Wednesday, July 19, 2017

பனிலிங்கம் என்னும் பித்தலாட்டம்

ஜம்மு-சிறீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்நாத் குகையில் பனி லிங்கத்தைக் காணச் சென்ற பக்தர்கள் பயணம் செய்த பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னதில் 16 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர்.

அமர்நாத் பனிலிங்கத்தைக்காணச் செல்கின்ற பக்தர்கள் பேருந்து மூலமாக மலை அடிவாரத்தி லிருந்து, மலைக் கோவிலுக்கு பலத்த பாதுகாப் புடன்  அழைத்துச் செல்லப்படுவர். ஜம்மு - காஷ் மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகை 3,888 மீட்டர் உயரத்திலும், சிறீநகரிலிருந்து 141 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 


அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தைக் காண்பதற்காக ஆண்டுதோறும்  சென்று வருகிறார்கள். ஜூலை மாதத்தில் உருவாகும் இந்த பனிலிங்கம் சுமார் 2 மாதத்தில் இருக்கும் இடம் தெரியாமல் உருகிவிடும். இரண்டு மாத இடைவெளிக்குள் அமர்நாத் குகை பனி லிங்கத்தைக் காண வருவோருக்கு பால்டல் மற்றும் சந்தன்வாரி ஆகிய இரண்டு வழிகளில் அமர்நாத்துக்கு செல்ல பாதைகள் உருவாக்கப்பட் டுள்ளன.


எல்லையோர மாநிலமான காஷ்மீர் மாநிலத் தில் அமையப்பெற்றுள்ள இக்கோயில் இந்திய இராணுவத்தினரின் கண்காணிப்பில் உள்ளது. ஆகவே, மத்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல முடியும்.  


இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி அன்று  ரம்பான் மாவட்டம் அருகே ஜம்மு - சிறீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்நாத் யாத்ரீகர்கள் பயணித்த வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் இருந்தவர் களில் 16 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வேதனைக்குரியது இது!


இந்த ஆண்டுக்கான அமர்நாத் பயணம் கடந்த ஜூனில் தொடங்கி வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஆண்டைவிட நாள் களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் குறைக்கப் பட்டுள்ளது.


கடந்த வாரத்தில் அமர்நாத் பயணம் மேற் கொண்டவர்களின் பேருந்துமீது நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் தாக்குதலில் 8 பேர் பலியானார்கள். தற்போது விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் உள்ளவர்களில் சிலரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


ஒவ்வொரு ஆண்டும் விபத்துகளும், பலிகளும் நடந்து கொண்டேதான் உள்ளன.

பட்டபின்புகூட புத்தி கொள்முதல் பெறவில்லை என்றால் என்ன காரணம்? பக்தி வந்தால் புத்தி போகும் என்ற தந்தை பெரியாரின் அறிவுவாக்கு தான்.

பகுத்தறிவாளர் சங்கத்தின் அகில இந்திய முக் கிய தலைவர் சேனல் இடமருகு அமர்நாத்துக்கே நேரில் சென்று பனிலிங்கம் பித்தலாட்டத்தை அம் பலப்படுத்தினார்.


லிங்கக் கடவுள் என்பது உண்மையானால், அது ஏன் பனிக்காலத்தில் மட்டும் தோற்றமளிக்க வேண் டும்? குறிப்பிட்ட இடத்தில் மலையின் அமைப்புக் கேற்ற வகையில் செங்குத்தாக பனி மலை உறை கிறது. இயற்கையாக நடக்கும் இந்தக் காட்சியை பனி லிங்கம் என்று புரளியாகக் கிளப்பிவிட்டனர். இந்தப் பனிலிங்கத்தை இந்து மதத்தில் இன்னொரு பிரிவினரான வைணவர்கள் ஏற்றுக் கொள்வ தில்லை.


இந்தப் பனிலிங்கத்தின் பக்கத்தில் ஸ்டவ் பற்ற வைக்கக் கூடாதாம். ஏன் தெரியுமா? சூடு பட்டால் பனி உருகி சிவலிங்கத்தின் கற்பனை வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடுமே!

அவர்கள் சொல்லுகிற அந்த வழிக்கே வரு வோம். தன்னை நாடி வரும் பக்தர்கள் பலியாகிறார் களே! அவர்களைக் காப்பாற்ற வக்கில்லாதது கடவுள்தானா?

மக்கள் நல அரசாக இருக்குமானால் இந்த மோசடியைத் தடை செய்ய வேண்டும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...