Wednesday, August 22, 2018

பதவி விலகுவாரா உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத்?

உ.பி. முதல்வர்மீது இரு மதவெறி கலவரத் தூண்டுதல் வழக்குப் பதிவு

முதல்வர்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
 
லக்னோ, ஆக. 21 உ.பி. முதல்வர் மக்களவை உறுப்பின ராக இருந்தபோது பேசிய வன்முறைப் பேச்சால் கொலைகளும், சூறையாடல்களும் நடந்தன. அவர்மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவரே முதலமைச்சராக ஆன நிலையில், அந்த வழக்குகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டன.

அதன் மீதான மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம், ஆதித்யநாத் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த எதிர்பாரா திருப்பத்தில் கடைசியாக முதல மைச்சர் ஆதித்யநாத் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் 2007- ஆம் ஆண்டில் தற்போதைய உ.பி. முதல்வர் சாமியார் ஆதித்யநாத் மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசி இருதரப்பினருக்கிடையே மோதலை ஊக்குவித்தார். இதனால் கோரக்பூரில் கலவரம் வெடித்தது. இந்த வழக்கை விசாரித்துவரும் உச்சநீதிமன்றம் சாமியார் முதல்வர் ஆதித்யநாத்மீது கலவர வழக்குத் தொடுப்பது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

ஆதித்யநாத்தின் கொலை வெறிப் பேச்சு!

உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் இரண்டு பேருக்கு மிடையே ஆன தகராறு காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரணை செய்த காவல்துறையினர் இது தொடர்பாக குற்றவாளியைக் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்தும் நீதிமன்றத்தில் தெரிவித்து, குற்றவாளியின்மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டது. கொலையானவர் அப்பகுதியில் உள்ள ஒரு இந்துத்துவ அமைப்பின் பிரமுகர் ஆவார், அவர் மீது ஏற்கெனவே ஆட்கடத்தல் உட்பட பல வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் 2007-ஆம் ஆண்டு  ஜனவரி 27-ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், அப்போதைய கோரக்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாமியார் ஆதித்யநாத் இந்து இளைஞர் கொலை தொடர்பாக இசுலாமியர் விரோத கருத்துகளைக் கூறினார், மேலும் இந்துக்கள் இருக்கும் நாட்டில் இசுலாமியர்கள் இருக்கக்கூடாது. ஒவ்வொரு இந்து வுக்கும் இசுலாமியர்களை விரட்டும் கடமை உண்டு. அதை இன்றே செய்யுங்கள், இல்லையென்றால் நாளை இங்கே இந்துக்கள் யாரும் இருக்கமாட்டார்கள்'' என்று சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்தார்.

அவர் பேசிய அன்று இரவே கோரக்பூர், அக்பர்பூர், பஸ்தி போன்ற பகுதிகளில் கலவரம் வெடித்தது. இக் கலவரத்தில் இசுலாமிய இளைஞர் கொல்லப்பட்டார். இசுலாமியர்களின் வசிப்பிடங்கள், வணிகத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டன. இசுலாமியர்களின் கோதுமை, கரும்பு, பருத்தி விளைவிக்கப்பட்டிருந்த வயல்களுக்கும் தீவைக்கப்பட்டது. பெரும் பொருட்சேதம் அடைவதற் குக் காரணமான இந்தக் கலவரம் தொடர்பாக கோரக்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கலவரத்தைத் தூண்டியதாக சாமியார் ஆதித்தியநாத்மீது வழக்குத் தொடர்ந்தனர். கோரக்பூர் காவல்துறையினர் அவரைக் கைது செய்து 15 நாள் காவலில்  வைத்தனர். அவர் மீது கொலை செய்யத் தூண்டுதல், சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் பேசுதல் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பார்ப்பனப் பாதுகாப்பு வளையம்

பஞ்சாப் நேஷனல் வங்கி - மும்பைக் கிளையில் நீரவ் மோடி மற்றும் அவரின் உறவினர் மொஹில் சோக்சி ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்றனராம். அந்தத் தருணத்தில் அந்த வங்கியின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் உஷா அனந்த சுப்பிரமணியன் என்பவர். பிறகு அலகாபாத் வங்கிக்கு இடமாற்றம் செய்யப் பட்டார்.

நீரவ் மோடி மோசடி தொடர்பாக விசாரணை நடத்திட அந்த உஷா அனந்த சுப்பிரமணியனுக்கு சி.பி.அய். சம்மன்' அனுப் பியது. பணி ஓய்வன்று அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையில் சி.பி.அய். சிறப்பு நீதிமன்றம்முன் தோன்றிப் பிணை மனு தாக்கல் செய்தார். என்ன ஆச்சரியம், உடனே அதற்கு ஜாமீனும் கிடைத்துவிட்டது.

இதுபோன்ற பாதுகாப்புகள் நம்மவாளுக்குக் கிடைக்குமா?

வழக்குகளை விலக்கிக் கொண்ட உ.பி. பி.ஜே.பி. அரசு

இந்த நிலையில் கடந்த ஆண்டு சாமியார் தலைமை யிலான அரசு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. அதில் ஆளும் ஆட்சியாளர்கள்மீது உள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவேண்டும் என்று கூறப்பட்டது. இதனை அடுத்து சாமியார் ஆதித்யநாத் மீது கொலை, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுதல், ஆட்கடத்தல், உள்ளிட்ட 13 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. இந்த வழக்குகள் திரும்பப் பெற்றது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரணை செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம் சாமியார் ஆதித்யநாத் மீதான வழக்கை ரத்து செய்த அரசின் நடவடிக்கையில் தலையிடமுடியாது என்று கூறிவிட்டது. இதனை அடுத்து மனுதாரரால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் கோரக்பூர் தொடர்பான வழக்கை சிபிசிஅய்டி விசாரணை செய்துவருகிறது. சிபிசிஅய்டி மாநில அரசின் கீழ் வருவதால் இந்த வழக்கை சரிவர நடத்தவில்லை. மேலும் மாநில அரசு ரத்துசெய்த வழக்குகளின் கீழ் கோரக்பூர் கலவரவழக்கு வராது. எனவே கோரக்பூர் கலவர வழக்கில் சாமியார் முதல்வர் ஆதித்யநாத்தைக் கைதுசெய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அந்த வழக் கில் கூறியிருந்தனர்.

உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்விகள்

இந்த வழக்கில் கோரக்பூரைச் சேர்ந்த ஊடகவியலாளர் பர்வேஷ் பெர்வாஸ் என்பவரும் இதே ஒரு வழக்கை தொடுத்திருந்தார். இந்த இரண்டு வழக்குகளையும் சேர்த்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரணை செய்தது. அதில் அவர்கள் கோரக்பூர் கலவரம் தொடர் பான வழக்கில் உத்தரப்பிரதேச அரசுக்குப் பல கேள்வி களை முன்வைத்துள்ளனர். கோரக்பூர் கலவரம் தொடர் பாக மாநில அரசு நடத்திய விசாரணையின் முடிவுகள் என்ன ஆயிற்று? எனவும், கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கேட்டுள்ளனர்.

மேலும் சாமியார் முதல்வர் ஆதித்யநாத் இதில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கலவரம் தொடர்பான வழக்குகளைக் கைவிட்டது தொடர்பாகவும் மாநில அரசு விரிவாக விளக்கம் அளிக்கவேண்டும் என்றும்,

மேலும் குற்றம்சாட்டப்பட்ட சாமியார் ஆதித்யநாத்மீது ஏன் நடவடிக்கை எடுக்ககூடாது? என்றும் கேள்வி கேட்டுள்ளனர். மேலும் மாநில அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

பதவி விலகுவாரா சாமியார்?

கலவர வழக்கில் முதன்மை குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டு ஏற்கெனவே 15 நாள் சிறையில் இருந்துள்ள ஆதித்யநாத் மாநில முதல்வராக இருப்பதால், அவர் மீதான வழக்குகளை மாநில அரசு விலக்கிக் கொண்டது. இந்த நிலையில் கோரக்பூர் கலவர வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றமே ஆதித்யநாத்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதால், சாமியார் முதல்வர் பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ளவேண்டும் என்று மனுதாரர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...