Thursday, June 7, 2018

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தாழ்த்தப்பட்டவர் என்பதால் குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?''
தீண்டாமை ஒழிப்புச் சட்டம் எங்கே? எங்கே? குறட்டை விடுகிறதா?


|

சென்னை, ஜூன் 7 இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்களும், அவரது துணைவியாரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதைக் கண்டித்தும், மனித உரிமை - தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தியும் திராவிடர் கழகம் சார்பில் இன்று (7.6.2018) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு இந்தியாவின் முதல் குடிமகனான - முப்படைக்கும் தலைவரான குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் தன் துணைவியாருடன் சென் றுள்ளார்.

குடியரசுத் தலைவராக இருந்தால் என்ன? அவர் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராயிற்றே! ஏற்குமா இந்த சனாதனக் கூட்டம்? எனவே, சாமி' கும்பிட அவரை கோவிலுக்குள் நுழையவே அனுமதிக்கவில்லை.

எந்தப் பதவியில் இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் என்றால் கோவிலுக்குள் இடமில்லை என்று கறாராகக் கூறிவிட்டனர். அதன் விளைவு படியில் அமர்ந்து வழிபாடு செய்துவிட்டுப் புறப்பட்டு விட்டார் - 120 கோடி இந்திய மக்களின் முதல் குடிமகன்.

வழிபாடு செய்ய குடியரசுத் தலைவர் கோவிலுக்குள் நுழை யவே அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி எத்தகைய கொடுமை - எவ்வளவுக் கேவலமான ஜாதியின் பெயரால் அவமதிப்பு? ஜாதி ஆணவம்?

குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர் களும், அவர்தம் துணைவியாரும் கோவில் கருவறைக்குள் நுழைய முடியவில்லையே! கோவிலுக்குள் செல்வதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே! இதற்குக் காரணம் என்ன? குடியரசுத் தலைவராக இருந்தாலும், அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால்தானே இந்தக் கொடுமை!

இது மன்னிக்கப்பட முடியாத மிகப்பெரிய குற்றமே - தீண் டாமை ஒழிப்புச் சட்டம் என்ன செய்கிறது? இதில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள், நிருவாகிகள் பிணையில் வர முடியாத சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டாமா?

இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினையல்ல - மனித உரிமைப் பிரச்சினை - சட்டத்தின் மரியாதையைக் காப்பாற்றும் பிரச் சினை. எனவே, குடியரசுத் தலைவரையே கோவிலுக்குள் நுழைய விடாததைக் கண்டித்து சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் சார்பில் முதற்கட்டமாக 7.6.2018 அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று (7.6.2018) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஒத்தக் கருத்துள்ள அனைவருடன் இணைந்து திராவிடர் கழகம் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில்....

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்று முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டிருக்கும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.

போராடுவோம் வெற்றி பெறுவோம்!

வெற்றி கிட்டும் வரை போராடுவோம்! போன்ற ஒலி முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் விண்ணதிர முழங்கப்பட்டன.

என தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்கள் ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  திருவள்ளூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வழக்குரைஞர் சைதை சுப்பிரமணி, கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் நிகழ்த்தினர்.

முன்னதாக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன் வரவேற்புரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் இ.ச.இன்பக்கனி, சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மண்டல செயலாளர் தே.செ. கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் த.ஆனந்தன், செயலாளர் இரா.விஜயகுமார், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...