Thursday, March 12, 2020

ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டம் புதுப்பிப்பு விளாடிமிர் புதின் போட்டியிட தடையில்லை


ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் கேஜிஎப் எனப்படும் உளவு அமைப்பில் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் விளாடிமிர் புதின் (67). 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி ரஷ்யா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது அப்போதைய அதிபர் எல்ட்சின் பொறுப்பு பிரதமராக விளா டிமிர் புதினை முதல் முறையாக நியம னம் செய்தார்.
அந்த சமயம் அந்நாட்டில் கிளர்ச் சியாளர்கள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக கருதப்பட்ட பகுதிகளில் வான்வெளி மூலம் குண்டுகள் வீசப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கைகளால் புதின் ரஷ்ய மக்களிடையே புகழ்பெற்றார்.
இதையடுத்து, பல காரணங்களுக்காக அதிபராக இருந்த எல்ட்சின் தனது பொறுப்பிலிருந்து விலகி 1999ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி விளாடிமிர் புதினை ரஷ்யாவின் பொறுப்பு அதிப ராக நியமனம் செய்தார்.
அப்போது முதல் ரஷ்யாவின் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய இரண்டு பதவி களில் ஏதேனும் ஒன்றில் தன்னை நிலை நிறுத்திவந்த புதின் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்றார்.
இதனால் 2024-வரை ரஷ்யாவில் புதினின் ஆதிக்கம் இருக்கும். இந்த வெற் றியின் மூலம் தொடச்சியாக இரண்டா வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், ரஷ்யாவில் உள்ள சட்டத்தின்படி ஒரு நபர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபர் தேர் தலில் போட்டியிட முடியாது.  இதனால், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் புதின் போட்டியிட முடியாத சூழல் இருந்து வந்தது.
இந்நிலையில், ஆளும் அய்க்கிய ரஷ்யா கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் வாலண்டினா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை மீண் டும் புதுப்பிக்கவேண்டும் என்ற மசோ தாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவின் படி பழைய நடைமுறைகள் அழிக்கப்பட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான சட்டம் மீண்டும் முதலில் இருந்தே அம லுக்குவரும்.
அதாவது, ஏற்கெனவெ தொடர்ச்சி யாக இரண்டு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் சட்டம் புதுப்பிக் கப்பட்டதால் மீண்டும் முதலில் இருந்தே அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்.
சுருக்கமாக கூற வேண்டுமானால் தற்போது அதிபராக உள்ள புதின் அடுத்துவரும் 2024ஆம் ஆண்டு மற்றும் 2030ஆம் ஆண்டு ஆகிய இரண்டு தேர் தல்களிலும் எந்தவித தடையும் இன்றி போட்டியிடலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர் வாலண் டினா தாக்கல் செய்த இந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. இந்த மசோதா அதிபர் புதினின் ஒப்புதலுடன் சட்டமாக இயற்றப்பட்டது. இந்த சட்டம்  ஏற்கெனவே பின்பற்றப்பட்டுவந்த விதிமுறைகளை மீறினால் மட்டுமே நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியும்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை பூஜியத்தில் இருந்து மீண்டும் தொடங்கியுள்ளதால் 2024 மற்றும் 2030 ஆகிய இரண்டு தேர்தல்களில் விளாடிமிர் போட்டியிட எந்தவித சட்டசிக்கலும் இல்லை.
ஒரு வேளை இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றால் 2036ஆம் ஆண்டுவரை அதாவது தனது 83 வயது வரை ரஷ்யா வின் அதிபராக விளாடிமிர் புதின் செயல் படலாம் என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...