Tuesday, March 10, 2020

பன்னாட்டு மகளிர் தினத்தையொட்டி சாதனை பெண்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை சுட்டுரை தளத்தில் பகிரும் வகையில் பிரச்சாரம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. ‘அவள் நமக்கு உத்வேகம் அளிக்கிறாள்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த பிரச்சா ரத்தில் இணையுமாறு மணிப் பூர் மாநில பருவநிலை மாற்ற ஆர்வலரும், இந்தியாவின் கிரேட்டா என அழைக்கப்படு பவருமான 8 வயது லிசிபிரியா கங்குஜமுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்த அழைப்பை லிசிபிரியா நிராகரித்து விட் டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த கவுரவத் துக்காக முதலில் நான் மகிழ்ச் சியும், துக்கமும் அடைந்தேன். பின்னர், பருவநிலை மாற் றத்தை அரசியல்வாதிகள் தீவி ரமாக எடுத்துக்கொள்ளாத தால், இந்த கவுரவத்தை நிரா கரிப்பது என முடிவு செய் தேன்’ என்று கூறினார். பருவநிலை மாற்றம் தொடர் பாக ஆயிரக்கணக்கான குழந் தைகள் மற்றும் இளைஞர்க ளுடன் நாடாளுமன்றத்துக்கு முன்பும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆண்டு முழு வதும் போராட்டம் நடத்தி யும் யாரும் அவற்றை கண்டு கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

சீனாவின் பீஜி யான் மாகாணத்தின் குவான்சு நகரில் 5 மாடிகளை கொண்ட ஓட்டல் ஒன்று கரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்டு, கரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப் படும் நபர்கள் அதில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த ஓட் டல் திடீரென இடிந்து விழுந் தது. அதில் அங்கு தங்கியி ருந்த 71 பேர் இடிபாடுகளுக் குள் சிக்கிக்கொண்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் 100-க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேர போராட் டத்துக்கு பிறகு 38 பேர் படு காயங்களுடன் மீட்கப்பட்ட னர். அதனைத்தொடர்ந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியி ருக்கும் மற்ற 33 பேரை மீட் பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு விடியவிடிய மீட்பு பணிகள் தொடர்ந்தன.
இந்த நிலையில் நேற்று காலை இடிபாடுகளில் இருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 23 பேர் மாயமாகி இருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் மீட்பு குழுவினர் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின் றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...