Saturday, November 25, 2017

பொறுப்பேற்க வேண்டியது மத்திய பிஜேபி அரசே!

மும்பை திரையுலகின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள Ôபத்மாவதிÕ திரைப்படம் டிசம்பர் முதல் நாளில் திரையிடப்பட உள்ளது. ராஜஸ்தான் ராணி பத்மாவதி கதாபாத்திரத்தை திரைப்பட நடிகை தீபிகா படுகோனே  ஏற்று நடித்துள்ளார். நடிகர்கள் ஷாகித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

திரைப்படத்தில்  ராணி பத்மாவதி, அலாவுதீன் கில்ஜி ஆகியோருக்கிடையே காதல் காட்சிகள் ஏதும் கிடையாது என்று படக்குழுவினர் தரப்பில் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வந்தநிலையில், திரைப்படம் எடுக்கப்படும் போது, கடந்த மார்ச் மாதத்தில் கோல்காப்பூர் பகுதியில் திரைப்பட காட்சிப்பதிவுக்காக அமைக்கப்பட்ட அமைப் புகள் சூறையாடப்பட்டன.

கார்னி சேனா அமைப்பினர், ராஜ்புத் வகுப்புத் தலைவர்கள், ராஜஸ்தான் மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் திவ்யா குமாரி உள்ளிட்டவர்களும் திரைப் படத்தை எதிர்த்து வருகிறார்கள். தற்போது வெளிப் படையாக பார்ப்பன அமைப்பும் எதிர்ப்பைத் தெரிவித் துள்ளது.

"பத்மாவதி திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன்ன தாக மாநிலத்தில் உள்ள வல்லுநர்கள் 15 பேரைக் கொண்ட குழுவினர் பார்வையிட்ட பின்னரே அத்திரைப்படத்தை வெளியிட வேண்டும்" என்று ராஜஸ்தான் மாநில பார்ப்பன அமைப்பாகிய சர்வ் பிராமின் மகாசபா குறிப்பிட்டுள்ளது.

அலாவுதீன் கில்ஜி மற்றும் ராஜஸ்தான் ராணி பத்மாவதி ஆகியோரிடையே காதல் மலர்ந்ததாக அத்திரைப்படத்தில் காட்சி இடம்பெற்றுள்ளது என்று அத்திரைப்படத்துக்கு ராஜ்புத் எனப்படுகின்ற ரஜபுத்திர வகுப்பினர் மற்றும் காங்கிரசு கட்சியினர்  தரப்பில் விமர்சனம் வெளியானது.

சர்வ் பிராமின் மகாசபா மாநிலத் தலைவர் சுரேஷ் மிஸ்ரா இதுகுறித்து கூறியதாவது:

"பாலிவுட் பிரபல இயக்குநர் ஒருவர் என்னிடம் அத்திரைப்பட இயக்குநர் பன்சாலியின் சார்பில் தொடர்பு கொண்டு எங்களின் கோரிக்கைகள்குறித்து கேட்டார். மாநிலத்தில் உள்ள பல்துறைகளைச் சார்ந்த வல்லுநர்கள் 15 பேரைக்கொண்ட குழுவினர் முன்னிலையில் அத் திரைப்படம் திரையிடப்பட வேண்டும். திரைப்படத்தைப் பார்த்த பின்னர் அக்குழு முடிவு செய்ய வேண்டும்.

கற்பனைகளின் அடிப்படையில் வரலாற்றிலுள்ள உண்மைகளை சிதைக்கக் கூடாது. அலாவுதீன் கில்ஜி, ராணி பத்மாவதி ஆகியோருக்கிடையே கற்பனையான காதல் காட்சிகள் இல்லை என்றே எண்ணுகிறோம். அப்படி இருந்தால், திரைப்படத்தை எதிர்ப்பவர்களை ஆதரிப்போம்.

திரைப்படம், குழுவினர் முன்பாக திரையிடப்பட வேண்டும். அப்படி நடைபெறவில்லை என்றால், அடுத்த கட்டம்குறித்து திட்டமிடுவோம். மாநிலத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளுக்கும் கடிதம் எழுதுவோம். அத்திரைப்படத்தைத் திரையிடக்கூடாது என்று குறிப் பிட்டு மாவட்ட அளவில் எங்கள் அமைப்பின்சார்பில் போராடுவோம்’’ என்றார்.

கார்னி சேனா மற்றும் பிற அமைப்புகள் அத்திரைப் படத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின. விரைவில் திரைப்படம் வெளியாகப்போகிறதே என்று அவர்களிடம் கேட்டதற்கு, "ராஜஸ்தான் பெருமை மற்றும் வரலாற்று நாயகர்களின் பெருமையை சிதைப்பதற்கு எதிராக இருப்பவர்களுடன் நாங்கள் இணைந்து போராடுவோம்" என்றனர்.

தற்போதும் டிவிட்டரிலும் படக்குழுவினர்  சார்பில் காதல்காட்சிகள் கிடையாது என்று தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

இருப்பினும், அத்திரைப்படத்தில் ராணிக்கும், கில்ஜிக் கும் இடையே காதல் காட்சிப்பதிவுகள் இல்லை என்று தெளிவுபடுத்திய பின்னரும், வரலாறை சிதைப்ப தாகக் கூறிக்கொண்டு, இந்துத்துவாக் கும்பல் எதிர்ப்பைத் தெரிவித்து வருவதன் உள்நோக்கம் வகுப்புவாதப் பிரச் சினைகளை உருவாக்குவதுதான்.

இந்து மதத்தைச் சேர்ந்த ராணி, முசுலீம் மதத்தைச் சேர்ந்த கில்ஜியுடன் இணக்கமாக இருப்பதாகப் படம் எடுப்பதா? அதை விட்டுவிடலாமா? என்று மதவெறிக்கு தூபம் போட்டு, கலவரத்தை ஏற்படுத்த வேண்டியதுதானே இந்துத்துவாக் கும்பலின் பணியாக இருந்து வருகிறது?

கருத்து சுதந்திரத்துக்கு தடைபோடும் பாசிச உணர் வுடன் உள்ள இந்துத்துவா கும்பல், திரைப்படத்தை எதிர்ப் பதன்மூலமாக மீண்டும் தன்னுடைய மதவெறி முகத்தை வெளிப்படுத்தத் தயங்கவில்லை.

திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகையின் தலைக்கு 5 கோடி ரூபாய் விலை பேசப்பட்டுள்ளது.

மதவாத சக்தியை அதிகாரப்பீடத்தில் அமர்த்தினால் அதன் கோர விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு இவை எல்லாம் கண் கண்ட எடுத்துக்காட்டுகள்.

வன்முறையைத் தூண்டும் பேச்சின்மீதும், அறிவிப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்காததன் விளைவுதான் நரேந்திர தபோல்கர், கோவிந்தபன்சாரே, கல்புர்கி, கவுரி லிங்கேஷ்களின் படுகொலைகள். இவற்றிற்கெல்லாம்  பொறுப்பேற்க வேண்டியது மத்திய பிஜேபி அரசே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...