Tuesday, August 21, 2018

கடலில் வீணாய்க் கலக்கும் காவிரி நீர்: நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

Print

சென்னை, ஆக.20 காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று (19.8.2018) வெளியிட்ட அறிக்கை வருமாறு:

கர்நாடகத்தில் கனமழை பெய்வதால் கிடைக்கும் பயனை வேளாண்மைப் பணிகளுக்குப் பயன்படுத்தி முறையாக அனுபவிக்க முடியாத நிலையில் தமிழக விவசாயிகள் தவித்து வருகின்றனர். இரு முறை மேட்டூர் அணை, முழுக் கொள்ள ளவை எட்டிய போதும், அங்கிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் வேளாண் மைக்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் பயன்படாமல் நேராகக் கடலில் கலப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

காவிரி டெல்டா பகுதியில் 2500-க்கும் மேற்பட்ட ஏரிகளும், குளங்களும் முறை யாக உரிய காலத்தில் தூர்வாரப்படாததே இதற்குக் காரணம். குறிப்பாக, திருவாரூ ரில் உள்ள அய்நூற்று பிள்ளையார் கோவில் குளம் தண்ணீரே இல்லாமல் இன்றும் வறண்டு காட்சியளிக்கின்றன.

நீர் மேலாண்மைக்காக ரூ. 4,735 கோடி செலவிட்டுள்ளதாக அ.தி.மு.க அரசு அறி வித்தும், இன்றைக்கு நூற்றுக்கணக்கான டி.எம்.சி காவிரி உபரி நீர் வங்கக் கடலில் கலக்கிறது. அப்படியெனில் ரூ. 5 ஆயிரம் கோடி அரசு பணம் எங்கே போனது? என்ற கேள்வி எழுகிறது.

மழைக் காலங்களில் காவிரியில் உபரி யாக வரும் நீரை தேக்கி வைக்க திமுக ஆட்சியில் நதி நீர் இணைப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. காவிரியாற் றினை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, கோட்டைக்கரையாறு, வைகை மற்றும் குண்டாறுடன் இணைக்கும் இந்தத் திட்டம் ரூ.189 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டு, 2009 பிப்ரவரி 9 ஆம் தேதியன்று பணிகளும் தொடங்கப்பட்டன. சுமார் ரூ. 54.26 கோடி அளவிலான பணிகள் நிறைவடைந்த நிலையில், 2011 இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, அத்திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டது. இதனால், காவிர் நீர் தொடர்ந்து கடலில் கலக்கும் நிலை உருவாகியிருக் கிறது.

எனவே, உபரி நீர் எல்லாம் கடலில் கலப்பதற்கு, அதிமுக அரசே பொறுப்பேற்க வேண்டும். இனியாவது தொலைநோக்கு "நீர் மேலாண்மை" திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தும், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நதி நீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்றியும் கடலில் கலக்கும் காவிரி நீரைத் தடுத்து வேளாண் மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் தமிழக அரசு திருப்பி விடவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...