Tuesday, August 28, 2018

திமுக தலைவர், பொருளாளர் ஆகியோருக்கு பெரியார் திடலில் வரவேற்பு

 

சென்னை, ஆக.28 இன்று (28.8.2018) பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தாய்க் கழகத்தின் சார்பில் வரவேற்று சிறப்பு செய்தார். திமுக தலைவராகப் பொறுப்பேற்றதை யடுத்து, பெரியார் திடலுக்கு வருகைபுரிந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து,  பாராட்டி இயக்க வெளியீடுகளை வழங்கி, பயனாடை அணிவித்து சிறப்பு செய் தார். திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு  பயனாடை அணிவித்தும், இயக்க வெளியீடு களை வழங்கியும் சிறப்பு செய்தார்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடங்களில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். தந்தை பெரியார் அருங்காட்சியகத்துக்கு வருகைதந்த திமுக தலைவர், பொருளாளர் ஆகியோரை  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வரவேற்று உபசரித்தார். சிறிது நேரம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் அளவளாவினர்.

மேனாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு,  ஆ.இராசா,  மேனாள் அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பி னர்கள் பி.கே.சேகர்பாபு, தாயகம் கவி, எழும்பூர் கே.ஆர்.இரவிச்சந்திரன், புரசை ரங்கநாதன், டி.ஆர்.பி. ராஜா, மகேஷ் பொய்யாமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின், எழும்பூர் ஏகப்பன், திமுக பேச்சாளர் வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா உள்ளிட்ட திமுக பொறுப்பாளர்கள் ஏராளமான வர்கள் வருகை தந்தனர்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன்,  கழக சட்ட துறைத் தலைவர் த. வீரசேகரன், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் உடனிருந்தார்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...