Thursday, August 29, 2019

http://viduthalai.in/e-paper/187368.html


இந்தியா, மத்திய கிழக்கு பகுதி போன்ற வெப்ப நாடுகளில், பல நுற்றாண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது தான். அதை அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகளான அஸ்வத் ராமன் உள்ளிட்டோர் நவீன கட்டடங்களுக்கு பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ந்தனர்.
அந்த ஆராய்ச்சியில் வெற்றி கிடைக் கவே, 'ஸ்கை கூல்' என்ற நிறுவனத்தையும் துவங்கி, வெள்ளோட்டம் பார்க்க ஆரம் பித்துள்ளனர். அது என்ன தொழில் நுட்பம்? சூரிய ஒளியையும் வெப்பத்தையும் உள்வாங்காமல் வெளியே பிரதிபலிப் பதுதான் அந்த குளிர்ச்சி தொழில்நுட்பம்.
அந்தக் கால கட்டடக் கலை யுக்திகளை ஆராய்ந்த பிறகு, அதே தன்மையை கொண்ட ஒரு படலத்தை ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர், ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள். அந்தப் படலத்தை ஒரு குடுவையின் மேல் போர்த்தினால், அதைச் சுற்றியுள்ள காற்றின் வெப்பத்தைவிட, 5 முதல், 10 டிகிரி செல்ஷியஸ் வரை குடுவைக்கு உள்ளே வெப்ப அளவு குறைவாகிவிடுகிறது.
இத்தனைக்கும் ஒரு யூனிட் மின்சாரம் கூட இதற்கு தேவையில்லை.ஸ்கை கூல் படலத்தை பெரிய அளவில் தயாரித்து கட்டடங்களின் வெளி சுவர்களில் பொருத்தினால், கட்டடத்திற்குள்ளே குளிர்ச்சியாக இருக்கும். இதனால், அதிக மின்செலவில், 'ஏசி' போட வேண்டிய தில்லை. 'ஏசி'யால் உருவாகும் புவி வெப்பமாதல் விளைவும் குறையும். ராமன் குழுவினரின் வெள்ளோட்டம் பலன் தந்தால், 'ஏசி'யின் சந்தை படுத்துவிடும் என்பதோடு, மின்சார விரயமும் தவிர்க் கப்படும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...