Wednesday, August 22, 2018

கடவுள் சக்தி இவ்வளவுதான்!

கோவில் தீ மிதி விழாவின்போது அக்கினி குண்டத்தில் தவறி விழுந்து இரண்டு பக்தர்கள் படுகாயம்

அம்பத்தூர், ஆக.21 சென்னை வில்லிவாக் கம் பேருந்து நிலையம் அருகே உள்ளது பாலி அம்மன் கோவில். இந்து அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிமாத திருவிழா நடந்து வருகிறது. இதனையொட்டி நேற்று தீ மிதி விழா நடந்தது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு திரண்டனர். பின்பு பக்தர்கள் 15 பேர் கொண்ட குழுவாக அக்கினி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத் தினார்கள்.

அயனாவரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த கதிர்வேல் (வயது 33) மற்றும் வில்லிவாக்கம் யுனைடெட் காலனி அன்னை தெரசா தெருவை சேர்ந்த மனோகரன் (52) ஆகியோர் 15க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் சேர்ந்து அக்கினி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.

அப்போது திடீரென நெரிசல் ஏற் பட்டதால் மனோகரனும், கதிர்வேலும் எதிர்பாராதவிதமாக அக்கினி குண்டத்தில் தவறி விழுந்தனர். அங்கு திரண்டு நின்று கொண்டிருந்த பக்தர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு ஏற்கெனவே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு நெருப்பு கனலில் சிக்கிய இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அக்கினியின் பிடியில் சிக்கியதால் கதிர்வேலும், மனோகரனும் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக தீயணைப்பு துறையினர் 2 பேரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பக்தர்கள் இருவருக்கும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வில்லிவாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலில் 2 பேர் கொலை;

3 பேர் நாக்குகள் துண்டிப்பு

சண்டிகர், ஆக.21 அரியானா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் மாங்கலார் என்ற கிராமம் உள்ளது. இங்கு புகழ் பெற்ற கோவில் ஒன்று அமைந்துள்ளது.

இந்த கோவிலில் பூசாரியாக வினோத் என்பவரும், அவருக்கு உதவியாக சுல்தான் என்பவரும் பணியாற்றி வந்தனர். மேலும், கர்ஜிந்தர், ரவீந்தர்சர்மா, அஜய்சர்மா ஆகி யோர் ஊழியர்களாக இருந்தனர்.

அவர்கள் இரவில் கோவிலிலேயே தங்கிக் கொள்வது வழக்கம்.

சம்பவத்தன்று இரவு அடையாளம் தெரியாதவர்கள்கோவிலுக்குள்நுழைந் தனர். அவர்கள் கோவிலில் இருந்த 5 பேரையும் கத்தி, அரிவாள் போன்ற ஆயு தங்களால் தாக்கினார்கள். இதில் வினோத், சுல்தான் ஆகியோர் இறந்துவிட்டனர்.

மற்ற 3 பேருடைய நாக்குகளையும் துண்டித்தனர். பின்னர் கோவில் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

மறுநாள் காலை குழந்தைகளும், ஒரு குடும்பத்தினரும் கோவிலுக்கு சென்றார்கள். அப்போது கோவில் வெளிப்பக்கமாக பூட்டி இருந்தது. உள்ளே இருந்து முனகல் சத்தம் கேட்டது.

இதுபற்றி ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே 2 பேர் இறந்து கிடப்பதும், 3 பேர் நாக்கு அறுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. 3 பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

கோவிலிலிருந்த உண்டியல் உடைக் கப்பட்டுஇருந்தது.எனவேகொள்ளை யர்கள் பணத்தை திருடிவிட்டு அவர் களையும் தாக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

நாக்கு துண்டிக்கப்பட்டதால் மூன்று பேராலும் பேச முடியவில்லை. மேலும் அவர்களுக்கு அதிக அளவில் ரத்தம் வெளியேறி இருப்பதால் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் குணமானதற்கு பிறகு தான் நடந்த சம்பவம் என்ன என்பது பற்றிய முழு விவரமும் தெரியவரும்.

 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...