பெரியாரும் வடபுலமும்! தந்தை பெரியார் அவர்கள் எதையும் கண்டு, கேட்டு, படித்து, ஆராய்ந்து, சிந்தித்துத் தெளிவான கருத்துகளை வெளியிட்டவர். வட நாட்டுப் பயணமாக காஷ்மீர் வரை சென்றவர். எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் என்ற இந்துத்-துவாகோட்டையிலேயே தனது கருத்துகளைப் பலத்த எதிர்ப்புக்களைச் சமாளித்து எடுத்துச் சொல்லி எதிரி-யாக நினைத்தவர்களையும் சிந்திக்கத் தூண்டி-யவர். பேரறிஞர் அண்ணா தந்தை பெரி-யாரின் பேச்சை அப்படியே மொழி பெயர்த்துச் சொல்-லச் சொல்லி அங்குள்ள இந்து மதவாதிகளின் மனதிலே ஒரு கேள்-விக்குறியை உண்டாக்கினார். பல முறை பம்பாய், கொல்கத்தா என்றும் சென்று பங்கேற்-றுள்ளார். வடபுலத் தலைவர்கள் பலர் பெரி-யாரின் கொள்-கைகளில் பலவற்றை ஏற்றுக் கொண்-டாலும், கடவுள் மறுப்பு என்பதே பெரிய எதிர்ப்புக்-குள்ளாகி-யிருந்தது. எங்களுக்கு ஒரு பெரியார் இல்லையே என்று தனது ஏக்கத்தை முதுபெரும் அரசியல்வாதி பாபு ஜகஜீவன் ராம் வெளியிட்டார். தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமை, கல்வி_வேலை வாய்ப்பு உரிமைகள், மடமை ஒழிப்பு,- மூடப்பழக்கங்கள் ஒழிப்பு என்பன இருட்ட-டிக்கப்பட்டு ராமர் படம் எரிப்பு, பிள்ளையார் உருவ பொம்மை உடைப்பு என்பன மட்டுமே வட நாட்டில் திட்டமிட்டுப் பரப்பட்டன. ராமரும்,பிள்ளையாரும் வட நாட்டில் இந்து மதத்தின் அடி வேர்கள் ஆகும். இந்து மத வெறியர்கள் பார்ப்பனரல்லாதாரை மயக்கி வைத்துள்ள பெரும் போதைப் பொருள்களாகவே ராமரும், பிள்ளையாரும் வடக்கே பயன் படுத்தப்படுகின்றனர்.இஸ்லாமிய எதிர்ப்பின் மூல காரணமாகவே அவை பயன்படுத்தப்படுகின்றன.. என்னதான் படித்தவர் என்றாலும் வடக்கே இந்த இரண்டிற்கும் அடிமையாக இல்லாதவர்கள் மிகக் குறைவே! இதையெல்லாம் எதிர்த்து பல்லாண்டுகளாகப் போராடி, கடும் முயற்சிகள் பல செய்து கடவுள் மறுப்பாளர்கள் இல்லையென்றாலும் சில வடநாட்டுத் தலைவர்கள் பெரியாரின் அவசியத்தை வடக்கு உணரவேண்டும் என்பதில் முக்கியப் பணி ஆற்றச் செய்த ஆளுமை நமது தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களைச் சாரும் மறைந்த சமூகப் பேராளி சந்திரஜித் யாதவ் பல எதிர்ப்புகளைச் சமாளித்துச் சமூகநீதிக்காகக் குரல் கொடுத்துப் பெரி-யாரை நன்கு அறிமுகம் செய்து வைத்தார்.-சமூகநீதிக்காகத் தனது அரசையே இழக்கத் துணிந்த மாமேதை மாண்புமிகு வி.பி.சிங் ஆவார். இவர்களது அன்பான ஆதரவுடன் பெரியார் பெருந்தொண்டர்கள் பலரின் ஆதரவுடன் கட்டப்பட்டதுதான் பாம்நோலி பெரியார் மய்யம். அங்கே அருகேயுள்ள கிராமத்தவர்களுக்குக் கல்வி,கணினி, உடல்நலம் என்று பல ஆக்கப் பணி-களைச் செய்து வந்தது அந்த மய்யம். பல தலைவர்கள் வந்து நேரிலே பார்த்துப் பாராட்-டினர். தமிழகத்துத் தலைவர்கள் கருப்பையா மூப்-பனார் போன்றவர்களும் நேரிலே பார்த்துப் பாராட்-டினர். அந்த மய்யத்தின் தொண்டு மற்றவர்களிடம் பரவ ஆரம்பித்தது அங்குள்ள இந்து மத வெறியர்களின் கண்ணையுறுத்தி மனதில் பெரும் புகைச்சலை உண்டாக்கியது. திட்டமிட்டு சில மணி நேரத்திலே அந்த அழகுரு மய்யத்தைத் தரை மட்டமாக்கினர். பலர் கொந்தளித்தனர். எந்த சந்தர்ப்பத்திலும் நமது முன்னேற்றமே முக்கியம் என்ற தந்தை பெரியாரின் மூளையைக் கணினியாகக் கொண்டுள்ள ஆசிரியர் அவர்கள் பல நல்ல உள்ளங்களின் ஆதரவுடன் அப்போதைய பிரதமர் வாஜ்பேயியிடம் வாங்கிய இடந்தான் இப்-போது புதுடில்லியின் முக்கிய இடத்திலே அமைக்-கப்பட்டுள்ள புதுடில்லி பெரியார் மய்யம். எப்-போதும் போல பல பெரியார் தொண்டர்களின் அன்பளிப்பே இந்தமய்யத்தின் அடித்தளம்.பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் ஆசிரியப் பெருமக்கள், துணைவேந்தர் நல். இராமச்சந்திரன் இவர்களது அறிவாற்றல் அங்கே புதிய கட்டுமானத் திட்டங்கள், கட்டடப் புதுமைகள்,புது நூற்றாண்டின் புது வழி முறைகள். இந்த மய்யம் ஏற்றமிக உருவாக உதவிய அத்துணை நல் உள்ளங்களுக்கும் உல-கெங்கும் உள்ள பெரியார் தொண்டர்களின் இதயத்-தின் நன்றிகள். திறப்பு விழாவைச் சிறப்பு செய்ய வரும் அத்துணைப் பெருந்தலைவர்கள்,-தொண்டர்கள்,-நல்லுள்ளங்கள் பெரியாரின் தாக்கத்தால் தங்கள் வாழ்-வில் முன்னேற்றம் அடைந்தவர்கள் என்பது உலகத்திற்கு இந்த மய்யத்தின் பெருமையைப் பறை சாற்றும். இந்த மய்யத்தின் முதல் நிகழ்வே "சமூக நீதிக் கருத்தரங்கு ".இந்தியாவின் ஆற்றல் மிகு செயல் வீரர்கள் இதிலே பங்கு பெறுகிறார்கள்.-அவர்-களின் கூடல் சமூக நீதியின் செயல் பாடுகளாகப் புதுடில்லியில் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக சமூக நீதிக் குடையின் கீழே மழைக்காலத்தில் மட்-டும் ஒதுங்கும் அரசியல்வாதிகளையும், எப்போதும் இயங்கும் ஆக்கமிகு தொண்டர்களையும்,-உணர்வாளர்களையும் இணைக்க இந்த மய்யம் பயன்படும். சமூக நீதியின் மூளை ஆற்றலாக இந்த மய்யம் பயன்பட சமூகநீதியின் உயிர்த் துடிப்பாக இயங்கும் தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் திட்டங்கள் தீட்டப்படட்டும்! செயல்கள் தொடரட்டும்! பெரியார் வட புலத்தில் வாழ்கின்றார். எதிர்கால இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்-பட்டோரும் உண்மையான விடுதலை பெற்று ஆட்சியில் உண்மையான பங்கையும் பெற்று வாழ, பெரியார் வடக்கே சென்றுள்ளார் என்பதே இந்த மய்யத்தின் செயல் பாடாகட்டும்! வாழ்க பெரியார்! டாக்டர் சோம.இளங்கோவன் இயக்குநர், பெரியார் பன்னாட்டு மய்யம், சிகாகோ | |
Wednesday, May 19, 2010
பெரியாரும் வடபுலமும்!
டில்லி பெரியார் மய்யம் ஒரு பார்வை!
டில்லி பெரியார் மய்யம் ஒரு பார்வை!
டில்லி, மே 2_ டில்லி ஜெசோலாவில் கட்டப்பட்டுள்ள பெரியார் மய்யம் தரைதளம் மற்றும் நான்கு மேல் தளங்களைக் கொண்டுள்ளது. ரூபாய் 10 கோடி செலவில் 63,400 சதுர அடி கட்டடம், ஒரு ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த இடம் டில்லி பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினரால் அளிக்கப்பட்டு, கட்டடப் பணிகள் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த கட்டடம் பசுமைக் கட்டடம் 50 சதவிகித தரை தளத்திற்காக வெட்டி எடுக்கப்பட்ட 50 சதவிகித மண் இந்தக் கட்டடம் கட்டுவதற்கான கற்கள் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவ்வளவு மண்ணையும் வெளியே அனுப்பும் செலவு மிச்சம். மேலும் செங்கற்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எரிசக்தி கிட்டத்தட்ட 200 னீஷ் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. காடுகள் அழிக்கப்பட்டு எரிபொருளாக பயன்படுத்தப்படும் சுமார் 6 லட்சம் டன் மரங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் இக்கட்டடத்தில் புத்தாக்க எரிசக்திக் கலன்கள், லிணிஞி பல்புகள், சூரிய கொதிகலன்கள் மூலம் பெறும் சக்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ஒரு வருடத்தில் 25000 கிலோ வாட் மின்சார சக்தி இதன்மூலம் பெறப்படுகிறது.
தற்போது இம்மய்யத்தில் அய்.ஏ.எஸ் பயிற்சி தரப்படுகிறது. மற்றும் SAP (india), CIDC, CRD போன்ற வை மூலம் உயர்திறன் கல்வி பயிற்சியும் தொழிற்பயிற்சி கல்வியும் தொடங்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பெரியார் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்பாக உள்ளது.
மேலும் AICTE டில்லி அரசு, குருகோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக் கழகங்களுடன் சேர்ந்து விஙிகி மற்றும் விசிகி போன்ற மேலாண்மைப் படிப்புகள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வட இந்திய ஆலோசனை மய்யமாக விளங்குகிறது.
இந்த பெரியார் மய்யம் பெரியாருடைய சிந்-தனைகளை உலக அளவில் எடுத்துச்செல்ல இந்திய தலைநகரில் ஒரு முக்கிய மய்யமாக செயல்பட உள்ளது. மேலும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தும் மய்யமாகவும் இருக்கும்.
இதை எல்லாம் விட இந்த நூற்றாண்டில் தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்து, வெற்றி பெற்ற சமூக புரட்சிகளை உலகமெங்கும் எடுத்துச்-செல்லும் நோக்கத்துடன் செயல்படும்.
இந்த பெரியார் மய்யத்தினை மிகச்சிறந்த அளவில் உருவாக்க உதவிய திராவிடர் கழகத்தினரின் உழைப்பு, தமிழர்கள் கொடுத்த நன்கொடை, அனைத்திற்கும் மேலாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும், டில்லி மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும், அனைவருக்கும் திராவிடர் கழகம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.
மேற்கண்ட அனைத்து செயல்களுக்கும் மிகப்பெரிய வடிவமைப்பாளராக செயல்பட்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களை காலச்சரித்திரத்தில் மறக்க இயலாது.
Sunday, May 2, 2010
நன்றியைப்பற்றி வைகோ பேசலாமா?
நன்றியைப்பற்றி வைகோ பேசலாமா?
மதிமுக பொதுச் செயலாளர் சகோதரர் வைகோ அவர்கள் _ டெல்லியில் இன்று மாலை தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களால் திறக்கப்பட உள்ள பெரியார் மய்யம் குறித்துப் பேசியிருக்கிறார்.
பெரியார் மய்யம் அமைவதற்குக் காரணமான முன்னாள் பிரதமர் வாஜ்பேயியையும் என்னையும் வீரமணி மறந்து விட்டார். நன்றி மறப்பது நல்லதல்ல (தினமணி 2.5.2010)
திராவிடர் இயக்க வரலாற்றிலும், தமிழர்கள் வரலாற்-றிலும் குறிப்பிடத்தக்க ஒரு பெரும் நிகழ்ச்சி டெல்லி பெரியார் மய்யத் திறப்பு விழா!
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், பகுத்தறி-வாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கும் நிலை-யில், திரு வைகோ அவர்கள் மட்டும் வேறு வகையில் சிந்திப்பது வருந்தக் கூடிய ஒன்றாகும். முதல் அமைச்சர் கலைஞர் திறக்கிறார் என்கிற ஆத்திரத்தில் நிதானமிழந்த முறையில் வார்த்தை ஒன்றைப் பயன்படுத்தியிருக்கிறார்.
நன்றியைப் பற்றி திராவிடர் கழகத் தலைவருக்கா இடித்துரைப்பது?
அவசர வைகோ!
இப்பொழுது மட்டுமல்ல; டில்லி பெரியார் மய்யம் மீண்டும் தொடங்குவதற்கான விழா நடைபெற்றதாகவும் அந்த விழாவில் வைகோ பெயர் உச்சரிக்கப்படவில்லை-யென்றும் குறை கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்ட-வர்தான் இவர் (சங்கொலி 12.9.2003 பக்கம் 41 இடிக்கப்-பட்டது 2001-_இல் வைகோ சொல்லியிருப்பது போல 1998_இல் அல்ல). அப்படி ஒரு விழாவே, நடைபெறவில்லை _ அவசரப்பட்டு வைகோ அறிக்கை வெளியிட்டாரே என்று விடுதலையில் (7.9.2003) மறுப்பு வெளி-யிட்டோம்.
வைகோ செய்த உதவிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் எப்பொழுதுமே நன்றி கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் (16.12.2001)வில் தீர்மானம் வாயிலாகவே நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வளவு முன்கூடப் போக வேண்டாம்; 22.4.2010 அன்று பத்து நாள்களுக்குமுன் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுதலையில் வெளி-யிட்ட அறிக்கையில்கூட அன்றைய பிரதமர் வாஜ்பேயி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பங்களிப்பை மறக்காமல் பதிவு செய்திருக்கிறார். இவரது அவசரமும் ஆத்திரமும்தான் இவரை அரசியலில் பரிதாபப் பள்ளத்தாக்கில் தள்ளி விட்டிருக்கிறது போலும்!
முன்னாள் பிரதமர் வாஜ்பேயி அவர்களுக்கு பெரியார் மய்யம் திறப்பு விழா அழைப்பிதழதோடு தனிக் கடிதம் வைத்தும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதே (26.4.2010)
அடுத்த இலைக்குப் பாயசம் போடுங்கள் என்கிற பாணியில் வைகோ பேசியிருப்பதாகத் தெரிகிறது.
திரு வைகோ அவர்களுக்கு அவரின் அலுவலகத்-திலேயே டில்லி திறப்பு விழா அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
பண்பாட்டுத்தளத்தில் தாழ்வானதாகும்!
உண்மை இவ்வாறு இருக்க, நாநடுங்க வேண்டிய ஒரு சொல்லை தாய்க் கழகத்தின் தலைவர்மீது பயன்படுத்தியிருப்பது பண்பாட்டுத் தளத்தில் மிகவும் தாழ்வானதாகும். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் 5ஆவது முறையாகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருக்கக் கூடிய மானமிகு மாண்புமிகு முதல் அமைச்-சர் கலைஞர் அவர்கள் பெரியார் மய்யத்தை திறப்பது எல்லா வகையிலும் பொருத்தமானதுதான்.
இதனைப் புரிந்து கொள்ளாதவர் எப்படி ஒரு அரசி-யல் கட்சியை நடத்தப் போகிறார் என்று தெரிய-வில்லை.
நன்றியைப்பற்றியெல்லாம் திரு. வைகோ அவர்கள் பேசுவது தகுதியானதல்ல; கலைஞர் அவர்களின் காலடியில் உட்கார்ந்து கசிந்துருகியவர் கடைசியில் அவர் காலையே வாரியதையெல்லாம் நாட்டு மக்கள் அறிய மாட்டார்களா?
கலைஞர் இன்னும் எத்தனையோ ஆண்டுகள் உயிரோடு இருப்பார்; அதுவரை நான் பொறுத்துக் கொண்டு இருக்க முடியுமா? (இந்தவுரையாடல் வைகோ அவர்களுக்குப் புரிந்திருக்குமே!) என்று சொல்லும் அளவுக்கு வைகோ நன்றியுணர்ச்சியின் சின்னமாவார்.
யாரை திருப்திபடுத்த!
யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்பதற்-காகவும் அடுத்து மாநிலங்களவை உறுப்பினர் இடத்தைக் குறி வைக்க வேண்டும் என்பதற்காகவும், பகுத்தறிவாளர்களும், உண்மைத் திராவிட இயக்கத்தவர்களும், தமிழுணர்வாளர்களும் மகிழ்ந்து கொண்டாடும் தந்தை பெரியார் மய்யத்தின் திறப்பு விழா குறித்து வயிற்றில் குத்திக் கொள்வது (மகா-பாரதக் கதைகளைச் சொல்லுவதில் கெட்டிக்காரரா-யிற்றே) வடிகட்டிய மனக்கிலேசமாகும் (ஷிணீபீவீனீ). இதுதான் தந்தை பெரியார் பற்றியும், திராவிட இயக்கம் குறித்தும் வைகோ அவர்கள் வைத்திருக்கும் மதிப்பும், பற்றுதலுமா? பரவாயில்லை; டெல்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவுக்கு வாழ்த்துகள் சொல்ல மனம் இல்லா விட்டாலும் தான் யார்? தம் இயல்பு என்ன? குணாம்சம் என்ன? என்பதை அறிவித்து விட்டார் _ அதற்காகவாவது நம் நன்றி சொல்லலாம் _ அல்லவா!
- கலி. பூங்குன்றன்
சென்னை பொதுச் செயலாளர்
2.5.2010 திராவிடர் கழகம்
சென்னை பொதுச் செயலாளர்
2.5.2010 திராவிடர் கழகம்
நன்றியைப்பற்றி வைகோ பேசலாமா?
நன்றியைப்பற்றி வைகோ பேசலாமா?
மதிமுக பொதுச் செயலாளர் சகோதரர் வைகோ அவர்கள் _ டெல்லியில் இன்று மாலை தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களால் திறக்கப்பட உள்ள பெரியார் மய்யம் குறித்துப் பேசியிருக்கிறார்.
பெரியார் மய்யம் அமைவதற்குக் காரணமான முன்னாள் பிரதமர் வாஜ்பேயியையும் என்னையும் வீரமணி மறந்து விட்டார். நன்றி மறப்பது நல்லதல்ல (தினமணி 2.5.2010)
திராவிடர் இயக்க வரலாற்றிலும், தமிழர்கள் வரலாற்-றிலும் குறிப்பிடத்தக்க ஒரு பெரும் நிகழ்ச்சி டெல்லி பெரியார் மய்யத் திறப்பு விழா!
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், பகுத்தறி-வாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கும் நிலை-யில், திரு வைகோ அவர்கள் மட்டும் வேறு வகையில் சிந்திப்பது வருந்தக் கூடிய ஒன்றாகும். முதல் அமைச்சர் கலைஞர் திறக்கிறார் என்கிற ஆத்திரத்தில் நிதானமிழந்த முறையில் வார்த்தை ஒன்றைப் பயன்படுத்தியிருக்கிறார்.
நன்றியைப் பற்றி திராவிடர் கழகத் தலைவருக்கா இடித்துரைப்பது?
அவசர வைகோ!
இப்பொழுது மட்டுமல்ல; டில்லி பெரியார் மய்யம் மீண்டும் தொடங்குவதற்கான விழா நடைபெற்றதாகவும் அந்த விழாவில் வைகோ பெயர் உச்சரிக்கப்படவில்லை-யென்றும் குறை கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்ட-வர்தான் இவர் (சங்கொலி 12.9.2003 பக்கம் 41 இடிக்கப்-பட்டது 2001-_இல் வைகோ சொல்லியிருப்பது போல 1998_இல் அல்ல). அப்படி ஒரு விழாவே, நடைபெறவில்லை _ அவசரப்பட்டு வைகோ அறிக்கை வெளியிட்டாரே என்று விடுதலையில் (7.9.2003) மறுப்பு வெளி-யிட்டோம்.
வைகோ செய்த உதவிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் எப்பொழுதுமே நன்றி கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் (16.12.2001)வில் தீர்மானம் வாயிலாகவே நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வளவு முன்கூடப் போக வேண்டாம்; 22.4.2010 அன்று பத்து நாள்களுக்குமுன் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுதலையில் வெளி-யிட்ட அறிக்கையில்கூட அன்றைய பிரதமர் வாஜ்பேயி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பங்களிப்பை மறக்காமல் பதிவு செய்திருக்கிறார். இவரது அவசரமும் ஆத்திரமும்தான் இவரை அரசியலில் பரிதாபப் பள்ளத்தாக்கில் தள்ளி விட்டிருக்கிறது போலும்!
முன்னாள் பிரதமர் வாஜ்பேயி அவர்களுக்கு பெரியார் மய்யம் திறப்பு விழா அழைப்பிதழதோடு தனிக் கடிதம் வைத்தும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதே (26.4.2010)
அடுத்த இலைக்குப் பாயசம் போடுங்கள் என்கிற பாணியில் வைகோ பேசியிருப்பதாகத் தெரிகிறது.
திரு வைகோ அவர்களுக்கு அவரின் அலுவலகத்-திலேயே டில்லி திறப்பு விழா அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
பண்பாட்டுத்தளத்தில் தாழ்வானதாகும்!
உண்மை இவ்வாறு இருக்க, நாநடுங்க வேண்டிய ஒரு சொல்லை தாய்க் கழகத்தின் தலைவர்மீது பயன்படுத்தியிருப்பது பண்பாட்டுத் தளத்தில் மிகவும் தாழ்வானதாகும். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் 5ஆவது முறையாகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருக்கக் கூடிய மானமிகு மாண்புமிகு முதல் அமைச்-சர் கலைஞர் அவர்கள் பெரியார் மய்யத்தை திறப்பது எல்லா வகையிலும் பொருத்தமானதுதான்.
இதனைப் புரிந்து கொள்ளாதவர் எப்படி ஒரு அரசி-யல் கட்சியை நடத்தப் போகிறார் என்று தெரிய-வில்லை.
நன்றியைப்பற்றியெல்லாம் திரு. வைகோ அவர்கள் பேசுவது தகுதியானதல்ல; கலைஞர் அவர்களின் காலடியில் உட்கார்ந்து கசிந்துருகியவர் கடைசியில் அவர் காலையே வாரியதையெல்லாம் நாட்டு மக்கள் அறிய மாட்டார்களா?
கலைஞர் இன்னும் எத்தனையோ ஆண்டுகள் உயிரோடு இருப்பார்; அதுவரை நான் பொறுத்துக் கொண்டு இருக்க முடியுமா? (இந்தவுரையாடல் வைகோ அவர்களுக்குப் புரிந்திருக்குமே!) என்று சொல்லும் அளவுக்கு வைகோ நன்றியுணர்ச்சியின் சின்னமாவார்.
யாரை திருப்திபடுத்த!
யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்பதற்-காகவும் அடுத்து மாநிலங்களவை உறுப்பினர் இடத்தைக் குறி வைக்க வேண்டும் என்பதற்காகவும், பகுத்தறிவாளர்களும், உண்மைத் திராவிட இயக்கத்தவர்களும், தமிழுணர்வாளர்களும் மகிழ்ந்து கொண்டாடும் தந்தை பெரியார் மய்யத்தின் திறப்பு விழா குறித்து வயிற்றில் குத்திக் கொள்வது (மகா-பாரதக் கதைகளைச் சொல்லுவதில் கெட்டிக்காரரா-யிற்றே) வடிகட்டிய மனக்கிலேசமாகும் (ஷிணீபீவீனீ). இதுதான் தந்தை பெரியார் பற்றியும், திராவிட இயக்கம் குறித்தும் வைகோ அவர்கள் வைத்திருக்கும் மதிப்பும், பற்றுதலுமா? பரவாயில்லை; டெல்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவுக்கு வாழ்த்துகள் சொல்ல மனம் இல்லா விட்டாலும் தான் யார்? தம் இயல்பு என்ன? குணாம்சம் என்ன? என்பதை அறிவித்து விட்டார் _ அதற்காகவாவது நம் நன்றி சொல்லலாம் _ அல்லவா!
- கலி. பூங்குன்றன்
சென்னை பொதுச் செயலாளர்
2.5.2010 திராவிடர் கழகம்
சென்னை பொதுச் செயலாளர்
2.5.2010 திராவிடர் கழகம்
Tuesday, March 30, 2010
குடிஅரசு தொகுதிகள் வெளியீடு!
Monday, March 15, 2010
அண்ணாசாலை- பெரியார் நுழைவு வாயில்
தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களிடம் நிறைந்துள்ள ஆற்றல்கள் அளப்பரியன என்பது நாடு அறிந்ததே.
எழுத்தாற்றல், பேச்சாற்றல் உள்ளிட்டவை-களில் ஒப்பாரும் மிக்காரும் இலர் என்கிற அளவுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு என்றாலும், கட்டடக் கலையிலும் கூட கூர்த்த மதிநுட்பம் மிக்கவர் என்பதன்மூலம் சகலகலா வல்லுநர் என்னும் பெருமைக்கு உரியவர் ஆகிறார்.
கலைஞர் அவர்களே பலமுறை சொல்லி-யுள்ளபடி, ஏன் தலைமைச் செயலக புதிய கட்டடத் திறப்பு விழாவிலேயே குறிப்பிட்-டுள்ள-படி சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு சாமான்யர்தான் கலைஞர்,- பார்ப்பனர் அல்லாதார் என்ற நிலையால், இந்நாட்டு ஊடகங்கள் (பெரும்-பாலும் ஆரியக் கூட்டத்தின் கையிருப்பில்தானே!) அவரை உயர்த்திப்பிடிக்க வேண்டிய சாதாரண கடமையைக் கூடச் செய்ய மறுக்கின்றன. எங்-காவது ஒட்டடை அவர் மேல் ஒட்டிக் கொண்-டிருக்கிறதா என்று தேடித்தடி பூதாகாரப்படுத்து-வதில்தான் அவர்களின் கண்ணோட்டம் இருந்து கொண்டிருக்கிறது.
என்னதான் அவர்கள் இருட்டடிப்பு செய்யப் பார்த்தாலும் உலக அளவில பீடுறும் சிறப்புக்-குரியவர் என்று பலதரப்பினரும் பாராட்டும் அளவுக்குப் புதிய கட்டடம் வானளாவி நிற்கிறதே. அதனை என்ன செய்ய முடியும்?
கலைஞரின் செயல்திறனை புத்தாக்கப் பெருமையை யார் நினைத்தாலும் மறைத்துவிட முடியாது.
திராவிடர் கட்டடக் கலை அம்சத்தையும் உள் வாங்கிக் கொண்டு, புதிய தொழில் நுட்பத்துடன் உருவாக்குவதில் அவர் அல்லும் பகலும் காட்டிய ஆர்வம், -கொடுத்த ஊக்கம் அசாதாரணமானவை. 86 வயதுக்குள் குடிகொண்டிருக்கும் இளமை வீறுகொண்டு நிற்கும் விந்தையை இவரிடம் காண முடிகிறது.
முதுமை, இளமை என்பது ஆண்டுகளைப் பொறுத்ததல்ல, உணர்வுகளைப் பொறுத்தது என்று வாழ்ந்து காட்டிய வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்களின் வழியில் வீறு நடைபோடும் அந்த உறுதிதான் அதே இடத்தில் அவரை வார்த்து எடுத்திருக்கிறது.
அய்யா அவர்களைப் பற்றி அண்ணா அவர்கள் சொல்லும்போது பொதுத் தொண்டை, ஒரு கலையாக மாற்றியவர் என்றார். - அந்தக் கலை உணர்வு கலைஞரிடம் காணப்-படுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்!
அண்ணா சாலையில், அண்ணா சிலை வழியாக, பகுத்தறிவுக் பகலவன் தந்தை பெரியார் சிலையைச் சுற்றிக் கொண்டுதான் புதிய சட்டமன்ற வளாகத்திற்குள் நுழைய வேண்டும்.
சட்டமன்றத்தில் கால் பதிக்கும் ஒவ்வொரு-வரும் தந்தை பெரியார் யார்? அவரின் பிரதம சீடரான அண்ணா யார்? எந்த கொள்கை-களுக்-காக அவர்கள் வாழ்ந்தார்கள்? பொதுத் தொண்-டினைத் தொண்டறமாக உருவாக்கிய அந்த மாமனிதர்களின் மானமிகு உணர்வுகள் என்னென்ன?
பிரதமர் அவர்கள் திறப்பு விழாவில் சுட்டிக்-காட்டினார்; திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கை, சமத்துவச் சிந்தனைகள் இவற்றை அசை போட்டுக் கொண்டுதான் சட்டமன்ற வளாகத்துக்குள்ளே நுழையமுடியும், நுழையவும் வேண்டும்.
இது ஏதோ குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல; தமிழ் மண்ணின் உளவியல் (Soil Psychology) என்பது இந்த வகையிலே உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இந்தியாவிலேயே எந்த மாநில சட்ட மன்றத்திலும் நிறைவேற்றப்பட முடியாத சமூகப் புரட்சி சார்ந்த சட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டு சட்டமன்றத்-தில்தான் நிறைவேற்றப்பட்டன என்றால், அதற்குக் காரணம் இந்த அடித்தளம்தான்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சமூக சீர்திருத்த உணர்வு தலை தூக்கி நிற்கிறது. அதற்குக் காரணம் பெரியார் ஈ.வெ.ராமாசாமிதான் என்று அமெரிக்காவின் ஜான் ரைட்லி போன்ற மூத்த பேராசிரியர்கள் கருத்து என்பதையும் கவனத்தில் கொண்டால் தமிழ்நாட்டின் தனித்தன்மையை உணர்ந்து கொள்ளலாம்.
சட்டமன்றத்தின் புதிய கட்டடம்_ வளாகம் உருவாக்கப்படுகின்ற இந்தக் கால கட்டத்தில் இந்தச் சிந்தனைகளில் பிறழ்வு இல்லாமல் மேலும் வீறுநடை வளர்ச்சிப் போக்கு காணப்படட்டும்!
Thursday, March 11, 2010
ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்
ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாத அளவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம், பெயரியல், நாடி ஜோதிடம், சோழி உருட்டுதல், குறி சொல்லுதல் எனப் பலவேறு முகங்களில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் கறந்து வருகிறார்கள் ஜோதிட சிகாமணிகளும், பூஷணங்களும்.
ஜோதிடம் என்பது அறிவியல் ரீதியில் மூட நம்பிக்கையே. அது இந்தி-யாவில் வேத நூல்களிலோ, மகாபாரதம், ராமாயணம், உபநிஷத்துகள் போன்ற-வற்றிலோ அது பற்றிய சிறுகுறிப்புகள் கூட இடம் பெறவில்லை.
ஜோதிடம் பற்றிய குறிப்புகளோ கிரகங்கள், ராசிகள் பற்றிய தகவல்களோ பழைமையான இந்திய நூல்களில் எதிலும் காணப்படவில்லை.
ஜோதிடக் கலை என்பது புராதன கிரேக்க - ரோமானிய கலாச்சாரத்தி-லிருந்து பிறந்து உலகம் முழுவதும் பரவியதாகும்.
பெரும்பாலான ஜோதிடர்கள் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்-களிடம் பேச்சு கொடுத்து கிடைக்கும் தகவல்களிலிருந்து யூகமாக பல ஆரூடங்களைக் கூறுவார்கள்.
இப்படி சுமார் 10-12 ஆருடக் குறிப்புகள் சொல்லும்போது அவற்றில் ஒன்றிரண்டு இயற்கையாகவே பொருந்தி இருந்தால் மக்கள் ஜோதிடரை நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். சரியாக 10 பலன்கள் சொன்னால் அதில் பலித்த 3 பலன்களையே ஜோதிடத்தில் நம்பிக்கை-யுள்ள பலரிடம் சொல்லிக் கொண்டு திரிவார்கள். பலிக்காக பலன்களைப் பற்றி வாய்த் திறப்பதில்லை. ஜோதிடர்-களிடம் ஏமாந்துவிட்டோம் என்பதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள விரும்பாத மனநிலையின் விளைவே இதற்குக் காரணம்.
தன்னிடம் வரும் வாடிக்கையாளர்-களின் நம்பிக்கைகள், மனப்பயம், கவலைகள் இவையே ஜோதிடரின் மூலதனமாகும். இவற்றை மிகைப்படுத்தி கற்பனை கலந்து பல ஆருடங்களைச் சொல்லி வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்துவிடுவார்கள்.
தேடி வரும் வாடிக்கையாளர்கள் மனத்தில் நம்பிக்கை உண்டாக்கும் வகையில், பல்வேறு சாமி படங்கள், பூஜைப் பொருள்கள், சங்கு சக்கரங்கள், செப்புத் தகட்டில் வரைந்த எந்திரங்கள், கமகமக்கும் பூமணம், ஊதுவத்தி நெடி, திருநீறு, சாம்பிராணி புகை, சந்தனம் போன்ற பொருள்களுடன் ஜோதிடரி-டம் பணிந்து போகும் சூழ்நிலையை உருவாக்கி வைத்து உளவியல் ரீதியாக தாங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வைத்து விடுவார்கள். பூர்வஜென்ம கர்மபலன் என்றெல்லாம் சொல்லி, சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார்கள். எந்தவொரு ஜோதிடமும் பத்துக்குப் பத்து பலன்களை மிகத் துல்லியமாகச் சொன்னது இது வரையில் யாரும் கிடையாது
ஜோதிடம் மூடநம்பிக்கை என்பதை விளக்குவதற்காக பல்வேறு அறிவியலாளர்கள் பெரு முயற்சி எடுத்து வருகிறார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஏ.எஸ்.நடராஜ் என்பவர் ஜோதி-டத்தைக் கற்றிருப்பவர். இந்த ஜோதி-டம் மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்குத்தான் பயன்படும் என்று எண்ணி ஜோதிடத்திற்குப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஜோதிடத்திற்கே சவால், கடவுள் ஒரு முழு சிந்தனை, போன்ற தனது கன்னட மொழி பெயர்ப்பு நூல்களில் வாஸ்து, ஜோதிடம், ஆன்மா, மறு-பிறப்பு மற்றும் உள்நாட்டு, வெளி-நாட்டு கடவுள்கள் உள்பட அனைத்-துப் பிரச்சினைகளையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து கன்னடமொழியில் பல நூல்களை எழுதியுள்ளார்.
முதன் முதலில் 2001 ஆம் ஆண்டில் ஜோதிடம் உண்மையென்பதை நிரூபித்துக் காட்டுமாறு ரூ 10 லட்சம் பரிசு தருவதாக சவால் விட்டு நாடு முழுவதுமுள்ள பல ஜோதிடர்களுக்கு ஏ.எஸ்.நடராஜ் கடிதங்கள் எழுதி அனுப்பினார். ஆனால், ஜோதிடர் எவரும் அந்தச் சவாலை ஏற்று ஜோதிடத்தை நிரூபிக்க முன்வர-வில்லை. ஒரு சிலர் சவாலை ஏற்பதாக பத்திரிகைகளில் அறிவித்து விளம்பரம் பெற்றுவிட்டு காணாமல் போனார்கள்.
எனவே, இப்பொழுது பரிசுத் தொகையை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தி தனது சவாலை நடராஜ் திரும்பவும் அறிவித்திருக்கிறார். அவரது சவால் விவரம் வருமாறு:
சவாலை ஏற்று வரும் ஜோதி-டரிடம் ஒரே ஒரு ஜாதகம் வழங்கப்-பட்டு 10 கேள்விகள் கேட்கப்படும். இவை கடந்த காலத்தைப் பற்றி, நிகழ்-காலத்தைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றியதாக இருக்கும்.
ஜோதிடம் என்பதே எதிர்-காலத்தைப் பற்றி கூறும் ஆரூடம் என்பதால் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் மிக முக்கியமானவை. இவற்றிற்கு 80 சதவிகிதமாவது சரியான பதில்களைக் கூறவேண்டும். சவாலை ஏற்க வரும் ஜோதிடரோ, மந்திர-வாதியோ யாராக இருந்தாலும் ரூபாய் ஒரு லட்சம் காப்புத் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம். போட்டியில் வென்றால், டெபாசிட் தொகையுடன் ரூபாய் ஒரு கோடி பரிசும் வழங்கப்படும்.
ஜோதிடத்திற்கு சவால் விட்டுள்ள ஏ.எஸ். நடராஜ் பெங்களூரு பத்மநாப நகர், 5-ஆவது பிரதான சாலையில் வசித்து வருகிறார்.
ராஜ் வைச்சரிக்கா வேதிகே என்ற சங்கத்திற்கும் அகில கர்நாடக விச்சரவாடி சங்கத்திற்கும் தலைவராக உள்ளார். அவர் ஜோதிஷெகே சவாலு என்ற புத்தகத்தை ஜோதிடர்களுக்கு சவால் விட்டு அவர் எழுதியுள்ளார். ஜோசியம், ஆவி, மறுபிறவி, கீதை, வேதாந்த இந்து மதம், கடவுளின் தோற்றம், வேத உபநிடதத்தில் பவுத்த வாதம், புராணங்கள், தர்மங்கள், ஆதியாத்மா போன்ற பல புத்தகங்கள் பிரபல ஜோதிடர்கள் எழுதியுள்ள புத்தகங்களைப் படித்து ஆராய்ந்-துள்ளார்.
ஜோதிடப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்த போது, பாலஜோதிடம் என்பது முற்றிலும் தவறானது; அடிப்-படையற்றது; இந்தியாவைச் சேர்ந்ததல்ல; முறையற்றது என்பதை நன்றாக அறிந்து கொண்டார். பிறகு, அவர் பழைய பாரம்பரியத்திலிருந்து பகுத்தறிவு வாதியாகவும் பழைமை வாதத்திலிருந்து நவீன விஞ்ஞான பார்வைக்கும் மாறினார். ஜோசியத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் அவற்றின் பலன்கள் அனைத்தும் முற்றிலும் பிழையானது; ஆதாரமற்றது; விஞ்-ஞானத்திற்கு எதிரானது என்று அறிந் தார்.
ஏ.எஸ்.நடராஜ் கன்னடத்தில் எம்.ஏ., பட்டமும், அறவியலில் எம்.ஏ.பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தற்போது அவர் பங்குச் சந்தை ஆலோசகராக உள்ளார்.
மனமறிந்து ஒரு சின்னஞ்சிறு சிசுவை-படுகொலை செய்வதற்கு ஒப்பானது ஜோதிடம்.
மடமையை அறியாமையால் பயந்து சாகின்ற அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் வயிற்றை வளர்க்கின்ற அயோக்-கியத்தனம் என்கிறார்.
இயற்கைவாதி செ. கஜபதி
(நன்றி: எதிரொலி -28.2.2010)
ஜோதிடம் என்பது அறிவியல் ரீதியில் மூட நம்பிக்கையே. அது இந்தி-யாவில் வேத நூல்களிலோ, மகாபாரதம், ராமாயணம், உபநிஷத்துகள் போன்ற-வற்றிலோ அது பற்றிய சிறுகுறிப்புகள் கூட இடம் பெறவில்லை.
ஜோதிடம் பற்றிய குறிப்புகளோ கிரகங்கள், ராசிகள் பற்றிய தகவல்களோ பழைமையான இந்திய நூல்களில் எதிலும் காணப்படவில்லை.
ஜோதிடக் கலை என்பது புராதன கிரேக்க - ரோமானிய கலாச்சாரத்தி-லிருந்து பிறந்து உலகம் முழுவதும் பரவியதாகும்.
பெரும்பாலான ஜோதிடர்கள் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்-களிடம் பேச்சு கொடுத்து கிடைக்கும் தகவல்களிலிருந்து யூகமாக பல ஆரூடங்களைக் கூறுவார்கள்.
இப்படி சுமார் 10-12 ஆருடக் குறிப்புகள் சொல்லும்போது அவற்றில் ஒன்றிரண்டு இயற்கையாகவே பொருந்தி இருந்தால் மக்கள் ஜோதிடரை நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். சரியாக 10 பலன்கள் சொன்னால் அதில் பலித்த 3 பலன்களையே ஜோதிடத்தில் நம்பிக்கை-யுள்ள பலரிடம் சொல்லிக் கொண்டு திரிவார்கள். பலிக்காக பலன்களைப் பற்றி வாய்த் திறப்பதில்லை. ஜோதிடர்-களிடம் ஏமாந்துவிட்டோம் என்பதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள விரும்பாத மனநிலையின் விளைவே இதற்குக் காரணம்.
தன்னிடம் வரும் வாடிக்கையாளர்-களின் நம்பிக்கைகள், மனப்பயம், கவலைகள் இவையே ஜோதிடரின் மூலதனமாகும். இவற்றை மிகைப்படுத்தி கற்பனை கலந்து பல ஆருடங்களைச் சொல்லி வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்துவிடுவார்கள்.
தேடி வரும் வாடிக்கையாளர்கள் மனத்தில் நம்பிக்கை உண்டாக்கும் வகையில், பல்வேறு சாமி படங்கள், பூஜைப் பொருள்கள், சங்கு சக்கரங்கள், செப்புத் தகட்டில் வரைந்த எந்திரங்கள், கமகமக்கும் பூமணம், ஊதுவத்தி நெடி, திருநீறு, சாம்பிராணி புகை, சந்தனம் போன்ற பொருள்களுடன் ஜோதிடரி-டம் பணிந்து போகும் சூழ்நிலையை உருவாக்கி வைத்து உளவியல் ரீதியாக தாங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வைத்து விடுவார்கள். பூர்வஜென்ம கர்மபலன் என்றெல்லாம் சொல்லி, சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார்கள். எந்தவொரு ஜோதிடமும் பத்துக்குப் பத்து பலன்களை மிகத் துல்லியமாகச் சொன்னது இது வரையில் யாரும் கிடையாது
ஜோதிடம் மூடநம்பிக்கை என்பதை விளக்குவதற்காக பல்வேறு அறிவியலாளர்கள் பெரு முயற்சி எடுத்து வருகிறார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஏ.எஸ்.நடராஜ் என்பவர் ஜோதி-டத்தைக் கற்றிருப்பவர். இந்த ஜோதி-டம் மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்குத்தான் பயன்படும் என்று எண்ணி ஜோதிடத்திற்குப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஜோதிடத்திற்கே சவால், கடவுள் ஒரு முழு சிந்தனை, போன்ற தனது கன்னட மொழி பெயர்ப்பு நூல்களில் வாஸ்து, ஜோதிடம், ஆன்மா, மறு-பிறப்பு மற்றும் உள்நாட்டு, வெளி-நாட்டு கடவுள்கள் உள்பட அனைத்-துப் பிரச்சினைகளையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து கன்னடமொழியில் பல நூல்களை எழுதியுள்ளார்.
முதன் முதலில் 2001 ஆம் ஆண்டில் ஜோதிடம் உண்மையென்பதை நிரூபித்துக் காட்டுமாறு ரூ 10 லட்சம் பரிசு தருவதாக சவால் விட்டு நாடு முழுவதுமுள்ள பல ஜோதிடர்களுக்கு ஏ.எஸ்.நடராஜ் கடிதங்கள் எழுதி அனுப்பினார். ஆனால், ஜோதிடர் எவரும் அந்தச் சவாலை ஏற்று ஜோதிடத்தை நிரூபிக்க முன்வர-வில்லை. ஒரு சிலர் சவாலை ஏற்பதாக பத்திரிகைகளில் அறிவித்து விளம்பரம் பெற்றுவிட்டு காணாமல் போனார்கள்.
எனவே, இப்பொழுது பரிசுத் தொகையை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தி தனது சவாலை நடராஜ் திரும்பவும் அறிவித்திருக்கிறார். அவரது சவால் விவரம் வருமாறு:
சவாலை ஏற்று வரும் ஜோதி-டரிடம் ஒரே ஒரு ஜாதகம் வழங்கப்-பட்டு 10 கேள்விகள் கேட்கப்படும். இவை கடந்த காலத்தைப் பற்றி, நிகழ்-காலத்தைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றியதாக இருக்கும்.
ஜோதிடம் என்பதே எதிர்-காலத்தைப் பற்றி கூறும் ஆரூடம் என்பதால் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் மிக முக்கியமானவை. இவற்றிற்கு 80 சதவிகிதமாவது சரியான பதில்களைக் கூறவேண்டும். சவாலை ஏற்க வரும் ஜோதிடரோ, மந்திர-வாதியோ யாராக இருந்தாலும் ரூபாய் ஒரு லட்சம் காப்புத் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம். போட்டியில் வென்றால், டெபாசிட் தொகையுடன் ரூபாய் ஒரு கோடி பரிசும் வழங்கப்படும்.
ஜோதிடத்திற்கு சவால் விட்டுள்ள ஏ.எஸ். நடராஜ் பெங்களூரு பத்மநாப நகர், 5-ஆவது பிரதான சாலையில் வசித்து வருகிறார்.
ராஜ் வைச்சரிக்கா வேதிகே என்ற சங்கத்திற்கும் அகில கர்நாடக விச்சரவாடி சங்கத்திற்கும் தலைவராக உள்ளார். அவர் ஜோதிஷெகே சவாலு என்ற புத்தகத்தை ஜோதிடர்களுக்கு சவால் விட்டு அவர் எழுதியுள்ளார். ஜோசியம், ஆவி, மறுபிறவி, கீதை, வேதாந்த இந்து மதம், கடவுளின் தோற்றம், வேத உபநிடதத்தில் பவுத்த வாதம், புராணங்கள், தர்மங்கள், ஆதியாத்மா போன்ற பல புத்தகங்கள் பிரபல ஜோதிடர்கள் எழுதியுள்ள புத்தகங்களைப் படித்து ஆராய்ந்-துள்ளார்.
ஜோதிடப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்த போது, பாலஜோதிடம் என்பது முற்றிலும் தவறானது; அடிப்-படையற்றது; இந்தியாவைச் சேர்ந்ததல்ல; முறையற்றது என்பதை நன்றாக அறிந்து கொண்டார். பிறகு, அவர் பழைய பாரம்பரியத்திலிருந்து பகுத்தறிவு வாதியாகவும் பழைமை வாதத்திலிருந்து நவீன விஞ்ஞான பார்வைக்கும் மாறினார். ஜோசியத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் அவற்றின் பலன்கள் அனைத்தும் முற்றிலும் பிழையானது; ஆதாரமற்றது; விஞ்-ஞானத்திற்கு எதிரானது என்று அறிந் தார்.
ஏ.எஸ்.நடராஜ் கன்னடத்தில் எம்.ஏ., பட்டமும், அறவியலில் எம்.ஏ.பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தற்போது அவர் பங்குச் சந்தை ஆலோசகராக உள்ளார்.
மனமறிந்து ஒரு சின்னஞ்சிறு சிசுவை-படுகொலை செய்வதற்கு ஒப்பானது ஜோதிடம்.
மடமையை அறியாமையால் பயந்து சாகின்ற அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் வயிற்றை வளர்க்கின்ற அயோக்-கியத்தனம் என்கிறார்.
இயற்கைவாதி செ. கஜபதி
(நன்றி: எதிரொலி -28.2.2010)
Subscribe to:
Posts (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணையினை கல்விக் கூடங்களுக்கு அனுப்பி உள்ளார். (தனியே காண்க) இப்படி ஓ...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் சில பொருள்களைக் கூவி விற்பதுண்டு - நாகரிகம் வளர்ந்து வரும் காலத்தில் இதுபோன்ற கூவும் குரல்களைக் கேட்பது ...
