம் அதிகமாகப் பேசி விளம்பரப்படுத்தி விடக்கூடாது - அதைத் தான் அவர்கள் விரும்புகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நிலையில், இன்று வந்த செய்தியைப் படிக்கிறேன்.
நீட் தேர்வு என் மகளைக் கொன்றுவிட்டதே!
பிரதீபாவின் தந்தை கதறல்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள பெருவளூரைச் சேர்ந்தவர் சண்முகம். கட்டடத் தொழிலாளி. மனைவி அமுதாவும் கூலித் தொழிலாளி. இவர்களுக்குப் பிரியா (வயது 24), பிரதீபா (வயது 18) என்ற இரண்டு மகள்களும், பிரவீன்ராஜ் (வயது 21) என்ற மகனும் உள்ளனர்.
வேகாத வெயிலில் கல் உடைத்தும், மண் சுமந்தும் நாம் படும் வேதனைபோல் நம் பிள்ளைகளும் வேதனைப் படக்கூடாது. அவர்களைப் படிக்க வைத்து, பெரிய ஆளாக்கவேண்டும் என்கிற ஆசைக் கனவு அந்த ஏழைத் தம்பதிகளுக்கு.
குடும்ப சூழ்நிலையை அறிந்து பிள்ளைகளும் வைராக்கியதோடு படித்தார்கள். பிரியா வேலூரில் எம்.சி.ஏ. படிக்கிறார். பிரவீன் ராஜ் மயிலத்தில் இன்ஜி னியரிங் படிக்கிறார்.
அப்பா.... அண்ணனும், அக்காவும் பொறியியல் துறையில் படிக்கிறார்கள். நான் டாக்டருக்கு படிக்கி றேனப்பா என்று பிரதீபா கூறி இருக்கிறார்.
நீட் டாக்டர் ஆகணும்னு எனக்கும் ஆசைதாண்டா செல்லம். ஆனால், இந்த அப்பாவால் அவ்வளவு பணம் செலவழிக்க முடியுமான்னு தான் தயக்கமா இருக்குடா... என்று தந்தை சொன்னதும், பிரதீபா ஆறுதல் சொல்லி தேற்றி இருக்கிறார். நீங்க கவலைப்படாதீங்கப்பா. நான் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி சல்லி காசு செலவில்லாமல் அரசு கல்லூரியில் படித்து டாக்டராகி காட்டுகிறேன் என்று மகள் தைரியமாக சொன்னதைக் கேட்டு, அந்த ஏழைத் தந்தையும் பூரித்துப் போனார். உன்னால் முடியும்டா கண்ணு, படி என்று உற்சாகப்படுத்தினார்.
கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பும், வெள்ளை கோட்டும் அணிந்தபடி மகள் பல மருத்துவர்கள் மத்தியில் நடமாடுவது போல் தந்தை கனவு கண்டார்.
பிரதீபாவின் கனவு அதற்கும் ஒருபடி மேலாக இருந்தது. தான் வாழும் கிராமத்தில் ஏழைகளாய் வாழும் மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்வதுபோலவும், அந்தக் கிராமத்துப் பெண் களெல்லாம், மவராசி நீ நல்லா இருப்பாய் என்று வாயார வாழ்த்தியதையும் கேட்டு ஆனந்தப்படுவது போன்ற கனவு.
நீட்டை ஒழிக்கின்றவரை நாம் ஓயமாட்டோம்!
ஆனால், என்ன நடந்தது நண்பர்களே! அந்தக் கொடு மையைப் பாருங்கள். திராவிடர் இயக்கம் ஏன் போராட்டக் களத்தில் நின்றது. இங்கே இருக்கின்ற அத்தணை தலை வர்களும், தோழர்களும் நீட்டை எதிர்த்து போராட்டக் களத்தில் நேற்றுவரை நின்று கொண்டிருக்கிறோம். நாளைக்கும் நிற்போம். நீட்டை ஒழிக்கின்றவரை நாம் ஓயமாட்டோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைய நிலை இருக்கிறது.
ஆனால், மறுகணமே அதுவும் நடக்கத்தான் போகிறது. நிச்சயம் நம்மால் முடியும் என்கிற நம்பிக்கைப் பிறந்தது.
10 ஆம் வகுப்புத் தேர்வில், தற்கொலை செய்துகொண்ட பிரதீபா என்ற பெண் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த, ஒரு கூலித் தொழிலாளியினுடைய மகள். அந்த நிலையில், அந்த மாணவி பிரதீபா 500-க்கு 490 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்.
இத்தனைக்கும் அவர் மேட்டுக்குடியல்ல; உயர்ந்த ஜாதி யல்ல - மனுதர்மப் பரம்பரையில் பாரம்பரியமாக அய்.ஏ.எஸ். பிள்ளைகள் - அப்பன், தாய், தாத்தா இவர்கள் எல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள் என்பதல்ல - ஒரு பக்கம் மாட்டுத் தொழுவம் - இன்னொரு பக்கம் குடிசை - மற்றொரு பக்கம் கல் உடைக்கும் தொழிலாளியின் கருவிகளைத் தவிர வேறு கிடையாது. இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த பிரதீபாவிற்கு மகிழ்ச்சி. பிளஸ் டூ தேர்விலும் இதுபோன்றே மதிப்பெண் எடுக்கவேண்டும் என்று.
நீட் தேர்வின் குறைபாடுதான் காரணம்
பிளஸ் டூ தேர்விலும் 1200-க்கு 1125 மதிப்பெண்களைப் பெற்றார். தைரியமாக நீட் தேர்வை எழுதுகிறேன் என்று எழுதி னார். ஆனால், அதில் வெற்றி பெறவில்லை. அந்தத் தோல்வி அவரை மிகப்பெரிய அளவிற்கு துவளச் செய்திருக்கிறது. ஆனால், அந்தத் தோல்விக்கு அவருடைய அறிவு குறைவா காரணம்? நீட் தேர்வின் குறைபாடுதான் காரணம்.
நீட் தேர்வு என்பது தமிழகத்தை வஞ்சிப்பதற்காக. ஒடுக்கப் பட்ட மக்களை, தாழ்த்தப்பட்ட மக்களை, பிற்படுத்தப்பட்ட மக்களை, கூலித் தொழிலாளியாக, ஏழைத் தொழிலாளியாக, பாட்டாளிகளாக இருக்கின்ற மக்களை வஞ்சிப்பதற்காக வந்த ஒன்று என்பதற்கு அடையாளமாக இதோ பாருங்கள் இந்த செய்தியை!
பிரதீபா எழுதிய கடிம்!
நீட் தேர்வை பிரதீபா எழுதுகிறார்; அதில் தோல்வி அடைகிறார். அந்தத் தோல்வியை இளந்தளிரான பிரதீபாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதனுடைய விளைவாக ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, விஷத்தைக் குடித்து, தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறார்.
மருத்துவராக ஆகவேண்டும் என்று கனவு கண்ட அந்தப் பிள்ளை - தந்தைக்கு உறுதி சொன்ன அந்தப் பிள்ளை - தாய்க்கு உறுதி சொன்ன அந்தப் பிள்ளை!
அந்தக் கடிதத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறார் என்பதை எங்களுடைய ஏடுகள்கூட அல்ல - அந்தக் கடிதத்தை அப்படியே வெளியிட்டுள்ள மாலைமலர் பத்திரிகையில் இருப்பதை படிக்கிறேன். இந்தப் பத்திரிகை அரசாங்கத்திற்கு ஆதரவான பத்திரிகையாகும்.
அந்தக் கடிதத்தை அப்படியே படிக்கிறேன்.
மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் கூறி இருப்பதாவது:
கேளுங்கள் தாய்மார்களே, தோழர்களே! நீட்டை ஆதரிக் கின்ற நெஞ்சமற்ற தோழர்களே, நீங்களும் கேளுங்கள்! இதுவரையில் செவிடாக இருந்த உங்கள் காதுகள் இனிமேலாவது கொஞ்சம் வேலை செய்யட்டும்.
நான் 2018 மே மாதம் 6 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை தமிழ் மொழியில் எழுதினேன். தமிழ் மொழியில் உள்ள வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு கேட்கப்பட்டு இருந்தது. எனவே, அந்த வினாக்களுக்கு அதற்குரிய மதிப்பெண்களை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இந்தக் கடிதத்தை அவர் சென்னையில் உள்ள நீட் சம் பந்தப்பட்ட அலுவலகத்தை அனுப்பி வைக்க எழுதி உள்ளார். இதுதான் பிரதீபாவின் கடைசி மொழி. இதற்கு உறுதிமொழி தரப்போவது யார்?
டி.கே.ரெங்கராஜன் எம்.பி. தொடர்ந்த வழக்கு!
இதற்கிடையில், இன்னொன்றையும் இணைத்துச் சொல்ல வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவையில் தோழர் டி.கே.ரெங்கராஜன் அவர்கள்,
நீட் தேர்வில் பெரிய குளறுபடிகள் நடைபெற்று இருக்கின்றன. கேள்விகள் எல்லாம் தப்பும் தவறுதலாக இருக்கின்றன. பாடத் திட்டங்களில் இல்லாத கேள்விகள் - மொழி பெயர்ப்பு தவறு - பொருளில் தவறு என்றெல்லாம் சுட்டிக்காட்டி பல புகார்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, நீட் தேர்வு முடிவினை வெளியிடக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
தடை வந்துவிடுமோ என்று முன்கூட்டியே நீட் தேர்வு முடிவினை வெளியிட்டனர்!
ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தால், நீட் தேர்வு முடிவுக்கு தடை கொடுத்துவிடுவார்களோ என்று அறிந்து, 2 மணிக்கு வெளிவரவிருந்த நீட் தேர்வு முடிவுகள் - 11.30 மணிக்கே வெளியிடப்பட்டது.
ஏன்? நீதிமன்றத்தையும் சேர்த்து ஏமாற்றுவதற்காக. எவ்வ ளவு வஞ்சகம் -எவ்வளவு பெரிய கொடுமை. தவறு அங்கே இருக்கிறது - அதற்கு உயிர்ப் பலி இங்கே!
பாவம் புரியாத இளந்தளிர்கள், விரக்தி, தோல்வி மனப்பான் மையால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
கலைஞர் வாழ்க! சொல்வதற்குப் பொருள்!
எனவே தோழர்களே, இப்படிப்பட்ட ஒரு ஆட்சி தேவையா? என்பதை முடிவு கட்டுவதுதான் கலைஞர் வாழ்க! சொல்வதற்குப் பொருள்.
கலைஞர் வாழ்க! கலைஞருடைய ஆயுள் நீளுக என்று சொல்லிவிட்டுப் போவது நமது பணியல்ல! கலைஞர் அவர்கள் களத்தில் எதைச் செய்வாரோ அதை செய்தாக வேண்டும் நாம். கலைஞருடைய உணர்வுகள் நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றன. காரணம், அவர் பெரியாரிடம் இருக்கும் துணிவைப் பற்றியவர். அண்ணாவிடம் இருக்கின்ற கனிவைக் கொண்டவர். அ06ட்ட கலைஞர் அவர்களுடைய இந்தப் பிறந்த நாள் விழாவில், என்னுடைய உரையைத் தொடங்குவதற்குமுன் இந்தத் துயரச் சம்பவத்தை உங்களுக்குச் சொன்னேன். எல்லோரும் எழுந்து நின்று, ஒரு நிமிடம் மறைந்த அந்த இளந்தளிருக்கு நம்முடைய இரங்கலைத் தெரிவிக்கவேண்டும் என்று அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.
(அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் அமைதி காத்தனர்).
தோழர்களே! கலைஞர் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப்பற்றி இங்கே ஏராளம் சொன்னார்கள். அடுத்ததாக தோழர் திருநாவுக்கரசர் அவர்கள் தெளிவாக சொல்லுவார்கள்.
கலைஞர் அவர்களுடைய சிறப்புகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படி சொல்லுவதின்மூலம் நமக்கு சிறப்பு - கலைஞருக்கு அல்ல! கலைஞருடைய உணர் வுகளை நாம் இப்போது களத்தில் அதை செயலாக்கிக் காட்டுவதுதான் கலைஞர் அவர்கள் 95 ஆண்டு காலம் வாழ்ந்திருப்பதற்கு மிகப்பெரிய பொருளாகும். அவர் அடை யாளம் காட்டிய செயல் தலைவர் நம்மிடையே இருக்கிறார். ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். ஜனநாயகத்தில் எந்த உணர்வுகளை மற்றவர்கள் பிரதிபலிக்கிறார்களோ, அதை ஏற்று செயல்படக் கூடிய மாமனிதராக அவர் இன்றைக்கு செயல் வீரராக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு சொக்கத் தங்கங்கள் போன்று தோழர்கள், உடன்பிறப்புகளாகிய நீங்கள் எல்லாம் உற்சாகத்தோடு களம் காணுவதற்குத் தயாராக இருக்கிறீர்கள்.
கலைஞருக்கு ஈடு கலைஞர்தான்;
உழைப்பின் உருவம் அவர்!
இப்படிப்பட்ட இந்தக் காலகட்டத்தில், பொதுமக்களுடைய உணர்வுகள் என்பது இருக்கிறதே, நமக்கு மட்டுமல்ல; ஏதோ நாம் கட்சி உணர்ச்சியினால் சொல்லுகிறோம்; கலைஞரோடு பழகியவர் என்பதற்காக சொல்கிறேன் என்பது அல்ல. இந்த நாட்டில் எத்தனையோ செய்திகளில், கலைஞருக்கு ஈடு கலைஞர்தான்; உழைப்பின் உருவம் என்று சொன்னால், அதற்கு ஈடு யாராவது உறுதியாக சொல்ல முடியுமா? என்பதை எண்ணிப்பாருங்கள்.
அதுமட்டுமல்ல, 95 ஆண்டுகால வாழ்க்கையில், 82 ஆண்டுகால பொதுவாழ்க்கையைக் கொண்ட ஒரு மாமனிதர் - இந்தியாவின் வரலாற்றில் அல்ல - உலக வரலாற்றிலேயே வேறு யாராவது இருக்கிறார்களா? விரலை மடக்க முடியுமா? என்று எண்ணிப் பாருங்கள்.
சிலர் உளறுகிறார்கள், திராவிடத்தால் வீழ்ந்தோம் - திராவிடத்தை வீழ்த்துவோம் - கழகங்களே இல்லாத தமிழகம் என்று - எத்தனையோ கொம்பன்கள் சொல்லி, இருக்கின்ற இடம் தெரியாமல் போயிருக்கிறார்கள். அதிலே இவர்கள் சேருவதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, வேறொன்றுமில்லை. மலையோடு மோதினால், உடைவது மலையாக இருக்காது - மண்டையாகத்தான் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டிய காலகட்டம். ஆகவே, அதனைப் புரிந்தாகவேண்டும். பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம்
ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்! என்று தன்னுடைய பொதுவாழ்க்கையைத் தொடங்கியவர், இறுதிவரையில் பகுத் தறிவாளர்.
கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்
கலைஞர் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்கி றார்கள், எத்தனையோ செய்திகள், எத்தனையோ பெருமைகள், எத்தனையோ சாதனைகள் அவருடைய வாழ்நாளில். எழுத்தில், பேச்சில், திரைத்துறையில். அவர் ஒரு பல்கலைக் கொள்கலன். அவர் போல் அத்துணை அம்சங்களிலும் முன்னாலே நிற்கக்கூடியவர்கள் யாரும் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும். எதிரிகள்கூட மறுக்கமாட்டார்கள்.
அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இன்றைக்கு மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய செய்தி என்ன? கலைஞ ருடைய பெருமைகளை அடுத்து திருநாவுக்கரசர் அவர்கள் சொல்வார். அன்றைக்கும் சொன்னார்.
போராட்ட உணர்வை நம்முடைய தோழர்கள்
கொஞ்சம்கூட தள்ளி வைக்கக்கூடாது!
நண்பர்களே! அந்தப் பெருமைகளைவிட, நாங்கள் இப் பொழுது உங்களுக்கு நினைவூட்டவேண்டியது - இப்போது நமக்கு ஒரு போராட்டக் குணம் வேண்டும். அந்த போராட்ட உணர்வை நம்முடைய தோழர்கள் கொஞ்சம்கூட தள்ளி வைக்கக்கூடாது. இந்தக் காலகட்டம், அதற்கு மிக முக்கியமான காலகட்டம். அதை சொல்லுவதற்குத்தான் நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன்.
அருமைத் தோழர்களே, எண்ணிப்பாருங்கள்! எதிர்க்கட்சி என்று சொல்லுகின்ற நேரத்தில் - எதிர்நீச்சல் என்பது இருக்கிறதே, அது அவருக்குக் கைவந்த கலை. ஆட்சியில் இருக்கும்பொழுது மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால், எதிர்நீச்சல் என்று வந்துவிட்டால், கலைஞருக்கு நிகர் கலைஞர்தான்.
நெருக்கடி காலம் - இந்த இயக்கத்தையே அழித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். 42 ஆண்டுகளுக்கு முன்பு - வயதானவர்களுக்கு இந்த வரலாறு தெரியும் - இன்றைய இளைஞர்களுக்கு அந்த வரலாறு தெரியாது.
நெருக்கடி காலத்தில் சிறையில் அடிபட்டோம்!
அன்றைக்கு இந்த இயக்கமே இருக்காது என்று சொன்னார்கள். ஆனால், கலைஞர் அவர்கள் அதை அணுகிய முறை இருக்கிறதே, அது எளிதானதா? எத்தனை முறை சிறைச்சாலைகள். சிறையில் அடிபட்டோம்; தளபதி ஸ்டாலின் அடிபட்டார்; ஆற்காடு வீராசாமி அடிபட்டார்; திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் - திராவிடர் கழகத் தோழர்கள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் இதுபோன்ற பல இயக்கத் தோழர்கள் சிறைச்சாலையில் அடிபட்டார்கள் என்பதெல்லாம் ஒரு பக்கத்தில் இருந்தாலும்,
வெளியில் இருந்தவர்களின் நிலை என்ன? என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். கலைஞருக்கு கார் ஓட்டுவார் ஒருவர். அடுத்த நாள் காலையில் நாங்கள் எல்லாம் அவரை வரவேற்போம் - எங்கே தெரியுமா? சிறைச்சாலைக்குள்ளே! கலைஞருக்குக் கார் ஓட்டினால், அடுத்தது சிறைச்சாலைதான் அவருக்கு. ஏனென்றால், கலைஞரை தனிமைப்படுத்தவேண்டும் என்று மற்றவர்கள் நினைத்தார்கள். ஆனால், அப்படி நினைத்தவர்கள் தோற்றார்கள் - கலைஞர் வென்றார்! அதுதான் மிக முக்கியம்.
அவருடைய வெற்றி என்பதை தேர்தல் வெற்றியை வைத்துக் கணக்குப் போடாதீர்கள். அதிலே அவரை வீழ்த்து வதற்கு யாராலும் முடியவில்லை.
கொஞ்சம் சூடு இருந்தால், சுரணை இருந்தால்,
சுயமரியாதை இருந்தால்...
ஆனால், அதைவிட மிக முக்கியம் - அந்தக் காலகட்டத்தில் முரசொலியை அவர் நடத்திய விதம் - திராவிட முன்னேற்றக் கழகத்தை நடத்திய விதம். அதுதான் இந்த அஸ்திவாரம் என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். எதிரிகளுக்கு நினைவூட்ட நான் கடமைப்பட்டு இருக்கிறேன். கழகங்களையெல்லாம் அழித்துவிடுவோம் என்று டில்லியை வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறீர்களே! டில்லிக்குத் தலையாட்டுகிறீர்களே! கொஞ்சம் சூடு இருந்தால், சுரணை இருந்தால், சுயமரியாதை இருந்தால், நீட் தேர்வுக்கு இப்படிப்பட்ட ஒரு கொடுமை - இப்படிப்பட்ட பலிகள் வந்திருக்குமா?
நீங்கள் வேறொன்றும் செய்யவேண்டாம் - விளக்கெண் ணெய் குடிக்கவேண்டியதில்லை - வேப்பெண்ணெய் குடிக்க வேண்டியதில்லை - நீங்கள் ஒன்றும் தண்டால் எடுக்க வேண்டியதில்லை.
இந்த மண்ணுக்கு சமூகநீதி மண் என்ற வரலாறு உண்டு!
ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் சட்டபூர்வமாக - நமக்கு இருக்கிற உரிமை - சட்டமன்றத்தில் மிகத் தெளிவாக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, காங்கிரசு பேரியக்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எல்லோரும் ஒருமித்த குரலில், அரசியல் பார்க்காமல், தமிழ்நாட்டின் நலன் முக்கியம் என்று நினைத்து, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுடைய சமூகநீதிக் கொடி தாழ்ந்து பறக்கக்கூடாது - கீழே இறக்க அனுமதிக்கக் கூடாது - ஆகவே, அந்த நிலை உயர்ந்த நிலையில் இருக்கவேண்டும் என்று பெரியார் மண் - இந்த மண்ணுக்கு சமூகநீதி மண் என்ற வரலாறு உண்டு என்ற அடிப்படையை அவர்கள் தெளிவாகக் காட்டியதன் காரணமாகத்தான், அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள - ஏற்கெனவே காங்கிரசு கொண்டு வந்த தீர்மானமாக - உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையாகக் கொண்டு வந்திருந்தாலும்கூட, அவர்கள் ஜனநாயக உரிமைப்படி, அரசியல் சட்டத்தினுடைய கடமையை அவர்கள் பறிக்கவில்லை - அதிகாரத்தைப் பறிக்கவில்லை.
அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது!
ஒன்றை அவர்கள் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டினார்கள். அது என்னவென்றால், எந்த மாநிலம் நீட் தேர்வை விரும்ப வில்லையோ - அந்த மாநிலத்திற்கு விதிவிலக்கு அளிக்க உரிமை உண்டு. இது அரசமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடியது.
காரணம், ஏற்கெனவே, கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. கல்வி என்பது முழுக்க முழுக்க நாம் முடிவெடுக்கவேண்டிய செய்தி. இதற்கும், டில்லிக்கும் சம்பந்தம் இல்லை. மத்திய அரசுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை.
பிறகு அது நெருக்கடி காலத்தில், ஒத்திசைவுப் பட்டியலுக்கு (கன்கரண்ட் லிஸ்ட்) பொதுப் பட்டியல் என்று தமிழில் மொழிப் பெயர்ப்பார்கள் - அது சரியானது அல்ல. ஒத்திசைவுப் பட்டியல் என்றால், மாநில அரசினுடைய ஒப்புதல் பெற்ற பிறகுதான், இந்தத் துறையில் சட்டம் இயற்ற முடியும். ஆனால், அதை அவர்கள் செய்தார்களா? என்றால், கிடையாது.
நாடாளுமன்ற நிலைக்குழுவில், தெளிவாக சொல்லியிருக் கிறார்கள். எந்த மாநிலம் நீட் தேர்வை விரும்பவில்லையோ அந்த மாநிலத்திற்கு விலக்குக் கொடுங்கள். விலக்குக் கோருவதற்கு மாநிலங்களுக்கு உரிமை உண்டு.
மாநிலங்களுக்கு உள்ள உரிமை!
இது பிச்சையல்ல - சலுகையல்ல - அல்லது மோடியிடமோ, உள்துறையிடமோ கெஞ்சி கேட்கவேண்டியதும் கிடையாது. மாநிலங்களுக்கு உள்ள உரிமை அது.
அந்த உரிமையைப் பயன்படுத்தித்தான், ஒன்றரை ஆண்டுகளுக்குமுன், இதே ஆட்சி இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியது.
இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், திராவிட முன்னேற்ற கழக செயல் தலைவர் அவர்கள் தெளிவாக, தீர்மானம் கொடுத்துப் பேசியிருக்கிறார்கள்.
என்ன பதில் சொன்னார்கள் ஆளுங்கட்சியினர்?
ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் அந்த இரு மசோதாக்களை நாம் நிறைவேற்றினோமே, அது இப்பொழுது எங்கே இருக்கிறது?
தெரியாது என்கிறார்கள்.
குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருக்கிறது என்றால், ஒன்றரை ஆண்டுகாலத்திற்கு அதற்கு என்ன வேலை?
நீங்கள் கடிதம் எழுதுங்கள் குடியரசுத் தலைவருக்கு - ஏற்கெனவே அவர் மிகவும் சங்கடத்தோடு அமர்ந்திருக்கிறார் - அதற்கும், அவருக்கும் சம்பந்தம் கிடையாது என்பதுபோல. ஏற்கெனவே அவர் கோவிலுக்குள் கூட அவரால் உள்ளே செல்ல முடியவில்லை.
கோவிலுக்கு வெளியே படிக்கட்டுகளில் அமர்ந்து வழி பாட்டினை செய்து வரக்கூடிய ஒரு நிலை இருக்கிறது இன்றைய காலகட்டம்.
ஆகவே, நண்பர்களே! நீங்கள் சிந்திக்கவேண்டும்.இங்கே நடைபெறுகிற ஆட்சி ஒன்றரை ஆண்டுகாலம் நடை பெறுகிற ஆட்சி ஒரு பொம்மலாட்ட ஆட்சி - டில்லிக்குத் தலையாட்டுகிற ஆட்சி. எந்த நேரம் டில்லி கயிறை இழுத்தால், நாம் போய்விடுவோம் என்று நினைத்து, அதுவரையில் நாம் ஆட்சியில் இருப்போம் என்று டில்லிக்கு சலாம் போடுகிற ஓர் ஆட்சி என்று சொன்னால், இந்த ஆட்சிக்கு கலைஞருடைய ஆட்சியை எண்ணிப்பாருங்கள்.
கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருக்கும்பொழுது என்ன செய்தார் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும் தோழர்களே!
ஒரே வார்த்தையில் கலைஞர் சொன்னார்,
உறவுக்குக் கைகொடுப்போம்
உரிமைக்குக் குரல் கொடுப்போம்!
என்றார்.
இன்றைக்கு உரிமைக்குக் குரல் கொடுக்காத ஊமையர்களின் ஆட்சி எதற்காகத் தேவை இந்த நாட்டில்? இதைத்தான் நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.
எதைச் செய்தால் கலைஞர் வாழ்வார்? எதைச்
செய்தால் கலைஞர் அவர்களுடைய ஆயுள் நீளும்?
எனவே, கலைஞர் வாழ்க! கலைஞருடைய ஆயுள் வளர்க! என்று நாம் வாழ்த்துவதற்கு இந்தக் கூட்டத்தை நாம் போட்டிருக்கிறோம் என்றால், அதன்மூலமாக, எதைச் செய்தால் கலைஞர் வாழ்வார்? எதைச் செய்தால் கலைஞர் அவர்களுடைய ஆயுள் நீளும்? எதைச் செய்தால் அவருடைய மகிழ்ச்சி, உற்சாகம் ஊற்றெடுத்துப் பெருக்கும்.
மீண்டும் ஒரு மாற்றம் தேவை! அந்த மாற்றம் டில்லியில் மாற்றம்! தமிழகத்தில் மாற்றம். டில்லியில் ஒரு மோடி வித்தை -
இங்கே அந்த மோடி வித்தையைக் கைக்கொண்டி ருக்கக்கூடிய ஒரு ஆட்சி.
மத்தியில் காவி ஆட்சி
இங்கே ஆவி ஆட்சி
என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
எனவே, காவிக்கும் வேலையில்லை - ஆவிக்கும் வேலை யில்லை என்று முடிவெடுக்க - களம் காணுங்கள்! களம் காணுங்கள் என்று சொல்லி என்னுரையை முடிக்கிறேன்.
ஒவ்வொருவரும் களம் காணுகின்ற
வீரர்களாக மாறுங்கள்
இது அறிவார்ந்த அரங்கம் - நீங்கள் அத்துணை பேரும் செயல் வீரர்களாக மாறுங்கள். ஒவ்வொருவரும் களம் காணு கின்ற வீரர்களாக மாறுங்கள். களத்தில் காணுவோம் - உதயசூரியன் ஆட்சி மீண்டும் உதிக்கின்ற வரையில் நாங்கள் உறங்கமாட்டோம் - பணியாற்றுவோம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம் என்ற உணர்வை நீங்கள் பெறுங்கள்!
அதுதான் கலைஞர் வாழ்க! கலைஞர் வாழ்க! கலைஞர் வாழ்க! என்பதற்கு அடையாளமாகும்
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வாழ்க கலைஞர்!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
நீட்டை ஒழிக்கும்வரை போராடுவோம்! பவளவிழா மாநில மாநாட்டைப் பெருவெற்றியாக்குவோம்!!
திராவிட மாணவர் கழக மாநில, மண்டலப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் சூளுரை
சென்னை, ஜூன் 7- திராவிட மாணவர் கழகத்தின் மாநில, மண்டலப் பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் ஜூன் 6-ஆம் தேதி காலை 11.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.
குடியாத்தம் நகர திராவிட மாணவர் கழகச் செயலாளர் கவிஞர் ம.ஜ.சந்தீப் கடவுள் மறுப்பு கூறிட கலந்துரை யாடல் தொடங்கியது.
சென்னை மண்டல திராவிட மாணவர் கழகச் செய லாளர் பா.மணியம்மை வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து. திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார்.
கும்பகோணத்தில் நடைபெறும் திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட செய்ய வேண்டிய பணிகள், திராவிட மாணவர்களின் தீரமிகு சீருடை அணிவகுப்பு குறித்தும், மாநாட்டின் வெற்றிக்குச் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் உரையாற்றினார். தொடர்ந்து, திராவிட மாணவர் கழக மண்டலச் செயலா ளர்கள் புதுச்சேரி சு.மணிபாரதி, கோவை ராசி.பிரபாக ரன், ஈரோடு ப.வெற்றிவேல், கடலூர் ச.வீரமணி, வேலூர் தே.அ.ஓவியா, திருவாரூர் நாத்திகப் பொன்முடி, மாநில திராவிட மாணவர் கழகத்தின் துணைச் செயலாளர்கள் நா.பார்த்திபன், த.மு.யாழ் திலீபன், ஆ.பிரபாகரன், ச.அஜிதன், அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன், கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
திராவிட மாணவர் கழகத்தின் பவளவிழா மாநாடும், அடுத்து வரவிருக்கும் ஓராண்டும் எவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்தவை என்பதையும், நடைபெறவிருக்கும் மாநாட்டுக்கான பணிகள் குறித்தும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உரையாற்றினார்.
திராவிட மாணவர் கழகத்தின் வரலாற்றில் குடந்தை யின் தனித்துவம், கட்டுப்பாட்டுடன் பணியாற்ற வேண் டிய கடப்பாடு ஆகியவற்றை பொறுப்பாளர்களுக்கு எடுத்துரைத்தார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன். தொடர்ந்து நீட் தேர்வு மரணங் கள்,பவளவிழா மாநாடு, அமைப்புப் பணிகள், இயக்க ஏடுகளைப் பரப்புதல் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. (தனியே) வேலூர் மண்டலத்தின் சார்பில் முதல்கட்ட கடைவீதி வசூலின் மூலம் கிடைத்த தொகை ரூ.10000-த்தினை மாநாட்டு நிதியாக வழங்கினர். சென்னை மண்டல தி.க.செயலாளர் கொடுங்கையூர் தே.செ.கோபால் ரூ.5000 மாநாட்டு நன்கொடையாக வழங்கினார்.
நிறைவாக, தலைமையுரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நீட், புதிய கல்விக் கொள்கை, குருகுலக் கல்வி என தொடர்ந்து மத்திய அரசும், அதை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்சும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதையும், இவற்றை முறியடிக்க திராவிடர் கழகம் எடுக்கும் தொடர் முயற்சிகளையும் எடுத்துரைத்தார். திராவிட மாணவர் கழகத் தோழர்கள் நடத்தும் மாநாடும், பேரணியும் பேரெழுச்சியை உண்டாக்கிடும் வகையில் அமைய வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தியதோடு வழிகாட்டல் உரை வழங்கிச் சிறப்பித்தார்.
புதுச்சேரி திராவிடர் மாணவர் கழகச் செயலாளர் ஆ.சூரியா நன்றியுரையாற்றினார். கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் கொடுங்கையூர் கோபால், கழகச் சொற்பொழிவாளர் யாழ் திலீபன், தோழர்கள் அமர்நாத், மு.சந்தீஷ், மு.திலீபன், மு.ராகுல், வி.சி.தமிழ்நேசன், இ.ப.சீர்த்தி, இ.ப.இனநலம், செ.பெ.தொண்டறம், இரா.அரவிந்த், கு.பா.கவிமலர்,கு.பா.அறிவழகன், வீ.அறிவரசு, வீ.அன்பரசு, சி.பரசுராமன், விமல்ராஜ், கலைமணி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் எண்:1 - இரங்கல் தீர்மானம்
நீட் தேர்வுக்காக தமிழகத்தைத் தாண்டியும், தொலை தூர மாவட்டங்களுக்கும் அலைக்கழிக்கப்பட்டு அதனால் உயிரிழந்த பெற்றோர் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி, சிங்கம்புணரி கண்ணன் ஆகியோருக்கும், செஞ்சி பெரு வளூரைச் சேர்ந்த பிரதீபா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீட் தேர்வினால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் மறைவுக்கும், தூய்மையான காற்று, கெட்டுப் போகாத நீராதாரம், நோயற்ற சூழல் வேண்டும் என்ற நோக்கில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் திரண்டெழுந்து போராடிய மக்கள் மீது காவல் துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்ட மாணவி ஸ்னோலின் உள்ளிட்ட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பதினான்கு பேரின் மறைவுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், இவற்றுக்குக் காரணமான மத் திய, மாநில அரசுகளுக்குக் கண்டனத்தையும் இக் கூட் டம் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 2 -தொடரும் நீட் கொடுமைகள்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முழுமனதாக நிறை வேற்றி அனுப்பப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தராமல் காலந்தாழ்த்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும், அதற்கு உரிய அழுத்தம் தராத மாநில அ.தி.மு.க. அர சுக்கும் இக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. நீட் தேர்வைத் திணித்ததோடு மட்டுமல்லா மல், அதிலும் தமிழ்நாட்டிலிருந்து மாணவர்கள் தேர் வாகிவிடக் கூடாது என்னும் தீய நோக்கில், தேர்வுக் கூடங்களை ஒதுக்குதலில் அலைக்கழிப்பு, தமிழில் தரப்பட்ட வினாத்தாளில் திட்டமிட்ட குழப்பங்கள் மூலம் மதிப்பெண் இழக்கச் செய்தல் உள்ளிட்ட கீழ்த்தரச் செயல்களில் இறங்கி, தமிழர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை முற்றாகத் தடுக்கும் மத்திய அரசு, அதற்கு தலையாட்டும் மாநில அரசைக் கண்டிப்பதோடு, நீட் நுழைவுத்தேர்வை முழுமையாக ஒழிக்கும்வரை அனைத் துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து, மக்கள் மன்றங் களில் விழிப்புணர்வூட்டியும், நீதிமன்றங்களில் சட்டரீதியாகவும் போராட்டத்தைத் தொடருவது என்று இக் கூட்டம் உறுதி பூணுகிறது.
தீர்மானம் எண்: 3 -பவளவிழா மாநாடு
திராவிட மாணவர் கழகத்தின் பவளவிழாவையொட்டி, தமிழர் தலைவர் அனுமதியுடன் ஜூலை 8-ஆம் நாள் குடந்தையில் அறிவிக்கப்பட்டுள்ள மாநில மாநாட்டினை மிகுந்த எழுச்சியோடும், வெகு மாணவர்களைத் திரட்டி யும் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண்: 4 - சீருடை அணிவகுப்பு
பெரியாரை சுவாசிப்போம் என்ற சீருடையுடன் திரா விட மாணவர்கள் பங்கேற்கும் அணிவகுப்பை நேர்த்தியு டனும், இயக்கத்துக்கே உரிய கட்டுப்பாட்டுடனும் மிடுக் குடனும் அனைவரும் வியக்கும் வண்ணம் நடத்திக் காட்டுவது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண்: 5 - அமைப்பை வலுவாக்குதல்
சமூக நீதி, பகுத்தறிவு, அறிவியல் சிந்தனை வளர்ப்பு, ஜாதி, -மத, -மது, -பதவி உள்ளிட்ட போதைகளிலிருந்து விடுவிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி திராவிட மாண வர்களைத் திரட்டும் வகையில் பிரச்சாரப் பணிகளை அமைத்து, திராவிட மாணவர் கழகப் பவள விழா மாநாட்டிலும், அதனைத் தொடர்ந்தும் வலுவான அமைப்பாக திராவிட மாணவர் கழகத்தை அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் உருவாக்கும் வகையில் உழைப் பது என்றும் இக் கூட்டம் உறுதியேற்கிறது.
தீர்மானம் எண்: 6 - இயக்க ஏடுகளைப் பரப்புதல்
தந்தை பெரியாரின் கருத்துக்களை மாணவர்களிடம் எளிமையாக கொண்டு சேர்க்கவும், கொள்கை எதிரிகள், குழப்பவாதிகளின் திட்டமிட்ட பிரச்சாரத்தை முறியடித்து பெரியாரை சுவாசித்து பெரு வாழ்வு பெறவும், இயக்க ஏடுகளை கடைக்கோடி வரை, கொண்டு செல்லப் பாடுபடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
சர்வம் ஆர்.எஸ்.எஸ். மயமே!
மத்திய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் உயர் பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நியமனம் குறித்த தகவல் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' (2.6.2018) ஏட்டில் வெளியாகியுள்ளது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் 2005இன் கீழ் நூறு நாள் வேலைத் திட்டமாக 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்' 2005 (என்ஆர்ஜிஇஏ) காங்கிரசு தலைமையிலான மத்திய அரசில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
2005ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய வேலைவாய்ப்பு உத்தரவாத கவுன்சில் அமைக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் உள்ள அனைவருக்கும் நூறு நாள்கள் வேலையை உறுதிப்படுத்துவதற்கான வேலைஉத்தரவாத சட்டம் 2005அய் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க குழு ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
அக்குழுவில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களை அனைத்து மாநிலங்களிலும் நியமித்து வருகிறது.
'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்' 2005இன் கீழ் நூறு நாள் வேலைத்திட்டத்தைக் கண்காணிப்பது மற்றும் நடைமுறைப்படுத்தும் பணிகளை கவுன்சில் உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும். கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஆர்.எஸ்.எஸ். ஏடான பாஞ்சன்யா இதழாசிரியர், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர் மற்றும் ஒரு தொழில்நிறுவன தலைமைச் செயல் அலுவலர் ஒருவர் உள்பட பலர் கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அலுவல் சாரா உறுப்பினர்களாக பல்வேறு மாநிலங்களிலும் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய வேலைவாய்ப்பு உத்தரவாத கவுன்சில் உறுப்பினர்கள் நியமனம்குறித்த அமைச்சக அறி விப்புக்கு எதிராக கடந்த மாதத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தற்போதைய கவுன்சில் குழு ஓராண்டில் காலாவதியாகும் நிலையில், கவுன்சிலில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய உறுப்பினர்களின் பணிக்காலம் 20.6.2018 முதல் ஓராண்டுக்கு இருக்கும்.
டில்லியில் அலுவல் சாரா உறுப்பினராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வார ஏடான பாஞ்சன்யாவின் ஆசிரியர் ஹிதேஷ் சங்கர் கவுன்சிலில் பொறுப்பு வகித்து வருகிறார். அவர்தான் கடந்த ஆண்டில் கவுன்சிலின் பணிகளில் முக்கிய பங்காற்றியவர்.
ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் ஆசீஷ் கவுதம் தொடங்கிய திவ்ய பிரேம் சேவா மிஷன் நிறுவனம்போல் தனி நிறுவனமான டிவைன் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் எனும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உத்தர்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சதுர்வேதி என்பவரை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்நிறுவனங்கள் அரித்துவாரில் உள்ள சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனப் பட்டியல்களில் இடம் பெற்றுள்ளதுடன், கார்ப்பரேட் நிறுவன பங்குதாரர்களாகவும் உள்ளவையாகும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவரான ஏக்நாத் ரானடேவால் தொடங்கப்பட்ட இந்து ஆன்மிக அமைப்பாகிய விவேகானந்தா கேந்திரா அமைப்பைச் சேர்ந்த ஜி.வாசுதேவ் கன்னியாகுமரியிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளார். இந்து தேசம் அமைப்பதற்கான ஆலோசனைக்கான அழைப்பு எனும் தலைப்பில் கூட்டத்தை கடந்த ஆண்டு ராஜஸ்தானில் அவர் நடத்தியதாக அதன் இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது.
கவுன்சிலின் உறுப்பினராக சுதிர் அகர்வால் நியமிக் கப்பட்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்தவரான சுதிர் அகர்வால் தன்னார்வ நிறுவனங்களின் கூட்டமைப்பின் நிறுவனத் தலை வரான தன்னைப்பற்றிக் கூறுகையில், இளமைக்காலந்தொட்டே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் (சுயம் சேவக்காக) இருந்துள்ளதாகக் கூறுகிறார். அகர்வால் ஒரு வழக்குரைஞராக சாமியார் ராம்தேவின் வழக்கில் வாதாடியதை தன்னுடைய முக்கிய பணிகளில் ஒன்றாக கூறியுள்ளார். அமைச்சக அறிவிப்பில் தன்னார்வ நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவராகவே அவரைக் குறிப்பிட்டுள்ளது.
கவுன்சில் உறுப்பினராக விக்ஷூத் முண்ட்கர் என்பவரை அமைச்சகம் நியமித்துள்ளதாக அறிவிப்பில் கூறியுள்ளது. இவர் பெங்களூருவைச் சேர்ந்த ஹூவி ஏர் டெக்னாலஜிஸ் பிரைவேட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரும், கூட்டு நிறுவனரும் ஆவார். புனேவைச் சேர்ந்த பிரிமூவ் இஞ்சினியரிங் நிறுவனத்தின் இயக்குநர் சந்தோஷ் ரகுநாத் கொண்டாலேகர். விவசாய கழிவுகளிலிருந்து பையோகாஸ் பிரித்தெடுக்கும் நிறுவனத்தின் இயக்குநர் ஆவார்.
இவரைப் போன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர்கள், பெரும் தொழிலதிபர்கள் ஆகியோரை அலுவல் சாரா உறுப்பினர்களாக அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை கவுன்சில் உறுப்பினர்களாக, அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிப்பதற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பரிந்துரை செய்துள்ளார்.
கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்கப்படும் இவர்கள் அனைவரும் மாநிலங்களின் பிரதிநிதிகளாகவும், பஞ்சாயத்ராஜ் அமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் கூடுதலாக செயல்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
கவுன்சில் உறுப்பினர்களாக தொடக்கத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அருணா ராய், ஜீன் டிரேஸ், நிகில் டே போன்ற பொருளாதார வல்லுநர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள்தான் வேலை உத்தரவாத சட்ட விதிமுறைகள், கண் காணிப்பு பணிகளை நடைமுறைப்படுத்துவது என்று பிப்ரவரி 2006இல் சட்டம் தொடங்கப்பட்டபோது பணியாற்றியவர்கள் ஆவர். இப்பொழுது எல்லாம் தலைகீழ்தான்!
மத்திய பாஜக அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தின், உயர் பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரையே நியமித்துள்ளது அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வம் ஆர்.எஸ்.எஸ். மயமே!
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் 2005இன் கீழ் நூறு நாள் வேலைத் திட்டமாக 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்' 2005 (என்ஆர்ஜிஇஏ) காங்கிரசு தலைமையிலான மத்திய அரசில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
2005ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய வேலைவாய்ப்பு உத்தரவாத கவுன்சில் அமைக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் உள்ள அனைவருக்கும் நூறு நாள்கள் வேலையை உறுதிப்படுத்துவதற்கான வேலைஉத்தரவாத சட்டம் 2005அய் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க குழு ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
அக்குழுவில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களை அனைத்து மாநிலங்களிலும் நியமித்து வருகிறது.
'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்' 2005இன் கீழ் நூறு நாள் வேலைத்திட்டத்தைக் கண்காணிப்பது மற்றும் நடைமுறைப்படுத்தும் பணிகளை கவுன்சில் உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும். கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஆர்.எஸ்.எஸ். ஏடான பாஞ்சன்யா இதழாசிரியர், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர் மற்றும் ஒரு தொழில்நிறுவன தலைமைச் செயல் அலுவலர் ஒருவர் உள்பட பலர் கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அலுவல் சாரா உறுப்பினர்களாக பல்வேறு மாநிலங்களிலும் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய வேலைவாய்ப்பு உத்தரவாத கவுன்சில் உறுப்பினர்கள் நியமனம்குறித்த அமைச்சக அறி விப்புக்கு எதிராக கடந்த மாதத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தற்போதைய கவுன்சில் குழு ஓராண்டில் காலாவதியாகும் நிலையில், கவுன்சிலில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய உறுப்பினர்களின் பணிக்காலம் 20.6.2018 முதல் ஓராண்டுக்கு இருக்கும்.
டில்லியில் அலுவல் சாரா உறுப்பினராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வார ஏடான பாஞ்சன்யாவின் ஆசிரியர் ஹிதேஷ் சங்கர் கவுன்சிலில் பொறுப்பு வகித்து வருகிறார். அவர்தான் கடந்த ஆண்டில் கவுன்சிலின் பணிகளில் முக்கிய பங்காற்றியவர்.
ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் ஆசீஷ் கவுதம் தொடங்கிய திவ்ய பிரேம் சேவா மிஷன் நிறுவனம்போல் தனி நிறுவனமான டிவைன் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் எனும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உத்தர்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சதுர்வேதி என்பவரை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்நிறுவனங்கள் அரித்துவாரில் உள்ள சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனப் பட்டியல்களில் இடம் பெற்றுள்ளதுடன், கார்ப்பரேட் நிறுவன பங்குதாரர்களாகவும் உள்ளவையாகும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவரான ஏக்நாத் ரானடேவால் தொடங்கப்பட்ட இந்து ஆன்மிக அமைப்பாகிய விவேகானந்தா கேந்திரா அமைப்பைச் சேர்ந்த ஜி.வாசுதேவ் கன்னியாகுமரியிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளார். இந்து தேசம் அமைப்பதற்கான ஆலோசனைக்கான அழைப்பு எனும் தலைப்பில் கூட்டத்தை கடந்த ஆண்டு ராஜஸ்தானில் அவர் நடத்தியதாக அதன் இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது.
கவுன்சிலின் உறுப்பினராக சுதிர் அகர்வால் நியமிக் கப்பட்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்தவரான சுதிர் அகர்வால் தன்னார்வ நிறுவனங்களின் கூட்டமைப்பின் நிறுவனத் தலை வரான தன்னைப்பற்றிக் கூறுகையில், இளமைக்காலந்தொட்டே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் (சுயம் சேவக்காக) இருந்துள்ளதாகக் கூறுகிறார். அகர்வால் ஒரு வழக்குரைஞராக சாமியார் ராம்தேவின் வழக்கில் வாதாடியதை தன்னுடைய முக்கிய பணிகளில் ஒன்றாக கூறியுள்ளார். அமைச்சக அறிவிப்பில் தன்னார்வ நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவராகவே அவரைக் குறிப்பிட்டுள்ளது.
கவுன்சில் உறுப்பினராக விக்ஷூத் முண்ட்கர் என்பவரை அமைச்சகம் நியமித்துள்ளதாக அறிவிப்பில் கூறியுள்ளது. இவர் பெங்களூருவைச் சேர்ந்த ஹூவி ஏர் டெக்னாலஜிஸ் பிரைவேட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரும், கூட்டு நிறுவனரும் ஆவார். புனேவைச் சேர்ந்த பிரிமூவ் இஞ்சினியரிங் நிறுவனத்தின் இயக்குநர் சந்தோஷ் ரகுநாத் கொண்டாலேகர். விவசாய கழிவுகளிலிருந்து பையோகாஸ் பிரித்தெடுக்கும் நிறுவனத்தின் இயக்குநர் ஆவார்.
இவரைப் போன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர்கள், பெரும் தொழிலதிபர்கள் ஆகியோரை அலுவல் சாரா உறுப்பினர்களாக அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை கவுன்சில் உறுப்பினர்களாக, அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிப்பதற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பரிந்துரை செய்துள்ளார்.
கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்கப்படும் இவர்கள் அனைவரும் மாநிலங்களின் பிரதிநிதிகளாகவும், பஞ்சாயத்ராஜ் அமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் கூடுதலாக செயல்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
கவுன்சில் உறுப்பினர்களாக தொடக்கத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அருணா ராய், ஜீன் டிரேஸ், நிகில் டே போன்ற பொருளாதார வல்லுநர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள்தான் வேலை உத்தரவாத சட்ட விதிமுறைகள், கண் காணிப்பு பணிகளை நடைமுறைப்படுத்துவது என்று பிப்ரவரி 2006இல் சட்டம் தொடங்கப்பட்டபோது பணியாற்றியவர்கள் ஆவர். இப்பொழுது எல்லாம் தலைகீழ்தான்!
மத்திய பாஜக அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தின், உயர் பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரையே நியமித்துள்ளது அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வம் ஆர்.எஸ்.எஸ். மயமே!
சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்
தாழ்த்தப்பட்டவர் என்பதால் குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?''
தீண்டாமை ஒழிப்புச் சட்டம் எங்கே? எங்கே? குறட்டை விடுகிறதா?
சென்னை, ஜூன் 7 இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்களும், அவரது துணைவியாரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதைக் கண்டித்தும், மனித உரிமை - தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தியும் திராவிடர் கழகம் சார்பில் இன்று (7.6.2018) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு இந்தியாவின் முதல் குடிமகனான - முப்படைக்கும் தலைவரான குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் தன் துணைவியாருடன் சென் றுள்ளார்.
குடியரசுத் தலைவராக இருந்தால் என்ன? அவர் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராயிற்றே! ஏற்குமா இந்த சனாதனக் கூட்டம்? எனவே, சாமி' கும்பிட அவரை கோவிலுக்குள் நுழையவே அனுமதிக்கவில்லை.
எந்தப் பதவியில் இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் என்றால் கோவிலுக்குள் இடமில்லை என்று கறாராகக் கூறிவிட்டனர். அதன் விளைவு படியில் அமர்ந்து வழிபாடு செய்துவிட்டுப் புறப்பட்டு விட்டார் - 120 கோடி இந்திய மக்களின் முதல் குடிமகன்.
வழிபாடு செய்ய குடியரசுத் தலைவர் கோவிலுக்குள் நுழை யவே அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி எத்தகைய கொடுமை - எவ்வளவுக் கேவலமான ஜாதியின் பெயரால் அவமதிப்பு? ஜாதி ஆணவம்?
குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர் களும், அவர்தம் துணைவியாரும் கோவில் கருவறைக்குள் நுழைய முடியவில்லையே! கோவிலுக்குள் செல்வதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே! இதற்குக் காரணம் என்ன? குடியரசுத் தலைவராக இருந்தாலும், அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால்தானே இந்தக் கொடுமை!
இது மன்னிக்கப்பட முடியாத மிகப்பெரிய குற்றமே - தீண் டாமை ஒழிப்புச் சட்டம் என்ன செய்கிறது? இதில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள், நிருவாகிகள் பிணையில் வர முடியாத சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டாமா?
இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினையல்ல - மனித உரிமைப் பிரச்சினை - சட்டத்தின் மரியாதையைக் காப்பாற்றும் பிரச் சினை. எனவே, குடியரசுத் தலைவரையே கோவிலுக்குள் நுழைய விடாததைக் கண்டித்து சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் சார்பில் முதற்கட்டமாக 7.6.2018 அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று (7.6.2018) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஒத்தக் கருத்துள்ள அனைவருடன் இணைந்து திராவிடர் கழகம் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில்....
தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்று முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டிருக்கும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.
போராடுவோம் வெற்றி பெறுவோம்!
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்! போன்ற ஒலி முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் விண்ணதிர முழங்கப்பட்டன.
என தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்கள் ஒலி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திருவள்ளூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வழக்குரைஞர் சைதை சுப்பிரமணி, கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் நிகழ்த்தினர்.
முன்னதாக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன் வரவேற்புரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் இ.ச.இன்பக்கனி, சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மண்டல செயலாளர் தே.செ. கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் த.ஆனந்தன், செயலாளர் இரா.விஜயகுமார், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு இந்தியாவின் முதல் குடிமகனான - முப்படைக்கும் தலைவரான குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் தன் துணைவியாருடன் சென் றுள்ளார்.
குடியரசுத் தலைவராக இருந்தால் என்ன? அவர் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராயிற்றே! ஏற்குமா இந்த சனாதனக் கூட்டம்? எனவே, சாமி' கும்பிட அவரை கோவிலுக்குள் நுழையவே அனுமதிக்கவில்லை.
எந்தப் பதவியில் இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் என்றால் கோவிலுக்குள் இடமில்லை என்று கறாராகக் கூறிவிட்டனர். அதன் விளைவு படியில் அமர்ந்து வழிபாடு செய்துவிட்டுப் புறப்பட்டு விட்டார் - 120 கோடி இந்திய மக்களின் முதல் குடிமகன்.
வழிபாடு செய்ய குடியரசுத் தலைவர் கோவிலுக்குள் நுழை யவே அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி எத்தகைய கொடுமை - எவ்வளவுக் கேவலமான ஜாதியின் பெயரால் அவமதிப்பு? ஜாதி ஆணவம்?
குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர் களும், அவர்தம் துணைவியாரும் கோவில் கருவறைக்குள் நுழைய முடியவில்லையே! கோவிலுக்குள் செல்வதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே! இதற்குக் காரணம் என்ன? குடியரசுத் தலைவராக இருந்தாலும், அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால்தானே இந்தக் கொடுமை!
இது மன்னிக்கப்பட முடியாத மிகப்பெரிய குற்றமே - தீண் டாமை ஒழிப்புச் சட்டம் என்ன செய்கிறது? இதில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள், நிருவாகிகள் பிணையில் வர முடியாத சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டாமா?
இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினையல்ல - மனித உரிமைப் பிரச்சினை - சட்டத்தின் மரியாதையைக் காப்பாற்றும் பிரச் சினை. எனவே, குடியரசுத் தலைவரையே கோவிலுக்குள் நுழைய விடாததைக் கண்டித்து சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் சார்பில் முதற்கட்டமாக 7.6.2018 அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று (7.6.2018) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஒத்தக் கருத்துள்ள அனைவருடன் இணைந்து திராவிடர் கழகம் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில்....
தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்று முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டிருக்கும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.
போராடுவோம் வெற்றி பெறுவோம்!
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்! போன்ற ஒலி முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் விண்ணதிர முழங்கப்பட்டன.
என தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்கள் ஒலி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திருவள்ளூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வழக்குரைஞர் சைதை சுப்பிரமணி, கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் நிகழ்த்தினர்.
முன்னதாக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன் வரவேற்புரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் இ.ச.இன்பக்கனி, சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மண்டல செயலாளர் தே.செ. கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் த.ஆனந்தன், செயலாளர் இரா.விஜயகுமார், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற வகையில் இந்திய அரசே சட்டம் கொண்டுவர வேண்டும்
*இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவரை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடை செய்வதா?
*தீண்டாமை ஒழிப்புக்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்பட சட்டத் திருத்தம் தேவை!
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆவேச உரை - பேட்டி
சென்னை,ஜூன்7ராஜஸ்தானில்கோவிலுக்குள்நுழை வதற்கு இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுமதி மறுத் திருப்பது கண்டிக்கத்தக்கது; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கு வழிவகுக்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தையே திருத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தினார்.
இன்று (7.6.2018) சென்னை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு: தேசிய அவமானம்
வேறு கிடையவே கிடையாது!
பாரதீய ஜனதா கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில், அஜ்மீர் மாவட்டம் புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள், குடும்பத்தோடு போய் கும்பிடுவதற்காகச் சென்றிருக்கிறார்.
அங்கே அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த வர் என்கிற காரணத்திற்காக குடியரசுத் தலைவரை நாங்கள் உள்ளே அனுமதிக்கமாட்டோம். எந்தத் தாழ்த் தப்பட்டவரையும் நாங்கள் இந்தக் கோவிலுக்குள் அனு மதிப்பதில்லை என்று சொல்லி, குடும்பத்தோடு சென்ற குடியரசுத் தலைவரை தடுத்து நிறுத்தி விட்டனர்.
அதன் காரணமாக, அவமானப்படுத்தப்பட்ட குடிய ரசுத் தலைவர், நமது இந்திய குடியரசுத் தலைவர் வேறு வழியில்லாமல், படிக்கட்டுகளில் அமர்ந்து வழிபாடு செய்து திரும்பியிருக்கிறார் என்கிற செய்தி இருக்கிறதே, இதைவிட தேசிய அவமானம் வேறு கிடையவே கிடை யாது.
இந்திய அரசியல் சட்டத்தினுடைய 17 ஆவது விதி, தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்வது எவ்வளவு நடைமுறைப் போலித்தனம் என்பது விளங்கவில்லையா? குடியரசுத் தலைவரையே கூட கோவிலுக்குள் விடவில்லை என்று சொன்னால், ஜாதி வெறி, தீண்டாமைக் கொடுமை இந்த நாட்டில் எவ்வளவு அதிகம் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
பெரியாரின் அந்தத் தொலைநோக்கு
எவ்வளவு சரியானது!
இந்திய அரசியல் சட்டப்படி, அவர் நாட்டின் முதல் குடிமகன் என்பது மட்டுமல்ல, அதைவிட முப்படை களுக்கும் அவர்தான் சுப்ரீம் கமாண்டர்!' அவர் ஆணையிட்டால், முப்படைகளும் எந்த நாட்டின்மீதும் படையெடுக்கலாம். அவ்வளவு சக்தி வாய்ந்த ஒருவருக்கு, அரசியல் சட்டம் அதிகாரம் கொடுத்திருந்தும், சனாதனம், இந்துத்துவா சக்திகள் அவரை பிரம்மா கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்று சொன்னால், அவர் ஒன்றும் கோவிலுக்குள் சென்று சிலையை உடைக்கச் செல்லவில்லை. அவர் கும்பிடுவதற்காகத்தான் சென்றார் - அப்படிப்பட்டவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்று சொன்னால், இந்த நாட்டில், ஜாதி ஒழிப்பு, தீண் டாமை ஒழிப்பு என்பது எவ்வளவு விரைந்து வேகமாக செயல்படவேண்டும் என்கிற பெரியாரின் அந்தத் தொலை நோக்கு எவ்வளவு சரியானது என்பதை நினைத்துப் பாருங்கள்.
எனவேதான், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிற சட்டம் இருக்கிறதே, அது அகில இந்தியா முழுவதும் வரவேண்டிய ஒரு சட்டமாகும். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, எல்லா மாநிலங்களுக்கும் வரவேண்டும், எல்லோரும் கட்சி வேறுபாடின்றி, ஜாதி வேறுபாடின்றி அனைவரும் அதனை வரவேற்க வேண்டும்.
இது ஒரு மனித உரிமைப் பிரச்சினை; கடவுளைக் கும்பிடுகிற பிரச்சினையல்ல. அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக, அவர் எவ்வளவு பெரிய பதவிக்குப் போனாலும்கூட, அவரால் இந்த நாட்டில் கடவுளைக்கூட கும்பிட முடியாது என்று சொன்னால், இதைவிட மானக்கேடு, இதைவிட வெட்கக்கேடு வேறு இருக்க முடியுமா?
இந்தச் செய்தி பெரும்பாலும் மறைக்கப்பட்டு விட்டது. தவறான விளக்கங்கள் சொல்லப்பட்டன. அவருடைய துணைவியாருக்கு மூட்டு வலி அதனால்தான் கோவி லுக்குள் போகவில்லை என்று ஒரு சமாதானம் சொன் னார்கள். அவருடைய துணைவியாருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னால், இவராவது கோவிலுக்குள் சென்றிருக்கலாம் அல்லவா! அது சரியான சமாதானம் அல்ல.
எனவேதான், உண்மையை மூடி மறைக்கக்கூடாது,. புண்ணை மூடி மறைத்தால், புற்றுநோயை மூடி மறைத்தால் அது ஆளுக்கு ஆபத்து - நாட்டுக்கு ஆபத்து!.
எனவேதான், ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்பது எவ்வளவு தலையானது என்பது இந்தச் சம்பவம் மிகத் தெளிவாக வலியுறுத்துகிறது.
இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய
மனித உரிமைப் போராளிகள்
ஏற்கெனவே ஜெகஜீவன்ராம் அவமானப்படுத்தப்பட் டார், ராணுவ அமைச்சராக இருந்தபொழுது அது நடந்தது; இப்பொழுது குடியரசுத் தலைவரே அவமானப் படுத்தப்பட்டு இருக்கிறார். மோடி ஆட்சியில் இதற்கு என்ன பதில்? இதைத்தான் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய மனித உரிமைப் போராளிகள் கேட்கவேண்டும்.
எனவேதான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம். இங்கே மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.
செய்தியாளர்: தலித் மக்களுடைய பாதுகாவலனாக பா.ஜ.க. இருக்கிறது. பா.ஜ.க. தலைவர்கள் எல்லாம் தலித் வீட்டிற்குச் சென்று சாப்பிடுகிறார்களே, இந்த சம்பவத்தை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள்?
தமிழர் தலைவர்: இந்தக் கேள்வி அவர்களை நோக்கிய கேள்வி. அவர்களிடம் எப்பொழுதுமே இரட்டை வேடம் உண்டு. பேசுநா இரண்டுடையாய் போற்றி! போற்றி!! என்று அண்ணா சொன்னார். அதுபோன்று இரட்டை வேடம் - இரட்டைக் குரல் என்பதற்கு இது அடையாளம். இல்லையானால், இந்த நிகழ்ச்சி நடைபெற்றதற்கு ஒரு வரிடமிருந்தும் கண்டனங்கள் வரவில்லை.
எனவே, இதிலிருந்து அவர்கள், ராம்நாத் கோவிந்த் அவர்களை வாக்கு வங்கிக்காக குடியரசுத் தலைவராக - பொம்மையாகப் பயன்படுத்தி இருக்கிறார்களே தவிர - தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினுடைய விடுதலைக்காக அவரைப் பயன்படுத்தவில்லை என்பது இங்கே அப்பட்ட மாக வெளியாகி இருக்கிறது.
அம்மா ஆட்சி என்று சொல்கிறவர்கள்
உடனடியாக செய்யவேண்டாமா?
செய்தியாளர்: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிற குரல் தமிழகத்தில் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறது?
தமிழர் தலைவர்: அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராக வேண்டும் என்பதற்கு உச்சநீதிமன்றத்தில் எந்தத் தடையும் இல்லை. அந்தச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி செயல்படுத்தவேண்டும். கலைஞர் கொண்டு வந்த சட்டம் என்றாலும், எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபொழுது அவரும் சட்டமன்றத்தில் உறுதிமொழி கொடுத்திருக்கிறார்.
அந்த வழியில் இப்பொழுது இருக்கிற மாநில ஆட்சி - அம்மா வழியில் ஆட்சி - அண்ணா வழியில் ஆட்சி - எம்.ஜி.ஆர். வழியில் ஆட்சி என்று சொல்கிறவர்கள் உடனடியாக இதனை செய்யவேண்டாமா?.
இந்த சட்டம் தமிழ்நாட்டில் இப்பொழுது இருக்கிறது. அனைத்து இந்திய அளவில் நடைமுறைக்குக் கொண்டு வர நாடாளுமன்றத்திலேயே இந்தச் சட்டத்தை நிறை வேற்றவேண்டும்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
Subscribe to:
Posts (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணையினை கல்விக் கூடங்களுக்கு அனுப்பி உள்ளார். (தனியே காண்க) இப்படி ஓ...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் சில பொருள்களைக் கூவி விற்பதுண்டு - நாகரிகம் வளர்ந்து வரும் காலத்தில் இதுபோன்ற கூவும் குரல்களைக் கேட்பது ...