Thursday, June 7, 2018

நீட்டை ஒழிக்கும்வரை போராடுவோம்! பவளவிழா மாநில மாநாட்டைப் பெருவெற்றியாக்குவோம்!!

திராவிட மாணவர் கழக மாநில, மண்டலப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் சூளுரை

சென்னை, ஜூன் 7- திராவிட மாணவர் கழகத்தின் மாநில, மண்டலப் பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் ஜூன் 6-ஆம் தேதி காலை 11.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

குடியாத்தம் நகர திராவிட மாணவர் கழகச் செயலாளர் கவிஞர் ம.ஜ.சந்தீப் கடவுள் மறுப்பு கூறிட கலந்துரை யாடல் தொடங்கியது.

சென்னை மண்டல திராவிட மாணவர் கழகச் செய லாளர் பா.மணியம்மை வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து. திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார்.

கும்பகோணத்தில் நடைபெறும் திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட செய்ய வேண்டிய பணிகள், திராவிட மாணவர்களின் தீரமிகு சீருடை அணிவகுப்பு குறித்தும், மாநாட்டின் வெற்றிக்குச் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் உரையாற்றினார். தொடர்ந்து, திராவிட மாணவர் கழக மண்டலச் செயலா ளர்கள் புதுச்சேரி சு.மணிபாரதி, கோவை ராசி.பிரபாக ரன், ஈரோடு ப.வெற்றிவேல், கடலூர் ச.வீரமணி, வேலூர் தே.அ.ஓவியா, திருவாரூர் நாத்திகப் பொன்முடி, மாநில திராவிட மாணவர் கழகத்தின் துணைச் செயலாளர்கள் நா.பார்த்திபன், த.மு.யாழ் திலீபன், ஆ.பிரபாகரன், ச.அஜிதன், அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன், கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

திராவிட மாணவர் கழகத்தின் பவளவிழா மாநாடும், அடுத்து வரவிருக்கும் ஓராண்டும் எவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்தவை என்பதையும், நடைபெறவிருக்கும் மாநாட்டுக்கான பணிகள் குறித்தும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உரையாற்றினார்.

திராவிட மாணவர் கழகத்தின் வரலாற்றில் குடந்தை யின் தனித்துவம், கட்டுப்பாட்டுடன் பணியாற்ற வேண் டிய கடப்பாடு ஆகியவற்றை பொறுப்பாளர்களுக்கு எடுத்துரைத்தார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன். தொடர்ந்து நீட் தேர்வு மரணங் கள்,பவளவிழா மாநாடு, அமைப்புப் பணிகள், இயக்க ஏடுகளைப் பரப்புதல் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. (தனியே) வேலூர் மண்டலத்தின் சார்பில் முதல்கட்ட கடைவீதி வசூலின் மூலம் கிடைத்த தொகை ரூ.10000-த்தினை மாநாட்டு நிதியாக வழங்கினர். சென்னை மண்டல தி.க.செயலாளர் கொடுங்கையூர் தே.செ.கோபால் ரூ.5000 மாநாட்டு நன்கொடையாக வழங்கினார்.

நிறைவாக, தலைமையுரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நீட், புதிய கல்விக் கொள்கை, குருகுலக் கல்வி என தொடர்ந்து மத்திய அரசும், அதை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்சும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதையும், இவற்றை முறியடிக்க திராவிடர் கழகம் எடுக்கும் தொடர் முயற்சிகளையும் எடுத்துரைத்தார். திராவிட மாணவர் கழகத் தோழர்கள் நடத்தும் மாநாடும், பேரணியும் பேரெழுச்சியை உண்டாக்கிடும் வகையில் அமைய வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தியதோடு வழிகாட்டல் உரை வழங்கிச் சிறப்பித்தார்.

புதுச்சேரி திராவிடர் மாணவர் கழகச் செயலாளர் ஆ.சூரியா நன்றியுரையாற்றினார். கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் கொடுங்கையூர் கோபால், கழகச் சொற்பொழிவாளர் யாழ் திலீபன், தோழர்கள் அமர்நாத், மு.சந்தீஷ், மு.திலீபன், மு.ராகுல், வி.சி.தமிழ்நேசன், இ.ப.சீர்த்தி, இ.ப.இனநலம், செ.பெ.தொண்டறம், இரா.அரவிந்த், கு.பா.கவிமலர்,கு.பா.அறிவழகன், வீ.அறிவரசு, வீ.அன்பரசு, சி.பரசுராமன், விமல்ராஜ், கலைமணி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் எண்:1 - இரங்கல் தீர்மானம்

நீட் தேர்வுக்காக தமிழகத்தைத் தாண்டியும், தொலை தூர மாவட்டங்களுக்கும் அலைக்கழிக்கப்பட்டு அதனால் உயிரிழந்த பெற்றோர் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி, சிங்கம்புணரி கண்ணன் ஆகியோருக்கும், செஞ்சி பெரு வளூரைச் சேர்ந்த பிரதீபா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீட் தேர்வினால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் மறைவுக்கும்,  தூய்மையான காற்று, கெட்டுப் போகாத நீராதாரம், நோயற்ற சூழல் வேண்டும் என்ற நோக்கில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் திரண்டெழுந்து போராடிய மக்கள் மீது காவல் துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்ட மாணவி ஸ்னோலின் உள்ளிட்ட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பதினான்கு பேரின் மறைவுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், இவற்றுக்குக் காரணமான மத் திய, மாநில அரசுகளுக்குக் கண்டனத்தையும் இக் கூட் டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 2 -தொடரும் நீட் கொடுமைகள்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முழுமனதாக நிறை வேற்றி அனுப்பப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தராமல் காலந்தாழ்த்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும், அதற்கு உரிய அழுத்தம் தராத மாநில அ.தி.மு.க. அர சுக்கும் இக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. நீட் தேர்வைத் திணித்ததோடு மட்டுமல்லா மல், அதிலும் தமிழ்நாட்டிலிருந்து மாணவர்கள் தேர் வாகிவிடக் கூடாது என்னும் தீய நோக்கில், தேர்வுக் கூடங்களை ஒதுக்குதலில் அலைக்கழிப்பு, தமிழில் தரப்பட்ட வினாத்தாளில் திட்டமிட்ட குழப்பங்கள் மூலம் மதிப்பெண் இழக்கச் செய்தல் உள்ளிட்ட கீழ்த்தரச் செயல்களில் இறங்கி, தமிழர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை முற்றாகத் தடுக்கும் மத்திய அரசு, அதற்கு தலையாட்டும் மாநில அரசைக் கண்டிப்பதோடு, நீட் நுழைவுத்தேர்வை முழுமையாக ஒழிக்கும்வரை அனைத் துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து,  மக்கள் மன்றங் களில் விழிப்புணர்வூட்டியும், நீதிமன்றங்களில் சட்டரீதியாகவும் போராட்டத்தைத் தொடருவது என்று இக் கூட்டம் உறுதி பூணுகிறது.

தீர்மானம் எண்: 3 -பவளவிழா மாநாடு

திராவிட மாணவர் கழகத்தின் பவளவிழாவையொட்டி, தமிழர் தலைவர் அனுமதியுடன் ஜூலை 8-ஆம் நாள் குடந்தையில் அறிவிக்கப்பட்டுள்ள மாநில மாநாட்டினை மிகுந்த எழுச்சியோடும், வெகு மாணவர்களைத் திரட்டி யும் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 4 - சீருடை அணிவகுப்பு

பெரியாரை சுவாசிப்போம் என்ற சீருடையுடன் திரா விட மாணவர்கள் பங்கேற்கும் அணிவகுப்பை நேர்த்தியு டனும், இயக்கத்துக்கே உரிய கட்டுப்பாட்டுடனும் மிடுக் குடனும்  அனைவரும் வியக்கும் வண்ணம் நடத்திக் காட்டுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 5 - அமைப்பை வலுவாக்குதல்

சமூக நீதி, பகுத்தறிவு, அறிவியல் சிந்தனை வளர்ப்பு, ஜாதி, -மத, -மது, -பதவி உள்ளிட்ட போதைகளிலிருந்து விடுவிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி திராவிட மாண வர்களைத் திரட்டும் வகையில் பிரச்சாரப் பணிகளை அமைத்து, திராவிட மாணவர் கழகப் பவள விழா மாநாட்டிலும், அதனைத் தொடர்ந்தும் வலுவான அமைப்பாக திராவிட மாணவர் கழகத்தை அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் உருவாக்கும் வகையில் உழைப் பது என்றும் இக் கூட்டம் உறுதியேற்கிறது.

தீர்மானம் எண்: 6 - இயக்க ஏடுகளைப் பரப்புதல்

தந்தை பெரியாரின் கருத்துக்களை மாணவர்களிடம் எளிமையாக கொண்டு சேர்க்கவும், கொள்கை எதிரிகள், குழப்பவாதிகளின் திட்டமிட்ட பிரச்சாரத்தை முறியடித்து பெரியாரை சுவாசித்து பெரு வாழ்வு பெறவும், இயக்க ஏடுகளை கடைக்கோடி வரை, கொண்டு செல்லப் பாடுபடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...