Tuesday, August 21, 2018

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரி தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்


சென்னை, ஆக.20 உயர்நீதிமன்றங்களில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இட ஒதுக்கீட்டை அமுல் படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி 16.8.2018 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.

அதன் விவரம் வருமாறு: கோவை

உயர்நீதிமன்றங்களில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி 16.8.2018 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திராவிடர் கழக மாநிலத் தலைமை கேட்டுக் கொண்டது.     அதன் அடிப்படியில், கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த திராவிடர் கழகத்தினர் அனுமதிகோரி இருந்தனர். அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.      காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ள நிலையில் திராவிடர் கழகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப் பாட்டம் செய்ததால் காவல்துறையினர் அவர்கள் அனை வரையும் கைது செய்தனர். இதில் 23 பேர்கள்  கைது செய்யப்பட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் ச.சிற் றரசு தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சு.வேலு சாமி, மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்நாதன், இ.கண் ணன், மாவட்ட இளைஞரணித் தலைவர் திராவிடமணி, பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு, மு.தமிழ்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

நீதித்துறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததைக் கண்டித்தும் நீதித்துறையில் இட ஒதுக்கீட்டுக்கு  சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தியும் திராவிடர் கழகம் சார்பில், மாநிலம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங் களின் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி எதிர்புறம் 16.8.2018 அன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இராஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட அமைப்பாளர் வீ.சிவசாமி, திருப்பூர் மாநகரத் தலைவர் இல.பாலகிருஷ்ணன், செயலாளர் பா.மா.கரு ணாகரன், கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.மணிகண்டன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கு.திலீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி உரையாற்றிய திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோபி வெ.குமாரராஜா அவர்கள் குறிப்பிட்டதாவது;

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று நீதித் துறையாகும்.அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளும் சரியாக இயங்கவேண்டுமெனில் நீதித்துறை எவ்வித ஆதிக்கமும், பாரபட்சமுமின்றி இயங்கவேண்டும். பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ்மக்கள், சிறு பான்மையர்கள் மற்றும் நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கின்ற பெண்கள் ஆகியோருக்கு நீதித் துறையில் உரிய பிரதிநித்துவம் கிடைக்கப்பெற்றுள்ளதா? என்றால் இல்லை!

நாட்டில் உச்சபட்ச அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் ஆகியவற்றில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவதில் இட ஒதுக்கீட்டு முறை அறவே பின்பற்றப்படுவது கிடை யாது! பெண்கள் மீதான வன்கொடுமைகளை அறிந்து, புரிந்து தீர்ப்பு வழங்கும் இடமான நீதிமன்றங்களில் பெண்களுக்கான பிரதிநித்துவம் பறைசாற்றப்படாமல் இருப்பது நியாயமா? தமிழ்நாட்டில் கல்வி,வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப் பட்டுள்ள அளவிற்கு நீதித் துறையில் அமல்படுத்தப்பட வில்லை! பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பிரிவினர் மற்றும் சிறுபான்மையர் ஆகியோரின் திறமை, அறிவு, புத்திசாலித்தனம் ஆகியவற்றை வெளிப்படுத்த அரசுகள் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும்! நாட்டு மக்கள் தொகையில் 8 சதவிகிதம் கூட இல்லாத உயர்ஜாதி  நீதிபதிகள் 92 சதவிகித மக்களுக்கு நீதி வழங்குவது எவ்வாறு சமூகநீதியாகும்? ஆகவே நீதித்துறையில்  இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும், தமிழ்நாடு அரசு நீதித்துறை அல்லாத மற்ற துறைகளில் இட ஒதுக்கீட்டை அமல் படுத்தியிருப்பது போல் நீதித்துறையிலும் இட ஒதுக் கீட்டை அமல்படுத்தவேண்டும்! நீதிமன்றங்கள் ஒரு குறிப்பட்ட வகுப்பாரின் ஆதிக்கபுரிகளாக இல்லாமல் அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளையும் உள்ளடக் கியதாக இருக்கவேண்டும்! அப்போதுதான் நாடு அமைதி யான பாதையில் செல்லமுடியும் என்று உரையாற்றினார்.

திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் "நளினம்" நாகராஜ், திருப்பூர் மாநகர துணைத் தலைவர் "ஆட்டோ" தங்கவேல்,துணைச் செயலாளர் "தென்னூர்" முத்து,  தாராபுரம் கழக மாவட்ட துணைத் தலைவர் முத்து.முருகேசன், திருப்பூர் மாவட்ட இளை ஞரணிச் செயலாளர் "வானவில்" ச.துரைமுருகன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர் சேகாம்பாளையம் ரங்கசாமி,பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த அவினாசி பொன்னுசாமி, வீரப்பன், திருமுருகன்பூண்டி "ஓவியர்' மணி,பாண்டியன் நகர் முருகேஷ், அருள்புரம் குணசேகர், நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீடு அனைவருக்கும் தேவை! நீதித்துறையில் இட ஒதுக் கீட்டுக்கு மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவரவேண் டும் உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்ட முடிவில் திருப்பூர் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ.குருவிஜயகாந்த் நன்றி கூறினார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், விருது நகர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலை முன்பு, நீதித் துறையில் சமூகநீதி கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் விடுதலை தி.ஆதவன் தலைமையில், மாவட்ட ப.க. புரவலர் ந.ஆனந்தம் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் தொடக்க நிகழ்வாக திமுக தலைவர் கலைஞர் அவர்களது படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. ஆர்ப்பாட்ட முழக்கங்களுக்குப்பின், மாவட்ட துணைச் செயலாளர் சு.சண்முகசுந்தரம், துணைத் தலைவர் அ.தங்கசாமி, மாவட்ட ப.க. அமைப்பாளரும் தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பாசறை அமைப்பாளருமான பா.அசோக், பொதுக்குழு உறுப்பினர் வானவில் வ.மணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தினை விளக்கி உரையாற்றினர். பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி, மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர், மாவட்ட இளை ஞரணிச் செயலாளர் ந.ஆசைத்தம்பி, அருப்புக்கோட்டை நகர செயலாளர் பா.இராசேந்திரன், ஒன்றிய கழக அமைப்பாளர் இரா.முத்தையா, இளைஞரணி தலைவர் க.திருவள்ளுவர், சிவகாசி ஒன்றிய அமைப்பாளர் கா.காளி ராசன், திருத்தங்கல் நகர அமைப்பாளர் மா.நல்லவன், கவிஞர் நா.மா.முத்து, உ.அமரன், நா.அறிவழகன், புதூர் வெ.பாலமுருகன் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ச.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி அடிப்படையில் நிதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா திருவள்ளுவர் சிலை அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் மண்டல அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வெ.ஆசைத்தம்பி அனைவரையும் வரவேற்றார். மண்டலச் செயலாளர சு.தேன்மொழி, அறந் தாங்கி மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலும் மாவட்டத் துணைத் தலவைர்கள் புதுக்கோட்டை செ.இராசேந்திரன், அறந் தாங்கி முத்து மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப்பையா, நகரத் தலைவர் சு.கண்ணன், நகரச் செயலாளர்கள் புதுக் கோட்டை ரெ.மு.தருமராசு, அறந்தாங்கி செ.சுப்பிரமணியன், திருச்சி சட்டக்கல்லூரி வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் சங்கவி தர்மா, அறந்தாங்கி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் இரா.யோகராசு, திருமயம் ஒன்றியச் செயலாளர் ஆறு.முருகையா, மகளிரணி அமைப்பாளர் வீர.வசந்தா, புதுக்கோட்டை ஒன்றியத் தலைவர் சாமி.இளங்கோ முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தி.இராசமாணிக்கம் கொத்தமங்கலம் இராமையன் மகளிரணி த.நாத்திகா, மாணவரணி சி.கனிமொழி, சி.எழிலரசன் நகர இளை ஞரணி அமைப்பாளர் சி.சரத்குமார், மாவட்ட மாண வரணித் தலைவர் பெ.அன்பரசன், பிச்சத்தான்பட்டி கிளைத் தலைவர் அ.பத்மநாபன், புதுக்கோட்டை விடுதி கிளைச்செயலாளர் வீ.தங்கவேல், இராங்கியம் கிளைத் தலைவர இராம.கைலாசம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி சிறப்புரையாற்றினார். கழக வழிகாட்டுதலின்படி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மண்டல மாணவர் கழக செயலாளர் இரா.குமார் நன்றி கூறினார்.

கிருட்டினகிரி

கிருட்டினகிரியில் நீதித்துறையில் சமூக நீதியை வலியுறுத்தி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் சமூக நீதியை வலியுறுத்தி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மற்றும் பெண்களுக்கும் உரிய இட ஒதுக் கீட்டு வழங்கக்கோரி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்பின் படி கிருட்டினகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா. சிலை எதிரில் 16.8.2018 அன்று காலை 11 மணியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்டச் செயலாளர் கோ.திராவிடமணி தலைமை வகித்துப் பேசினார்.  மாவட்டத் தலைவர் மு.துக்காராம், பொதுக்குழு உறுப்பினர் தா.சுப் பிரமணியம், தருமபுரி மண்டல இளைஞரணி செயலாளர் வ.ஆறுமுகம். மாவட்ட இணைச் செயலாளர் சு.வனவேந்தன் தொடக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா. சரவணன், தலைமை கழகச் சொற்பொழிவாளர் மேனாள் மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர் சி.சீனிவாசன், மத்தூர் ஒன்றிய தலைவர் கி.முருகேசன், கிருட்டினகிரி ஒன்றிய த.மாது, கிருட்டினகிரி நகர செயலாளர் கா.மாணிக்கம், நகர அமைப்பாளர் கோ.தங்கராசன், ஒன்றிய செயலாளர்கள் மத்தூர் வி.திருமாறன், ஊற்றங்கரை செ.சிவராஜ், காவேரிப்பட்டணம் சிவ. மனோகர், ஒன்றிய துணைச் செயலாளர் சி.இராசா, ஒன்றிய அமைப்பாளர் பெ.செல்வம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அ.கோ.இராசா, மத்தூர் நகரச் செயலாளர் சி.வெங்கடாசலம், மகளிரணி பொறுப்பாளர்கள் வெ.அழகுமணி, மு.இந்திராகாந்தி, கோ.சுமதி, பகுத்தறி வாளர் கழக பொறுப்பாளர் க.வெங்கடேசன், மத்தூர் பொ.நாகராசன், இரா.சிங்காராம், அ.கருணாகரன், செ.தனஞ்செயன், கிருட்டினகிரி சி.வடிவேல், ஊற்றங்கரை கு.பரந் தாமன், அரசம்பட்டி  சக்திவேல் உள்பட கழகத் தோழர்கள் பெரும் திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தலைமை கழகம் வெளியிடப்பட்ட முழக்கங்களை தொடக்கத்திலும், முடிவிலும் முழங்கினர். இறுதியாக மாவட்ட இளைஞரணி தலைவர் இல.ஆறுமுகம் நன்றி கூறினார்.

திருவண்ணாமலை

16.8.2018 அன்று காலை 11 மணிக்கு, திருவண்ணாமலை நகரம், அண்ணாசிலை அருகில் மாவட்ட தலைவர் மு.காமராஜ் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ப.அண்ணாதாசன் வரவேற்புரை ஆற்றினார். வேலூர் மண்டல கழகச் செயலாளர் மு.பஞ்சாட்சரம் பெரியாரின் சமூகநீதி போராட்டத்தினை விளக்கி உரையாற்றினார். போளூர் ஒன்றிய தலைவர் மருத்துவர் எம்.எஸ்.பலராமன், போளூர் ஒன்றிய செயலாளர் த.சுந்தர மூர்த்தி ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினர். தோழர்களின் ஆர்ப்பாட்ட முழுக்கங்களுக்குப் பிறகு கண்டன உரை தொடர்ந்தது.

வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன் ஆர்ப்பாட்ட சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில்:& இந்தியா முழுவதும் 3 சதவீதமே உள்ள பார்ப்பனர்கள் உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி நீதிபதிகள் 92 சதவீத மக்களுக்கு இறுதித் தீர்ப்பு வழங்கும் கொடுமைகளை விளக்கினார், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் சட்டம், நீட் தேர்வு போன்ற பல்வேறு தீர்ப்புகளில் பார்ப் பனர்களின் வஞ்சகத் தீர்ப்புகளில் பெரும்பான்மை மக் களுக்கு சட்டப்படி நீதி வழங்காமல் புறக்கணிக்கும் போக்கை பார்ப்பனர்கள் கடைப்பிடிப்பதை சுட்டிக்காட்டி னார். ஆதலால் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீடு தேவை என்பத னையும், நீதித்துறையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும், பெண்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதனை தமிழர் தலைவரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விளக்கங்களை நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் பட்டியல், உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் பட்டியல், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி பறிக்கப்படும் கொடுமையினை சுட்டிக்காட்டி கண்டன விளக்க உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தண்டராம்பட்டு வெங்கட்ராமன், கீழ்க்கச்சிரா பட்டு ஜி.தேவராஜ், பெரியார் பெருந்தொண்டர் எடப் பாளையம் செ.குப்புசாமி, திருமதி குப்புசாமி, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் பீம்ராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். நீதித்துறை விளக்கங் களையும், தோழர்களின் ஆர்ப்பாட்ட முழக்கங்களைக் கேட்டு பொது மக்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

இறுதியாக போளூர் ஒன்றிய செயலாளர் த.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார். மாவட்ட தலைவர் மு.காமராஜ் கழகத் தோழர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கிச் சிறப்பித்தார்.

நாகர்கோயில்

உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோரை நீதிபதியாக்கக் கோரி குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 16.8.2018 அன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்ட தலைவர் மா.மணி தலைமைதாங்கினார். மாவட்ட செயலாளர் சி.கிருஷ்ணேசுவரி, ப.க. மாவட்ட தலைவர் உ.சிவதாணு, நகர அமைப்பாளர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளை ஞரணி தலைவர் மகேஷ் வரவேற்றார்.

திருநெல்வேலி மண்டல செயலாளர் கோ.வெற்றி வேந்தன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட குழு உறுப்பினர் சுபாஷ், அகில இந்திய முற்போக்கு பேரவை மாநில துணைத் தலைவர் சி.சுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கி முத்து, வி.சி.க. மாவட்ட துணைச் செயலாளர் தொல்காப் பியன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னு ராசன், தொழிலாளரணி செயலாளர் ச.ச.கருணாநிதி, வி.சி.க. கன்னியாகுமரி தொகுதி செயலாளர் சு.சிந்ததாஸ், வி.சி.க.தோவாளை ஒன்றிய செயலாளர் பா.ஜான் அசூன், நகர கழகத் துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க்முகமது, நகர இளைஞரணி செயலாளர் இராஜேஷ், மகளிர் பாசறை செயலாளர் அன்பரசி, கழக தோழர்கள் ஜோஸ், அண்ணா கல்லூரி திராவிடர் மாணவர் கழக தலைவர் த.பிரதீஷ் ராஜா, செயலாளர் ஊ.அருண்சதீஸ், அமைப்பாளர் ஆனந்த பவான், சிவசூர்யா, சுபாஷ் கண்ணன், த.இராமன், வி.சி.க.தோழர்கள் அஷ்வின், முகேஷ், பரத், விக்னேஷ், மகேஷ், விஷ்ணு, சுடலை, இராம சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கழக தோழர்கள் முழங்கிய ஆர்ப்பாட்ட முழக்கங்கள் வானைப் பிளந்தன.

வேலூர்

நீதித்துறையிலும் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி வேலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சத்துவாச்சாரியில் 16.8.2018 அன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட கழக செயலாளர் கு.இளங்கோவன், திருப்பத்தூர் கழக மாவட்ட தலைவர் அகிலா எழிலரசன், திருப்பத்தூர் கழக மாவட்ட துணைத் தலைவர் எம்.கே.எஸ்.இளங்கோவன், அரக்கோணம் மாவட்ட தலைவர் சு.லோகநாதன், அரக்கோணம் மாவட்ட செயலாளர் செ.கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் மாவட்ட கழக தலைவர் வி.இ.சிவக்குமார் தலைமையேற்று உயர், உச்சநீதிமன்றங்களில் உயர் ஜாதி ஆதிக்க நீதிபதிகளே 92% உள்ளனர் என்ற புள்ளி விவரத் துடன் கூறி உரையாற்றினார்.

மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி, மாவட்ட ப.க. தலைவர் இர.அன்பரசன், ப.க. தோழர் தி.க. சின்னதுரை, அரக்கோணம் மாவட்ட தலைவர் சு.லோகநாதன், மேனாள் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.சி.எழிலசரன், வேலூர் மாநகர ப.க.தலைவர் மு.சுகுமார் ஆகியோர் உரையாற்றினார்கள்.

தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியாரின் முயற்சியால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நீதியரசர் வரதராசன் நியமிக்கப்பட்டு பின்னர் அவரே முதல் நீதிபதியாக உச்சநீதிமன்றத்திலும் நியமிக்கப்பட்ட வரலாற் றினை குறிப்பிட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் உயர் உச்சநீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.

இதற்கான முதல் முயற்சியாக தமிழர் தலைவர் ஈடு பட்டுள்ளது பற்றியும் விரிவாக உரையாற்றிய அனைவரும் விளக்கி கூறினார்கள். நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு மருந்துவ இடம் கிடைக்காதது பற்றியும் கூறினர்.

பங்கேற்றோர்

மாவட்ட அமைப்பாளர் ச.கி.செல்வநாதன், பொதுக் குழு உறுப்பினர் இரா.கணேசன், ஆற்காடு ஒன்றிய தலைவர் கோ.விநாயகம், திருப்பத்தூர் மாவட்ட இளை ஞரணி தலைவர் சி.எ.சிற்றரசு, வேலூர் மாவட்ட இளை ஞரணி தலைவர் ந.கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் க.சிகாமணி, வேலூர் மாநகர ப.க.செயலாளர் அ.மொ.வீரமணி, வேலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் இரவி.கமலேஷ்குமார், சத்துவாச்சாரி நகர தலவர் ச.கி.தாண்டவமூர்த்தி, இளைஞரணி வீ.பெரியார்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் சொ.ஜீவன்தாஸ், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வ.இரவிக்குமார், திமிரி ஜெ.பெருமாள், சாந்தகுமார், ஆர்.இராமன், வி.பி.உலகநாதன், ஜி.பிரபாகரன், சரவணன், போளூர் பன்னீர்செல்வம், மாவட்ட மகளிரணி செயலாளர் ச.கலைமணி, மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி, மகளிர் பாசறை நகர தலைவர் சி.லதா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ச.கலைவாணி, திருப்பத்தூர் மகளிரணி இ.வென்ணிலா, இளைஞரணி து.ஈஸ்வரி, ஜெ.சுமதி, கா.கவின், மாநகர கழக அமைப்பாளர் ந.சந்திரசேகர், ஆர்ப்பாட்ட முழக்க மிட்டு நன்றி கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...