Thursday, June 7, 2018

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற வகையில் இந்திய அரசே சட்டம் கொண்டுவர வேண்டும்




*இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவரை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடை செய்வதா?

*தீண்டாமை ஒழிப்புக்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்பட சட்டத் திருத்தம் தேவை!

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆவேச உரை - பேட்டி

சென்னை,ஜூன்7ராஜஸ்தானில்கோவிலுக்குள்நுழை வதற்கு இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுமதி மறுத் திருப்பது கண்டிக்கத்தக்கது; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கு வழிவகுக்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தையே திருத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தினார்.

இன்று (7.6.2018) சென்னை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:  தேசிய அவமானம்

வேறு கிடையவே கிடையாது!


பாரதீய ஜனதா கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில், அஜ்மீர் மாவட்டம் புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள், குடும்பத்தோடு போய் கும்பிடுவதற்காகச் சென்றிருக்கிறார்.

அங்கே அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த வர் என்கிற காரணத்திற்காக குடியரசுத் தலைவரை நாங்கள் உள்ளே அனுமதிக்கமாட்டோம். எந்தத் தாழ்த் தப்பட்டவரையும் நாங்கள் இந்தக் கோவிலுக்குள் அனு மதிப்பதில்லை என்று சொல்லி, குடும்பத்தோடு சென்ற குடியரசுத் தலைவரை தடுத்து நிறுத்தி விட்டனர்.

அதன் காரணமாக, அவமானப்படுத்தப்பட்ட குடிய ரசுத் தலைவர், நமது இந்திய குடியரசுத் தலைவர் வேறு வழியில்லாமல்,  படிக்கட்டுகளில் அமர்ந்து வழிபாடு செய்து திரும்பியிருக்கிறார் என்கிற செய்தி இருக்கிறதே, இதைவிட தேசிய அவமானம் வேறு கிடையவே கிடை யாது.

இந்திய அரசியல் சட்டத்தினுடைய 17 ஆவது விதி, தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்வது எவ்வளவு நடைமுறைப் போலித்தனம் என்பது விளங்கவில்லையா? குடியரசுத் தலைவரையே கூட கோவிலுக்குள் விடவில்லை என்று சொன்னால், ஜாதி வெறி, தீண்டாமைக் கொடுமை இந்த நாட்டில் எவ்வளவு அதிகம் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

பெரியாரின் அந்தத் தொலைநோக்கு

எவ்வளவு சரியானது!

இந்திய அரசியல் சட்டப்படி, அவர் நாட்டின் முதல் குடிமகன் என்பது மட்டுமல்ல, அதைவிட முப்படை களுக்கும் அவர்தான் சுப்ரீம் கமாண்டர்!' அவர் ஆணையிட்டால், முப்படைகளும் எந்த நாட்டின்மீதும் படையெடுக்கலாம். அவ்வளவு சக்தி வாய்ந்த ஒருவருக்கு, அரசியல் சட்டம் அதிகாரம் கொடுத்திருந்தும், சனாதனம், இந்துத்துவா சக்திகள் அவரை பிரம்மா கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்று சொன்னால், அவர் ஒன்றும் கோவிலுக்குள் சென்று சிலையை உடைக்கச் செல்லவில்லை. அவர் கும்பிடுவதற்காகத்தான் சென்றார் - அப்படிப்பட்டவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்று சொன்னால், இந்த நாட்டில், ஜாதி ஒழிப்பு, தீண் டாமை ஒழிப்பு என்பது எவ்வளவு விரைந்து வேகமாக செயல்படவேண்டும் என்கிற பெரியாரின் அந்தத் தொலை நோக்கு எவ்வளவு சரியானது என்பதை நினைத்துப் பாருங்கள்.

எனவேதான், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிற சட்டம் இருக்கிறதே, அது அகில இந்தியா முழுவதும் வரவேண்டிய ஒரு சட்டமாகும். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, எல்லா மாநிலங்களுக்கும் வரவேண்டும், எல்லோரும் கட்சி வேறுபாடின்றி, ஜாதி வேறுபாடின்றி அனைவரும் அதனை வரவேற்க வேண்டும்.

இது ஒரு மனித உரிமைப்  பிரச்சினை; கடவுளைக் கும்பிடுகிற பிரச்சினையல்ல. அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக, அவர் எவ்வளவு பெரிய பதவிக்குப் போனாலும்கூட, அவரால் இந்த நாட்டில் கடவுளைக்கூட கும்பிட முடியாது என்று சொன்னால், இதைவிட மானக்கேடு, இதைவிட வெட்கக்கேடு வேறு இருக்க முடியுமா?

இந்தச் செய்தி பெரும்பாலும் மறைக்கப்பட்டு விட்டது. தவறான விளக்கங்கள் சொல்லப்பட்டன. அவருடைய துணைவியாருக்கு மூட்டு வலி அதனால்தான் கோவி லுக்குள் போகவில்லை என்று ஒரு  சமாதானம் சொன் னார்கள். அவருடைய துணைவியாருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னால், இவராவது கோவிலுக்குள் சென்றிருக்கலாம் அல்லவா! அது சரியான சமாதானம் அல்ல.

எனவேதான், உண்மையை மூடி மறைக்கக்கூடாது,. புண்ணை மூடி மறைத்தால், புற்றுநோயை மூடி மறைத்தால் அது ஆளுக்கு ஆபத்து - நாட்டுக்கு ஆபத்து!.

எனவேதான், ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்பது எவ்வளவு தலையானது என்பது இந்தச் சம்பவம் மிகத் தெளிவாக வலியுறுத்துகிறது.

இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய

மனித உரிமைப் போராளிகள்


ஏற்கெனவே ஜெகஜீவன்ராம் அவமானப்படுத்தப்பட் டார், ராணுவ அமைச்சராக இருந்தபொழுது அது நடந்தது; இப்பொழுது குடியரசுத் தலைவரே அவமானப் படுத்தப்பட்டு இருக்கிறார். மோடி ஆட்சியில் இதற்கு என்ன பதில்? இதைத்தான் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய மனித உரிமைப் போராளிகள் கேட்கவேண்டும்.

எனவேதான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம். இங்கே மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.

செய்தியாளர்: தலித் மக்களுடைய பாதுகாவலனாக பா.ஜ.க. இருக்கிறது. பா.ஜ.க. தலைவர்கள் எல்லாம் தலித் வீட்டிற்குச் சென்று சாப்பிடுகிறார்களே, இந்த சம்பவத்தை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

தமிழர் தலைவர்: இந்தக் கேள்வி அவர்களை நோக்கிய கேள்வி. அவர்களிடம் எப்பொழுதுமே இரட்டை வேடம் உண்டு. பேசுநா இரண்டுடையாய் போற்றி! போற்றி!! என்று அண்ணா சொன்னார். அதுபோன்று இரட்டை வேடம் - இரட்டைக் குரல் என்பதற்கு இது அடையாளம். இல்லையானால், இந்த நிகழ்ச்சி நடைபெற்றதற்கு ஒரு வரிடமிருந்தும் கண்டனங்கள் வரவில்லை.

எனவே, இதிலிருந்து அவர்கள், ராம்நாத் கோவிந்த் அவர்களை வாக்கு வங்கிக்காக குடியரசுத் தலைவராக - பொம்மையாகப் பயன்படுத்தி இருக்கிறார்களே தவிர - தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினுடைய விடுதலைக்காக அவரைப் பயன்படுத்தவில்லை என்பது இங்கே அப்பட்ட மாக வெளியாகி இருக்கிறது.

அம்மா ஆட்சி என்று சொல்கிறவர்கள்

உடனடியாக செய்யவேண்டாமா?


செய்தியாளர்: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிற குரல் தமிழகத்தில் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறது?

தமிழர் தலைவர்: அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராக வேண்டும் என்பதற்கு உச்சநீதிமன்றத்தில் எந்தத் தடையும் இல்லை. அந்தச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி செயல்படுத்தவேண்டும். கலைஞர் கொண்டு வந்த சட்டம் என்றாலும், எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபொழுது அவரும் சட்டமன்றத்தில் உறுதிமொழி கொடுத்திருக்கிறார்.

அந்த வழியில் இப்பொழுது இருக்கிற மாநில ஆட்சி - அம்மா வழியில் ஆட்சி - அண்ணா வழியில் ஆட்சி - எம்.ஜி.ஆர். வழியில் ஆட்சி என்று சொல்கிறவர்கள் உடனடியாக இதனை செய்யவேண்டாமா?.

இந்த சட்டம் தமிழ்நாட்டில் இப்பொழுது இருக்கிறது. அனைத்து இந்திய அளவில் நடைமுறைக்குக் கொண்டு வர நாடாளுமன்றத்திலேயே இந்தச் சட்டத்தை நிறை வேற்றவேண்டும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...